வரலாறு எப்போதுமே விசித்திரமானது

மணக்கால் அய்யம்பேட்டை | 1:00 PM | Best Blogger Tips

 

With due “Thanks” to Shri Sadasiva post

வரலாறு எப்போதுமே விசித்திரமானது. சிலரை அது தவறான காரணங்களுக்காகக் கொண்டாடும், உண்மையான காரணங்களை மறைத்துவிடும். அப்படியான ஒரு மிகப்பெரிய வரலாற்றுத் தவறுதான் ’ஹெடி லாமர்’ (Hedy Lamarr).

1930-40களில் ஹாலிவுட் சினிமாவின் பொற்காலம் அது. கருப்பு வெள்ளைத் திரையில் ஒரு தேவதை போலத் தோன்றியவர் ஹெடி லாமர். ஆஸ்திரியாவில் பிறந்து ஹாலிவுட்டுக்கு வந்த அவரை, உலகம் எப்படி அழைத்தது தெரியுமா?

’உலகின் மிக அழகான பெண்’ (The Most Beautiful Woman in the World).

அவருடைய படங்களைப் பார்க்க மக்கள் தியேட்டர்களில் குவிந்தார்கள். அவருடைய சிகை அலங்காரத்தை, அவருடைய நடையைப் பெண்கள் காப்பி அடித்தார்கள். ஆண்கள் அனைவரும் ஹெடி லாமரை நினைத்தே தூக்கத்தைத் தொலைத்தார்கள். சுருக்கமாகச் சொன்னால், அவர் ஒரு கனவுக்கன்னி.

ஆனால், அந்தப் பேரழகு, அந்த மினுமினுக்கும் சினிமா வாழ்க்கை - இவை எல்லாவற்றுக்கும் பின்னால் ஒரு அபாயகரமான, கூர்மையான அறிவியல் மூளை ஹெடி லாமருக்கு இருந்தது யாருக்கும் தெரியாது.

ஷூட்டிங் முடிந்ததும், மற்ற நடிகைகள் பார்ட்டிகளுக்குச் செல்வார்கள், கிசுகிசு பேசுவார்கள். ஆனால் ஹெடி லாமர், நேராகத் தன் வீட்டுக்குச் செல்வார். அங்கே அவருக்கு ஒரு சிறிய ஆய்வகம் இருந்தது. அந்த அறையில் எதையாவது வரைந்து கொண்டும், புதிய இயந்திரங்களை வடிவமைத்துக் கொண்டும் இருப்பார். 

சுருக்கமாகச் சொல்வதென்றால், உலக ஆண்கள் அனைவரையும் அவரை நினைத்துக்கொண்டு படுக்கையில் புரண்டுகொண்டிருக்க, ஹெடி லாமர் மட்டும் தனது தேடலில் தீவிரமாகத் தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்தார்.

"எனக்குக் கிளாமர் முகம் காட்டுவதில் ஆர்வமில்லை; என் மூளையைப் பயன்படுத்துவதில்தான் ஆர்வம் இருக்கிறது" என்று பலமுறை சொல்லியிருக்கிறார், ஹெடி லாமர். ஆனால், இந்த உலகம் ஒரு அழகான பெண்ணை அறிவாளியாகப் பார்க்கத் தயாராக இல்லை.

அது இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்த நேரம். ஹெடி லாமரின் சொந்த நாடான ஆஸ்திரியாவை ஹிட்லரின் நாஜிப் படைகள் ஆக்கிரமித்திருந்தன. ஹெடிக்கு நாஜிக்கள் மீது தீராத கோபம் இருந்தது. அமெரிக்காவுக்கு உதவ வேண்டும் என்று அவர் துடித்தார்.

அப்போது ஒரு பெரிய பிரச்சனை இருந்தது. நேச நாடுகளின் (அமெரிக்கா, பிரிட்டன்) போர்க்கப்பல்கள், ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்க 'டார்பிடோ' எனப்படும் கடலுக்கு அடியில் செல்லும் ஏவுகணைகளை அனுப்பின. இந்த ஏவுகணைகள் ரேடியோ சிக்னல் மூலம் கட்டுப்படுத்தப்படுபவை.

ஆனால், நாஜிக்கள் புத்திசாலிகள். அவர்கள் அந்த ரேடியோ சிக்னல்களை எளிதாக 'ஜாம்' (Jamming) செய்தார்கள். இதனால் ஏவுகணைகள் திசைமாறிச் சென்று கடலில் வீணாகின. இதைக் கண்டு அமெரிக்க ராணுவம் திணறியது.

இந்தப் பிரச்சினையைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த ஹெடி லாமருக்கு ஒரு பொறி தட்டியது.

"நாம் ஏன் ஒரே ஃப்ரீக்வன்சியில் சிக்னலை அனுப்ப வேண்டும்? ஒரே இடத்தில் இருந்தால் தானே எதிரி ஜாம் செய்கிறான்? அந்த ஃப்ரீக்வன்சியை நொடிக்கொரு முறை மாற்றிக்கொண்டே இருந்தால் என்ன?"

இதுதான் அந்த அடிப்படை ஐடியா. இதை ’Frequency-Hopping Spread Spectrum’ என்று சொல்வார்கள்.

எளிமையாகச் சொன்னால், நீங்கள் ரேடியோவில் ஒரு பாட்டு கேட்கிறீர்கள். எதிரி அந்த ஸ்டேஷனை ஜாம் செய்ய வருகிறான். அவன் கண்டுபிடிப்பதற்குள், நீங்கள் அடுத்த ஸ்டேஷனுக்குத் தாவிவிடுகிறீர்கள். அடுத்து அங்கிருந்து இன்னொரு ஸ்டேஷனுக்கு... இப்படித் தாவிக்கொண்டே இருந்தால், எதிரியால் உங்களைப் பிடிக்கவே முடியாது. ஆனால், எந்தெந்த ஸ்டேஷனுக்குத் தாவ வேண்டும் என்ற ரகசியக் குறியீடு உங்களுக்கும், அந்த ஏவுகணைக்கும் மட்டுமே தெரியும்.

