#விமான_சாஸ்திரம் தொடர்ச்சி.2

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:27 | Best Blogger Tips


இருபது ஆண்டுகளாக இந்திய வானவியல் சங்கத்தை சார்ந்த விஞ்ஞானிகளாலும், நாசா உலகின் பிரபலமான பேராசிரியர்கள்,மாணவர்களாலும்
#பரத்வாஜ_முனிவரின் #வைமானிக_சாஸ்திரத்தைஆராயப்பட்ட இந்நூலின் அறிவில் தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறிப்புகளை வியந்து பாராட்டாதவர்களே இல்லை.
*புத்தானந்தா என்ற அறிஞர் 'பரத்வாஜ முனிவரின்' வைமானிகா சாஸ்திரத்திற்கு விளக்கவுரை எழுதியுள்ளார்.
*மைசூரைச்சார்ந்த சுப்ராயசர்மா என்ற அறிஞர் பரத்வாஜ முனிவருன் வைமானிகா சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வானவியல் குறித்த நூல் ஒன்றினை எழுதியுள்ளார். மேற்கண்ட இந்த நூல் ஆர்.எஸ்.ஜோசர் என்பவரால் ஆங்கஅலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்ட இந்நூல் இன்றும் கிடைக்கிறது.
பரத்வாஜ முனிவரின் வைமானிகா சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ள குறிப்புகள்.
*8-முக்கிய அதிகாரங்கள்,
*100-
துணை அதிகாரங்கள்,
*500-
சூத்திரங்கள்,
*3000
சுலோகங்கள்
**32-
வானப் பயனவியல் சாத்திரங்கள்.
Image result for விமானசாஸ்திரம் தொடர்ச்சி
தற்போது கிடைக்கப்பெறும் பண்டையகால விமான சாஸ்திரம் பற்றிய 25 நூல்கள் குறித்த விவரங்கள் மேற்கண்ட புத்தகத்தில் இருக்கின்றது.
*விமான சாஸ்திரத்தில் இருந்த ஓவியங்கள் கடந்த 1923 ஆம் ஆண்டு நகல் எடுக்கப்பட்டது.
*அகத்தியரின் சக்தி சூத்திரம்
*சூடாமணிகாவா எழுதிய ஈஸ்வரா என்ற அறிஞர்.
*சகடாயனாவின் வாயு தத்வ பிரகர்னா.
*நாரதர் எழுதிய வியாசநல தந்திரா, தூமபிரகர்ணம்.
*கௌனாக் எழுதிய வஸ்ராயனாதந்ரா
*நாராயண மகரிஷி எழுதிய விமான சந்திரிகா
*வாஸ்பதி எழுதிய யான இந்து
போன்ற அரும்பெரும் அதியற்புத நூல்களும் மேற்கண்ட வைமானிக சாஸ்திராவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானங்கள், விமானங்களின் வகைகள், பல்வேறு யுகங்களில் இருந்த விமானங்கள், விமானியரின் கல்வித்தரம், விமானியின் உடை குறியீடு, பயனிகளின் உடை குறியீடு, பறக்கும்போது எடுத்துக்கொள்ளவேண்டிய உணவு, விமானங்களின் பலதரப்பட்ட எந்திரங்கள், விமானங்கள் பறக்க பொருத்தமான எரிபொருள், விமானங்கள் கட்ட தேவைப்படும் உலோகங்கள், பறக்கும்போது விமானி வானில் சந்திக்கவேண்டிய சூழ்நிலைகள், அவைகளிலிருந்து மீண்டு வருவதற்கான வழிமுறைகள், இவைகளைப்பற்றி தெளிவாகக் கூறுவதற்கு பரத்வாஜ முனிவர் மேற்சொன்ன நூல்களையே கையாள்வார்.
