திருடா நீ உலகிற்கு பாடம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:52 | Best Blogger Tips

 









ஓர் அழகான சிற்றூர் இருந்தது.அவ்வூரில் நீதி தேவன் முன் சிலைக்கு கீழ் அமர்ந்து அரசர் நீதீ வழங்குவார்.

ஒருநாள் ஒரு திருடனைக் கொண்டு போய் அரசன் முன் அவ்வூர் மக்கள் அவனை நிறுத்தினார்கள்.

திருடன் செய்த குற்றத்தைக் கேட்ட அரசர் அவனை உடனே தூக்கிலிடுங்கள் என்று காவலாளிகளுக்கு உத்தரவு இட்டார்.

இதைக் கேட்ட திருடன் அரசே எனக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள் அரசே நான் உண்மையைச் சொல்லி விடுகிறேன் அரசன் அப்படியா சொல்லு பார்க்கலாம் என்றார்.

அந்தத் திருடன் தன் தந்தை சொன்ன ரகசியத்தை சொன்னான் அதாவது அரசே அது எனக்கு மிக முக்கிய ரகசிய மந்திரம் ஒன்றை எனக்கு என் தந்தைக் கற்றுக் கொடுத்தார்.ஒரு பலாக்கொட்டையை தரையில் நட்டு ஒரேஇரவில் மரமாகி பழங்கள் கொடுப்பதை உங்களுக்கு இப்போ நான் காட்ட விழைகிறேன் அரசே!


திருடன் கூறியதைக் கண்டு வேண்டுக்கோளுக்கு இனங்க ஆணையிட்டார் அரசே.


அரசே இந்தப் பலாக்கொட்டையை வாழ்க்கையில் ஒரே ஒரு முறைக் கூட திருடாதவர்கள் நட்டு வைக்க வேண்டும் என்றான். அரசே அப்போது தான் நான் சொல்லும் அந்த மந்திரம் பலிக்கும் என்றான் அரசன் உடனே நீயேச் செய் என்றார்.நான் இதைச் செய்தால் பலன் கிடைக்காது என்றார்.


அரசே உங்க உயர் அதிகாரிகளை நடச் சொல்லுங்க என்றான்.


உடனே அரசர் தன் உயர் அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டார்.அவர்கள் அதை எதிர்பார்க்க இல்லை.உயர் அதிகாரி மலைத்துப் போய் நின்றார். அரசர் அதிகாரியே என்று குரல் கொடுத்தார்.அவர் நான் சிறுவனாக இருக்கும் போது என் தங்கையின் உணவுப் பொருளைத் திருடி தின்று விட்டேன் மற்றும் எழுதுப்பொருட்களை களவுயாண்டு விட்டேன் வேந்தே, ஆகையால் என்னால் நட இயலாது. இது போன்று அரச சபையில் அனைவரிடம் கேட்டான் நாங்கள் ஏதோ ஒரு வகையில் தவறு செய்துள்ளோம் என்றனர்.


அந்தத் திருடன் அரசனிடம் கேட்டான். அரசர் தயங்கிய படி நின்றார் அரசே ஏன் தயக்கம் என்றான் நானும் சிறுவயதில் அப்பா அணிந்து இருந்த முத்து மணிமாலை திருடினேன் என்றார் அரசர்.ஆகையால் என்னால் அந்தப் பலாக்கொட்டையை நட இயலாது.


திருடன் வேந்தன் மற்றும் மற்றவர்களைப் பார்த்து நீங்கள் எல்லோரும் மிகப் பெரிய மனிதர்கள் என்று நம்பியிருந்தேன் ஆயினும் நம்பிக்கை வீண் போய் விற்றது.ஆகையால் நீங்களும் திருட்டுக் குற்றம் செய்தவர்கள் தான் என்று உண்மையை சொன்னீர்கள்.


நான் காலப்போக்கில் பசியின் கொடுமையால் திருடினேன் எனக்கு தூக்கு தண்டனைத் தர உத்தரவு இட்டு உள்ளார் அரசன் என்றான் திருடன்.


அரசன் சற்று நிதானமாக யோசித்துப் பார்த்து திருடனுக்கு தூக்கு தண்டனைத் தர வேண்டும் எண்ணத்தை அறவே மாற்றிக் கொண்டார்.


அப்போது அரசன் திருடா நீ மிகப்பெரிய நீதிபதி என்று பாராட்டினார்.மேலும் மன்னித்து விடுதலையும் செய்தார்.


திருடா நீ உலகிற்கு பாடம் கற்பித்து விட்டாய் என்றார்....

 

நன்றி இணையம்