யோகாசன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யோகாசன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

##முதுகுவலியை_குணமாக்கும்_ஆசனம்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:09 AM | Best Blogger Tips

 Yoga For Back Pain - Wellness Haven Yoga



  முதுகுவலிக்கான எளிமையான ஆசனம் மர்ஜரி ஆசனம். இப்பயிற்சியை தினமும் செய்துவர முதுகுவலி நன்கு குணமாகும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.

முதுகுவலிக்கான எளிமையான ஆசனம் மர்ஜரி ஆசனம். ‘மர்ஜரி’ என்றால் பூனை. பூனைபோல உடலை வளைத்து செய்வதால் இந்தப் பெயர்.
இரு கால்களையும் மடித்து, குதிகால் பகுதியில் நமது பிட்டப் பகுதி நன்கு பதிந்திருக்குமாறு அமர்வதுதான் வஜ்ராசனம். முதலில் வஜ்ராசனத்தில் அமர வேண்டும். முட்டி போட்டு நின்றபடி, பூனைபோல கைகளை முன்னால் ஊன்றிய நிலையில் இருக்க வேண்டும்.
Iyengar Yoga For Lower Back Pain | Yoga Selection
கால் முட்டியை சற்று அகல மாக வைத்து, கைகள் அதற்கு நேராக இருக்குமாறு சரிசெய்துகொள்ள வேண்டும். மூச்சை உள் இழுக்கும்போது தலையை நன்றாக மேலே தூக்கிப் பார்க்க வேண்டும். இந்த நிலையில் முதுகுப் பகுதி நன்கு வளைந்து, ஒரு பள்ளம்போல ஏற்படும். பிறகு மூச்சை விட்டவாறு பொறுமை யாக குனிந்து நம்முடைய தாடை மார்பைத் தொடுவதுபோல நன்றாக குனிய வேண்டும்.

இந்த நிலையில், முதுகுப் பகுதி வளைந்து, ஒரு குன்று போல காணப்படும். இவ்வாறு மாற்றி மாற்றி 3-5 முறை செய்ய வேண்டும். பிறகு, மீண்டும் வஜ்ராசனத்தில் அமரலாம். அல்லது, அப்படியே குப்புறப் படுத்து ரிலாக்ஸ் செய்துவிட்டு, பிறகு, ஒருக்களித்து ஒருபுறமாகத் திரும்பி, மல்லாக்க படுத்து சாந்தி அல்லது சவாசனத்தில் 10-15 விநாடிகள் இருந்துவிட்டு எழலாம். இப்பயிற்சியை தினமும் செய்துவர முதுகுவலி நன்கு குணமாகும்.

 May be an image of 6 people and monument

நன்றி இணையம்


யோக முத்திரைகள்..!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:14 PM | Best Blogger Tips
யோக முத்திரைகள்..!

பெரும்பாலான உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் ஐந்து வகை மூலங்களின் சமத்துவமின்மையால் ஏற்படுகிறது. பஞ்ச பூதங்கள் என்று அழைக்கப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியன சமநிலையில் இருப்பதற்குத் தியானம் உதவுகிறது. இந்த ஐந்து வகை மூலங்கள் வேறுவிதமாக நிலம், நீர், நெருப்பு, மரம், உலோகங்கள் என சீனப் பாரம்பரிய மருத்துவத்தில் கூறப்படுகிறது. (1)இந்த ஐந்து வகை மூலங்களும் ஒன்றுக்கொன்று பூரண தொடர்புடையதாக காணப்படுகிறது. மரம், நெருப்பு,   நிலம்,  உலோகம், நீர்,  மரம் என்னும் ஒன்றுகொன்று தூண்டும் விதத்திலும் மற்றும் நிறுத்தும் விதத்திலும் காணப்படுகிறது. இவை எல்லாம் உடலின் இயக்கத்திற்கு இன்றியமையாதது, யோகாசனம், தியானம் செய்வதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தி அவற்றின் சமநிலையைப் பேணுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் சீர்படும். இவை சிலவகை முத்திரைகள் மூலம் பெறப்படுகிறது. ஒழுங்கான முத்திரை உபயோகமும் தியானமும் எம் வாழ்வில் ஆரோக்கியத்தை உண்டாக்கும்.
நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலங்களைக் குறிப்பிடுகின்றன. 

கட்டை விரல் – நெருப்பையும் சுட்டுவிரல் – காற்றையும் நடுவிரல் – ஆகாயத்தையும் மோதிர விரல் – நிலத்தையும் சுண்டு விரல் – நீரையும் குறிக்கின்றன.
பழைய காலங்களில் முனிவர் நாட்கணக்கில் கடும் தவம் புரிந்தனர் என்றெல்லாம் கேள்விப்படுகின்றோம் அவர்களுக்கு எந்தவிதமான நோயும் அணுகாமல் இருப்பதற்குரிய காரணிகளுள் இதுவும் ஒன்றாக இருந்திருக்கலாம். முத்திரை இந்து சமயத்திலும் பௌத்தமதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன. முத்திரைகளைப் பற்றிய படிப்பு தத்வ யோகம் ( Tatva Yoga ) என அழைக்கப்படும்.

இனி, முத்திரை வகைகளைப் பற்றிப் பார்ப்போம். பொதுவாக தியானத்தில் 20 – 45 நிமிடங்கள் உங்களுக்குத் தேவையானதென நீங்கள் கருதும் முத்திரையைத் தெரிவு செய்து கொண்டு ஆழ்ந்த சுவாசத்தில் ஈடுபடுதலே போதுமானதெனக் கருதப்படுகிறது, எனினும் சிலமுத்திரைகளுக்கு மந்திரங்களைப் பயன்படுத்துவர்.


பெரும்பாலான உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் ஐந்து வகை மூலங்களின் சமத்துவமின்மையால் ஏற்படுகிறது. பஞ்ச பூதங்கள் என்று அழைக்கப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியன சமநிலையில் இருப்பதற்குத் தியானம் உதவுகிறது. இந்த ஐந்து வகை மூலங்கள் வேறுவிதமாக நிலம், நீர், நெருப்பு, மரம், உலோகங்கள் என சீனப் பாரம்பரிய மருத்துவத்தில் கூறப்படுகிறது. (1)இந்த ஐந்து வகை மூலங்களும் ஒன்றுக்கொன்று பூரண தொடர்புடையதாக காணப்படுகிறது. மரம், நெருப்பு, நிலம், உலோகம், நீர், மரம் என்னும் ஒன்றுகொன்று தூண்டும் விதத்திலும் மற்றும் நிறுத்தும் விதத்திலும் காணப்படுகிறது. இவை எல்லாம் உடலின் இயக்கத்திற்கு இன்றியமையாதது, யோகாசனம், தியானம் செய்வதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தி அவற்றின் சமநிலையைப் பேணுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் சீர்படும். இவை சிலவகை முத்திரைகள் மூலம் பெறப்படுகிறது. ஒழுங்கான முத்திரை உபயோகமும் தியானமும் எம் வாழ்வில் ஆரோக்கியத்தை உண்டாக்கும்.
நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலங்களைக் குறிப்பிடுகின்றன.

கட்டை விரல் – நெருப்பையும் சுட்டுவிரல் – காற்றையும் நடுவிரல் – ஆகாயத்தையும் மோதிர விரல் – நிலத்தையும் சுண்டு விரல் – நீரையும் குறிக்கின்றன.
பழைய காலங்களில் முனிவர் நாட்கணக்கில் கடும் தவம் புரிந்தனர் என்றெல்லாம் கேள்விப்படுகின்றோம் அவர்களுக்கு எந்தவிதமான நோயும் அணுகாமல் இருப்பதற்குரிய காரணிகளுள் இதுவும் ஒன்றாக இருந்திருக்கலாம். முத்திரை இந்து சமயத்திலும் பௌத்தமதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன. முத்திரைகளைப் பற்றிய படிப்பு தத்வ யோகம் ( Tatva Yoga ) என அழைக்கப்படும்.

இனி, முத்திரை வகைகளைப் பற்றிப் பார்ப்போம். பொதுவாக தியானத்தில் 20 – 45 நிமிடங்கள் உங்களுக்குத் தேவையானதென நீங்கள் கருதும் முத்திரையைத் தெரிவு செய்து கொண்டு ஆழ்ந்த சுவாசத்தில் ஈடுபடுதலே போதுமானதெனக் கருதப்படுகிறது, எனினும் சிலமுத்திரைகளுக்கு மந்திரங்களைப் பயன்படுத்துவர்.
Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

இடுப்பு வலியை இல்லாமல் ஆக்கும் திரிகோணாசனம் : யோகப் பயிற்சி

மணக்கால் அய்யம்பேட்டை | 12:54 PM | Best Blogger Tips


உடலில் வாதம் அதிகமானால் சோம்பல் தலைதூக்கும். எந்த வேலையிலும் மனம் ஈடுபடாது. உடலும் ஒத்துழைக்காது.

சிலருக்கு வாதம் அதிகம் ஆகும் நிலையில் பக்கவாதம் ஏற்பட்டு உடலின் ஒரு பக்க உறுப்புகள் செயல் இழந்து போகும் நிலை கூட ஏற்படும். எனவே, இந்த நிலை ஏற்படாமல் இருக்கவும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது திரிகோணாசனம்.

மிகவும் எளிமையான இந்த ஆசனத்தை எவரும் இலகுவாக செய்ய முடியும். இந்த ஆசனம் செய்வதால் நீண்ட கால இடுப்பு வலி மறைந்து போகிறது. இடுப்பு பலம் பெறுகிறது. முதுகில் வலி, தோள் பகுதிகளில் சிலருக்கு காணப்படும் வலி இந்த ஆசனத்தால் நீங்கும். உடலின் ஜீவநாடிகள் ஆசனத்தின் மூலம் பலம் பெறுவதால் வாத ரோகங்கள் அண்டாது.

திரிகோணாசனத்தால் முதுகெலும்பு நன்றாக பக்கங்களில் திரும்பி வளைவதால், இளமையான தோற்றம் ஏற்படுகிறது. இனி இந்த ஆசனத்தை செய்வது பற்றி பார்க்கலாம்.

திரிகோணாசனம் செய்யும் முறை:

கால்களை அகலமாக விரித்து நிற்கவும். இரண்டு கால்களுக்கும் இடையில் அவரவர் உயரத்திற்கு தகுந்தபடி இரண்டு அடி முதல் மூன்று அடிகள் ஒவ்வொரு குதிகாலுக்கும் இடையில் இடைவெளி இருக்கலாம்.

முதுகுதண்டு வளையாமல் நேராக நிமிர்ந்து நிற்கவும். இரண்டு கைகளையும் தோளுக்கு நேராய் பக்கவாட்டில் உயர்த்தி நிறுத்தவும். உள்ளங்களை தரையை பார்த்தவாறு இருக்கும் நிலையில் வைத்துக் கொள்ளவும். இப்பொழுது மூச்சை நன்றாக இழுக்கவும்.

பிறகு மூச்சை மெதுவாக விட்டவாறே இடது கைப்பக்கம் இடுப்பை வளைத்து குனிந்து இடது காலின் கணுக்காலை ஒட்டினாற் போல் தரையைத் தொடவும். வலது கை நேராய் வளையாமல் இருக்க வேண்டும். இப்போது தலையைத் திருப்பி வலது கை விரல்களின் நுனியைப் பார்க்கவும்.

இந்த நிலையில் ஏழு முதல் பத்து எண்ணும் வரை இருக்கவும். பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே நேராய் நிமிர்ந்து கைகளை பக்கவாட்டில் விரித்தபடியான நிலைக்கு வரவும். இப்போது கைகளை கீழே தொங்கப்போட்டு விடாமல் அப்படியே ஐந்து முதல் பத்து எண்ணும் வரை நின்று கொண்டே மூச்சை இழுக்கவும்.

பிறகு மூச்சை விட்டுக் கொண்டே வலது கைப்பக்கம் இடுப்பை வளைத்துக் குனிந்து, வலது கைவிரல் நுனிகள் வலது காலின் கணுக்காலுக்கு ஒட்டினாற் போல் தரையில் படும்படியான நிலையில் நிறுத்தவும். இந்த நிலையில் பத்து எண்ணும் வரை இருக்கவும். பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே நிமிர்ந்து கைகளை விரித்து நின்ற நிலைக்கு வரவும். இப்படி இரண்டு பக்கங்களிலும் குனிந்து நிமிர்ந்து செய்தால் அது ஒரு திரிகோண ஆசனம் என்று கணக்கிடலாம்.

இது போல் ஒரு முறைக்கு ஆறு தடவைகள் வரை செய்யலாம். இது அர்த்த திரிகோணாசனம் என்று அழைக்கப்படுகிறது.

பூரண திரிகோணாசனம்:



இதுவும் ஒரு வகையான திரிகோணாசன முறை. பூரண திரிகோணாசன முறையைச் செய்யச் சிலருக்கு முதலில் கடினமாக இருக்கும். ஆனால் நாளடைவில் எளிதாக செய்ய முடியும். இந்த ஆசனத்தை செய்வது பற்றி பார்க்கலாம்.

முதலில் முதுகெழும்பு வளையாமல் கால்களை மேலே சொன்ன நிலையில் இரண்டு குதிகால்களுக்கும் இடையில் இரண்டு அடி முதல் மூன்றடி அகல இடைவெளி இருக்கும் படி வைத்துக் கொண்டு நிமிர்ந்து நிற்கவும். இப்போது கைகள் இரண்டையும் பக்கவாட்டில் நேராக நீட்டிய படி வைத்திருக்கவும். இப்போது மூச்சை நன்றாக இழுத்து, இடுப்பை மட்டும் இடதுபக்கம் நன்றாக திருப்பி, மூச்சை விட்டுக் கொண்டே குனிந்து வலது கைவிரல்கள் இடது கால் கணுக்காலை ஒட்டி தரையில் படும்படி தொடவும்.

