எதுவும் நிரந்தரம் கிடையாது

மணக்கால் அய்யம்பேட்டை | 9:43 AM | Best Blogger Tips

Fact Check: Arnold Schwarzenegger sleeping in Front of his Statue

எதுவும் நிரந்தரம் கிடையாது
 
அர்னால்டின் வாழ்க்கை உதாரணம்.
 490. எதுவும் நிரந்தரமில்லை | வேதாவின் வலை..
தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப நிலை
நடிப்பில் படிப்படியாக உயர்ந்து கலிபோர்னியாவின் கவர்னர் என்ற புகழின் உச்சத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய வெண்கலச் சிலை முகப்பில் நிறுவப்பட்ட வகையில் ஒரு ஆடம்பர ஹோட்டலை திறந்து வைத்தார்.
 
ஹோட்டலின் திறப்பு விழாவின் பொழுது அந்த ஆடம்பர ஹோட்டலின் உரிமையாளர் "அர்னால்டு எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஹோட்டலுக்கு வந்து முன் பதிவு ஏதும் இன்றி இலவசமாக தங்கிக்கொள்ளலாம், அவருக்கு எப்பொழுதுமே ஒரு அறை இருக்கும்" என்று அறிவித்தார் 
 
நாட்கள் நகர்ந்தன ...
 
பதவி போனது ..
 
புகழ் போனது ..
 
சமீபத்தில் சாதாரண மனிதனாக அந்த ஹோட்டலுக்கு சென்ற அர்னால்டுக்கு அதிர்ச்சி காத்திருந்தது 
 
ஹோட்டலில் எல்லா அறைகளும் புக்கிங் ஆகிவிட்டது தற்பொழுது அறைகள் ஏதும் இல்லை என்று ஹோட்டல் நிர்வாகம் கூறவே அதிர்ச்சியில் உறைந்து போனார் ஹாலிவுட் முன்னாள் ஹீரொ, கலிபோர்னியா முன்னாள் கவர்னர், அந்த ஹோட்டலை திறந்து வைத்த முன்னாள் வி.ஐ.பி "அர்னால்டு ஸ்குவாஸுனேக்கர்"
மனமுடைந்த அர்னால்ட், 
 
தான் வைத்திருந்த போர்வையை எடுத்துக்கொண்டு அந்த ஹோட்டலின் முகப்பில் தன்னால் திறந்து வைக்கப்பட்ட, வெறும் அலங்கார பொருளாக நின்றுக்கொண்டிருந்த தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன்னர் செய்வதறியாது படுத்து விட்டார் 
 
இந்த சம்பவத்தால் துவண்டு போன அர்னால்ட் அந்த காட்சியை புகைபடம் எடுத்து வலைதளத்தில் பதிவிட்டு உலகத்திற்கு ஓர் செய்தியை சொல்கின்றார்
 
"நாம் பதவியில் இருக்கும் பொழுது மெச்சப்படுவோம், புகழப்படுவோம், நமக்கு உச்சபட்ச மரியாதை தரப்படும்" 
 
"எப்பொழுது நாம் பதவியையும், புகழையும் இழக்கின்றோமோ அடுத்த நொடியே நாம் ஒதுக்கப்படுவோம், 
 
நமக்கு தந்த சத்தியங்கள் காற்றில் பறக்கவிடப்படும்" 
 
"எந்த சத்தியங்களும், வாக்குறுதிகளும் உங்களுக்காக கொடுக்கப்பட்டது அல்ல அது உங்களை அலங்கரித்த பதவிக்கு கொடுக்கப்பட்டது"
 
"உங்கள் புகழை, 
 
உங்கள் பதவியை, 
 
உங்கள் அதிகாரத்தை ஒரு போதும் நம்பாதீர்கள்" 
 
"இது எதுவுமே நிரந்தரம் கிடையாது"


❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 

தாலி...!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:38 AM | Best Blogger Tips

தாலி அணியும் முறை | Thali saradu palangal in Tamil


பெண்ணுக்கு மார்பு குழியில் ஒரு நரம்பு முடிச்சு இருக்கிறது இது ஆணுக்கு இல்லை... இந்த நரம்பு முடிச்சு மூளையில் பேசல் ரீஜன் பகுதியோடு தொடர்பு ஏற்படுத்தும் வேலை செய்யும்... 
 
இது பெண்ணுக்கு இரண்டு நரம்புகள் கொண்ட பாதையாகவும், 
 
ஆணுக்கு ஒரு நரம்பு கொண்ட பாதையாகவும் இருக்கிறது... 
 
இதனால் ஆணை விட பெண்ணுக்கு அதிக நியாபக சக்தியை உண்டாக்குகிறது.....!
 பகுத்தறிவுவாதிகளின் தாலி பறிப்பும், பஞ்சாலைகளின் சுமங்கலித் திட்டமும்
இந்த அதிக நியாபக சக்தியால் ஆணை விட பெண்ணுக்கு சில குழப்பங்களையும் கொடுக்கிறது... 
 
