ரயில் இன்ஜின் ஹாரனில் எத்தனை விதமான சத்தங்கள் இருக்கிறது தெரியுமா?

மணக்கால் அய்யம்பேட்டை | 11:22 AM | Best Blogger Tips

 May be an image of train, railway and text

ரயில் இன்ஜின் ஹாரனில் எத்தனை விதமான சத்தங்கள் இருக்கிறது தெரியுமா?
 
நாம் ரயிலில் பயணிக்கும் போது ரயிலின் ஹாரன் சத்தம் நம் காதை பிளக்கும். இப்படியான ரயிலின் ஹாரன் சத்தத்திற்குப் பின்னால் உள்ள அர்த்தம் என்ன? மொத்தம் எத்தனை விதமான ஹாரன் சத்தங்கள் இருக்கிறது? 
 Indian Railways MEGA HORN COMPILATION - Best Locomotive Horns in the World  (Part 2) - YouTube
நாம் எல்லோரும் வாழ்வில் ஒரு முறையாவது ரயிலில் பயணித்திருப்போம் ரயில் பயணம் என்பது மிக வித்தியாசமான சுகமான அனுபவத்தைத் தரக்கூடியது. இதுவரை ரயிலில் பயணம் செய்ததே இல்லை என்ற ஒரு மனிதன் இருந்தால் அவர் துரதிருஷ்டசாலி தான். ரயில் பயணம் ஏழைக்கு ஏற்ற சுகமான பயணமாக இருக்கும். இந்த ரயிலைக் கண்டாலே ஒரு பிரம்மாண்டம் தான்.
 What are the duties of a train driver? How does a signal work?
மிகப்பெரிய இன்ஜின் நீளமான பெட்டிகள், அதிக சத்தம் என எல்லாமே பெரிதாக இருக்கும் இந்த ரயிலில் பிரம்மாண்டத்திற்குப் பஞ்சம் ஏது? இப்படிப்பட்ட ரயிலில் பயணிக்கப் பல விதிமுறைகள் உள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி, ஏசி பெட்டிகள், எல்லாம் உள்ளன. இந்த ரயிலில் பயணிக்கும் போது நாம் நடுவில் உள்ள பெட்டியில் பயணிக்க வேண்டும் என்று தான் விரும்புவோம். காரணம் இறங்கும் இடத்திற்கு அருகில் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வெளியே செல்லும் பாதை இருக்கும் அதே நேரம் இன்ஜினின் சத்தமும் இருக்காது.
 
இன்ஜினிற்கு பின்னால் உள்ள பெட்டியில் இருப்பவர்களுக்கு இன்ஜின் சத்தம் எரிச்சலை ஏற்படுத்தும். அடிக்கடி ரயில் டிரைவர்கள் ஹாரன் அடித்துக்கொண்டே இருப்பார்கள். ரயிலில் ஹாரன் அடிப்படி ரயில்வே டிராக்கில் இருக்கும் மனிதர்கள், விலங்குகள், தண்டவாளங்களில் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஊழியர்கள் ஆகியோருக்கு ரயில் வருவதை எச்சரிக்க என்று மட்டும் தான் நாம் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அது தான் இல்லை. ரயில்வே ஓட்டுநர்கள் இந்த ஹாரனை தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் பயன்படுத்துகிறார்கள். 
 
இதற்காக மொத்தம் 11 வகையான ஹாரன் சத்தங்கள் ஒரு ரயில் ஓட்டுநருக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும் உரிய நேரத்தில் அவர் மற்றவர்களுடன் தகவல்களைப் பரிமாற இதைப் பயன்படுத்துவார் அந்த 11 ஹாரன் சத்தங்கள் என்ன? அது என்ன தகவலைச் சொல்கிறது? 
 சென்னையில் புதிதாக 3 மின் ரயில் சேவை தொடக்கம்: 5 மின்சார ரயில்கள் சேவை  நீட்டிப்பு | 5 Electric trains service extension in chennai - hindutamil.in
11 வகை ஹாரன் என்றால் ஒவ்வொன்றும் வேறு வேறு சத்தம் என அர்த்தம் இல்லை ஒரே ஹாரனை அடிக்கும் முறையில் 11 விதம் இருக்கிறது. அதில் #முதல் விதம் ஒரு சிறிய ஹாரன் இதற்கு அர்த்தம் ரயிலை அதன் டிரைவர் பணிமனைக்குள் சுத்தம் செய்ய எடுத்து வருகிறார் அல்லது சுத்தம் செய்த பின்பு பணிமனையிலிருந்து எடுத்த செல்கிறார் என அர்த்தம்
 
