பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்திய🌹🌹🌹🌹🌹....❤️🌹🌹....❤️🌹🌹....❤️🌹🌹....❤️🌹🌹....❤️🌹🌹

மணக்கால் அய்யம்பேட்டை | 10:03 AM | Best Blogger Tips


மோடி ஆட்சியில் இந்தியா முன்னேற்றம் அடைந்து உள்ளதா? பின்னோக்கி பயணிக்கிறதா?
2001 - Narendra Modi takes oath as Gujarat CM for first time - YouTube 
ஒரு நாட்டின் உள்நாட்டு வளர்ச்சிக்கு மிக முக்கியமானது உள் நாட்டு வெளிநாட்டு தீவிரவாதத்தை அடக்கி ஆள்வது. அதனால் மோடி அரசு ராணுவத்துக்கும் உளவு அமைப்புகளுக்கும், சட்டத்துக்கு புறம்பான குடியேற்றத்துக்கு எதிரான நடைமுறைகளுக்கும், எல்லை பென்சிங் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
 Karnataka approves AI centre of excellence to drive deeptech innovation in  Bengaluru - The Economic Times
ராணுவ நடவடிக்கைகளில் AI தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்க பெங்களூரு BEL-இல் புதிய "செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையம்" (Centre of Excellence for AI) திறக்கப்பட்டுள்ளது. உளவு பார்த்தல், சைபர் பாதுகாப்பு மற்றும் தன்னிச்சையான போர் முடிவுகளுக்கு 75 க்கும் மேற்பட்ட AI அமைப்புகள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. 
 DRDO conducts long-duration ground test of scramjet engine for hypersonic  missiles - The Economic Times
DRDO அமைப்பு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஸ்க்ராம்ஜெட் (Scramjet combustor) தொழில்நுட்பத்தை ஜனவரி 2026-இல் 12 நிமிடங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக சோதனை செய்து, அதிவேக ஏவுகணை தொழில்நுட்பத்தில் வல்லரசு நாடுகளுக்கு இணையான சாதனையை செய்துள்ளது. 
 பகுப்பாய்வு - இஸ்ரேலிய காரணி: ஏன் இந்தியாவின் MR-SAM ஆனது உலக ஏற்றுமதி  விற்பனையில் தென் கொரியாவின் Cheongung-II ஐ விட பின்தங்கியுள்ளது ...
ஏவுகணை இடைமறிப்பான்கள் மற்றும் லேசர் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பை DRDO வெற்றிகரமாக சோதித்துள்ளது.
கடற்படையில் எதிரி கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட, AI மூலம் இயங்கும் 200 கி.மீ தூரம் வரை செல்லக்கூடிய நீண்ட தூர "காமிகாஸே" (Kamikaze) தற்கொலைப்படை நீர்மூழ்கி ட்ரோன்களை DRDO வடிவமைத்து வருகிறது. 
 எம்ஐஆர்வி தொழில்நுட்பத்துடன் அக்னி 5ஐ இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது
ஒரே ஏவுகணையில் பல அணுஆயுதங்களை சுமந்து சென்று வெவ்வேறு இலக்குகளை தாக்கும் MIRV தொழில்நுட்பத்துடன் கூடிய 'அக்னி-V' ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
இந்தியாவின் 5ஆம் தலைமுறை ரகசிய (Stealth) போர் விமானமான AMCA-வின் முன்மாதிரி (Prototype) தயாரிப்புகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதில் AI-ஆல் இயங்கும் 'மின்னணு பைலட்' (Electronic Pilot) வசதியும் இடம்பெற உள்ளது.
இந்திய ராணுவ வீரர்களின் சொந்த யோசனைகள் மூலம் உருவாக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளில் அகினியாஸ்த்ரா (Agniastra), பாஸ் அட்டாக் ட்ரோன் (Baaz Attack Drone), வித்யுத் ரக்ஷக் போன்ற சாதனங்கள் தொழிற்சாலை உற்பத்திக்கு மாற்றப்பட்டுள்ளன.
 மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தலைமையிலான தேசிய ஜனநாயகக்  கூட்டணி ஆட்சியின் 12 ஆண்டுகளில், பாரதத்தின் எல்லை உள்கட்டமைப்பு ...
இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் மோடி தலைமையிலான மத்திய அரசு மிக முக்கிய மைல்கற்களையும் சாதனைகளையும் எட்டியுள்ளது. 
 14 திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் சீனாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்  மாற்றம்
எல்லைப் பகுதிகளில் சாலை அமைக்கும் வேகம் ஆண்டுக்கு 600 கி.மீ என்பதில் இருந்து ஆண்டுக்கு 1,200 கி.மீ-க்கும் அதிகமாக இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. எல்லைப்புற சாலைகள் அமைப்பிற்கு (BRO) கடந்த நிதியாண்டுகளில் இல்லாத அளவாக, 2024-25 நிதியாண்டில் ₹16,690 கோடியும், அதனைத் தொடர்ந்து 2025-26 நிதியாண்டில் ₹17,900 கோடியும் அதிகபட்சமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
 BRO Unveils Rs 1,200 Crore Push For Roads, Tunnels And Bridges In Ladakh
கடந்த பத்தாண்டுகளில் BRO அமைப்பு 8,500 கி.மீ-க்கும் அதிகமான சாலைகளையும் 400-க்கும் மேற்பட்ட நிரந்தரப் பாலங்களையும் கட்டியுள்ளது. தவாங் பகுதிக்கு தடங்கலற்ற போக்குவரத்தை வழங்க உதவும் சேலா சுரங்கப்பாதை (Sela Tunnel) மற்றும் லடாக்கிற்கு அனைத்து காலநிலைகளிலும் செல்லும் வசதியைத் தரும் 4.1 கி.மீ நீளமுள்ள ஷின்கு-லா சுரங்கப்பாதை (Shinku-La tunnel) போன்றவை மிக முக்கிய சாதனைகளாகும். லடாக்கில் உள்ள துர்புக்-சியோக்-தவ்லத் பெக் ஓல்டி (DBO) சாலையில் மிகக் கடினமான நிலப்பரப்பில் சியோக் சுரங்கப்பாதை (Shyok Tunnel) வெற்றிகரமாகக் கட்டப்பட்டுள்ளது. 
 PM மோடி திறந்து வைத்த 36 கோடி ரூபாய் சாலைக்கு வந்த நிலைமை - வைரல் காட்சி  #sathiyamnews #sathiyamtv #news
எல்லைக் கிராமங்களை நாட்டின் "கடைசி கிராமங்கள்" என்று காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அழைத்து வந்தனர். அவற்றை அப்படி அழைக்காமல், "முதல் கிராமங்கள்" என அறிவித்து மோடி அரசு மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. VVP-I மற்றும் VVP-II ஆகிய திட்டங்கள் மூலம் மொத்தம் ₹11,639 கோடி நிதி ஒதுக்கீட்டில் சர்வதேச எல்லைகளில் உள்ள கிராமங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் கீழ், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் இதுவரை சாலை வசதி இல்லாத 135 கிராமங்களை இணைக்க ₹2,513 கோடி மதிப்பில் 112 சாலைகள் மற்றும் 35 பாலங்கள் அனுமதிக்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
 வினையூக்க பிராந்திய நடவடிக்கை: கடல்சார் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பில்  IORAவின் பங்கு – இந்தியா அறக்கட்டளை
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டபடி, “...இந்த இணைப்புகள் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகியவற்றின் உயிர்நாடிகளாகும்.” என எல்லைப் பகுதி சாலைகள் ராணுவப் படைகளின் விரைவான நடமாட்டத்திற்குப் பெரிதும் உதவுகின்றன. எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் இடம்பெயர்வு (migration) தடுக்கப்பட்டு, அங்கு சுற்றுலா மற்றும் உள்ளூர் வாழ்வாதார வாய்ப்புகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன.
 Press Release Page | Press Information Bureau
ஒரு நாட்டின் உற்பத்தி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு போக்குவரத்து வசதி மிக முக்கிய பங்களிக்கிறது. இந்திய ரயில்வேயின் அகலப்பாதை (Broad Gauge) நெட்வொர்க்கில் 99.4%-க்கும் அதிகமான பகுதிகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இது கார்பன் உமிழ்வைக் குறைத்து பசுமை எரிசக்தி இலக்கை அடைய உதவுகிறது. 