ஒரு பெண் ஒரு விசயத்தில் ஒரு முடிவு எடுத்துட்டு பின் அதனால் குழப்பம் அடைவதற்குக்கு இதுதான் காரணம்.....!
 அடேங்கப்பா.. தாலி கட்டுவதற்கு ...
இதை கண்டறிந்த ஒரு ஞானி ராஜராஜ சோழன் இடம் சொல்ல அதற்கு மருந்து கண்டு பிடிக்க முடிவு
 
செய்து அதன் படி ஒவ்வொரு உலோகத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு அதன்படி தங்கத்திற்கு இருக்கும் மருத்துவ குணத்தை கண்டறிந்து, 
 
அந்த தங்கம் பெண்ணுடைய மார்பு குழியில் எப்போதும் உரச உரச பெண்ணிற்கு நன்மை தரும் என்று இந்த "தாலி" முறைய கொண்டு வந்தாங்க. 
 தாலி கட்டும் பொழுது மூன்று முடிச்சு போடுவதின் காரணம் என்ன? - ஐபிசி பக்தி
அது சரியாக மார்புகுழி இடத்தில் வரவேண்டும் என்று மூன்று முடிச்சு போட்டால் மார்பு குழியில் வரும் என்று ஒரு கணக்கு போட்டார்கள்.
 தாலி கயிற்றை எந்த கிழமையில் மாற்ற வேண்டும்? இந்த நேரம் மாற்றினால் சிறப்பாம்  - மனிதன்
இந்த "தாலி" முறையைத்தான் இப்போது வரை நாம் பயன்படுத்துவது.
 
. . . படித்ததில் பிடித்தது.
 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷  No photo description available. 🌷 🌷🌷 🌷

 

 

💢லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர் !💢

மணக்கால் அய்யம்பேட்டை | 4:39 PM | Best Blogger Tips

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து l Pandey speech in Trichy NR IAS academy 

 

அரசு பணியில் பல துறையில் பணியாற்றி உள்ளேன். சம்பளத்தை விட கிம்பளம் (லஞ்சம்) நிறையவே பெற்று சந்தோஷமாக இருந்தேன்.


ஆண்டவன் நம்மை நல்லா வச்சிருக்கான் என்று சந்தோஷமாக கோவிலுக்கு சென்று பூஜை புனஸ்காரம் செய்து வந்தேன்.


எனக்கு ஒரே மகன். நல்லா எம்.பி.ஏ. வரை படிக்க வச்சேன். 


ஒரு கிரவுண்ட் இடம் வாங்கி கார் பார்கிங், வீடு, கார், தோட்டம் என நாங்கள் சந்தோஷமாக இருந்தோம்.


நானும் ஓய்வு பெற்றேன். 


என் மகனுக்கு திருமணம் செய்து வைத்து, சென்னையில் ரூ.80,00,000-தில் பிளாட் வாங்கி குடியேறினேன்.

மருமகளும் கர்ப்பமாக இருந்தாள். 


7-ம் மாதம் சீமந்தம் வைக்க ஏற்பாடு செஞ்சிக்கிட்டு இருந்தேன். ஒரு போன் வந்து என்னை தூக்கி போட்டது. போனில், அவர் சொன்ன விசயம்...
"உங்கள் மகன் பைக் விபத்தில் அரசு மருத்துவமனையில் உள்ளார் வந்து பாருங்க..." என்று.


விழுந்தடித்து சென்று பார்த்தேன். 


என் மகன் கோமா நிலைக்கு தள்ளப்பட்டான். என் மருமகளுக்கு ஆண் பிள்ளை பிறந்தது. ஆனால் என் மகன் இரண்டு மாதத்தில் உயிர் பிரிந்து விட்டான்.

என் மருமகள் அவர்கள் வீட்டுக்கு குழந்தையுடன் சென்று விட்டாள். பின்னர் அவளுக்கு ஜீவனாம்சம் மற்றும் பேரன் வாழ்க்கை செலவு என வழக்கு தொடர்ந்து எங்கள் சொத்துக்களை எல்லாம் வாங்கி கொண்டாள்.

இப்போது எனக்கு கிடைக்கும் பென்சனை வச்சுத்தான் காலம் போகுது. சாப்பாடு செலவுகள், வீட்டுக்கு வாடகை போக முட்டி வலி, சர்க்கரை போன்ற நோய்கள் பற்றிக்கொண்டதால் மருந்து செலவு வேறு...

அப்போது தான் யோசித்தேன்,
'ஏன் நம் வாழ்க்கை இப்படி ஆனது என்று...'
என் மனம் சொன்னது, 'நீ வாங்கிய லஞ்சம் தான் உன் வாழ்வை சீர்ழித்தது.
..' என்று.
'சரி... லஞ்சம் வாங்காமல், என்னுடன்
சம காலத்தில் பணிபுரிந்த என் நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டேன்.'அவர் என் நிலை கண்டு மனம் சங்கடப்பட்டார்.