#இரண்டாவது வகை இரண்டு முறை சிறிய ஹாரன் அடிப்பது. இந்த ஹாரனிற்கு அர்த்தம் ரயிலில் டிரைவர் ரயிலின் பின்னால் உள்ள கார்டிற்கு ரயில் கிளம்புவதற்கு சிக்னல் செய்கிறார் என அர்த்தம் பொதுவாக ரயில் ஒரு ஸ்டேஷனிலிருந்து கிளம்பும் போது இந்த ஹாரன் சத்தத்தை நீங்கள் கேட்கலாம்
 
அடுத்தது #மூன்று முறை சிறிய ஹாரன் அடிப்பது. இது மிக அரிதாகவே அடிக்கப்படும். இதற்கு அர்த்தம் ரயில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் இல்லை என பின்னால் இருக்கும் கார்டிற்கு சிக்னல் செய்வதாக அர்த்தம். இந்த சிக்னல் கிடைத்ததும் ரயிலில் பின்னால் உள்ள அட்டை தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்த வேண்டும். இந்த வகை ஹாரன் மிக அரிதாகப் பயன்படுத்தப்பட்டாலும் இது ஆபத்து என்பதை உணர்த்தும் சிக்னல்
அடுத்தது #நான்கு முறை சிறிய ஹாரன் அடிப்பது.
 
இந்த ஹாரன் ரயில் நிற்கும் நிலையில் தான் அடிக்க வேண்டும். ரயில் ஏதாவது தொழிற்நுட்ப கோளாறு, அல்லது ஓடும் பாதையில் சிக்கல் ஏற்பட்டு அடுத்து ரயில் தன் பயணத்தைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டால் பின்னால் உள்ள கார்டிற்கு டிரைவர் 4 முறை ஹாரன் அடித்து தகவலைக் கொடுப்பார்
 
#ஐந்தாவது ஹாரன் வகை தொடர் ஹாரன் ரயில் ஒரு ரயில் நிலையத்தில் நிற்காமல் வேகமாகச் சென்றால் அந்த ரயில்நிலையத்தைக் கடக்கும் போது ரயிலில் தொடர் ஹாரன் அடிக்க வேண்டும். நீங்கள் ரயிலில் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் போது தொடர்ந்து ஹாரன் சத்தம் கேட்டால் நீங்கள் ஏதோ ரயில் ரயில் நிலையத்தை வேகமாகக் கடந்து கொண்டிருக்கிறீர்கள் என அர்த்தம்
 
அடுத்தது #ஆறாவதாக ஒரு நீண்ட ஹாரன் ஒரு சிறிய ஹாரன் அடுத்தடுத்து ஒலிக்கப்படும். இதற்கு அர்த்தம். இது பெரும்பாலும் ரயில் கிளம்பும் இடத்தில் அடிக்கப்படும் ரயில் ஒரு இடத்தில் நிறுத்தப்படும் போது இன்ஜின் மற்றும் கார்டு ஆகிய இருவரும் பிரேக் பிடித்திருப்பார்கள். ரயில் இன்ஜினை ஸ்டார்ட் செய்வதற்கு முன்பு கார்டை அலார்ட் செய்து அந்த பிரேக்கை ரிலீஸ் செய்ய இந்த இன்ஜின் சிக்னல் செய்கிறது. இதை கேட்டதும் கார்டு பிரேக்கை விடுவிப்பார்
 
#ஏழாவதாக இரண்டு நீண்ட ஹாரன், இரண்டு சிறிய ஹாரன் அடுத்தடுத்து ஒலிக்க வைக்கப்பட்டாலும் அது ரயில் அபாயத்தில் இருக்கிறது என அர்த்தம். ரயில் இன்ஜினில் ஏதோ பிரச்சனை காரணமாக ரயிலை இன்ஜினில் உள்ளவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் இந்த ஹாரன் ஒலிக்க வைக்கப்படும். உடனடியாக ரயிலில் பின் பெட்டியில் உள்ள கார்டு இன்ஜினின் கண்ட்ரோலை தான் எடுத்து ரயிலை நிறுத்த வேண்டும் என அர்த்தம்
 
#எட்டாவதாக இரண்டு பாஸ்களுடன் கூடிய இரண்டு ஹாரன். இதற்கு அர்த்தம் ரயில் ஒரு ரயில்வே கிராசிங்கை கடக்கப்போகிறது என அர்த்தம். இந்த ஹாரன் சத்தம் ரயில்வே கிராசிங்கில் ரயிலுக்காக காத்திருக்கும் மக்களுக்கு ரயில் வருகிறது என எச்சரிக்கை செய்யும் வகையில் இந்த ஹாரன் சத்தம் எழுப்படுகிறது.
 தாம்பரம் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை  ரத்து 18ம் தேதி வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு - Dinakaran ...
#ஒன்பதாவதாக இரண்டு நீண்ட ஹாரன் ஒரு சிறிய ஹாரன் சத்தம் அடுத்தடுத்து ஒலிக்க வைக்கப்பட்டால் அதற்கு ரயிலின் டிரைவர் இன்ஜின் டிராக்கை மாற்றுகிறார். என அர்த்தம் பெரும்பாலும் ரயில் நிலையங்களுக்கும் ரயில் நுழையும் போது இந்த வகையான ஹாரன் ஒலிக்க வைக்கப்படும்.
 