ஹெடி லாமர், தன்னுடைய நண்பரும் இசைக்கலைஞருமான ஜார்ஜ் ஆந்தீல் (George Antheil) என்பவருடன் இணைந்து, தானியங்கி பியானோக்களில் (Player Pianos) இருக்கும் துளைகள் கொண்ட பேப்பர் ரோல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதை வடிவமைத்தார். 1942-ல் இதற்குப் காப்புரிமையும் (Patent) பெற்றார்.

இந்த மகத்தான கண்டுபிடிப்பை, நாஜிக்களை வீழ்த்தும் ஆயுதத்தை எடுத்துக்கொண்டு அமெரிக்கக் கடற்படையிடம் (US Navy) சென்றார் ஹெடி.

அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? சிரித்தார்கள்.

"ஒரு சினிமா நடிகை, அதுவும் இவ்வளவு அழகான ஒரு பெண், எங்களுக்குத் தொழில்நுட்பம் கற்றுத் தருவதா?" என்று நகைத்தார்கள். 

ஆணாதிக்கம் அவர்களின் கண்களை மறைத்தது.

"மேடம், இந்த ரேடியோ வேலையெல்லாம் விடுங்கள். உங்கள் அழகையும், புகழையும் பயன்படுத்தி ராணுவத்திற்கு நிதி (War Bonds) திரட்டிக் கொடுங்கள், அது போதும்" என்று அவரைத் திருப்பி அனுப்பினார்கள். அந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாமலேயே கிடப்பில போடப்பட்டது.

வருடங்கள் உருண்டோடின. ஹெடி லாமரின் சினிமா மார்க்கெட் சரிந்தது. அவர் முதுமையடைந்தார், உலகம் அவரை மறக்கத் தொடங்கியது. அவருடைய அந்தக் காப்புரிமையும் காலாவதியானது.

ஆனால், 1960-களில் டிஜிட்டல் யுகம் தொடங்கியபோது, சில விஞ்ஞானிகள் ஹெடி லாமரின் பழைய காப்புரிமையைத் தூசி தட்டி எடுத்தார்கள். 

"அடக்கடவுளே! எவ்வளவு பெரிய தொழில்நுட்பத்தை நாம் வீணடித்திருக்கிறோம்!" என்று அதிர்ந்தார்கள்.

இன்று நாம பயன்படுத்தும் Wi-Fi, Bluetooth, GPS, மற்றும் மொபைல் போன் நெட்வொர்க் (CDMA) என அத்தனை வயர்லெஸ் தொழில்நுட்பங்களுக்கும் அடிப்படை எது தெரியுமா?

அன்று 1942-ல், ’உலகின் மிக அழகான பெண்’ என்று முத்திரை குத்தப்பட்டு நிராகரிக்கப்பட்டாரே, அந்த ஹெடி லாமர் கண்டுபிடித்த அதே ’Frequency-Hopping’ தொழில்நுட்பம்தான்!

ஹெடி லாமர் தனது கடைசி காலத்தில் தனிமையில் வாழ்ந்து, 2000-ம் ஆண்டில் மறைந்தார். அவர் இறப்பதற்குச் சில வருடங்களுக்கு முன்புதான் உலகம் அவருடைய பங்களிப்பை அங்கீகரித்து விருதுகள் வழங்கியது.

இன்று ஹெடி லாமரின் அந்தப் பேரழகு காலத்தால் மறைந்திருக்கலாம். ஆனால், அவர் மூளையில் உதித்த அந்தப் பொறிதான் இன்று உலகம் முழுக்க இணையமாகப் பரந்து விரிந்து, உங்களையும் என்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறது.

அடுத்த முறை உங்கள் போனில் Wi-Fi ஆன் செய்யும்போது அல்லது ப்ளூடூத் ஹெட்செட் மாட்டும்போது, ஒரு நிமிடம் இந்த ஹாலிவுட் தேவதையை நினைத்துக் கொள்ளுங்கள்.

அதுவே, அந்தத் தேவதைக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.

#HedyLamarr #WomenInScience #WiFi #Bluetooth #History #Hollywood #Invention #Technology #TamilPost #Facts #UntoldStory 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of one or more people and flower  🌷 🌷🌷 🌷

 

🌹"கருவறை வழிபாடு"*

மணக்கால் அய்யம்பேட்டை | 10:12 AM | Best Blogger Tips

 No photo description available.

 

🌹கோவில் கருவறையின் அற்புதங்கள்!‌.*
 
*கருவறையை திரை போட்டு மூடி இருக்கும்போது இறை ஆற்றல்கள் தேங்கிநிற்கும்.*
 கோயில் கருவறை இருட்டாக இருப்பது ஏன்? - ஐபிசி பக்தி
*திரை விலக்கப்பட்டு தீப ஆரத்தி காட்டப்பட்டதும், அந்த ஆற்றல்கள் அப்படியே திரண்டு வந்து வெளியில் இரு பக்கமும் வரிசையில் நிற்பவர்கள் மீது அருள் வெள்ளமாக பாயும்.* 
 
*இந்த இறை ஆற்றல்கள், அலைகள் நமது மூளையை சுத்தப்படுத்தி நம்மை புத்துணர்ச்சி பெறச் செய்யும்.*
 
