வாழ்வியலில் இருக்கும் நகைச்சுவை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:05 | Best Blogger Tips
வாழ்வியலில் இருக்கும் நகைச்சுவை இயல்பானவை..ஒரு போலித்தனமில்லாது அதுவாகவே அமைந்த ஒரு சம்பவம்..ஆனால் நகைக்கக்கூடிய சம்பவமாக இருக்கும்..

நேற்று அடியயேனின் பெரியம்
மாவை அரங்கன் அழைத்துக்கொண்டான்..அன்னாரின் வயது 81...மிக நீண்ட நாட்களுக்கு பிறகு எல்லா உறவுமுறைகளும் சங்கமித்த ஒரு சந்தர்ப்பம்...

மரணம் என்பது துக்கம் தான்..இதில் கண்டிப்பாக வயது ஒரு பெரிய சூழ்நிலை இடமாற்றம் தராது...ஏன் எனில் ஒரு முக்கிய முகம்,ஒரு முக்கிய கதாபாத்திரம் இனி நடமாடாது என்பது ஏற்றுக்கொள்வது சற்றி கடினமான காரியம் தான்...

ஆனாலும் நேற்று பேரக்குழந்தைகளும் பெரிசுகளுமாய்...சற்று ரகளை தான்..இதில் என் பெரியம்மா கொள்ளூ பேத்தி, கொள்ளூ பேரன் கண்டவர்..கொள்ளு பேரன் கையால் தீ பந்தம் கிட்டியது மிக விசேஷம்.

அவர் என்றும் சொல்வார்..."என் பிள்ளை ரங்கா வந்தான்னா...எப்போதும் அந்த இடம் கல கலன்னு ...எல்லாரையும் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பான்னு" இடையில் என் வாழ்வு சற்று சிரிப்பாய் சிரித்த போது கூட நான் இந்த கலகலப்பை பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டேன்...
நான் எல்லாரையும் நக்கல் செய்வதால், ஒரு கும்பலே எனக்கு எதிராக நக்கல் செய்யக்க்காத்திருந்தது...அதில் என் பெரிய்மாவின் கொள்ளூ பேத்தியிடம்...தர்சினி,,,இதோ பார் உன் தாத்தா ..உனக்கு சின்ன தாத்தா ..வரான் பாரு..என் கோதர கோதரிகளுக்கு ஒரே சந்தோஷம் ..அக்குழந்தை என்னை அப்படி கூப்பிட வேண்டும் என்று..ஆனால் அந்த ஆறாவது படிக்கும் ஆரணங்கு "இவரா ..தாத்தாவா...என்ன இவ்வளவு சின்னவரா இருக்காரு..நீங்க பொய் சொல்றீங்க..."ஹா ஹா..அவளை பொறுத்த வரை தாத்தா என்பது உறவு முறை என்பதை விட வயதை வைத்து நிர்ணயம் செய்வதாக கற்றுக்கொடுக்கப்ப்ட்டிருக்கிறது...சொன்னவர்கள் எல்லாம் வழிய, ஐயா..சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏற,

நிறைய விஷயங்கள் ப்ளாஷ் பேக் வந்தது..அடியேனுக்கு மரணம் என்ற ஒரு விஷயத்தில் அனுபவம் அதிகம்..அருகிருந்த பலர் மரணத்தை பார்த்ததால் அதை ரசிக்கவும் ஆரம்பித்தவன்...இடுகாடு போய் அவர்களிடம் பேசி,,எல்லாம் ஏற்பாடு செய்வது..இவை எல்லாம் என் வேலையாகவே இருக்கும் எப்போதும்..அப்படி ஒரு முறை நானும் என் தந்தையும் ( இவை எல்லாம் என் அன்புத்தந்தை எனக்கு குருவாய் இருந்த சொல்லி குடுத்தவை) அரும்பாக்கம் இடுகாடுக்கு இப்படி ஒரு மரணத்தின் நிகழ்வாக சென்றபோது...அவர்களின் சென்னை தமிழ்..இடுகாட்டார்...எப்படி வீரபாண்டியார், செஞ்சியார் போல ..இடுகாட்டார்...

வா சாமி.......
என்னப்பா நல்லா கீறையா...
இருக்கேன் சாமி..எப்ப வரப்போற(எத்தனை மணீக்கு இறந்தவரை கொண்டு வரப்போகீறீர்கள் என்பதை )
தெரியலபா ..சாமிக்குத்தான் தெரியும்..எப்படியும் இங்கதான் வருவேன்..இவந்தான்(என்னைக்காட்டி) தூக்கிட்டு வருவான்..
அவனுக்கு புரிந்து..ஐயோ சாமி அதெல்ல நான் கேட்டது..எப்ப பிணம் வருது..
(ஒரு உண்மை ..உறைக்கும் உண்மை..உயிர் பிரிந்த அந்த வினாடியே மனிதம் பிணம் என்ற வார்த்தைக்கு வாழ்க்கைப்பட்டுவிடுவது தான் நாம் வாழ்ந்த வாழ்க்கை எச்சமும் சொச்சமும்)
சொல்லுப்பா..நீ தான் சொல்லனும்..ஒரு பத்து மணிக்கு..
சரி சாமி..வறட்டி, கட்டை ..எல்லாம் ரெடி பண்ணிக்கிறேன்..சீக்கிரம் வா சாமி...
அவன் எந்த மூகூர்த்ததில் அப்படி சொன்னானோ ..என் தந்தையும் ஒரே மாத காலத்தில் சீக்கிரம் போய் சேர்ந்தார்...

இப்ப இருக்கிற மின் தடையினால் ஒருவர் இரவு ஒரு மணிக்கு வெளியே நடந்து சென்றார்...அவர் இல்லம் அருகே இடுகாடு இருக்கிறது...அப்படியே ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைக்க முயல,பெட்டி கொண்டு வர மறந்ததை நினைக்க,, அப்ப சற்று தூரத்தில் ஒருவர் ஒரு படியில் மேல் அமர்ந்து பீடி பிடிப்பதை பார்த்து அவரிடம் சென்றார்...

ஊம் அநியாயங்க.இந்த மின் தடை..தூக்கமே இல்ல...நீங்க எங்க இருக்கீங்க..நான் பார்த்ததே இல்லயே..
அவர்...ஆமாம்..உள்ளே ரொம்ப வேர்த்தது...அதான் மேலே வந்து ஒரு பீடி பிடிக்கிறேன்னார்..சொன்னவர் அமர்ந்து இருந்த இடம் ஒரு கல்லறை..நம்மாள் கால் பிடறி மேல் பட எடுத்தார் ஒட்டம்...அவர் செத்தாக்கூட இனி கல்லறைப்பக்கம் தலை வச்சு படுக்கமாட்டார்...

சிரியுங்கள்..சிறப்பாக வாழுங்கள்..இனிய காலை வணக்கம்...