வாசியோகம்!(பகுதி4)

மணக்கால் அய்யம்பேட்டை | AM 12:02 | Best Blogger Tips

இதில் இடகலை:- இடது நாசி வழியாய் உள்ளும் வெளியும் சென்று வரும் சுவாசம் .

பிங்கலை:-வலது நாசி வழியாய் உள்ளும் வெளியும் சென்று வரும் சுவாசம்.

சுழுமுனை:- இரு நாசித் துவாரங்களின் வழியாயும் உள்ளும் புறம்பும் இயங்கும் சுவாச கதிகளாகும்.

இந்தச் சுவாசமாகிய வாசியைக் கட்டுப் படுத்த ஐந்து வகையான மார்க்கமே சிறந்தது என்று அகஸ்தியர் முதலான சித்தர்கள் தமது நூலில் கூறி உள்ளனர்.

அவை முறையே1.இரேசகம்--மூச்சுக்காற்றை வெளி விடுதல்2.ப+ரகம்--மூச்சுக்காற்றை உள்ளிழுத்தல்3.கும்பகம்-மூச்சுக்காற்றை உள்ளே நிறுத்துதல்.4.சவுபீசம்-மூச்சுக் காற்றை நிறுத்துவதோடு பீஜ மந்திரங்களை மனதினுள் ஜெபித்தல்.5.மூச்சுக் காற்றை நிறுத்தி மந்திர ஜெபத்தை விடுத்து ஆகாயத்தில் மனதையும் உயிராகிய வாசியையும் ஒருமித்து நிற்கச் செய்தலாம்.

இன்னமும் இரேசகத்தை மூலாதாரமும் சுவாதி~;டானமும் கூடுமிடத்தல்செய்வதாம். ப+ரகத்தை மணி ப+ரகத்திலும்,கும்பகத்தை அநாகதத்திலும்,சவுபீசத்தைவிசுத்தியிலும்,நிற்பீசத்தை ஆக்ஞையிலும் முறையே நிறுத்தி நிதானமாய் அப்பியாசிக்க வேண்டும்.

இப்படி ஆறு ஆதாரத்திலும் வாசியை ஒரு முறை இயக்கிப் பயிலுதற்கு ஒரு பிராணாயாமம் என்று பெயராகும்.

முதலில் இந்த வாசி யோகப் பயிற்சியை மேற் கொள்ளுபவர்கள் காலையிலும் மாலையிலும் ஆகாரத்திற்கு முன்பே அப்பியாசம் செய்வது நல்லதாகும்.

வடக்கு முகமாக நிமிர்ந்து உட்கார்ந்து பயிற்சியை மேற் கொள்ள வேண்டும்.முதலில் மாணாக்கர்கள் இடது நாசித் துவாரம் வழியாகக் காற்றை உள்ளே இழுத்து வலது நாசி வழியாய் வெளியிடவேண்டும்.

அப்பால் வலது நாசி வழியாக மூச்சுக் காற்றை உள்ளே இழுத்து தாமதிக்காமல் இடது நாசி வழியாய் வெளியிடவேண:;டும்.

பின் ஒரு நாசித்துவாரம் மூலம் இழுக்கப்பட்ட சுவாசத்தை அதே நாசி மூலம் வெளியிட வேண்டும்.இவ்வாறு சில தினங்கள் செய்து வரச் சுவாசம் தடையின்றி ஓடும்.

இதன் பின் இரேசக ப+ரக கும்பகம் ஆகியவற்றைச் செய்து பழக வேண்டும்.அதாவது ரேசகம் 32 மாத்திரையும்,ப+ரகம் 64 மாத்திரையும்,கும் பகம் 16 மாத்திரை அளவும் அப்பியாசம் செய்யவும்.இதை இரு நாசியிலும் ஒன்று விட்டு மற்றொன்றிலும் மாற்றி மாற்றிச் செய்து வரவும்.

இதில் மாத்திரை என்பது கண் இமைக்கும் நேரம்.அதாவது ஒரு நொடியாகும்.

இதையே புவஸ்திய மஹாரி~p தனது நூலில் கூறி உள்ளதாவது.

