நரம்பு தளர்ச்சி, பக்கவாதம், போன்ற பிரச்சினைகளுக்கு மருந்து

மணக்கால் அய்யம்பேட்டை | 2:28 PM | Best Blogger Tips

 

 

இந்த போட்டோக்கள் எந்த அரசியல் கட்சி மாநாடு, ஆசிரமம் இல்லை. ஆந்திராவின் பலமனேர் அருகே விருபாட்சிபுரம் என்ற ஒரு குக்கிராமத்தில் உள்ள சித்தவைத்திய சாலை. இங்கு நரம்பு தளர்ச்சி, பக்கவாதம், போன்ற பிரச்சினைகளுக்கு மருந்து கொடுக்கப்படுகிறது . 
 
நடக்க முடியாதவர்கள் காரிலேயே உட்கார்ந்து இருந்தால் போதும் அவரே வந்து மருந்து கொடுக்கிறார். ஓய்வறைகளும் உள்ளது.
 
மருத்துவர் ஒரு சட்டையும், லுங்கியும் கட்டிக்கொண்டு சாதாரணமாக தன் கையாலேயே ஒரு கிளாஸ்ல மருந்து கொடுக்கிறார். 
 
ஒரே மருந்து எல்லாருக்கும்... எந்த கேள்வியும் இல்லை. மூன்று மணிநேர இடைவெளியில் மூன்று முறை குடிக்க வேண்டும். கொஞ்சம் புழுங்கலரிசி சோறு தராங்க. சாப்பிட்டு விட்டு வரனும். 
 
1500ரூபாய் கட்டணம்... இங்கே வருபவர்கள் பெரும்பாலும் பெரிய பணக்காரர்களே.
 
15 நாள் இடைவெளியில் மீண்டும் தரணும், இது இரண்டாம் கட்டம்.. என் பாட்டிக்கு முதலில் நம்பவில்லை. ஆனால் இப்போது நல்ல முன்னேற்றம். BP அதிகமாகி பக்கவாதத்தில் சுயநினைவின்றி கிடந்தவரை கொண்டு சென்றோம். இப்போது நல்ல முன்னேற்றம்.
 
கைகால்கள் அசைக்கிறார். சாப்பிடுகிறார். மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட நிலையில் சென்றோம்.
 
இன்னொரு முறை வரணும். (மொத்தம் மூன்று முறை வரவேண்டும், அதேபோல ஒரு ட்ரிப்புக்கு மூன்றுமணி நேர இடைவெளியில மூன்று முறை தரவேண்டும் , ஆக மொத்தம் ஒன்பது வேளை) சரியாகிவிடும் நம்பிக்கை இருக்கு. 
 
ஆனால் மருத்துவமனைகளுக்கு போயிருந்தால் எத்தனை லட்சங்கள் ஆகியிருக்குமோ தெரியாது. தினமும் குறைந்தது 250பேர் மூன்று மாநிலங்களில் இருந்தும் வராங்க. உங்களில் யாருக்காவது பாதிப்பிருந்தால் போய்வாருங்கள். நல்லதே நடக்கிறது.
 
முகவரி : குப்பம் அல்லது வி.கோட்டா to பலமனேர் போய் அங்கிருந்து பலமனேர்-நெல்லிபட்லா டவுன்பஸ் (அ)ஆட்டோவில் விருபாட்சிபுரம் போகலாம்..
 
பின்குறிப்பு  - 
நன்கு விசாாித்து விட்டு செல்லவும்
- இது முகநுாலில் ( 

Reddiar ரெட்டியார் &  

Navaneetha Kannan Mayan)

 இருந்து வந்தது நன்றாக இருந்தது யாருக்காவது பயன்பாடு என்பதால் இந்த பதிவு குறைந்த செலவில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இந்த கட்டுரை மட்டுமே.
 
 
 
 

வருவாய்த் துறை அலுவலர்களின் அதிகாரங்கள் மற்றும் கடமை

மணக்கால் அய்யம்பேட்டை | 1:03 PM | Best Blogger Tips

 வருவாய் ஆய்வாளர்களின் கடமைகளும் பொறுப்புகளும்* 1. பயிராய்வு 2. கிராம  நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராமப் பணியாளர்களின் பணிகளை மேற்பார்வை ...