*இதை கருத்தில் கொண்டுதான் சித்த சுவாதீனம் அடைந்தவர்களை கோவில் வளாகத்தில் கட்டி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது.*
Airavatesvara Temple Darasuram India Stock Photo - Download Image Now -  Temple - Building, Indoors, Architectural Column - iStock 
*கோவிலில் தயாரிக்கப்படும் நைவேத்தியங்கள் சுவைமிக்கதாக மாறுவதற்கும், அபிஷேக நீர் நமது உடம்பில்பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் காந்த அலைகளே காரணமாகும்.*
 
*கருவறையில் உருவாகும் சக்தியானது இடமிருந்து வலமாக சுற்றுப்பாதையில் சுற்றுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.* 
 
*ஆனால் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் இதை கண்டுபிடித்து கருவறையை இடமிருந்து வலமாக நம்மை சுற்ற வைத்து விட்டனர்.*
 
*ஆண்கள் மேல் சட்டை அணியாமல் சுற்றினால் சக்தி அலைகள் நேரடியாக உடலுக்குள் புகுந்து நல்லது செய்யும்.*
 
*பொதுவாக கருவறை மூலவர் மூலம் ஆலயம் முழுவதும் காந்த சக்தி அலைகள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மிக அதிகமாக பரவும்.*
 
*எனவே பிரம்ம முகூர்த்தத்தில் கோவிலுக்கு சென்று முதல் ஆராதனையின் போது வழிபட்டால் அதிக நன்மை பெறலாம்.*
 
*இந்த காந்த அலைகள்தான் கோவிலின் பிரகாரத்தில் உள்ள சன்னதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றை கருவறையுடன் ‘‘வயர்லஸ்’’ தொடர்பு போல இணைக்கின்றன.*
 Madurai Meenakshi Amman Temple - கோவில் கருவறை என் சிறியதாக உள்ளது ?  கருவறையை திரை போட்டு மூடி இருக்கும்போது இறை ஆற்றல்கள் தேங்கிநிற்கும். திரை  ...
*எனவே*
 
*‘‘பாசிட்டிவ் எனர்ஜி’’*
 
*பெற* 
 
*"கருவறை வழிபாடு"*
 
*மிக, மிக முக்கியமானது.*
 
*வெளியே வெயில், உள்ளே குளிர்ச்சி கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் பல்வேறு சிறப்புகளை கொண்டது.*
 
*இதன் கர்ப்பகிரகம் சந்திரகாந்த கல்லால் ஆனது.*
 
*இது தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப கர்ப்பகிரகத்தை மாற்றும்.*
 
*அதாவது வெளியே வெப்பமாக இருக்கும் போது கர்ப்பகிரகம் குளிர்ச்சியாக இருக்கும்.*
 
*வெளியே கடும் குளிராக இருந்தால் கர்ப்பகிரகத்தின் உள்பகுதி வெப்பமாக மாறிவிடும்.*
 கோவில் கருவறை ஏன் இருட்டாக இருக்கிறது என்று தெரியுமா? | Did You Know Why  Temple KarpaKragha Were Dark? - Tamil BoldSky
🌹கடவுளின் சக்தியை பெற கருவறை வழிபாடே சிறந்தது.*
 
நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
 
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹
 
சிவாய நம🙇 சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.
 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 No photo description available.  🌷 🌷🌷 🌷

 

வெற்றிகரமாகவும் ஊக்கமாகவும் இருங்கள்..கனவு காணுங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:15 AM | Best Blogger Tips

வெற்றிகரமாகவும் ஊக்கமாகவும் இருங்கள்..
எல்லையில்லாமல் கனவு காணுங்கள்! | un limited dreams will make you big -  Tamil Oneindia


1.உங்கள் வரம்பு -  உங்கள் கற்பனை மட்டுமே வானமே எல்லை .


2 உங்களை நீங்களே இலக்கை நோக்கித் தள்ளுங்கள், ஏனென்றால் வேறு யாரும் அதை உங்களுக்காக செய்யப்போவதில்லை.

Buy 3Millions Wooden Showpiece Dream Believe Achieve Quotes for Study Table  | Kids Room | Office Desk | Home Decoration | Living Room | Modern Gifting  Showpiece Item Online at Low Prices in India - Amazon.in


3 சில நேரங்களில் பிறகு பார்த்துக்கலாம்  என்பது ஒருபோதும் ஆகாது. உடனே செய்.

4. பெரிய விஷயங்கள் ஒருபோதும் பாதுகாப்பான  சூழலில் இருந்து  வருவதில்லை.

5. கனவு காண்க. அதை விரும்புங்கள் . செய்யுங்கள் .
6. வெற்றி உங்களைக் கண்டு பிடிக்கவில்லை என்றால்  நீங்கள் வெளியே சென்று அதைப் பெற வேண்டும்.

7. நீங்கள் எதையாவது அடையக் கடினமாக உழைக்கிறீர்கள், அதை அடையும் போது நீங்கள் அதிகமாக உணருவீர்கள்.
 Motivational Quote about Dream Stock Vector - Illustration of believe,  motivational: 80350004
8. பெரியதாக கனவு காணுங்கள் . பெரிதாகச் செய்யுங்கள்.

9. நீங்கள் சோர்வாக இருக்கும் போது நிறுத்த வேண்டாம். நீங்கள் முடித்ததும் நிறுத்துங்கள்.

10. உறுதியுடன் எழுந்திருங்கள். திருப்தியுடன் படுக்கைக்குச் செல்லுங்கள்.

11. உங்கள் எதிர்காலம் உங்கள் வசமாக  மாற இன்று ஏதாவது செய்யுங்கள்

12. சிறிய விஷயங்கள் பெரிய நாட்களை உருவாக்குகின்றன.
வெற்றி அடைய கனவு காணுங்கள்!
13. ஒன்று கடினமாக இருக்கும், ஆனால் கடினமானது என்பது சாத்தியமற்றது என்று அர்த்தமல்ல.

14. வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டாம். அதை உருவாக்கவும்.

