
🌞ஆழித்தேர் ஓர் பார்வை...🌝
உலக புகழ் பெற்றது திருவாரூர் தேர்.
ஆசிய கண்டத்தில் வேறு எந்த ஒரு கோயிலுக்கும் திருத்தேருக்கு ஆழித்தேர் என சொல்லப்படவில்லை.
ஆனால் இந்த கோயிலுக்கு மட்டும் தான் ஆழித்தேர் என அப்பரே பெயர் சூட்டியுள்ளார், சொல்லப்படுகிறது.
ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே.
இவ்வூரில் அஜபா நடனம் மிக சிறப்பானது.
இந்த அஜபா நடனம் ஆடுகின்ற அன்பர்களுக்கு தோள் காளைமாட்டின் திமிழ் போல் சற்று உயர்ந்திருக்கும். இன்றும் காணலாம்.
தேர் ஏறும் ஓர் இரண்டு தினத்திற்கு முன் சுவாமி அஜபா நடனம் ஆடி தேருக்குள் எழுந்து அருள்பாலிப்பார்.
தேரின் இதர விவரம் 2016.
தேரின் உயரம் : 30 அடி.
தேரின் அகலம் : 31அடி.
தேரின் எடை : 340டன்.
அலங்காரத்துடன் பார்த்தால் 440டன்.
தேரை வடம் பிடிக்கும் தேவையான நபரின் அளவு : 13,000பேர்.
மற்றும் இரண்டு யானை.
மற்றும் இரண்டு யானை.
தேர் பகுதியில் மொத்தம் ஏழு அடுக்கு உள்ளது.
இந்த ஏழு அடுக்கில் இறைவனின் அருள் திறங்களை காணலாம்.
தேரின் மரங்கள் ஒரே காட்டில் விளைந்த மரங்கள்.
ஆரம்ப காலத்தில் திருவாரூர் தேர் ராஜ கோபுர கலசம் வரைக்கும் இருக்குமாம் ( அலங்காரத்தோடு செய்து பார்த்தால்) செவி வழி செய்தியாக கூறப்படுகிறது.
அக்காலத்தில் தேரை இழுப்பதற்கு அந்தனர் ஒருபகுதி, மன்னர் குடும்பத்தினர், மந்திரி மற்றும் அரசு ஊழியர்கள், வேற்றுநாட்டு அரசு (நட்பு) மன்னர் எனவும் இது போதாதுனு தேரை இழுப்பதற்கு யானைப்படையும் பயன்படுத்தினர்.
அக்கால தேர் முழுக்க முழுக்க மரத்தால் ஆனது.
தேர் சக்கரம் கூட மரத்தால் ஆனது.
இப்படி பெருமை வாய்ந்த திருவாரூர் ஆழித்தேர் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு வடம் பிடிக்கப்படுகிறது.
திருவாரூர் தேர் என தயவு செய்து சொல்லாதீர்கள்...
ஆழித்தேர் என சொல்லுங்கள் அதுவே பொருத்தமாகும்.
ஆழித்தேர் வித்தகா... ஆரூரா. தியாக
நன்றி இணையம்