*நாராயண மகரிஷியின் கருத்துப்படி விமானம் நிலத்திலும் ஓடும், தண்ணீரிலும் ஓடும் தன்மையுடையது, அது ஓர் பறவையைப்போல வானில் பறக்கும், ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு வானில் பயனம் செய்யும் ஊர்தி விமானம் என்று அழைக்கப்பட்டது.
அதில் விமானத்திற்கு பயன்படுத்தப்படும் நான்கு வகையான விளக்கங்களைத் தருகிறார். அவை.
1.வனசுப்பத்தி எண்ணெய்
2.
சூரியசக்தி
3.
பாதரசவாயு
4.
ஆகாயத்திலிருந்து நேரடியாகப் பெறும் சக்தி.
தற்கால விமானங்கள் வெப்பவாயுவை எறித்து வரும் சக்தியால் இயங்குகின்றன, ஆனால் நாசா விஞ்ஞானிகள் சமீபத்தில் விமான சாஸ்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் பாதரசத்தைப் பயன்படுத்தும் தொழில்நுட்பம்மூலம் ஆராய்ச்சிசெய்து வெற்றிகரமாக பாதரசத்தில் இயங்கிம் இஞ்சினை வடிவமைத்துள்ளனர்.
போஜராஜாவால் எழுதப்பட்டு இங்கிலாந்தைச்சார்ந்த வில்லியம் குளோரண்டைன் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்ட சமரங்கானா சூத்ரதார என்ற நூலில் குறிப்பிட்டுள்ள தொழில்நுட்பத்தையே அவர்கள் பின்பற்றினர்.
விமான சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ள 31 வகையான எந்திரங்கள் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
1.விஸ்வகிரியை தர்பயணம்.
இது ஒரு சிறந்த கண்ணாடிக்கருவி.
விமானத்தை சுற்றியுள்ள சூழ்நிலையை விமானிக்கு காட்டும்.
2. பரிவாஷகிரிய எந்திரம்.
இது விமானத்தை இயக்கும்முன் தள்ளும் கருவி.
3. தாமோகர்ப எந்திரம்.
வானில் போர்நடக்கும் சமயத்தில் பார்வைக்குத் தெரியாமல் விமானத்தை மறைக்கும் கருவி. இது ஒரு வகையான ஒளிமறைவாகச் செயல்படும் தொழில்நுட்பம். தாமோகர்பா என்று அழைக்கப்படும் ஒரு சிறந்த உலோகக் கலவையால் இக்கருவி செய்யப்பட்டது.
பிர்லா விஞ்ஞான மையத்தின் விஞ்ஞானிகளும் ஐஐடி பாம்பேயின் விஞ்ஞானிகளும் இணைந்து விமான சாஸ்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் உலோகங்களை ஆராய்ந்து, அவைகளின் பயன்பாட்டையும், விமானங்களை கட்டமைக்கப் பயன்படும் சரியான உலோகக் கலவைகளை செய்யப் பயன்படும் தொழில்நுட்பங்களையும் தெரியப்படுத்தினர்.
விமானி அறிந்துகொள்ளவேண்டிய 32 வகையான ரகசியங்களையும் விமான நூல் குறிப்பிடுகிறது.
விமானி சிறந்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.
*பறத்தலை வானில் முன்செலுத்துவது.
*வானில்பறத்தலை நிறுத்துவது,
*தேவையான இடத்தில் குட்டிக்கரணம் அடித்து விமானத்தை ஓட்டுவது,
*குறுகிய நேரத்தில் விமானத்தின் வேகத்தை கூட்டுவது/குறைப்பது.
*எதிரிகளின் விமானம் தாக்கும்போது விமானத்தை பாதுகாப்பது.
என பறக்கும்போது விமானி எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலையை முனிவர் கௌனகா ஐந்துவகையாக வகைப்படுத்தியுள்ளதாக பரத்வாஜ முனிவர் குறிப்பிடுகிறார்.
ராசா துரியன்
காவியத் தலைவன்