இடது கை மேல் நோக்கி தூக்கியிருக்க, தலையைத் திருப்பி இடது கைநுனி விரல்களை பார்க்கவும். இந்த நிலையில் ஏழு முதல் 10 எண்ணும் வரை இருக்கலாம். பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே நிமிர்ந்து முதலில் சொன்னபடி முதுகுஎழும்பு வளையாமல் பக்கவாட்டில் கைகளை விரித்தவாறு உள்ள நிலைக்கு வரவும். இப்போது மீண்டும் மூச்சை இழுத்து இடுப்பை வலது பக்கம் திருப்பி, இடது கைவிரல்கள் வலது கணுக்காலை ஒட்டிய தரையை தொடும்படி முயற்சி செய்யவும்.

இந்த நிலையில் வலது கையை மேல் தூக்கி நிமிர்த்தி தலையை திருப்பி வலது கை நுனி விரல்களை பார்க்க முயற்சிக்கவும். இப்படியே ஏழு முதல் பத்து எண்ணும் வரை இருக்கவும். இது மாதிரி இரண்டு பக்கங்களிலும் செய்தால் ஒரு திரிகோணாசனம் செய்ததாகும். இது போல் ஒரு முறைக்கு 4 முதல் ஏழு தடவைகள் வரை செய்யலாம்.

குறிப்புகள்:

ஆசனம் செய்ய விரும்புபவர்கள் இரண்டு திரிகோணாசனங்களையும் செய்யலாம். சிலருக்கு உடல் மிகவும் குண்டாக இருக்கும். அவர்கள் பக்கவாட்டில் குனிவது மிகவும் சிரமமாக இருக்கும். அவர்கள் தங்களால் இயன்ற அளவு பக்கவாட்டில் குனிந்தாலும் கூட ஆசனத்தின் பலன்கள் உண்டு. ஒரு பக்கம் குனிந்து திரிகோணாசனம் செய்து விட்டு மறுபக்கம் அரைகுறையாக சாய்ந்து திரிகோணாசனம் செய்வர். இது தவறு. ஒரு பக்கம் எந்த அளவுக்கு குனிந்து நிமிர்கிறோமோ, அதே அளவு மறுபுறத்திலும் குனிந்து நிமிரவேண்டும். குறிப்பாக, ஒரு பக்கம் குனிந்து எழும் போது, முழுவதுமாக முதுகெலும்பு வளையாமல் நேராக நிமிர்ந்து நின்ற நிலைக்கு வந்த பிறகு தான் அடுத்த பக்கத்திற்கு குனிய வேண்டும். இது மிகவும் முக்கியம்.

பெண்களை பொறுத்த மட்டில் அவர்கள் கர்ப்பமானது தெரிய வந்தால், கர்ப்பமான இரண்டு தொடக்க மாதங்கள் வரை இந்த ஆசனத்தை செய்யலாம். பிறகு இந்த ஆசனத்தை தொடரக்கூடாது. அதே போல் மாதவிலக்கானவர்கள், அந்த காலகட்டத்திலும் இந்த ஆசனங்களை செய்வது கூடாது



Via FB இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்

பிராணாயாமம் ஒரு பார்வை - 2

மணக்கால் அய்யம்பேட்டை | 12:49 PM | Best Blogger Tips

Photo: பிராணாயாமம் ஒரு பார்வை - 2

மனிதர்களின் சுவாசக்கணக்கு

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்கு
கூற்றை உதைக்கும் குறிஅது வாமே - திருமந்திரம்

பதிணென் சித்திர்களில் ஒருவராக விளங்கும் திருமூலர் தமது திருமந்திரத்தில் கூறியுள்ள செய்தி ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 சுவாசம் வீதம் நாள் ஓன்றுக்கு
21,600 சுவாசங்களா உள்வாங்கி வெளியிடுவதாக குறிப்பு.

நாசித் துவாரங்கள் வழியாக உட்செல்லும் காற்றை சித்தர்கள் அங்குலக் கணக்கில் அளந்துள்ளனர். வலது நாசித்துவாரம் வழியாக போகும் போது 12 அங்குலமும்,
இடது நாசி வழியாகப் போகும் போது 16 அங்குலமும், இரு துவாரங்களின் வழியே இணைந்து சுழுனையில் சஞ்சரிக்கும் போது 64 அங்குலமும் உட்செல்கிறது. இதே போன்று வெளியேசெல்லும் காற்றையும் அளந்துள்ளனர். அமர்ந்து இருக்கும் போது 12 அங்குலமும், நடக்கும் போது 16 அங்குலமும், ஓடும்போது 25 அங்குலமும், உறங்கும் போது 36 அங்குலமும், உடலுறவின் போது 64 அங்குலமும் வெளியாகின்றன. மனித உடலில் சேமிப்பில் இருக்கும் பிராணன் அவரவர் செயலுக்கேற்ப அழிகின்றது என்பதை முன்சொன்ன கணக்கு தெளிவாக்குகிறது.


சுவாசத்திற்கும் மனித ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 12 அங்குலம் சுவாசம் உள்ளே செலுத்தி 4 அங்குலம் வெளியே விட்டு மிதமுள்ள 8 அங்குலம்
உள்ளே உலவச் செய்தால் 120 ஆண்டுகள் ஒரு மனிதன் வாழ முடியும் என்பது சித்தர்கள் கண்டறிந்த உண்மை. எனவே தான் பிராணாயாமத்தை நம் முன்னோர்கள்
முறையாகப் பழகி வந்துள்ளனர்.

மனிதனின் வெற்றி தோல்விகளையும், சுவாசம் நிர்ணயம் செய்கின்றது என ஞானசர நூல் விளக்குகிறது. 

1. இடது நாசியில் சுவாசம் நடக்கும் போது தாயின் உயிர்த்தன்மையின் செயல்பாடுகள் இயக்கத்துக்கு வரும் என்பது சித்தர்கள் கண்டுபிடிப்பு. எனவே இட நாடியின் சுவாசத்தை தாய் நாடி எனவும், பெண் நாடி எனவும், சந்திர நாடி எனவும், சந்திரகலை எனவும் அழைத்தனர். இட நாசியில் சுவாசம் நடைபெறும் போது அர்ச்சனை, குடமுழக்கு, திருமணம் போன்ற சுபநிகடிநவுகள் இயற்றிட உத்தமம்.

2. வலது நாசியில் சுவாசம் நடக்கும்போது தந்தையின் உயிர்ப்புத்தன்மையின் செயல்பாடுகள் நிகழும் நேரத்தை ஆண்நாடி எனவும், தந்தை நாடி எனவும், பிங்கலை எனவும், சூரிய நாடி எனவும், சூரியகலை எனவும் அழைத்தனர். இந்த நாடி செயல்படும்போது சங்கீதம், உபதேசம், கற்றல் ஆகிய பணிகளைச் செய்யலாம்.

3. சுழுமுனை, இரு நாசிகளிலும் சுவாசம் சமமாக ஓடும் போது இறைசிந்தனை, தியானம், பிராணயாமம் செய்வது நலம். பிறர் நலம் நாடி வேண்டினால் வெற்றி
உண்டாகும். இந்த சுழுமுனையை இறை நாடி எனவும், அலி நாடி எனவும், நடு நாடி எனவும் அழைத்தனர்.

ரேசகம் - உள் வாங்குதல்
பூரகம் - வெளி விடுதல்
கும்பகம் - உள்ளே நிறுத்துதல்

பிராணாயாமம் வகைகள்:

நாடி சுத்தி

செயல்முறை

1. முதலில் சித்தாசனம், வஜ்ராசனம், பத்மாசனம் இதில் ஏதாவது ஒரு ஆசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.

2. வலக்கையை சின் முத்திரையுடன் வலது முழுங்காலில் வைத்துக்கொள்ளவும். இது சூரிய நாடியில் ஆரம்பிப்பவர்களுக்கு, பொதுவாக இடக்கையை சின்முத்திரையில் வைத்து இட முழுங்காலில் வைக்கச் சொல்வார்கள், இது சந்திர நாடியில் ரம்பிப்பவர்கள்
முறை. எனவே குருவின் சொற்படி இதை தேர்வு செய்திட வேண்டும்.

3. இடக்கையை நாசிகா முத்திரையில் ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் விண்ணை நோக்கி ஆண்டிணா போன்று வைக்கவும்.

4. இடக்கை கட்டைவிரலை இடது மூக்கில் வைத்து இடது மூக்குத்துவாரத்தை அடைத்துக் கொள்ளவும். வலது மூக்குத்துவாரம் வழியாகக் காற்றை சீராக இழுக்கவும்.

5. பிறகு மூக்கை மோதிர விரலால் அடைத்துக் கொண்டு இடது மூக்குத்துவாரம் வழியாக காற்றை சீராக வெளியே விடவும். பிறகு அதே மூக்குத்துவாரம் வழியாகக்
காற்றை இழுத்து வலது மூக்கு துவாரம் வழியாக வெளிவிடவும்.

6. இது ஒரு சுற்று ஆகும். உள் இழுக்கும் மூச்சு நேரத்தைப் போல் வெளிவிடும் மூச்சு நேரம் சம நேரமாக இருக்குமாறு ஆரம்பகால பயிற்சியில் செய்வது நலம். பின்னர் குருவின் உபதேசப்படி சுவாசத்தை கூட்டியோ அல்லது குறைத்தோ எண்ணிக்கையை மாற்றிய மைத்துக் கொள்ளலாம். இது போன்று 5 முதல் 21 சுற்றுவரை செய்வது நலம்.

7. வைகறைப் பொழுதும், மாலை நேரமும் பயிற்சிக்கு உகந்த நேரம்.

நன்மைகள்
1. நாடிசுத்தி என்பது உடலில் உள்ள 72,000 நாடி நரம்புகளையும் தூய்மை செய்ய வல்லது.
2. மூளை மற்றும் உடல் செல்கள் புத்துணர்ச்சி பெறும்.
3. கண் ஒளி பெருகும்.
4. ஜீரணசக்தி அதிகரிக்கும்.
5. உடல் பொதுவாக இலகுவாக, லேசாக இருப்பதாக உணர்வு வரும்.

கும்பகம்

காற்றை கணக்குப்படி உடலினுள் நிறுத்துவது, தகுந்த குரு உபதேசப்படி அவர் மேற்பார்வையில் இதைப்பழக வேண்டும். இது கேவலகும்பகம், பூரணகும்பகம் என இரு வகைப்படும்.

வெளிக்கும்பகம் : காற்றை உடலுக்குள் இழுக்காமல் கணக்குப் படி காற்றை உடலுக்கு வெளியே நிற்க வைக்கும் கலை.

மூன்று மடக்குடைப் பாம்பு இரண்டு எட்டுள
ஏன்றி இயந்திரம் பன்னிரெண்டு அங்குலம் தான்
நான்றவிழ் முட்டை இரண்டையும் கட்டிட்டு
ஊன்றி இருக்க உடல் அழியாதே - திருமூலர்

உள்முகக் கும்பகம் - உள்ளே மூச்சை நிறுத்துவது
வெளிமுகக் கும்பகம் - வெளியே இருந்து காற்றை வாங்காமல் சில வினாடிகள் வெளியே இருப்பது

மூச்சை 16 மாத்திரை உள்ளிழுக்க வலது மூக்குத் துவாரத்தை அடைத்து, இடது மூக்குத்துவாரத்தை பயன்படுத்தவும்.

64 மாத்திரை மூல பந்தத்துடன் உள்ளே நிறுத்தி, பின் இடது மூக்கை அடைத்து, வலது மூக்குத் துவாரம் வழியே 32 மாத்திரை காலத்தில் வெளிவிடவும். மீண்டும் வலது நாசி வழியாக இடது நாசியை அடைத்து மூச்சை 16 மாத்திரை உள் இழுக்கவும், உள் இழுத்த மூச்சை 64 மாத்திரைகள் உள்ளே நிறுத்தவும். வல நாசி துளையை அடைத்து, இட நாசி வழியாக 32 மாத்திரையில் வெளிவிடவும், இது ஒரு கும்பகம் ஆகும். இவ்வாறு 12 அல்லது 21 சுற்றுகள் செய்யவும்.

வெளிக்கும்பகம்

16 மாத்திரை மூச்சை இழுத்து அதை 32 மாத்திரை அளவில் வெளியேவிட்டுவிட வேண்டும். உடனே மூச்சை உள் இழுக்காமல் 64 மாத்திரை அளவு அப்படியே மூச்சை வெளியே நிறுத்த வேண்டும். பிறகு 16 மாத்திரை அளவு மூச்சை உள் இழுத்து 32 மாத்திரை அளவு வெளிவிட்டு முன்சொன்னவாறு 64 மாத்திரை உள் இழுக்காமலே இருந்து - பிறகு மூச்சை நிதானமாக உள் இழுக்க வேண்டும்.

இதனை நாசி மாற்றி, மாற்றி செய்து வர வேண்டும் இப்படி வலது மூக்கு - இடது மூக்கு என மாற்றி செய்துவர வெளிக்கும்பகம் ஆகும். இவ்வாறு 12 அல்லது 21 சுற்றுகள் செய்யவும்.

உஜ்ஜயி - ( உஸ் என்ற ஒலியுடன் )
செயல் முறை

1. முதலில் சித்தாசனத்தில் தரை விரிப்பில் அமரவும்.

2. மூச்சை முழுவதுமாக வெளியேவிடவும், பிறகு இரு மூக்கு துவாரம் வழியாக மெல்ல மூச்சை உள் இழுக்கவும்.

3. உள்வரும் காற்றை மேல்வாய் அண்ணத்தினால் பாதிமூடி உணரும் வண்ணம் செய்து வரவும், உஸ் என்ற ஒலி தொண்டையில் உண்டாகும். கழுத்தை முன்புறம் வளைத்து ஜலபந்தம் செய்யவும்.

4. சிறிது நேரம் கழித்து தலைப்பகுதியை தளர்த்தி முச்சை வெளிவிடவும். இது ஒரு சுற்று ஆகும்.

5. இது போல 12 சுற்றுகள் செய்வது நலம்.

நன்மைகள்

1. தைராய்டு சுரப்பியை தூண்டுகிறது.
2. மூச்சுக் காற்று மண்டலம் சீராகிறது.
3. பிராணாயாமத்திற்கு தகுதியான சுவசா மண்டலத்தை உடலுக்குத் தருகிறது.

