இந்து

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:58 | Best Blogger Tips
இந்து என்ற ஆன்மாவிற்கு என்றும் அழிவுகிடையாது. ஆனால், அதைத் தாங்கி நிற்கும் பாரதம் என்ற பூதஉடல் அழியக் கூடியது. இதை அழியாமல் பாதுகாப்பது ஒவ்வொரு இந்துவின் கடமையாகும். எனவே, கும்பகர்ண தூக்கத்திலிருந்து இந்து தலைவர்களும் குருமார்களும் விடுபட்டு, ஊக்கத்துடன் செயல்படவேண்டும்.

அமெரிக்காவில் மொத்தம் 1.7 மில்லியன் இந்தியர்கள் வாழ்கிறார்கள். இதில் 95 சதவிகிதம் இந்துக்கள். மேலும் சில புள்ளி விபரங்கள் –

1. அமெரிக்க இந்தியர்களின் வாங்கும் சக்தி – 20 பில்லியன் டாலர்கள்
2. 30% ஹோட்டல்களுக்கும், மோட்டல்களுக்கும் இந்தியர்களே உரிமையாளர்கள்
3. 50% இந்தியர்கள் வீடுகளுக்கு உரிமையாளர்கள்
4. 65% மேலாளர், தொழில்நிபுணர், பொறியியல் துறைகளில் உள்ளவர்கள் இந்தியர்கள்
5. 80% இந்தியர்கள் கல்லூரிப் பட்டம் பெற்றவர்கள்
6. 90% பேர் நகரங்களில் வாழ்பவர்கள்
7. 100% பேர் தங்களது இந்தியப் பரம்பரை பற்றிப் பெருமிதம் உடையவர்கள்
8. ஒரு அமெரிக்க இந்தியரின் சராசரி வருமானம் 88,000 டாலர்கள்; சராசரி அமெரிக்கரின் வருமானம் 55,000 டாலர்கள்
9. 38% அமெரிக்க மருத்துவர்கள் இந்தியர்கள்
10. 36% நாஸா விஞ்ஞானிகள் இந்தியர்கள்
11. 34% மைக்ரோஸாஃப்ட் கம்பனியில் வேலைபார்ப்பவர்கள் இந்தியர்கள்
12. 28% ஐபிஎம் கம்பனியில் வேலைபார்ப்பவர்கள் இந்தியர்கள்
13. 17% இண்டெல் கம்பனியில் வேலைபார்ப்பவர்கள் இந்தியர்கள்
14. ஸிலிக்கான் வேலியில் உள்ள ஸான் ஹோஸே நகரில் ஒரு சிறு இந்தியாவையே காணலாம்

இந்த புதுயுக இந்துக்கள் இந்துமதத்தின் பெருமையை வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்கின்றனர். இப்படியான சாத்தியக்கூறுகள் இதற்குமுன் இல்லை.

இந்த வருடம் ஷாங்காயில் விஜய் சௌத்ரி என்ற இந்து தொழில்அதிபருடன் உலகச் சந்தையில் தீபாவளி கொண்டாடப்பட்டது. ஸ்வாமிநாராயண் ஸ்தாபனம் பல உலகநாடுகளுக்கு இந்துமத தர்மத்தை எடுத்துச் செல்கிறது. இதில் மஸ்கட் என்ற இஸ்லாமிய நாடும் அடக்கம்.

போர் நடந்து முடிந்த இராக்கில் அமைதி சூழலை ஏற்ப்படுத்த சொற்பொழிவுகள் ஆற்ற ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அழைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் டைம் பத்திரிக்கை ஒரு பெரிய கட்டுரையை முக்கிய கட்டுரையாக வெளியிட்டது. அதன் தலைப்பு “On the healing powers of yoga and chanting of OM”.

காயத்திரி மந்திரத்தின் எதிர் ஒலி ரோம், ந்யூ யார்க், பீஜிங் போன்ற இடங்களில் இன்று ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்த சாதனைகள் எல்லாம் சாத்வீக இந்துவால் வெற்றிகரமாக நடத்திகாட்ட முடிகிறது.

தாங்கள் குடிபெயர்ந்த நாட்டில் இவர்கள் தவறியும் குண்டு வீசமாட்டார்கள். அதே நேரத்தில் தங்களது சொந்தநாட்டின் கலாச்சார பெருமையை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். பரமாரிபோ என்ற இடத்தில் சுரிநாம் நகரத்தில் ஓடும் நதியை இந்துக்கள் கங்காநதிபோல் போற்றி வணங்குகின்றனர். மொரிஷீயஸின் போர்ட் லூயிஸில் உள்ள ஒரு சிறிய நதிக்கு கங்கா டலப் என்று பெயர் சூட்டியுள்ளனர். பங்களாதேசத்தில் 1971ஆம் ஆண்டு இடிக்கப்பட்ட காளிகோவிலை புதுப்பிக்க இந்துக்கள் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள்.

