ஹிந்து மதத்தின் வரலாறு சுருக்கமாக

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:15 | Best Blogger Tips
Image result for ஹிந்து மதத்தின் வரலாறு சுருக்கமாக

இன்று சிலர் ஹிந்து மதம் என்றால் என்ன? என்று கேட்கிறார்கள்.
அவர்களுக்காக இந்த பதிவு
-
மகாபாரத காலத்திலிருந்து துவங்குவோம்.
-
மகாபாரத காலத்தில் இந்தியாவிற்கு என்ன பெயர்? பாரதம்
-
பாரதத்தின் எல்லைகள் எவை?
மேற்கில் காந்தாரம். தற்போதைய ஆப்கானிஸ்தான். கிழக்கில் வங்கம்.தற்போதைய பங்களாதேஷ்
தெற்கில் பாண்டிய தேசம்.தற்போதைய தமிழ்நாடு. வடக்கில் இமயம். தற்போதைய நேபாளம்
இதன் எல்லைகள் இவைதான் என்பது நமக்கு எப்படி தெரியும்?
மகாபாரத்தில் இவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
-
பாரதம் முழுவதையும் ஒரே அரசன் ஆட்சி செய்தானா?
பாரதம் என்ற பெரும் நிலப்பரப்பிற்குள் பல சிறு தேசங்கள் இருந்தன.மகாபாரத யுத்தத்தில் கலந்துகொண்ட அரசர்களும் அவர்களது தேசங்கள் பற்றியும் பாரதம் கூறுகிறது.
அப்படியானால் ஒரே நாடு.ஒரே அரசர் இல்லையா?
உண்டு.
Image result for ஹிந்து மதத்தின் வரலாறு சுருக்கமாக
இந்த பாரத தேசத்தை முழுவதும் ஆளும் தகுதி உள்ளவன் சக்கரவர்த்தி.அஷ்வமேத யாகம் என்ற யாகம் நடத்தக்கூடிய அளவுக்கு யாருக்கு வலிமை உண்டோ அவர்தான் பாரதம் முழுவதற்கான சக்கரவர்த்தி.
யுதிஷ்டிரர் உட்பட பல அரசர்கள் அஷ்வமேத யாகம் புரிந்து சக்கரவர்த்திகளாக ஆகியுள்ளார்கள்.
-
பாரதம் என்ற மிகப்பெரிய நாடு.அதற்குள் பல சிறிய நாடுகள்.
பாரதத்தை ஆள ஒரு சக்கரவர்த்தி. சிறிய தேசங்களை ஆள பல அரசர்கள்.
இது தான் பண்டைய இந்தியா
-
பாரதத்தின் மதம் எது?
-
ஒவ்வொரு தீர்க்கதரிசிகளும் ஒரு மதத்தை உருவாக்கினார்கள்.
புதிய மதங்களை உருவாக்குதற்கான சுதந்திரம் எல்லா காலத்திலும் இங்கு உண்டு.
மகாபாரத காலத்திலேயே பல நம்பிக்கை கொண்டவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
இதுபற்றி பகவத்கீதையில் கிருஷ்ணர் கூறியுள்ளார்.
-
ஆதிசங்கர் வாழ்ந்த காலத்தில் வேதத்தை பின்பற்றிய பிலபலமான மதங்கள் 78 ம். வேதத்தை சாராத புத்த மதத்தில் பல பிரிவுகளும்,சமண மதத்தில் பல பிரிவுகளும் இன்னும் பல மதங்களும் பாரதம் முழுவதும் பரவியிருந்தன.
ஆதிசங்கரர் 78 மதங்களை இணைத்து ஆறு மதங்களாக உருவாக்கினார்.
புதிய மதங்கள் உருவாவதும்,பழைய மதங்கள் இணைவதும் இங்கு இயல்பான ஒன்று
-
ஆதிசங்கரர் வாழ்ந்த காலத்தில் பாரத தேசத்திற்கு வெளியே வாழ்ந்த மக்கள் யார்?
காந்தார தேசத்திற்கு வெளியே பார்சி மதத்தை பின்பற்றிய பாரசீகர்கள் அதிக அளவில் வாழ்ந்தார்கள்.
