2014ம் ஆண்டு கிடைத்தத்தான் சுதந்திரம் என கங்கனா ரணாவத் அருமையான வார்த்தைகள் பெண்மணி என்றால் வீரபெண்மணி ...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:50 | Best Blogger Tips

 




1947ல் கிடைத்தது சுதந்திரம் அல்ல அது பிச்சை , 2014ம் ஆண்டு கிடைத்தத்தான் சுதந்திரம் என கங்கனா ரணாவத் கூறியிருப்பது காங்கிரசை கொதிக்க வைக்கின்றது, இது தேசவிரோதம் என கொதித்து கொண்டிருகின்றார்கள்

கங்கணா சொன்னதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை, முறையான சுதந்திரம் என்றால் வெள்ளையனை மிரட்டி அவனை நம் கட்டுபாட்டில் கொண்டுவந்து கிளம்பு என விரட்டி அடித்திருக்க வேண்டும்

ஆனால் இரண்டாம் உலகபோரில் தன் வலுவான நிலையினை அமெரிக்காவிடம் இழந்து புதிதாக சோவியத் எனும் வல்லரசையும் சந்திக்கமுடியாமல் திணறிய பிரிட்டனிடம் யாசகம் தான் பெற்றது காங்கிரஸ்

பிரிட்டனின் நிபந்தனைகளை பெற்று கொண்டு இங்கு அறிவிக்கபட்ட சுதந்திரம் எப்படி சுதந்திரமாகும் நிச்சயம் அது பிச்சைதான்

பாகிஸ்தான் பிரிவினையினை ஒப்புகொள்ள வேண்டும், நேதாஜி கிடைத்தால் தரவேண்டும், பிரிட்டிஷ் அரசு வெளியேறுமே தவிர பிரிட்டிசாரின் தொழிலெல்லாம் நடக்கும், அவர்கள் சொத்துக்கும் கம்பெனிக்கும் எஸ்டேட்டுக்கும் இந்தியா பாதுகாப்பு தரவேண்டும் என விதிக்கபட்ட நிபந்தனையெல்லாம் எவ்வகை?

பிரிட்டிஷ் அரசு இருந்து செய்ததை காங்கிரஸ் அரசு பிரிட்டனின் அடிவருடியாக செய்ய தொடங்கியதின் பெயர் சுதந்திரமா?

2014ல்தான் இந்தியா மோடி ஆட்சியில் உண்மையான சுதந்திர நாடாக மலர்ந்தது அதன் பின்னர்தான் காஷ்மீர் முதல் சகல சிக்கலும் தீர்க்கபட்டன‌

அணிசேரா கொள்கை எனும் காங்கிரஸ் கொள்கையினை மூட்டைகட்டி வீசிய இந்தியா நாட்டு நலன்மிக்க அணியில் சேர்வது என இன்று பலமாயிற்று




மோடி ஆட்சியில்தான் காங்கிரசால் உருவான பொருளாதார குற்றவாளிகளெல்லாம் லண்டனில் பதுங்கியிருக்கின்றார்கள் என்றால் எது உண்மையான சுதந்திரம்? எது பிரிட்டனின் உண்மை முகம்?

மோடி ஆட்சியில்தான் இந்தியாவின் சுதந்திரத்தின் அர்த்தமே விளங்குகின்றது

அம்மணி மிக சரியான வரலாற்று உண்மையினை தைரியமாக தெளிவாக சொல்லியிருகின்றார் அவருக்கு

வாழ்த்துக்கள்

காங்கிரஸ் ஒரு விஷயத்தை எதிர்க்கின்றது என்றால் அந்த விஷயம் தேசநலனுக்கு மிக உகந்தது எனும் சூத்திரத்திலும் இது சரியாக பொருந்தும்

கங்கணா ரணாவத்துக்கு

வாழ்த்துக்கள்

, அம்மணி மிக சரியான வரலாற்று உண்மைகளை பேச தொடங்கியிருக்கின்றது..



Thanks to #Stanley_Rajan