சிட்டாலி : - மூக்கு, நாக்கு, பிராணாயாமம்

செய்முறை

1. முதலில் சித்தாசனத்தில் அல்லது வஜ்ராசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.
2. கைகள் இரண்டையும் சின் முத்திரையில் முழங்கால் மேல் வைக்கவும்.
3. நாக்கின் ஒருபகுதி வாயின் வெளியே நீட்டி நீளவாக்கில் மடித்து நீண்ட குறுகலான குழாய்போல செய்யவும்.
4. மூச்சை, மடித்த நாக்கின் வழி உள் இழுத்து உட்புரத்தை ஈரக்காற்று குளிரவைப்பதை கவனிக்கவும். பிறகு நாக்கை உள் இழுத்து வாயை மூடவும்.
5. ஜலபந்தம் 5 வினாடி செய்தபின் இரண்டு மூக்குத்துவாரங்கள் வழியாக மூச்சை வெளியே விடவும். இருமூக்குத் துவாரங்களிலும் சூடான காற்று வெளியோறுவதை கவனிக்கவும்.
6. இதுபோல 6 முதல் 21 சுற்றுவரை செய்யலாம்.

நன்மைகள்
1. உடலுக்கு குளிர்சியைத் தரக்கூடியது.
2. தாகத்தைப் போக்கும்.
3. உடலில் உள்ள பித்த சுரப்பியை சீராக்கும்.

சித்தகாரி
நாக்கை கீழ்வளைத்துச் செய்யும் பிராணாயாமம்

செயல்முறை

1. முதலில் சித்தாசனம் அல்லது வஜ்ராசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.
2. வாயை சிறிது திறந்து நாக்கின் நுணியை முன் வரிசைப் பற்களைத் தொடுமாறு மடக்கிவைக்கவும்.
3. காற்றை வாயினால் உள்ளே இழுக்க வேண்டும். ஸ் ஸ் ஸ் என்ற சத்தம் உண்டாகும்.
4. ஜலபந்தம் செய்தபின்பு காற்றை இருமூக்குகள் வழியாக சீராக வெளியே விட வேண்டும்.
5. இதனை 6 முதல் 21 சுற்றுகள் வரை செய்யலாம்.

நம்மைகள்

1. வாயில் குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது.
2. உமிழ் நீர் சுரப்பிகள் கீழ், மேல் அண்ணச்சுரப்பிகளை சீர் செய்யும்.
3. நாவின் சுவை அரும்புகள் சீராகும்.
4. பசி, தாகம், சோம்பலை போக்கும்.
5. வாயில் நிகழும் முதல் ஜீரணத்தை சீராக்கும்.

செயல்முறை

1. முதலில் பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.
2. மூல பந்தம் செய்து கொள்ளவும்.
3. இருமூக்கு துவாரங்கள் வழியாக மூச்சைச் சாதராணமாக உள்ளே இழுக்கவேண்டும். மூச்சை வெளியே தள்ளும் போது மிக வேகமாகத் தள்ள வேண்டும்.
4. மூச்சை வெளித்தள்ளும் போது மணிப்பூரக சக்கரம், சுவாதிட்டாண சக்கரம் மற்றும் மூலாதாரச்சக்கரத்தில் தேவையான வேகத்தைக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது வயிற்றுப் பகுதியானது மேல் நோக்கி வேகமாகச் செல்லும்.
5. இந்த கபாலபதியை 6 முதல் 21 சுற்றுக்கள் வரை செய்யலாம்.

நன்மைகள்

1. நுரையீரல், மூச்சுக்குழாய்கள் சுத்தப் படுத்தப்படுகிறது.
2. மூச்சுத்தொல்லை, ஆஸ்துமா போன்ற அனைத்து நோய்களும் நீங்குகிறது.
3. மூளைச் செல்லிலுள்ள உயிரணுக்களை ஊக்கப்படுத்து கின்றன.
4. நரம்பு மண்டலம் முழுவதும் தூய்மையும் உறுதியும் பெறுகிறது.

மனிதர்களின் சுவாசக்கணக்கு

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்கு
கூற்றை உதைக்கும் குறிஅது வாமே - திருமந்திரம்

பதிணென் சித்திர்களில் ஒருவராக விளங்கும் திருமூலர் தமது திருமந்திரத்தில் கூறியுள்ள செய்தி ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 சுவாசம் வீதம் நாள் ஓன்றுக்கு
21,600 சுவாசங்களா உள்வாங்கி வெளியிடுவதாக குறிப்பு.

நாசித் துவாரங்கள் வழியாக உட்செல்லும் காற்றை சித்தர்கள் அங்குலக் கணக்கில் அளந்துள்ளனர். வலது நாசித்துவாரம் வழியாக போகும் போது 12 அங்குலமும்,
இடது நாசி வழியாகப் போகும் போது 16 அங்குலமும், இரு துவாரங்களின் வழியே இணைந்து சுழுனையில் சஞ்சரிக்கும் போது 64 அங்குலமும் உட்செல்கிறது. இதே போன்று வெளியேசெல்லும் காற்றையும் அளந்துள்ளனர். அமர்ந்து இருக்கும் போது 12 அங்குலமும், நடக்கும் போது 16 அங்குலமும், ஓடும்போது 25 அங்குலமும், உறங்கும் போது 36 அங்குலமும், உடலுறவின் போது 64 அங்குலமும் வெளியாகின்றன. மனித உடலில் சேமிப்பில் இருக்கும் பிராணன் அவரவர் செயலுக்கேற்ப அழிகின்றது என்பதை முன்சொன்ன கணக்கு தெளிவாக்குகிறது.


சுவாசத்திற்கும் மனித ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 12 அங்குலம் சுவாசம் உள்ளே செலுத்தி 4 அங்குலம் வெளியே விட்டு மிதமுள்ள 8 அங்குலம்
உள்ளே உலவச் செய்தால் 120 ஆண்டுகள் ஒரு மனிதன் வாழ முடியும் என்பது சித்தர்கள் கண்டறிந்த உண்மை. எனவே தான் பிராணாயாமத்தை நம் முன்னோர்கள்
முறையாகப் பழகி வந்துள்ளனர்.

மனிதனின் வெற்றி தோல்விகளையும், சுவாசம் நிர்ணயம் செய்கின்றது என ஞானசர நூல் விளக்குகிறது.

1. இடது நாசியில் சுவாசம் நடக்கும் போது தாயின் உயிர்த்தன்மையின் செயல்பாடுகள் இயக்கத்துக்கு வரும் என்பது சித்தர்கள் கண்டுபிடிப்பு. எனவே இட நாடியின் சுவாசத்தை தாய் நாடி எனவும், பெண் நாடி எனவும், சந்திர நாடி எனவும், சந்திரகலை எனவும் அழைத்தனர். இட நாசியில் சுவாசம் நடைபெறும் போது அர்ச்சனை, குடமுழக்கு, திருமணம் போன்ற சுபநிகடிநவுகள் இயற்றிட உத்தமம்.

2. வலது நாசியில் சுவாசம் நடக்கும்போது தந்தையின் உயிர்ப்புத்தன்மையின் செயல்பாடுகள் நிகழும் நேரத்தை ஆண்நாடி எனவும், தந்தை நாடி எனவும், பிங்கலை எனவும், சூரிய நாடி எனவும், சூரியகலை எனவும் அழைத்தனர். இந்த நாடி செயல்படும்போது சங்கீதம், உபதேசம், கற்றல் ஆகிய பணிகளைச் செய்யலாம்.

3. சுழுமுனை, இரு நாசிகளிலும் சுவாசம் சமமாக ஓடும் போது இறைசிந்தனை, தியானம், பிராணயாமம் செய்வது நலம். பிறர் நலம் நாடி வேண்டினால் வெற்றி
உண்டாகும். இந்த சுழுமுனையை இறை நாடி எனவும், அலி நாடி எனவும், நடு நாடி எனவும் அழைத்தனர்.

ரேசகம் - உள் வாங்குதல்
பூரகம் - வெளி விடுதல்
கும்பகம் - உள்ளே நிறுத்துதல்

பிராணாயாமம் வகைகள்:

நாடி சுத்தி

செயல்முறை

1. முதலில் சித்தாசனம், வஜ்ராசனம், பத்மாசனம் இதில் ஏதாவது ஒரு ஆசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.

2. வலக்கையை சின் முத்திரையுடன் வலது முழுங்காலில் வைத்துக்கொள்ளவும். இது சூரிய நாடியில் ஆரம்பிப்பவர்களுக்கு, பொதுவாக இடக்கையை சின்முத்திரையில் வைத்து இட முழுங்காலில் வைக்கச் சொல்வார்கள், இது சந்திர நாடியில் ரம்பிப்பவர்கள்
முறை. எனவே குருவின் சொற்படி இதை தேர்வு செய்திட வேண்டும்.

3. இடக்கையை நாசிகா முத்திரையில் ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் விண்ணை நோக்கி ஆண்டிணா போன்று வைக்கவும்.

4. இடக்கை கட்டைவிரலை இடது மூக்கில் வைத்து இடது மூக்குத்துவாரத்தை அடைத்துக் கொள்ளவும். வலது மூக்குத்துவாரம் வழியாகக் காற்றை சீராக இழுக்கவும்.

5. பிறகு மூக்கை மோதிர விரலால் அடைத்துக் கொண்டு இடது மூக்குத்துவாரம் வழியாக காற்றை சீராக வெளியே விடவும். பிறகு அதே மூக்குத்துவாரம் வழியாகக்
காற்றை இழுத்து வலது மூக்கு துவாரம் வழியாக வெளிவிடவும்.

6. இது ஒரு சுற்று ஆகும். உள் இழுக்கும் மூச்சு நேரத்தைப் போல் வெளிவிடும் மூச்சு நேரம் சம நேரமாக இருக்குமாறு ஆரம்பகால பயிற்சியில் செய்வது நலம். பின்னர் குருவின் உபதேசப்படி சுவாசத்தை கூட்டியோ அல்லது குறைத்தோ எண்ணிக்கையை மாற்றிய மைத்துக் கொள்ளலாம். இது போன்று 5 முதல் 21 சுற்றுவரை செய்வது நலம்.

7. வைகறைப் பொழுதும், மாலை நேரமும் பயிற்சிக்கு உகந்த நேரம்.

நன்மைகள்
1. நாடிசுத்தி என்பது உடலில் உள்ள 72,000 நாடி நரம்புகளையும் தூய்மை செய்ய வல்லது.
2. மூளை மற்றும் உடல் செல்கள் புத்துணர்ச்சி பெறும்.
3. கண் ஒளி பெருகும்.
4. ஜீரணசக்தி அதிகரிக்கும்.
5. உடல் பொதுவாக இலகுவாக, லேசாக இருப்பதாக உணர்வு வரும்.

கும்பகம்

காற்றை கணக்குப்படி உடலினுள் நிறுத்துவது, தகுந்த குரு உபதேசப்படி அவர் மேற்பார்வையில் இதைப்பழக வேண்டும். இது கேவலகும்பகம், பூரணகும்பகம் என இரு வகைப்படும்.

வெளிக்கும்பகம் : காற்றை உடலுக்குள் இழுக்காமல் கணக்குப் படி காற்றை உடலுக்கு வெளியே நிற்க வைக்கும் கலை.

மூன்று மடக்குடைப் பாம்பு இரண்டு எட்டுள
ஏன்றி இயந்திரம் பன்னிரெண்டு அங்குலம் தான்
நான்றவிழ் முட்டை இரண்டையும் கட்டிட்டு
ஊன்றி இருக்க உடல் அழியாதே - திருமூலர்

உள்முகக் கும்பகம் - உள்ளே மூச்சை நிறுத்துவது
வெளிமுகக் கும்பகம் - வெளியே இருந்து காற்றை வாங்காமல் சில வினாடிகள் வெளியே இருப்பது

மூச்சை 16 மாத்திரை உள்ளிழுக்க வலது மூக்குத் துவாரத்தை அடைத்து, இடது மூக்குத்துவாரத்தை பயன்படுத்தவும்.

64 மாத்திரை மூல பந்தத்துடன் உள்ளே நிறுத்தி, பின் இடது மூக்கை அடைத்து, வலது மூக்குத் துவாரம் வழியே 32 மாத்திரை காலத்தில் வெளிவிடவும். மீண்டும் வலது நாசி வழியாக இடது நாசியை அடைத்து மூச்சை 16 மாத்திரை உள் இழுக்கவும், உள் இழுத்த மூச்சை 64 மாத்திரைகள் உள்ளே நிறுத்தவும். வல நாசி துளையை அடைத்து, இட நாசி வழியாக 32 மாத்திரையில் வெளிவிடவும், இது ஒரு கும்பகம் ஆகும். இவ்வாறு 12 அல்லது 21 சுற்றுகள் செய்யவும்.

வெளிக்கும்பகம்

16 மாத்திரை மூச்சை இழுத்து அதை 32 மாத்திரை அளவில் வெளியேவிட்டுவிட வேண்டும். உடனே மூச்சை உள் இழுக்காமல் 64 மாத்திரை அளவு அப்படியே மூச்சை வெளியே நிறுத்த வேண்டும். பிறகு 16 மாத்திரை அளவு மூச்சை உள் இழுத்து 32 மாத்திரை அளவு வெளிவிட்டு முன்சொன்னவாறு 64 மாத்திரை உள் இழுக்காமலே இருந்து - பிறகு மூச்சை நிதானமாக உள் இழுக்க வேண்டும்.

இதனை நாசி மாற்றி, மாற்றி செய்து வர வேண்டும் இப்படி வலது மூக்கு - இடது மூக்கு என மாற்றி செய்துவர வெளிக்கும்பகம் ஆகும். இவ்வாறு 12 அல்லது 21 சுற்றுகள் செய்யவும்.

உஜ்ஜயி - ( உஸ் என்ற ஒலியுடன் )
செயல் முறை

1. முதலில் சித்தாசனத்தில் தரை விரிப்பில் அமரவும்.