யூதர்கள் அதிக அளவில் வாழ்ந்தார்கள்.
-
Image result for ஹிந்து மதத்தின் வரலாறு சுருக்கமாக
பாரசீகர்கள் பாரததேசத்தை சிந்துநதியை மையப்படுத்தி அழைத்தார்கள்.
சிந்துஸ்தான் என்று அழைத்தார்கள் பின்பர் அது மருவி ஹிந்துஸ்தான் என்று ஆனது.
-
பாரசீகர்கள்,யூதர்களுக்கு ஒரு மதம்தான் இருந்தது.
பாரததேசத்தில் பல மதங்கள் இருந்தன.
அவைகள் பற்றி பாரசீகர்களுக்கு தெரியாது. பொதுவாக அனைவரையும் ஹிந்துக்கள் என்றும் அவர்கள் பின்பற்றும் மதத்தை ஹிந்துமதம் என்றும் அழைத்தார்கள்.
பாரசீகர்களின் பார்வையில் புத்தமதம்,சமண மதத்தை பின்பற்றியவர்களும் ஹிந்துக்கள்தான்.
ஆப்கானிஸ்தானில் அந்த காலத்தில் புத்த மத்தினரே அதிகம் வாழ்ந்தார்கள்.முஸ்லீம்களால் அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அங்கு ஒரு மலை இருக்கிறது.அந்த மலைக்கு ஹிந்துகுஷ் என்றே பெயர்.ஹிந்துக்கள் கொலை செய்யப்பட்ட மலை என்று பெயர்.
-
பாரசீகர்கள்,முகமதியர்கள்,யூதர்களின் பார்வையில் பாரததேசத்தின் பெயர் ஹிந்துஸ்தான்.
பாரசீகர்கள்,முகமதியர்கள்,யூதர்களின் பார்வையில் ஹிந்துஸ்தானில் வாழ்ந்த மக்கள் ஹிந்துக்கள்
பாரசீகர்கள்,முகமதியர்கள்,யூதர்களின் பார்வையில் ஹிந்துஸ்தானின் மதம் ஹிந்துமதம்
-
முஸ்லீம்கள் ஹிந்துஸ்தானிற்குள் வந்தபோது அவர்கள் பார்வையில் எல்லோருமே அவர்களுக்கு எதிரிகளாகவும்,காபிர்களாகவும், கொலைசெய்யப்பட வேண்டிவர்களாகவும்,அவர்களது வழிபாட்டு தலங்கள் அழிக்கப்பட வேண்டிவையாகவுமே தெரிந்தது.அவர்களது மதம் அதைத்தான் போதிக்கிறது
எனவே முஸ்லீமாக மதம் மாறாதவர்கள் அனைவரும் கொலை செய்யப்படவேண்டும்,அவர்கள் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் இடிக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்துடன் ஹிந்துஸ்தானிற்குள் வந்தார்கள்.
அவர்களால் ஹிந்துஸ்தானில் உள்ள அனைவரும் பாதிக்கப்பட்டார்கள். புத்தமதம்,சமணமதம்,வேதமதத்தை பின்பற்றிவர்கள் என்று எல்லோரும் பாதிக்கப்பட்டார்கள்.
-
புத்த மதத்தினர் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள் சிலர்.திபெத்,பூடான்,இமாச்சல் போன்ற மலைவாழ் பகுதிகளுக்கு தப்பிச்சென்றார்கள்.
பிராமணர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள் சிலர் தென்இந்தியா பக்கம் வந்தார்கள்.
இது தவிர உயிருக்கு பயந்து மதம் மாறியவர்கள் ஏராளம்
பெண்கள் அடிமைகளாக பிடிக்கப்பட்டு வெளிநாட்டு சந்தைகளில் ஏலம் விடப்பட்டார்கள்.
மதம் மாற மறுத்த ஆண்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டார்கள்.
பொருட்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது.
ஹிந்துக்களின் தலைகள் மலைகள் அளவுக்கு பல்வேறு இடங்களில் குவிக்கப்பட்டன.
