மன அமைதி இன்மை..மன அமைதி !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:10 | Best Blogger Tips

இப்பதிவை வெறுமனே படிக்க வேண்டும் என்பதற்காக படிக்காமல் கூறப்பட்டுள்ள பிரச்சனைகள் உங்கள் வாழ்விலும் உண்டா அதை தீர்க்க என்ன முயற்சிகள் செய்தோம் என்பதை மனதாற சிந்தியுங்கள்.

பெரும்பாலான மக்களின் அடிப்படை பிரச்சனை மன அமைதி இன்மை..மன அமைதி என்பது வெறுமனே ஆன்மீகவாதிகளுக்கான அடிப்படை தேவை என்பது பலருடைய அடிப்படை எண்ணம்..ஆனால் அது முற்றிலும் தவறான ஒரு கருத்து...மன அமைதி என்பது குழந்தை முதல் முதியோர் வரை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய ஒன்று...


இன்றைய சமூகம் லட்சக்கணக்கான பிரச்சனைகளை எதிர்நோக்கிய வண்ணமுள்ளது...ஒரு சாதாரண மனிதனுக்கு கூட ஆயிரக்கணக்கான பிரச்சனைகள்..துன்பங்கள்,கஸ
்டங்கள்,மன உளைச்சல்.இதுவே வாழ்வின் தடைகள்.முன்னேற்றத்தின் எதிரிகள்


கணவன் மனைவிக்கு இடையிலான புரிந்துணர்வின்மை,மனைவி மீது கணவனுக்கு சந்தேகம்,கணவன் மீது மனைவிக்கு சந்தேகம்,பிள்ளைகள்,உறவினர்
மூலம் ஏற்படும் மன உளைச்சல்,வேலை பார்க்கும் இடத்திலான மன நெருக்கடிகள்...பணக்கஸ்டம்,ஏற்றத்தாழ்வு மனப்பாங்கு இப்படி எண்ணிலடங்காத கஸ்டங்களுக்கு மனிதன் முகம் கொடுத்து வருகின்றான்.தொடர்ச்சியாக இப்படியான அழுத்தங்களுக்கு உட்படும் மனிதன் ஒரு கட்டத்தில் வாழ்க்கையின் பாதை மாறி தவறு செய்யத்துணிகின்றான்...சமூக அந்தஸ்தை இழக்கின்றான்..அது தொடர்பாக ஆரய்வதும் அதை தீர்ப்பதற்கான சில வழிமுறைகளையும் அது தொடர்பாக இந்து தர்மம் கூறும் தியான முறைகளை பற்றிய விளக்கமே இந்தப்பதிவின் நோக்கம்...



வாழ்வின் ஏற்படும் அதிகமான பிரச்சனைகளுக்கு என்ன காரணம்???..சற்று உங்கள் வாழ்க்கையை நோக்குங்கள்..ஏன் இம்மாதிரியான பிரச்சனைகள் தோற்றம் பெருகின்றது....???


1.கணவன் மனைவி இடையே ஏன் சண்டை வருகின்றது------விட்டுக்கொ
டுக்காமை, புரிந்துணர்வினமை,தாழ்வு மனப்பாங்கு, ஆணவம்,சந்தேகம்

2.வேலைத்தள மன முருகல் ஏன் வருகின்றது ----ஆணவம்,கோபம்,வெறுப்பு(வ
ேலை மீதும் உடன் பணி புரிவோர் மீதும் )

3.பணக்கஸ்டம்---வேலைவாய்ப்ப
ு இன்மை.அதாவது உங்களுக்கு தகுந்த துறையை உங்களால் தேர்ந்தெடுக்க இயலாமை அல்லது முயற்சி இன்மை,வரவுக்கு மிஞ்சிய செலவு


4.குழந்தைகள்/
பெற்றோர்களுடனான மனவருத்தங்கள் ஏன் ஏற்படுகின்றது-----அளவுக்கு மிஞ்சிய கட்டுபடத்தல்,சந்தேகம்,பிள்ளைகளுடன் மனம் திறந்து பேசாமை, நான் பெரியவர் என் சொல்லை கட்டாயம் கேட்க வேண்டும் என ஒருபக்க சார்பான முடிவுகளை எடுத்தல்



இவை போக மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றது இந்தச்சமூகம்.இவற்றுக்கு தீர்வு இல்லையா???இதுதான் விதியா??? நிச்சயம் உண்டு...


கீழ் குறிப்பிட்ட செய்முறைகளை ஒரு மனதோடு பூரண நம்பிக்கையோடு முயற்சி செய்யுங்கள்....உங்கள் வாழ்வில் பெரும் மாற்றாங்கள் நிச்சயம் ஏற்படும்...

எல்லா பிரச்சனைகளுக்கும் அடிப்படை அல்லது அத்திவாரமான காரணம் மன அமைதி இன்மை.படபடப்பு,கோபம்,தகுந்
த முடிவு எடுக்க இயலாமை...