2. மூச்சை முழுவதுமாக வெளியேவிடவும், பிறகு இரு மூக்கு துவாரம் வழியாக மெல்ல மூச்சை உள் இழுக்கவும்.

3. உள்வரும் காற்றை மேல்வாய் அண்ணத்தினால் பாதிமூடி உணரும் வண்ணம் செய்து வரவும், உஸ் என்ற ஒலி தொண்டையில் உண்டாகும். கழுத்தை முன்புறம் வளைத்து ஜலபந்தம் செய்யவும்.

4. சிறிது நேரம் கழித்து தலைப்பகுதியை தளர்த்தி முச்சை வெளிவிடவும். இது ஒரு சுற்று ஆகும்.

5. இது போல 12 சுற்றுகள் செய்வது நலம்.

நன்மைகள்

1. தைராய்டு சுரப்பியை தூண்டுகிறது.
2. மூச்சுக் காற்று மண்டலம் சீராகிறது.
3. பிராணாயாமத்திற்கு தகுதியான சுவசா மண்டலத்தை உடலுக்குத் தருகிறது.

சிட்டாலி : - மூக்கு, நாக்கு, பிராணாயாமம்

செய்முறை

1. முதலில் சித்தாசனத்தில் அல்லது வஜ்ராசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.
2. கைகள் இரண்டையும் சின் முத்திரையில் முழங்கால் மேல் வைக்கவும்.
3. நாக்கின் ஒருபகுதி வாயின் வெளியே நீட்டி நீளவாக்கில் மடித்து நீண்ட குறுகலான குழாய்போல செய்யவும்.
4. மூச்சை, மடித்த நாக்கின் வழி உள் இழுத்து உட்புரத்தை ஈரக்காற்று குளிரவைப்பதை கவனிக்கவும். பிறகு நாக்கை உள் இழுத்து வாயை மூடவும்.
5. ஜலபந்தம் 5 வினாடி செய்தபின் இரண்டு மூக்குத்துவாரங்கள் வழியாக மூச்சை வெளியே விடவும். இருமூக்குத் துவாரங்களிலும் சூடான காற்று வெளியோறுவதை கவனிக்கவும்.
6. இதுபோல 6 முதல் 21 சுற்றுவரை செய்யலாம்.

நன்மைகள்
1. உடலுக்கு குளிர்சியைத் தரக்கூடியது.
2. தாகத்தைப் போக்கும்.
3. உடலில் உள்ள பித்த சுரப்பியை சீராக்கும்.

சித்தகாரி
நாக்கை கீழ்வளைத்துச் செய்யும் பிராணாயாமம்

செயல்முறை

1. முதலில் சித்தாசனம் அல்லது வஜ்ராசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.
2. வாயை சிறிது திறந்து நாக்கின் நுணியை முன் வரிசைப் பற்களைத் தொடுமாறு மடக்கிவைக்கவும்.
3. காற்றை வாயினால் உள்ளே இழுக்க வேண்டும். ஸ் ஸ் ஸ் என்ற சத்தம் உண்டாகும்.
4. ஜலபந்தம் செய்தபின்பு காற்றை இருமூக்குகள் வழியாக சீராக வெளியே விட வேண்டும்.
5. இதனை 6 முதல் 21 சுற்றுகள் வரை செய்யலாம்.

நம்மைகள்

1. வாயில் குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது.
2. உமிழ் நீர் சுரப்பிகள் கீழ், மேல் அண்ணச்சுரப்பிகளை சீர் செய்யும்.
3. நாவின் சுவை அரும்புகள் சீராகும்.
4. பசி, தாகம், சோம்பலை போக்கும்.
5. வாயில் நிகழும் முதல் ஜீரணத்தை சீராக்கும்.

செயல்முறை

1. முதலில் பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.
2. மூல பந்தம் செய்து கொள்ளவும்.
3. இருமூக்கு துவாரங்கள் வழியாக மூச்சைச் சாதராணமாக உள்ளே இழுக்கவேண்டும். மூச்சை வெளியே தள்ளும் போது மிக வேகமாகத் தள்ள வேண்டும்.
4. மூச்சை வெளித்தள்ளும் போது மணிப்பூரக சக்கரம், சுவாதிட்டாண சக்கரம் மற்றும் மூலாதாரச்சக்கரத்தில் தேவையான வேகத்தைக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது வயிற்றுப் பகுதியானது மேல் நோக்கி வேகமாகச் செல்லும்.
5. இந்த கபாலபதியை 6 முதல் 21 சுற்றுக்கள் வரை செய்யலாம்.

நன்மைகள்

1. நுரையீரல், மூச்சுக்குழாய்கள் சுத்தப் படுத்தப்படுகிறது.
2. மூச்சுத்தொல்லை, ஆஸ்துமா போன்ற அனைத்து நோய்களும் நீங்குகிறது.
3. மூளைச் செல்லிலுள்ள உயிரணுக்களை ஊக்கப்படுத்து கின்றன.
4. நரம்பு மண்டலம் முழுவதும் தூய்மையும் உறுதியும் பெறுகிறது.

நோயை விரட்டும்யோக முத்திரைகள் !

மணக்கால் அய்யம்பேட்டை | 3:46 PM | Best Blogger Tips


யோகாசனம் ஒரு அற்புதமான கலை. தினமும் யோகா செய்பவர்களுக்கு நோய் வருவது தடுக்கப்படுவதுடன் மனவலிமையும் அதிகரிக்கும். யோகாவில் ஒரு அம்சம் முத்திரைகள். கை விரல்களால் செய்வது முத்திரைகள்.

நம் உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக் கொண்டு வருவதே முத்திரைகள். நரம்புகளுடன் சம்பந்தப்பட்ட உடல் உறுப்புகளை இந்த முத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் உண்டாக்கப்பட்டது. நம் உடலும் பஞ்ச பூதங்கள் அடங்கியதுதான். நம் கை விரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பூதத்தை குறிப்பதாக உள்ளது.

கட்டை விரல் - நெருப்பையும், ஆள்காட்டி விரல் - காற்றையும், நடுவிரல் - வானத்தையும், மோதிர விரல் - நிலத்தையும், சிறு விரல் - நீரையும் குறிக்கின்றன. இந்த பஞ்ச பூதங்கள் சம நிலையில் இருக்கும்போது உடல் ஆரோக்கியமாக இருக்கிறது.

இந்த முத்திரைகளை உட்கார்ந்திருக்கும் போதோ, நிற்கும்போதோ, நடக்கும்போதோ செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனத்தில் அமர்ந்து செய்வது அதிக நன்மை அளிக்கும். தினந்தோறும் 10 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.

வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.

சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.

சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.

வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.

பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.

அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.

லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும்.

அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம்.

இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு

பிராணாயாமம் ஒரு பார்வை - 3

மணக்கால் அய்யம்பேட்டை | 12:01 PM | Best Blogger Tips
Photo: பிராணாயாமம் ஒரு பார்வை - 3

மருத்துவ குணம்

இறைநிலை மருத்துவம் என்ற இயற்கை மருத்துவமே பிராணசிகிச்சை ஆகும். பிராணனைப் பயன்படுத்தி பிராணசிகிச்சைகள் இயற்கை வைத்தியத்தில் அமைந்துள்ளனர். இவை இராஜவைத்தியம் என்று உயர்வாக அழைக்கப்படுபவை.

நாம் குருவின் வழி மூலம் கற்றுக் கொண்டு நமது உடலை, உயிரை, மனதை வழிநடத்துவது பிராணாயாமம் இதையே முறைப்படி நித்திய கருமமாக தொடர்ந்து பல ஆண்டுகள், குருவின் உதவியோடு செய்து வரும்போது நமது பிராணணைக்கொண்டு பிறரின் உடற்பிணிகளை போக்கும் நிலை ஏற்படும் என சித்தர்கள் சொல்கின்றனர்.

இது பலவைப்படும், உலக மருத்துவ அங்கீகாரப் பட்டியலில் பிராணசிகிச்சையும் இடம் பெற்று உள்ளது. W.H.O. (World Health Organisation) என்பது குறிப்பிட்டத்தக்கது.

விதிமுறைகள்

பிராணாயாம விதிமுறைகள்
1. காலம் : அதிகாலை வெறும் வயிற்றிலும், மாலை நேரம், உணவுஉண்டு4 மணிநேரம் கழிந்து இருக்கவேண்டும். பிராணாயாமம் முடித்து 1/2 மணி நேரம் சென்றபின்தான் சாப்பிடவோ, நீர் அருந்தவோ வேண்டும்.

2. இடம் : தூய, அமைதியான, நல்ல காற்றோட்டமான இடமாக இருக்க வேண்டும் திறந்தவெளியில் பிராணாயாமம் செய்யக்கூடாது. வெறுந்தரையில் அமரக்கூடாது, தரை விரிப்பின் மீது அமர்ந்துதான் செய்ய வேண்டும். வீட்டில் செய்யும்போது மின்விசிறியை நிறுத்திவிடவேண்டும். ஜன்னல் கதவுகள் திறந்திருக்க வேண்டும்.

3. ஆடை : தூய்மையான பருத்தி ஆடை தளர்வானதாக இருக்க வேண்டும்.

4. வயது : 12 வயதிற்கு மேல் அனைவரும் பிராணாயாம் செய்யலாம்.

5. பெண்கள் : கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்திற்கு நாடி சுத்தி மட்டும் செய்தல் நலம். பிறகு குரு ஆலோசனைபடி நடக்கவும். மாதவிடாய் நாட்களில் பிராணாயாமம் தவிர்க்கவும்.

6. இதயநோய் உள்ளவர்கள் குரு உதவியுடன் நாடிசுத்தி தவிர வேறெதுவும் செய்யக்கூடாது.

7. உணவு : சத்தான சாத்வீக உணவு (சைவம்), ஏற்றது பிராணாயமம் ஆரம்பிக்கும் முன் 1/2 டம்லர் நீர்பருகலாம், முடித்தபின்பு 1/2 மணி நேரம் சென்ற பின் நீர் பானங்கள் பருகலாம்.

8. பார்வை : கண்களை முடியே பிராணாயமம் செய்வது நலம்.

9. மனம் : பயிற்சியின் போது மனதை ஒருநிலைப்படுத்தி பின் பிராணாயாமம் செய்தால் முழுப்பலன்கிட்டும்.

10. உடலைத் தயார் படுத்துதல் : பிராணாயாமம் செய்யும் முன்பு இடதுகையை சற்று மேல்தூக்கி முன்பக்கமாக ஏற்றி பின் கீழே இறக்கி இயல்பு நிலைக்கு வந்து ஆரம்பிக்கவேண்டும். இது இருதயத்திற்கும், முளைக்கும் நாம்கொடுக்கும் சமிக்சை (சிக்னல்) ஆகும்.

11. திசைகள் : காலையில் கிழக்கு முகாமாகவும், மாலையில் மேற்கு முகமாகவும், இரவு 12.00 மணி முதல் அதிகாலை 4.30 வரை வடக்கு முகமாகவும் செய்தல் நன்று. தென் திசை பிராணாயமம் செய்ய ஏற்ற திசை அல்ல.

12. நேரம் : அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை செய்வது உத்தமம், மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை செய்வது உத்தமம்.

13. திதி நாட்கள் : அமாவாசை, பௌர்ணமி நாட்களில் நடு இரவில் வடக்குமுகம் அமர்ந்து செய்வது நல்ல பலன் தரும். (நடு இரவு 12 மணி முதல் 1.30 மணி வரை)
கிரகண நாட்கள் தவிர்க்க வேண்டும். நல்ல ஓசோன் 03. ஆக்ஸிஜன் காற்று நிறைந்துள்ள நேரங்களை அறிந்து அந்நேரம் செய்தால் நல்ல பலன் உண்டாகும்.


தெரிந்துகொள்ளுங்கள் பஞ்சபூத உறுப்புகள்

1. இருதயம்
2. நுரையீரல்
3. மண்ணீரல்
4. கல்லீரல்
5. சிறுநீரகங்கள்

உடலில் இரத்த ஓட்டத்தை கையாளும் உறுப்புகள்

1. இரத்த ஓட்டத்திற்கு இருதயம் பொறுப்பு.
2. இரத்தம் அதன் பாதையில் கசிவுகள் இல்லாமல் சீராக ஓடும் மாறு பார்த்துக்கொள்வது, மண்ணீரலின் பொறுப்பு.
3. உடல் உழைப்பில்லாமல் நாம் ஒய்வுடன் இருக்கும்போது இரத்தத்தை சேமிப்பில் வைத்து கண்காணிப்பது கல்லீரலின் பொறுப்பு.

சித்தர்கள் கூற்று - பாடல்களுடன்
ஏறுதல் பூரகம் ஈரெட்டுவாமத்தால்
ஆறுதல் கும்பகம் ஆறுபத்துநாலதில்
ஊறுதல் முப்பத்திரண்டதில் ரேசகம்
மாறுதல் ஒன்றின் கண் வஞ்சகமாமே - திருமந்திரம்

பிராணன் என்ற காந்தக் கலவையின் கூட்டே காற்று என்ற மூலகம். இது பஞ்ச பூதங்களில் ஒன்று எனக்கண்டோம். இதனை ஒளவை பாடலில் “நிலமைந்து நீர்நான்கு நீடங்கி மூன்று உலவை இரண்டு, ஒன்று விண்” - என கூறியுள்ளார். உலவை என்பது காற்று, இரண்டு அணுச்செல்களால்லான பூதத் தத்துவம் காற்று என திறம்பட இயம்பியுள்ளார்.

