துரித உணவைத் தவிர்ப்போம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:01 | Best Blogger Tips
உணவே மருந்து மருந்தே உணவு என்ற பழமொழியினை கேள்வி பட்டிருகின்றோம். ஆனால் நாம் உண்ணும் உணவு முறையில் கட்டுப்பாடு இன்றி செயற்கையான உணவுகளை உட்கொள்கிறோம்.

இப்பொழுதெல்லாம் விதவிதமான பாக்கெட் உணவுகள் அங்காடிகளில் குவிந்த வண்ணம் உள்ளன. அதனை குழந்தைகள் விரும்பி வாங்குவதற்காக பாலிவுட், கோலிவுட் நடிகர் நடிகைகள் சாப்பிடுவது போன்று விளம்பரம் செய்கின்றனர். இதனால் குழந்தைகளும் இதனை விரும்புகின்றனர். குழந்தைகள் கேட்பதால் பெற்றோர்களும் அதற்கு மறுப்பு தெரிவிப்பதில்லை.

பாக்கெட்களில் அடைத்து வைக்கும் உணவுபொருட்கள் கெட்டு போகாமல் இருக்க அவை சமைக்கும் போதே ரசாயன பொருட்கள் கலந்து விற்கப்படுகின்றன. இதை விரும்பி உண்ணும் குழந்தைகள் நாளடைவில் உடல் சோர்வு, வயிற்று புண் போன்ற பிரச்னையில் அவதிபடுகின்றனர். ஆனால் பெற்றோர்களுக்கு பாக்கெட் உணவு தான் இதற்கு காரணம் என்று தெரிவதில்லை.

பாக்கெட் உணவில் அதிக கலோரி உள்ளதே தவிர ஊட்டம் இல்லை எனவே நோய் விரைவில் தொற்றுகிறது. முக்கியமாக கூடுதல் கொழுப்பு உடலில் சேர்ந்து நாளுக்குநாள் குண்டு குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. சிறு வயதிலேயே சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

இது ஓர் அவசர உலகம். நல்லுணவை எடுத்து ஜங்க் புட்டை தவிர்த்தாலே போதும் உடல் ஆரோக்கியத்துடன் நோயில்லாமல் நீண்ட காலம் வாழலாம்
துரித உணவைத் தவிர்ப்போம்
=====================

உணவே மருந்து மருந்தே உணவு என்ற பழமொழியினை கேள்வி பட்டிருகின்றோம். ஆனால் நாம் உண்ணும் உணவு முறையில் கட்டுப்பாடு இன்றி செயற்கையான உணவுகளை உட்கொள்கிறோம்.

இப்பொழுதெல்லாம் விதவிதமான பாக்கெட் உணவுகள் அங்காடிகளில் குவிந்த வண்ணம் உள்ளன. அதனை குழந்தைகள் விரும்பி வாங்குவதற்காக பாலிவுட், கோலிவுட் நடிகர் நடிகைகள் சாப்பிடுவது போன்று விளம்பரம் செய்கின்றனர். இதனால் குழந்தைகளும் இதனை விரும்புகின்றனர். குழந்தைகள் கேட்பதால் பெற்றோர்களும் அதற்கு மறுப்பு தெரிவிப்பதில்லை.

பாக்கெட்களில் அடைத்து வைக்கும் உணவுபொருட்கள் கெட்டு போகாமல் இருக்க அவை சமைக்கும் போதே ரசாயன பொருட்கள் கலந்து விற்கப்படுகின்றன. இதை விரும்பி உண்ணும் குழந்தைகள் நாளடைவில் உடல் சோர்வு, வயிற்று புண் போன்ற பிரச்னையில் அவதிபடுகின்றனர். ஆனால் பெற்றோர்களுக்கு பாக்கெட் உணவு தான் இதற்கு காரணம் என்று தெரிவதில்லை.

பாக்கெட் உணவில் அதிக கலோரி உள்ளதே தவிர ஊட்டம் இல்லை எனவே நோய் விரைவில் தொற்றுகிறது. முக்கியமாக கூடுதல் கொழுப்பு உடலில் சேர்ந்து நாளுக்குநாள் குண்டு குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. சிறு வயதிலேயே சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

இது ஓர் அவசர உலகம். நல்லுணவை எடுத்து ஜங்க் புட்டை தவிர்த்தாலே போதும் உடல் ஆரோக்கியத்துடன்  நோயில்லாமல் நீண்ட காலம் வாழலாம்