#பத்தாவதாக இரண்டு சிறிய ஹாரன் ஒரு நீண்ட ஹாரன் ஒலிக்க வைக்கப்பட்டால் அதற்கு இரண்டு அர்த்தம் இருக்கலாம். ஒன்று ரயிலில் உள்ள பயணி யாராவது அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்ததும் இந்த ஹாரன் ஒலிக்க வைக்கப்படும். அல்லது ரயிலின் பின்னாடி உள்ள கார்டு பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்தினாலும் இந்த ஹாரன் தான் ஒலிக்கப்படும். ரயிலில் உள்ள டிக்கெட் பரிசோதகர்கள் உடனடியாக உஷாராகி என்ன நடக்கிறது அறிந்து செயல்பட வேண்டும்.
 
#கடைசியான முறை 6 முறை சிறிய ஹாரன்களை அடிப்பது இது மிக மிக மிக அரிதான இடங்களில் தான் அடிக்கப்படும். ரயில் ஏதாவது ஆபத்தில் சிக்கிவிட்டால் இந்த ஹாரன் அடித்து எச்சரிக்கை விடுக்கப்படும். அதாவது ரயிலைத் தீவிரவாதிகள் கடத்திவிட்டாலோ, அல்லது ரயில் வழிப்பறி கொள்ளை கூட்டத்திடம் சிக்கிவிட்டாலோ, ரயிலை வன விலங்குகள் சுற்றிதாக்குதல் நடத்தத் துவங்கிவிட்டாலோ இவ்வாறான சிக்னல் கொடுக்கப்படும்.
 
இந்த ஹாரன் சிக்னல் முறை எல்லாம் ரயில்கள் ஓடத்துவங்கிய காலகட்டத்தில் விதிமுறைகளாக வகுத்து வைத்தனர். அப்பொழுது ரயிலின் இன்ஜினில் இருப்பவர்களுக்கும் பின்னால் இருக்கும் கார்டிற்கும் தொடர்பு இருக்காது. ஆனால் இன்று அப்படி அல்ல வயர்லெஸ் கம்யூனிகேஷன் வந்துவிட்டது. தற்போது தகவல்கள் உடனடியாக பறக்கின்றன. அதனால் இந்த ஹாரன் சிக்னல் எல்லாம் ஒரு கடமைக்கு தான் இருக்கிறது.
 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷  May be an image of 1 person, temple and monument 🌷 🌷🌷 🌷

 

சிறுநீரகங்களின் அமைதியான போராட்டம்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:44 PM | Best Blogger Tips

May be an image of text that says "Paleo a LLife Pimuhin aleoLif மௌனமான கொலைகாரன்: சர்க்கரை எப்படி மெதுவாக சிறுநீரகத்தை சிதைக்குது?" 

#சிறுநீரகங்களின் அமைதியான போராட்டம்: சர்க்கரை உங்களை உள்ளிருந்து எவ்வாறு சிதைக்கிறது? 🚫
🍬
நம் உடலில் சிறுநீரகங்கள் ஒரு இயற்கை வடிகட்டி போல வேலை செய்கின்றன. ரத்தத்தில் இருக்கும் கழிவுகளையும், கூடுதல் திரவங்களையும் வடிகட்டி தூய்மையாக வைத்திருக்கின்றன. ஆனால், நீங்கள் அதிகமாக சர்க்கரை எடுத்துக்கொண்டால் என்ன நடக்கிறது தெரியுமா?
 
 😳
💥 சிறுநீரகங்களுக்கு மிகுந்த அழுத்தம்
சர்க்கரை அதிகம் எடுத்துக்கொள்ளும் போது, ரத்த சர்க்கரை நிலை அதிகரிக்கிறது. குறிப்பாக இன்சுலின் எதிர்ப்பு அல்லது நீரிழிவு உள்ளவர்களுக்கு இது ஆபத்தானது.
 
➡️ ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்கும்போது, சிறுநீரகம் அதை வடிகட்ட அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும்.
 
➡️ இதனால் glomeruli எனப்படும் சிறிய ரத்தக் குழாய்கள் சீர்குலைந்து பலவீனமடைகின்றன.
 
⚠️ அறிகுறிகள் ஆரம்பிக்கும் தருணம்
 
இந்த வடிகட்டும் குழாய்கள் பாதிக்கப்படும் போது, உடலுக்கு தேவையான புரதம் போன்ற முக்கிய பொருட்கள் கூட சிறுநீரில் கலக்கத் தொடங்கும். இது தான் சிறுநீரக நோய் ஆரம்பிக்கும் முதல்சிக்னல்.
 