வருவாய்த் துறை அலுவலர்களின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளை வரையறுத்த முக்கிய அரசாணை!
வருவாய்த் துறை (தமிழ்நாடு) - தமிழ் விக்கிப்பீடியா
G.O.(Ms.) No.581, Revenue Department, dated 03.04.1987

மாவட்ட வருவாய் நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்தவும், Revenue Divisional Officer (RDO), Tahsildar, Revenue Inspector (RI) மற்றும் Village Administrative Officer (VAO) ஆகிய அலுவலர்களின் அதிகாரங்கள், பொறுப்புகள் மற்றும் பணிகளை ஒரே நடைமுறையில் செயல்படுத்தவும் தமிழக அரசு G.O.(Ms.) No.581, Revenue Department, dated 03.04.1987 என்ற முக்கிய அரசாணையை வெளியிட்டது. இந்த அரசாணை இன்று வரை வருவாய்த் துறையின் அடிப்படை Job Chart (பணிப்பட்டியல்) ஆகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
வருவாய் கோட்ட அலுவலர் கோட்டாட்சியர் என்றால் என்ன' RDO அதிகாரியின் பணிகள் மற்றும்  அதிகாரங்கள்.. இதன் கீழ் இயங்குகின்ற அதிகாரிகள் யார் ...
⚖️ அரசாணை விவரங்கள்

அரசாணை எண்: G.O.(Ms.) No.581

துறை: Revenue Department

தேதி: 03.04.1987

பொருள்:மாவட்ட வருவாய் நிர்வாகத்தை மேம்படுத்துதல் – கீழ்நிலை வருவாய் அலுவலர்களுக்கான பணிப்பட்டியல் (Job Chart), காலக்கெடு (Time Chart) மற்றும் மேற்பார்வை (Review Chart) நிர்ணயம். 

அரசாணையின் நோக்கம்.

இந்த அரசாணையின் மூலம்:

* RDO
* Tahsildar
* Revenue Inspector
* Village Administrative Officer

ஆகியோரின் பணிகள் தெளிவாக வரையறுக்கப்பட்டன.

மேலும்,

* எந்த அலுவலர் எந்த பணியை மேற்கொள்ள வேண்டும்?
* எவ்வளவு காலத்தில் முடிக்க வேண்டும்?
* யார் யாரை ஆய்வு (Review) செய்ய வேண்டும்?

என்பதற்கும் தெளிவான நடைமுறைகள் வகுக்கப்பட்டன. 
ரெட்டிட் வருவாய் கோட்டாட்சியரின் (RDO) அதிகாரங்கள் மற்றும் கடமைகளை  விளக்கும் பயனுள்ள படம். இந்தப் படம், RDO சட்ட அமலாக்கம், நில விவகாரங்கள் ...
வருவாய் கோட்டாட்சியர் (RDO) – முக்கிய கடமைகள்.

அரசாணையின் இணைப்பில் (Annexure) RDO-விற்கு பல முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் சில:

* தாசில்தார் அலுவலகங்களின் மேற்பார்வை.
* பொதுமக்கள் குறைதீர் முகாம்கள் நடத்துதல்.
* முதியோர் ஓய்வூதிய நிர்வாகம்.
* இயற்கை பேரிடர் நிவாரணப் பணிகள்.
* சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு.
* குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் (Cr.P.C. Sections 143/145 போன்றவை) உத்தரவு வழங்குதல்.
* அரசு நில ஆக்கிரமிப்பு தொடர்பான மேல்முறையீடுகளை விசாரித்தல்.
* நில ஒதுக்கீடு, பட்டா மற்றும் நிலமாற்று தொடர்பான ஆய்வு. 

தாசில்தார் (Tahsildar) – முக்கிய கடமைகள்.

தாசில்தாரின் முக்கிய அதிகாரங்கள்:

* தாலுகா நிர்வாகத்தின் பொறுப்பு.
* சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகள்.
* நத்தம் மற்றும் வீட்டுமனை மனுக்களுக்கு உத்தரவு.
* இயற்கை பேரிடர் நிவாரணம்.
* தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம், 1905-ன் கீழ் அரசு நில ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு வழங்குதல்.
* B-Memo வழக்குகள்.
* அரசு புறம்போக்கு நிலங்கள் ஆய்வு.
* கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகளை மேற்பார்வை செய்தல்.
* சமூகச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ் போன்ற நிர்வாக நடவடிக்கைகள். 

 வருவாய் ஆய்வாளர் (Revenue Inspector)

Revenue Inspector-க்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்புகள்:

* VAO-க்களின் பணிகளை கண்காணித்தல்.
* கிராமக் கணக்குகள் ஆய்வு.
* பட்டா புத்தகங்கள் சரிபார்த்தல்.
* அரசு நிலங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் ஆய்வு.
* தாசில்தார் வழங்கிய ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவுகளை நிறைவேற்றுதல்.
* சட்டவிரோத மணல், கல் குவாரிகள் போன்றவற்றை ஆய்வு செய்தல்.
* பயிர் ஆய்வு (Azmoish). 

