(அரிய தகவல் இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே...)

புற்று நோயால் பாதக்கப்படுவோரின் எண்ணிக்கை அண்மைக் காலத்தில் அதிகரித்து வருகின்றமையைக் காணலாம். குறிப்பாக சிகரட், பீடி, போன்ற புகைப் பழக்கங்கள் அதிகளவில் இளைஞர்களிடையே காணப்படுகின்றது. இதனால் அதிகளவில் நோய் உருவாகிறது.
உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிலையங்கள் இக் காரணங்களை ஒத்துக் கொண்டு இருந்தாலும், வேறு பல காரணங்களாலும் புற்று நோய் உருவாக வாய்ப்பு உள்ளன என்றும் ஒத்துக் கொள்ளப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது.
புற்று நோய் உருவாக்குவற்றுக்கு 'கார்சிக்னோஜன்' என்ற பொதுப் பெயர் உண்டு. நிலத்தில் விளைச்சலை அதிகரிக்கப் போடப்படும் நில உரங்கள், பூச்சி மருந்துகள், மற்றும் டீசல் புகைகள், இரசாயணப் பொருள்கள் போன்றவற்றை 'கார்சிக்னோஜன்ஸ்' என்று அழைக்கப் படுகின்றது.
காபி, டீ மற்றும் போதைப் பொருள்கள், தூக்க மாத்திரைகள் அதிகமாக பயன்படுத்துவதாலும் கூட புற்று நோய் உருவாகிறது என சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக உடல் ஆரோக்கியமாக இருக்கும் வரை உடலின் வளர்ச்சிக்காக உருவாக்கப்படும் செல்கள், தேவைக்கேற்ப வளருகின்றன.
செல் வளர்ச்சி
உடல் நலம் கெடும் போது, செல்கள் சில இடங்களில், தேவையான அளவுக்கு அதிகமாக, செல் பிரிதல் நடைப்பெற்று துன்பங்களை உண்டாக்குகின்றன.
உண்மையில் இந்த செல்கள் உடலுக்கு நேரடியாக துன்பங்களை கொடுப்பதில்லை. ஆனால் அளவுக்கு அதிகமாக செல்கள் உற்பத்தியாகி, ஒரு குறிப்பிட்ட இடத்தில்; வளர்வதால் வேறு சில தொந்தரவுகளை உண்டாக்குகின்றன.
தொண்டைக் குழாய்களில் வளரும் போது உண்பவற்றை விழுங்க கஸ்ரம் ஏற்படுகின்றது. வயிற்றினுள் உணவுக் குழலில் புற்று நோய் வளரும் போது வயிற்று வலியால் அவதிப்படுகின்றனர்.
இதுபோல இரத்தத்திலும் புற்றுநோய் செல்கள் வளர்ந்து இரத்தப் புற்றுநோய் உண்டாக்குகின்றது. (Blood cancer) உண்டாகிறது.
புற்றுநோய் வகைகள்
உணவில் எந்த இடத்தில் புற்றுநோய் ஏற்படுகின்றதோ அந்த இடத்திற்கேற்ப புற்றுநோய்களை அடினோமா, லிப்போமா, ஹீமோட்டோமா, கார்சினோமா, எபிதீலியோமா, பைபிரோமா என்ற பல பெயர்களால் அழைக்கப்படுகின்றோம்.
புற்றுநோய் கட்டிகளை பொதுவாக இரண்டு பிரிவுகளாக மருத்துவர்கள் பிரிக்கின்றனர். தீங்கில்லாப் புற்றுநோய், தீங்கான புற்றுநோய் என இரண்டு வகைப்படும். இவற்றைக் கண்டுபிடிப்பது பையாப்ஸி என்னும் புற்று நோய் மருத்துவர்களை சோதனை மூலம் கண்டறிகின்றனர்.
புற்று நோய்கான காரணிகள் யாவை?
நிலத்திலிடப்பட்ட உரங்கள், பதம் செய்யப்பட்ட உணவு வகைகள், புகைப்பிடித்தல், செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட மருந்து வகைகள், புகையிலையை வாயில் அடக்கி அதிகமாகச் சாப்பிடுதல், தாய்ப்பால் கொடுக்காமல் புறக்கணித்தல்,
இனிப்பு, சொக்லேட் போன்றவற்றைப் பயன்படுத்துதல், காற்றில் மகரந்த தூள்கள் கலந்து சுவாசிக்கும் போது உடலினுள் செல்லுதல், சுற்றுப்புறங்கள் தூய்மையுடன் இல்லாமலிருத்தல், என்ஸ்ரே போன்ற ஒளிக்கதிர்கள், சோப்பு, அழகு சாதனங்கள், என்பனவும் கோபம், பயம், ஆசை போன்ற காரணங்களினாலும் நரம்புத் தளர்ச்சியை ஏற்படுத்தி அதன் வழியாகவும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு.
புற்றுநோய் குணமாக என்ன செய்ய வேண்டும்
*ஒரு நாளைக்கு ஒரு வேளை என உபவாசம் இருத்தல் வேண்டும்.
* புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றைத் தவிர்த்தல் வேண்டும்.
* இளநீர் அதிகளவில் அருந்த வேண்டும்.
* கருத்தடை மாத்திரைகளை உபயோகித்தல் கூடாது.
* ஆட்டுப் பாலை காய்ச்சாமல் தினமும் ஒரு டம்ளர் அருந்தி வர வேண்டும்.
* வெண் பூசணிச்சாறு, அறுகம்புல் சாறு, ஆகியவற்றை ஒருநாள் விட்டு அருந்திவர வேண்டும்.
* சமைக்கப்பட்ட உணவுகளை முற்றாகவோ அல்லது குறைத்தோ உண்ணவேண்டும். பச்சையாக காய்கறிகளை உண்ணல் நன்று.
* யோனி, கர்ப்பப்பை புற்று உள்ளவர்கள் இனப்பெருக்க உறுப்புக்களை அடிக்கடி நீர் சிகிச்சை மூலம் சுத்தம் செய்தல் வேண்டும்.
மூலிகை மருத்துவ முறை
வில்ப இலை, வேப்ப இலை, துளசி இலை, மாவிலை, அருகம்புல், அத்தியிலை, கறுப்பு வெற்றிலை, கீழ்காய் நெல்லி, நித்திய கல்யாணி, ஆகியவற்றை சம் அளவுக்கு எடுத்து இடித்து சிறு தண்ணீரைக் கலந்து நோய் குணமாகும் வரை சாப்பிட வேண்டும்.
உணவு மருத்துவம்
மூலிகைகளுடன் இயற்கையான பச்சைக் காய்கறிகள், பழங்கள், பழச்சாறுகள் ஆகியவற்றைச் சாப்பிட வேண்டும். ஒவ்வொரு வேளையும் இயற்கை உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இயற்கை உணவுகளைச் சாப்பிட்டால் ஒரு வாரத்திலேயே உடலில் சில முன்னேற்ற மாற்றங்கள் ஏற்படலாம்.
உணவில் அதிகளவு வெண்பூசணி அதிகமாகச் சேர்க்க வேண்டும்.
பழ வகைகளில் அத்திப்பழம், மாதுளம் பழம் போன்றவற்றை அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
நன்றி அறிந்ததும் அறியாததும்