'சரிப்பா நீ எப்படி இருக்க..?' என கேட்டேன்.அவர் சொன்னார்,
"நிம்மதியாக இருக்கேன்...உண்ண உணவு, உடுக்க உடை, பேரன் பேத்தி, ஓய்வு பணத்தில் சிறியதாக ஒரு வீடு, பையன், பொண்ணு தனியார் கம்பெனி வேலை...நானும் என் மனைவியும் நிம்மதியாக இருக்கோம்.." என்று சொன்னார்.
லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!
என்னை யாரோ செருப்பால் அடித்தது போல் உணர்ந்தேன்.நானும் கோவிலுக்கு போனேன் விபூதி குங்குமம் வைத்தேன். அபிஷேகம் எல்லாம் செஞ்சேனே. எனக்கு மட்டும் ஏன் இப்படி..? உணர்ந்தேன் நாமும் கோவிலுக்கு போனது பத்துல ஒண்ணா போச்சே. நல்லா இருக்கும் போது உண்மையை உணரவில்லையே.உயிரற்ற பொருள் வாங்கி குவித்தேன். என் உயிர் உள்ளே உள்ள பொருளை இழந்தேன்.

LEGAL AWARENESS AND ANTI-CORRUPTION ORGANIZATION: லஞ்சம் தவிர் ! நெஞ்சம்  நிமிர் !!
இன்று...வாழ்க்கையை இழந்து நிற்கிறேன்.

💢அரசன் அன்று கொல்வான்.


💢தெய்வம் நின்று கொல்லும்.


💢மக்களுக்கு செய்யும் சேவையே.


💢மகேசனுக்கு செய்யும் சேவை.

Lanjam Thavir Nenjam Nimir - YouTube

@ ஓய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரியின் ஒப்புதல் புலம்பல் இது. 

True story of a Government staff.

லஞ்சம் வாங்கும் அனைவருக்கும் நல்ல பாடம்...!!!
தெரிந்து கொள்ளுங்கள் - லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!!!
இந்த பதிவு சற்று எல்லோருக்கும் சென்றடைய செய்யவும். அப்படியே EB , RTO, Corporation, Taluka, Registration Office-யில்  பணி புரிபவர்களை இந்த பதிவை படிக்க வைத்தால் நல்லது.

💢லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர் !💢

ஒரு நண்பரின் பதிவு 
உண்மை, நீதித்துறை சம்பந்த பட்டவர்( ex ஜட்ஜ்)☝️

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of 1 person, horizon, lake and twilight  🌷 🌷🌷 🌷




 

 

தஞ்சாவூர் மாநகர் உருவான விதம் மற்றும் அதன் நீர்மேலாண்மைப்....

மணக்கால் அய்யம்பேட்டை | 5:38 PM | Best Blogger Tips

May be an image of 5 people, monument and temple 

 

தஞ்சாவூர் மாநகர் உருவான விதம் மற்றும் அதன் நீர்மேலாண்மைப் பற்றிய பதிவு.
 
தஞ்சாவூர்: 
 
ஆஹா என்ன அழகு எத்தனை அழகு...
கண்ணையும், மனதையும் தழுவி நெஞ்சை நிறைக்கும் தஞ்சையில் உள்ள அனைத்தும் அழகோ அழகுதான்.
 
நம் முன்னோர்கள் சிறந்த அறிவு ஜீவிகள்.
முக்கியமாக #நீர்மேலாண்மையில் சிறந்தவர்கள்.
அதனால்தான் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் பொருட்டு தஞ்சையில் குளங்கள் வெட்டினர்.
 May be an image of 3 people, street, temple and text
சோழமன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தஞ்சை நகரை சுற்றிலும் நான்குபுறமும் தொடர்ச்சியாக தண்ணீர் பயணிக்கக்கூடிய அகழிகள் அமைக்கப்பட்டன. 
 
அன்றே தண்ணீரின் அவசியத்தையும், மேன்மையையும் உணர்ந்து பரந்து, விரிந்து சென்றது.
 May be an image of 6 people and temple
இப்படி பல கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த அகழியில் காவிரி நீரும் மழைநீரும் சேமிக்கப்பட்டன.
 
இதுமட்டுமல்ல பெரிய கோவில் அருகே சிவகங்கை குளம், அய்யன் குளம், சாமந்தன் குளம் உருவாக்க ப் பட்டது. 
 
பெரியக்கோவிலில் விழுக்கின்ற மழை நீரானது வீணாகமல் அருகில் உள்ள சிவகங்கை குளத்திற்கு
சென்றடையும். 
 தஞ்சாவூர் - தமிழ் விக்கிப்பீடியா
சிவகங்கை குளம் நிரப்பினால் அதிகபடியான நீர் ஊரின் மத்தியில் உள்ள ஐயன் குளத்தில் சேரும் படியான நீர்மேலாண்மை அமைப்பை ஏற்படுத்து இருக்கின்றனர் நம் முன்னோர்கள்.
 Tanjore: Discovery of tunnel waterway from Ayyankulam to Sivagangai pond |  தஞ்சை: அய்யன்குளத்தில் இருந்து சிவகங்கை குளத்திற்கு சுரங்கவழி நீர்ப்பாதை  கண்டுபிடிப்பு...!
அவ்வாறை தஞ்சைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டினார் பாண்டிய மன்னன் வல்லபனுக்கு சேனாதிபதியாய் இருந்த சாமந்தன் என்பவர்.
தஞ்சை நகரில் சாமந்த நாராயண விண்ணகரம் என்ற பெருமாள் கோயிலை நிறுவினார்.
 
