இந்திய பொருளாதாரம் வீழுமா? அல்லது வாழுமா?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:53 | Best Blogger Tips
Image may contain: 5 people, people standing and suit

இப்படி மீடியா ஜோசியம் சொல்லிக்கொண்டு இருக்கும்போது, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், மோடிக்கு Recession உம் Positive Possession தான் என்று பாய்ந்துள்ளார்.

இன்று உலகமே disinvestment செய்துகொண்டிருக்கும்போது இந்தியாவில் 70 ஆண்டுகளாக இல்லாத கார்ப்பொரேட் tax வெளியே 32% என்று சொன்னாலும் அது 51.6% வரை மோசமாக சென்றது. அது இன்று கிட்டத்தட்ட பாதி என்று று 27% மாக மாற்றி உலகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அதுவும் இன்று உலகமே மீண்டும் ஒரு Recession ( GDP வளர்ச்சி < 0.0) நோக்கி உலக பொருளாதாரம் செல்லும்போது.
இந்திய பொருளாதாரமும் இந்த முறை Recession வரை செல்லாவிட்டாலும் அதன் வளர்ச்சி 3% அல்லது 2% சதவீதத்தை அடையும் 🐐 என்று எதிர்பார்க்கலாம். ஆனாலும் இது மிகப்பெரிய வளர்ச்சியின் அடித்தளம். ரிஸசன் வந்தால் கட்டுப்பாடுகளை குறைத்து விடுவஅர் என்று கனவுகண்ட Black Money Holders, எதிர்பார்த்த மோடி மேலும் அதை Single ID System மூலம் துரிதபடுத்துதல் மூலம் உச்சப்படுத்தி உள்ளார். அதே வேலையில் மறுபுறம் Black Money குறைக்கும் கார்ப்பொரேட் கலாச்சாரத்திற்கு ஊக்கம் தருகிறார்.

ஏன்?

எப்படி?

🔪 மோடியின் அரசு 70 வருடங்களாக செய்யப்படாத சீர் திருத்தத்தை இப்போது தொடர் வரியான GST மூலம் சீர் செய்யப்படும்போது கிட்டத்தட்ட 60% கம்பெனிகள் அரசை ஏமாற்றுதல் மூலம் செய்து வந்த திருட்டுக்கள் குறைக்கப்பட்டுள்ளது. சேல்ஸ் டேக்ஸே கட்டாத கம்பெனிகள் பல இப்போது காணாமல் போய்விட்டது என்றால் அந்த தொழில் கருப்போ, வெள்ளையோ வீழ்கிறது என்பதுதான் உண்மை. அதன் பாதிப்பு இருக்கும், ஆனால் நல்லதே!

🔪 மானிய ஏமாற்றலை இந்த அரசு குறைத்து விட்டது அல்லது அப்படிப்பட்ட ஒரு மானியத்தை எடுத்தே விட்டது. (.ம் திருப்பூரில் மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு ஆபீஸ் திறந்து அங்கு ஏற்றுமதி செய்வது போல் குப்பைகளை ஏற்றுமதி செய்து, அதை கணக்கில் காட்டி ஊக்கத்தொகை பெற்றது இன்று அது இல்லை).

ஏற்றுமதிக்கு அரசு கொடுக்கும் ஊக்கத்தகை இலாபமாக வந்தால் போதும் என்று இயங்கிய export கம்பெனிகள் பல அந்த மானியம், அந்த மானியம் நிறுத்தப்பட்டவுடன் காணாமல் போனது. இந்த வியாபாரஙகள் முறையாக வரி செலுத்திய மற்ற இந்திய கம்பெனிகளுக்கு பாதி வரும், மீதி பங்களாதேசுக்கு போகும். இன்று காணாமல் பல அட்ரஸ் எல்லாத கம்பெனிகள், இது போன்ற ஆயிரக்கணக்கான கோடிகள் மூலம் நம் வரிப்பணம் சேமிக்கப்பட்டுள்ளது

அதனால் திருடர்கள் தொழில் இழந்துள்ளனர். தொழில்கள் பாதிப்பு பாதிப்புத்தானே ஆனால் நல்லதே!

🔪 UPA ஆண்ட அரசில் விவசாயிகளுக்கு மிகப்பெரும் யூரியா தட்டுப்பாடு இருந்தது. இன்று இல்லையே, ஏன்? அது எங்கே போனது?

அன்று பெரும்பாலான யூரியா மூட்டைகள் பெரிய தொழில் சாலைகளுக்கு விவசாயிக்கு கொடுக்க வேண்டிய மானியத்தில் திசை திருப்பி திருடினார்கள். அந்த மானிய யூரியாவில் இந்த அரசு வேப்பெண்ணையை கலக்கியது. இப்போது அந்த வேப்பெண்ணை கலக்கிய யூரியா தொழிற்சாலைகளுக்கு பயன்படாமல் போக யூரியா தட்டுப்பாடு குறைந்தது, வருடம் 40,000 கோடிக்கு மேல் கொடுக்கும் அரசு மானியம் சரியான கைகளுக்கு இன்று சென்று சேர்கிறது. அதனால் யூரியாவை திருடி தொழில் செய்தவர்களின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நல்லதே!