1.”வாசி யோகத்தின் மகத்துவம் உரைக்க
வகுக்க ரேசகத்தின் திறப்பை
மாத்திரை முப்பத்திரண்டுமே வளமாய்
மாறவு மதனை நீரையா”

2.”வீசு ப+ரகத்தில் அறுபத்துநாலு
விளங்கியே மாறி மாறிடவும்
விகற்பம் வந்தணுகா வாசி நின்றுலவ
மேகுறி திறவு கோலறிதல்”

3.”பாசம் வந்தணுகா கும்பகமதில் பதி
னாரென அறிந்துமே தீரு
பழக்க மிதாகும் மகத்துக்கழுறைக்கும்
பரிப+ரணானந்த தீட்சை”-என்று பாடல் உள்ளதாகும்

இங்கு கூறப்பட்ட விதிக்கிணங்க ரேசகம்,ப+ரகம்,கும்பகங்களைச் செய்து வரச் சுவாசம் கட்டுப்படும்.இதன்பின்

“தேடு ப+ரகத்தில் முப்பத்திரண்டு
சிவ சிவா ரேசகம் பதினாறு
தெளிதரும் கும்பகத்தில் அறுபத்திநாலு
திருத்தமாய்த் தீரு மிவ்விதமாய்”-என்ற கவிக்கிணங்க ப+ரகம்32,ரேசகம்16,கும்பகம்64 மாத்திரை அளவுள்ளதாய் மூச்சுக் காற்றாகிய வாசியைத் தனது நாசித் துவாரங்கள் வழியாக உள்ளே இழுத்தும்,வெளியே விட்டும்,நிறுத்தியும் நன்றாகப் பயிற்சிக்க வாசியானது கட்டுக் கடங்கி இடகலை,பிங்கலை ஆகிய இரு நாடிகளும் கூடி மூலாதாரத்திற் சென்று முட்டும்;. அப்போது மூலக் கனலானது மூண்டு எழும்.இதனால் உயிரழியாது ஆயுட் பெருக்கத்திற்கு முதலில் வழி வகுக்குமாம்.

இதையே “ஏற்றி இறக்கி யிரு காலும் ப+ரித்துக்
காற்றைப் படிக்கும் கணக்கறிவாறில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்குக்
கூற்றை உதைக்குங் குறியதுவாமே.”-என்று திருமூல மஹாரி~p தமது திருமந்திரம் 3000 த்தில் கூறி உள்ளதைக் காண்கவும்.

இன்னமும் ஒளவை தமது குறளில்
“வாயு வழக்க மறிந்து செரிந்தடங்கில்
ஆயுட் பெருக்க முண்டாம்”-என்பது காண்க.

மேலும்
“இயம்பு சுழிமுனைக்கு மிடை பிங்கலைக்கு
மிடை நடுவே இலங்கு மிதன் தேவு பிர்மா
சுயம்புவாய் ரேசக ப+ரக கும்பகமும்
சொல் மூன்று தேவதையின் ஜென்ம ப+மி
வயம் வாயு வெளி விடுதல் ரேசகந்தான்
வாயுவையும் ஏற்றிடுதல் ப+ரகந்தான்
பயம் போக உள்ளடக்கல் கும்பகந்தான்
பாலகனே இவ்வுண்மை பரிந்து பாரே”-என்று சுப்ரமண்யர் தமது நூலில் சொல்லி உள்ளது இவ் வியோகத்திற்குச் சாட்சியாய் அமைந்துள்ளது.

இவ்வாறு மூலக்கனலானது மூண்டு பிம்மத் தண்டம்(முதுகெலும்பு)ஆகிய நடு நாடி வழியாய் சுழிமுனையைப் பற்றி ஓடும்.

இச் சமயம் இவ் வப்பியாசிகள் அடுத்துள்ள சவுபீச,நிற்பீச முறைகளைப் பின் பற்ற வேண்டும்.

சவுபீசத்தைப் பின பற்றுகிற யோகிக்கு நினைத்த மாத்திரத்திலே வாயுவானது கும்பகத்தை அடைந்து மனம் ஒரு நிலைப்படும்.

இத்தகைய நிலைக்கு வந்துள்ள யோகி ரேசக ப+ரகாதிகளைத் தாமாகவே விடுத்து விடுவர்.மனம் எப்போதும் பரத்தைப் பற்றிய தாகவே இருக்கும்.