மத மாற்றம் ஒரு புற்றுநோய்...........இதற்க்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:38 | Best Blogger Tips
எந்த விதமான அணுகுமுறையை கையாளப்போகிறோம் ? பஜனை, ஆன்மீக சொற்பொழிவு நடைபெறுகிறதா? வார, ம...ாத மற்றும் ஆண்டு ஆன்மீக விழாக்கள் அனைவரும் கடைபிடிக்கின்றனரா? நமது முன்சென்ற ஆன்மீகப்பெருமக்கள் ஊர் தோறும் பயணம் மேற்கொண்டு ஆற்றிய ஆன்மிக சொற்பொழிவாகளும் , இறைவனை அடைய வழிவகுக்கும் ஆன்மீக விளக்க கூட்டங்களும் இன்று முற்றிலும் அழிந்துவிட்டதே காரணம்...

இதனை இப்போது தவறாமல் பின்பற்றுவது மதம் மாற்றுவது இஸ்லாமிய , கிருத்துவ கார்பரேட் கம்பனிகள்தான்..இவர்கள் மூளை சலவை செய்வதோடு பொருளாதார ரீதியிலும் ஆசை காட்டி இச்செயலை செய்கின்றனர். இவ்வாறு மாற்றப்படும் மக்கள் பெரும்பாலும் ஹிந்து மதம் பற்றி தெளிவில்லதவராகவும் , பொருளாதரத்தில் நலிந்தவர்களாகவும், ஏழை மக்களாகவும் தான் இருகின்றனர்.

ஏன் ? நமது இன்றைய ஆன்மீக பெருமக்கள் ஒரு கார்பரேட் நிறுவனம் போல் ,கம்பனியை போல் ஒரு இடத்தில மட்டும் மாட மாளிகை அமைத்து செயல்படுகின்றனர், அதிலும் பெரும்பாலும் ஏழை மக்கள் தென்படுவதே இல்லை. இவர்கள் செல்லவில்லை என்றால் கூட இவர்களது ஆஸ்தான சீடர்களையாவது ஊர் ஊராக சென்று ஆன்மீக சொற்பொழிவுகளை ஏற்படுத்தலாமே ஏன் செய்வதில்லை ?

ஹிந்து மதத்தில் இருக்கும் மற்றுமொரு அவல நிலை பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்வது . இதனை எதிர்த்து என்று நாம் அரசிடம் முறையிடப்போகிறோம்? நமது அறநிலையத்துறை நமது கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும் இதுபோன்ற நிகழ்வினால் ஏழை எளிய மக்களின் பார்வையில் இருந்து இறைவனை அகற்றுவதையாவது நாம் முதலில் நிறுத்த வேண்டும்.

நம் மக்கள் நமது கையை விட்டு சென்ற பிறகு நாம் நிகழ்த்தும் போராட்டம், எதிர்ப்பை காட்டிலும் அவர்கள் நம்மிடம் இருக்கும் போதே அவர்களை அணுகி ஹிந்து தர்மத்தின் சிறப்புகளை , ஆன்மிகத்தின் பலனை , வாழ்க்கைக்கான ஆன்மிக தேவையை போதித்து மதமாற்ற கும்பலிடம் இருந்து பாதுகாப்போம்.
ஜெய் ஸ்ரீ ராம்!!