உடல்நலத்தை விற்று! ஆரோக்கியம் தேடுகிறோம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 10:57 | Best Blogger Tips


*மனோகர்   பாரிக்கர்,தற்போதைய கோவா  முதலமைச்சர், நம் பாரத தேசத்தின் முன்னால் பாதுகாப்பு துறை அமைச்சர், பாஜக பார்லிமன்ட்ரி குழு உறுப்பினர். தற்பொழுது உடல் நலக்குறைவால் மரண படுக்கையில் இருக்கிறார்.  மரண படுக்கையில் அவரது பேச்சு*

*என் வாழ்க்கை எனக்கு அளவிட முடியாத அரசியல் மரியாதையை கொடுத்துள்ளது..என் பெயருடன் இணைந்த அடையாளமாகி போனது.*

*கூர்ந்து யோசித்தால் , நான் செய்யும் பணியை விட வேறு மகிழ்ச்சியான தருணங்களை , நான் அனுபவிக்கவில்லை என்றே தோன்றுகிறது.*

*இன்று உடல் நலிவுற்று , படுக்கையில் நான் வீழ்ந்த நிலையில் , என் இதுவரை வாழ்ந்த வாழ்வினை *சுயபரிசோதனை செய்து பார்க்கிறேன்.*


*🔥புகழ், பணம்(சொத்து),கண்டிப்பு இவையே, வாழ்வில்  நாம்  அடைய வேண்டிய மைல்கல் என்று நினைத்தேன், ஆனால் மரணத்தின் வாயிலில் நிற்கும் எனக்கு *இப்போ இதெல்லாம் அர்த்தமற்றதாக தெரிகிறது*

*🔥மரணத்தை நான் நெருங்கும்  ஒவ்வொரு நொடியும், மருத்தவமனையில் என் படுக்கையை சுற்றி ஒளி+ஒலியிடும் உயிர் காக்கும் கருவிகள் நான் மரணத்தின் அருகாமையில் இருப்பதை உணர்த்துகின்றன.*


*இந்த சிக்கலான தருணத்தில் நான் உணர்ந்தது என்னவென்றால் *வாழ்க்கையில் , பணத்தையும் புகழையும் குவிப்பதை  விட இன்னும் அடைய வேண்டியது நிறைய உண்டு*  *சமூக சேவையும், நமக்கு பிடித்தமான நபர்களோடு சரியான உறவுமுறை பேணுதலும் மிக அவசியம்.*

*அரசியலில் எவ்வளவோ வெற்றிகளை பெற்று இருந்தாலும், *போகும் போது எதையும் எடுத்து போக போவதில்லை என்பதை நன்கு உணர்கிறேன்.*

*மரணப்படுக்கை மிகவும் தனித்துவம் வாய்ந்தது காரணம் அந்த படுக்கையை பிறரோடு பகிர முடியாது.*

*உங்கள் ஏவலுக்கு கட்டுப்பட, எத்தனை வேலைகாரர்கள், டிரைவர்கள், பணியாளர்கள் என்று  இருந்தாலும் உங்கள் வியாதியை யாரோடும் பகிர முடியாது.*

*எதை தொலைத்தாலும் தேடி கண்டுபிடித்துவிடலாம், ஆனால் தொலைத்த வாழ்நாளை மீட்டெடுக்கவே முடியாது. எனவே அர்த்தமுள்ள வாழ்வை வாழுங்கள்.*

*வாழ்நாள் முழுவதையும், வெற்றியை துரத்துவதிலேயே கழிக்காதீர்கள். வாழ்க்கை என்னும்  நாடகத்தில் , மரணம் என்னும் climaxகாட்சி வந்தே தீரும்*

*எனவே ,,என் பாரத தேச உறவுகளே,  நண்பர்களே,நம் தேசத்தின் எதிர்காலத்தின் மீது அக்கறை செலுத்துங்கள்,  உங்கள் மீதும் அக்கறை செலுத்துங்கள்* *உங்க பணத்தை அர்த்தமுள்ள முறையில் செலவு செய்ய பழகி கொள்ளுங்கள். உங்களை சுற்றி இருப்பவரிடம் பாசத்தை பொழிய பழகி கொள்ளுங்கள்.*

 *பிறக்கும் போது நாம் அழுகிறோம், இறக்கும் போது நம்மை சுற்றியுள்ளவர்கள் அழுவார்கள்.... எனவே இந்த இரண்டு அழுகைக்கும் உட்பட்ட காலத்தை , மரணத்தை நாம் தொடும் முன்பு மகிழ்ச்சியாகவும்,,நம் அடுத்த தலைமுறைக்கு  அர்த்தமுள்ளதாகவும் வாழ்வோம்.*
                                -மனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா)

தமிழாக்கம் :
திரு. விஜய்
ஆங்கில பட்டதாரி ஆசிரியர்
அரசு உயர்நிலைப் பள்ளி, பவித்ரம்.
கரூர் மாவட்டம்.