🍩 சர்க்கரையின் மறைமுக தாக்கம்
சர்க்கரை → உடல் எடை அதிகரிப்பு
சர்க்கரை → உயர் இரத்த அழுத்தம்
சர்க்கரை → டைப்-2 நீரிழிவு
 
👉 இவை அனைத்தும் சேர்ந்து சிறுநீரக சேதத்திற்கு முக்கிய காரணிகள். உலகளவில், நீரிழிவு நோய் தான் சிறுநீரக செயலிழப்பின் #1 காரணம் என்பதும் உண்மை!
 
🔥 சர்க்கரை + உடல் அழற்சி + ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்
 
சர்க்கரை உடலில் அழற்சி (inflammation) மற்றும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் அதிகரிக்கச் செய்கிறது. இதனால் ரத்தக் குழாய்கள் பலவீனமடைகின்றன. காலப்போக்கில், சிறுநீரகங்கள் மெதுவாக தங்கள் சக்தியை இழக்கின்றன → Chronic Kidney Disease அல்லது கடைசியில் Kidney Failure வரக்கூடும்.
 
🌱 உங்களை காப்பாற்ற எளிய வழிகள்
 
✅ சர்க்கரை பானங்கள், இனிப்புகள், ஜங்க் உணவுகளை குறையுங்கள்
 
✅ சீரான உடற்பயிற்சி செய்யுங்கள்
 
✅ அதிக தண்ணீர் குடிக்கவும்
 
✅ நீரிழிவு / உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துங்கள்
 
✅ சிறுநீரக பரிசோதனைகளை தவறாமல் செய்து கொள்ளுங்கள்
 
💚 உங்கள் சிறுநீரகம் 24/7 உழைக்கிறது… ஆனால் அதை பாதுகாப்பது உங்கள் கையில் தான். இன்று முதல் சர்க்கரை உபயோகத்தை குறைத்து, சிறுநீரகங்களுக்கு ஓய்வு கொடுங்கள்! 🌿
May be an image of 1 person, horizon and lake

 நன்றி  

Gnaneswaran Gnanes

டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது...........

மணக்கால் அய்யம்பேட்டை | 9:52 AM | Best Blogger Tips

No photo description available.

டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது அதனருகில் மூன்று கப்பல்கள் இருந்தனவாம்.
 
அதில் ஒரு கப்பலின் பெயர் சாம்சன். அது டைட்டானிக் மூழ்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் இருந்ததாம்.
டைட்டானிக் அனுப்பிய “காப்பாற்றுங்கள்: 
 
என்கிற சமிக்ஞை காட்டும் வெள்ளை விளக்கொளியைப் பார்த்தனர். ஆனால் அதில் இருந்தவர்கள், சீல் எனும் கடல் விலங்கைத் திருட வந்தவர்கள். அதனால் காப்பாற்றப்போய் மாட்டிக் கொண்டால் என்னாவது, நமக்கேன் வம்பு என்று எண்ணி டைட்டானிக்கின் எதிர்த்திசையில் விரைந்து விட்டனர். 
 
நம்மில் பலர், நமது பாவச்செயல்களில் மட்டுமே கவனம் செலுத்தி அடுத்தவரின் துன்பங்களைப் பற்றித் துளியும் கவலை படாமல் இருப்போம். இந்த சாம்சன் கப்பல் போல.
 
அடுத்து கலிஃபோர்னியன் என்ற கப்பல்,
டைட்டானிக் கப்பலிற்கு 14 கி.மீ தொலைவில் இருந்தது. அக்கப்பலின் கேப்டனும் டைட்டானிக் அனுப்பிய ஆபத்து சமிக்ஞைகளைப் பார்த்தார்.
ஆனால் அவர்களின் கப்பலைச் சுற்றியும் பனிப்பாறைகள் இருந்தன. இருட்டாகவும், மோசமான சூழலும் இருந்ததால், திரும்பவும் கரைக்கே போய், காலையில் புறப்படலாம் என முடிவெடுத்தனர் மாலுமிகள். உதவி கோரிய கப்பலுக்கு ஒன்றும் ஆயிருக்காது என்று அவர்களே, அவர்களுக்குக் கூறித்தேற்றிக் கொண்டனர்.
 
இக்கப்பலைப் போன்றவர்கள் நம்மிடையே இருக்கும்,”நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. சூழல், சரியில்லை, நிலைமை சரியானதும் பார்த்துக்கொள்ளலாம்’ என்று எண்ணுபவர்கள்.
 
