வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே-ஹோண்டா

மணக்கால் அய்யம்பேட்டை | AM 3:30 | Best Blogger Tips

இந்த உலகம் நிறைய வெற்றியாளர்களை கொண்டுள்ளது 
.
அந்த வெற்றியாளர்கள் வந்த பாதைகளை திரும்பி பார்த்தால் திரும்பிய திசையெல்லாம் தோல்வியே தெரிகிறது.இப்படி தான் உலகை திரும்பி பார்க்க வைத்த சாய்க்கிரோ ஹோண்டா சொன்ன ஒரு வார்த்தைதான் எனக்குள்ளும் நம்பிக்கை நெருப்பினை அணையாமல்
வைத்திருக்கிறது.
ஒரு காலத்தில்பிழைக்கத் தெரியாத பையன் என்று தன்னுடைய 18 வயதில் பெற்ற தகப்பனிடம் பெயர் எடுத்த ஹோண்டா தான் இன்று எத்தனையோ அப்பாக்கள்
தங்களின் செல்ல மகன்களுக்கு வாங்கி கொடுக்கும் ஹோண்டா மோட்டார் பைக்கினை உருவாக்கியவர்.
சாய்க்கிரோ ஹோண்டா தன்னுடைய வாழ்வில் 
அடைந்த தொடர் தோல்விகள் மாதிரி உலகத்தில் வேறு யாராவது அனுபவித்திருந்தால், எப்போதோ தற்கொலை செய்துக் கொண்டிருப்பார்கள்.அத்தனை தோல்விகளை யும் உள்வாங்கி, கடைசியில் பிரமாண்டமான வெற்றியை  தனதாக்கிய சாய்க்கிரோ ஹோண்டா”.தனது வாழ்க்கை அனுபத்தில் கற்றுக்கொண்டு நமக்கு கற்பித்த வாக்கியம் தான் வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே..
டோயோட்டோ நிறுவனத்திற்கு பிஸ்டன் தயாரிக்கும் தொழிற்கூடம் உருவாக்க வேண்டும் என்பது மாணவர் சாய்க்கிரோ ஹோண்டாவின் கனவு.யாருக்காகவும் அவர் காத்திருக்கவில்லை. அப்பாவின் திட்டு , சக மாணவர் களின் கேலிகளுக்கு இடையே, மாதிரி உலோகம் உருக் கும் கூடம் ஒன்றை 1928ஆம் ஆண்டு உருவாக்கினார்.
இதற்காக இரவு பகலாக உழைத்தார். ஓராண்டு காலமாக கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய, மாதிரி பிஸ்டனை பெரும் எதிர்பார்ப்புடன் டோயோட்டோ நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.எங்கள் எதிர்பார்ப்புக்குரிய தரத்தில் உனது பிஸ்டன் இல்லை நாங்கள் இன்னமும் பெட்டராக
எதிர்பார்க்கிறோம்என்று நிராகரித்துவிட்டது டோயோட் டோ நிறுவனம்.
முதலாவது கனவுத் திட்டம் படுதோல்விஅடைந்தது. மனம் பாரமாக இருந்தது. திரட்டி வைத்த முதலீடு மொ த்தமும் வீணாகியது. எல்லோரும் தங்களது கேலிக ளை பொழிந்தார்கள்.புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற மனப் பக்குவத்தோடு, ஹோண்டா மீண்டும் முயற்சித்தார். மேலும் பல மாதங்கள் விடாப்பிடியாக உழைத்து அவர் உருவாக்கிய புதிய பிஸ்டன் மாதிரியை டோயோட்டோ நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.
அருமை என்று பாராட்டி டோயோட்டோநிறுவனம் ஏற்றுக்கொண்டது. தயாரிப்புக்கு ஒப்பந்தம் கொடுக்கப் பட்டது. மனதுக்குள் சிறிய வெற்றிக் களிப்பு கொண்ட சாய்க்கிரோ ஹோண்டா பெரிய தொழிற்கூடம் கட்டினால் தான் அவர்கள் கேட்கும் எண்ணிக்கையிலான பிஸ்டன் தயாரிக்க முடியும்.
எனவே, கட்டடம் கட்டத் திட்டமிட்டார் ஹோண்டா. அப்போது ஜப்பான் நாடு உலகப் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்ததால், அங்கே வரலாறு காணாத சீமெந்து தட்டுப்பாடு.எவ்வளவோ முயற்சி செய்தபோதும் 10 மூட்டை சிமெண் ட்டு கூட கிடைக்கவில்லை.வாழ்க்கை முழுவதும் ரிஸ்க் எடுத்துக்கொண்டே இருப்பாயா போ
எங்காவது வேலைக்கு போ என்று குடும்பத்தின் மிரட்டல் கள்..
இவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காது சிமெண்டு கலவைக்கு இணையான மாற்றுக்கலவையை உருவாக் கும் முறையை கண்டுபிடித்தார் ஹோண்டா.ஆங்காங்கு
கடன் வாங்கி சில மாதங்களிலேயே பெரிய தொழிற் சாலை யை கட்டி முடித்தார்.
தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி பிஸ்டன் தயாரி க்கும் தொழிலை அமர்க்களமாகத் தொடங்கினார். கூட வே இரண்டாம் உலகப்போரும் தொடங்கியது.அமெரிக்கா