 2025-2026ம் ஆண்டில் சென்னை விமான நிலையத்தில் சரக்குகள் கையாள்வது 11.7%  அதிகரிப்பு; 16 ஆயிரம் டன் சரக்கு இறக்குமதி செய்து சாதனை - Dinakaran -  Dinakaran
2025-26 நிதியண்டில் சரக்கு போக்குவரத்தில் புதிய சாதனை படைத்து, 1,670 மில்லியன் டன் (MT) அளவுக்குச் சரக்குகளை ஏற்றிச் சென்றுள்ளது.w பயணிகள் போக்குவரத்தை பொறுத்த மட்டில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக வந்தே பாரத் மற்றும் அமிர்த பாரத் சேவைகள் நாடு முழுவதும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வெற்றிகரமாகக் கொண்டுவரப்பட்டுள்ளன.
தினசரி சராசரியாக 14 கி.மீ அளவுக்குப் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு, நவீன எல்.எச்.பி (LHB) பெட்டிகள் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. இந்திய ரயில்வே 2025-26 ஆம் ஆண்டில் சரக்கு போக்குவரத்தில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டில் ரயில்வே 1 ஆயிரத்து 670 மில்லியன் டன்கள் (MT) சரக்குகளை எடுத்துச் சென்று, முந்தைய ஆண்டை விட 3.25% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
 காஷ்மீரில் Article 370 நீக்கம் ! இது அரசியல் பழிவாங்கலா? மாநில உரிமை  என்னாச்சு? 2019 வரை Article 370-ன் கீழ் இருந்த ஜம்மு காஷ்மீரின் அரசமைப்புச்  சட்ட ...
ஜம்மு காஷ்மீர் நேரு ஏற்படுத்திய art 370 காரணமாக தனி கொடியுடன் தனி நாடு போல் செயல்பட்டு வந்தது. மோடி அரசால் art 370 ரத்து செய்யப்பட்ட பின்னர் காஷ்மீர் முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீரின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ரயில் மற்றும் தரைவழிப் போக்குவரத்துத் துறைகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. பல தசாப்தங்களாகத் துண்டிக்கப்பட்டிருந்த காஷ்மீர் பள்ளத்தாக்கை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைப்பதில் இந்த அரசு மிகப்பெரிய மைல்கற்களை எட்டியுள்ளது. 
 உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு (USBRL) 28 ஆண்டுகளுக்குப் பிறகு  முழுமையாகச் செயல்படும்
உதம்பூர் - ஸ்ரீநகர் - பாரமுல்லா ரயில் இணைப்பு (USBRL) திட்டம் முழுமையாக முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம், வரலாற்றிலேயே முதன்முறையாக காஷ்மீர் பள்ளத்தாக்கு இந்திய நிலப்பரப்பின் பிற பகுதிகளுடன் ரயில்கள் மூலம் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. 
 The Chenab Bridge, India's engineering marvel, rises 359 metres above the Chenab  River in Jammu and Kashmir. It boasts a record-breaking span of 467 metres,  making it the highest railway bridge globally.
செனாப் ஆற்றின் குறுக்கே 359 மீட்டர் (1,177 அடி) உயரத்தில், உலகின் மிக உயரமான ரயில்வே வளைவுப் பாலம் (Chenab Rail Bridge) கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இது பாரிஸின் ஈஃபெல் கோபுரத்தை விட உயரமானது மற்றும் பொறியியல் துறையின் மாபெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் முதலாவது கேபிள் அமைப்பிலான ரயில் பாலம் (Anji Bridge) காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டு, நாட்டின் ஒற்றுமைக்கு வலு சேர்த்துள்ளது. கத்ரா முதல் ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (Vande Bharat Express) ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஜம்மு - ஸ்ரீநகர் இடையேயான பயண நேரம் பாதியாகக் குறைந்துள்ளது. 