இவற்றை விஞ்ஞானமும் பூரணமாக ஏற்றுக்கொள்கிறது...மன அமைதியை எவ்வாறு ஏற்படுத்தலாம்???..அதற்கு என்ன வழி ????..அதற்காக துறவறம் பூண்டு சாமியார் ஆக வேண்டுமா????இல்லவே இல்லை....ஒரு நாளில் 20 அல்லது 30 நிமிடங்களை இதற்காக ஒதுக்குங்கள்


தியானம் அல்லது யோகா அல்லது மூச்சுப்பயிற்சி செய்யுங்கள்....


தியானம் என்றாலென்ன ???..மனதை ஒருமுகப்படுத்துதலே தியானம் எனப்படுகின்றது...மனதை ஒருமுகப்படுத்தும் போது அன்பு பெருகும் ...பிரச்சனைகளை எதிர்நோக்கும் தைரியம்,மன அமைதி , விட்டுக்கொடுக்கும் தன்மை , தெய்வீக இயல்பு என்பன ஏற்படும் என்பது பல ஆராய்ச்சி முடிவு


பலருக்கு தியானம் எப்படி செய்வது?/என்ன செய்ய வேண்டும் என்பதே தெரியாது...அதை பற்றிய விளக்கத்தை இனி பார்ப்போம்...


தியானம் பற்றி கிருஸ்ண பரமாத்மா அருளிய ஸ்ரீமத் பகவத்கீதை என்ன சொல்கின்றது என்பதை பார்ப்போம்..
பகவத்கீதையின் 6ம் அத்தியாயம் அதாவது தியான யோகம் இது பற்றி கூறுகின்றது..


தியானம் எப்படி செய்வது...பின்வரும் ஒவ்வொரு செயல்களையும் நேர்த்தியாக செய்யுங்கள்.



1..பூமியில் இருந்து 1 அல்லது 2 அடி உயரமான இடத்தை தெரிவு செய்யுங்கள்...அல்லது சிறு உயரத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்

2..நீங்கள் தெரிவு செய்த இடம் உறுதியாக அதாவது ஆடாமல் இருக்கும் படி செய்யவேண்டும்

3 தெரிவு செய்த இடத்தில் பஞ்சு அல்லது மென்மையான துணியால் விரித்துக்கொள்ளுங்கள்..

4.கண்களை இலேசாக முழுமையாக மூடுங்கள்...(இறுக்கமாக மூடாமல்)

5.மூடிய கண்களை மூடியவாறே மூக்கு நுனியை அல்லது புருவ மத்தியை பார்ப்பது போன்று வைத்துக்கொள்ளுங்கள்

6.மூச்சை முடிந்த வரை மெதுவாக ஆழமாக உள் எடுங்கள்

7..பின்பு மூச்சை மெதுவாக மிகவும் அமைதியாக வெளிவிடுங்கள்...வெளிவிடும்
போது ஓம் என்ற பிரணவ மந்திரத்தை மெதுவாக (குறைந்த வேகத்துடன்) சொல்லுங்கள்...


(தர்மத்தின் பாதையில் (page)))

இதுவே தியானம் செய்வதற்கான அடிப்படை முறை.

சிலருக்கு தியானம் செய்யும் போது மனம் ஒரு நிலையில் இருக்காது..பல எண்ணங்கள் தோன்றும்...நித்திரை ஏற்படும், எரிச்சலாக இருக்கும் ,திடீரென தியானத்தை முடித்துக்கொண்டு எழும்பி வேறு வேலைகளில் ஈடுபட தோன்றும்....இது புதிதாக தியானம் செய்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சைனையே.....


இதையே பகவான் கிருஸ்ண பரமாத்மா பின்வருமாறு கூறுகின்றார்...6ம் அத்தியாயத்தில் 35 ஆம் வசனத்தில்



“மனம் என்பது அடங்காதது.அலைபாயக்கூடியது.
..ஆனால் அப்பியாசத்தாலும்(பயிற்சி) வைராக்கியத்தாலும்(மனஉறுதி) அடக்க முடியும்...”

என்கிறார் பரமாத்மா...


ஆகவே ஆரம்பகட்டத்தில் தியானத்தின் போது மனம் அடங்காமல் அலைபாயும் எனினும் தொடர்ந்து மன உறுதியுடன் முயற்சித்து வருவீர்களேயானால் நிச்சயம் பலன் உண்டு என்கிறார் பரமஹம்சர்




ஆகவே தியான யோகத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் எம் பக்கத்தை தனிப்பட்ட முறையில் (message) தொடர்பு கொள்ளுங்கள்...

எல்லாம் வல்ல இறைவன் பரந்தாமன் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி உங்களுடன் துணை இருப்பார்...


ஜெய் ஸ்ரீ ராம்
Thanks to தர்மத்தின் பாதை