ஏழு ஆண்டு காமராஜ் ஆட்சி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:26 | Best Blogger Tips

ஏழு ஆண்டு காமராஜ் ஆட்சியினை கண்டபின், பெரியார் ஆற்றிய உரையின் பகுதி இதோ காணுங்கள்...

" தோழர்களே, எனக்கோ வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆனால் நீங்கள் இருப்பீர்கள். உங்களை விட முதிர்ந்த நான் மரண வாக்குமூலம் போன்று ஒன்றை கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூற வேண்டிய நிலையில் இருப்பவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராஜ் ஆட்சியில் நமது நாடு அடைந்த முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்தது இல்லை. நமது மூவேந்தர்கள், அடுத்து நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லீம்கள், வெள்ளைகாரர்கள் இவர்கள் ஆட்சியில் எல்லம் நமது கல்விக்கு வகை செய்யப்படவில்லை.

தோழர்களே, என் சொல்லை நம்புங்கள், இந்த நாடு உருப்பட வேண்டுமென்றால் இன்னும் பத்து ஆண்டுகளாவது காமராசரை விட்டு விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள். காமராசரை பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால் தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது."

( இராமநாதபுர மாவட்ட திராவிட கழக 4வது மாநாடு 9.7.1961-ல் தேவகோட்டையில் நடந்தபோது தந்தை பெரியாரின் உரையின் ஒரு பகுதி - 17.7.1961 விடுதலை)
ஏழு ஆண்டு காமராஜ் ஆட்சியினை கண்டபின், பெரியார் ஆற்றிய உரையின் பகுதி இதோ காணுங்கள்...

" தோழர்களே, எனக்கோ வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆனால் நீங்கள் இருப்பீர்கள். உங்களை விட முதிர்ந்த நான் மரண வாக்குமூலம் போன்று ஒன்றை கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூற வேண்டிய நிலையில் இருப்பவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராஜ் ஆட்சியில் நமது நாடு அடைந்த முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்தது இல்லை. நமது மூவேந்தர்கள், அடுத்து நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லீம்கள், வெள்ளைகாரர்கள் இவர்கள் ஆட்சியில் எல்லம் நமது கல்விக்கு வகை செய்யப்படவில்லை.

தோழர்களே, என் சொல்லை நம்புங்கள், இந்த நாடு உருப்பட வேண்டுமென்றால் இன்னும் பத்து ஆண்டுகளாவது காமராசரை விட்டு விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள். காமராசரை பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால் தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது."

( இராமநாதபுர மாவட்ட திராவிட கழக 4வது மாநாடு 9.7.1961-ல் தேவகோட்டையில் நடந்தபோது தந்தை பெரியாரின் உரையின் ஒரு பகுதி - 17.7.1961 விடுதலை)