அந்த கோயிலுக்காக சாமந்த நாராயணக்குளம் என்ற குளம் ஒன்றை வெட்டினார். 
 
பின்னர், அங்கு ஒரு புதுக் குடியிருப்பையும் தோற்றுவித்தார் சாமந்தன்.
 
அப்படி அவர் தோற்றுவித்த குடியிருப்பு மெல்ல மெல்ல வளர்ந்து நாயக்கர்கள், மராட்டிய மன்னர்கள், ஆங்கிலேயர்கள் என பயணித்து #இன்றுதஞ்சைமாநகராய்# பிரமாண்டமாய் மாறியுள்ளது.
 
தஞ்சையில் புதுக்குடியிருப்பு 
 
வரக்காரணாமாய் இருந்த இக்கோயில் கீழவாசல் பகுதியில் கீழை நரசிம்மர் என்ற பெயரில் இன்றும் உள்ளது.
 
தஞ்சைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரிய கோயிலை மட்டும் பார்த்து விட்டு திரும்பாமல் வரலாற்றை தேடி பயணிக்க வேண்டும்.
 
தஞ்சாவூர் மாநகருக்கு தண்ணீர் பிரச்சனையை போக்கும் பல்வேறு குளங்களில் சாமந்தன் குளமும் ஒன்றாகும்
 
மற்றும்
எழில் மிகு குளங்களாக இருந்த அய்யன்குளமும் ஆகும்
 
தஞ்சையில் நீர் மேலாண்மையில் முக்கியமாக விளங்கிய இது போன்ற குளங்களா என்று அனைவரும் வியக்கும் அளவில் இருந்தவை ஆகும்.
இதில் அய்யன்குளத்துக்கு, மன்னர் காலத்தில் பயன்படுத்திய நீர் வழிப்பாதையை கண்டறிந்து,
அவை சீரமைக்கப்பட்டது. 
 
குளத்தை சுற்றிலும் நடைபாதை,
அலங்கார மின் விளக்குகள்,
சுவரில் ஓவியங்கள்
என பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்பட்டு ,மாலைநேரத்தில் பொதுமக்கள் இதில் நடந்து தங்களை ரிலாக்ஸ் ஆக்கி கொள்கின்றனர்.
 
மாலை நேரத்தில் சுற்றுலாவாக வருபவர்களுக்கு இந்த குளங்கள் சிறப்பான ஒரு மகிழ்வை தரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
 Thanjavur Maratha building - ''Mangala Vilas,'' South Main Street can be  made a heritage hotel!!
குளம் தானே என்று நினைப்பதை தவிர்த்து நம் முன்னோர்களின் தொலைநோக்கு பார்வை எப்படி இருந்தது என்பதை பார்க்க வேண்டும்.
 
தஞ்சையின் தென்மேற்கு பகுதியில் பெய்யும் மழைநீரை செவப்பன் ஏரிக்கு வாரிகள் மூலம் கொண்டு வந்து, 
 
நீரை சேமித்து சேற்றை அடியில் தங்கவிட்டு தெளிந்த நீரை மட்டும் குழாய்களின் வழியே சிவகங்கை குளத்திற்கு அனுப்பி அங்குள்ள கிணறுகளில் வண்டல் மண்ணை படியவிட்டு தெளிந்த நீரை சுடுமண் குழாய் வழியாக மேலவீதியில் உள்ள அய்யன் குளத்திற்கு கொண்டு சென்று, 
 
தொடர்ந்து சென்று சாமந்தன் குளத்திற்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டது.
இத்தகைய பெருமை வாய்ந்த சாமந்தான் குளத்தின் 
 
மேல்புறத்தில் படிக்கட்டுகளும், குளத்தை சுற்றிலும் 
 
அலங்கார மின்விளக்குகள்,
நடுவில் நீராழி மண்டபம், 
 
அதில் பக்தர்கள் சென்று வழிபடும் வகையில் பாலங்கள் அமைக்கப்பட்டன.
காவேரி நதி நீா் பாய்ந்து வளம் சோ்த்தாலும், விவசாயம் முதன்மைத் தொழிலாக இருப்பதால்
தஞ்சாவூா் மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப் படுகிறது.
இம்மாவட்டத்தில் உள்ள
கோயில்கள், 
 
கலைகள்,
கட்டிடக்கலைகள் உலகப்புகழ் பெற்றவை. 
 
