பித்ரு தோஷம் நீங்கட்டும்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:09 | Best Blogger Tips

 


'சத்ருவைக்கூட அருகில் வைத்துக்கொள். ஆனால், பித்ரு தோஷத்தை உடனே களையப் பார்என்பார்கள் பெரியோர்கள். எந்த ஒரு இல்லத்தில் பித்ருக்களின் தோஷம் சேர்ந்துள்ளதோ, அங்கே சில வாழ்க்கைத் தடைகள் தெரியத் தொடங்கும்.

பித்ருக்களுக்கான பூஜையும் தெய்வ பூஜையே என்று அனைவரும் உணர்தல் வேண்டும். ஒரு வீட்டில் திதி நடைபெறும் நாள் வந்தால், திதி செய்த பிறகுதான் சாமி அறையில் பூஜை செய்தல் முறை. ஒரு சிலர் முதலில் தெய்வ பிம்பங்களைக் கழுவி அபிஷேகித்து பூஜை நடத்திவிட்டு, அதன்பிறகு சிராத்த வழிபாடு செய்கிறார்கள். இது தவறு. 'மாதுர்-பிதுர்-தேவ தேவோ பவாஎன்பதுதான் சாஸ்திரம் காட்டும் வரிசை.


#மணிகர்ணிகா_வழிபாட

பித்ரு தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறுவற்கு பல வழிகள் சொல்லப்பட்டாலும், அவற்றுள் மணிகர்ணிகா வழிபாடு விசேஷமானது. 'கர்ம பூமிஎன்று உலகமே போற்றிப் புகழும் நம் தேசத்தில், மணிகர்ணிகா வழிபாடு மகத்தான பலனும் ஐஸ்வர்யமும் தருவதாகத் திகழ்கிறது. காசிக்குச் செல்பவர்கள் கங்கைக்கரையிலுள்ள 'மணிகர்ணிகா காட்என்ற தீர்த்தக் கட்டத்துக்குச் சென்று பித்ருக்களை நினைத்து வழிபட்டு வரலாம்.


ஒருமுறை, இந்த தீர்த்தக்கட்டத்துக்கு எழுந்தருளிய ஆதிசங்கரர், அங்கே தன் தாயாருக்குத் தர்ப்பணம் செய்தார். அப்போது, தமது ஞானதிருஷ்டியால் மணிகர்ணிகாவின் பெருமையையும் சக்தியையும் அறிந்து வியந்தார். அப்போது அவர் வாக்கிலிருந்து கங்கையாகப் பிரவாகமெடுத்த அற்புத ஸ்துதியே, 'மணிகர்ணிகா அஷ்டகம்’. எவரொருவர், மணிகர்ணிகா தீர்த்தக் கரையில் அமர்ந்து பித்ரு பூஜை செய்து, இந்தத் துதியை மூன்று முறை படிக்கிறாரோ, அவர் பிரம்மனைப் போன்று மதிக்கப்படுவார்கள்.

மேலும், மணிகர்ணிகா தீர்த்தத்தில் இருந்து 16 மைல்கல் சுற்றளவில் வசிப்பவர்கள் பாக்கியவான்கள். அவர்களுக்குப் புண்ணியமும், புனிதமான வாழ்வும் சித்திக்கும் என்கின்றன ஞானநூல்கள்.

கங்கை- மணிகர்ணிகா தீர்த்தம் ஆதிசங்கரரைக் கண்டதும், அவருடைய திருப்பாதம் தன் மேல் பட்டதே பாக்கியம் என்று கருதி, தேவதையாக எழுந்தருளி, அவரை வணங்கியதாம். அப்போது, ''பூவுலகில் சிறப்பிக்கப்பட்டவளே! இந்த இடம் மட்டுமின்றி, இன்னும் சில புண்ணிய இடங்களிலும் நீ தோன்றி, சகலமானவருக்கும் பித்ரு தோஷங்களை அகற்றி ஆசியளிப்பாயாக!’ என்று ஆதிசங்கரர் அருளியதாகச் சொல்வர். இந்த மணிகர்ணிகா தீர்த்தம் குறித்து ஒரு புராணச் சம்பவம் உண்டு.