1. பஞ்சபூதங்கள் : விண், காற்று, தீ, நீர், நிலம்.
2. ஆறுசுவைகள் : இனிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு
3. மூன்று தத்துவங்கள் : வாதம், பித்தம், சிலேத்துமம்
4. உடலின் ராஜ உறுப்புகள்: 1.இருதயம்,2.நுரையீரல்கள், 3. கல்லீரல், 4. மண்ணீரல்,5. சிறு நீரகங்கள்
5. சுவாச உறுப்புகள் : புறஉறுப்பு மூக்கு, அக உறப்பு நுரையிரல்கள்
6. பிராணனின் வெறுபெயர்கள்: 1 காற்று (வெளியில்),  2. மூச்சு (அ) சுவாசக்காற்று 3. வளி, 4. நாடி, 5. வாசி, 6. வாயு, 7. வர்மம் 8. உலவை
எனப்பல பெயர்களில் சித்தர்கள் தம் பரிபாசையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

மூன்று பிராணன்கள்

1. மூலாதார பிராணன் சக்தி = முதாதையர் சக்தி
இதை பராமரிக்கும் உறுப்புகள் சிறுநீரகங்கள்.
2. உணவின் மூலம் கிட்டும் பிராணசக்தி.
இதை பராமரிக்கும் உறுப்பு மண்ணீரல்.
3. காற்றின் மூலம் கிடைக்கும் பிராணசக்தி
இதை பராமரிக்கும் உறுப்பு நுரையீரல்கள்.

மருத்துவ முதுமொழிகள்

1. பணமுள்ளவருக்கு கஸ்தூரி, ஏழைக்கு மஞ்சள்.
2. ஆவாரை இருக்க சாவாரை என் சொல்வேன்.
3. வல்லாரையினும் நல்லாருமில்லை. வல்லாரும் இல்லை.
4. மூலிகை அருத்தால் மூன்று உலகும் ஆளலாம்.
5. பொங்கினவாயிற்றுக்கு பொடுதலைச்சாறு.
6. அருஞ்சுனை நீருண்ண அப்போதே நோய் தீரும்.
7. கதிரவன் ஒளியில் பண்டம் பாழ் ஆகாது.
8. அஞ்ஞானம் தொலைந்தால் ஒளடதம் பலிக்கும்.
9. சேய்க்கு நோயானால் தாய்க்கு மருந்திடு.
10. மைந்தரை வளர்க்கும் மணத்தக்காளி.
11. தேற்றாங் கொட்டையிட்டு தேற்று மைந்தரை.
12. வாயிற்குச் சுவை வயிற்றிற்கு கேடு.
13. நல்வாழ்வின் அருமையை நோயில் தான் அறியலாம்.
14. கொன்றைப் பட்டை கோடி நோயை போக்கும்.
15. மிளகை நம்பினால் தீராத நோய் தீரும்.
16. பாடான மருந்திற்குப் பாலும் தேனும்.
17. தண்ணீர் விட்டான் கிழங்கு தழுவப்பால் சுரக்கும்.
18. அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும்.
19. மறுசாதம் போட்டுக்கொள்ளாதவன் மாட்டுப்பிறப்பு.
20. தாமரை இலையில் உணவு கொள்ள தீராப் புண்ணும் தீரும்.
21. ஆலிலையில் உணவு கொள்ள முகம் வசீகரம் ஆகும்.
22. எருக்கிலையில் உணவு கொள்ள கடிவிஷம் தீரும்.
23. உண்டி வெல்வோர்க்கு உறுபிணி ஏது.
24. குடிநீர் தோஷங்கட்கு உட்தாமணிக்குடிநீர் மாற்று.
25. வங்கத்திற்குக் காட்டுப் புளியும் வசம்பும் மாற்று.
26. நொந்த உடம்பிற்கு வெந்த அமுதிடு.
27. எள்ளின் துவையல் எதற்கும் நன்று.
28. உணவில் உப்பை ஒழித்தவன் யோகி.
29. நாக்கிலே இருக்குது நன்மையும் தீமையும்.
30. வெங்காயம் தின்பார்க்கு தன் காயம் பழுதில்லை.
31. வெந்தால் தெரியும் வெங்காயம் மாண்பு.
32. உடல்துவாரம் ஒன்பதின் நோயும் சிறுகீரை உணவு சிறுகச் செய்யும்.
33. கண்ணேருக்கு கால் மண் சுற்றியிடு.
34. கரிவேப்பில்லை அரைத்துக் கண் கட்டிக்கு இடு.
35. கண்களில் நோயானால் உள்ளங்கால்களில் மருந்திடு.
36. எருச்சிக்கல் நீங்கல் உடல் சிக்கல் தீரும்.
37. தோகை மோகமுற தொருமயில் மாணிக்கம்.
38. அரவம் தீண்டினால் அழிஞ்சல் பட்டை வேறிடு.
39. அரையிலே புண்ணும் அண்டையிலே கடனும் ஆகாது.
40. பப்பாளிப் பழத்தை தேமல் மேல் தேய்.
41. சேற்றுப் புண்ணிற்கு சிறுநீர் விட்டாற்று.
42. மேனிப் புகைக்கு மூலம் உள்ளேகும்.
43. புண்ணாக்கிற்கு தேங்காய்ப்பால் விட்டாற்று.
44. கை கண்ட மாத்திரை வைகுண்ட யாத்திரை.
45. பொன்னானது வேண்டினால் பூவரசைப் பார்.
46. கடுமையான நோய்க்கு கடவுளே மருந்து.
47. எந்த வீக்கட்திற்கும் எருக்கின் பாலடி.
48. மாந்ரீகன் வீட்டுபேயும், மருத்துவன் வீட்டு நோயும் போகாது.
49. வீரம் விட்டால் நீற்றினம் போச்சு.
50. சாரம் விட்டால் செய்நீர் போச்சு.
51. காரம் விட்டால் உருக்கினம் போச்சு.
52. துருசு விட்டால் குருவே போச்சு.
53. குருவில்லா வித்தை பாழ்.
54. வெங்காயம் தின்று தன்காயம் போற்று.

பஞ்சபூத இயல்பு

1. நீர் - இதன் இயல்பு மேலிருந்து கீழாகப் பாய்வது,
சுவைகளில் இது - உப்பு.
2. நெருப்பு - இதன் இயல்பு மேலே நோக்குவது,
சுவைகளில் இது - கசப்பு.
3. ஆகாயம் - எதை வளைக்கவும் நிமிர்த்தவும் முடியுமோ, எங்கும் நிரப்பவும் முடியுமோ அதுவே ஆகாயம்,
சுவைகளில் இது - புளிப்பு.
4. காற்று - எதை வடிவமைக்க முடியுமோ, உருவாக்க முடியுமோ அதுவே அசையும் தன்மை கொண்ட காற்று,
சுவைகளில் இது - காரம்.
5. பூமி - எது விதைப்பிற்கும், வளர்ச்சிக்கும், அறுவடைக்கும் அனுமதிக்கின்றதோ அதுவோ பூமி,
சுவைகளில் இது - இனிப்பு.

வாத, பித்த, சிலேத்தும தாதுக்களில் பூதங்கள்

1. வாதம் = காற்று + விண் - இரண்டின் கூட்டு
2. பித்தம் = தீ - தனித்தது
3. சிலேத்துமம் = நீலம் + நீர் - இரண்டின் கூட்டு வாதத்தை அதிகமாக்கும் சுவைகள் மூன்று
1. காரம், 2. கசப்பு, 3. துவர்ப்பு
பித்தத்தை அதிகமாக்கும் சுவைகள் மூன்று
1. உப்பு, 2. புளிப்பு, 3. காரம்

சுவைகளும் - பூதங்களின் அணுக்கூட்டும்

1. இனிப்பு :
நீர் + நிலம் சேர்ந்தது 4 + 5 = 9 அணுக்கூட்டு.
2. புளிப்பு :
தீ + நிலம் சேர்ந்தது 3 + 5 = 8 அணுக்கூட்டு.
3. கசப்பு :
காற்று + விண் சேர்ந்தது 2 + 1 = 3 அணுக்கூட்டு.
4. கார்ப்பு :
காற்று + தீ சேர்ந்தது 2 + 3 = 5 அணுக்கூட்டு.
5. உப்பு :
தீ + நீர் சேர்ந்தது 3 + 4 = 7 அணுக்கூட்டு
6. துவர்ப்பு :
காற்று + நிலம் சேர்ந்தது 2 + 5 = 7 அணுக்கூட்டு.

அட்டமா சித்துகள்

1. அணுமா - அணுவைப்போல மிகச்சிறிதாக மாறுதல்
2. மகிமா - மலைபோல பெரிய தோற்றம் கொள்ளுதல்
3. இலகுமா - காற்றில் பஞ்சுபோல மிதத்தல்
4. கரிமா - நீரின் மேலும், நெருப்பின் மேலும் நடத்தல்
5. பிராப்தி - வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்ளூதல்
6. பிரகாமியம் - வேண்டியதை எல்லாம் வேண்டுவோருக்கு கொடுத்தல்
7. வசித்தும் - எல்லோரும் விரும்பும் நிலை அடைதல்
8. ஈசத்துவம் - ஈசனின் குணங்களையும் ஆற்றலையும் பெறுதல்

நாம் உண்ட உணவு நமக்குள் அடையும் மாற்றங்கள்

1. உணவு ரசமாகவும்
2. இரத்தமாகவும்
3. திசுக்களாகவும் (தசையாகவும்)
4. கொழுப்பாகவும்
5. எலும்பாகவும்
6. மஜ்ஜையாகவும்
7. விந்தாகவும் (சுரோணிதமாகவும்) என 7 நிலைகளாக

உண்ட உணவு மாற்றம் பெறுகிறது.

நன்றி: பிராணாயாமம் - குருவே சரணம் 

மேலும் ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள: 

Mr. K. Jaya sankar - 98408 22173
Mr. N. Manohar - 944468457 Email:spy.manohar@yahoo.com


மருத்துவ குணம்

இறைநிலை மருத்துவம் என்ற இயற்கை மருத்துவமே பிராணசிகிச்சை ஆகும். பிராணனைப் பயன்படுத்தி பிராணசிகிச்சைகள் இயற்கை வைத்தியத்தில் அமைந்துள்ளனர். இவை இராஜவைத்தியம் என்று உயர்வாக அழைக்கப்படுபவை.

நாம் குருவின் வழி மூலம் கற்றுக் கொண்டு நமது உடலை, உயிரை, மனதை வழிநடத்துவது பிராணாயாமம் இதையே முறைப்படி நித்திய கருமமாக தொடர்ந்து பல ஆண்டுகள், குருவின் உதவியோடு செய்து வரும்போது நமது பிராணணைக்கொண்டு பிறரின் உடற்பிணிகளை போக்கும் நிலை ஏற்படும் என சித்தர்கள் சொல்கின்றனர்.

இது பலவைப்படும், உலக மருத்துவ அங்கீகாரப் பட்டியலில் பிராணசிகிச்சையும் இடம் பெற்று உள்ளது. W.H.O. (World Health Organisation) என்பது குறிப்பிட்டத்தக்கது.

விதிமுறைகள்

பிராணாயாம விதிமுறைகள்
1. காலம் : அதிகாலை வெறும் வயிற்றிலும், மாலை நேரம், உணவுஉண்டு4 மணிநேரம் கழிந்து இருக்கவேண்டும். பிராணாயாமம் முடித்து 1/2 மணி நேரம் சென்றபின்தான் சாப்பிடவோ, நீர் அருந்தவோ வேண்டும்.

2. இடம் : தூய, அமைதியான, நல்ல காற்றோட்டமான இடமாக இருக்க வேண்டும் திறந்தவெளியில் பிராணாயாமம் செய்யக்கூடாது. வெறுந்தரையில் அமரக்கூடாது, தரை விரிப்பின் மீது அமர்ந்துதான் செய்ய வேண்டும். வீட்டில் செய்யும்போது மின்விசிறியை நிறுத்திவிடவேண்டும். ஜன்னல் கதவுகள் திறந்திருக்க வேண்டும்.

3. ஆடை : தூய்மையான பருத்தி ஆடை தளர்வானதாக இருக்க வேண்டும்.

4. வயது : 12 வயதிற்கு மேல் அனைவரும் பிராணாயாம் செய்யலாம்.

5. பெண்கள் : கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்திற்கு நாடி சுத்தி மட்டும் செய்தல் நலம். பிறகு குரு ஆலோசனைபடி நடக்கவும். மாதவிடாய் நாட்களில் பிராணாயாமம் தவிர்க்கவும்.

6. இதயநோய் உள்ளவர்கள் குரு உதவியுடன் நாடிசுத்தி தவிர வேறெதுவும் செய்யக்கூடாது.

7. உணவு : சத்தான சாத்வீக உணவு (சைவம்), ஏற்றது பிராணாயமம் ஆரம்பிக்கும் முன் 1/2 டம்லர் நீர்பருகலாம், முடித்தபின்பு 1/2 மணி நேரம் சென்ற பின் நீர் பானங்கள் பருகலாம்.

8. பார்வை : கண்களை முடியே பிராணாயமம் செய்வது நலம்.

9. மனம் : பயிற்சியின் போது மனதை ஒருநிலைப்படுத்தி பின் பிராணாயாமம் செய்தால் முழுப்பலன்கிட்டும்.

10. உடலைத் தயார் படுத்துதல் : பிராணாயாமம் செய்யும் முன்பு இடதுகையை சற்று மேல்தூக்கி முன்பக்கமாக ஏற்றி பின் கீழே இறக்கி இயல்பு நிலைக்கு வந்து ஆரம்பிக்கவேண்டும். இது இருதயத்திற்கும், முளைக்கும் நாம்கொடுக்கும் சமிக்சை (சிக்னல்) ஆகும்.

11. திசைகள் : காலையில் கிழக்கு முகாமாகவும், மாலையில் மேற்கு முகமாகவும், இரவு 12.00 மணி முதல் அதிகாலை 4.30 வரை வடக்கு முகமாகவும் செய்தல் நன்று. தென் திசை பிராணாயமம் செய்ய ஏற்ற திசை அல்ல.

12. நேரம் : அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை செய்வது உத்தமம், மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை செய்வது உத்தமம்.

13. திதி நாட்கள் : அமாவாசை, பௌர்ணமி நாட்களில் நடு இரவில் வடக்குமுகம் அமர்ந்து செய்வது நல்ல பலன் தரும். (நடு இரவு 12 மணி முதல் 1.30 மணி வரை)
கிரகண நாட்கள் தவிர்க்க வேண்டும். நல்ல ஓசோன் 03. ஆக்ஸிஜன் காற்று நிறைந்துள்ள நேரங்களை அறிந்து அந்நேரம் செய்தால் நல்ல பலன் உண்டாகும்.