கிராம நிர்வாக அலுவலர் (VAO)

VAO-வின் முக்கிய பணிகள்:

* கிராமக் கணக்குகள் பராமரித்தல்.
* வரி வசூல்.
* பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள்.
* சிட்டா, அடங்கல் நகல் வழங்குதல்.
* அரசு புறம்போக்கு நிலங்களை பாதுகாத்தல்.
* இயற்கை பேரிடர் தகவல் வழங்குதல்.
* காவல்துறைக்கு தேவையான தகவல்கள் வழங்குதல்.
* பொது சொத்துக்கள் பராமரிப்பு. 

நிர்வாக காலக்கெடு (Time Chart)

இந்த அரசாணையில் பல்வேறு வருவாய் பணிகளுக்கு அதிகபட்ச காலக்கெடும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக:

* நத்தம் புறம்போக்கு நில ஒதுக்கீடு – 2 மாதங்கள்
* பட்டா மாற்றம் – 1 மாதம்
* அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றுதல் – 2 மாதங்கள்
* குடிநீர் வசதி – 3 மாதங்கள்
* பல்வேறு மனுக்கள் – 1 முதல் 3 மாதங்கள். 
வருவாய் கோட்ட அலுவலர் கோட்டாட்சியர் என்றால் என்ன' RDO அதிகாரியின் பணிகள் மற்றும்  அதிகாரங்கள்.. இதன் கீழ் இயங்குகின்ற அதிகாரிகள் யார் ...
மேற்பார்வை (Review Chart)

அரசாணையில், ஒவ்வொரு அலுவலரின் பணிகளையும் மாதந்தோறும் ஆய்வு செய்யும் முறை வகுக்கப்பட்டுள்ளது:

* RDO – மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) ஆய்வு.
* Tahsildar – RDO ஆய்வு.
* Revenue Inspector – Tahsildar ஆய்வு.
* VAO – Tahsildar / Revenue Inspector ஆய்வு. 
வருவாய் கோட்ட அலுவலர் கோட்டாட்சியர் என்றால் என்ன' RDO அதிகாரியின் பணிகள் மற்றும்  அதிகாரங்கள்.. இதன் கீழ் இயங்குகின்ற அதிகாரிகள் யார் ...
முடிவுரை

G.O.(Ms.) No.581, Revenue Department, dated 03.04.1987 என்பது தமிழக வருவாய்த் துறையின் அடிப்படை நிர்வாக அரசாணையாகும். RDO, Tahsildar, Revenue Inspector மற்றும் VAO ஆகியோரின் அதிகாரங்கள், கடமைகள், பணிகளை நிறைவேற்ற வேண்டிய காலக்கெடு மற்றும் மேற்பார்வை முறைகளை ஒருங்கிணைத்து வகுத்துள்ள இந்த அரசாணை, மாவட்ட வருவாய் நிர்வாகத்தின் முக்கிய வழிகாட்டி ஆவணமாக இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

நடுவானில் மிதக்கும் பாறை போலத் தெரிகிறதா?

மணக்கால் அய்யம்பேட்டை | 11:51 AM | Best Blogger Tips

 நடுவானில் மிதக்கும் பாறை போலத் தெரிகிறதா? 

உண்மை வேறுதான்!

இந்தப் புகைப்படத்தை முதன்முறையாகப் பார்க்கும்போது, ஒரு பெரிய பாறை வானில் மிதப்பது போலத் தோன்றலாம். ஆனால் இதில் எந்த அமானுஷ்யமும் இல்லை.

சற்று கவனமாகப் பார்த்தால், பாறையின் கீழே இருப்பது போலத் தெரியும் கருமையான பகுதி, உண்மையில் அந்தப் பாறையின் நிழல் என்பதைக் கவனிக்கலாம்.

உண்மையான பாறை தரையில்தான் உள்ளது. அதன் நிழல் கீழேயும் சற்று பக்கவாட்டிலும் விழுந்திருப்பதால், அது காற்றில் மிதப்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்குகிறது.

