திமிங்கிலம் பற்றிய சில தகவல்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:18 | Best Blogger Tips


1) நீலத் திமிங்கிலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டியாகும். (பொதுவாக 100 அடி நீளம் 150 டன் எடை)
2) திமிங்கிலம் நுரையீரல் வழி உயிர்ப்பிக்கின்றன (மூச்சு விடுகின்றன).
3) நீலத் திமிங்கிலத்தின் நாக்கில் 50 பேர் உட்காரக்கூடிய அளவு இடமிருக்கும்.
4) திமிங்கிலம் ஒரு சாதுவான விலங்காகும், இவை எப்போதும் முரடாக நடந்து கொள்ளாது.
5) திமிங்கிலங்கள் மீன் வகையைச் சேர்ந்தது அல்ல, எனவே இவை உடலில் பிற மீன்களைப் போல செதில்கள் இருக்காது. மாறாக, தோல் கொண்ட உடலும், உடலின் மேற்புறத்தில் மயிரையும் கொண்டிருக்கும்.
6) இவற்றின் தோலின் உட்புறம் ஒரு கொழுப்பு அடுக்கினைக் கொண்டுள்ளன. இது திமிங்கிலங்களுக்கு உடல் சூட்டைத் தக்க வைக்க உதவுகிறது.
7) திமிங்கிலங்களின் தலைப்பகுதியில் குழாய் போன்ற மேல் நோக்கிய துளை ஒன்று உள்ளது. இவை இத்துளைகளின் வழியாகவே உயிர்ப்பிக்கின்றன.
8) வெளிச்சம் இல்லாத ஆழ்க்கடலில், இரையைப் பிடிக்க பயன்படுத்தும் எதிரொலி உத்தி (echo location) வழி இரையின் இருப்பிடத்தைத் திமிங்கிலங்கள் துல்லியமாக அறிந்து கொள்கின்றன.
9) பிற மீன்களைப் போல செதிள்கள் இல்லாமல் நுரையீரல் கொண்டு உயிர்ப்பிப்பதால், அவை நீரின் மேற்பரப்புக்கு வந்து காற்றை மூக்கு வழியாக உள்ளிழுத்துச் செல்லும்.
10) திமிங்கிலத்தின் மூக்கு அவற்றின் தலைப்பகுதியில் அமைந்திருக்கும். சில திமிங்கிலம் இரண்டு மூக்குகளையும் கொண்டிருக்கும்.
11) இவை 70 ஆண்டுக்காலம் உயிர் வாழக்கூடியவை.
12) மிகுதியான எடைக் கொண்ட திமிங்கிலங்கள் விரைவாக நீந்தும் திறன் படைத்தவையாகும்.
13) நீலத் திமிங்கிலங்கள், நீரில் உள்ள விலங்கு மிதவை உயிரினங்களையும், விந்துத் திமிங்கிலங்கள், மீன் மற்றும் கணவாய்களை உண்டும் வாழ்கின்றன.
14) பெண் திமிங்கிலங்களின் பேறுக்காலம் 12 முதல் 17 திங்கள் வரை ஆகும். குட்டியை ஈன்றெடுக்கும் பொழுது, மற்ற திமிங்கிலங்கள் தாய் திமிங்கிலத்தைச் சூழ்ந்து கொண்டு செவிலித் தாயார் போன்று உதவுகின்றன.
15) குட்டித் திமிங்கிலம் பிறந்த உடன் மற்ற செவிலித் திமிங்கிலங்கள் அதை நீரின் மேல் மட்டத்திற்கு தூக்கி, முதல் சுவாசத்தை ஏற்படுத்துகின்றன.|
16) திமிங்கிலக் குட்டி பிறக்கும்போது 25 அடி நீளமுடன் ஒரு யானையின் எடையுடன் இருக்கும். ஒரு நாளைக்கு 200 லிட்டர் பாலைத் தம் தாயிடம் இருந்து குடித்து மணிக்கு 5 கிலோ எடை வீதம் வளருகிறது.
17) 1700 மற்றும் 1800 களில் திமிங்கிலங்கள் அவற்றின் கொழுப்பு எண்ணெய்க்காக முரட்டுத்தனமாக வேட்டையாடப்பட்டு கொன்று குவிக்கப்பட்டன. அந்தக் காலக்கட்டங்களில் திமிங்கில எண்ணெய் தான் விளக்கெரிக்கப் பயன்படுத்தப்பட்டது.
18) தற்பொழுது திமிங்கிலங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து கொண்டு வருகிறது, எத்தனையோ அமைப்புகள இருப்பினும் இன்னமும் திமிங்கில வேட்டை ஓயவில்லை. யப்பான், நோர்வே போன்ற நாடுகள் இன்னமும் பல தேவைகளுக்காக இவ்விலங்கைக் கொன்று குவிக்கின்றன.