-
இப்படிப்பட்ட கொடூரக்கொலை உலகம் இதுவரை சந்தித்ததில்லை.
-
ஐநூறு ஆண்டுகால முகமதியர்களின் கொடுமையால் வடஇந்தியாவில் பெரும்பாலான இடங்களில் இந்துக்களே இல்லை.
அதன் பின்னர் வடஇந்தியாவில் பல்வேறு மகான்கள் தோன்றினார்கள்.மதம்மாறிய ஹிந்துக்களை மீண்டும் படிப்படியாக ஹிந்து மதத்திற்கு கொண்டு வந்தார்கள்.அவர்களின் கடின முயற்சியால் ஓரளவு ஹிந்துக்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
-
ஹிந்துமதம் என்ற பொதுப்பெயரை நாம் உருவாக்கவில்லை. நம்மை அழிக்க நினைத்தவர்கள் அதை உருவாக்கினார்கள்.
-
ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர் செயல் உண்டு என்பது தான் விதி.
காபிர்கள் என்ற முத்திரையோடு உயிரிழந்த கோடிக்கணக்கான பாரத மக்களின் சாபம் இன்னும் நீங்கவில்லை.
அது நீங்கும்வரை நாம் ஹிந்துக்களாகவே இருப்போம்.அதன் பிறகு வேண்டுமானால் வேறு பெயரை நாம் வைத்துக்கொள்ளலாம்.அதற்கு முன்பு யாராவது ஹிந்துக்கள் என்ற பெயரை மாற்ற முயற்சிசெய்தால் உயிரிழந்த கோடிக்கணக்கான மக்களின் சாபம் அவர்களை தண்டிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
ஹிந்து என்பது நாம் கொடுத்த மதம் அல்ல. சைவர்களுக்கு சைவம் என்ற பெயர் இருக்கிறது. வைணவர்களுக்கு வைணவன் என்று பெயர் உள்ளது. சீக்கியர்களுக்கு சீக்கிய மதம் உள்ளது. இப்படி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கிறது.அப்படி இருக்கும்போது ஹிந்துமதம் என்ற பெயரை ஏன் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.
ஹிந்துமதம் என்ற ஒரு தனியான மதம் இல்லாதபோது அந்த பெயரை ஏன் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்?
-
நமது நாட்டில் மதச்சண்டை என்பது எல்லா காலத்திலும் இருந்துள்ளது.ரிக் வேத காலத்திலேயே அந்த சண்டை இருந்துள்ளது.ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி.
இறைவன் ஒருவன்தான் மகான்கள் அவரை பல பெயர்களில் அழைக்கிறார்கள்.
இறைவன் ஒருவன்தான் அவனை அடையும் பாதைகள் பல. ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு பாதை.
இந்த கருத்து மிகமிக பழைய காலத்திலிருந்தே இந்தியாவில் இருந்து வந்துள்ளது.
அதனால்தான் ஒரே ஊரில் பலர் பல மதங்களை பின்பற்றினாலும் அமைதியாக வாழ முடிகிறது.
எந்த மகானாக இருந்தாலும்,அந்த மதத்தை பின்பற்றுபவராக இருந்தாலும் மேலே கூறப்பட்டுள்ள கருத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
உன்னுடைய பாதை வேறு,என்னுடைய பாதை வேறு.
உன்னுடைய வழிபாடு வேறு என்னுடைய வழிபாடு வேறு
ஆனால் இந்த உலகத்தில் இறைவன் ஒருவன்தான்.என்னைப்படைத்த அதே இறைவன்தான் உன்னையும் படைத்திருக்கிறார். எனக்கு ஒரு வழியைக்காட்டி இறைவன் உனக்கு வேற வழியைக் காட்டியிருக்கிறான் என்ற கருத்து சைவர்கள்,வைணவர்கள்,சாக்தர்கள்,சீக்கியர்கள் என்று எல்லோரிடமும் ஒரேபோல உள்ளது.
இதுதான் இந்தியாவின் மதம்.
மதம் என்றால் என்ன? நம்பிக்கை
இந்தியாவின் நம்பிக்கை என்ன?