இந்த மாயை உருவாகக் காரணம், பின்னணியில் இருக்கும் வெளிர் நிறமும் தெளிவற்ற காட்சியும்தான். அதை நமது மூளை வானமாகப் புரிந்துகொள்வதால், தரை மிகவும் கீழே இருப்பது போலத் தோன்றுகிறது.
May be an image of lake and text that says "இந்தப் படம் உங்கள் கண்களை ஏமாற்றும் ஆப்டிக்கல் மாயை! முதலில் பார்த்தால் பாறை வானில் மிதப்பது போல தெரியும்... ஆனால் உண்மையை கண்டுபிடித்தீர்களா?"
நிழல், ஒளி, பார்வைக் கோணம், சுற்றுப்புறம் போன்ற பல தகவல்களை வைத்து ஆழத்தை நமது மூளை கணிக்கிறது. ஆனால் அவை தெளிவாக இல்லாதபோது, கணநேரத்தில் தவறான முடிவுக்கு வந்து, இப்படிப்பட்ட கண் மயக்கும் ஒளியியல் மாயையை (Optical Illusion) உருவாக்கிவிடுகிறது. 

 

🙏🌹நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 


🌷 🌷
🌷 🌷

 

Thanks & Copy from 

#OpticalIllusion
#MindBlown
#ScienceFacts
 

உண்மையான சந்தோஷம் - 🌷நாமே புரிந்து கொள்வது....!🌷

மணக்கால் அய்யம்பேட்டை | 3:34 PM | Best Blogger Tips

 ரயில் ஸ்டேஷனை விட்டு மெதுவாக கிளம்பிக் கொண்டிருந்தது.

ஜன்னல் வழியாக குளிர்ந்த காற்று வீசியதுநல்ல மன ஆரோக்கியத்திற்காக, விட்டுக்கொடுக்க வேண்டிய 7 நம்பிக்கைகள் (7  Beliefs to Let Go for Good Mental Health in Tamil) - வாழும் கலை. எதிரே இருந்த பர்த்தில் என் பார்வை சென்றது. ஒரு சிரித்த முகம். அம்மையாருக்கு வயது 65 இருக்கும். ஹிமாச்சல் பிரதேசம் மணாலிக்கு தனியாக பயணம் செய்து கொண்டிருந்தார். முதுகில் ஒரு சிறிய பை.

நான் சாதாரணமாக கேட்டேன், "ஆன்ட்டி, தனியாகவா ? பயமாக இல்லையா ?"

அவர் கலகலவென சிரித்தார். பல வருட சுமைகள் எல்லாம் ஒரு நொடியில் அந்த சிரிப்பில் கரைந்தது போல அப்படி ஒரு சிரிப்பு.

அவர் சொன்னார்: "குழந்தே, பயம் வந்ததெல்லாம் எல்லோரும் கூட இருந்த போதுதான். இப்போது நான் தனியாக இருக்கிறேன். அதனால்தான் உண்மையிலேயே சுதந்திரமாக இருக்கிறேன்."
90,151 Woman Enjoying Freedom Nature Stock Photos - Free & Royalty-Free  Stock Photos from Dreamstime
பேச்சின் போக்கில் அவர் எனக்கு ஒரு அழகான வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொடுத்தார்.

அவர் சொன்னார்: "நான் அறுபதுக்கு அப்புறம்தான் வாழக் கத்துக்கிட்டேன். அப்போதுதான் சில விஷயங்களை கை கழுவினேன்".

 கட்டுப்படுத்த வேண்டும் என்கிற பிடிவாதத்தை விட்டு விட்டேன்:  

நல்ல மன ஆரோக்கியத்திற்காக, விட்டுக்கொடுக்க வேண்டிய 7 நம்பிக்கைகள் (7  Beliefs to Let Go for Good Mental Health in Tamil) - வாழும் கலை
"முன்னாடி கணவர், பிள்ளைகள், பணம்  எல்லாத்தையும் என் கைக்குள் வச்சுக்க முயற்சி பண்ணினேன். இப்போது மணல் மாதிரி விட்டு விடுகிறேன். மனசு ரொம்ப லேசா இருக்கு."

மத்தவங்க கிட்ட எதிர்பார்க்கிறதை விட்டு விட்டேன்:  


"பையன் போன் பண்ணினால் சந்தோஷம். பண்ணவில்லை என்றாலும் பரவாயில்லை. நான் அவனுக்கு பிறப்பு கொடுத்தேன். அதற்காக அவன் மேல் நான் உரிமை கொண்டாட முடியாது."

மற்றவர்களை மாத்தணும் என்கிற முயற்சியை விட்டு விட்டேன்:  


"ஐம்பது வருஷம் கணவரை மாத்த முயற்சி பண்ணிணேன். அவர் அப்படியே இருந்தார். அப்புறம் நான் என்னையே மாத்திக்கிட்டேன். வாழ்க்கையில் அமைதி வந்து விட்டது."
No photo description available.
எல்லோரையும் சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற துடிப்பை விட்டு விட்டேன்:  


"மருமகள், உறவினர்கள், சமூகம் என எல்லோரையும் சந்தோஷப்படுத்தியதில், என்னையே நான்  மறந்து போனேன். 