15. சில நேரங்களில் நாம்  பலவீனங்களைக் காட்ட அல்ல, மாறாக நம் பலங்களைக் கண்டறிய சோதிக்கப்படுகிறோம்.

16. வெற்றிக்கான திறவுகோல் தடைகளில் அல்ல, இலக்குகளில் கவனம் செலுத்துவதாகும்.

17. கனவு காணுங்கள் . நம்புங்கள். அதை உருவாக்குங்கள்.

இந்தநாள் இனிய நாளாக இருக்க வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்..
🌹 ரமேஷ் ராமலிங்கம்
🌹

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 

உணர்வு மேலாண்மை❤️💕💜💖💖❤️💜💖💕

மணக்கால் அய்யம்பேட்டை | 10:24 AM | Best Blogger Tips

 
உணர்வு மேலாண்மை

நம் உணர்வுகளைச் சரியாக கையாள வேண்டும் இல்லையெனில் மன ரீதியான பிரச்சனைகளையும், பண ரீதியான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும் ஏன் என்றால் நம் உணர்வுகளே நம்மை வழி நடத்துகின்றன.

நீங்கள் எத்தனை நேர்மறையான செய்திகளை, காணொளிகளைப் பார்த்தாலும், படித்தாலும் உங்கள் உணர்வுகள் சரியாக இல்லையெனில் அது உங்களுக்கு முழுமையான பலனைக் கொடுக்காது.

உங்கள் உணர்வுகள் சரியாக இல்லையெனில் உங்களைச் சுற்றி எத்தனை நேர்மறையான மனிதர்கள் இருந்தாலும் உங்கள் எண்ணங்கள் எதிர்மறையாக மாறுவதைத் முழுமையாகத் தடுக்க முடியாது.

எதிர்மறை உணர்வுடன் இருந்தால், நேர்மறை அதிர்வுகள் அதிகமாக இருக்கும் புனிதத் தளங்களினாலும் உங்களுக்கு நேர்மறை எண்ணங்களை ஒரு அளவிற்கு மேல் அதிகமாக்க முடியாது.
Unarvu melanmai - An online Tamil story written by Thakarthik tamizh |  Pratilipi.com
இதற்கான மூலக் காரணத்தை மீண்டும் தெளிவாகக் கூறுகிறேன்.

உங்களுக்கு நேர்மறை எண்ணம் உருவாக வேண்டுமா? அல்லது எதிர்மறை எண்ணம் உருவாக வேண்டுமா? என்பதை முடிவு செய்வதே உங்கள் உணர்வுகள் தான். 

உங்களுடைய உணர்வுகளை எந்த சூழலிலும் சரியாக வழி நடத்தக் கற்றுக் கொள்ளுங்கள். 

நேர்மறை எண்ணங்களை மட்டும் வளர்த்துக் கொள்ள நினைத்து, உங்கள் உணர்வுகளை கண்டு கொள்ளாமல் இருக்காதீர்கள்.

இத்தனை சக்தி வாய்ந்த உங்கள் உணர்வுகளை சரியாகக் கையாளுவது மிகவும் கடினமென நினைத்து விடாதீர்கள், அது மிகவும் எளிமையானது. அதற்கான சரியான மற்றும் எளிமையான வழியைக் கூறுகிறேன்.
உணர்ச்சி நுண்ணறிவு திறன்கள்: தலைமைத்துவத்தின் சிறந்த 5 பண்புகள்
அந்த வழி,

உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருப்பது தான். உங்கள் மனசாட்சிக்கு நீங்கள் உண்மையாக இருந்தாலே போதும் உங்கள் உணர்வுகள் சரியாக இருக்கும். 

யாரையும் புறம் பேசாமல், யாரையும் வேதனைப் படுத்தாமல், யாரையும் எதற்காகவும் எப்போதும் தவறாக எண்ணாமல் உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருந்தாலே போதும். 
உணர்வு பகுப்பாய்விற்கான உரை சிறுகுறிப்பு செயல்முறையைப் புரிந்துகொள்வது |  ஹைடெக் டிஜிட்டல்
யாரே ஒருவர் தவறு செய்வதை நினைத்து, அவர்களையே நினைத்து, அவர்களுடைய எதிர்மறை செயலை உங்கள் மனதிற்குள் அனுமதித்து உங்கள் உணர்வுகளை நீங்களே கெடுத்துக் கொள்ளாமல் இருந்தாலே போதும்.

மொத்தத்தில்,

உங்களுக்கு நீங்கள் 100% உண்மையாக இருந்தாலே போதும்.

😊
 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 


  🌷 🌷🌷 🌷

 

சர்க்கரை நோய்க்கு, ஒரு அடிப்படைத் தீர்வு உண்டு!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:02 PM | Best Blogger Tips

 

 

🟡🟡🟡


சர்க்கரை நோய்க்கு, ஒரு அடிப்படைத் தீர்வு உண்டு!

ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டும் உணவு உண்டு, ஓய்வு இல்லாமல் உழைத்து வாழும் ஒருவருக்கு நீரிழிவு நோய் எப்படி வரும்?

கணக்கு வழக்கு இல்லாமல் உண்பது! அதிலும் கேடுகெட்ட உணவு முறையில் வாழ்வது! உண்ட உணவுக்கு, இடைவெளி இல்லாத போகங்கள்!

உழைப்பே இல்லாத வாழ்க்கை முறை! அப்புறம் நீரிழிவு நோய் இரத்த அழுத்த நோய், சிறுநீரகக் கோளாறு, மூட்டு வலி, தேய்மானம், கண் பார்வைக் கோளாறு, நுரையீரல் சம்பந்தப்பட்ட சுவாசக் கோளாறுகள், மன அழுத்த ஆணவக் கோளாறுகள் இந்தக் கருமங்களில் ஏதாவது ஒன்றாவது இல்லாத, ஒரு மனிதனைக் காட்டுங்கள்!

