*உண்மையும்-சத்தியமும்*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:17 | Best Blogger Tips

Image result for *உண்மையும்-சத்தியமும்*"

*சிந்தனையின் சிதறல்*

*உண்மையும்-சத்தியமும்*

நாம் எப்பொழுதும்
உண்மை பேச வேண்டிய அவசியமில்லை..
நாம் பேசுவதெல்லாம் உண்மையாக இருந்தாலே போதும்.
உண்மையை
எவரும் உண்மையாகவே பேசுவதில்லை.

பலர்
நம்மிடம் மட்டுமே
உண்மையை எதிர்பார்க்கிறார்கள்.

*சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.*

இது *பைபிள்* வாசகம்.

எங்கே பொய்யினால்,உண்மை புதைக்கப்படுகிறதோ..
அங்கே சத்தியம்
மெதுவாக வளரும்.

நாம் மட்டும் அவர்களிடம் உண்மையாக இருக்க வேண்டும்

என்றும் எதிர்பார்க்கிறார்கள்.!

*தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; முடிவில் தர்மமே வெல்லும்*

இது *பாஞ்சாலி சபதத்தில்* பாரதியார் பயன்படுத்திய வரிகள்.
நம்
வாழ்க்கைக்கும் பொருந்தும்.

*தரையோடு தரையாக நசுக்கப்பட்டாலும் சத்தியம் மறுபடியும் எழுந்து நின்றுவிடும். ஆண்டவனுடைய முடிவில்லாத நாட்கள் அதற்கும் உண்டு.!* இது உலகப் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் *பிரையண்ட்* அவர்களின் உணர்வுப்பூர்வமான வரிகள்.
 
நன்றி இணையம்