இப்போதுதான் நான் எனக்கு உண்மையாக இருக்கிறேன்."

ஒவ்வொரு தவறுக்கும் என்னையே குறை சொல்வதை விட்டு விட்டேன்:  
"குழம்பில் உப்பு கம்மி-ஜாஸ்தி ஆனால் கூட மணிக்கணக்காக மனதில் போட்டு அழுதிருக்கிறேன். இப்போது நான் எனக்கு  சொல்லிக் கொள்கிறேன்.  நான் மனுஷிதான், கடவுள் இல்லை."

ஒவ்வொரு விளைவைப் பத்தியும் கவலைப் படுவதை விட்டு விட்டேன்:  
"ரயில் நேரத்துக்கு வருவதோ அல்லது தாமதமாக வருவதோ என் கையில் இல்லை. அப்புறம் எதற்கு கவலை ? நான் டீ குடிக்கிறேன். இயற்கையை ரசிக்கிறேன்."
No photo description available.
எதிர்காலம் பற்றிய பயத்தில் இன்றைய வாழ்வை தவற விடுவதை தவிர்த்தேன்:  
"நாளைக்கு முழங்கால் வலிக்கும் என இன்றைக்கு மலை ஏறாமல் இருக்கணுமா ? இப்போது உடம்பில் தெம்பு இருக்கிறது. அதனால் இன்றைக்கு வாழ்கிறேன்."

என் கையில் இல்லாத விஷயங்களுக்கு என் சக்தியை செலவு பண்ணுவதை விட்டு விட்டேன்:  
"யார் என்ன சொல்லுவார்கள், அரசியலில் என்ன ஆகும், பக்கத்து வீட்டில் என்ன சொல்லுவார்கள் என்று நினைப்பதை எல்லாம் விட்டு விட்டேன். இப்போது இரத்த அழுத்தம் கூட நார்மலாக இருக்கிறது."

இப்போது நான் என்ன பண்ணுகிறேன் ?

"என்னை நான் கவனித்துக் கொள்கிறேன். என்னிடம் நானே பேசுகிறேன். பிறர் என்னைப் பற்றி என்ன சொல்கிறார்களோ, அதை ஒரு காதில் வாங்கி, இன்னொரு காது வழியாக விட்டு விடுகிறேன்."

ஜன்னலுக்கு வெளியே ஒரு முறை பார்த்து விட்டு அவர் சொன்னார்:

"தண்ணீர் எந்தப் பக்கம் ஓடும் எனத் தீர்மானிப்பது என் கையில் இல்லை. ஆனால் புயல் அடித்தாலும் என் படகு ஆடாமல் இருக்க துடுப்பை எப்படி போடணும்  என்பது என் கையில்தான் இருக்கிறது." சந்தோஷமும் திருப்தியும் கடைகளில் கிடைக்காது. எந்தக் கவலையும் இல்லாமல் அமைதியாக தூங்குகிற தலையணையில்தான் திருப்தியும் நிம்மதியும் இருக்கிறது.

திருப்தி இருக்கிறது, எவ்வித பயமும் இல்லாமல் தனியாக நடக்க கத்துக்கிட்ட கால்களில்.

மணாலி ஸ்டேஷன் வந்து விட்டது. இறங்கும் போது அவர் சொன்னார்:

"இளமையில் நான் உலகத்தின் உறவை கூட்டிக் கொண்டே இருந்தேன்.  இப்போது இந்த வயதில் நான் என்னுடன் மட்டும் உறவு வைத்துக் கொள்கிறேன்."

"அதனால்தான் நான் சிரிக்கிறேன். ஏனெனில் இப்போது என் மீது எந்த சுமையும் இல்லை. இப்போது நான் மட்டும்தான். என்னோட அமைதியான, திருப்தியான மனசு மட்டும்தான்." 
Understanding yourself helps you manage others well
வாழ்க்கையின் உண்மையான சந்தோஷம் மற்றவர்களை மாற்றுவதில்  இல்லை. நம்மை நாமே புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வதில்தான் இருக்கிறது. 