🔪 சமையல் சிலிண்டர்கள் கிடைப்பது என்பது பெரிய விஷயமாக இருந்தது, ஏன்? அதில் வரும் மானியத்தை பலர் தவறாக பயன்படுத்தினர். அதை எடுத்து ஹோட்டல்களுக்கு விற்றவர்கள், கார்களுக்கு கொடுத்த திருடர்களுக்கு இன்று அந்த வாய்ப்பு போய்விட்டது. ஆதார் இணைக்கப்பட்டு நேரடியாக அந்த மானியம் இப்போது அந்த மானிய தொகை கொடுக்கப்படுவதால், அந்த திருட்டு தொழில் செய்த திராவிடர்கள் பலருக்கு இன்று மோடி மிகப்பெரிய விரோதி

ஏனெனில் திருட்டு தொழில் பாதிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் 90% மக்கள் இன்று தட்டுப்பாடு இல்லாமல் சிலிண்டர்கள் பெறுகிறார்கள், வியப்பாக இல்லை?

இப்படி பல தொழில்கள் மூலம் திருடி தொழில் செய்தவரகளை விட கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றவன் பல மடங்கு மேல், நேர்மையானவன்.

இது போன்ற சீர்கெட்டுப்போன சீர் திருத்தம் செய்யும்போது அதன் பாதிப்புகள் தொழில் நசிவது போல தோன்றும். அதாவது நம் உடம்பு சரியில்லாதபோது மருத்துவர்கள் கொடுக்கும் மருந்து 💊கசக்கத்தான் செய்யும் அது போலவே இது.

அது மட்டுமல்ல, 2002, 2008 ஆம் ஆண்டுகளில் இது போன்ற Recession வந்த போது அது இந்தியாவை தாக்கவில்லை, ஏனெனில் மேற்சொன்னது போல பல திருட்டு வழிகளில் சம்பாதித்த காசை ரியல் எஸ்டேட்டுகளிலும், தவறான தொழிகளிலும் முதலீடு செய்ததால் மக்களிடம் பணப்புழக்கம்

 💰 அதிகமாக இருந்ததாலும், கள்ள நோட்டுக்கள் (FCIN) புழக்கத்தாலும் நம் பொருளாதார ஆணிவேர் பாதிக்கப்பட்டது, இன்று இவைகள் கட்டுப்படுத்தலால் அந்த FCIN, Black Money புழக்கம் குறைந்தால், இந்திய பொருளாதாரம் 2% வரை கூட வீழலாம். அது தற்காலிகமானதே. ஆனால் பாதிக்கப்படுவது திருடர்களே!

அது மட்டுமில்லாமல் கள்ள நோட்டுக்கள் புழக்கம் மிக அதிகம், அதனால் பண 💰 புழக்கம் அதிகம் ஆனால் பணவீக்கமும் அதிகமானது. (பொருளாதார அடிப்படை தெரிய எனது மற்ற பதிவுகளை படிக்கவும்)

ஆனால் இதை நம்மை போன்றவர்கள் உலக பொருளாதாரமே வீழ்ந்துவிட்டதற்கு மோடி என்ன செய்ய முடியும் என்று சொல்லலாம், ஆனால் மோடி வித்தியாசமானவர், இந்த அரசு திறமையானது. உலகமே 🌏 வீழ்ச்சியில் இருக்க, சீனா 28 வருடங்களில் மிக மோசமான ஒரு நிலையை அடையும் போது அந்த முதலீடுகள் பெரும்பாலும் எங்கும் முதலீடில்லாமல் வாய்ப்பில்லாம காத்திருப்பார்கள் தொழில் அதிபர்கள்

அவர்களை எப்படி இன்று இந்தியா 🇮🇳 பயன் படுத்த போகிறது என்று சில உதாரணமாக கொடுக்கிறேன்.

1 நேற்றுவரை 51.6% வரை லாபத்திற்கு வரியாக கட்டிய தொழில் அதிபர்கள், சமீபத்திய கார்ப்பொரேட் மிகப்பெரிய வரி குறைப்பில் அது கிட்டத்தட்ட 27% சதவீதமாக குறைந்துள்ளது. இது உலக அளபில் சீனாவிற்கு மாற்று தேடும் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு. மேற்சொன்ன பல தவறான வழிகளை கையாளாமல் நேர்மையாக தொழில் செய்ய இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