 காஷ்மீரின் 'ஆப்பிள் எக்ஸ்பிரஸ்' செப்., 1ல் வெளியாக உள்ளது
பள்ளத்தாக்குக்கு முதன்முறையாகச் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு, சிமெண்ட், நிலக்கரி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அதேபோல், காஷ்மீரின் முக்கிய வாழ்வாதாரமான ஆப்பிள் பழங்கள் டன் கணக்கில் ரயில்கள் மூலம் இந்தியாவின் பிற சந்தைகளுக்கு விரைவாகவும் குறைந்த செலவிலும் கொண்டு சேர்க்கப்படுகின்றன. இதன் மூலம் காஷ்மீர் மாநிலத்தில் பொருளாதார புரட்சி ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
 Indian Railways Nears 100% Broad | Akashvani News
ஜம்மு-காஷ்மீரின் அகல ரயில்பாதை (Broad Gauge) நெட்வொர்க் 100% மின்மயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில்வே நிர்வாகத்தை மேம்படுத்த புதிய 'ஜம்மு ரயில்வே கோட்டம்' (Jammu Railway Division) உருவாக்கப்பட்டுள்ளது. 
 ஏழு தொழிலாளர்கள் கொல்லப்பட்ட Z-Morh சுரங்கப்பாதை ஜம்மு மற்றும் காஷ்மீரில்  ஒரு முக்கிய மூலோபாய உள்கட்டமைப்பு திட்டம் | காஷ்மீர் வாழ்க்கை ...
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஜம்மு-காஷ்மீரில் 1,436 கிலோமீட்டருக்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. குளிர்காலத்தில் பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் காஷ்மீர் துண்டிக்கப்படுவதைத் தடுக்கப் பல பிரம்மாண்ட சுரங்கப்பாதை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஜோஜிலா (Zojila Tunnel), ஜெட்-மோர் (Z-Morh) மற்றும் சோனமார்க் சுரங்கப்பாதைகள் மிக வேகமாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (PMGSY) திட்டத்தின் கீழ் மலைப்பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்குப் புதிய தார்ச் சாலைகள் அமைக்கப்பட்டு, மக்களின் அன்றாடப் போக்குவரத்து எளிதாக்கப்பட்டுள்ளது.
 Beyond North and South: India and the future of development
இன்னும் நாட்டின் பிற பகுதிகளில் ஏற்பட்டு உள்ள உள் கட்டமைப்பு மற்றும் முன்னேற்ற திட்டங்கள் குறித்து சொல்வதற்கு ஏராளம் உள்ளது. பதிவு நீண்டுவிடும் என்பதற்காக தவிர்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் உரைகளில், நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை விமர்சிப்பவர்களைக் குறிப்பிட்டுப் பேசும்போது, நாட்டில் ஏதேனும் ஒரு புதிய பெரிய திட்டமோ அல்லது நவீன உள்கட்டமைப்பு வசதிகளோ கொண்டுவரப்படும்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு தரப்பினர் எப்போதுமே "இப்போது இதற்கு என்ன தேவை ஏற்பட்டுவிட்டது?" (What's the need?) என்று கேள்வி எழுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்றும் "எப்போதுமே 'இதற்கு என்ன தேவை?' என்று கேட்கும் ஒரு கூட்டம் இருக்கவே செய்யும் என்றும் இந்த கேள்விக்கு இந்தியாவின் பதில் என்னவென்றால்... இது நாட்டிற்குத் தேவை என்று கருதினால், நிச்சயம் அதை நாங்கள் உருவாக்குவோம்" என்றும் பிரதமர் மோடி திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
 விக்சித் பாரத் 2047” என்றால் என்ன? #viksitbhart2047 PMO India Ministry of  Information & Broadcasting, Government of India
வளர்ச்சியடைந்த இந்தியா (Viksit Bharat) என்ற இலக்கை நோக்கிய பயணத்தில், நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான அதிநவீனத் திட்டங்களை இந்த அரசு எவ்விதத் தயக்கமுமின்றி உறுதியாகச் செயல்படுத்தும் என்பதை வெளிப்படுத்தவே பிரதமர் மோடி இந்த உரையாடலை மேற்கொண்டார். 
 