என்னைக் கேள்வி கேட்கப் புறப்பட்டு விடாதீர்கள்!

இது எதிலும் இன்று வரை சிக்கவில்லை என்பதற்கு அடிப்படைக் காரணம் பிறப்பின் இயல்பு மட்டுமல்ல, வாழ்தலின் தத்துவமும் கூட!

இந்த நோய்களும் கூட இல்லாத இந்தத் தலைமுறையை, சிந்தித்துப் பார்த்தால், உடலும் உள்ளமும் நடுங்குகிறது!

காணும் ஒவ்வொரு மனிதனும், மனுஷியும் அணுகுண்டை விட மிகக் கொடிய உயிரினங்களாக உலவும் நிலையில் அல்லவா, இந்த உலகம் இருக்கும்?

மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம்! சிந்தனை வழி, செயல்கள்! சிந்தனையை சீர் திருத்தாது, மனம் தூய்மை அடையாது! மனம் தூய்மை அடையாமல், உடல் நலம் அடையாது!

எத்தனை தூரம் இந்த விஞ்ஞானம் வளர்ந்தாலும் எந்த உயிரினத்துக்கும் இந்த பிரபஞ்சத்தின் கர்ம விதி இது தான்!

சுயநலத்தோடு, ஆணவத்தோடு நோய் கொண்ட உடல் மற்றும் உள்ளத்தோடு, பல்லாண்டு காலம் இந்தத் தலைமுறை  உயிர்கள் வாழ்க! வளர்க!

நன்றிSNR


🟡🟡🟡


❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 No photo description available.  🌷 🌷🌷 🌷


சிவாஜியின் படைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:05 AM | Best Blogger Tips

200+] Shivaji Maharaj Hd Wallpapers | Wallpapers.com 

சிவாஜியின் படைகள் ஒரு முறை ஒரு பிராந்தியத்தை கைப்பற்ற நடைபெற்ற போரில் அதை ஆண்டு வந்து சுல்தான் ஒருவனை தோற்கடித்தன. அவனது கோட்டையையும் கைப்பற்றின.
 Shivaji/Chhatrapati Shivaji Maharaj/Portrait Of Shivaji/King Of Maratha  Matte Finish Poster Paper Print - Animation & Cartoons posters in India -  Buy art, film, design, movie, music, nature and educational  paintings/wallpapers at Flipkart.com
அப்போதெல்லாம் யுத்தத்தில் வெற்றி பெற்றால் சம்பந்தப்பட்ட பட்டத்து இளவரசிகளையும் ராணிகளையும் கவர்ந்து சென்றுவிடுவார்கள். வெற்றி பெறும் மன்னனோ சுல்தானோ விரும்பினால் அவளை அவனுக்கு விருந்தாக்கிவிடுவார்கள். இங்கே சிவாஜியின் படை வெற்றி கொண்ட சுல்தானின் மனைவி பேரழகி. அவளது அழகு அந்த பிராந்தியத்திலேயே மிகவும் பிரசித்தம். எனவே சிவாஜியின் படைத் தளபதி மற்றும் வீரர்கள் தம் மன்னனின் மனமும் உடலும் குளிரட்டும் என்று எண்ணி, அவளை சிறைபிடித்து கடுங்காவலுக்கிடையே பல்லக்கில் ஏற்றி அவளை கொண்டு வந்து அவள் தப்பிக்க முடியாதபடி சிவாஜியின் அந்தப் புறத்திற்கு வெளியே விட்டுவிடுகின்றனர்.
 Best Canvas Poster Of Shivaji Maharaj In 2025
அன்றிரவு தூங்கச் செல்லும் சத்ரபதி சிவாஜி, தனது அறைக்கு வெளியே பல்லக்கு இருப்பதை பார்த்து, “பல்லக்கில் இருப்பது யார்?” என்று தனது தளபதியிடம் கேட்க, “மன்னா இவள் ஒரு சுல்தானின் மனைவி பார் போற்றும் பேரழகி இவள் அழகை கண்டு மயங்காதவர்களே இந்த பிரதேசத்தல் இருக்க முடியாது. எனவே இன்றிரவு இவளை உங்களுக்கு விருந்தாக்கலாம் என்று எண்ணியே இங்கே கொண்டு வந்தோம்” என்று கூறுகிறான்.
  சிவாஜி கல்லூரி - டெல்லி பல்கலைக்கழகம்
சிவாஜி நேரே பல்லக்கு அருகே செல்கிறார். பல்லக்கின் திரைச் சீலையை விலக்கி பார்க்கிறார் அந்த பெண்ணின் அழகு கண்டு வியக்கிறார். ஏற்கனவே அச்சத்தில் இருந்த அந்த சுல்தானின் மனைவி மருண்ட விழிகளோடு பயத்துடன் சிவாஜியை பார்க்கிறாள். சிவாஜியோ, “அம்மா…. நீங்கள் உண்மையில் மிகவும் பேரழகு தான். உங்கள் வயிற்றில் ஒருவேளை நான் பிறந்திருந்தால் நான் இன்னும் அழகாக பிறந்திருப்பேன்….” என்று கூறுகிறார்.
 723+ Shivaji Maharaj Images | Raje Shivaji Maharaj Photos
சிவாஜியின் தளபதி முதல் படைவீரர்கள் வரை அனைவரும் வெட்கித் தலைகுனிகின்றனர். 
சுல்தானின் மனைவி அந்த வீரமகனை கையெடுத்து கும்பிடுகிறாள். அப்போது அவள் கண்களுக்கு வீரசிவாஜி ஒரு கடவுளாகவே தென்படுகிறார். தனது தளபதியை கடுமையாக சினந்து கொண்ட சிவாஜி, “பெண்கள் நம் பாரத நாட்டில் தெய்வமல்லவா? இப்படி ஒரு காரியத்திற்கு எப்படி துணிந்தீர்கள்? பொன்னாசை, மண்ணாசையைவிட கொடியது பெண்ணாசை. மாபெரும் சாமாராஜ்ஜியங்களையே இது தரை மட்டமாக்கியிருக்கிறது. இனி இப்படி ஒரு இழி செயலை கனவிலும் செய்யத் துணியாதீர்கள்.
 Roar Tamil - மராட்டிய மாவீரர் சத்ரபதி சிவாஜி
முதல் வேலையாக இவர்களை கொண்டு போய் இவர் விரும்பும் இடத்தில் பாதுகாப்பாக விட்டுவிட்டு வாருங்கள்” என்று கட்டளையிடுகிறார் மாமன்னர் சத்ரபதி சிவாஜி.
இந்த உலகில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் மூன்று வகைகளில் அடங்கிவிடுவர்.
 