 

🙏🌹நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 No photo description available.🌷 🌷🌷 🌷

 

 

🌹🌹🌹மெஸ்ஸி🌹🌹🌹 - இனியொரு விதி .....🌹🌹🌹🌹

மணக்கால் அய்யம்பேட்டை | 9:50 AM | Best Blogger Tips

 May be an image of American football, football and text that says "10 LigneLMessi/WorldCupFinal202 Lionel Messi World Cup Final 2026"

கண்ணீருடன் விடைபெற நினைத்த அதே மைதானத்தில் தங்கக் கிரீடம் சூட வரும் மெஸ்ஸியின் விதியின் கதை 🐐🇦🇷
 வைரலாகும் மெஸ்ஸியின் 100 வயது தீவிர ...
கால்பந்து வரலாற்றில் மிகவும் உணர்ச்சிகரமான மற்றும் தனித்துவமான ஒரு "கதை" அமெரிக்காவின் மெட்லைஃப் மைதானத்தில் (MetLife Stadium) அரங்கேற உள்ளது. 
 Lionel Messi Wallpaper HD 4K - Google Play இல் உள்ள ஆப்ஸ்
பத்து ஆண்டுகளுக்கு முன்பு தனது கால்பந்து வாழ்க்கையின் மிக மோசமான தோல்வியால் கண்ணீர் விட்டு அழுத அதே மைதானத்திற்கு
 
இன்று உலகின் மிகச்சிறந்த வீரராக லியோனல் மெஸ்ஸி மீண்டும் காலடி எடுத்து வைக்க உள்ளார்.
2016-ஆம் ஆண்டு இதே மெட்லைஃப் மைதானத்தில் தான் அர்ஜென்டினா மற்றும் சிலி நாடுகளுக்கு இடையிலான கோபா அமெரிக்கா நூற்றாண்டு விழா இறுதிப் போட்டி (Copa América Centenario Final) நடைபெற்றது. 
 24 Lionel messi ideas | lionel messi, messi, lionel
120 நிமிடங்கள் வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால், வெற்றி தோல்வியை தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. அர்ஜென்டினா சார்பில் முதல் பெனால்டியை அடிக்க வந்தவர் கேப்டன் லியோனல் மெஸ்ஸி.
 Lionel Messi Wallpaper HD 4K - Google Play இல் உள்ள ஆப்ஸ்
ஆனால், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி, மெஸ்ஸி அடித்த பந்து கோல் கம்பத்திற்கு மேலாகச் சென்றது. அதற்கு முன்பாக சிலி வீரர் ஆர்டுரோ விடால் அடித்த பெனால்டியை அர்ஜென்டினா கோல்கீப்பர் செர்ஜியோ ரொமேரோ தடுத்திருந்ததால், மெஸ்ஸியின் இந்தத் தவறு ஆட்டத்தின் போக்கை சிலிக்கு சாதகமாக மாற்றியது. 
 How to Put Messi Next to You Ai | TikTok
இறுதியில் 4-2 என்ற கணக்கில் சிலி வெற்றி பெற, மெஸ்ஸி மனதளவில் முற்றிலும் உடைந்து போனார். தனது முகத்தை டி-சர்ட்டால் மூடிக்கொண்டு மைதானத்திலேயே மெஸ்ஸி அழுத காட்சியை எவராலும் மறக்க முடியாது.
 
அன்று செர்ஜியோ அகுவேரோ உள்ளிட்ட சக வீரர்கள் அவரைத் தேற்ற முயற்சித்தும் அது எளிதாக இருக்கவில்லை.
 
ஆட்டத்திற்குப் பிறகு மிகுந்த வேதனையில் இருந்த மெஸ்ஸி, அர்ஜென்டினாவின் புகழ்பெற்ற TyC Sports சேனல் உள்ளிட்ட ஊடகங்களிடம் இவ்வாறு கூறினார்:
 
"எனக்கு தேசிய அணி போதும். என்னால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டேன். ஒரு சாம்பியனாக மாற முடியவில்லையே என்பது உண்மையில் வலிக்கிறது. நான் நான்கு இறுதிப் போட்டிகளில் விளையாடினேன், கடினமாக முயற்சித்தேன். நாட்டிற்காக ஒரு கோப்பையை வெல்ல வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன், ஆனால் அது நடக்கவில்லை. அதனால் எனது பயணம் இதோடு முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்."
 
அப்போது 29 வயதாக இருந்த மெஸ்ஸி, தனது தொழில்முறை வாழ்க்கையில் நான்கு முக்கிய இறுதிப் போட்டிகளில் தோல்வியைத் தழுவியிருந்ததால், மெஸ்ஸியின் சர்வதேச கால்பந்து பயணம் இதோடு முடிந்துவிட்டது என்றே அனைவரும் நினைத்தனர்.
 
