எளிய முறையில் உடல் எடையை குறைக்க வழிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:42 | Best Blogger Tips

தற்காலத்தில் உடல் உழைப்புக் குறைந்து, மூளைச்சார்ந்த உழைப்பே அதிகரித்துள்ளது. இதுவே உடல் பருக்க மிகப்பெரிய காரணமாக உள்ளது.

ஆம். குழந்தைகள் முதல் பெரியவர்கள், ஆண்டுகள் முதல் பெண்கள் வரை அனைவருமே இக்காலத்தில் ஒரு அவசரகதியில், தங்களுடைய வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொண்டுள்ளனர்.காரணம், பெருகி வரும் தொழில்நுட்ப வசதிகள் தான்.

அலுவலகங்களில் எட்டுமணி நேரமும் உட்கார்ந்துகொண்டே வேலை செய்தல், வீட்டில் உள்ள பெண்மணிகள் வீட்டு வேலையை செய்து முடித்து, குடும்ப நபர்களை பள்ளிக்கு, அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு, மீதமுள்ள ஓய்வு நேரங்களில் டி.வி பார்ப்பது. அப்படியே ஒரு குட்டித் தூக்கம் போடுவது என்பன போன்ற செயல்களால் பெண்மணிகளும் தங்களுடைய உடம்பை பருமனாக்கிக்கொள்கின்றனர்.

குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகே,தன்னுடைய உடம்பு பருமனாவதை உணர்வார்கள். அந்த உணர்வைப் பெற்றவுடனே, "அட்டா... இவ்வளவு குண்டாயிட்டமே... உடம்பை குறைக்க வேணுமே..." என்று அவர்களுக்குத் தெரிந்த வழிமுறைகளைப் பின்பற்றத் தொடங்கிவிடுவார்கள்.

ஒரு சிலர், கண்டிப்பாக உடம்பை குறைத்தே ஆக வேண்டும். உணவு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். என்றெல்லாம் நினைப்பார்கள். ஆனால் அதைச் செயல்படுத்தாமல் வெறும் எண்ணத்துடனே இருந்துவிடுவார்கள். காரணம் அதற்கான நேரம் இல்லை.. என்று சொல்லித் தனக்குத் தானே சமாதானம் செய்துகொள்வார்கள்.

இப்படி சூழ்நிலைகளும், மனதின் என்ன ஓட்டங்களும் இருக்குமானால் எப்படி உடம்பைக் குறைக்க முடியும்?

முதலில் நீங்கள் எடுத்த முடிவுகளைச் செயல்படுத்த வேண்டும். தொடர்ச்சியாக,முறையான செயல்பாடுகளைச் செய்தால், நிச்சயம் உடம்பு எடை குறைய ஆரம்பித்துவிடும்.

சரி.. எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள்:

1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும்.

2. அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும்.

3. சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

4. உடலிலுள்ள கொழுப்புகள் கரைந்தாலே போதும். உடல் எடை வெகுவாக குறைந்துவிடும். கொழுப்புகளைக் குறைப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் பயன்படுகிறது. இவற்றை உணவுடன் சிறிது அதிகமாக பயன்படுத்தும்பொழுது, உடல் எடை குறையும்.

5. இது தவிர ப்ப்பாளிக் காயை சமையலாகச் செய்து சாப்பிடலாம்.

6. மந்தாரை வேரை நீர்விட்டு, நீர் பாதியாக குறையும் வரை காய்ச்சி தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடையில் பாதியாக குறைந்துவிடும்.

7. அன்றாடம் குடிக்கும் தேநீரில் பாலிற்கு பதிலாக சிறிது எழுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்துவர, விரைவில் உடல் மெலிவதை நீங்களே உணரலாம்.

8. வாழ்த்தண்டு சாறு பருகலாம். அரும்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது.

9. இவற்றுடன் காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் இயற்கையாகவே உடல் எடையை குறைப்பதற்குரிய சிறந்த வழிமுறைகளாகும்.