தமிழ்நாட்டில் மட்டும் அல்லாது இந்தியா முழுவதும் மோடி எதிர்ப்பு பேசு பவர் களை 5 வகையாக பிரிக்கலாம். 
 
முதல் ரகம், மதவெறி பிடித்து, மோடி சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர் என்று கண்மூடித்தனமாக மோடியை எதிர்ப்பவர்கள் மற்றும் ஆதாரம் அற்ற அவதூறு பரப்புபவர்கள்.
 
இரண்டாவது, அந்த மதவெறிபிடித்து எதிர்ப்பவனை, குளிரவைத்து, தன் பக்கம் இழுத்து அவன் வோட்டை அறுவடை செய்பவன். 
 
உதாரணத்துக்கு சிறுபான்மை அரசியல் செய்யும் …. உள்ளிட்ட அரசியல் கட்சிகள்.
 
மூன்றாவது அந்த ஓட்டு அறுவடை செய்பவனிடம், கூட்டணி வைத்துக் கொண்டு, தேர்தல் செலவுக்கு என்று கொடிகளில் பணம் வாங்கித் தின்பவன். 
 
நான்காவது அந்த வாங்கித்திபவனெல்லாம் தன்னையும் மதவெறியன் என்று சொல்லி விடுவார்கள் என்று பயந்து “நான் நடுநிலை வாதி” என தன்னை மிகவும் நல்லவன் போல் காட்டிக்கொள்ள நினைப்பவன். 
 
ஐந்தாவது இது எதுவுமே தெரியாமல், அறியாமை எனும் மடமையில் ஊறிப் போன கூட்டம். 
 
சினிமாவில் வருவதையும், மற்றவர்கள் பேசுவதையும் கேட்டு தனக்கு தானே ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்ளும் கூட்டம். இதில் இந்த ஐந்தாவது வகையை சேர்ந்தவனை தவிர்த்து வேறு யாரையுமே பேசி அல்லது இது போன்ற பதிவுகள் மூலம் திருத்த முடியாது. காரணம் அவர்கள் தாங்கள் செய்வது என்ன என்று தெரிந்தே செய்கிறார்கள்.

 

🙏🌹நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

ஏன் இஸ்ரோவை (ISRO) அடிக்கடி பார்வையிட்டார்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:34 PM | Best Blogger Tips