சோழா்கள், 
 
பாண்டியா்கள், 
 
நாயக்கா்கள், 
 
மராட்டியா்கள் ஆட்சியின் கீழும் இந்தியா சுதந்திரம் அடையும் வரை பிரிட்டிஷாரின் ஆட்சியன் கீழும் இருந்தது. 
 உலகிலேயே 2000 ஆண்டுகள் பழமையான தமிழனின் கட்டுமானம் - கல்லணை | history of  kallanai dam in tamil | - YouTube
May be an image of 4 people, monument, temple and castle
கல்லணை,
 May be an image of 1 person, monument, twilight, temple, castle and text
தஞ்சை பெரிய கோயில்,
 
சரபோஜி மஹால் அரண்மனை,
 வரலாற்றுச் சிறப்பு மிக்க சரஸ்வதி மகால் நூலகம்
சரஸ்வதி மஹால் நூல்நிலையம்,
 ஆசியாவின் மிக பழமையான நூலகம்.. அதுவும் நமது தஞ்சையில்! யாரும் மிஸ் பண்ணாம  அந்த பொக்கிஷத்த பாத்துருங்க..! | தஞ்சாவூர் - News18 தமிழ்
பீரங்கி மேடை 
 தஞ்சாவூர் பீரங்கி - தமிழ் விக்கிப்பீடியா
மற்றும் 
 
பல புராதண சின்னங்கள் மேற்கண்ட 
 spiritual Tour Thanjavur cannon Rajagopala Beerangi standing majestically  for 400 years TNN | Thanjavur cannon: கம்பீரமாக 400 ஆண்டுகளாக நிலைத்து  நிற்கும் தஞ்சாவூர் பொக்கிஷம் ராஜகோபால ...
ஆட்சியாளா்களின் ஆளுகைக்கு உட்பட்டு தஞ்சை மாவட்டம் இருந்ததை எடுத்துக்காட்டும் வரலாற்று நினைவுச் சின்னங்கள் ஆகும்.
 Trichiites on X: "Thanjavur Old Bus Stand in 1959.❤️ #CentralRegion #Trichy  #Tanjore https://t.co/1mqRyuaOaM" / X

Thanks to https://harithiagarajan.blogspot.com/.../blog-post_20.html 

 May be an image of 6 people, temple and text that says "Infinix InfinixHOT10S HoT HOT10 10S"

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of 3 people and temple🌷 🌷🌷 🌷

 

இந்திய மார்க்கெட்டை குறிவைக்கும் GST 2.0

மணக்கால் அய்யம்பேட்டை | 10:55 AM | Best Blogger Tips

 

 May be an image of 7 people and text that says "Modi promises big Diwali gift! InTOA 24X7 24X In a big cheer for the middle class and common man, Prime Minister Narendra Modi announced upcoming Goods and Services Tax (GST) reforms. Speaking from Red Fort on the occasion of the 79th Independence Day, PM Modi promised a Diwali gift for people in the form of GST reforms and lower tax burden. While speaking the PM said, "This Diwali, am going to make it double Diwali oryou." LAUNDRIMAGIC A'S FIRST 3in1 3 2HOUR WASH+ DRY SDRYINO MODLS IFB &VOICE ENABLED STEAM REFRESH 73วิก"

 

 Double Diwali Gift': PM Narendra Modi Announces Next-Gen GST Reforms From  Red Fort | Republic WorldPM Modi Announces Major GST Overhaul, Says It Will Be a ‘Double Diwali’ for  Citizens

இந்திய மார்க்கெட்டை குறிவைக்கும் GST 2.0 - சோலி முடிஞ்ச மேற்கத்திய மார்க்கெட்!
PM Modi Promises Diwali Gift A GST Overhaul: A Bold Move Towards Economic  Reform
 சில நேரங்களில் நண்பர்களை விட எதிரிகள் நமது வளர்ச்சிக்கும், சாதனைக்கும் ஒரு போட்டியை விதைத்து, கிரியா ஊக்கியாக இருப்பதுண்டு. அமெரிக்கா இந்தியாவின் நண்பராக இருந்துகொண்டே எதிரான செயல்களை ரகசியமாக செய்து கொண்டிருந்ததால், இந்தியா அவர்களை நேரடியாக எதிர்ப்பதில் சிக்கல் இருந்தது. 

அதனால் பல முடிவுகளை அரைகுறையாக கையாள வேண்டியிருந்தது.   அது இந்தியாவின் நோக்கத்தை, வளர்ச்சியின் வேகத்தை குறைக்க அதுவும் ஒரு காரணமாக இருந்தது.

