மனித மனதின் அலசலில் : உள் முக பயணம்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:21 | Best Blogger Tips
Image result for மனித மனதின் அலசலில்

நம் எல்லோருடைய மனதிற்குள்ளும் குறை கூறும் இயந்திரம் ஒன்று ஓயாமல் செயல்பட்டு கொண்டே இருக்கிறது..

குறை சொல்வது மனிதனின் இயற்கை குணம் என்றே கூறலாம் !
Image result for மனித மனதின் அலசலில்
இது சரியில்லை, அது சரியில்லை என்று சதா கூறிக்கொண்டிருக்கும் நபரின் மனம் முற்றிலும் தவறான விஷயமாக பெரிது படுத்தி காட்டும்.
வீட்டில் குப்பை கூளங்கள் நிறைந்திருப்பதால் வீடே சரியில்லை...

அதில் வாழும் மனிதர்களே சரியில்லை என்பதும்,
ஹோட்டலில் சர்வீஸ் சரியில்லை என்று நிர்வாகியிடம் புகார் கூறுவது..

மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மின் வாரிய அலுவகத்தில் புகார் கூறுவது..
இன்னும் சற்று வித்யாசமாக குறை கூறும் நபர்களும் உண்டு.

வானிலை பற்றிக் குறை கூறுவது,
இதனால் இயற்கையே தவறு செய்வது போலவும்,
தான் மட்டும் உலகில் நல்லவர் போலவும்..
இந்த அகங்காரம் தன்னையே பெரிதாக நினைக்கிறது !
நம்மால் எதுவுமே செய்ய முடியாதபோது ..

இதுபோல விஷயத்தைப் பற்றிக் குறை சொல்வதால்...
நாம், வெறுப்பு என்ற விதையை மட்டுமே விதைத்துக் கொண்டிருக்கிறோம் !!

உதிக்கும் சூரியனின் கதிர்களை பார்க்கும்போது ..
புருவத்தை உயர்த்தி.. முகத்தை சுளித்து.. மொத்தத்தில் இந்த ஊரே இப்படித்தான் என்று ஒட்டுமொத்த நகரத்தையே சபிக்க ஆரம்பிக்கிறோம் !

அரசியல் பற்றியும், அரசாங்கம் நடத்தும் ஆட்களைப் பற்றியும் குறை கூறுவது ஏகப்பட்ட அலாதியான இன்பம் நமக்கு ..

இது மிகப்பெரிய பொழுதுபோக்கு சாதனையாகவே கருதுகிறோம் !

அவர்களைக் குறை கூறத் தெரிந்த நமக்கு ,
நாம் எப்படிப்பட்டவர்கள் என்று சற்று குனிந்து நம்மை பார்க்க நேரம் இருப்பதில்லை...

இப்படிக் குறை கூறும்போது நம்முடைய அகங்காரம் பெரிதளவு வளர்ந்து விருட்சம் ஆகிறது !

இன்னும் இறைவனைப் பற்றிய குறை கூறும் படலம் கொண்ட மனிதர்களும் இருக்கிறார்கள் !
யாரையும் குறிப்பிட்டுக் குறை கூற முடியாமல் போகும்போது ...

நம்முடைய குறைகள் இறைவனை நோக்கி திரும்பிகிறது...

இன்னும்,

உறவினர்கள், சக குடும்பத்தினர்கள், சக தொழிலாளர்கள் இப்படிப் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும்..

மனிதர்களுடைய அகங்காரத்தால் பார்த்து பார்த்து தயார் செய்யபடும் குற்றங்கள் தான் இந்தக் குறை கூறும் பழக்கம்..

மனிதனின் அகங்காரமானது.. சரி என்றும் தவறு என்றும் வாதிடும் போது ,

அவருடைய அறிவுக் கண்ணை மறைத்து தேடித்தேடி குறை கூறும்...

அது நியாயம் என்றே வெளிப்படுத்தும் !
இந்தக் குறைகளை வெளிப்படுத்துவதே அகங்காரத்தின் வெளிப்பாடு தான்..

குறை கூறும் போது தனது அகங்காரம் திருப்தி அடைகிறது !

இதனால் சமுதாயத்தில்எதற்கெடுத்தாலும் புலம்புவர்என்ற பட்டம் மட்டுமே கிடைக்கும் !
குறைகளை சுட்டிக்காட்டுவதில் மனதிற்கு ஏன் இத்தனை குதூகலம் ....???

இதன் உளவியல் காரணம்தான் என்ன..???
குறைகளைப் பார்க்காமல் நிறைகளை மட்டுமே பார்க்க வேண்டும் என்று மனம் எப்போதும் நினைப்பதில்லை.

குற்றங்களைக் கண்டுபிடிப்பதில்.. குறைகளை சுட்டிக்காட்டுவதில்..

மனம் அதீத திறமையுடன் செயல்படுகிறது.
இந்தப் பழக்கத்தால் நமக்குள் என்ன மாற்றத்தை உண்டு பண்ணி இருக்கிறது என்று என்றைக்காவது நினைத்ததுண்டா.....???

குறை சொல்லும் மனதை பொறுத்தவரை மகிழ்ச்சியும் நிம்மதியும் இரண்டாம் பட்சம் தான்.
மனித மனம் எப்போதுமே தன்னை சிறந்ததாகவும், உயர்ந்ததாகவும், பெரியதாகவும் காட்டிக்கொள்ளவே ஆசைப்படுகிறது...

மனதின் தேவை இதுதான்.

தன்னை உயர்த்திக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக ,

மனமானது என்ன வேண்டுமானாலும் செய்யும் !
எப்போதுமே முழுமை அற்றதாக, தெளிவற்றதாக, திருப்தி அற்றதாக உணரும் அகங்காரத்தின் ஆணிவேர் தான் ..

தானே உயர்ந்தவன்", என்ற சுய முக்கியத்துவத்தை முன்னிலை படுத்தும் !

தன்னை உயர்ந்ததாக வெளிப்படுத்த மற்றவரின் குறைகளை சுட்டிக்காட்டி ,

அவர்களை மட்டம் தட்டும்போது, தானே வென்றாதகவும் நினைத்துக் கொள்கிறது !!

அவர்களுக்குள் இருக்கும் அறியாமை தான் இதுபோல குறைகளை சுட்டிக்காட்டுவதில் வெளிப்படுகிறது !

இந்த பழக்கம் நாளடைவில் பிரிக்க முடியாத பழக்கமும் ஆகிவிடுகிறது..

இதனால் நல்ல விஷயங்களையும் கண்டுணர அவர்களால் முடிவதில்லை !!

இதனால் தம்முடைய வாழ்க்கையே சலிப்புற்றதாக எண்ண வேண்டிய சூழலுக்கும் ஆட்பட்டு விடுகிறார்கள் !

தங்களுடைய வாழ்வில் திருப்தி இல்லாத மனிதர்கள் தான் பிறருடைய குறைகளை காணுகிறார்கள்...

இந்த உலகில் எந்தக் குறையும் இல்லாத மனிதர்கள் இதுவரை பிறக்கவும் இல்லை,

இனிமேல் பிறக்கப்போவதும் இல்லை!!
வாழ்க்கையின் சின்ன சின்ன
விஷயங்களில் கூட ,

நன்றி உணர்வைத் தெரிவிக்கும் போது..
குறை கூறும் பழக்கம் எளிதில் விடுபடும் !!
மனித மனதின் அலசலில் : உள் முக பயணம்
பகிர்வு

நன்றி இணையம்