1)நல்லவர்கள்
 
2) கெட்டவர்கள்
 
3) சந்தர்ப்பம் கிடைக்காமல் நல்லவர்கள் என்ற போர்வையில் வாழும் கெட்டவர்கள்.
 
எந்த சூழ்நிலையிலும் குணம் மாறாது நல்லவர்களாக இருக்க வேண்டும் என்பது இந்த பாரதத்தின் பண்பட்ட கலாச்சாரம்.
 Pin by archana awale on Quick Saves | Hd wallpapers 1080p, Hd wallpaper, Hd  nature wallpapers
இந்த கலாச்சாரத்தின் மேன்மையான குணங்களுடன் வாழ்ந்தவர் சத்ரபதி சிவாஜி அவரைப்பற்றிய சிறப்புகளை நேரம் கிடைக்கும் போது, பிள்ளைகளுக்கு, சத்ரபதி சிவாஜியைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.
 
1. “காபூலில் இருந்து காந்தஹார் வரை என தைமூர் குடும்பம் மொகலாய சுல்தான்களின் ஆட்சியை நிறுவியது. ஈராக், ஈரான், துருக்கி போன்ற பல நாடுகளை என் படைகள் வென்று வந்துள்ளன. ஆனால், இந்தியாவில் தான் சிவாஜி எனக்கு பெரும் தடையாக இருந்து விட்டார். என் சக்தி முழுதையும் செலவிட்டும், அவரை வெற்றி கொள்ள முடியவில்லை. அல்லாவே.. எனக்கு, பயமில்லாத, துணிச்சலான ஓர் எதிரியைக் கொடுத்து விட்டாய்.
 Pin by Aditya Dingankar on shivaji | Shivaji maharaj hd wallpaper, Shivaji  maharaj wallpapers, Hd dark wallpapers
இவ்வுலகின் அஞ்சா நெஞ்சன் உன்னிடம் வருகிறான். அவனுக்கு உன் சொர்க்கத்தின் வாசலைத் திறந்து வைத்திரு” என்று சிவாஜியின் மறைவை ஒட்டி நடந்த “நமாஸ், பிரார்த்தனையில் மொகலாயச் சக்கரவர்த்தி அவுரங்கஸேப் படித்துள்ளார்.
 
2. “அன்று, சிவாஜி என் விரல்களை மட்டும் நறுக்கி எறியவில்லை; என் கர்வத்தையும் கூடவே நறுக்கி எறிந்து விட்டார்; என் கனவில் கூட சிவாஜியைக் காண நான் பயப்படுகிறேன்” என்று அபு தாலிபன் அரசனான ஷயிஸ்டகான் கூறியிருக்கிறார்.
 
3. “என் ராஜ்யத்தில், சிவாஜியைத் தோற்கடிக்க ஓர் ஆள் கூடவா இல்லை?” என்று உள்ளக் குமுறலுடன் கேட்டார் , பீஜப்பூர் சுல்தான் அலி அதில் ஷாவின் பேகம்.
 BM TRADERS Shivaji Maharaj 5 Dimensional Layer (With 5D Effect) Art Work  Photo In Golden Frame Big (14 X 18 Inches) OR (35.56 Cm X 45.72 Cm) :  Amazon.in: Home & Kitchen
4. நேதாஜி சுபாஷ் சந்திர போஸிடம் ஹிட்லர், “ உங்கள் தேசத்திலிருந்து ஆங்கிலேயர்களை விரட்டி அடிக்க ஹிட்லர் தேவையில்லை; சிவாஜியின் சரித்திரத்தை போதித்தாலேயே போதும்” என்று சொன்னார்.
 
5. சிவாஜி மட்டும் இங்கிலாந்தில் பிறந்திருந்தால், நாங்கள் இந்த பூமியை மட்டுமல்ல, அண்ட சராசரத்தையும் ஆண்டிருப்போம்” என லார்ட் மவுண்ட்பேட்டன் சொன்னார்.
 சிவாஜி மகாராஜ் போர் போர்களின் பட்டியல்: இராணுவ தந்திரங்கள் மற்றும் உத்திகள்
6. “சிவாஜி இன்னும் பத்தாண்டுகள் உயிரோடிருந்திருந்தால், நாங்கள் இந்தியாவைப் பற்றி நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது” என்று ஒரு பிரிட்டிஷ் கவர்னர் சொல்லியிருக்கிறார்.
 
7. “சிவாஜி மாதிரி சண்டையிட்டால், நாம் எளிதாக சுதந்திரத்தைப் பெற்று விடலாம்” என நேதாஜி புகழ்ந்திருக்கிறார்.
 
8. “சிவாஜி என்பது ஒரு பெயர் மட்டுமல்ல; இளைஞர்களை ஊக்குவிக்கும் ஒரு சக்தி; இதனைக் கொண்டு நாட்டு விடுதலையை அடைய முடியும்” என ஸ்வாமி விவேகாநந்தர் சொல்லியிருக்கிறார்.
 