இறைவன் ஒருவன்தான்.பாதைகள் வேறு வேறு.
இதுதான் ஹிந்துமதம்.
ஹிந்து மதம் என்ற உடன் தனியான வழிபாடு,சடங்குள்,கடவுள் என்று எதுவும் இல்லை.
இறைவன் ஒருவன்தான்.பாதைகள் வேறு வேறு என்று யாரெல்லாம் நம்புகிறார்களோ அவர்கள் எல்லாம் ஹிந்துக்கள்.
அவர்கள் சினை வழிபடலாம்,விஷ்ணுவை வழிடலாம்,காளியை வழிபடலாம், மேலான ஒளியை வழிபடலாம் எப்படி இருந்தாலும் அவர்கள் அனைவரும் நம்பிக்கையால் ஹிந்துக்கள்.
-
எனது மதம்தான் உயர்ந்தது. எனது கடவுள்தான் உயர்ந்தவர். எனது பாதைதான் உயர்ந்தது.மற்றது எல்லாமே தாழ்ந்தது.மற்ற வழிபாடுகள் தாழ்ந்தது.பிற பாதைகள் தாழ்வானவை அல்லது தவறானவை என்று யாரெல்லாம் நினைக்கிறார்களோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.மூடநம்பிக்கை உடையவர்கள்.கொள்கை வெறி பிடித்தவர்கள்.அவர்களை நாம் அலட்சியப்படுத்திவிட வேண்டும்
-
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஹிந்து என்பது யாரைக்குறிக்கும்? என்ற கேள்வி ஆட்சியல் இருந்தவர்களிடம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் அதற்கு ஒரு தெளிவாக விளக்கத்தை கொடுத்துள்ளார்கள்.
இந்தியாவில் வசிக்கும் மக்களில் முஸ்லீம்கள்,கிறிஸ்தவர்கள்,பார்சிகள்,யூதர்கள் அல்லாத அனைவரும் ஹிந்துக்கள்.
-
இதை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி யாரெல்லாம் ஹிந்துக்கள்?
முஸ்லீம்கள்,கிறிஸ்தவர்கள்,பார்சிகள்,யூதர்கள் தவிர வேறு எல்லோரும் ஹிந்துக்கள்
-
ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருந்தால் இந்தியாவை நம்மால் கைப்பற்ற முடியாது என்ற எண்ணத்தில் வெளிநாட்டு சக்திகள் செயல்பட்டு வருகின்றன.
அவர்களின் எண்ணங்களை இங்குள்ள அரசில்வாதிகள்மூலம் செயல்படுத்த நினைக்கிறார்கள்.
அதாவது சைவர்கள் ஹிந்துக்கள் அல்ல. வைணவர்கள் ஹிந்துக்கள் அல்ல. தென்னிந்தியாவில் வசிப்பவர்கள் ஹிந்துக்கள் அல்ல.சிறு தெய்வங்களை வணங்குபவர்கள் ஹிந்துக்கள் அல்ல.ஹிந்துதமதம் என்பது பிராமணமதம் இதுபோல பொய் பிரச்சாரத்தை இப்போது முன்னெடுத்துள்ளார்கள்.
இது ஒருபோதும் வெற்றி பெறக்கூடாது
ஹிந்துக்கள் தனித்தனியாக பிரிந்தால் அவர்களை வீழ்த்துவது மிக எளிது.
இந்தியாவை ஒருங்கிணைப்பது இந்துமதமாகும்.
இந்து மதம் பலவீனமானால் இந்தியா பலவீனமாகும்.
இந்துமதம் பல பிரிவுகளா பிரிந்தால் இந்தியா பல துண்டுகளாக பிரிந்துவிடும்
இந்துவின் எழுர்ச்சி இந்தியாவின் எழுச்சி
இந்து மதத்தின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சி
-
இந்தியாவில் உள்ள அனைவரும் ஹிந்துமதத்தின் மூலம் ஒன்றுபடுவோம். எதிரிகளை வீழ்த்துவோம்
-
சுவாமி வித்யானந்தர்-குருஜி (12-1-20120)


நன்றி இணையம்