இப்போது நண்பர் ட்ரம்ப் இந்தியாவிற்கு எதிரானதால், இப்போது இந்தியா முழு வீச்சில் உத்வேகத்தை கொடுத்துள்ளது. பல நேரங்களில் இந்தியாவின் வளர்ச்சி என்பது நம் நாடு பிரச்சினைகளை சந்தித்தபோதே சாதித்தோம் என்று சொல்லும் வரலாற்றில் மிகையில்லை.
Prime Minister Narendra Modi says, “This Diwali, I am going to make it a  double Diwali for you. Over the past eight years, we have undertaken major  reforms in GST. We are
அமெரிக்க, ஐரோப்பிய சந்தையை மையமாக வைத்து நம் தொழில்களும், இண்டஸ்ட்ரிகளும் இயங்கிய வேளையில், அவை எட்டாக்கனியாகி, ஏற்றத்தாழ்வுடன், நிரந்தரமல்ல என்று மாறி வருவதால், இந்தியாவின் சந்தைக்கு முக்கியத்துவத்தை கொடுக்க துவங்கியுள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு சந்தை வளர்ச்சியை பாதித்த ஒரு விஷயம், மிக அதிகமாக போடப்பட்ட வரிகள். அதில் இரண்டு விஷயங்கள் நடந்தது, ஒன்று கடுமையான வரியை செலுத்தி அந்த பொருளை வாங்க விருப்பமில்லாமல் பர்மா பஜார் போன்று க்ரே மார்கெட்டில் வாங்க தூண்டியது. ஆம் ₹50,000 டிவிக்கு ₹14,000 வரி செலுத்தினால் வலிக்காதா? அதனால் வரி இழப்பு ஏற்பட்டது.

இரண்டாவதாக அந்த வர்த்தகம் கணக்கில் வரவில்லை என்பதால் அது இந்தியாவின் GDP யில் வரவில்லை. உபியில் ஒரு வருவாய் துறையின் கீழ் இருந்த ஒரு மாவட்டத்தில் எடுத்த சர்வேயில், கணக்கில் வந்த வியாபாரத்தை விட, கிரே மார்க்கெட்டில் 3.7 மடங்கு அதிகம் விற்பனை நடந்தது தெரிய வந்தது. 
A Double Diwali: PM Modi's GST 2.0 Promise and Vision for a Developed India  - News Tap One
அதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது அளவுக்கு அதிகமான வரியும், எளிமைப்படுத்தப்படாத சட்டங்களும் முக்கியமான காரணமாக இருந்தது. இதில் வரியை குறைத்து, கிரே மார்க்கெட்டில் நடக்கின்ற வியாபாரத்தின், ஒரு மடங்கை உயர்த்தினாலே இந்தியாவின் GDP 8 ட்ரில்லியனை தாண்டிவிடும். இன்னும் இரண்டு பங்கு தொடரவே வாய்ப்புண்டு.

வரிவிதிப்பை குறைக்க காரணம் தேடும்போது வரிக்கான காரணத்தையும் ஆராய வேண்டும். வரி என்பது இரண்டு காரணத்திற்காக செய்யப்படும் செலவுகளுக்கான மூலாதாரம். அதில் இரண்டு விதமான வரிகள் உள்ளது.
Modi Hints At GST Overhaul: Diwali Gift Of Lower Taxes Coming Soon - BT TV  BusinessToday
ஒரு கிராமத்தில் ரோடு பராமரிப்பது, எலெக்ட்ரிசிட்டி, சுகாதாரம், ஊழியர்கள் சம்பளம், கொடுப்பது என்பது போன்ற தவிர்க்க முடியாத செலவுகள், இதை Operational Expenses (OpEx) என்று சொல்வார்கள். 

வருடா வருடம் இந்த செலவுகள் கூடிக்கொண்டே போகும். அப்போது மக்களுக்கு எந்த புதிய வருமானமும் இல்லாதபோது, அந்த கூடுதல் செலவு, அவர்களின் பணவீக்கத்தால் அதிகரிக்கும் செலவுகள், தேவை அதிகரிப்பு என்று செலவினம் அதிகமாகும். 

அப்படியெனில் அந்த கிராமத்து மக்களின் வருமானத்தை பெருக்கவும், செலவுகளை குறைக்கவும் புதிய முதலீடுகளை செய்ய வேண்டும்.  உதாரணமாக, நிலத்தடி நீர் மட்டம் குறைவதால், விவசாய நிலப்பரப்பு குறைந்துவிட்டது. 

அதற்காக நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, அமராவதி ஆற்றில் இருந்து உபரி நீரை ஏற்றம் செய்து ஏரிகளை நிரப்பி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது என்று செய்யப்படும் திட்டத்தால், விவசாயிகளுக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கும். அதனால் அவர்கள் கூடுதல் நிலப்பரப்பில் விவசாயம் செய்வதால் வருமானம் உயரும். 

அந்த முதலீடுகள் கூடுதல் வருமானத்தை மக்களுக்கு கொடுப்பதால், கூடுதல் வரியை பஞ்சாயத்துக்கும் கொடுப்பதில் சிரமமில்லை. 