 May be an image of one or more people


நமது மதிப்பிற்குரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் அவர்கள் ஏன் இஸ்ரோவை (ISRO) அடிக்கடி பார்வையிட்டார் என்று உங்களுக்குத் தெரியுமா? இப்போது தோவல் நிம்மதியாக இருக்கலாம்.. செப்டம்பர் 4 அன்று அதிகாலை 2:55 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்திலிருந்து GSLV-F17 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இது ஏதோ தற்செயலாக நடந்த நிகழ்வு அல்ல; இது இந்தியாவின் விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கியமான உத்திசார் திருப்புமுனையாகும். 2,367 கிலோ எடையுள்ள EOS-05 செயற்கைக்கோள் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டதன் மூலம், தனக்கென சொந்தமான 'புவி-ஒத்திசைவு இமேஜிங் செயற்கைக்கோளை' (Geosynchronous Imaging Satellite) கொண்ட முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது. இஸ்ரோவே இதனை "விண்ணில் உள்ள கண்" (Eye in the Sky) என்று அழைக்கிறது.
இது உலகளாவிய கண்காணிப்புத் திறனைப் பெறுவதற்கான இந்தியாவின் முதல் படியாகும்; இத்தகைய திறன் முன்பு அமெரிக்கா மற்றும் சீனாவிடம் மட்டுமே இருந்தது.
No photo description available. 
EOS-05 மற்றவற்றிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
இதுவரை இந்தியா ஏவிய அனைத்து புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களும் பூமியிலிருந்து 500-600 கி.மீ உயரத்தில் உள்ள 'தாழ்வான புவி சுற்றுப்பாதையில்' (Low Earth Orbit) இருந்தன. அவை பூமியைச் சுற்றி வருகின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்தைக் கடந்து சென்ற பிறகு, அதே இடத்தை மீண்டும் பார்க்க பல மணிநேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். அந்த இடைப்பட்ட நேரத்தில், எதிரியின் நிலை மாறிவிடக்கூடும்.
EOS-05 செயற்கைக்கோள் 36,000 கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அங்கு அதன் வேகம் பூமியின் சுழற்சி வேகத்திற்கு இணையாக உள்ளது. எனவே, பூமியிலிருந்து பார்க்கும்போது, அது இந்தியத் துணைக்கண்டத்திற்கு மேலே ஒரே இடத்தில் நிலையாக இருப்பது போல் தோன்றும். இது ஒரு புரட்சிகரமான மாற்றமாகும்.
May be an image of text 
இதற்கும் தோவல் சாப்-க்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம். சொல்கிறேன் கேளுங்கள். தோவல் சாப்-க்கு 80 வயதுக்கு மேல் ஆகிறது. அவருக்கு பாகிஸ்தானின் ஒவ்வொரு மூலை முடுக்கைப் பற்றியும் தெரியும். ஆனால் இப்போது அங்கே என்ன இருக்கிறது, யார் இருக்கிறார்கள், எப்போது, எப்படி என்பது போன்ற விவரங்கள் அவருக்குத்தெரியாது
1. நிகழ்நேரக் கண்காணிப்பு (Real-time surveillance)... ஒரே நேரத்தில் இந்தியா, பாகிஸ்தான், திபெத் மற்றும் முழு இந்தியப் பெருங்கடலும் அதன் பார்வைப் பரப்பிற்குள் (frame) இருக்கும். ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ஒரு புதிய படம் கிடைக்கும். ஏவுகணை ஏவப்பட்டாலோ அல்லது ராணுவ வாகன அணிவகுப்பு நகர்ந்தாலோ, அது ஆரம்பம் முதல் இறுதி வரை நேரலையாகப் பதிவு செய்யப்படும். இது 'Persistent Stare' என்று அழைக்கப்படுகிறது - அதாவது இடைவிடாது உற்றுநோக்கும் ஒரு கண். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பாகிஸ்தான் ஜெனரல் ஆசிம் முனீர் எந்தப் பகுதியில் ஒளிந்திருந்தாலும், நம் டோவல் சாப் இங்கிருந்தபடியே அவரைக் கண்காணிப்பார்.
2. பகல் மற்றும் இரவில் பார்க்கும் கண்கள். இது சாதாரண கேமரா அல்ல; இதில் மல்டி-ஸ்பெக்ட்ரல் மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்ட்ரல் அகச்சிவப்பு (infrared) சென்சார்கள் உள்ளன. இவை மேகங்கள், இருள் மற்றும் மூடுபனிக்கு ஊடாகவும் பார்க்கக்கூடியவை. குளிரான இரவில் மனித உடலின் வெப்பத்தைக்கூட இவற்றால் கண்டறிய முடியும்.
No photo description available. 
பாகிஸ்தான் ஏன் பயப்பட வேண்டும்?
பாகிஸ்தானுக்கு இனி ஒளிந்துகொள்ள இடமில்லை.
