அழகுக்கு அழகு சேர்க்க என்னவெல்லாம் செய்யலாம்.

மணக்கால் அய்யம்பேட்டை | AM 12:32 | Best Blogger Tips
அழகுக்கு அழகு சேர்க்க என்னவெல்லாம் செய்யலாம்.


முகச்சுருக்கம், முகப்பருக்கள் இருந்தால் ஆப்பிள் துண்டை தோலுரித்து மசித்து அத்துடன் தேன் கலந்து முகத்தில் பூசி ஊறிய பிறகு முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும். நல்லெண்ணையுடன் முட்டையின் வெள்ளைக் கரு கலந்து பருக்களின் மீது பூசினால் பரு மறையும். வெயிற்காலங்களில் வேனிற்கட்டி வருவதுண்டு. அதிக உஷ்ணத்தினால் இது வருகிறது. இந்த கட்டியை போக்க அவரி இலையையும் அல்லி இலையையும் சமமாக எடுத்து அழசி கழுவிய நீரில் அரைத்து பூசினால் கட்டி உடைந்துவிடும்.

நெல்லிக்காய் கிடைக்கும் காலங்களில் உப்புப் போட்டு வேகவைத்து வெயிலில் உலர்த்திக் கொள்ளுங்கள். அதை சாம்பார், கூட்டு, சட்னி ஏதாவதொன்றில் போட்டு தினமும் சாப்பிட்டு வந்தாள் தோல் சுருக்கம் வருவது தள்ளிப்போகும். முகத்தில் அதிக முடியுள்ள பெண்கள் சோப்பை நன்றாக நுரை வரும் வரை தேய்த்து அந்த நுரையை உதட்டின் மேல் மற்றும் தாடையில் தடவி ப்யூமிங்கல் கொண்டு மெதுவாக தேய்த்தால் முடி மெதுவாக உதிர்ந்துவிடும்.

வெள்ளரி துண்டுகளை முகத்தில் கண்களுக்கருகில் தேய்த்தால் கண்கள் குளிர்ச்சியடையும். முகத்தில் தடவினால் கருப்புக்கோடுகள் மறையும். தக்காளி நறுக்கும் போது ஒரு துண்டை எடுத்து முகத்தில் அழுத்தி பூசவேண்டும். 1 மணி நேரத்திற்கு பிறகு முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும். முகப்பருவிற்கு துளசியையும், மஞ்சளையும் அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுகி வர முகப்பரு தோன்றாது.

முகத்தில் வெண்மையான தேமல் இருந்தால் ஆவாரை வேரை எலுமிச்சம் சாறு கலந்து அரைத்து பூசினால் வெண்மை தேமல் மறையும். கடுகு, எண்ணெய், ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றைச் சரிவிகிதத்தில் கலந்து உடம்பில் பூசி ஒரு மணி நேரம் வரை ஊறிய பிறகு குளித்தால் தோலில் உள்ள சுருக்கங்கள், மாசு, மருக்கள் நீங்கி விடும்..


மஞ்சளுடன் சந்தனத்தை கலந்து முகும் முழுவதும் பூசி காய்ந்த பின் ஈர பஞ்சினால் துடைத்து வர 15 நாட்களில் பிரகாசமான முகத்தை பெறலாம். ஆலிவ் எண்ணெயுடன் கருஞ்சீரகத்தை பொடி செய்து அதை முகம் முழுவதும் தடவி பத்து நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் அழகு பெறும். பருக்களினால் ஏற்படும் தழும்பு மறைய எலுமிச்சம் பழச்சாற்றில் சமஅளவு தேங்காய் எண்ணெயும் சந்தனமும் கலந்து இரவில் பூசி வந்தால் தழும்பு மறையும். முகச்சுருக்கம், முகப்பருக்கள் இருந்தால் ஆப்பிள் துண்டை தோலுரித்து மசித்து அத்துடன் தேன் கலந்து முகத்தில் பூசி ஊறிய பிறகு முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும். நல்லெண்ணையுடன் முட்டையின் வெள்ளைக் கரு கலந்து பருக்களின் மீது பூசினால் பரு மறையும். வெயிற்காலங்களில் வேனிற்கட்டி வருவதுண்டு. அதிக உஷ்ணத்தினால் இது வருகிறது. இந்த கட்டியை போக்க அவரி இலையையும் அல்லி இலையையும் சமமாக எடுத்து அழசி கழுவிய நீரில் அரைத்து பூசினால் கட்டி உடைந்துவிடும்.

நெல்லிக்காய் கிடைக்கும் காலங்களில் உப்புப் போட்டு வேகவைத்து வெயிலில் உலர்த்திக் கொள்ளுங்கள். அதை சாம்பார், கூட்டு, சட்னி ஏதாவதொன்றில் போட்டு தினமும் சாப்பிட்டு வந்தாள் தோல் சுருக்கம் வருவது தள்ளிப்போகும். முகத்தில் அதிக முடியுள்ள பெண்கள் சோப்பை நன்றாக நுரை வரும் வரை தேய்த்து அந்த நுரையை உதட்டின் மேல் மற்றும் தாடையில் தடவி ப்யூமிங்கல் கொண்டு மெதுவாக தேய்த்தால் முடி மெதுவாக உதிர்ந்துவிடும்.

வெள்ளரி துண்டுகளை முகத்தில் கண்களுக்கருகில் தேய்த்தால் கண்கள் குளிர்ச்சியடையும். முகத்தில் தடவினால் கருப்புக்கோடுகள் மறையும். தக்காளி நறுக்கும் போது ஒரு துண்டை எடுத்து முகத்தில் அழுத்தி பூசவேண்டும். 1 மணி நேரத்திற்கு பிறகு முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும். முகப்பருவிற்கு துளசியையும், மஞ்சளையும் அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுகி வர முகப்பரு தோன்றாது.

முகத்தில் வெண்மையான தேமல் இருந்தால் ஆவாரை வேரை எலுமிச்சம் சாறு கலந்து அரைத்து பூசினால் வெண்மை தேமல் மறையும். கடுகு, எண்ணெய், ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றைச் சரிவிகிதத்தில் கலந்து உடம்பில் பூசி ஒரு மணி நேரம் வரை ஊறிய பிறகு குளித்தால் தோலில் உள்ள சுருக்கங்கள், மாசு, மருக்கள் நீங்கி விடும்..


மஞ்சளுடன் சந்தனத்தை கலந்து முகும் முழுவதும் பூசி காய்ந்த பின் ஈர பஞ்சினால் துடைத்து வர 15 நாட்களில் பிரகாசமான முகத்தை பெறலாம். ஆலிவ் எண்ணெயுடன் கருஞ்சீரகத்தை பொடி செய்து அதை முகம் முழுவதும் தடவி பத்து நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் அழகு பெறும். பருக்களினால் ஏற்படும் தழும்பு மறைய எலுமிச்சம் பழச்சாற்றில் சமஅளவு தேங்காய் எண்ணெயும் சந்தனமும் கலந்து இரவில் பூசி வந்தால் தழும்பு மறையும்.
 
Via மைலாஞ்சி ( Mylanchi )