பிராணாயாமம் ஒரு பார்வை - 2

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:49 | Best Blogger Tips

Photo: பிராணாயாமம் ஒரு பார்வை - 2

மனிதர்களின் சுவாசக்கணக்கு

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்கு
கூற்றை உதைக்கும் குறிஅது வாமே - திருமந்திரம்

பதிணென் சித்திர்களில் ஒருவராக விளங்கும் திருமூலர் தமது திருமந்திரத்தில் கூறியுள்ள செய்தி ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 சுவாசம் வீதம் நாள் ஓன்றுக்கு
21,600 சுவாசங்களா உள்வாங்கி வெளியிடுவதாக குறிப்பு.

நாசித் துவாரங்கள் வழியாக உட்செல்லும் காற்றை சித்தர்கள் அங்குலக் கணக்கில் அளந்துள்ளனர். வலது நாசித்துவாரம் வழியாக போகும் போது 12 அங்குலமும்,
இடது நாசி வழியாகப் போகும் போது 16 அங்குலமும், இரு துவாரங்களின் வழியே இணைந்து சுழுனையில் சஞ்சரிக்கும் போது 64 அங்குலமும் உட்செல்கிறது. இதே போன்று வெளியேசெல்லும் காற்றையும் அளந்துள்ளனர். அமர்ந்து இருக்கும் போது 12 அங்குலமும், நடக்கும் போது 16 அங்குலமும், ஓடும்போது 25 அங்குலமும், உறங்கும் போது 36 அங்குலமும், உடலுறவின் போது 64 அங்குலமும் வெளியாகின்றன. மனித உடலில் சேமிப்பில் இருக்கும் பிராணன் அவரவர் செயலுக்கேற்ப அழிகின்றது என்பதை முன்சொன்ன கணக்கு தெளிவாக்குகிறது.


சுவாசத்திற்கும் மனித ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 12 அங்குலம் சுவாசம் உள்ளே செலுத்தி 4 அங்குலம் வெளியே விட்டு மிதமுள்ள 8 அங்குலம்
உள்ளே உலவச் செய்தால் 120 ஆண்டுகள் ஒரு மனிதன் வாழ முடியும் என்பது சித்தர்கள் கண்டறிந்த உண்மை. எனவே தான் பிராணாயாமத்தை நம் முன்னோர்கள்
முறையாகப் பழகி வந்துள்ளனர்.

மனிதனின் வெற்றி தோல்விகளையும், சுவாசம் நிர்ணயம் செய்கின்றது என ஞானசர நூல் விளக்குகிறது. 

1. இடது நாசியில் சுவாசம் நடக்கும் போது தாயின் உயிர்த்தன்மையின் செயல்பாடுகள் இயக்கத்துக்கு வரும் என்பது சித்தர்கள் கண்டுபிடிப்பு. எனவே இட நாடியின் சுவாசத்தை தாய் நாடி எனவும், பெண் நாடி எனவும், சந்திர நாடி எனவும், சந்திரகலை எனவும் அழைத்தனர். இட நாசியில் சுவாசம் நடைபெறும் போது அர்ச்சனை, குடமுழக்கு, திருமணம் போன்ற சுபநிகடிநவுகள் இயற்றிட உத்தமம்.

2. வலது நாசியில் சுவாசம் நடக்கும்போது தந்தையின் உயிர்ப்புத்தன்மையின் செயல்பாடுகள் நிகழும் நேரத்தை ஆண்நாடி எனவும், தந்தை நாடி எனவும், பிங்கலை எனவும், சூரிய நாடி எனவும், சூரியகலை எனவும் அழைத்தனர். இந்த நாடி செயல்படும்போது சங்கீதம், உபதேசம், கற்றல் ஆகிய பணிகளைச் செய்யலாம்.

