மாபெரும் மாற்றத்திற்கான

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:40 | Best Blogger Tips

 



ஒரு மாபெரும் மாற்றத்திற்கான

முதல் அத்யாயத்தை பிரதமர் மோடிஜியின் தலைமையிலான இந்தியா உலகத்தின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது...!

ஆமாம் இந்தியாவின் ஆளில்லா,

ரகசிய, ஆயுதம் தாங்கிய விமானமான GHATAK கின் ஸ்கேல் மாடல் swift ஐ இந்தியா வெற்றிகரமாக சோதித்து கொண்டுள்ள நிலையில் அந்த விமானத்தை இந்தியா காட்சி படுத்தியுள்ளது..


Ghatak ஒர்ஜினல் விமானம் 2024 ல் சோதிக்க பட உள்ளது. அந்த விமானத்தில் மேட் இன் இந்தியா காவேரி இன்ஜின் பொருத்தபட உள்ளது..

படிப்படியாக இந்த தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்று விட்டு, பின் அதில் டர்போரேம்ஜெட் இன்ஜினும் அடுத்த நிலையாக ஸ்கேரம் ஜெட் இன்ஜினும் பொருத்தி விட்டால் இந்தியாவின் கனவு ஆயுதமான குண்டுகளை வீசிவிட்டு வரும் ஹைப்பர் சோனிக் அவதார் விமானம் தயாராகி விடும்..

அனேகமாக அப்படி ஒரு விமானத்தை தயாரிக்கும் முதல் நாடு இந்தியாவாகதான் இருக்கும்.

காரணம் சீனா நாம்மை போல இன்னும் ஹைப்பர் சோனிக் வேகத்தை தரும் ஸ்ரேம்ஜெட் இன்ஜினை தயாரிக்கவில்லை.,

நமக்கு முன் தயாரித்த ரஷ்யாவிடமும் அப்படி ஒரு விமானத்தை உருவாக்கும் திட்டம் இல்லை.,

அமெரிக்காவோ அந்த தொழில்நுட்பத்தில் நமக்கு சற்று பின் தான் ஒடிக்கொண்டுள்ளது.


ஆக இதை எல்லாம் நடைமுறைப்படுத்தி உலகின் முதல் ஆயுதம் தாங்கிய ஆளில்லா ஹைப்பர் சோனிக் விமானத்தை தயாரிக்க சில பத்து ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால் அதன் முதல் கட்டம் தான் இந்த ஆளில்லா ரசசிய விமனத்தின் ஸ்கேல் மாடல் சோதனை. நிச்சயம் எதிராகால இந்திய விமனப்படையில் தாக்குதல் விமானங்களாக இருக்க போவது இந்த வகை ஆளில்லா விமானங்களே என்றால் அது மிகையல்ல.

இப்படி ஒரு மாபெரும் கனவு திட்டம்

2014 க்கு முன் பல ஆண்டுகளாக கிடப்பில் போட பட்டிருந்தது.. ஆனால் மோடி அரசு பதவியேற்ற உடன் இந்த திட்டத்திற்கு 3000 கோடி நிதி ஒதுக்கி, இந்த திட்டத்தை வேகப்படுத்தி, அதன் முதல் கட்டத்தை அருவடை செய்தும் விட்டது..

ஆக எதிர்கால இந்திய விமானப்படை உருவாக்க அதன் முதல் வெற்றியை நேற்று பெற்றுள்ளது பாரதம்..

ஜெய் ஹிந்த்..!

 


நன்றி இணையம்