மூன்றாவது கப்பல் கர்ப்பாதியா
 
அது, டைட்டானிக் கிலிருந்து 58 கி.மீ தொலைவில் தெற்கு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது. அப்போது கப்பலின் கேப்டனுக்கு டைட்டானிக் அனுப்பிய ஆபத்து சமிக்ஞை ரேடியோ மூலம் கேட்டது. 
 
அவர் உடனே, மண்டியிட்டு இறைவனிடம் 'எனக்கு வழிகாட்டு' எனப் பிரார்த்தனை செய்து, கப்பலைத்திருப்பி, டைட்டானிக்கை நோக்கி, ஆபத்தான பனிப்பாறைகளிடையே செலுத்தினார். 
 
இந்தக் கப்பல்தான் டைட்டானிக்கில் சிக்கியிருந்த 705 பேரைக் காப்பாற்றியது.
தடைகளும்,எதிர்ப்புகளும்,ஆபத்துகளும், பொறுப்பைத்தட்டிக் கழித்திட காரணங்களும் நிச்சயம் குறுக்கிடும், ஆனால் அவற்றை மீறிச் செல்பவர்கள் மட்டுமே உலகில் உள்ள மக்களின் இதயங்களில் நாயகர்களாக வாழ்வார்கள்.

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷  No photo description available. 🌷 🌷🌷 🌷

இறைவனிடம் இறைவன் உபதேசம் பெற்ற

மணக்கால் அய்யம்பேட்டை | 12:54 PM | Best Blogger Tips

 May be an image of text that says "மாணிசக்கவாசார் வாசார் வா மாணிச்க 4 குருவருள்பெற்றது"

🌹இறைவனிடம் இறைவன் உபதேசம் பெற்ற முக்கியத் திருத்தலங்களும், உபதேசித்த இறைவனும், உபதேசம் பெற்ற இறைவனும்*
நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
 
1. ஓமாம்புலியூர் – தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்தது.
2. உத்திரகோசமங்கை - பார்வதிக்கு இறைவன் வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்தல்.
3. இன்னம்பர் – அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்றது.
4. திருவுசாத்தானம் - இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் ராமர் பெற்றார்.
5. ஆலங்குடி - சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். மற்றும் ஆதிசங்கரர் குருபகவானை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றார்.
6. திருவான்மியூர் - அகத்தியருக்கு மூலிகை {வைத்தியம்} பற்றி உபதேசம் அருளியது. நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
7. திருவாவடுதுறை - அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தல், மற்றும் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளியது.
8. சிதம்பரம் - பைரவர் பிரம்ம தத்துவத்தை உபதேசித்தல்.
9. திருப்பூவாளியூர் - நுன்முனிவர் 70 பேருக்கு பரஞான உபதேசம்.
10. திருமங்களம் - சௌமினி முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.
11. திருக்கழு குன்றம் - சனகர் முதலிய முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.
12. திருமயிலை - 1000 முனிவர்கள் அறநெறிகளை அறிவுறையாக பெற்றது.
13. செய்யாறு - வேதம் பற்றி கருப்பொருள் பற்றி தவசிகள் பலருக்கு அருளுரை.
14. திருவெண்காடு - நான்முகன் குருமூர்த்தியிடம் ஞானோயதேசம் பெற்றது, அம்பாள் பிரம்மனுக்கு பிரம்ம வித்தையை உபதேசித்ததால் பிரம வித்யாம்பிகை என்று பெயர்.
15. திருப்பனந்தாள் - அம்பாள் ஸ்வாமியிடம் ஞானோபதேசம் பெற்றது.
16. திருக்கடவூர் - பிரம்மன் ஞானோபதேசம் பெற்றது.
17. திருவானைக்கா - அம்பிகை ஞானோபதேசம் பெற்றது.
18. மயிலாடுதுறை - குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்றது.நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
19. திருவாவடுதுறை - அகத்தியமுனிவர்க்கு பஞ்சாட்சரம் உபதேசம்.
20. தென்மருதூர் - 1000 முனிவர்க்கு உபதேசம் அருளியது.
21. விருத்தாசலம் - இறப்பவர்க்கு இறைவன் அவ்வுயிரை தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் மற்றும் இறைவி தன் முந்தானையால் விசிறி விடுதல்.
22. திருப்பெருந்துறை - மாணிக்கவாசகருக்கு குருத்த மரத்தடியில் உபதேசம்.
23. உத்தரமாயூரம் - ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ரிஷபதேவரின் கர்வம் அடக்கி உபதேசம் செய்தது.
24. காஞ்சி - ஸப்தரிஷிகளுக்கு உபதேசம்.
25. திருப்புறம்பயம் - சனகாதி முனிவர்களுக்கு தர்மோபதேசம்.
26. விளநகர் - அருள் வித்தன் என்னும் மறையவருக்கு ஞானோபதேசம்.நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
27. திருத்துருத்தி - சிவன் பிரம்மசாரியாய் வேதத்தை தாமே சொன்னது.
28. கரூர் - ஈசன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தை சுக்கிரனுக்கு உபதேசித்தல்.
29. திருவோத்தூர் - ஈசன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசித்தல்
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹
சிவாய நம🙇 சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

திருமலைநாயக்கரின் சமாதி எங்குள்ளது

மணக்கால் அய்யம்பேட்டை | 5:23 PM | Best Blogger Tips

 மதுரையில் மாமன்னர் ...