3. சுழுமுனை, இரு நாசிகளிலும் சுவாசம் சமமாக ஓடும் போது இறைசிந்தனை, தியானம், பிராணயாமம் செய்வது நலம். பிறர் நலம் நாடி வேண்டினால் வெற்றி
உண்டாகும். இந்த சுழுமுனையை இறை நாடி எனவும், அலி நாடி எனவும், நடு நாடி எனவும் அழைத்தனர்.

ரேசகம் - உள் வாங்குதல்
பூரகம் - வெளி விடுதல்
கும்பகம் - உள்ளே நிறுத்துதல்

பிராணாயாமம் வகைகள்:

நாடி சுத்தி

செயல்முறை

1. முதலில் சித்தாசனம், வஜ்ராசனம், பத்மாசனம் இதில் ஏதாவது ஒரு ஆசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.

2. வலக்கையை சின் முத்திரையுடன் வலது முழுங்காலில் வைத்துக்கொள்ளவும். இது சூரிய நாடியில் ஆரம்பிப்பவர்களுக்கு, பொதுவாக இடக்கையை சின்முத்திரையில் வைத்து இட முழுங்காலில் வைக்கச் சொல்வார்கள், இது சந்திர நாடியில் ரம்பிப்பவர்கள்
முறை. எனவே குருவின் சொற்படி இதை தேர்வு செய்திட வேண்டும்.

3. இடக்கையை நாசிகா முத்திரையில் ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் விண்ணை நோக்கி ஆண்டிணா போன்று வைக்கவும்.

4. இடக்கை கட்டைவிரலை இடது மூக்கில் வைத்து இடது மூக்குத்துவாரத்தை அடைத்துக் கொள்ளவும். வலது மூக்குத்துவாரம் வழியாகக் காற்றை சீராக இழுக்கவும்.

5. பிறகு மூக்கை மோதிர விரலால் அடைத்துக் கொண்டு இடது மூக்குத்துவாரம் வழியாக காற்றை சீராக வெளியே விடவும். பிறகு அதே மூக்குத்துவாரம் வழியாகக்
காற்றை இழுத்து வலது மூக்கு துவாரம் வழியாக வெளிவிடவும்.

6. இது ஒரு சுற்று ஆகும். உள் இழுக்கும் மூச்சு நேரத்தைப் போல் வெளிவிடும் மூச்சு நேரம் சம நேரமாக இருக்குமாறு ஆரம்பகால பயிற்சியில் செய்வது நலம். பின்னர் குருவின் உபதேசப்படி சுவாசத்தை கூட்டியோ அல்லது குறைத்தோ எண்ணிக்கையை மாற்றிய மைத்துக் கொள்ளலாம். இது போன்று 5 முதல் 21 சுற்றுவரை செய்வது நலம்.

7. வைகறைப் பொழுதும், மாலை நேரமும் பயிற்சிக்கு உகந்த நேரம்.

நன்மைகள்
1. நாடிசுத்தி என்பது உடலில் உள்ள 72,000 நாடி நரம்புகளையும் தூய்மை செய்ய வல்லது.
2. மூளை மற்றும் உடல் செல்கள் புத்துணர்ச்சி பெறும்.
3. கண் ஒளி பெருகும்.
4. ஜீரணசக்தி அதிகரிக்கும்.
5. உடல் பொதுவாக இலகுவாக, லேசாக இருப்பதாக உணர்வு வரும்.

கும்பகம்

காற்றை கணக்குப்படி உடலினுள் நிறுத்துவது, தகுந்த குரு உபதேசப்படி அவர் மேற்பார்வையில் இதைப்பழக வேண்டும். இது கேவலகும்பகம், பூரணகும்பகம் என இரு வகைப்படும்.

வெளிக்கும்பகம் : காற்றை உடலுக்குள் இழுக்காமல் கணக்குப் படி காற்றை உடலுக்கு வெளியே நிற்க வைக்கும் கலை.

