கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான் கடவுளுக்கு செய்கிற தொண்டு !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:47 | Best Blogger Tips

ஒரு மன்னர் இருந்தார், அவருக்கு ஆன்மிகத்துல ரொம்ப ஈடுபாடு அடிக்கடி கோவிலுக்கு போவார், வருவார் . வழக்கம் போல ஒரு நாள் கோவிலுக்கு போனார்.
கடவுளை வேண்டினார், அதுக்கப்பறம் திரும்பி வந்தார், கோவிலுக்கு வெளியில ஒரு மரத்தடியில ஒரு சந்நியாசி உட்கார்ந்திருக்கார், அவர் கண்ணை, மூடிகிட்டு தியானத்துல இருந்தார்.
மன்னர் அவரை கவனிச்சார் . அவர்கிட்ட ஆசீர்வாதம் வாங்கனும்னு ஆசை பட்டார் கிட்டத்துலபொய் போய் நின்னார் . அவர் மெதுவா கண்ணை திறந்து பார்த்தார். இவரு அவர் கால்ல விழுந்தார் . அவர் ஆசிர்வாதம் பண்ணினார் .
அதுக்கப்றம் இந்த மன்னர் தன்கிட்டே இருந்த விலை உயர்ந்த சால்வை ஒன்றை எடுத்தார் . அந்த சன்னியாசிக்கு போர்த்தினார் . அப்புறம் , விடை பெற்றார் .
மறுநாள் காலைல அந்த மன்னர் தன்னுடைய அரண்மனை மேல் மாடத்துல நின்னுகிட்டு இருந்தார் . அப்போ தெருவுல ஒரு பிச்சைக்காரன் போய்கிட்டு இருந்தான் , அவனை பார்த்ததும் மன்னருக்கு அதிர்ச்சிகாரணம்
நேற்று அந்த சன்யாசி கிட்டே ஒரு விலை உயர்ந்த சால்வையை போத்தினாரே அதே சால்வையை சால்வையை இப்போ அந்த பிச்சைகாரன் போர்த்திகிட்டு போறான்
மன்னர் உடனே காவலர்களை கூப்பிட்டு அந்த பிச்சைக்காரனை கூட்டிகிட்டு வர சொன்னார் . அவன் வந்தான்
உனக்கு எப்படிஎப்படி இந்த போர்வை வந்தது- னு விசாரிச்சார் . அவன்கோவில் வாசலிலே தனக்கு ஒரு சன்யாசி கொடுத்தார்னு விபரம் சொன்னான்.
உடனே போய் அந்த சன்யாசியை இங்கே கூட்டிகிட்டு வாங்கனு உத்தரவு போட்டார்
சன்யாசி வந்து சேர்ந்தார்.. என்ன நடந்ததுன்னு விசாரித்தார் மன்னர் .
மன்னா ! நீ இந்த போர்வையை எனக்கு போர்த்திட்டு போனதுக்கு அப்புறம் கொஞ்ச நேரத்துல இந்த பிச்சைக்காரன் அந்த பக்கமாக வந்தான் . ஒரு கிழிஞ்ச துண்டை கட்டியிருந்தான் , உடம்பு குளிராலே நடுங்கிகிட்டு இருந்தது . பார்க்க பரிதாபமா இருந்தது . அதான் உடனே இதை எடுத்து அவனுக்குப் போர்த்தி விட்டேன்அப்படீன்னார் .
என்ன இருந்தாலும் இது எனக்கு செய்த அவ மரியாதைஅது மிகவும் விலை உயர்ந்த சால்வைமன்னர்களுக்கு என்றே விசேசமாக தயாரிக்கப்பட்டது . அதை உங்களுக்கு கொடுத்தேன் , அதை போய் நீங்க ஒரு பிச்சைகாரனுக்கு கொடுத்திருக்கீங்க …! என்றார்
மன்னருக்கு கோபம் குறையவே இல்லை .சன்யாசி சிரித்தார் . மன்னருக்கு கோபம் இன்னும் அதிகமாச்சு , விளைவு அந்த சன்யாசி சிறையில் அடைக்கப்பட்டார் .
அன்றிரவு மன்னர் தூக்கத்தில் ஒரு கனவு கண்டார் . அந்த கனவில்மன்னர் மறுபடியும் அந்த கோவிலுக்கு போகிறார் . ஆண்டவன் சந்நிதியில் போய் நிக்கிறார் . அங்கே கடவுள் குளிரால் நடுங்கி கொண்டிருக்கிறார் .
மன்னர்கடவுளே ! என்ன ஆச்சு உனக்கு ?”
கடவுள்குளிர் தாங்க முடியலே
உடனே மன்னர் தன்னிடமிருந்த விலையுர்ந்த சால்வையை எடுத்துக்கொண்டு கடவுளை நெருங்கினார் .
கடவுள் பயத்தில் கத்தினார்என்ன அது ? உன்னுடைய சால்வையா ? வேண்டாம் எனக்கு “.
மன்னர்கடவுளே ! இதை ஏன் வேண்டாம் என்று சொல்கிறீர்கள் ? நான் என்ன பாவம் செய்தேன் ?
கடவுள்நேற்று ஒரு சால்வையை எனக்கு கொடுத்தனுப்பினாய் ! அதை கொண்டு வந்தவனுக்கு நீ ஒரு பரிசு கொடுத்திருக்கிறாய் ! என்ன பரிசு தெரியுமா ? சிறை தண்டனை !”
மன்னரை யாரோ தலையில் தட்டுவது போல இருந்தது . திடீர் என்று விழித்து கொண்டார் அவருக்கு எல்லாம் புரிந்தது . ஓடிபோய் அவரே சன்யாசியின் சிறையின் கதவுகளை திறந்து விட்டார் . சன்யாசியின் கால்களில் விழுந்தார் .
சுவாமி நான் அறியாமல் செய்துவிட்டேன் , தாங்கள் ஒரு மகான் ! என்னை மன்னித்து கொள்ளுங்கள் !” என்றார்
மன்னா ! கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான் கடவுளுக்கு செய்கிற தொண்டு ! அதை புரிந்து கொள் ..” என்று சொல்லிவிட்டு தெருவில் இறங்கி நடந்தார்.
அருள் என்பது நாம் வழங்கும்
பொருளில் இல்லை...அது நாம் வழங்கும் அன்பில் உள்ளது.
இதை புரிந்து கொள்ளும் சூழ்நிலையில்...
நம் வாழ்வும் இனிதாகும்
Good night 🌜my dear Guru,GOD, brothers,sisters and friends!!!!
Sweet dreams 
🍫& Sleep well!💤 Have a lovely happy tomorrow too..!💕💕
இறைவன் நினைவே இனிய இரவு வணக்கம்! வாழ்க வளமுடன் !! நலமுடன்!! நன்றி!! நன்றி!🙏ஓம் சிவ சத்தி ஓம் 🙌-என்றும் அன்புடன் MU Dhanalakshmi Chandaran