ஸ்ரீபார்வதிதேவியை பரமேஸ்வரருக்குத் திருமணம் செய்து வைத்த மகாவிஷ்ணு, அவர்களது தேனிலவுக்காக ஓரிடத்தைத் தேடினார். காசியின் கங்கை தீரத்தில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கே ஒரு தீர்த்தத்தையும் சோலையையும் தனது சக்கராயுதத்தால் உண்டுபண்ணினார்.


அதைப் பார்க்கவந்தபோது, ஸ்ரீபார்வதி தேவி தீர்த்த நீரில் முகம் பார்த்து மணியை (ஆபரணம்) சரிசெய்தபோது, மணிகளில் ஒன்று கழன்று நீரில் விழுந்துவிட்டது. பரமேஸ்வரன் அதை எடுக்க முயற்சித்தார். அப்போது அவரது கர்ணகுண்டலம் ஒன்றும் கழன்று நீரில் விழுந்துவிட்டது. தேவியின் மணியும் ஈசனின் கர்ண மணியும் விழுந்ததால், அந்தத் தீர்த்தத்துக்கு மணிகர்ணிகா என்ற பெயர் நிலைத்தது. ஆக, இந்தத் தீர்த்தம் மகத்துவமானது.

வழிபடும் முறை:

தட்டில் பச்சரிசி பரப்பி வைத்து, அதில் பஞ்சமுக ருத்ராட்சமும், பொன்னால் ஆன மணி அல்லது சிவ ஆபரணம் ஏதேனும் ஒன்றை வைக்கவேண்டும். அருகில் ஸ்ரீபார்வதி- பரமேஸ்வரன் சேர்ந்திருக்கும் படத்தை அலங்கரித்து வைத்து, ஐந்து முக தீபம் மற்றும் காமாட்சி விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். அடுத்ததாக, சிவார்ச்சனை- வில்வம் சமர்ப்பித்து, 16 சிவ நாமாவளிகளையும், அம்பிகை அர்ச்சனையை 16 நாமாவளியாகவும் செய்து வணங்க வேண்டும். பானகம், நீர்மோர், தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, ஆரத்தி காட்டவேண்டும். பின்னர், ஆத்ம பிரதட்சிணம் செய்து மலரிட்டு, பிரசாதம் எடுத்துக்கொள்ளலாம்.

(வழிபடுவோம்...)

தமிழகத்தில் மணிகர்ணிகா:

காசி- கங்கைக் கரையில் உள்ளதைப் போன்று, தமிழ்நாட்டிலும் நான்கு தலங்களில் மணிகர்ணிகா தீர்த்தம் உள்ளது. இப்பிறவியில் புண்ணியம் தேடுவோர், ஒரு முறையாவது இந்தத் தலங்களைத் தரிசிக்கவேண்டும்.

மதுரை- திருப்பூவனம் ஸ்ரீபூவனநாதர் கோயிலில் மணிகர்ணிகா - தேவி குண்டம், புஷ்கரணி உள்ளது.

திருச்சிக்கு அருகில் உள்ள திருவெள்ளறையில், ஸ்ரீசெண்பகவல்லி உடனுறை ஸ்ரீபுண்டரீகாட்சப் பெருமாள் தலத்தில் உள்ள தீர்த்தத்துக்கு வராக மணிகர்ணிகா என்று பெயர்.

வேதாரண்யத்தில் ஸ்ரீயாழ்பழித்தமொழியாள் உடனுறை ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்திலும் மணிகர்ணிகா தீர்த்தம் உள்ளது.

சென்னை- திருநீர்மலையில், ஸ்ரீஅணிமாமலர் தாயார் சமேத ஸ்ரீநீர்வண்ணர் சந்நிதிக்கு எதிரில், மணிகர்ணிகா புஷ்கரிணி உள்ளது. இதுவே, தென்னகத்து விஷ்ணு கயா ஆகும்.

வாழ்க வளமுடன்.

 நன்றி இணையம்