இருப்பினும், நாட்டு மக்களின் மற்றும் சக வீரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, மெஸ்ஸி தனது ஓய்வு முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் களமிறங்கினார். அன்று முதல் கடந்த சில ஆண்டுகளில் அவர் கால்பந்து உலகையே தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்:
 FIFA News | வரலாறு படைத்த மெஸ்ஸி ...
2021 கோபா அமெரிக்கா: பிரேசிலைத் தோற்கடித்து அர்ஜென்டினாவுக்கு ஒரு பெரிய கோப்பையை வென்று கொடுத்தார், மேலும் அந்தத் தொடரின் சிறந்த வீரராகவும் மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டார்.
 Lionel Messi's Argentina lift FIFA World Cup 2022 after dramatic penalties  win over France - India Today
2022 பிஃபா உலகக்கோப்பை: கத்தாரில் உலகக்கோப்பையை வென்று உலகையே தன்வசம் ஈர்த்தார்.
 Lionel Messi celebrates Argentina's Copa América win alongside his family -  ABC NewsLionel Messi's 2024 🇦🇷🌟 🌟 47 G/A in 36 games ⚽️ 29 goals 🅰️ 18 assists  🏆 Copa América 🏆 Supporters Shield 🏆 MLS Player of the Season
2024 கோபா அமெரிக்கா: மீண்டும் அதே கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டார்.
 
 
இதோ இப்போது, அந்த கசப்பான சம்பவம் நடந்து சரியாக 10 ஆண்டுகள் மற்றும் 23 நாட்களுக்குப் பிறகு, லியோனல் மெஸ்ஸி மீண்டும் அதே மெட்லைஃப் மைதானத்திற்கு வருகிறார். ஆனால் இம்முறை அவர் ஒரு தோல்வியாளராக வரவில்லை; உலக சாம்பியனாகவும், இருமுறை கோபா அமெரிக்கா வென்ற கேப்டனாகவும், 39 வயதிலும் உலகின் மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தும் சூப்பர் ஸ்டாராகவும் களமிறங்குகிறார்.
 🔥 FIFA World Cup Final ⚽ Argentina vs Spain! Monday, July 20, 3:00AM The previous Barcelona #10 vs the current #10. Once upon a time, Messi held a baby in his arms…
இந்த திங்கட்கிழமை நள்ளிரவு (ஜூலை 20) ஸ்பெயினுக்கு எதிராக நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றால், 1958 மற்றும் 1962-இல் பிரேசில் செய்த சாதனையைத் தொடர்ந்து (64 ஆண்டுகளுக்குப் பிறகு), தொடர்ச்சியாக இரண்டு உலகக்கோப்பைகளை வென்ற முதல் நாடாக அர்ஜென்டினா மாறும். 
Argentina vs Spain: WC Final in Los Angeles | Mato FIFA World Cup 2026 Final: Spain vs Argentina – The Ultimate ...
அன்று கண்ணீருடன் விடைபெற நினைத்த அதே மைதானத்தில், தனது இரண்டாவது உலகக்கோப்பை தங்க கிரீடத்தையும் வென்று, வரலாற்றின் மிகச்சிறந்த திருப்பத்தையும் வெற்றியையும் பதிவு செய்ய மெஸ்ஸிக்கு இப்போது மிகச்சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
 
 

திருவாரூரில் 🔀 அகஸ்தியம்பள்ளி

மணக்கால் அய்யம்பேட்டை | 4:36 PM | Best Blogger Tips

 May be an image of train, railway and text

⚡ திருவாரூரில் இருந்து அகஸ்தியம்பள்ளி வரை செல்லும் பயணிகள் ரயில் எதிரே வரும் காரைக்குடி திருவாரூர் பயணிகள் ரயிலை திருத்துறைப்பூண்டி சந்திப்பு நிலையத்தில் சந்தித்துக் கொள்ளும் காட்சி 😍 இதன் மூலம் இணைப்பு காரைக்குடி மார்க்கத்தில் உள்ளது !!
 
✔️ காரைக்குடியில் இருந்து வேதாரண்யம் செல்ல வாரத்தில் 5 நாட்கள் இணைப்பு ரயில் சேவை கிடைக்கப்பெறுகிறது 🤝

📌 76830 || திருவாரூர் அகஸ்தியம்பள்ளி டெமு பயணிகள் ரயில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 07:40 மணிக்கு திருவாரூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் புறப்பட்டு இரவு 08:22 மணிக்கு திருத்துறைப்பூண்டி சந்திப்பு வருகிறது //
 
எதிரே >> பட்டுக்கோட்டை வழியில் இருந்து .....
📌 56828 || காரைக்குடி திருவாரூர் பாசஞ்சர் ரயில் தினமும் மாலை 06:15 மணிக்கு காரைக்குடி சந்திப்பு நிலையத்தில் புறப்பட்டு இரவு 08:13 மணிக்கு திருத்துறைப்பூண்டி சந்திப்பு வந்து சேருகிறது //
 
🔗 இரண்டு வண்டிகளுக்கும் இடையே ரயில் மாறி கொள்வதற்கு 10 நிமிட இடைவெளி உள்ளது •• 08:13 மணிக்கு வருகை // 08:24 மணிக்கு புறப்படும் நேரம் ....
 
