இந்துமதம் (1) சிறு வரலாற்று குறிப்பு !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:05 | Best Blogger Tips
‘இந்து மதம்’ என்பது சைவ, வைணவ மதங்களின் பொதுப்பெயராக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவான ஒரு புதுப் பெயர் என்பதை நாம் அறிவோம். இதனால் இந்து மதம் யாருடையது என்பதைக் காண சைவ, வைணவ மதங்கள் யாருடையவை என்பதைக் கண்டுபிடிக்க வேண்டியதிருக்கிறது. இதைக் காண சைவ, வைணவ சமயங்களின் வரலாற்றை நோக்குவோம்.

சைவ சமயத்தை வளர்த்த நாயன்மார்கள் அறுபத்து மூவர். இவர்கள் அனைவருமே தமிழகத்தில் பிறந்தவர்கள்.

வைணவ சமயத்தை வளர்த்த ஆழ்வார்கள் பன்னிருவர். இவர்களும் தமிழகத்தில் பிறந்தவர்கள்.

சைவ சமய இலக்கியங்கள் பன்னிரு திருமுறை. பன்னிரு திருமுறையும் தமிழ்மொழியில் மட்டுமே இருக்கிறது.
வைணவ சமய இலக்கியங்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் அனைத்தும் தமிழ் மொழியில் மட்டுமே இருக்கின்றன.
இந்தியா முழுவதிலும் உள்ள மிகப் பழமையான சைவக் கோவில்கள் ஏறத்தாழ இருநூற்று எண்பது ஆகும். இந்த இருநூற்று எண்பது கோவில்களில் இருநூற்று எழுபத்து நான்கு கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன.
இந்தியா முழுவதிலும் உள்ள மிகப் பழமையான வைணவக் கோவில்கள் நூற்று எட்டு. இதில் தொண்ணூற்றாறு கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன.
சைவ சமயத்தின் தலைமைக் கோவில் சிதம்பரம் நடராசர் கோவில். சிதம்பரம் தமிழகத்தில் இருக்கிறது.

வைணவத்தின் தலைமைக் கோவில் திருவரங்கத்தில் உள்ளது. திருவரங்கம் தமிழகத்தில் இருக்கிறது.

தமிழ்நாட்டில் உருவான சைவம், வைணவம் ஆகிய இரண்டற்கும் ஒரு பொதுப் பெயர் கொடுக்க வேண்டுமானால் அது “தமிழர் சமயம்” என்று இருப்பதே பொருத்தமானது. சைவம், வைணவம் ஆகிய இந்து மதம் தமிழர்களின் தமிழர் சமயம் என்பதில் ஐயமில்லை.
இந்துமதம் (1) சிறு வரலாற்று குறிப்பு:

‘இந்து மதம்’ என்பது சைவ, வைணவ மதங்களின் பொதுப்பெயராக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவான ஒரு புதுப் பெயர் என்பதை நாம் அறிவோம்.  இதனால் இந்து மதம் யாருடையது என்பதைக் காண சைவ, வைணவ மதங்கள் யாருடையவை என்பதைக் கண்டுபிடிக்க வேண்டியதிருக்கிறது.  இதைக் காண சைவ, வைணவ சமயங்களின் வரலாற்றை நோக்குவோம். 

சைவ சமயத்தை வளர்த்த நாயன்மார்கள் அறுபத்து மூவர்.  இவர்கள் அனைவருமே தமிழகத்தில் பிறந்தவர்கள்.

வைணவ சமயத்தை வளர்த்த ஆழ்வார்கள் பன்னிருவர்.  இவர்களும் தமிழகத்தில் பிறந்தவர்கள்.

சைவ சமய இலக்கியங்கள் பன்னிரு திருமுறை.  பன்னிரு திருமுறையும் தமிழ்மொழியில் மட்டுமே இருக்கிறது. 
வைணவ சமய இலக்கியங்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்.  நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் அனைத்தும் தமிழ் மொழியில் மட்டுமே இருக்கின்றன. 
இந்தியா முழுவதிலும் உள்ள மிகப் பழமையான சைவக் கோவில்கள் ஏறத்தாழ இருநூற்று எண்பது ஆகும்.  இந்த இருநூற்று எண்பது கோவில்களில் இருநூற்று எழுபத்து நான்கு கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன. 
இந்தியா முழுவதிலும் உள்ள மிகப் பழமையான வைணவக் கோவில்கள் நூற்று எட்டு.  இதில் தொண்ணூற்றாறு கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன. 
சைவ சமயத்தின் தலைமைக் கோவில் சிதம்பரம் நடராசர் கோவில்.  சிதம்பரம் தமிழகத்தில் இருக்கிறது.

வைணவத்தின் தலைமைக் கோவில் திருவரங்கத்தில் உள்ளது.  திருவரங்கம் தமிழகத்தில் இருக்கிறது.

 தமிழ்நாட்டில் உருவான சைவம், வைணவம் ஆகிய இரண்டற்கும் ஒரு பொதுப் பெயர் கொடுக்க வேண்டுமானால் அது “தமிழர் சமயம்” என்று இருப்பதே பொருத்தமானது.  சைவம், வைணவம் ஆகிய இந்து மதம் தமிழர்களின் தமிழர் சமயம் என்பதில் ஐயமில்லை.