பறவைகளிடமிருந்து நாம் சில பாடங்களை படிப்போம்...!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:34 | Best Blogger Tips

 




🦜 இரவு நேரம் ஒன்றும் சாப்பிடுவதில்லை.


🦜 இரவு நேரங்களில் ஊர் சுற்றுவதில்லை.


🦜 தன் பிள்ளைகளுக்கு தக்க சமயத்தில் வாழ்க்கைக்கான பயிற்சிகளை அளிக்கின்றன.


🦜 மூக்குமுட்ட உண்ணுவதில்லை. எவ்வளவு தானியங்களை இட்டு கொடுத்தாலும், தேவையானவற்றை மட்டும் கொத்திவிட்டு பறந்து செல்கின்றன. போகும் போது எதையும் எடுத்து போவதில்லை.



🦜 இருள் சூழும்போதே உறங்க துவங்குகின்றன. அதிகாலை ஆனந்தமாய் பாட்டு பாடி எழுகின்றன.


🦜 தனது ஆகாரத்தை அவை மாற்றுவதில்லை. 


🦜 தனது உடலில் வலுவுள்ளவரை உழைக்கின்றன. இரவு அல்லாது மற்ற நேரங்களில் ஓய்வு எடுப்பதில்லை.


🦜 நோய் வந்தால் உண்ணுவதில்லை. சுகமான பின் உணவு எடுத்துக்கொள்கிறது.


🦜 தன் குழந்தைகளுக்கு பரிபூரணமான அன்பை கொடுத்து வளர்க்கின்றன.



🦜 கடுமையான உழைப்பாளிகளாக இருப்பதால், இதயம், கல்லீரல், நுரையீரல் நோய்களால் பாதிக்கப்படுவதில்லை.


🦜 இயற்கைக்கு எதிராக ஒருபோதும் செயலாற்றுவதில்லை. தனது அத்தியாவசிய தேவைக்கு மட்டும் இயற்கையிலிருந்து பெற்று கொள்கின்றன.



🦜 தனது கூடு மற்றும் சுற்று சூழல்களை அனுசரனையோடு பாதுகாக்கின்றன.


🦜 ஒருபோதும் தனது மொழியினை மாற்றி வேற்று மொழி கலந்து பேசுவதில்லை.



🦜 இதில் சில படிப்பினைகளையாவது நாம் பாடமாக எடுத்துக்கொண்டால் வாழ்வு சிறப்பது திண்ணம்.

😊😊

நன்றி இணையம்