மேற்கண்ட வழிமுறைகள் அனைத்தும் இயற்கையான முறையில் நாம் உண்ணும் உணவால் எடையை குறைக்க முயற்சிக்கும் ஒரு வழிமுறைகளே!
எளிய முறையில் உடல் எடையை குறைக்க வழிகள்

 தற்காலத்தில் உடல் உழைப்புக் குறைந்து, மூளைச்சார்ந்த உழைப்பே அதிகரித்துள்ளது. இதுவே உடல் பருக்க மிகப்பெரிய காரணமாக உள்ளது.

ஆம். குழந்தைகள் முதல் பெரியவர்கள், ஆண்டுகள் முதல் பெண்கள் வரை அனைவருமே இக்காலத்தில் ஒரு அவசரகதியில், தங்களுடைய வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொண்டுள்ளனர்.காரணம், பெருகி வரும் தொழில்நுட்ப வசதிகள் தான்.

அலுவலகங்களில் எட்டுமணி நேரமும் உட்கார்ந்துகொண்டே வேலை செய்தல், வீட்டில் உள்ள பெண்மணிகள் வீட்டு வேலையை செய்து முடித்து, குடும்ப நபர்களை பள்ளிக்கு, அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு, மீதமுள்ள ஓய்வு நேரங்களில் டி.வி பார்ப்பது. அப்படியே ஒரு குட்டித் தூக்கம் போடுவது என்பன போன்ற செயல்களால் பெண்மணிகளும் தங்களுடைய உடம்பை பருமனாக்கிக்கொள்கின்றனர்.

குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகே,தன்னுடைய உடம்பு பருமனாவதை உணர்வார்கள். அந்த உணர்வைப் பெற்றவுடனே, "அட்டா... இவ்வளவு குண்டாயிட்டமே... உடம்பை குறைக்க வேணுமே..." என்று அவர்களுக்குத் தெரிந்த வழிமுறைகளைப் பின்பற்றத் தொடங்கிவிடுவார்கள்.

ஒரு சிலர், கண்டிப்பாக உடம்பை குறைத்தே ஆக வேண்டும். உணவு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். என்றெல்லாம் நினைப்பார்கள். ஆனால் அதைச் செயல்படுத்தாமல் வெறும் எண்ணத்துடனே இருந்துவிடுவார்கள். காரணம் அதற்கான நேரம் இல்லை.. என்று சொல்லித் தனக்குத் தானே சமாதானம் செய்துகொள்வார்கள்.

இப்படி சூழ்நிலைகளும், மனதின் என்ன ஓட்டங்களும் இருக்குமானால் எப்படி உடம்பைக் குறைக்க முடியும்?

முதலில் நீங்கள் எடுத்த முடிவுகளைச் செயல்படுத்த வேண்டும். தொடர்ச்சியாக,முறையான செயல்பாடுகளைச் செய்தால், நிச்சயம் உடம்பு எடை குறைய ஆரம்பித்துவிடும்.

சரி.. எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள்:

1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும். 

2. அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும். 

3. சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். 

4. உடலிலுள்ள கொழுப்புகள் கரைந்தாலே போதும். உடல் எடை வெகுவாக குறைந்துவிடும். கொழுப்புகளைக் குறைப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் பயன்படுகிறது. இவற்றை உணவுடன் சிறிது அதிகமாக பயன்படுத்தும்பொழுது, உடல் எடை குறையும். 

5. இது தவிர ப்ப்பாளிக் காயை சமையலாகச் செய்து சாப்பிடலாம். 

6. மந்தாரை வேரை நீர்விட்டு, நீர் பாதியாக குறையும் வரை காய்ச்சி தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடையில் பாதியாக குறைந்துவிடும். 

7. அன்றாடம் குடிக்கும் தேநீரில் பாலிற்கு பதிலாக சிறிது எழுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்துவர, விரைவில் உடல் மெலிவதை நீங்களே உணரலாம். 

8. வாழ்த்தண்டு சாறு பருகலாம். அரும்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது. 

9. இவற்றுடன் காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் இயற்கையாகவே உடல் எடையை குறைப்பதற்குரிய சிறந்த வழிமுறைகளாகும். 

மேற்கண்ட வழிமுறைகள் அனைத்தும் இயற்கையான முறையில் நாம் உண்ணும் உணவால் எடையை குறைக்க முயற்சிக்கும் ஒரு வழிமுறைகளே! 





















 Thanks to உலக தமிழ் மக்கள் இயக்கம்