9. சிவாஜி அமெரிக்காவில் பிறந்திருந்தால், அவரை “சூரியன்” என்றே போற்றியிருப்போம்” என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா புகழ்ந்துள்ளார்.
 Chhatrapati Shivaji Maharaj Jayanti was grandly celebrated at Sahara  Darwaja, Surat early in the morning. His statue was honored with floral  tributes, and the atmosphere echoed with chants of "Jai Bhavani, Jai
10. சிவாஜியின் அம்பர்கண்ட் யுத்தம் , கின்னஸ் பத்தகத்தில் பதிவாகி உள்ளது. 30,000 உஸ்பெக் வீரர் படையை, 1,000 பேர் கொண்ட சிவாஜியின் படை நிர்மூலமாக்கியது.
 
பட்டுமல்லாமல், எதிரிப் படையில் ஒரு வீரர் கூட திரும்பிப் போக விடாமல் அழித்தது. இது தான் உலக சாதனை.
 
11. சிவாஜி, தன் 30 ஆண்டு காலத்தில், இரண்டு தடவை தான் நம் நாட்டு எதிரிகளுடன் மோதியுள்ளார்.
 Bronze Statue of Shivaji Maharaj, the Maratha Emperor, Kapoorhol Editorial  Image - Image of indian, fighter: 109245965
பிற யுத்தங்கள் யாவும், அயல் நாட்டுப் படைகளுக்கு எதிராகத் தான்.
 
12. சிவாஜி மோதியதெல்லாம் கொடூரத் தாக்குதலுக்குப் பெயர் பெற்ற பதான், துருக்கி, ஆஃப்கானிஸ்தான், மங்கோலியா படைகளுக்கு எதிராகத் தான்.
 
இவற்றில் ஒன்றில் கூட சிவாஜி தோல்வியே கண்டதில்லை.
 
13. ஈரான், சிவாஜியை முறியடிக்க கடற்படையை அனுப்ப முடிவு செய்த போது, சிவாஜி இந்தியாவின் முதல் கப்பற்படையை ஏற்படுத்தினார்.
 காவிகள் மறைத்த சிவாஜி வரலாறு ! | வினவு
ஆனால், அது முழு அளவில் உருவாக்கப் படுவதற்கு முன், சிவாஜி தன் 50-வது வயதில் மரணமடைந்தார். 
(பிறந்தது: 19-2-1630; இறந்தது: 3-4-1680).
 
14. பாஸ்டன் பல்கலைக் கழகத்தில், “மேலாண்மைக்கு குரு சிவாஜி” என்று ஒரு பாடம் இன்றும் போதிக்கப் பட்டு வருகிறது. இந்தியாவில் தான் சிவாஜி போன்ற மாவீரர்களைப் பற்றியெல்லாம் பள்ளிகளில் அதிகம் சொல்லிக் கொடுக்கப் படுவதில்லை. 
 
மாறாக நாம் அடிமைப்பட்டது நம்மை அடிமைப்படுத்தி அவன் அவனுடைய பெருமைகள் மட்டுமே அதிகமாக வரலாற்று புத்தகத்தில் இருக்கும்.
 
அப்புறம் எப்படி தேசம், தியாகம், வீரம், விவேகம், புத்திசாலித்தனம், அஞ்சாநெஞ்சம் போன்றவை எதிர்கால சந்ததிகளுக்கு எவ்வாறு வரும்?
 Shivaji Maharaj" Images – Browse 1,509 Stock Photos, Vectors, and Video |  Adobe Stock
வாய் சவடால் அடித்துக் கொண்டு, அயோக்கிய அரசியல்வாதிகளுக்குப் புகழாரம் சூட்டிக் கொண்டு, மதுவுக்கும் பிரியாணிக்கும் நாக்கை தொங்கபோட்டு வெட்டிப் பேச்சுப் பேசிக் கொண்டு இருக்கத்தான் நேரம் சரியாக இருக்கும்.
 
வெள்ளைக்காரன் மெக்காலே உருவாக்கிய பாடத்திட்டத்தை முற்றிலுமாக எடுத்துவிட்டு இந்த பாரத தேசத்திற்கான கல்வித்தரத்தை நமக்கு நாமே மாற்றியமைக்க வேண்டும்.
 
இங்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே குருகுலங்களில் கற்றுத் தரப்பட்ட கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியவர்கள் தான். 
 Chhatrapati Shivaji Maharaj ❤ . . . @lofiartworld . . . . 📎this post is  made with AI #midjourney#aiart #aiartwork #digitalart #digitaldrawing #lofi  #ghibi #photoshop #cozyart #artgallery #landscape #midjourneyart
இன்றுவரை நான் போற்றப்படும் சரித்திர நாயகர்கள் அந்த காலகட்டங்களில் உலகின் மற்ற பகுதிகளில் மக்கள் நாடோடியாக தான் இருந்தார்கள் என்பதை ஆராய்ந்து பாருங்கள்
ராஜராஜசோழன், கரிகால சோழன் எந்தக் கல்லூரியில் கட்டிடக்கலை படித்தார்கள். கம்பர், இளங்கோவடிகள், திருவள்ளுவர், போன்ற பெரும்பான்மை குருமார்கள் எங்கே இலக்கியம் பயின்றார்கள்.
 