மூன்று மடக்குடைப் பாம்பு இரண்டு எட்டுள
ஏன்றி இயந்திரம் பன்னிரெண்டு அங்குலம் தான்
நான்றவிழ் முட்டை இரண்டையும் கட்டிட்டு
ஊன்றி இருக்க உடல் அழியாதே - திருமூலர்

உள்முகக் கும்பகம் - உள்ளே மூச்சை நிறுத்துவது
வெளிமுகக் கும்பகம் - வெளியே இருந்து காற்றை வாங்காமல் சில வினாடிகள் வெளியே இருப்பது

மூச்சை 16 மாத்திரை உள்ளிழுக்க வலது மூக்குத் துவாரத்தை அடைத்து, இடது மூக்குத்துவாரத்தை பயன்படுத்தவும்.

64 மாத்திரை மூல பந்தத்துடன் உள்ளே நிறுத்தி, பின் இடது மூக்கை அடைத்து, வலது மூக்குத் துவாரம் வழியே 32 மாத்திரை காலத்தில் வெளிவிடவும். மீண்டும் வலது நாசி வழியாக இடது நாசியை அடைத்து மூச்சை 16 மாத்திரை உள் இழுக்கவும், உள் இழுத்த மூச்சை 64 மாத்திரைகள் உள்ளே நிறுத்தவும். வல நாசி துளையை அடைத்து, இட நாசி வழியாக 32 மாத்திரையில் வெளிவிடவும், இது ஒரு கும்பகம் ஆகும். இவ்வாறு 12 அல்லது 21 சுற்றுகள் செய்யவும்.

வெளிக்கும்பகம்

16 மாத்திரை மூச்சை இழுத்து அதை 32 மாத்திரை அளவில் வெளியேவிட்டுவிட வேண்டும். உடனே மூச்சை உள் இழுக்காமல் 64 மாத்திரை அளவு அப்படியே மூச்சை வெளியே நிறுத்த வேண்டும். பிறகு 16 மாத்திரை அளவு மூச்சை உள் இழுத்து 32 மாத்திரை அளவு வெளிவிட்டு முன்சொன்னவாறு 64 மாத்திரை உள் இழுக்காமலே இருந்து - பிறகு மூச்சை நிதானமாக உள் இழுக்க வேண்டும்.

இதனை நாசி மாற்றி, மாற்றி செய்து வர வேண்டும் இப்படி வலது மூக்கு - இடது மூக்கு என மாற்றி செய்துவர வெளிக்கும்பகம் ஆகும். இவ்வாறு 12 அல்லது 21 சுற்றுகள் செய்யவும்.

உஜ்ஜயி - ( உஸ் என்ற ஒலியுடன் )
செயல் முறை

1. முதலில் சித்தாசனத்தில் தரை விரிப்பில் அமரவும்.

2. மூச்சை முழுவதுமாக வெளியேவிடவும், பிறகு இரு மூக்கு துவாரம் வழியாக மெல்ல மூச்சை உள் இழுக்கவும்.

3. உள்வரும் காற்றை மேல்வாய் அண்ணத்தினால் பாதிமூடி உணரும் வண்ணம் செய்து வரவும், உஸ் என்ற ஒலி தொண்டையில் உண்டாகும். கழுத்தை முன்புறம் வளைத்து ஜலபந்தம் செய்யவும்.

4. சிறிது நேரம் கழித்து தலைப்பகுதியை தளர்த்தி முச்சை வெளிவிடவும். இது ஒரு சுற்று ஆகும்.

5. இது போல 12 சுற்றுகள் செய்வது நலம்.

நன்மைகள்

1. தைராய்டு சுரப்பியை தூண்டுகிறது.
2. மூச்சுக் காற்று மண்டலம் சீராகிறது.
3. பிராணாயாமத்திற்கு தகுதியான சுவசா மண்டலத்தை உடலுக்குத் தருகிறது.