PoK-ல் உள்ள பயங்கரவாத முகாம்கள் முதல் கஹூட்டா வரை... கட்டுப்பாட்டுக் கோடு (LoC) வழியாக ஊடுருவல் முயற்சிகள், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏவுகணை ஏவுதளங்களின் நகர்வுகள், ராணுவ பதுங்கு குழிகள் கட்டுமானம் என அனைத்தும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.
CPEC-ன் ரகசியம் அம்பலமாகும்... சீனப் போர்க்கப்பல் குவாடர் துறைமுகத்தை நெருங்கினாலோ அல்லது சீன வீரர்கள் பலூசிஸ்தானில் தரையிறங்கினாலோ, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் (CPEC) ஒவ்வொரு கட்டுமானப் பகுதியையும் இந்தியா நிகழ்நேரத்தில் (real-time) கண்காணிக்கும். சீனாவுக்கு பாகிஸ்தான் ரகசியமாக உதவும் வழி அடைக்கப்படும்.
ஏவுகணை ஏவப்படும்போது... 'ஷஹீன்' போன்ற ஏவுகணை ஏவப்பட்டால், 36,000 கி.மீ உயரத்தில் உள்ள EOS-05 மூலம் அதன் தீப்பிழம்பு படம் பிடிக்கப்படும். இனி ரகசியமாகச் சோதனைகளை நடத்த முடியாது.
பாகிஸ்தானை விட சீனாவுக்கே அதிக பயம்...
சீனாவின் ஒட்டுமொத்த போர் உத்தியும் எதிர்பாராத விதமாகப் படைகளைக் குவிப்பதை அடிப்படையாகக் கொண்டது. கல்வானில் அவர்கள் அதைத்தான் செய்தார்கள்.
1. LAC-ல் ஆச்சரியமூட்டும் நகர்வுகளுக்கு இனி இடமில்லை... திபெத்திலிருந்து லடாக் அல்லது அருணாச்சலுக்கு PLA (சீன ராணுவம்) 1000 லாரிகளைக் கொண்டு வந்தாலோ, அல்லது புதிய சாலை, ஹெலிபேட் அல்லது கிராமத்தை உருவாக்கினாலோ, அது EOS-05-ன் புகைப்படத்தில் பதிவாகிவிடும். இதனால் சீனாவின் "சலாமி ஸ்லைசிங்" (சிறுகச் சிறுக ஆக்கிரமிக்கும்) உத்தி முறியடிக்கப்படும்.
2. 'யாவோகன்' (Yaogan) செயற்கைக்கோள்களுக்கு இந்தியாவின் பதில். இன்று சீனாவிடம் 50-க்கும் மேற்பட்ட ராணுவக் கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் உள்ளன. இதுவரை அந்தத் துறையில் இந்தியா தனியாக இருந்தது; EOS-05 மூலம் இந்தியா அந்தப் போட்டியில் களமிறங்கியுள்ளது. இது போன்ற மேலும் 4 செயற்கைக்கோள்கள் வந்தால், ஆசியா முழுவதையும் 24 மணி நேரமும் கண்காணிக்கும் ஒரு கட்டமைப்பு இந்தியாவிடம் அமையும்.
3. இந்தியப் பெருங்கடலில் வேட்டை. சீன நீர்மூழ்கிக் கப்பல்களோ அல்லது கண்காணிப்புக் கப்பல்களோ இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்தால், அவை நீர்ப்பரப்பிற்கு மேலே வரும் கணமே கண்டறியப்படும். கடல் நீரின் வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டாலும், எதிர்காலத்திலும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியும் திறன் இந்தத் தொழில்நுட்பத்திற்கு உண்டு.
4. மிகப்பெரிய ரகசியம் - 'சென்சார் டு ஷூட்டர்' (Sensor to Shooter): EOS-05 தனியாகச் செயல்படுவதில்லை. இதிலிருந்து பெறப்படும் தரவுகள் நேரடியாக இந்திய ராணுவத்தின் 'ஒருங்கிணைந்த தியேட்டர் கமாண்ட்' (Integrated Theatre Command) பிரிவுக்குச் செல்லும். அதாவது, செயற்கைக்கோள் ஒரு இலக்கைக் கண்டறிந்தால், சில நொடிகளுக்குள்ளேயே அந்தத் தகவல் எல்லையில் உள்ள வீரருக்கோ, வானில் பறக்கும் போர் விமானத்திற்கோ அல்லது பிரம்மோஸ் ஏவுகணைக்கோ சென்றடையும். இலக்கைக் கண்டறிந்த சில நொடிகளுக்குள்ளேயே தாக்குதல் நடத்தும் இந்தத் திறன்தான் எதிரிகளுக்கு உண்மையான அச்சத்தை ஏற்படுத்துகிறது.
அதனால்தான் இது வெறும் வானிலை ஆய்வுக்கான செயற்கைக்கோள் மட்டுமல்ல; EOS-05 என்பது எதிரியின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து, இந்தியாவின் வெற்றியை உறுதி செய்யும் ஒரு நிலையான காவலன் ஆகும்.
பாகிஸ்தானை நீங்கள் எந்த வகையான இஸ்லாமிய நாடாக மாற்றினாலும், இந்தியா உங்களுடையதுதான்... அதாவது 'பாரதம்'.
இறுதியாக...
இந்த EOS-05 செயற்கைக்கோளை வெற்றிகரமாகச் செயல்படுத்த நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) தோவல் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்.
நமது இஸ்ரோ (ISRO) விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்... நமது அன்பிற்குரிய பிரதமர் மோடிஜி... அவர் நீடூழி வாழட்டும்... வந்தே மாதரம்.
 

