இந்தியாவின் உயரிய விருதுகள் - ஏனைய கலைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:42 | Best Blogger Tips

சங்கீத நாடக அகாதமி கூட்டாளர்

சங்கீத நாடக அகாதமி கூட்டாளர்
விருது குறித்தத் தகவல்
பகுப்பு நிகழ்த்து கலைகள் (தனிநபர்)
நிறுவியது 1954
முதலில் வழங்கப்பட்டது 1954
கடைசியாக வழங்கப்பட்டது 2008
வழங்கப்பட்டது சங்கீத நாடக அகாதமி
விவரம் இந்தியாவில் நிகழ்த்து கலைக்கான விருது
முதல் வெற்றியாளர்(கள்) காரைக்குடி சாம்பசிவ அய்யர், அரியக்குடி இராமானுச ஐயங்கார்,
அல்லாவுதீன் கான், அஃபீசு கான், மற்றும் பிரித்விராஜ் கபூர்.
விருது தரவரிசை
சங்கீத நாடக அகாதமி கூட்டாளர்சங்கீத நாடக அகாதமி விருது
சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் (Sangeet Natak Akademi Fellowship), மேலும், சங்கீத நாடக அகாதமி ரத்ன சதஸ்யஎன்ற மாண்புமிகு உறுப்பினர் பதவி சிறப்பான இந்திய நிகழ்த்து கலைக் கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. எந்தவொரு நேரத்திலும் முப்பது நபர்கள் இருக்குமாறு இந்த உறுப்பினர் பதவிகள் சங்கீத நாடக அகாதமியால் அளிக்கப்படுகின்றன.[1] இந்திய அரசு|இந்திய அரசால் ஓர் நிகழ்த்து கலைக் கலைஞருக்கு வழங்கப்படும் உயரிய பெருமை இதுவேயாகும்.
1954ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அங்கத்துவம் முதலில் கருநாடக இசைக் கலைஞர்களான காரைக்குடி சாம்பசிவ அய்யர், அரியக்குடி இராமானுச அய்யங்கார் மற்றும் இந்துத்தானி இசைக் கலைஞர்கள் அல்லாவுதீன் கான், அஃபீசு அலி கான் [2] மற்றும் திரைப்பட, மேடைநாடக நடிகர் பிரித்திவிராசு கபூர்.[3]ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இவற்றையும் பார்க்க

சங்கீத நாடக அகாதமி விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சங்கீத நாடக அகாதமி விருது
விருது குறித்தத் தகவல்
பகுப்பு நிகழ்த்து கலைகள்
நிறுவியது 1952
கடைசியாக வழங்கப்பட்டது 2009
வழங்கப்பட்டது சங்கீத நாடக அகாதமி
விவரம் இந்தியாவின் நிகழ்த்துகலைக்கான விருது
விருது தரவரிசை
சங்கீத நாடக அகாதமி கூட்டாளர்சங்கீத நாடக அகாதமி விருது
சங்கீத நாடக அகாதமி விருது (Sangeet Natak Akademi Puraskar, Akademi Award) இந்தியாவின் இசை,நடனம்,நாடகக் கலைகளுக்கான தேசிய மன்றம் சங்கீத நாடக அகாதமியினால் நிகழ்த்துகலைகளில் சிறப்பான கலைஞர்களுக்குக் கொடுக்கப்படும் உயரிய விருதாகும்.[1] ஆண்டுக்கு 33 நபர்களுக்குத் தரப்படும் இவ்விருதில், 2010 நிலவரப்படி, ரூ 100000, பாராட்டுச் சான்றிதழ், மேற்துண்டு (பொன்னாடை) மற்றும் செப்புப் பட்டயம் வழங்கப்படுகிறது.[2] இவை இசை, நடனம்,நாடகம், பிற வழமையான/நாட்டுப்புற/பழங்குடியினர்/நடனம்/பாட்டு/கூத்து மற்றும் பொம்மலாட்டம் வகைகளிலும் நிகழ்த்துகலைகளில் சிறப்பாக பங்களித்தவர்களுக்கும் அறிவு படைத்தவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.[2]

நன்றி - கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.