சிட்டாலி : - மூக்கு, நாக்கு, பிராணாயாமம்

செய்முறை

1. முதலில் சித்தாசனத்தில் அல்லது வஜ்ராசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.
2. கைகள் இரண்டையும் சின் முத்திரையில் முழங்கால் மேல் வைக்கவும்.
3. நாக்கின் ஒருபகுதி வாயின் வெளியே நீட்டி நீளவாக்கில் மடித்து நீண்ட குறுகலான குழாய்போல செய்யவும்.
4. மூச்சை, மடித்த நாக்கின் வழி உள் இழுத்து உட்புரத்தை ஈரக்காற்று குளிரவைப்பதை கவனிக்கவும். பிறகு நாக்கை உள் இழுத்து வாயை மூடவும்.
5. ஜலபந்தம் 5 வினாடி செய்தபின் இரண்டு மூக்குத்துவாரங்கள் வழியாக மூச்சை வெளியே விடவும். இருமூக்குத் துவாரங்களிலும் சூடான காற்று வெளியோறுவதை கவனிக்கவும்.
6. இதுபோல 6 முதல் 21 சுற்றுவரை செய்யலாம்.

நன்மைகள்
1. உடலுக்கு குளிர்சியைத் தரக்கூடியது.
2. தாகத்தைப் போக்கும்.
3. உடலில் உள்ள பித்த சுரப்பியை சீராக்கும்.

சித்தகாரி
நாக்கை கீழ்வளைத்துச் செய்யும் பிராணாயாமம்

செயல்முறை

1. முதலில் சித்தாசனம் அல்லது வஜ்ராசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.
2. வாயை சிறிது திறந்து நாக்கின் நுணியை முன் வரிசைப் பற்களைத் தொடுமாறு மடக்கிவைக்கவும்.
3. காற்றை வாயினால் உள்ளே இழுக்க வேண்டும். ஸ் ஸ் ஸ் என்ற சத்தம் உண்டாகும்.
4. ஜலபந்தம் செய்தபின்பு காற்றை இருமூக்குகள் வழியாக சீராக வெளியே விட வேண்டும்.
5. இதனை 6 முதல் 21 சுற்றுகள் வரை செய்யலாம்.

நம்மைகள்

1. வாயில் குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது.
2. உமிழ் நீர் சுரப்பிகள் கீழ், மேல் அண்ணச்சுரப்பிகளை சீர் செய்யும்.
3. நாவின் சுவை அரும்புகள் சீராகும்.
4. பசி, தாகம், சோம்பலை போக்கும்.
5. வாயில் நிகழும் முதல் ஜீரணத்தை சீராக்கும்.

செயல்முறை

1. முதலில் பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.
2. மூல பந்தம் செய்து கொள்ளவும்.
3. இருமூக்கு துவாரங்கள் வழியாக மூச்சைச் சாதராணமாக உள்ளே இழுக்கவேண்டும். மூச்சை வெளியே தள்ளும் போது மிக வேகமாகத் தள்ள வேண்டும்.
4. மூச்சை வெளித்தள்ளும் போது மணிப்பூரக சக்கரம், சுவாதிட்டாண சக்கரம் மற்றும் மூலாதாரச்சக்கரத்தில் தேவையான வேகத்தைக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது வயிற்றுப் பகுதியானது மேல் நோக்கி வேகமாகச் செல்லும்.
5. இந்த கபாலபதியை 6 முதல் 21 சுற்றுக்கள் வரை செய்யலாம்.

நன்மைகள்

1. நுரையீரல், மூச்சுக்குழாய்கள் சுத்தப் படுத்தப்படுகிறது.
2. மூச்சுத்தொல்லை, ஆஸ்துமா போன்ற அனைத்து நோய்களும் நீங்குகிறது.
3. மூளைச் செல்லிலுள்ள உயிரணுக்களை ஊக்கப்படுத்து கின்றன.
4. நரம்பு மண்டலம் முழுவதும் தூய்மையும் உறுதியும் பெறுகிறது.