போட்ட குண்டு, ஹோண்டாவின் தொழிற்சாலையில் பெரும் பகுதியை உடைத்து நாசமாக்கியது.
ஹோண்டாவின் வாழ்க்கை முடிந்தது என்று பேசிக் கொண்டார்கள் நண்பர்கள். ஆனால்,தனது மொத்தத் தொழிலாளர்களையும் திரட்டிக்கொண்டு, தானே களமிற ங்கி சேதங்களை சீர்செய்து, தொழிற்சாலையை மீண்டும் இயக்கிக் காட்டினார் ஹோண்டா.
ஜப்பான் நாட்டில் நிலநடுக்கங்கள் அதிகம். ஒரு நாள் திடீரெனத் தாக்கிய நிலநடுக்கம் ஹோண்டாவின் தொழிற்சாலையைத் தரைமட்டமாக்கி விட்டது.
மொத்தத்தொழிற்சாலையையும் திருப்பிக்கட்ட முடியாத நிலை. வேறு வழியின்றி உடைந்த கருவிகள், மற்றும் மூலப்பொருட்களைக் கிடைத்த விலைக்கு டோயோட் டோ நிறுவனத்திற்கு விற்பனை செய்தார் ஹோண்டா.
இப்படிப்பட்ட நிலைமையில் நம்முடையமனநிலை எப்படி இருக்கும்? எண்ணிப்பாருங்கள்.....ஆனால் அப்போதைய நிலையில் ஹோண்டா கூறிய கருத்து..நான் ஆசைப்பட்ட..
ஒரு திட்டம் தோல்வி அடைந்தால், துளிகூட கவலைப் படமாட்டேன்இருக்கிற நிலைமை யை எப்படி மாற்ற லாம் என்று தீவிரமாக சிந்திக்கத் தொடங்கி விடுவேன் .என்றார்.
இரண்டாம் உலகப் போர் முடிந்தி ருந்த நேரம் ஜப்பானின் பொருளாதாரம் சாம்பலாக்கப்பட்ட காலக்கட்டம், ஜப்பான் முழுதும் பெட்ரோல் தட்டுப்பாடு. கார்கள் எல்லாம் முடங் கிவிட்டன.எல்லோரும் நடக்கிறார்கள் அல்லது சைக்கிளில் செல்கின்றார்கள். சாய்க்கிரோ ஹோண்டா, வீட்டில் அமர்ந்திருந்தார். அருகில் சைக்கிள் நின்றது. சற்றுத் தொலைவில் புல்வெட்டும் இயந்திரம் இருந்தது.
அந்தப் புல்வெட்டும் இயந்திரத்தில் உள்ள மோட்டாரைக் கழற்றி, இந்த சைக்கிளில் இணைத்தால் என்ன என்று ஹோண்டாவுக்கு ஒரு புத்தம் புது ஐடியா தோண்றியது.
அடுத்த நொடியில் காரியத்தில் இறங்கினார் ஹோண்டா. புல்வெட்டும் இயந்திர மோட்டாரைக் கழற்றி எடுத்து, தனது சைக்கிளில் அவர் பொருத்திய போது உலகின் முதல் மோட்டார் சைக்கிள் பிறந்துவிட்டது.
அதைஎடுத்துக்கொண்டு ஆனந்தமாக சுற்றி வந்தார் ஹோண்டா. அதேபோன்று எங்களுக்கும் செய்துகொடு என்று மொய்க்கத் தொடங்கினர் மக்கள்.அவரும் சளைக் கா மல் செய்து கொடுத்தார். அதன் விளைவுஇதையே பெரிய தொழிலாக மாற்றினால் என்ன என்று சிந்தித்தார் ஹோண்டா.கையில் பணமில்லை, வங்கிகள் கடன்தரத் தயாராகவில்லை. ஹோண்டா துரதிர்ஷ்டக்காரன் என்று மீண்டும் எல்லோரும் கூறினார்கள்.
அப்போதும் கலங்கவில்லை ஹோண்டா. தனது தொழில் திட்டத்துக்கு பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து, ஜப்பானில் உள்ள 18 ஆயிரம் சைக்கிள் கடைக்கா ரர்களுக்கு கடிதம் எழுதினார்.முதலீடு செய்யும் சைக்கிள் கடைக்காரர்கள், மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர் களாக நியமிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார்.
5 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்கள்முன்வந்து பண உதவி செய்தனர். ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் உதயமானது.முதலில் தயாரான மோட்டார் சைக்கிள் குறித்து விமர்சனங்கள் வந்தபோது, தானே உலோகம் உருக்கும் கூடத்தில் அமர்ந்து, அழகான வடிவமைப்புடன் அற்புதமான மோட்டார் சைக்கிள் வகைகளை கொண்டு வந்தார்.
அவமானகரமான தொடர் தோல்விகளுக்குப் பின்னர் பெரும் வெற்றி பெற்றார் சாய்க்கிரோ ஹோண்டா.
இப்போது ஹோண்டா நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 2 கோடி மோட்டார் வாகனங்களை தயாரிக்கிறது.
ஹோண்டா கார்களுக்கு உலக நாடுகள் அனைத்திலும் நாடுகளிலும் பெரும் வரவேற்பு இருகிறது. எத்தனையோ வகை வகையான தயாரிப்புக்களில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது இந்த நிறுவனம்.

 நன்றி இணையம்