முந்தய அரசுகள் அப்படி வருமானத்தை பெருக்கு வரிகளை பயன்படுத்தாமல், வெறும் செலவினங்களையும், பேருக்காக சில கட்டமைப்பு திட்டங்களையும் போட்டது. ஆனால் அவை சரிவர செயல்படுத்தாததாலும், அந்த பணம் ஊழலால் திட்டத்தை சரியாக முடிக்காததாலும் அது பயன்தரவில்லை

அதனால் இந்திய அரசு, கட்டமைப்புகளை மேம்படுத்தி வருமானத்தை பெருக்க, மக்களிடம் இருந்து வரியை பெற, கடந்த பத்தாண்டுகளாக கூடுதல் வரியை போட்டது. இந்தியாவில் கட்டமைப்பு என்பது பல ஆண்டுகளாக கவனிக்காமல் விட்டுவிட்டதால் அதற்கான பெரிய தொகை தேவைப்பட்டது.

அந்த முதலீடுகள் இப்போது அரசுக்கும், மக்களுக்கும் பயன்களை தர ஆரம்பித்தாலும், இன்னும் போதுமானதாக இல்லை. அதனால் மக்கள் வருமானத்தை உயர்த்த இந்த வரிகளை குறைக்கிறது அரசு.
அதில் இதுவரை 5%, 12%, 18%, 28% என்று இருந்த வரிகளை 
6%/12% என்றும் 18% என்றும் இரண்டே இரண்டு ஸ்லாப் மட்டுமே இருக்கும். கூடுதலாக சின் டேக்ஸ் என்று ஒரு வரியுண்டு, அது மது, சிகெரெட், ஆன்லைன் கேம்ஸ் போன்று 7 வகையான செலவுகளை அதன் கீழ் கொண்டு வருகிறார்கள்.

அப்படி கொண்டு வருகிறார்கள் என்றால், தமிழகத்தில் டாஸ்மாக்  வருமானம் மத்திய அரசின் GST க்கு கீழே நேரடியாக வந்துவிடும். அப்படியெனில் கணக்கில் வராமல் ஏமாற்றும் லீக்கேஜுகள் குறைக்கப்படுவதால், அரசுக்கு வருமானம் உயரும். 

அதே சமயம், பல பொருட்களுக்கு டேக்ஸ் என்பது மிக அதிகம். உதாரணமாக இன்சூரன்ஸ் எடுப்பது என்பது, ரிஸ்க் கவரேஜுக்காக, அதற்கு 18% வரி போடுவதும், வாகன பராமரிப்பு செலவுககுக்கு 18% வரி போடுவதும் மிக அதிகம். அதனால், மக்கள் லோக்கலாக உள்ளவர்களிடம் பராமரிப்பை செய்வதால் வரி செலுத்துவது இல்லை. 

இதனால் வரி செலுத்தும் நிறுவனங்களுக்கும் வருமான இழப்பு, அரசுக்கும் வரி இழப்பு. இந்த வரியை 6% ஆக குறைக்கும்போது, சர்வீஸ் செண்டர்களுக்கு பராமரிப்பிற்கு கூடுதல் வாகனம் வரும், வருமானம் பெருகும், அரசுக்கு வரியும் அதிகமாகும். ஆனால் வரி குறைத்ததால் ஏற்பட்ட இழப்பை கூடுதல் வால்யூம் மூலம் ஓரளவிற்கு சரி செய்வார்கள். 

அதுமட்டுமல்ல, ஒரு Innova காரின் லாபத்தோடு, அடக்க விலை 14 லட்சம், ஆனால் வரிகளால அதன் விலை 29 லட்சம். அதாவது அதன் வரிகளால் அதன் விலை இரண்டு மடங்காகிவிட்டது. அந்த அடக்க விலையிலேயே பல பொருட்களின் வரியும் அடங்கியுள்ளது. அப்படியெனில் அதன் மீதான வரியை குறைப்பதால்,  காரின் விலை குறையும். 

குறைந்தால் பழைய  வாகனங்களுக்கு பராமரிப்பிற்காக கூடுதல் செலவு செய்வதற்கு பதிலாக புதிய வாகனங்களை வாங்குவார்கள். பழைய வாகனங்கள் விலை குறைவதால், புதியதாக சிலர் கார் வாங்குவார்கள். ஏற்கனவே வசூலிக்கப்பட்ட வரிகள் மூலம் இந்தியா உலகின்னிரண்டாவது பெரிய சாலைகளை கொண்டிருப்பதால், இன்னும் புதிய ரோடுகள் போடப்படுவதால், அந்த கூடுதல் வாகனங்கள் மூலம் மற்ற வருமானங்களும் அதிகரிக்கும். 

இப்போது அமெரிக்க சந்தை மூடப்பட்டால் அதை சமாளிக்க, புதுப்பிக்க, புத்துணர்வு கொடுக்க இந்தியாவின் வரி குறைப்பின் மூலம் மக்களின் செலவினம் அதிகரிக்கும். அதற்காக முக்கிய வரிகளான GST 2.0 என்ற வரி குறைப்பின் மூலம் பெரிய மாற்றத்தை கொண்டுவருகிறது. 

மேலும், நம் மக்கள் ஏன் வெளி நாடு செல்கிறார்கள்? கூடுதல் வருமானம் மட்டுமல்ல, அங்கே இருக்கின்ற உயர்தர கட்டமைப்புகள், வாழ்க்கையின் மேம்பட்ட தரம் போன்றவையால்.  அவை இங்கேயே கிடைத்தால் ஏன் அங்கே செல்ல வேண்டும்?