பதினெட்டு சித்தர்கள் சொல்லாத மருத்துவ குறிப்பு இந்த உலகத்திலேயே இல்லை அவர்கள் மருத்துவக் கல்வி எங்கே கற்றார்கள்.
இன்னும் பலவிதமான சாதனைகள் இருக்கின்றன அனைத்தையும் வரிசைப்படுத்த இங்கே இடம் போதாது.
 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 No photo description available.  🌷 🌷🌷 🌷

 
 

காய்கறிகளின் மந்திரி சபை

மணக்கால் அய்யம்பேட்டை | 3:30 PM | Best Blogger Tips

 


இதுவரை யாரும் சொல்லி தராத காய்கறிகள் பயன்படுத்தி மருந்து மாத்திரைகள் எதுவும் இல்லாமல் வாழ் நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ 
பாகம் 4 | 12 ஊட்ச்சத்துக்கள் | காய்கறி வைத்தியம் பற்றிய வகுப்பு | Vegetable  Clinic | 9994443517 - YouTube
காய்கறிகளின் மந்திரி சபை

💺 பிரதமமந்திரி : 
💪 அரசாணிக்காய் 
🌞 தசை மண்டலம்.

💺 உள்துறை அமைச்சர் : 
👇 பீர்க்கங்காய் 
🌞 நிணநீர் மண்டலம்.

💺 வெளியுறவு துறை அமைச்சர் : 
👆 வெண்பூசணிக்காய் 
🌞 ஜீரண மண்டலம்.

💺 பொருளாதார அமைச்சர் :
☝ தேங்காய் 
🌞 எலும்பு மண்டலம்.

💺 போக்குவரத்து அமைச்சர்:
👊 வாழைக்காய்
🌞 இரத்த ஓட்ட மண்டலம்.

💺 கல்வித்துறை அமைச்சர் :
✌ கொத்தவரங்காய் 
🌞 நரம்பு மண்டலம்.

💺 சுகாதார அமைச்சர் :
👋 கோவைக்காய்
🌞 தோல் மண்டலம்.

💺 நீர்வளத்துறை அமைச்சர் :
✋ சுரைக்காய் 
🌞 சிறுநீரக மண்டலம்.
காய்கறிகளும் அதன் பயன்களும் | Vegetable Benefits In Tamil » New Smart Tamil
💺 மின்சாரத்துறை அமைச்சர் :
👍 முருங்கைக்காய்
🌞 சுவாசமண்டலம்.

💺 பாதுகாப்பு அமைச்சர் :
👌 எலுமிச்சை 
🌞 நாளமிள்ளா சுரப்பி மண்டலம்.

💺 மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் :
👏 வெண்டைக்காய் 
🌞 நாளமுள்ள சுரப்பி மண்டலம்.

💺 தகவல் தொடர்புத்துறை அமைச்சர் :
✊ புடலங்காய் 
🌞 புலன்கள் மண்டலம்.


😈 மருந்து மனிதர்களால் உருவாக்கப்பட்டது.
காய்கறிகள் கடவுளால் படைக்கப்பட்டது.


மனிதன் இறைவனின் படைப்புடன் போட்டி போட இயலாது. 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 


  🌷 🌷🌷 🌷

 

மருத்துவ பழமொழிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:02 AM | Best Blogger Tips

 No photo description available.

மருத்துவ பழமொழிகள்:
 
அசைவம்/சைவம்
 
🌿1) கோழைக்கு எதிர் தூதுவளை... நம் குடும்பத்தின் நன்மைக்கு துளசி இலை.

 
🌿2) வாதத்தை அடக்கும் முடக்கத்தான்.. நல் வாழ்வுக்கு வேண்டுமே முருங்கைதான்.
 
🌿3) கண்ணுக்கு நன்மை செய்யும் பொன்னாங்கண்ணி. மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கீழாநெல்லி.
 
🌿4) குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி.. சிறுநீரைப் பெருக்கிடும் சிறுகீரை.
 
🌿5) கோழையை இளக்கும் குப்பைமேனிச் சாறு.
 
🌿6) அரணைக் கடியை ஆற்றும் சிறுகுறிஞ்சான்.
 
🌿7) காசநோய்க்கு கண்கண்ட வெந்தயக்கீரை.
 
🌱8) ஆசன வெடிப்புக்குத் துத்திக்கீரை.
 மருத்துவ பழமொழிகள்:- 🌿1) கோழைக்கு எதிர் தூதுவளை... நம் குடும்பத்தின்  நன்மைக்கு துளசி இலை. 🌿2) வாதத்தை அடக்கும் முடக்கத்தான்.. நல் வாழ்வுக்கு ...
🌿9) தொண்டை, காது, சுவாச நோய்களுக்குத் தூதுவளைக்கீரை.
 
🌿10) வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை.
 
🌿11) கிழங்குகளில் கருணையன்றி வேறொன்றும் புசியாதே.
 
🌿12) நெஞ்சில் கபம் போம், நிறை இருமி நோயும் போம்.
 
விஞ்சு வாதத்தின் விளைவு போம்.
 
🌿13) நன்னாரி மேனியைப் பொன்னாக்கும்.
 
🌿14) விடா சுரத்திற்கு விஷ்ணுக் கரந்தை.
 
🌿15) விஷத்தைக் குடித்தவன் மிளகு நீர் குடிக்க வேண்டும்.
 
🌿16) ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும்.
 
🌿17) வில்வம் பித்தம் தீர்க்கும்.
 
🌿18) காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய் வாழ்வை வளமாக்கும் .
 
🌿19) அனைத்து வியாதிக்கும் அருகம்புல் சாறு.
இவ்வாறு மனித உடம்பைத் தாக்கும் 
 
நோய்களையும் மருத்துவரிடம் செல்லாமல், அந்நோயைத் தீர்க்க எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளையும் மிகத் தெளிவாக எடுத்தியம்புகின்றன இப் பழமொழிகள்... 
 
படித்தால் மட்டும் போதாது பயன்படுத்தி பலன் பெறுங்கள் , மூலிகைவளம் என்பது இறைவனின் அருட்கொடைகளில் ஒன்று...
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

 

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 


  
🌷 🌷🌷 🌷