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிசேகம் நடத்திய திருமலைநாயக்கரின் சமாதி எங்குள்ளது?
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQdAAR1GdxNES9c58vFjloCwXO1yzxMgVUcO_UK5FohtLrqCOGa4UigKa8_XCh9JMt-kao&usqp=CAU
மதுரையை சேர்ந்த ஒரு நண்பரின் தேடல் பதிவு!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பலநூற்றாண்டுகளாக பல முன்னோர்களால் கட்டப்பட்டது.
திருமலை நாயக்கர் thirumalai Nayakkar
அதை  நிறைவு செய்து கும்பாபிசேகம் நடத்தியது திருமலைநாயக்கர்.
மகிழ்மதி: மதுரை - மீனாட்சி அம்மன் ...
இந்த விசயம் உலகறிந்த ஒன்று.

தஞ்சைபெரிய கோவிலை
கட்டிய ராஜராஜசோழரின்
சமாதி இருக்கும் இடம்
அனைவருக்குமே தெரியும்.

ஆனால் தஞ்சைபெரிய கோவிலுக்கு நிகரான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிசேகம் நடத்திய திருமலைநாயக்கரின் சமாதி இருக்குமிடம்  இன்றுவரை மர்மமாகவே இருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தல ...
மதுரையை சேரந்த ஒருவர் திருமலைநாயக்கரின் சமாதி எங்குள்ளது என்பது தொடர்பாக தனது தேடல் வேட்டையை ஆரம்பித்து அவருக்கு கிடைத்த அனுபவங்களை அவரே சொல்வது போல பதிவிட்டுள்ளார்.

அவரது தேடுதல் அனுபவங்கள் கீழே!

திருமலைநாயக்கரின் சமாதி எங்குள்ளது என்பதை கண்டறியும் நோக்கத்துடன் எடுக்கபட்ட எனது முயற்சிகளின் போது பல கட்டுக்கதைகள் மட்டுமே கிடைக்க பெற்றேன்.
MGM designs - Thirumalai nayakar PNG image | Facebook
இறுதியில் எனது கோரிக்கையை பிரபஞ்சத்திடம் முன்வைத்தேன்..

சிலவாரங்கள் கழிந்தது.
எனது நண்பர் வீட்டு விசேடத்திற்காக இருசக்கரவாகனத்தில்  அருப்புக்கோட்டை என்ற ஊருக்கு
சிலைமான் ரிங்ரோடு வழியாக சென்றுகொண்டிருந்தபோது சித்தர்கோவிலுக்கு செல்லும் வழி என்று ஒரு விளம்பரப்பலகை தென்பட்டதை பார்த்தேன்.

அந்த கோவிலுக்கு சென்று வருமாறு எனது உள்ளுணர்வு சொல்ல சித்தர்கோவிலை நோக்கி பயணித்தேன்.

புலியூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள அந்த சித்தர் கோவிலுக்குள் சென்று பார்த்தால் அங்கு பாம்பாட்டி சித்தர் சன்னதி என்று எழுதப்பட்டு இருந்தது.

இந்த சித்தர் கோவில் யுகம் பல கடந்தது என்பதை உள்ளே செல்லும்போதே அங்கே நிலவும் அதிர்வு அலைகளால் உணர்ந்தேன்!

பேராவலுடன் அந்த சித்தர் கோவிலில் இருந்த சித்தரின் திருவுருவைப்பார்த்தால்.
அது ஒரு மன்னரின் சிலைஉருவம் போன்று தோன்றியது.
பாம்பாட்டி சித்தர் குகைக்கோயில் ...
அந்த உருவ சிலையை பார்த்த நேரத்தில் என் மனது என்னிடம் இல்லை.

அந்த கோவிலின் பூசாரியிடம் சென்று அந்த சிலையை பற்றியும்,கோவிலைப்பற்றிய தகவல்களை கூறும்படியும் கேட்டுகொண்டேன்.
Pambatti Siddhar Temple, Puliyur, Madurai
அவர் இந்த புலியூர் என்ற ஊர் தோன்றவதற்கு முன்பாகவே இந்த சித்தர் கோவில் இருந்ததாகவும்.
இந்த கோவிலை அவரது  மூதாதையர்கள் தான் முதலில் இந்த சிலையையும்,கோவிலையும் கண்டுபிடித்ததாக கூறினார்.

அவரது  மூதாதையர்கள் முதலில் இந்த கோவிலை கண்டுபிடித்த போது  இந்த சிலை பாம்பு புற்றால் மூடப்பட்டிருந்ததாம்.

ஒரு நாள் கனமழையின் போது புற்று கரைந்து இந்த சிலை வெளிப்பட்டதாவும் கூடவே சில ஓலைச்சுவடிகள் இருந்ததாகவும் கூறினார்.
🙏அருள்மிகு ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் கோயில் புலியூர் மதுரை🙏 - YouTube
அந்த சுவடிகளை பார்க்கலாமா?என நான் கேட்கவே அவர்  கருவறையின் பின்பகுதிக்கு என்னை அழைத்து சென்று அந்த ஒலை ஏட்டுச்சுவடிகளை என்னிடம்  காண்பித்தார்.

அதில் எழுதியிருந்த எழுத்துவடிவம் வட்டஎழுத்துக்களாக இருந்தது.
அந்த சுவடியில் எழுதப்பட்டிருந்த வட்ட எழுத்துக்கள் நான் ஏற்கனவே தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தில் பார்த்த பாம்பாட்டி சித்தர் ஓலைச்சுவடிகளின் எழுத்துக்களோடு ஒத்து இருந்தது..

நான் கோவிலின் பூசாரியிடம் பாம்பாட்டி சித்தர் சன்னதி என்று நீங்கள் சொல்கிறீர்கள்,ஆனால்
இங்குள்ள திருவுருவம் மன்னரின் சிலைபோல் உள்ளதே என கேட்டேன்.

அவர் இது மன்னர் திருமலைநாயக்கரின் உருவம் என்று ஒரு அதிர்ச்சியான தகவலை விவரிக்கலானார்.

திருமலைநாயக்கருக்கு மது மாது என அனைத்து பழக்கமும் உண்டு.
அவரது காலத்தில் சைவ வைணவ பிரச்சனை நடந்துகொண்டிருந்தது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருப்பணிகளையும், கும்பாபிசேக வேலைகளையும் தனது நேரடி பார்வையில் மேற்கொண்டு வந்த மன்னர் திருமலைநாயக்கர் ஒரு நாள் மிதமிஞ்சிய போதையில் மூர்ச்சையடைந்து தனது உயிரை விட்டுவிட்டாராம்.

இதையறிந்த போகர் சித்தர தலைமையில் சித்தர்கள் சதுரகிரி மலையில் ஒன்றுகூடி  கூடி பேசினார்களாம்.

இந்த யுகத்தில் மீனாட்சி அம்மன் கோவில் திருப்பணி வேலைகளும்,
கும்பாபிஷேகமும்
முழுமையடையாவிட்டால் அடுத்த கலியுகத்தில் இந்த கோவில் அழிந்தே போய்விடும்.

எனவே பாம்பாட்டி சித்தரிடம் நீ சென்று அந்த கோவிலின் திருப்பணியை முடித்துவிட்டுவா என
போகர் கட்டளையிட்டாராம்.

பாம்பாட்டி சித்தர் சில தைலங்களால் தனது உடலை பதப்படுத்தி தன் உடலை இந்த சித்தர் கோவிலில் வைத்துவிட்டு
திருமலைநாயக்கரின் உடலுக்குள் கூடுவிட்டு கூடுபாய்ந்தாராம்.

பின்பு கோவிலின் கும்பாபிசேக திருப்பணி வேலைகளை பாம்பாட்டி சித்தர் திருமலைநாயக்கர் மன்னர் உருவில் தொடர்ந்து கவனித்து வந்துள்ளார்.

பாம்பாட்டி சித்தர் திருமலைநாயக்கர் மன்னர் உருவில் இரவில் நகர்வலம் செல்வதுபோல் சுரங்கப்பாதை
வழியாக சென்று இந்த சித்தர் கோவிலுக்கு வந்து தனது உடலை பார்த்து வந்துள்ளார்..

இந்த சுரங்கப்பாதை . மீனாட்சிஅம்மன் கோவிலில் இருந்து மதுரை தெப்பக்குளம் வரை இருந்துள்ளது.

இந்த சுரங்கப்பாதை இன்றும் 
உள்ளது.(மதுரையை சேர்ந்தவர்களுக்கு இந்த சு

ரங்க பாதை பற்றிய விபரங்கள் தெரியும்).

இந்த பாம்பாட்டி சித்தர் கோவிலும் தெப்பக்குளத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவிலேயே உள்ளது.

மதுரை மீனாட்சி கோவில் திருப்பணிகள் முடிந்து
கும்பாபிசேகம் நடைபெற்று முடிந்த பிறகு திருமலைநாயக்கர் உருவில் இருந்த பாம்பாட்டி சித்தரை காணவில்லை.

இந்த சித்தர் கோவிலுக்கு வந்த பாம்பாட்டி சித்தர் திருமலை நாயக்கரின் உடலை கல்லாக்கிவிட்டு
மீண்டும் தனது உடலுக்குள் புகுந்து கொண்டார்.

பாம்பாட்டி சித்தர் தனது உடலை வைத்த இடமே இந்த சித்தர் கோவில் திருத்தலம்.

திருமலை நாயக்கரின் உடல் கல்லானதும் இந்த திருத்தலத்திலேதான்.

மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு
இந்த சித்தர் கோவிலுக்கு நேரில் சென்று தெரிந்துகொள்ளுங்கள்

இந்த சித்தர்கோவிலின் முகவரி.

மதுரை தெப்பக்குளத்தில் இருந்து சிந்தாமனி ரிங்ரோடு வழியாக சென்றால் புலியூர் என்ற
கிராமத்தில் சித்தர் கோவில் அமைந்துள்ளது

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 

நாம் செய்த தவறுகள் நம் பிள்ளைகளைச் ........

மணக்கால் அய்யம்பேட்டை | 2:41 PM | Best Blogger Tips

பெற்றோர்கள் செய்த பாவம் பிள்ளைகளுக்கு வருமா ??? - YouTube

பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை...
 பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை  குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன் ...
குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம் கிருஷ்ணா நான் குருடனாக இருந்தபோதும், 

விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது
100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார். 
பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை  குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன் ...
கிருஷ்ணர் - உனக்கு நான் ஒரு கதை சொல்கிறேன். அதற்குப் பதில் சொன்னால், நீ கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன்.., என்று கதையை சொல்ல ஆரம்பித்தார்...

நீதி தவறாது ஆட்சி செய்த அரசனிடம் வறியவன் ஒருவன் சமையல்காரனாகச் சேர்ந்தான். மிகச் சுவையாக சமைப்பது, 

அவரை பிரத்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே
தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.

அரசருக்கு வித்தியாசமான சுவையை செய்துகொடுத்து பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை ஒன்று தோன்றியது. அதன்படி அரண்மனைக் குளத்தில் இருந்த
அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து அரசருக்குப் பரிமாறினான். தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அச்சுவையில் மயங்கிய மன்னர், அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி சமைக்குமாறு கட்டளையிட்டார். 
பெற்றோர் செய்த பாவம் பிள்ளையை சேரும்..??? 💯#ஆன்மீகம் #om #aanmeegam  #murugan #shortsfeed #shiva - YouTube
அதோடு அந்தச் சமையல்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார். 

திருதராஷ்டிரா இப்போது சொல் என்ற கிருஷ்ணன்..

அரசன், சமையல் கலைஞன்
இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்? என்று பகவான் கேட்டார். 

வசிஷ்டரின் சமையல்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்துவிட்டார். 
செய்த பாவத்திற்கு பரிஹாரம் இல்லை என்று பெரியோர், சான்றோர் கூறக்  கேட்டிருப்போம். கீழ் கண்ட கதையை படித்தால், காரணம் என்ன என்று நமக்கு ...
ஆயினும் அதை வசிஷ்டர் கண்டுபிடித்து, அவனுக்கு சாபமிட்டார், அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே! 

சமையல்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான். அதனால்
அவன் செய்த தவறு சிறியது. 

ஆனால் பல நாட்கள்
அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத அரசன்தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான் என்றார் திருதராஷ்டிரன். 

புன்னகைத்த கண்ணன்,
திருதராஷ்டிரா நீயும் ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது மன்னன் செய்ததே தவறு எனக் கூறினாய். 
பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை!
அத்தகைய நீதிதான் பீஷ்மர், துரோணர் போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது. நல்ல மனைவி, நூறு குழந்தைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது. 

ஆனால், நான்சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான். சென்ற பிறவியில்
நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய். 

அந்த அன்னங்கள், அதன் தாயார் எத்தகைய வேதனை அடைந்திருக்கும் என்பதை உன்
நூறு பிள்ளைகளை இழந்து நீ அறிந்து கொள்கிறாய். 

ஆனால் தினம் தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. அப்புறம்
உனக்கு கண் எதற்கு? அதனாலேயே நீ குருடனானாய்

தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும்
நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்! என்றார். 

தன்வினையே தன்னைச் சுட்டதென்பதை உணர்ந்த திருதராஷ்டிரன் வாயடைத்து நின்றான். 

நாம் செய்த தவறுகள் நம் பிள்ளைகளைச் சேரும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்வோம்.

 நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம்.🌹🌹🌹
 🤷‍♂️🤷‍♂️
💪🏾🇮🇳😍
🙏🪷🙏🪷🙏🪷🙏 

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 


 
🌷 🌷🌷 🌷