மனிதர்களின் சுவாசக்கணக்கு

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்கு
கூற்றை உதைக்கும் குறிஅது வாமே - திருமந்திரம்

பதிணென் சித்திர்களில் ஒருவராக விளங்கும் திருமூலர் தமது திருமந்திரத்தில் கூறியுள்ள செய்தி ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 சுவாசம் வீதம் நாள் ஓன்றுக்கு
21,600 சுவாசங்களா உள்வாங்கி வெளியிடுவதாக குறிப்பு.

நாசித் துவாரங்கள் வழியாக உட்செல்லும் காற்றை சித்தர்கள் அங்குலக் கணக்கில் அளந்துள்ளனர். வலது நாசித்துவாரம் வழியாக போகும் போது 12 அங்குலமும்,
இடது நாசி வழியாகப் போகும் போது 16 அங்குலமும், இரு துவாரங்களின் வழியே இணைந்து சுழுனையில் சஞ்சரிக்கும் போது 64 அங்குலமும் உட்செல்கிறது. இதே போன்று வெளியேசெல்லும் காற்றையும் அளந்துள்ளனர். அமர்ந்து இருக்கும் போது 12 அங்குலமும், நடக்கும் போது 16 அங்குலமும், ஓடும்போது 25 அங்குலமும், உறங்கும் போது 36 அங்குலமும், உடலுறவின் போது 64 அங்குலமும் வெளியாகின்றன. மனித உடலில் சேமிப்பில் இருக்கும் பிராணன் அவரவர் செயலுக்கேற்ப அழிகின்றது என்பதை முன்சொன்ன கணக்கு தெளிவாக்குகிறது.


சுவாசத்திற்கும் மனித ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 12 அங்குலம் சுவாசம் உள்ளே செலுத்தி 4 அங்குலம் வெளியே விட்டு மிதமுள்ள 8 அங்குலம்
உள்ளே உலவச் செய்தால் 120 ஆண்டுகள் ஒரு மனிதன் வாழ முடியும் என்பது சித்தர்கள் கண்டறிந்த உண்மை. எனவே தான் பிராணாயாமத்தை நம் முன்னோர்கள்
முறையாகப் பழகி வந்துள்ளனர்.

மனிதனின் வெற்றி தோல்விகளையும், சுவாசம் நிர்ணயம் செய்கின்றது என ஞானசர நூல் விளக்குகிறது.

1. இடது நாசியில் சுவாசம் நடக்கும் போது தாயின் உயிர்த்தன்மையின் செயல்பாடுகள் இயக்கத்துக்கு வரும் என்பது சித்தர்கள் கண்டுபிடிப்பு. எனவே இட நாடியின் சுவாசத்தை தாய் நாடி எனவும், பெண் நாடி எனவும், சந்திர நாடி எனவும், சந்திரகலை எனவும் அழைத்தனர். இட நாசியில் சுவாசம் நடைபெறும் போது அர்ச்சனை, குடமுழக்கு, திருமணம் போன்ற சுபநிகடிநவுகள் இயற்றிட உத்தமம்.

2. வலது நாசியில் சுவாசம் நடக்கும்போது தந்தையின் உயிர்ப்புத்தன்மையின் செயல்பாடுகள் நிகழும் நேரத்தை ஆண்நாடி எனவும், தந்தை நாடி எனவும், பிங்கலை எனவும், சூரிய நாடி எனவும், சூரியகலை எனவும் அழைத்தனர். இந்த நாடி செயல்படும்போது சங்கீதம், உபதேசம், கற்றல் ஆகிய பணிகளைச் செய்யலாம்.