🔀 காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி பேராவூரணி பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளி வரை செல்லும் மக்கள் இந்த இணைப்பை வாரத்தில் 5 நாட்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை பயன்படுத்தி கொள்ள முடியும் ❗ சனி மற்றும் ஞாயிறு திருவாரூர் அகஸ்தியம்பள்ளி பயணிகள் ரயில் சேவை கிடையாது ❌ எனவே ஐந்து நாள் மட்டும் இதனை பயன்படுத்தலாம் .....
 
⬆️ இந்த ரயில் சேவை துவங்கிய போது யாருக்கும் பயனில்லாமல் திருத்துறைப்பூண்டி முதல் அகஸ்தியம்பள்ளி வரை சென்று வந்தது எந்த ஒரு ரயிலுக்கும் இணைப்பும் இல்லாமல் குறுகிய பகுதிக்கு இடையே இந்த ரயில் இயக்கப்பட்டு வந்தது ‼️ பிறகு வேதாரண்யம் பகுதி மக்கள் முழு அளவில் பயன்பெறும் வகையில் சேவை மாற்றி அமைக்கப்பட்டது ✅ அதன்படி காலையில் அகஸ்தியம்பள்ளி திருவாரூர் இணைப்பு கொடுக்கப்பட்டு // மீண்டும் இரவு திருவாரூர் அகஸ்தியம்பள்ளி இணைப்பு கொடுக்கப்பட்டு 👇👇
திருத்துறைப்பூண்டி சந்திப்பில் இறங்கி பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி மார்க்கத்தில் செல்லும் வகையிலும் 🎯
 
திருவாரூர் சந்திப்பில் இறங்கி தஞ்சாவூர் திருச்சி // பேரளம் மயிலாடுதுறை // தேவை இருப்பின் நாகப்பட்டினம் காரைக்கால் வழித்தடங்களில் பயணிக்க ஒரு இணைப்பு அங்கு கொடுக்கப்பட்டது 🎯

🔥 இதன் மூலமாக நேரடியாக இந்த அனைத்து ஊர்களுக்கும் பயணிப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கப்பெறுகிறது 🤝 பல இணைப்பை உள்ளடக்கி தான் இந்த சேவையை திருச்சி ரயில்வே கோட்டம் மாற்றி அமைத்தது !!

📌 விரைவில் இதன் பெட்டிகளை MEMU வகை வெட்டியாக மாற்றி இதன் சேவையை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது 💢 தற்போது இந்த ரயில் DEMU வகை ரயிலாக இருப்பதால் திருச்சிக்கு பராமரிப்பு மேற்கொள்ள சனி மற்றும் ஞாயிறு சென்று விடுகிறது 📍 அதனால் வாரத்தில் ஐந்து நாள் மட்டுமே தற்போது இந்த வழித்தடத்தில் சேவை செய்து வருகிறது இந்த ரயில் ::- தினசரி இயங்கும் வகையில் இதனை மாற்ற வேண்டுமென்றால் தற்போது இந்த வழித்தடம் முழு அளவில் மின்சார வழிதடமாக மாறிவிட்டது
 
மேலும் இந்த ரயிலுடன் பெட்டி பகிர்மானம் செய்யும் திருவாரூர் பட்டுக்கோட்டை பயணிகள் ரயில் ஓடும் வழித்தடத்திலும் முழு அளவில் மின்சார வழித்தடமாக பட்டுக்கோட்டை வரை மாறிவிட்டது 🔀 இனி தாராளமாக இதனை மெமு வகை ரயிலாக மாற்ற முடியும் ::- தெற்கு ரயில்வே நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கோரிக்கை உள்ளது
 
📷 படம் || திருத்துறைப்பூண்டி சந்திப்பு TTP
• நடைமேடை 1 || காரைக்குடியில் இருந்து 
 
திருவாரூர் செல்லும் பயணிகள் ரயில் CROSSING மேற்கொள்ள காத்திருக்கிறது ✅
 
• நடைமேடை 3 || திருவாரூர் அகஸ்தியம்பள்ளி டெமு ரயில் வந்து கொண்டிருக்கிறது ✅

 

Thanks & Copy form Sibi Kumar