வெற்றி கிடைக்க வேண்டுமானால் முதலில் தோல்வியை சந்திக்க வேண்டும்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 12:49 | Best Blogger Tips

Photo: இறைவன், மனிதர்களுக்கு போதுமான அறிவும், தைரியமும் கொடுக்கிறான். ஆம். குழந்தையாக இருக்கும்போது நடக்க தெரியாமல் இருந்தாலும், விடா முயற்சியால் நடக்க கற்றுக்கொள்கிறது குழந்தை. இதே விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் பலருக்கு கடைசிவரை இருப்பதில்லை.   

எப்படி வாழ்ந்தால் வாழ்நாள் இனிதாகும் என்றால்,    நடந்ததை பற்றி சிந்திக்ககூடாது அப்படி சிந்திப்பவன் முட்டாள். நடக்கபோவதை பற்றி யோசிக்ககூடாது அப்படி யோசிப்பவன் மூடன்,  நடப்பபது எதுவாக இருந்தாலும் அதை அமைதியாக ஏற்று வாழ்பவனே அறிவாளி. அவர்கள் நிச்சயம் வருவார்கள் முதலாளியாக.
  
ஆம்.  

குழப்பங்கள்,  பிரச்னைகள் ஏற்படும்போது அமைதியாக இருந்தாலே அந்த பிரச்னை தானாகவே நீங்கிவிடும். அமைதியாக இருக்கும் ஆழ்கடலில்தானே முத்து கிடைக்கிறது. அதுபோல அமைதியாக இருந்து வெற்றிபெறுவதுதான் நிரந்தர வெற்றி.
  
வெற்றி கிடைக்க வேண்டுமானால் முதலில் தோல்வியை சந்திக்கவேண்டும். தோல்வியே காணாமல் வெற்றிபெற்றால், பிறகு ஏதே ஒரு காரணத்தால் தோல்வி நேரும்போது, அதை தாங்கும் மனம் இல்லாமல் விபரீத முடிவுகளை எடுக்கும் அளவுக்கு மனதில் தேவை இல்லா எண்ணங்கள் ஏற்படும்.
  
முதலில் முயற்சிக்கும்போது  நீ தோல்வியை பெற்ற பிறகு வெற்றியை பெறு.  அதுதான் உன் வாழ்க்கைக்கு நிரந்தர வெற்றியை தரும் என்பார்கள் - வெற்றியை கண்ட அனுபவஸ்தர்கள்.

அமிர்தம் கிடைத்தால் வெற்றி. அதற்கு முன் விஷம் கிடைத்தது தேவர்களுக்கு. இதனால் தேவர்கள் தோல்வி அடைந்தார்கள் என்று சொல்ல முடியாதல்லவா.

கஷ்டம் இருந்தால் அதில் ஒரு நன்மை பிறக்கும். கெட்ட காலம் வந்தால்தான் நல்லகாலம் பிறக்கும். பாற்கடலில் அமிர்தமும் இருந்தது, விஷமும் இருந்தது. விஷம் வெளியேறிய பிறகுதான் தேவர்களுக்கு அமிர்தம் கிடைத்தது.   

பாற்கடலைபோல்தான் வாழ்க்கையும். நல்லது, கெட்டது இந்த இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை.   இருட்டில் பயப்படாமல் சென்றால்தான் வெளிச்சத்தை காணமுடியும்.   

நிரஞ்சனா
Copyright www.bhakthiplanet.com

வாழ்வின் இருள் நீக்கி வெளிச்சம் தரும் சுருட்டப்பள்ளி சிவன்! http://bhakthiplanet.com/2013/06/surutapalli-temple-article/
வாழ்வின் இருள் நீக்கி வெளிச்சம் தரும் சுருட்டப்பள்ளி சிவன்! http://bhakthiplanet.blogspot.in/2013/06/blog-post_19.html
இறைவன், மனிதர்களுக்கு போதுமான அறிவும், தைரியமும் கொடுக்கிறான். ஆம். குழந்தையாக இருக்கும்போது நடக்க தெரியாமல் இருந்தாலும், விடா முயற்சியால் நடக்க கற்றுக்கொள்கிறது குழந்தை. இதே விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் பலருக்கு கடைசிவரை இருப்பதில்லை.

எப்படி வாழ்ந்தால் வாழ்நாள் இனிதாகும் என்றால், நடந்ததை பற்றி சிந்திக்ககூடாது அப்படி சிந்திப்பவன் முட்டாள். நடக்கபோவதை பற்றி யோசிக்ககூடாது அப்படி யோசிப்பவன் மூடன், நடப்பபது எதுவாக இருந்தாலும் அதை அமைதியாக ஏற்று வாழ்பவனே அறிவாளி. அவர்கள் நிச்சயம் வருவார்கள் முதலாளியாக.

ஆம்.

குழப்பங்கள், பிரச்னைகள் ஏற்படும்போது அமைதியாக இருந்தாலே அந்த பிரச்னை தானாகவே நீங்கிவிடும். அமைதியாக இருக்கும் ஆழ்கடலில்தானே முத்து கிடைக்கிறது. அதுபோல அமைதியாக இருந்து வெற்றிபெறுவதுதான் நிரந்தர வெற்றி.

வெற்றி கிடைக்க வேண்டுமானால் முதலில் தோல்வியை சந்திக்கவேண்டும். தோல்வியே காணாமல் வெற்றிபெற்றால், பிறகு ஏதே ஒரு காரணத்தால் தோல்வி நேரும்போது, அதை தாங்கும் மனம் இல்லாமல் விபரீத முடிவுகளை எடுக்கும் அளவுக்கு மனதில் தேவை இல்லா எண்ணங்கள் ஏற்படும்.

முதலில் முயற்சிக்கும்போது நீ தோல்வியை பெற்ற பிறகு வெற்றியை பெறு. அதுதான் உன் வாழ்க்கைக்கு நிரந்தர வெற்றியை தரும் என்பார்கள் - வெற்றியை கண்ட அனுபவஸ்தர்கள்.

அமிர்தம் கிடைத்தால் வெற்றி. அதற்கு முன் விஷம் கிடைத்தது தேவர்களுக்கு. இதனால் தேவர்கள் தோல்வி அடைந்தார்கள் என்று சொல்ல முடியாதல்லவா.

கஷ்டம் இருந்தால் அதில் ஒரு நன்மை பிறக்கும். கெட்ட காலம் வந்தால்தான் நல்லகாலம் பிறக்கும். பாற்கடலில் அமிர்தமும் இருந்தது, விஷமும் இருந்தது. விஷம் வெளியேறிய பிறகுதான் தேவர்களுக்கு அமிர்தம் கிடைத்தது.

பாற்கடலைபோல்தான் வாழ்க்கையும். நல்லது, கெட்டது இந்த இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை. இருட்டில் பயப்படாமல் சென்றால்தான் வெளிச்சத்தை காணமுடியும்.


நிரஞ்சனா

Via bhakthiplanet