3. சுழுமுனை, இரு நாசிகளிலும் சுவாசம் சமமாக ஓடும் போது இறைசிந்தனை, தியானம், பிராணயாமம் செய்வது நலம். பிறர் நலம் நாடி வேண்டினால் வெற்றி
உண்டாகும். இந்த சுழுமுனையை இறை நாடி எனவும், அலி நாடி எனவும், நடு நாடி எனவும் அழைத்தனர்.

ரேசகம் - உள் வாங்குதல்
பூரகம் - வெளி விடுதல்
கும்பகம் - உள்ளே நிறுத்துதல்

பிராணாயாமம் வகைகள்:

நாடி சுத்தி

செயல்முறை

1. முதலில் சித்தாசனம், வஜ்ராசனம், பத்மாசனம் இதில் ஏதாவது ஒரு ஆசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.

2. வலக்கையை சின் முத்திரையுடன் வலது முழுங்காலில் வைத்துக்கொள்ளவும். இது சூரிய நாடியில் ஆரம்பிப்பவர்களுக்கு, பொதுவாக இடக்கையை சின்முத்திரையில் வைத்து இட முழுங்காலில் வைக்கச் சொல்வார்கள், இது சந்திர நாடியில் ரம்பிப்பவர்கள்
முறை. எனவே குருவின் சொற்படி இதை தேர்வு செய்திட வேண்டும்.

3. இடக்கையை நாசிகா முத்திரையில் ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் விண்ணை நோக்கி ஆண்டிணா போன்று வைக்கவும்.

4. இடக்கை கட்டைவிரலை இடது மூக்கில் வைத்து இடது மூக்குத்துவாரத்தை அடைத்துக் கொள்ளவும். வலது மூக்குத்துவாரம் வழியாகக் காற்றை சீராக இழுக்கவும்.

5. பிறகு மூக்கை மோதிர விரலால் அடைத்துக் கொண்டு இடது மூக்குத்துவாரம் வழியாக காற்றை சீராக வெளியே விடவும். பிறகு அதே மூக்குத்துவாரம் வழியாகக்
காற்றை இழுத்து வலது மூக்கு துவாரம் வழியாக வெளிவிடவும்.

6. இது ஒரு சுற்று ஆகும். உள் இழுக்கும் மூச்சு நேரத்தைப் போல் வெளிவிடும் மூச்சு நேரம் சம நேரமாக இருக்குமாறு ஆரம்பகால பயிற்சியில் செய்வது நலம். பின்னர் குருவின் உபதேசப்படி சுவாசத்தை கூட்டியோ அல்லது குறைத்தோ எண்ணிக்கையை மாற்றிய மைத்துக் கொள்ளலாம். இது போன்று 5 முதல் 21 சுற்றுவரை செய்வது நலம்.

7. வைகறைப் பொழுதும், மாலை நேரமும் பயிற்சிக்கு உகந்த நேரம்.

நன்மைகள்
1. நாடிசுத்தி என்பது உடலில் உள்ள 72,000 நாடி நரம்புகளையும் தூய்மை செய்ய வல்லது.
2. மூளை மற்றும் உடல் செல்கள் புத்துணர்ச்சி பெறும்.
3. கண் ஒளி பெருகும்.
4. ஜீரணசக்தி அதிகரிக்கும்.
5. உடல் பொதுவாக இலகுவாக, லேசாக இருப்பதாக உணர்வு வரும்.

கும்பகம்

காற்றை கணக்குப்படி உடலினுள் நிறுத்துவது, தகுந்த குரு உபதேசப்படி அவர் மேற்பார்வையில் இதைப்பழக வேண்டும். இது கேவலகும்பகம், பூரணகும்பகம் என இரு வகைப்படும்.

வெளிக்கும்பகம் : காற்றை உடலுக்குள் இழுக்காமல் கணக்குப் படி காற்றை உடலுக்கு வெளியே நிற்க வைக்கும் கலை.