2 ஆனால் உடனே அந்த முதலீடுகள் வருமா? அதற்காகத்தான்
புதிய தொழில்களை தொடங்கி அக்டோபர் 2023 க்குள் உற்பத்தியை தொடங்கும் தொழில்களுக்கு 15% வட்டி வாய்ப்பு என்பது உடனே முதலீடு செய்பவர்களுக்கு மட்டும் அது சாத்தியமாகிறது எனும்போதில் உலக முழுவதும் உள்ள நல்ல முதலீட்டுக்காக காத்திருக்கும் 🎸தொழில் அதிபர்களுக்கும், சீனாவிற்கு மாற்று தேடுபவர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். இது எப்படிப்பட்ட வலை என்றால், சார் இந்த ஒரு வாரத்துக்குள் அபார்ட்மெண்ட் புக் செய்தால் 65" TV, 6.5 சவரன் நகை, 6.5 லட்சம் மதிப்பிளான kitchen interior என்பது போல எளிதில் ஆசையை தூண்டக்கூடிய offers.

3 இந்தியாவின் ஜாதகப்படி அதன் ஜாதகம் மிக மோசமான நிலையில் கடந்த 57 வருடம் இருந்த்தது. நமக்கு யோகாதிபதியான சனி 2014 க்கு பின் மாற்றம் பெற்று 2020 ஜனவரியில் நடக்கின்ற சனி பெயர்ச்சி பின் மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி இந்தியா செல்லும். அது அடுத்த 15 ஆண்டுகள் தொடரும் என்பதால் 🇮🇳 ஜெய் ஹிந்த்!

4 இந்திய பொருளாதாரம் மேற்சொன்ன சீர்ந்திருத்தத்தில் ஒரு பின்னடைவை சந்திக்கும் இந்த வேளையில், இந்த வருடம் மழைப்பொழிவு  மிக நன்றாக உள்ளது, அது விவாசாய் உற்பத்தியை அதிகரித்து, GDPயின் சேதாரத்தை காக்கும். அது மட்டுமல்ல, நதி நீர் இணைப்பு போன்ற திட்டங்கள் விவசாயத்தை மேலும் ஊக்குவிக்கும். அது இந்தியாவின் மிகப்பெரிய லாபம் ஈட்டும் தொழிலாக மாறுகின்ற காலம் வெகு தொலைவில் இல்லை.. (அதனால்தான் நான் என் குலதொழிலான விவசாயம் நோக்கி செல்வது என்று முடிவு செய்துள்ளேன், நீங்களுமா?)

5 மேற்சொன்ன காரணத்தால் மிகப்பெரிய முதலீடுகளை பாரதம் அடுத்த 10 ஆண்டுகளில் ஈர்க்கும். அதற்கு சீனாவின் வீழ்ச்சியும், உடைந்து போகப்போகும் பாகிஸ்தானும் நமக்கு மேலும் சாதகமாக அமையும்.

6 இன்று மிக அதிக இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா, அடுத்து மிகப்பெரிய கன்ஸ்யூமர் மார்க்கெட்டும் இந்தியா எனும்போது உலக நாடுகள் இந்தியாவை தடுக்கவே முடியாது. அதற்கு உறுதுணையாக உலகம் எங்கும் உள்ள இந்தியர்கள் முக்கிய பதவிகளில் இருப்பதும், பெரிய பணக்காரர்களாக உறுவெடுப்பதும் மிகப்பெரிய வாய்ப்பு. அவர்கள் இந்திய அரசுக்கு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். அதனால்தால் மோடி சவூதி அரேபியா, ஹூஸ்டன் என்று போகும் இடமெல்லாம் அவர்களை ஊக்குவித்து இந்தியர்கள் எனும் அந்த பாசப்பிணைப்பை ஏற்படுத்தி வருகிறார் என்பது தெருவில் குறைப்பதுகளுக்கு தெரிவதில்லை.

சாதாரண மக்கள் வீழ்ச்சியை விதி என்று சொல்வார்கள், ஆனால் மோடி போன்ற தலைவர்கள் அதை ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகத்தான் பார்ப்பார்கள், என்வே இது வீழ்ச்சியல்ல, வெற்றியின் 🏆 படிக்கட்டு.

ஆனால் அதற்கான பயனை நாம் GDP வளர்ச்சியாக பார்க்க குறைந்தது 2 ஆண்டுகள் ஆகும். எனவே இந்த பொருளாதார வீழ்ச்சி தவிர்க்க முடியாதது. ஆனால் ஆரோக்கியமான தொழிகளுக்கு வீழ்ச்சி என்பது ஒன்று மிகவும் தேவை அதை Market or Industry Correction என்று சொல்வார்கள், அது இல்லாதபோது அது உண்மையான வளர்ச்சியல்ல வீக்கம் என்பதே உண்மை.

எனவே இந்தியா 🇮🇳 மிகப்பெரிய 👍 மாற்றத்தை, வளர்ச்சியை அடுத்த 25 ஆண்டுகளில் பெறப்போகிறது.
 Image may contain: 1 person, sitting and indoor
நன்றி  FB P.SuyambuNadar BJP