திமிங்கிலம் பற்றிய சில தகவல்கள்

1) நீலத் திமிங்கிலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டியாகும். (பொதுவாக 100 அடி நீளம் 150 டன் எடை)
2) திமிங்கிலம் நுரையீரல் வழி உயிர்ப்பிக்கின்றன (மூச்சு விடுகின்றன).
3) நீலத் திமிங்கிலத்தின் நாக்கில் 50 பேர் உட்காரக்கூடிய அளவு இடமிருக்கும்.
4) திமிங்கிலம் ஒரு சாதுவான விலங்காகும், இவை எப்போதும் முரடாக  நடந்து கொள்ளாது. 
5) திமிங்கிலங்கள் மீன் வகையைச் சேர்ந்தது அல்ல, எனவே இவை உடலில் பிற மீன்களைப் போல செதில்கள் இருக்காது. மாறாக, தோல் கொண்ட உடலும், உடலின் மேற்புறத்தில் மயிரையும் கொண்டிருக்கும்.
6) இவற்றின் தோலின் உட்புறம் ஒரு கொழுப்பு அடுக்கினைக் கொண்டுள்ளன. இது திமிங்கிலங்களுக்கு உடல் சூட்டைத் தக்க வைக்க உதவுகிறது.
7) திமிங்கிலங்களின் தலைப்பகுதியில் குழாய் போன்ற மேல் நோக்கிய துளை ஒன்று உள்ளது. இவை இத்துளைகளின் வழியாகவே உயிர்ப்பிக்கின்றன.
8) வெளிச்சம் இல்லாத ஆழ்க்கடலில், இரையைப் பிடிக்க பயன்படுத்தும் எதிரொலி உத்தி (echo location) வழி இரையின் இருப்பிடத்தைத் திமிங்கிலங்கள் துல்லியமாக அறிந்து கொள்கின்றன. 
9) பிற மீன்களைப் போல செதிள்கள் இல்லாமல் நுரையீரல் கொண்டு உயிர்ப்பிப்பதால், அவை நீரின் மேற்பரப்புக்கு வந்து காற்றை மூக்கு வழியாக உள்ளிழுத்துச் செல்லும். 
10) திமிங்கிலத்தின் மூக்கு அவற்றின் தலைப்பகுதியில் அமைந்திருக்கும். சில திமிங்கிலம் இரண்டு மூக்குகளையும் கொண்டிருக்கும்.
11) இவை 70 ஆண்டுக்காலம் உயிர் வாழக்கூடியவை.
12) மிகுதியான எடைக் கொண்ட திமிங்கிலங்கள் விரைவாக நீந்தும் திறன் படைத்தவையாகும்.
13) நீலத் திமிங்கிலங்கள், நீரில் உள்ள விலங்கு மிதவை உயிரினங்களையும், விந்துத் திமிங்கிலங்கள், மீன் மற்றும் கணவாய்களை உண்டும் வாழ்கின்றன.
14) பெண் திமிங்கிலங்களின் பேறுக்காலம் 12 முதல் 17 திங்கள் வரை ஆகும். குட்டியை ஈன்றெடுக்கும் பொழுது, மற்ற திமிங்கிலங்கள் தாய் திமிங்கிலத்தைச் சூழ்ந்து கொண்டு செவிலித் தாயார் போன்று உதவுகின்றன.
15) குட்டித் திமிங்கிலம் பிறந்த உடன் மற்ற செவிலித் திமிங்கிலங்கள் அதை நீரின் மேல் மட்டத்திற்கு தூக்கி, முதல் சுவாசத்தை ஏற்படுத்துகின்றன.|
16) திமிங்கிலக் குட்டி பிறக்கும்போது 25 அடி நீளமுடன் ஒரு யானையின் எடையுடன் இருக்கும். ஒரு நாளைக்கு 200 லிட்டர் பாலைத் தம் தாயிடம் இருந்து குடித்து மணிக்கு 5 கிலோ எடை வீதம் வளருகிறது. 
17)  1700 மற்றும் 1800 களில் திமிங்கிலங்கள் அவற்றின் கொழுப்பு எண்ணெய்க்காக முரட்டுத்தனமாக வேட்டையாடப்பட்டு கொன்று குவிக்கப்பட்டன. அந்தக் காலக்கட்டங்களில் திமிங்கில எண்ணெய் தான் விளக்கெரிக்கப் பயன்படுத்தப்பட்டது.
18) தற்பொழுது திமிங்கிலங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து கொண்டு வருகிறது, எத்தனையோ அமைப்புகள இருப்பினும் இன்னமும் திமிங்கில வேட்டை ஓயவில்லை. யப்பான், நோர்வே போன்ற நாடுகள் இன்னமும் பல தேவைகளுக்காக இவ்விலங்கைக் கொன்று குவிக்கின்றன.

மேலும் சில பொது அறிவு தகவல்கள் - https://www.facebook.com/media/set/?set=a.532454403454081.124235.246712722028252&type=3