கிரகங்கள் படுத்தும் பாடு -( 27 )

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:25 | Best Blogger Tips


ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !
இன்றைய *கிரகங்கள் படுத்தும் பாடு* எனும் தொடர் பதிவில்" வக்ர நிலை " என்றால் என்ன ? எந்தந்த கிரகங்கள் வக்ர நிலை உண்டு ,எந்த கிரகங்களுக்கு வக்ரகதி இல்லை எனவும் ,அவ்வாறு வக்ரம் அடைந்த கிரகங்களின் பலம் பற்றியும் இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.
சில சமயங்களில் கிரகங்கள் தாம் செல்லும் பாதையிலிருந்து பின்னோக்கி நகர ஆரம்பிக்கிறது.இதனைத்தான் "வக்கிர நிலை "என அழைக்கிறோம்.
வக்கிரம் பெறும்பொழுது அக்கிரகங்களுக்கு பலம் அதிகம் உண்டாகிறது.மேலும் அந்த கிரகங்களின் தன்மை கூட மாறி விடுகிறது.நல்லது செய்யக்கூடிய சுப கிரகங்கள் கூட நல்லது செய்வதற்கு பதிலாக கெடு பலனை தந்து விடுகிறது அல்லது எவ்வித மாற்றத்தையும் உண்டாக்கமல் செய்துவிடுகிறது. ஒற்றை கிரகங்கள் மகாபலவான்கள் ஆகும்.
இதில் ராகு,கேதுக்களுக்கு வக்ர கதியைதத்தவிர நேர்கதியே கிடையாது.
சூரியன் மற்றும் சந்திர கிரகங்களுக்கு வக்ர கதியே கிடையாது.
குரு,செவ்வாய்,சனி ஆகிய கிரகங்களுக்கு ஐந்தாமிடத்தில் சூரியன் வரும்பொழுது வக்ரகதி ஏற்படுகிறது.ஏழில் வரும்போது அதிவக்ரமும்,ஒன்பதாமிடத்தில் வரும்போது வக்ரகதி முடிவடைந்து நேர்கதி ஏற்படுகிறது.
புதனும்,சுக்கிரனும் சூரியனுடையே சுற்றுவதால் சூரியனுக்கு 13- பாகைக்குள்ளே வரின் புதனுக்கும்,8-பாகைக்குள் வரின் சுக்கிரனுக்கும் வக்ரகதி உண்டாகிறது.
வக்ரம் அடைந்த நிலையில் கிரகங்களின் பலனில் ஏற்படும் மாற்றங்களாவன : -
1) உச்சம் அடைந்த நிலையில் ஒரு கிரகம் வக்ரம் அடைந்திருந்தால் அக்கிரகம் உச்ச பலனை தராமல் நீச பலனை கொடுக்கிறது.
2) பாவ கிரகங்கள் உச்சம் அடைந்து வக்ரம் அடையுமானால் அவர்களின் தசையில் யோக பலனை தருகிறது.
3) ஒரு கிரகம் வக்ரம் அடைந்த நிலையில் அக்கிரகம் உச்சம் அடைந்த கிரகங்களால் பார்க்கப்பட்டால் அக்கிரகம் வக்ரபலன் நீங்கி உச்ச பலனை தந்துவிடுகிறது.
4) வக்ரம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்றால் வக்ரபலன் நீங்கிவிடுகிறது.
5) வக்ரம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெறுவதும்,பிறகு வக்கரம் பெற்ற கிரகம் இருந்த வீட்டின் அதிபதி எந்த வீட்டில் உச்சம் பெறுகிறதோ அந்த வீட்டின் அதிபதியும் உச்சம் பெற்றால் டபுள் டெபாஸிட்டர் முறையில் வக்ரபலன் நீங்கி நன்மையை செய்துவிடுகிறது.
6)வக்கிரம் பெற்ற கிரகம் உச்ச வர்க்கோத்தம் பெறுமானால் அவர் இருக்கும் இடத்தினை பாதிப்பதில்லை (வர்க்கோத்தமம் என்பது ராசி மற்றும் அம்சம் இரண்டிலும் ஒரே ராசியில் ஒரு கிரகம் இருப்பது )
7) வக்கிரம் பெற்றுள்ள கிரகம் ஆட்சி நிலையில் இருந்தால் நற்பலனையே தரும்.
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
சோதிட ஆய்வாளர்,
ஓம் சக்தி ஜோதிட நிலையம்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.
செல் ; 97 151 89 647 (வாட்ஸ்அப் எண்ணும் ,செல் எண்ணும் ஒன்றே)
(தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சாதக பலனை வீட்டிலிருந்த படியே போன் வழி மூலம் தகவல் பெறலாம்.கட்டணம் உண்டு)
My website.Click hear

AstroRavichandransevvai.blogspot.com
********************************