கராச்சியில் பறந்த காவிக்கொடி

மணக்கால் அய்யம்பேட்டை | AM 3:22 | Best Blogger Tips
வழக்கமா இந்த பலுசிஸ்தான் மாணவ அமைப்பான (BSO-AZAD) எந்த போராட்டம் நடத்தினாலும் சிகப்பு வண் ணம் தாங்கிய கொடிகளையே தூக்கி கொண்டு செல்வார் கள்..ஆனால் இப்பொழுது என்னவென்றால் காவிக்கொடி யை தூக்கிக்கொண்டு செல்கிறார்கள்.
நானும் ஒரு வேளை நம்முடைய அகில பாரதிய வித் யார் த்தி பரிஷத் அமைப்பினர் தான் ஊர்வலம் செல்கிறா ர்க ளோ என்று நினைத்தேன்..கடைசியில் அது பலுசிஸ் தான் மாணவ அமைப்பின் ஊர்வலம் தான்..என்றைக்கு மோடி பலுசிஸ்தானின் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவு அளித் தாரோ அன்று முதல் பலுசிஸ்தானின் நிறமும் மாறிக் கொண்டு இருக்கிறது.
எனக்கு கொஞ்சம் பார்வைக்கோளாறு உண்டு.அதனால் தான் எனக்கு எதைப்பார்த்தாலும் காவியாகத் தெரிகிற தோ என்னவோ..இருந்தாலும் போட்டோவில் கடைசி போட்டோ மட்டும்.கடந்த ஜூன் மாதம் நடந்த பேரணி யில்எடுத்தது.அது முழுக்க சிவப்பாகத்தான் இருக்கிறது. ஒரு வேளை மோடி ஆகஸ்ட் மாதம்தான் பலுசிஸ்தான் தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவு கொடுத்தார்.அதற்கு பிறகு கலர் மாறி விட்டதோ என்னவோ..
முதலில் இந்தியாவின் மூவர்ண கொடியை தூக்கி ஆத ரவு தெரிவித்தவர்கள்.இப்பொழுது இந்துக்களின் காவிக் கொடி யை பிரதிபலிக்கும் வண்ணத்தில் கொடிக ளை கைக ளில் ஏந்திக்கொண்டு செல்வது பச்சைக்கொடி பறக்கும் பாகிஸ் தா னில் விரைவில் காவிக் கொடி பற க்கும் காலம் வரும் என்பதையே உணர்த்துகிறது.
சரி இவர்கள் எதற்கு இப்படி ஊர்வலம் போகிறார்கள் என்று தேடினால் இந்த அமைப்பின் தகவல் தொடர்பு பிரிவின் செயலாளராக இருக்கும்.சபீர் பலுச் என்கிற மாணவரை பாகிஸ்தான் ராணுவம் தூக்கிக்கொண்டு போய்விட்டதாம்.
அதனால் தான் இந்த மாணவர்கள் வன்முறையை குறிக் கும் சிவப்பு கொடியை தூக்கி எரிந்துவிட்டு தியாகத்தை
குறிக்கும் காவிக்கொடியை கைகளில் ஏந்திக்கொண்டு
ஊர்வலமாக செல்கிறார்கள்.. இந்த சபீர் பலுச்சோடு சேர்த்து 29 மாணவர்களை தூக்கிக் கொண்டு பாகிஸ்தான்
ராணுவம் சென்றுள்ளது
பாகிஸ்தான் ராணுவமும் ஐஎஸ்ஐயும் சேர்ந்து இவர் களை கொன்று விடும் என்கிற பயத்தில் உலகம் முழுக்க இவர்களின் குரல் ஒலிக்க ஐநா சபையே ஐநா சபையே உனக்கு கண்ணில்லையா என்று கண்ணீர் விட்டு கதறிக்
கொண்டு ஊர்வலம் செல்கிறார்கள்..ஏனென்றால் பாகிஸ் தான் ராணுவம் தூக்கிக்கொண்டு சென்ற யாரும் திருப்பி உயிரோடு வந்ததில்லையாம்..
சரிப்பா..இவர்களை எதற்கு பாகிஸ்தான் ராணுவம் தூக்கிக்கொண்டு சென்றது என்று நீங்கள் கேட்கலாம்
அதாவது பாகிஸ்தானில் உள்ள இந்த பலுசிஸ்தான் வழியேதான் சீனாவின் முக்கிய வர்த்தகம் சார்ந்த கட்டமைப்புகள் உள்ளது.அதோடு CPEC என்கிற சீனா பாகிஸ்தான் எக்னா மிக் காரிடார் என்கிற பாதையின் முக்கிய இடமே பலுசிஸ்தான் தான். இதனால் இங்கு சீனர்கள் டேரா போட்டு பலுசிஸ்தானின் வளங்களை சுரண்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
அதற்காகதான் சீனா ஏகாதிபத்தியமே பலுசிஸ்தானை பாழா க்காதே பாழாக்காதே..எங்களின் வளங்களை சுரண்டாதே சுரண்டாதே..என்று சபீர் பலுச்தலைமையில் ஒரு மாணவர் கூட்டம்கோஷம் தான் போட்டா ர்கள் பொசுக்குனு தூக்கிக் கொண்டு போய் விட்டது பாகிஸ்தா ன் ராணுவம்.
ஆனால் நம் நாட்டிலேயும் ஒரு கூட்டம் இருக்கிறது. மனித உரிமை என்கிற பெயரில் தீவிரவாதத்தை தூண்டி விட்டு நம்முடைய ராணுவத்தை எதிர்த்து கோஷம் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.அவர்களை நம்மு டைய ராணுவம் எப்பொழுது வந்து தூக்கப்போகுது?

 நன்றி இணையம்