மூன்று மடக்குடைப் பாம்பு இரண்டு எட்டுள
ஏன்றி இயந்திரம் பன்னிரெண்டு அங்குலம் தான்
நான்றவிழ் முட்டை இரண்டையும் கட்டிட்டு
ஊன்றி இருக்க உடல் அழியாதே - திருமூலர்

உள்முகக் கும்பகம் - உள்ளே மூச்சை நிறுத்துவது
வெளிமுகக் கும்பகம் - வெளியே இருந்து காற்றை வாங்காமல் சில வினாடிகள் வெளியே இருப்பது

மூச்சை 16 மாத்திரை உள்ளிழுக்க வலது மூக்குத் துவாரத்தை அடைத்து, இடது மூக்குத்துவாரத்தை பயன்படுத்தவும்.

64 மாத்திரை மூல பந்தத்துடன் உள்ளே நிறுத்தி, பின் இடது மூக்கை அடைத்து, வலது மூக்குத் துவாரம் வழியே 32 மாத்திரை காலத்தில் வெளிவிடவும். மீண்டும் வலது நாசி வழியாக இடது நாசியை அடைத்து மூச்சை 16 மாத்திரை உள் இழுக்கவும், உள் இழுத்த மூச்சை 64 மாத்திரைகள் உள்ளே நிறுத்தவும். வல நாசி துளையை அடைத்து, இட நாசி வழியாக 32 மாத்திரையில் வெளிவிடவும், இது ஒரு கும்பகம் ஆகும். இவ்வாறு 12 அல்லது 21 சுற்றுகள் செய்யவும்.

வெளிக்கும்பகம்

16 மாத்திரை மூச்சை இழுத்து அதை 32 மாத்திரை அளவில் வெளியேவிட்டுவிட வேண்டும். உடனே மூச்சை உள் இழுக்காமல் 64 மாத்திரை அளவு அப்படியே மூச்சை வெளியே நிறுத்த வேண்டும். பிறகு 16 மாத்திரை அளவு மூச்சை உள் இழுத்து 32 மாத்திரை அளவு வெளிவிட்டு முன்சொன்னவாறு 64 மாத்திரை உள் இழுக்காமலே இருந்து - பிறகு மூச்சை நிதானமாக உள் இழுக்க வேண்டும்.

இதனை நாசி மாற்றி, மாற்றி செய்து வர வேண்டும் இப்படி வலது மூக்கு - இடது மூக்கு என மாற்றி செய்துவர வெளிக்கும்பகம் ஆகும். இவ்வாறு 12 அல்லது 21 சுற்றுகள் செய்யவும்.

உஜ்ஜயி - ( உஸ் என்ற ஒலியுடன் )
செயல் முறை

1. முதலில் சித்தாசனத்தில் தரை விரிப்பில் அமரவும்.

2. மூச்சை முழுவதுமாக வெளியேவிடவும், பிறகு இரு மூக்கு துவாரம் வழியாக மெல்ல மூச்சை உள் இழுக்கவும்.

3. உள்வரும் காற்றை மேல்வாய் அண்ணத்தினால் பாதிமூடி உணரும் வண்ணம் செய்து வரவும், உஸ் என்ற ஒலி தொண்டையில் உண்டாகும். கழுத்தை முன்புறம் வளைத்து ஜலபந்தம் செய்யவும்.

4. சிறிது நேரம் கழித்து தலைப்பகுதியை தளர்த்தி முச்சை வெளிவிடவும். இது ஒரு சுற்று ஆகும்.

5. இது போல 12 சுற்றுகள் செய்வது நலம்.

நன்மைகள்

1. தைராய்டு சுரப்பியை தூண்டுகிறது.
2. மூச்சுக் காற்று மண்டலம் சீராகிறது.
3. பிராணாயாமத்திற்கு தகுதியான சுவசா மண்டலத்தை உடலுக்குத் தருகிறது.