தெரிந்துகொள்ளுங்கள் பஞ்சபூத உறுப்புகள்

1. இருதயம்
2. நுரையீரல்
3. மண்ணீரல்
4. கல்லீரல்
5. சிறுநீரகங்கள்

உடலில் இரத்த ஓட்டத்தை கையாளும் உறுப்புகள்

1. இரத்த ஓட்டத்திற்கு இருதயம் பொறுப்பு.
2. இரத்தம் அதன் பாதையில் கசிவுகள் இல்லாமல் சீராக ஓடும் மாறு பார்த்துக்கொள்வது, மண்ணீரலின் பொறுப்பு.
3. உடல் உழைப்பில்லாமல் நாம் ஒய்வுடன் இருக்கும்போது இரத்தத்தை சேமிப்பில் வைத்து கண்காணிப்பது கல்லீரலின் பொறுப்பு.

சித்தர்கள் கூற்று - பாடல்களுடன்
ஏறுதல் பூரகம் ஈரெட்டுவாமத்தால்
ஆறுதல் கும்பகம் ஆறுபத்துநாலதில்
ஊறுதல் முப்பத்திரண்டதில் ரேசகம்
மாறுதல் ஒன்றின் கண் வஞ்சகமாமே - திருமந்திரம்

பிராணன் என்ற காந்தக் கலவையின் கூட்டே காற்று என்ற மூலகம். இது பஞ்ச பூதங்களில் ஒன்று எனக்கண்டோம். இதனை ஒளவை பாடலில் “நிலமைந்து நீர்நான்கு நீடங்கி மூன்று உலவை இரண்டு, ஒன்று விண்” - என கூறியுள்ளார். உலவை என்பது காற்று, இரண்டு அணுச்செல்களால்லான பூதத் தத்துவம் காற்று என திறம்பட இயம்பியுள்ளார்.

1. பஞ்சபூதங்கள் : விண், காற்று, தீ, நீர், நிலம்.
2. ஆறுசுவைகள் : இனிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு
3. மூன்று தத்துவங்கள் : வாதம், பித்தம், சிலேத்துமம்
4. உடலின் ராஜ உறுப்புகள்: 1.இருதயம்,2.நுரையீரல்கள், 3. கல்லீரல், 4. மண்ணீரல்,5. சிறு நீரகங்கள்
5. சுவாச உறுப்புகள் : புறஉறுப்பு மூக்கு, அக உறப்பு நுரையிரல்கள்
6. பிராணனின் வெறுபெயர்கள்: 1 காற்று (வெளியில்), 2. மூச்சு (அ) சுவாசக்காற்று 3. வளி, 4. நாடி, 5. வாசி, 6. வாயு, 7. வர்மம் 8. உலவை
எனப்பல பெயர்களில் சித்தர்கள் தம் பரிபாசையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

மூன்று பிராணன்கள்

1. மூலாதார பிராணன் சக்தி = முதாதையர் சக்தி
இதை பராமரிக்கும் உறுப்புகள் சிறுநீரகங்கள்.
2. உணவின் மூலம் கிட்டும் பிராணசக்தி.
இதை பராமரிக்கும் உறுப்பு மண்ணீரல்.
3. காற்றின் மூலம் கிடைக்கும் பிராணசக்தி
இதை பராமரிக்கும் உறுப்பு நுரையீரல்கள்.

மருத்துவ முதுமொழிகள்

1. பணமுள்ளவருக்கு கஸ்தூரி, ஏழைக்கு மஞ்சள்.
2. ஆவாரை இருக்க சாவாரை என் சொல்வேன்.
3. வல்லாரையினும் நல்லாருமில்லை. வல்லாரும் இல்லை.
4. மூலிகை அருத்தால் மூன்று உலகும் ஆளலாம்.
5. பொங்கினவாயிற்றுக்கு பொடுதலைச்சாறு.
6. அருஞ்சுனை நீருண்ண அப்போதே நோய் தீரும்.
7. கதிரவன் ஒளியில் பண்டம் பாழ் ஆகாது.
8. அஞ்ஞானம் தொலைந்தால் ஒளடதம் பலிக்கும்.
9. சேய்க்கு நோயானால் தாய்க்கு மருந்திடு.
10. மைந்தரை வளர்க்கும் மணத்தக்காளி.
11. தேற்றாங் கொட்டையிட்டு தேற்று மைந்தரை.
12. வாயிற்குச் சுவை வயிற்றிற்கு கேடு.
13. நல்வாழ்வின் அருமையை நோயில் தான் அறியலாம்.
14. கொன்றைப் பட்டை கோடி நோயை போக்கும்.
15. மிளகை நம்பினால் தீராத நோய் தீரும்.
16. பாடான மருந்திற்குப் பாலும் தேனும்.
17. தண்ணீர் விட்டான் கிழங்கு தழுவப்பால் சுரக்கும்.
18. அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும்.
19. மறுசாதம் போட்டுக்கொள்ளாதவன் மாட்டுப்பிறப்பு.
20. தாமரை இலையில் உணவு கொள்ள தீராப் புண்ணும் தீரும்.
21. ஆலிலையில் உணவு கொள்ள முகம் வசீகரம் ஆகும்.
22. எருக்கிலையில் உணவு கொள்ள கடிவிஷம் தீரும்.
23. உண்டி வெல்வோர்க்கு உறுபிணி ஏது.
24. குடிநீர் தோஷங்கட்கு உட்தாமணிக்குடிநீர் மாற்று.
25. வங்கத்திற்குக் காட்டுப் புளியும் வசம்பும் மாற்று.
26. நொந்த உடம்பிற்கு வெந்த அமுதிடு.
27. எள்ளின் துவையல் எதற்கும் நன்று.
28. உணவில் உப்பை ஒழித்தவன் யோகி.
29. நாக்கிலே இருக்குது நன்மையும் தீமையும்.
30. வெங்காயம் தின்பார்க்கு தன் காயம் பழுதில்லை.
31. வெந்தால் தெரியும் வெங்காயம் மாண்பு.
32. உடல்துவாரம் ஒன்பதின் நோயும் சிறுகீரை உணவு சிறுகச் செய்யும்.
33. கண்ணேருக்கு கால் மண் சுற்றியிடு.
34. கரிவேப்பில்லை அரைத்துக் கண் கட்டிக்கு இடு.
35. கண்களில் நோயானால் உள்ளங்கால்களில் மருந்திடு.
36. எருச்சிக்கல் நீங்கல் உடல் சிக்கல் தீரும்.
37. தோகை மோகமுற தொருமயில் மாணிக்கம்.
38. அரவம் தீண்டினால் அழிஞ்சல் பட்டை வேறிடு.
39. அரையிலே புண்ணும் அண்டையிலே கடனும் ஆகாது.
40. பப்பாளிப் பழத்தை தேமல் மேல் தேய்.
41. சேற்றுப் புண்ணிற்கு சிறுநீர் விட்டாற்று.
42. மேனிப் புகைக்கு மூலம் உள்ளேகும்.
43. புண்ணாக்கிற்கு தேங்காய்ப்பால் விட்டாற்று.
44. கை கண்ட மாத்திரை வைகுண்ட யாத்திரை.
45. பொன்னானது வேண்டினால் பூவரசைப் பார்.
46. கடுமையான நோய்க்கு கடவுளே மருந்து.
47. எந்த வீக்கட்திற்கும் எருக்கின் பாலடி.
48. மாந்ரீகன் வீட்டுபேயும், மருத்துவன் வீட்டு நோயும் போகாது.
49. வீரம் விட்டால் நீற்றினம் போச்சு.
50. சாரம் விட்டால் செய்நீர் போச்சு.
51. காரம் விட்டால் உருக்கினம் போச்சு.
52. துருசு விட்டால் குருவே போச்சு.
53. குருவில்லா வித்தை பாழ்.
54. வெங்காயம் தின்று தன்காயம் போற்று.

பஞ்சபூத இயல்பு

1. நீர் - இதன் இயல்பு மேலிருந்து கீழாகப் பாய்வது,
சுவைகளில் இது - உப்பு.
2. நெருப்பு - இதன் இயல்பு மேலே நோக்குவது,
சுவைகளில் இது - கசப்பு.
3. ஆகாயம் - எதை வளைக்கவும் நிமிர்த்தவும் முடியுமோ, எங்கும் நிரப்பவும் முடியுமோ அதுவே ஆகாயம்,
சுவைகளில் இது - புளிப்பு.
4. காற்று - எதை வடிவமைக்க முடியுமோ, உருவாக்க முடியுமோ அதுவே அசையும் தன்மை கொண்ட காற்று,
சுவைகளில் இது - காரம்.
5. பூமி - எது விதைப்பிற்கும், வளர்ச்சிக்கும், அறுவடைக்கும் அனுமதிக்கின்றதோ அதுவோ பூமி,
சுவைகளில் இது - இனிப்பு.

வாத, பித்த, சிலேத்தும தாதுக்களில் பூதங்கள்

1. வாதம் = காற்று + விண் - இரண்டின் கூட்டு
2. பித்தம் = தீ - தனித்தது
3. சிலேத்துமம் = நீலம் + நீர் - இரண்டின் கூட்டு வாதத்தை அதிகமாக்கும் சுவைகள் மூன்று
1. காரம், 2. கசப்பு, 3. துவர்ப்பு
பித்தத்தை அதிகமாக்கும் சுவைகள் மூன்று
1. உப்பு, 2. புளிப்பு, 3. காரம்

சுவைகளும் - பூதங்களின் அணுக்கூட்டும்

1. இனிப்பு :
நீர் + நிலம் சேர்ந்தது 4 + 5 = 9 அணுக்கூட்டு.
2. புளிப்பு :
தீ + நிலம் சேர்ந்தது 3 + 5 = 8 அணுக்கூட்டு.
3. கசப்பு :
காற்று + விண் சேர்ந்தது 2 + 1 = 3 அணுக்கூட்டு.
4. கார்ப்பு :
காற்று + தீ சேர்ந்தது 2 + 3 = 5 அணுக்கூட்டு.
5. உப்பு :
தீ + நீர் சேர்ந்தது 3 + 4 = 7 அணுக்கூட்டு
6. துவர்ப்பு :
காற்று + நிலம் சேர்ந்தது 2 + 5 = 7 அணுக்கூட்டு.

அட்டமா சித்துகள்

1. அணுமா - அணுவைப்போல மிகச்சிறிதாக மாறுதல்
2. மகிமா - மலைபோல பெரிய தோற்றம் கொள்ளுதல்
3. இலகுமா - காற்றில் பஞ்சுபோல மிதத்தல்
4. கரிமா - நீரின் மேலும், நெருப்பின் மேலும் நடத்தல்
5. பிராப்தி - வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்ளூதல்
6. பிரகாமியம் - வேண்டியதை எல்லாம் வேண்டுவோருக்கு கொடுத்தல்
7. வசித்தும் - எல்லோரும் விரும்பும் நிலை அடைதல்
8. ஈசத்துவம் - ஈசனின் குணங்களையும் ஆற்றலையும் பெறுதல்

நாம் உண்ட உணவு நமக்குள் அடையும் மாற்றங்கள்

1. உணவு ரசமாகவும்
2. இரத்தமாகவும்
3. திசுக்களாகவும் (தசையாகவும்)
4. கொழுப்பாகவும்
5. எலும்பாகவும்
6. மஜ்ஜையாகவும்
7. விந்தாகவும் (சுரோணிதமாகவும்) என 7 நிலைகளாக

உண்ட உணவு மாற்றம் பெறுகிறது.

நன்றி: பிராணாயாமம் - குருவே சரணம்

மேலும் ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள:

Mr. K. Jaya sankar - 98408 22173
Mr. N. Manohar - 944468457 Email:spy.manohar@yahoo.com
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு

பிராணாயாமம் ஒரு பார்வை - 2

மணக்கால் அய்யம்பேட்டை | 11:59 AM | Best Blogger Tips
Photo: பிராணாயாமம் ஒரு பார்வை - 2

மனிதர்களின் சுவாசக்கணக்கு

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்கு
கூற்றை உதைக்கும் குறிஅது வாமே - திருமந்திரம்

பதிணென் சித்திர்களில் ஒருவராக விளங்கும் திருமூலர் தமது திருமந்திரத்தில் கூறியுள்ள செய்தி ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 சுவாசம் வீதம் நாள் ஓன்றுக்கு
21,600 சுவாசங்களா உள்வாங்கி வெளியிடுவதாக குறிப்பு.

நாசித் துவாரங்கள் வழியாக உட்செல்லும் காற்றை சித்தர்கள் அங்குலக் கணக்கில் அளந்துள்ளனர். வலது நாசித்துவாரம் வழியாக போகும் போது 12 அங்குலமும்,
இடது நாசி வழியாகப் போகும் போது 16 அங்குலமும், இரு துவாரங்களின் வழியே இணைந்து சுழுனையில் சஞ்சரிக்கும் போது 64 அங்குலமும் உட்செல்கிறது. இதே போன்று வெளியேசெல்லும் காற்றையும் அளந்துள்ளனர். அமர்ந்து இருக்கும் போது 12 அங்குலமும், நடக்கும் போது 16 அங்குலமும், ஓடும்போது 25 அங்குலமும், உறங்கும் போது 36 அங்குலமும், உடலுறவின் போது 64 அங்குலமும் வெளியாகின்றன. மனித உடலில் சேமிப்பில் இருக்கும் பிராணன் அவரவர் செயலுக்கேற்ப அழிகின்றது என்பதை முன்சொன்ன கணக்கு தெளிவாக்குகிறது.


சுவாசத்திற்கும் மனித ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 12 அங்குலம் சுவாசம் உள்ளே செலுத்தி 4 அங்குலம் வெளியே விட்டு மிதமுள்ள 8 அங்குலம்
உள்ளே உலவச் செய்தால் 120 ஆண்டுகள் ஒரு மனிதன் வாழ முடியும் என்பது சித்தர்கள் கண்டறிந்த உண்மை. எனவே தான் பிராணாயாமத்தை நம் முன்னோர்கள்
முறையாகப் பழகி வந்துள்ளனர்.