இந்த புதுயுக இந்து வித்தியாசமானவன். மிகுந்த தைரியத்துடன் துணிகரமாக புதிய புதிய யுக்திகளை மேற்கொண்டு பல சாதனைகளை செய்ய துடிக்கிறான். அவனது அரசியல் எண்ணங்கள் வேறு வேறாக இருக்கலாம். ஆனால், யாரும் இந்தியன் இந்து என்ற முத்திரையை எல்லா இடத்திலும் பதிவுசெய்ய தவறவில்லை. ஆன்மீக குருவான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மாதா அமிர்தானந்த மயி போன்றவர்கள் உலக அரங்கில் புகழ் வாய்ந்தவர்களாக உள்ளனர்.

சமீபத்தில் ஸஞ்ஜீவ் மெஹ்தா என்ற மும்பையை சேர்ந்த தொழிலதிபர் இந்தியாவை ஆண்ட கிழக்கிந்தியக் கம்பெனியை விலைக்கு வாங்கியுள்ளார். இந்த நிறுவனம் ஒரு காலத்தில் உலகில் பல இடங்களில் காலனி ஆதிக்கம் செலுத்தியது. அதில் இந்தியாவும் ஒன்று.

ஸ்வாமி ராம் தேவ் மேற்கத்திய நாடுகளில் தீவிரமாக யோகாவை தன் பதஞ்சலி பீடம் மூலம் புயல்போல் பரப்பிக்கொண்டிருக்கிறார். இதை தவிர பல இந்திய குருமார்கள் உலகில் பல இடங்களில் இந்து ஆசிரமங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்கான், ஸ்வாமி நாரயண், ஸன்ஸ்தா, ஆர்ட் ஆஃப் லிவிங் போன்ற அமைப்புக்கள் வெளிநாடுகளில் உள்ள சர்ச்சுகளை விலைக்கு வாங்கி அதைக் கோவில்களாகவும் ஆசிரமங்களாகவும் மாற்றி வருகிறார்கள்.

இவர்கள் ஆன்மீகத்தை தவிர பல சமூகசேவைகளையும் அங்கே செய்து கொண்டிருக்கிறார்கள். 2005ஆம் ஆண்டு ரீடா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்க டெக்ஸாஸில் உள்ள இந்து கோவிலில் அடைக்கலம் அளிக்கப்பட்டது.

மாதா அமிர்தானந்த மயி கத்ரினா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அளித்தார்.

நியூஸ் வீக் என்ற பிரபல பத்திரிகையில் லிசாமில்லர் என்பவர் 2009இல் ஒர் ஆய்வு கட்டுரையை வெளியிட்டார். அதன் தலைப்பு “நாங்கள் எல்லோரும் இந்துக்கள்”.

24 சதவிகித அமெரிக்கர்கள் இன்று மறுபிறவியில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். 6 சதவிகித அமெரிக்கர்கள் இறந்தபின் எரிப்பதுதான் சிறந்தது என்று ஒத்துக்கொண்டுள்ளார்கள். கிறுத்துவம் இன்று உலகெங்கும் தேய்ந்துகொண்டிருக்கிறது. பல சர்சுகள் விலைக்கு விற்கப்படுகின்றன. (பாதரிமார்களின் பாலியல் குற்றத்திற்கான நஷ்டஈட்டு பணம் தருவதற்காக). சர்ச்சுக்கு வருபவர்களின் எண்ணிக்கை மங்கிக்கொண்டுவருகிறது.

proud_hindu3பல கிறுத்துவர்கள் ஏசுவிற்கும் பையிளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். பைபிள் ஏசுவிற்குப் பின் 200 ஆண்டுகள் கழித்து ஒரு மாபியா கும்பலால் எழுதப்பட்டது. இன்றும் இந்தியாவில் பைபிள் திரும்ப திரும்ப பல்வேறு மாற்றம் பெற்று வருகிறது. அதைப்போல் இஸ்லாமிலும் சொல்லிக் கொள்கிற மாதிரியான ஆன்மீகம் கிடையாது. இன்று உலகில் மக்கள் ஆன்மீகத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் இந்துமத ஆன்மீகம் ஒரு மருந்துபோல் செயல் பட்டுக்கொண்டிருக்கிறது.

எனவே, இந்து என்ற ஆன்மாவிற்கு என்றும் அழிவுகிடையாது. ஆனால், அதைத் தாங்கி நிற்கும் பாரதம் என்ற பூதஉடல் அழியக் கூடியது. இதை அழியாமல் பாதுகாப்பது ஒவ்வொரு இந்துவின் கடமையாகும். எனவே, கும்பகர்ண தூக்கத்திலிருந்து இந்து தலைவர்களும் குருமார்களும் விடுபட்டு, ஊக்கத்துடன் செயல்படவேண்டும்.