அதுமட்டுமல்ல, அமெரிக்கா, ஐரோப்பியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் இந்தியாவில் இருக்கும் 140 கோடி மக்களால்,  பெரிய சந்தையாக பார்க்கிறார்கள். ஆனால் நாம் மேலை நாடுகளின் மார்க்கெட் பின்னால் அலைகிறோம். 

நாம் மூலப்பொருட்களையும், உதிரி பாகங்களை மேலை நாடுகளுக்கு அனுப்புகிறோம். அவர்கள் அதை பொருளாக்கி அதிக விலைக்கு நம்மிடம் விற்கிறார்காள். இப்போது அமெரிக்கா கூடுதலாக வரி விதிப்பதால், அந்த பொருட்களின் விலை உயரும். அப்போது நாம் அதே பொருளை விலை குறைவாக, நல்ல தரத்தோடு விற்றால், யார் பொருளை வாங்குவார்கள். 

இது ஏற்கனவே மத்திய அரசின் திட்டத்தில் செயல்படுத்த இருந்தாலும், நாம் இன்னும் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டி இருந்தது. ஆனால் ட்ரம்பரின் மூடிய அமெரிக்க சந்தையால், இந்தியாவின் வருமானம் குறையும் என்பதால், லோக்கல் சந்தைக்கு புத்துணர்வு கொடுக்க போகிறது இந்த வரிகுறைப்பு.

அதன் மூலம் இப்போது இருக்கும் 5%, 12%, 18%, 28% என்ற நான்கு வரி விதிப்புகள், 6% , 18% என்று இரண்டே அடுக்காக மாறுகிறது. அதன் மூலம் விலைவாசிகள் பெருமளவில் குறையும் என்பதால் வாங்கும் திறன் உயரும். அதில் சின் டேக்ஸ் என்பது 40% ஆகும், அது சிகெரெட், மது, சூதாட்டம் போன்ற 7 பொருட்களுக்கு மட்டுமேயானது.

Breakup of Tax Components (FY 2024-25)  22 Lakhs Crores - Thanks to Perplexity

The gross GST revenue collected in FY 2024-25 consisted of the following components: 

1) Central Goods and Service Tax (CGST): ₹4,13,776 crore

2)State Goods and Service Tax (SGST): ₹5,16,448 crore

3) Integrated Goods and Service Tax (IGST): ₹11,25,335 crore 

அதில் ஸ்லாப் வாரியாக

18% slab: ~70–75% of GST revenue
28% slab: ~13–15%
12% slab: ~5–6%
05% slab: ~6–8%

இதில் எல்லாவற்றையும் குறைக்கு மாட்டார்கள், சிலவற்றை உயர்த்தவும் வாய்ப்புண்டு. அதன் மூலம் ஒரு பக்கம் இழப்பை கூட்ட, மறுபக்கம் வருமானத்தை உயர்த்த, வரி ஏய்ப்பை தடுக்க என்பதன் மூலம் மட்டுமல்ல, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுகு வரி விதிப்பார்கள். அதனால் அவர்களின் செலவினம் அதிகரிக்கும். 

அப்போது அமெரிக்க, ஐரோப்பாவில் இருக்கும் தொழில்கள் நசிவடையும், அமெரிக்க கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு லாபம் மட்டுமே நோக்கம் என்பதால், அவை இந்தியாவை நோக்கி. படையெடுப்பார்கள்.

அதனால டாலர் வருமானம் இழப்பு ஏற்படுமே? நாம் டாலருக்கு மாற்றாக ஒரு கரண்சியை நோக்கி செல்கிறோம். இந்திய ரூபாயையே டாலருக்கு மாற்றாக்கலாம்..

இதை தீபாவளி பரிசாக மோடி நமக்கு கொடுக்க அவரது நண்பர் ட்ரம்பின் அழுத்தங்கள் காரணம் என்றால் அதில் தவறில்லை. ஆனால் இதில் மாநில அரசும் முடிவெடுக்கு வேண்டுமே? அதை எப்படி தன்னிச்சையாக மோடி இப்போதே அறிவிக்கலாம்?

இப்போது மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது என்பதால், அதை தடுக்கு முடியாது. மாறாக மாநிலங்கள் தங்கள் வருமானத்தை பெருக்காவிட்டால், மற்ற மானிலங்களோடு போட்டியிட்டு அதனால்  நிர்வாகம் செய்ய முடியாது. அதற்கு ஒரு பக்கம் வருமானத்தை கூட்ட வேண்டும், மறுபக்கம், ஊழலை குறைத்தாக வேண்டும்.

எனவே இந்திய சந்தையும், பங்கு மார்க்கெட்டும், தீபாவளி முதல் ஒரு பெரிய உயர்வை சந்திக்கும்

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 No photo description available.  🌷 🌷🌷 🌷