மனிதனின் வெற்றி தோல்விகளையும், சுவாசம் நிர்ணயம் செய்கின்றது என ஞானசர நூல் விளக்குகிறது. 

1. இடது நாசியில் சுவாசம் நடக்கும் போது தாயின் உயிர்த்தன்மையின் செயல்பாடுகள் இயக்கத்துக்கு வரும் என்பது சித்தர்கள் கண்டுபிடிப்பு. எனவே இட நாடியின் சுவாசத்தை தாய் நாடி எனவும், பெண் நாடி எனவும், சந்திர நாடி எனவும், சந்திரகலை எனவும் அழைத்தனர். இட நாசியில் சுவாசம் நடைபெறும் போது அர்ச்சனை, குடமுழக்கு, திருமணம் போன்ற சுபநிகடிநவுகள் இயற்றிட உத்தமம்.

2. வலது நாசியில் சுவாசம் நடக்கும்போது தந்தையின் உயிர்ப்புத்தன்மையின் செயல்பாடுகள் நிகழும் நேரத்தை ஆண்நாடி எனவும், தந்தை நாடி எனவும், பிங்கலை எனவும், சூரிய நாடி எனவும், சூரியகலை எனவும் அழைத்தனர். இந்த நாடி செயல்படும்போது சங்கீதம், உபதேசம், கற்றல் ஆகிய பணிகளைச் செய்யலாம்.

3. சுழுமுனை, இரு நாசிகளிலும் சுவாசம் சமமாக ஓடும் போது இறைசிந்தனை, தியானம், பிராணயாமம் செய்வது நலம். பிறர் நலம் நாடி வேண்டினால் வெற்றி
உண்டாகும். இந்த சுழுமுனையை இறை நாடி எனவும், அலி நாடி எனவும், நடு நாடி எனவும் அழைத்தனர்.

ரேசகம் - உள் வாங்குதல்
பூரகம் - வெளி விடுதல்
கும்பகம் - உள்ளே நிறுத்துதல்

பிராணாயாமம் வகைகள்:

நாடி சுத்தி

செயல்முறை

1. முதலில் சித்தாசனம், வஜ்ராசனம், பத்மாசனம் இதில் ஏதாவது ஒரு ஆசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.

2. வலக்கையை சின் முத்திரையுடன் வலது முழுங்காலில் வைத்துக்கொள்ளவும். இது சூரிய நாடியில் ஆரம்பிப்பவர்களுக்கு, பொதுவாக இடக்கையை சின்முத்திரையில் வைத்து இட முழுங்காலில் வைக்கச் சொல்வார்கள், இது சந்திர நாடியில் ரம்பிப்பவர்கள்
முறை. எனவே குருவின் சொற்படி இதை தேர்வு செய்திட வேண்டும்.

3. இடக்கையை நாசிகா முத்திரையில் ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் விண்ணை நோக்கி ஆண்டிணா போன்று வைக்கவும்.

4. இடக்கை கட்டைவிரலை இடது மூக்கில் வைத்து இடது மூக்குத்துவாரத்தை அடைத்துக் கொள்ளவும். வலது மூக்குத்துவாரம் வழியாகக் காற்றை சீராக இழுக்கவும்.

5. பிறகு மூக்கை மோதிர விரலால் அடைத்துக் கொண்டு இடது மூக்குத்துவாரம் வழியாக காற்றை சீராக வெளியே விடவும். பிறகு அதே மூக்குத்துவாரம் வழியாகக்
காற்றை இழுத்து வலது மூக்கு துவாரம் வழியாக வெளிவிடவும்.

6. இது ஒரு சுற்று ஆகும். உள் இழுக்கும் மூச்சு நேரத்தைப் போல் வெளிவிடும் மூச்சு நேரம் சம நேரமாக இருக்குமாறு ஆரம்பகால பயிற்சியில் செய்வது நலம். பின்னர் குருவின் உபதேசப்படி சுவாசத்தை கூட்டியோ அல்லது குறைத்தோ எண்ணிக்கையை மாற்றிய மைத்துக் கொள்ளலாம். இது போன்று 5 முதல் 21 சுற்றுவரை செய்வது நலம்.

7. வைகறைப் பொழுதும், மாலை நேரமும் பயிற்சிக்கு உகந்த நேரம்.

நன்மைகள்
1. நாடிசுத்தி என்பது உடலில் உள்ள 72,000 நாடி நரம்புகளையும் தூய்மை செய்ய வல்லது.
2. மூளை மற்றும் உடல் செல்கள் புத்துணர்ச்சி பெறும்.
3. கண் ஒளி பெருகும்.
4. ஜீரணசக்தி அதிகரிக்கும்.
5. உடல் பொதுவாக இலகுவாக, லேசாக இருப்பதாக உணர்வு வரும்.

கும்பகம்

காற்றை கணக்குப்படி உடலினுள் நிறுத்துவது, தகுந்த குரு உபதேசப்படி அவர் மேற்பார்வையில் இதைப்பழக வேண்டும். இது கேவலகும்பகம், பூரணகும்பகம் என இரு வகைப்படும்.

வெளிக்கும்பகம் : காற்றை உடலுக்குள் இழுக்காமல் கணக்குப் படி காற்றை உடலுக்கு வெளியே நிற்க வைக்கும் கலை.

மூன்று மடக்குடைப் பாம்பு இரண்டு எட்டுள
ஏன்றி இயந்திரம் பன்னிரெண்டு அங்குலம் தான்
நான்றவிழ் முட்டை இரண்டையும் கட்டிட்டு
ஊன்றி இருக்க உடல் அழியாதே - திருமூலர்

உள்முகக் கும்பகம் - உள்ளே மூச்சை நிறுத்துவது
வெளிமுகக் கும்பகம் - வெளியே இருந்து காற்றை வாங்காமல் சில வினாடிகள் வெளியே இருப்பது

மூச்சை 16 மாத்திரை உள்ளிழுக்க வலது மூக்குத் துவாரத்தை அடைத்து, இடது மூக்குத்துவாரத்தை பயன்படுத்தவும்.

64 மாத்திரை மூல பந்தத்துடன் உள்ளே நிறுத்தி, பின் இடது மூக்கை அடைத்து, வலது மூக்குத் துவாரம் வழியே 32 மாத்திரை காலத்தில் வெளிவிடவும். மீண்டும் வலது நாசி வழியாக இடது நாசியை அடைத்து மூச்சை 16 மாத்திரை உள் இழுக்கவும், உள் இழுத்த மூச்சை 64 மாத்திரைகள் உள்ளே நிறுத்தவும். வல நாசி துளையை அடைத்து, இட நாசி வழியாக 32 மாத்திரையில் வெளிவிடவும், இது ஒரு கும்பகம் ஆகும். இவ்வாறு 12 அல்லது 21 சுற்றுகள் செய்யவும்.

வெளிக்கும்பகம்

16 மாத்திரை மூச்சை இழுத்து அதை 32 மாத்திரை அளவில் வெளியேவிட்டுவிட வேண்டும். உடனே மூச்சை உள் இழுக்காமல் 64 மாத்திரை அளவு அப்படியே மூச்சை வெளியே நிறுத்த வேண்டும். பிறகு 16 மாத்திரை அளவு மூச்சை உள் இழுத்து 32 மாத்திரை அளவு வெளிவிட்டு முன்சொன்னவாறு 64 மாத்திரை உள் இழுக்காமலே இருந்து - பிறகு மூச்சை நிதானமாக உள் இழுக்க வேண்டும்.

இதனை நாசி மாற்றி, மாற்றி செய்து வர வேண்டும் இப்படி வலது மூக்கு - இடது மூக்கு என மாற்றி செய்துவர வெளிக்கும்பகம் ஆகும். இவ்வாறு 12 அல்லது 21 சுற்றுகள் செய்யவும்.

உஜ்ஜயி - ( உஸ் என்ற ஒலியுடன் )
செயல் முறை

1. முதலில் சித்தாசனத்தில் தரை விரிப்பில் அமரவும்.

2. மூச்சை முழுவதுமாக வெளியேவிடவும், பிறகு இரு மூக்கு துவாரம் வழியாக மெல்ல மூச்சை உள் இழுக்கவும்.

3. உள்வரும் காற்றை மேல்வாய் அண்ணத்தினால் பாதிமூடி உணரும் வண்ணம் செய்து வரவும், உஸ் என்ற ஒலி தொண்டையில் உண்டாகும். கழுத்தை முன்புறம் வளைத்து ஜலபந்தம் செய்யவும்.

4. சிறிது நேரம் கழித்து தலைப்பகுதியை தளர்த்தி முச்சை வெளிவிடவும். இது ஒரு சுற்று ஆகும்.

5. இது போல 12 சுற்றுகள் செய்வது நலம்.

நன்மைகள்

1. தைராய்டு சுரப்பியை தூண்டுகிறது.
2. மூச்சுக் காற்று மண்டலம் சீராகிறது.
3. பிராணாயாமத்திற்கு தகுதியான சுவசா மண்டலத்தை உடலுக்குத் தருகிறது.

சிட்டாலி : - மூக்கு, நாக்கு, பிராணாயாமம்

செய்முறை

1. முதலில் சித்தாசனத்தில் அல்லது வஜ்ராசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.
2. கைகள் இரண்டையும் சின் முத்திரையில் முழங்கால் மேல் வைக்கவும்.
3. நாக்கின் ஒருபகுதி வாயின் வெளியே நீட்டி நீளவாக்கில் மடித்து நீண்ட குறுகலான குழாய்போல செய்யவும்.
4. மூச்சை, மடித்த நாக்கின் வழி உள் இழுத்து உட்புரத்தை ஈரக்காற்று குளிரவைப்பதை கவனிக்கவும். பிறகு நாக்கை உள் இழுத்து வாயை மூடவும்.
5. ஜலபந்தம் 5 வினாடி செய்தபின் இரண்டு மூக்குத்துவாரங்கள் வழியாக மூச்சை வெளியே விடவும். இருமூக்குத் துவாரங்களிலும் சூடான காற்று வெளியோறுவதை கவனிக்கவும்.
6. இதுபோல 6 முதல் 21 சுற்றுவரை செய்யலாம்.

நன்மைகள்
1. உடலுக்கு குளிர்சியைத் தரக்கூடியது.
2. தாகத்தைப் போக்கும்.
3. உடலில் உள்ள பித்த சுரப்பியை சீராக்கும்.

சித்தகாரி
நாக்கை கீழ்வளைத்துச் செய்யும் பிராணாயாமம்

செயல்முறை

1. முதலில் சித்தாசனம் அல்லது வஜ்ராசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.
2. வாயை சிறிது திறந்து நாக்கின் நுணியை முன் வரிசைப் பற்களைத் தொடுமாறு மடக்கிவைக்கவும்.
3. காற்றை வாயினால் உள்ளே இழுக்க வேண்டும். ஸ் ஸ் ஸ் என்ற சத்தம் உண்டாகும்.
4. ஜலபந்தம் செய்தபின்பு காற்றை இருமூக்குகள் வழியாக சீராக வெளியே விட வேண்டும்.
5. இதனை 6 முதல் 21 சுற்றுகள் வரை செய்யலாம்.

நம்மைகள்

1. வாயில் குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது.
2. உமிழ் நீர் சுரப்பிகள் கீழ், மேல் அண்ணச்சுரப்பிகளை சீர் செய்யும்.
3. நாவின் சுவை அரும்புகள் சீராகும்.
4. பசி, தாகம், சோம்பலை போக்கும்.
5. வாயில் நிகழும் முதல் ஜீரணத்தை சீராக்கும்.

செயல்முறை

1. முதலில் பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.
2. மூல பந்தம் செய்து கொள்ளவும்.
3. இருமூக்கு துவாரங்கள் வழியாக மூச்சைச் சாதராணமாக உள்ளே இழுக்கவேண்டும். மூச்சை வெளியே தள்ளும் போது மிக வேகமாகத் தள்ள வேண்டும்.
4. மூச்சை வெளித்தள்ளும் போது மணிப்பூரக சக்கரம், சுவாதிட்டாண சக்கரம் மற்றும் மூலாதாரச்சக்கரத்தில் தேவையான வேகத்தைக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது வயிற்றுப் பகுதியானது மேல் நோக்கி வேகமாகச் செல்லும்.
5. இந்த கபாலபதியை 6 முதல் 21 சுற்றுக்கள் வரை செய்யலாம்.

நன்மைகள்

1. நுரையீரல், மூச்சுக்குழாய்கள் சுத்தப் படுத்தப்படுகிறது.
2. மூச்சுத்தொல்லை, ஆஸ்துமா போன்ற அனைத்து நோய்களும் நீங்குகிறது.
3. மூளைச் செல்லிலுள்ள உயிரணுக்களை ஊக்கப்படுத்து கின்றன.
4. நரம்பு மண்டலம் முழுவதும் தூய்மையும் உறுதியும் பெறுகிறது.மனிதர்களின் சுவாசக்கணக்கு

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்கு
கூற்றை உதைக்கும் குறிஅது வாமே - திருமந்திரம்

பதிணென் சித்திர்களில் ஒருவராக விளங்கும் திருமூலர் தமது திருமந்திரத்தில் கூறியுள்ள செய்தி ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 சுவாசம் வீதம் நாள் ஓன்றுக்கு
21,600 சுவாசங்களா உள்வாங்கி வெளியிடுவதாக குறிப்பு.