சிட்டாலி : - மூக்கு, நாக்கு, பிராணாயாமம்

செய்முறை

1. முதலில் சித்தாசனத்தில் அல்லது வஜ்ராசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.
2. கைகள் இரண்டையும் சின் முத்திரையில் முழங்கால் மேல் வைக்கவும்.
3. நாக்கின் ஒருபகுதி வாயின் வெளியே நீட்டி நீளவாக்கில் மடித்து நீண்ட குறுகலான குழாய்போல செய்யவும்.
4. மூச்சை, மடித்த நாக்கின் வழி உள் இழுத்து உட்புரத்தை ஈரக்காற்று குளிரவைப்பதை கவனிக்கவும். பிறகு நாக்கை உள் இழுத்து வாயை மூடவும்.
5. ஜலபந்தம் 5 வினாடி செய்தபின் இரண்டு மூக்குத்துவாரங்கள் வழியாக மூச்சை வெளியே விடவும். இருமூக்குத் துவாரங்களிலும் சூடான காற்று வெளியோறுவதை கவனிக்கவும்.
6. இதுபோல 6 முதல் 21 சுற்றுவரை செய்யலாம்.

நன்மைகள்
1. உடலுக்கு குளிர்சியைத் தரக்கூடியது.
2. தாகத்தைப் போக்கும்.
3. உடலில் உள்ள பித்த சுரப்பியை சீராக்கும்.

சித்தகாரி
நாக்கை கீழ்வளைத்துச் செய்யும் பிராணாயாமம்

செயல்முறை

1. முதலில் சித்தாசனம் அல்லது வஜ்ராசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.
2. வாயை சிறிது திறந்து நாக்கின் நுணியை முன் வரிசைப் பற்களைத் தொடுமாறு மடக்கிவைக்கவும்.
3. காற்றை வாயினால் உள்ளே இழுக்க வேண்டும். ஸ் ஸ் ஸ் என்ற சத்தம் உண்டாகும்.
4. ஜலபந்தம் செய்தபின்பு காற்றை இருமூக்குகள் வழியாக சீராக வெளியே விட வேண்டும்.
5. இதனை 6 முதல் 21 சுற்றுகள் வரை செய்யலாம்.

நம்மைகள்

1. வாயில் குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது.
2. உமிழ் நீர் சுரப்பிகள் கீழ், மேல் அண்ணச்சுரப்பிகளை சீர் செய்யும்.
3. நாவின் சுவை அரும்புகள் சீராகும்.
4. பசி, தாகம், சோம்பலை போக்கும்.
5. வாயில் நிகழும் முதல் ஜீரணத்தை சீராக்கும்.

செயல்முறை

1. முதலில் பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.
2. மூல பந்தம் செய்து கொள்ளவும்.
3. இருமூக்கு துவாரங்கள் வழியாக மூச்சைச் சாதராணமாக உள்ளே இழுக்கவேண்டும். மூச்சை வெளியே தள்ளும் போது மிக வேகமாகத் தள்ள வேண்டும்.
4. மூச்சை வெளித்தள்ளும் போது மணிப்பூரக சக்கரம், சுவாதிட்டாண சக்கரம் மற்றும் மூலாதாரச்சக்கரத்தில் தேவையான வேகத்தைக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது வயிற்றுப் பகுதியானது மேல் நோக்கி வேகமாகச் செல்லும்.
5. இந்த கபாலபதியை 6 முதல் 21 சுற்றுக்கள் வரை செய்யலாம்.

நன்மைகள்

1. நுரையீரல், மூச்சுக்குழாய்கள் சுத்தப் படுத்தப்படுகிறது.
2. மூச்சுத்தொல்லை, ஆஸ்துமா போன்ற அனைத்து நோய்களும் நீங்குகிறது.
3. மூளைச் செல்லிலுள்ள உயிரணுக்களை ஊக்கப்படுத்து கின்றன.
4. நரம்பு மண்டலம் முழுவதும் தூய்மையும் உறுதியும் பெறுகிறது.