இளைஞனுக்கு வாழ்வு செழிக்க வழிகாட்டி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:40 | Best Blogger Tips


1. உனக்குத் தெரிந்த நல்லவரை – வல்லவரை குருவாக ஏற்றுக்கொள்.

2. அவருடன் உன் அறிவைப் பெருக்கிக்கொள்ள கேள்வி கேட்டுப் பழகு.

3. படிக்கின்றபொழுது படிப்பை மட்டுமே முதலாவதாக்க் கொள்ள வேண்டும்.

4. நல்லவற்றை மட்டும் பழகிக் கொள்.

5. படிக்கின்ற காலத்தில் நட்பை அதிகப் படுத்தாதே. அந்த சமயத்தில் இனிக்கும். பின் கசக்கும்.

6. சிக்கனமாக செலவு செய்து அளவாக சேமித்து வை.

7. விடுமுறைக் காலத்தில் நல்ல நூல்களைப் படித்து பயனடைந்து கொள்.

8. நீ வருத்தப்படும் அல்லதுத கஷ்டப்படும் அல்லது துன்பமாக நினைக்கிற எந்த செயலாக இருந்தாலும் மற்றவரிடம் பகிர்ந்து கொள்.

9. படிப்பு முடித்தபின் உன்னுடைய நேரத்தை பொழுது போக்குகளின் செலவு செய்வதை விடுத்து ஏதாவது ஒரு தொழிலை கற்றுக்கொள். தேடிச்சென்று வாய்ப்பை ஏற்படுத்திக்கொள். தானாக எதுவும் வராது.

10. உன் படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை என்று வருத்தப்படாமல் வலிய சென்று இருக்கும் வேலையை செய்.

11. வாழ்வில் உயர்ந்தவர்கெல்லாம் கிடைக்கும் வேலையைச் செய்து கொண்டே உயர்ந்த நிலையை அடைந்தனர் என்பது வரலாறு.

12. மனதை தெளிவாக வைத்துக் கொள்.

13. கோபப்படாமல் பொறுமையாக இருந்து நல்லதையே நினைத்து நல்லனவற்றையே செய்தால் வெற்றி பெறுவாய்.

14. ஒவ்வொரு உயிரும் எதிர்பாரப்பது அன்பு, ஆதரவு, பாராட்டு. நீ ஒவ்வொருவரிடமும் எதிர்பார்ப்பதும் அதுவே.

15. எல்லோரையும் அனுசரித்துச் சென்று உன் எண்ணத்தைச் செயல்படுத்து.

16. தாழ்வு மனப்பான்மையை துரத்திவிடு. இல்லையேல் இது உன்னைத் துரத்தும்.

17. நீ வெற்றியாளன். எனவே வேகமாக முன்னேறு.

18. நீ தன்னம்பிக்கை உள்ளவன் எனவே தடைகளை உடைத்திடு.

19. உலக உருண்டையை பள்ளியில் மேசையின் மேல் பார்த்திருப்பாய். அதை உன் கைகளில் கொண்டு வா. எப்படி? உலகம் உன்கையில் – நீ உழைத்தால்/ நினைத்தால்.

20. உழைப்பையும் துன்பத்தையும் விற்பனைப செய்துத வெற்றி மாலை வாங்கியணிந்து வீர நடை செய்ய உன்னை நாளும் தயார்ப்படுத்து.

21. எந்தச் செயலை செய்வதானாலும் திட்டமிட்டு செய். தள்ளிப்போடும் பழக்கத்திலிருந்து தள்ளி நில். வெற்றி உன் செயலில் தெரியும்.

==========திருப்பூர் தங்கவேலு
இளைஞனுக்கு வாழ்வு செழிக்க வழிகாட்டி
*************************************

1. உனக்குத் தெரிந்த நல்லவரை – வல்லவரை குருவாக ஏற்றுக்கொள்.

2. அவருடன் உன் அறிவைப் பெருக்கிக்கொள்ள கேள்வி கேட்டுப் பழகு.

3. படிக்கின்றபொழுது படிப்பை மட்டுமே முதலாவதாக்க் கொள்ள வேண்டும்.

4. நல்லவற்றை மட்டும் பழகிக் கொள்.

5. படிக்கின்ற காலத்தில் நட்பை அதிகப் படுத்தாதே. அந்த சமயத்தில் இனிக்கும். பின் கசக்கும்.

6. சிக்கனமாக செலவு செய்து அளவாக சேமித்து வை.

7. விடுமுறைக் காலத்தில் நல்ல நூல்களைப் படித்து பயனடைந்து கொள்.

8. நீ வருத்தப்படும் அல்லதுத கஷ்டப்படும் அல்லது துன்பமாக நினைக்கிற எந்த செயலாக இருந்தாலும் மற்றவரிடம் பகிர்ந்து கொள்.

9. படிப்பு முடித்தபின் உன்னுடைய நேரத்தை பொழுது போக்குகளின் செலவு செய்வதை விடுத்து ஏதாவது ஒரு தொழிலை கற்றுக்கொள். தேடிச்சென்று வாய்ப்பை ஏற்படுத்திக்கொள். தானாக எதுவும் வராது.

10. உன் படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை என்று வருத்தப்படாமல் வலிய சென்று இருக்கும் வேலையை செய்.

11. வாழ்வில் உயர்ந்தவர்கெல்லாம் கிடைக்கும் வேலையைச் செய்து கொண்டே உயர்ந்த நிலையை அடைந்தனர் என்பது வரலாறு.

12. மனதை தெளிவாக வைத்துக் கொள்.

13. கோபப்படாமல் பொறுமையாக இருந்து நல்லதையே நினைத்து நல்லனவற்றையே செய்தால் வெற்றி பெறுவாய்.

14. ஒவ்வொரு உயிரும் எதிர்பாரப்பது அன்பு, ஆதரவு, பாராட்டு. நீ ஒவ்வொருவரிடமும் எதிர்பார்ப்பதும் அதுவே.

15. எல்லோரையும் அனுசரித்துச் சென்று உன் எண்ணத்தைச் செயல்படுத்து.

16. தாழ்வு மனப்பான்மையை துரத்திவிடு. இல்லையேல் இது உன்னைத் துரத்தும்.

17. நீ வெற்றியாளன். எனவே வேகமாக முன்னேறு.

18. நீ தன்னம்பிக்கை உள்ளவன் எனவே தடைகளை உடைத்திடு.

19. உலக உருண்டையை பள்ளியில் மேசையின் மேல் பார்த்திருப்பாய். அதை உன் கைகளில் கொண்டு வா. எப்படி? உலகம் உன்கையில் – நீ உழைத்தால்/ நினைத்தால்.

20. உழைப்பையும் துன்பத்தையும் விற்பனைப செய்துத வெற்றி மாலை வாங்கியணிந்து வீர நடை செய்ய உன்னை நாளும் தயார்ப்படுத்து.

21. எந்தச் செயலை செய்வதானாலும் திட்டமிட்டு செய். தள்ளிப்போடும் பழக்கத்திலிருந்து தள்ளி நில். வெற்றி உன் செயலில் தெரியும்.

==========திருப்பூர் தங்கவேலு