நாசித் துவாரங்கள் வழியாக உட்செல்லும் காற்றை சித்தர்கள் அங்குலக் கணக்கில் அளந்துள்ளனர். வலது நாசித்துவாரம் வழியாக போகும் போது 12 அங்குலமும்,
இடது நாசி வழியாகப் போகும் போது 16 அங்குலமும், இரு துவாரங்களின் வழியே இணைந்து சுழுனையில் சஞ்சரிக்கும் போது 64 அங்குலமும் உட்செல்கிறது. இதே போன்று வெளியேசெல்லும் காற்றையும் அளந்துள்ளனர். அமர்ந்து இருக்கும் போது 12 அங்குலமும், நடக்கும் போது 16 அங்குலமும், ஓடும்போது 25 அங்குலமும், உறங்கும் போது 36 அங்குலமும், உடலுறவின் போது 64 அங்குலமும் வெளியாகின்றன. மனித உடலில் சேமிப்பில் இருக்கும் பிராணன் அவரவர் செயலுக்கேற்ப அழிகின்றது என்பதை முன்சொன்ன கணக்கு தெளிவாக்குகிறது.


சுவாசத்திற்கும் மனித ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 12 அங்குலம் சுவாசம் உள்ளே செலுத்தி 4 அங்குலம் வெளியே விட்டு மிதமுள்ள 8 அங்குலம்
உள்ளே உலவச் செய்தால் 120 ஆண்டுகள் ஒரு மனிதன் வாழ முடியும் என்பது சித்தர்கள் கண்டறிந்த உண்மை. எனவே தான் பிராணாயாமத்தை நம் முன்னோர்கள்
முறையாகப் பழகி வந்துள்ளனர்.

மனிதனின் வெற்றி தோல்விகளையும், சுவாசம் நிர்ணயம் செய்கின்றது என ஞானசர நூல் விளக்குகிறது.

1. இடது நாசியில் சுவாசம் நடக்கும் போது தாயின் உயிர்த்தன்மையின் செயல்பாடுகள் இயக்கத்துக்கு வரும் என்பது சித்தர்கள் கண்டுபிடிப்பு. எனவே இட நாடியின் சுவாசத்தை தாய் நாடி எனவும், பெண் நாடி எனவும், சந்திர நாடி எனவும், சந்திரகலை எனவும் அழைத்தனர். இட நாசியில் சுவாசம் நடைபெறும் போது அர்ச்சனை, குடமுழக்கு, திருமணம் போன்ற சுபநிகடிநவுகள் இயற்றிட உத்தமம்.

2. வலது நாசியில் சுவாசம் நடக்கும்போது தந்தையின் உயிர்ப்புத்தன்மையின் செயல்பாடுகள் நிகழும் நேரத்தை ஆண்நாடி எனவும், தந்தை நாடி எனவும், பிங்கலை எனவும், சூரிய நாடி எனவும், சூரியகலை எனவும் அழைத்தனர். இந்த நாடி செயல்படும்போது சங்கீதம், உபதேசம், கற்றல் ஆகிய பணிகளைச் செய்யலாம்.

3. சுழுமுனை, இரு நாசிகளிலும் சுவாசம் சமமாக ஓடும் போது இறைசிந்தனை, தியானம், பிராணயாமம் செய்வது நலம். பிறர் நலம் நாடி வேண்டினால் வெற்றி
உண்டாகும். இந்த சுழுமுனையை இறை நாடி எனவும், அலி நாடி எனவும், நடு நாடி எனவும் அழைத்தனர்.

ரேசகம் - உள் வாங்குதல்
பூரகம் - வெளி விடுதல்
கும்பகம் - உள்ளே நிறுத்துதல்

பிராணாயாமம் வகைகள்:

நாடி சுத்தி

செயல்முறை

1. முதலில் சித்தாசனம், வஜ்ராசனம், பத்மாசனம் இதில் ஏதாவது ஒரு ஆசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.

2. வலக்கையை சின் முத்திரையுடன் வலது முழுங்காலில் வைத்துக்கொள்ளவும். இது சூரிய நாடியில் ஆரம்பிப்பவர்களுக்கு, பொதுவாக இடக்கையை சின்முத்திரையில் வைத்து இட முழுங்காலில் வைக்கச் சொல்வார்கள், இது சந்திர நாடியில் ரம்பிப்பவர்கள்
முறை. எனவே குருவின் சொற்படி இதை தேர்வு செய்திட வேண்டும்.

3. இடக்கையை நாசிகா முத்திரையில் ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் விண்ணை நோக்கி ஆண்டிணா போன்று வைக்கவும்.

4. இடக்கை கட்டைவிரலை இடது மூக்கில் வைத்து இடது மூக்குத்துவாரத்தை அடைத்துக் கொள்ளவும். வலது மூக்குத்துவாரம் வழியாகக் காற்றை சீராக இழுக்கவும்.

5. பிறகு மூக்கை மோதிர விரலால் அடைத்துக் கொண்டு இடது மூக்குத்துவாரம் வழியாக காற்றை சீராக வெளியே விடவும். பிறகு அதே மூக்குத்துவாரம் வழியாகக்
காற்றை இழுத்து வலது மூக்கு துவாரம் வழியாக வெளிவிடவும்.

6. இது ஒரு சுற்று ஆகும். உள் இழுக்கும் மூச்சு நேரத்தைப் போல் வெளிவிடும் மூச்சு நேரம் சம நேரமாக இருக்குமாறு ஆரம்பகால பயிற்சியில் செய்வது நலம். பின்னர் குருவின் உபதேசப்படி சுவாசத்தை கூட்டியோ அல்லது குறைத்தோ எண்ணிக்கையை மாற்றிய மைத்துக் கொள்ளலாம். இது போன்று 5 முதல் 21 சுற்றுவரை செய்வது நலம்.

7. வைகறைப் பொழுதும், மாலை நேரமும் பயிற்சிக்கு உகந்த நேரம்.

நன்மைகள்
1. நாடிசுத்தி என்பது உடலில் உள்ள 72,000 நாடி நரம்புகளையும் தூய்மை செய்ய வல்லது.
2. மூளை மற்றும் உடல் செல்கள் புத்துணர்ச்சி பெறும்.
3. கண் ஒளி பெருகும்.
4. ஜீரணசக்தி அதிகரிக்கும்.
5. உடல் பொதுவாக இலகுவாக, லேசாக இருப்பதாக உணர்வு வரும்.

கும்பகம்

காற்றை கணக்குப்படி உடலினுள் நிறுத்துவது, தகுந்த குரு உபதேசப்படி அவர் மேற்பார்வையில் இதைப்பழக வேண்டும். இது கேவலகும்பகம், பூரணகும்பகம் என இரு வகைப்படும்.

வெளிக்கும்பகம் : காற்றை உடலுக்குள் இழுக்காமல் கணக்குப் படி காற்றை உடலுக்கு வெளியே நிற்க வைக்கும் கலை.

மூன்று மடக்குடைப் பாம்பு இரண்டு எட்டுள
ஏன்றி இயந்திரம் பன்னிரெண்டு அங்குலம் தான்
நான்றவிழ் முட்டை இரண்டையும் கட்டிட்டு
ஊன்றி இருக்க உடல் அழியாதே - திருமூலர்

உள்முகக் கும்பகம் - உள்ளே மூச்சை நிறுத்துவது
வெளிமுகக் கும்பகம் - வெளியே இருந்து காற்றை வாங்காமல் சில வினாடிகள் வெளியே இருப்பது

மூச்சை 16 மாத்திரை உள்ளிழுக்க வலது மூக்குத் துவாரத்தை அடைத்து, இடது மூக்குத்துவாரத்தை பயன்படுத்தவும்.

64 மாத்திரை மூல பந்தத்துடன் உள்ளே நிறுத்தி, பின் இடது மூக்கை அடைத்து, வலது மூக்குத் துவாரம் வழியே 32 மாத்திரை காலத்தில் வெளிவிடவும். மீண்டும் வலது நாசி வழியாக இடது நாசியை அடைத்து மூச்சை 16 மாத்திரை உள் இழுக்கவும், உள் இழுத்த மூச்சை 64 மாத்திரைகள் உள்ளே நிறுத்தவும். வல நாசி துளையை அடைத்து, இட நாசி வழியாக 32 மாத்திரையில் வெளிவிடவும், இது ஒரு கும்பகம் ஆகும். இவ்வாறு 12 அல்லது 21 சுற்றுகள் செய்யவும்.

வெளிக்கும்பகம்

16 மாத்திரை மூச்சை இழுத்து அதை 32 மாத்திரை அளவில் வெளியேவிட்டுவிட வேண்டும். உடனே மூச்சை உள் இழுக்காமல் 64 மாத்திரை அளவு அப்படியே மூச்சை வெளியே நிறுத்த வேண்டும். பிறகு 16 மாத்திரை அளவு மூச்சை உள் இழுத்து 32 மாத்திரை அளவு வெளிவிட்டு முன்சொன்னவாறு 64 மாத்திரை உள் இழுக்காமலே இருந்து - பிறகு மூச்சை நிதானமாக உள் இழுக்க வேண்டும்.

இதனை நாசி மாற்றி, மாற்றி செய்து வர வேண்டும் இப்படி வலது மூக்கு - இடது மூக்கு என மாற்றி செய்துவர வெளிக்கும்பகம் ஆகும். இவ்வாறு 12 அல்லது 21 சுற்றுகள் செய்யவும்.

உஜ்ஜயி - ( உஸ் என்ற ஒலியுடன் )
செயல் முறை

1. முதலில் சித்தாசனத்தில் தரை விரிப்பில் அமரவும்.

2. மூச்சை முழுவதுமாக வெளியேவிடவும், பிறகு இரு மூக்கு துவாரம் வழியாக மெல்ல மூச்சை உள் இழுக்கவும்.

3. உள்வரும் காற்றை மேல்வாய் அண்ணத்தினால் பாதிமூடி உணரும் வண்ணம் செய்து வரவும், உஸ் என்ற ஒலி தொண்டையில் உண்டாகும். கழுத்தை முன்புறம் வளைத்து ஜலபந்தம் செய்யவும்.

4. சிறிது நேரம் கழித்து தலைப்பகுதியை தளர்த்தி முச்சை வெளிவிடவும். இது ஒரு சுற்று ஆகும்.

5. இது போல 12 சுற்றுகள் செய்வது நலம்.

நன்மைகள்

1. தைராய்டு சுரப்பியை தூண்டுகிறது.
2. மூச்சுக் காற்று மண்டலம் சீராகிறது.
3. பிராணாயாமத்திற்கு தகுதியான சுவசா மண்டலத்தை உடலுக்குத் தருகிறது.

சிட்டாலி : - மூக்கு, நாக்கு, பிராணாயாமம்

செய்முறை

1. முதலில் சித்தாசனத்தில் அல்லது வஜ்ராசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.
2. கைகள் இரண்டையும் சின் முத்திரையில் முழங்கால் மேல் வைக்கவும்.
3. நாக்கின் ஒருபகுதி வாயின் வெளியே நீட்டி நீளவாக்கில் மடித்து நீண்ட குறுகலான குழாய்போல செய்யவும்.
4. மூச்சை, மடித்த நாக்கின் வழி உள் இழுத்து உட்புரத்தை ஈரக்காற்று குளிரவைப்பதை கவனிக்கவும். பிறகு நாக்கை உள் இழுத்து வாயை மூடவும்.
5. ஜலபந்தம் 5 வினாடி செய்தபின் இரண்டு மூக்குத்துவாரங்கள் வழியாக மூச்சை வெளியே விடவும். இருமூக்குத் துவாரங்களிலும் சூடான காற்று வெளியோறுவதை கவனிக்கவும்.
6. இதுபோல 6 முதல் 21 சுற்றுவரை செய்யலாம்.

நன்மைகள்
1. உடலுக்கு குளிர்சியைத் தரக்கூடியது.
2. தாகத்தைப் போக்கும்.
3. உடலில் உள்ள பித்த சுரப்பியை சீராக்கும்.

சித்தகாரி
நாக்கை கீழ்வளைத்துச் செய்யும் பிராணாயாமம்

செயல்முறை

1. முதலில் சித்தாசனம் அல்லது வஜ்ராசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.
2. வாயை சிறிது திறந்து நாக்கின் நுணியை முன் வரிசைப் பற்களைத் தொடுமாறு மடக்கிவைக்கவும்.
3. காற்றை வாயினால் உள்ளே இழுக்க வேண்டும். ஸ் ஸ் ஸ் என்ற சத்தம் உண்டாகும்.
4. ஜலபந்தம் செய்தபின்பு காற்றை இருமூக்குகள் வழியாக சீராக வெளியே விட வேண்டும்.
5. இதனை 6 முதல் 21 சுற்றுகள் வரை செய்யலாம்.

நம்மைகள்

1. வாயில் குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது.
2. உமிழ் நீர் சுரப்பிகள் கீழ், மேல் அண்ணச்சுரப்பிகளை சீர் செய்யும்.
3. நாவின் சுவை அரும்புகள் சீராகும்.
4. பசி, தாகம், சோம்பலை போக்கும்.
5. வாயில் நிகழும் முதல் ஜீரணத்தை சீராக்கும்.

செயல்முறை

1. முதலில் பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.
2. மூல பந்தம் செய்து கொள்ளவும்.
3. இருமூக்கு துவாரங்கள் வழியாக மூச்சைச் சாதராணமாக உள்ளே இழுக்கவேண்டும். மூச்சை வெளியே தள்ளும் போது மிக வேகமாகத் தள்ள வேண்டும்.
4. மூச்சை வெளித்தள்ளும் போது மணிப்பூரக சக்கரம், சுவாதிட்டாண சக்கரம் மற்றும் மூலாதாரச்சக்கரத்தில் தேவையான வேகத்தைக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது வயிற்றுப் பகுதியானது மேல் நோக்கி வேகமாகச் செல்லும்.
5. இந்த கபாலபதியை 6 முதல் 21 சுற்றுக்கள் வரை செய்யலாம்.

நன்மைகள்

1. நுரையீரல், மூச்சுக்குழாய்கள் சுத்தப் படுத்தப்படுகிறது.
2. மூச்சுத்தொல்லை, ஆஸ்துமா போன்ற அனைத்து நோய்களும் நீங்குகிறது.
3. மூளைச் செல்லிலுள்ள உயிரணுக்களை ஊக்கப்படுத்து கின்றன.
4. நரம்பு மண்டலம் முழுவதும் தூய்மையும் உறுதியும் பெறுகிறது.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு