ஆயுத பூஜை - விஜயதசமி

மணக்கால் அய்யம்பேட்டை | 3:26 PM | Best Blogger Tips

 Ayudha Pooja and Vijayadashami 2020 : ஆயுத பூஜை எதனால் கொண்டாடப்படுகிறது  தெரியுமா? - Tamil BoldSky

ஆயுத பூஜை:
 
பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்றது நம் அனைவருக்கும் பரிட்சியமே. 
 
நாடு இழந்து பெருமை இழந்து, வனவாசம் மேற்கொண்ட பாண்டவர்கள் தங்களின் ஆயுதங்களை ஒரு வன்னிமரப் பொந்தில் மறைத்து வைத்திருந்தனர்.
 ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாட்டம்... வீடுகள்,  கடைகளில் கோலாகலம் | Ayudha Puja, Saraswathi Puja festival is celebrated  with enthusiasm in Tamil Nadu ...
பின்னர் 14 வருட வனவாசத்திற்குப் பிறகு நாடு திரும்பிய பாண்டவர்கள், அதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் தாங்கள் உபயோகித்த அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்துப் பூஜை செய்தனர்.
 முழுமஹாபாரதம்: July 2013
அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால்
 
இவ்விழாவுக்கு ஆயுதபூஜை எனப் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
 
விஜயதசமி:
 விஜயதசமி வாழ்த்துக்கள் | Vijayadashami Wishes | Tamil eCard
பிரம்மாவை நோக்கித்தவம் செய்த மகிஷன் என்னும் அசுரன், தனக்கு அழிவு நேர்ந்தால் ஒருபெண்ணால் மட்டுமே நிகழ வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். தனக்கு அழிவே கிடையாது என ஆணவம் கொண்டான்.
 
தேவலோகத்தின் மீது போர் தொடுத்து தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் பராசக்தியிடம் முறையிட்டனர். 
 வீரமுண்டு... வெற்றியுண்டு! - தமிழ்ஹிந்து
அவர்களின் துன்பம் தீர்க்க எண்ணிய தேவி, உக்ரரூபம் கொண்டாள். மும்மூர்த்திகளும் தங்களது அம்சத்தையும் அவளுக்கு அளித்து உதவினர். மகிஷனுடன் அவள் போரிட்டாள்.
 
சூலத்தை வீசிக்கொன்றாள். மகிஷனை வதம் செய்ததால் மகிஷாசுரமர்த்தினி என்ற பெயர் பெற்றாள். அந்த வெற்றித்திருநாளையே விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம்.
 
அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள் 🙏🏻
 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷No photo description available.  🌷 🌷🌷 🌷