Thanks to Copy from Arul Arulvarshan

அப்பா மகளின் பாச போராட்டம்....................!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:02 AM | Best Blogger Tips

 May be an image of hospital

மருத்துவர்!
 
ஆபரேஷன் அறையின் முன்.
 
அம்மா உங்க அப்பாவுக்கு 45.நிமிடம் சிகிச்சையில் தோல்வி தான் ஆபரேஷன் டேபிள் ல தான் இருக்கார்.
 
சில காகிதத்தில் கையெழுத்து போடுங்க
மகள்.
 டாக்டர் நான் என் அப்பாவை ஒரு தடவை பாக்கணும் உடனே நான் அப்பா கையை பிடித்தால் போதும் எல்லாம் சரி ஆகும்.
 
டாக்டர்.
 சிஸ்டர் உடனே அவங்க உடையை மாற்றுங்கள்.
சிஸ்டர்.
 
உடனே உடையை அணிந்து அறைக்குள் அழைத்து சென்றார்கள் மகளை.
 
மகள்.
 அப்பா நான் இருக்கேன் கையை பிடித்து தலையில் முத்தம் கொடுத்தாள்
அப்பா.
 
ஆடைகளில் ரத்தம் தெளித்த நிலையில்
பத்து சதவீதம் உணர்வு இருந்த அப்பா தலையை அசைத்தார்.
 
டாக்டர்.
மகளிடம் இன்னும் ஒரு நாற்பது நிமிடங்கள் கொடுங்க பார்க்கலாம் 
 
மகள்.
கண்டிப்பா என் அப்பா நல்லா வருவாங்க டாக்டர் உயிர் போகும் நிலையிலும் அந்த மகளின் நம்பிக்கை தன் தகப்பணை காப்பாற்றுவதற்கு போராடியவள் கண்டிப்பா பெண்களால் முடியும் என்று நின்றால் அந்த மகள் ❤️
 
வெளிய அம்மா பேச முடியாமல் அமர்ந்து இருக்க. ஒரு 34.வயசு மகள் எல்லாவற்றையும் கையாண்ட விதம் டாக்டர் நர்ஸ் எல்லாரையும் ஆச்சர்யம் பட வைத்தது.
 
இதில் ஒன்று சொல்ல வேண்டும் அந்த தகப்பன் அந்த பெண் பிள்ளையை சிங்கம் மாதிரி வளர்த்து இருந்தார்.
 
பெண் பிள்ளைகள் பெற்ற பெற்றோரே பெண்களுக்கு முதலில் கல்வியை கொடுங்க. 
 
பின் வேலை வாய்ப்பு கொடுங்க திறமையை வளர்த்து திருமணம் செய்து வையுங்கள்
 
அந்த மகளுக்கு எப்போதும் அப்பா ஹீரோ தான்.
 
அந்த அப்பாவுக்கு மகள் சிங்கம் தான்.
அந்த அப்பாவுக்கும் மகளுக்கும் சமர்ப்பணம் ❤️❤️
 

நன்றி இணையம்

 

Thanks & Copy from Saravana Kumar C

 

வறுமையைக் கண்டு கேலி செய்வதற்குப் பதிலாக

மணக்கால் அய்யம்பேட்டை | 3:33 PM | Best Blogger Tips

 Nosh Garden Cafe & Hostel in Laxmanjhula,Pauri - Best Fast Food near me in  Pauri - Justdial

கிழிந்த வேட்டி மற்றும் சட்டை அணிந்த ஒருவர், தனது 15-16 வயது மகளுடன் ஒரு பெரிய ஹோட்டலுக்கு வந்தார். 
 
அவர்கள் அமர்ந்திருப்பதைக் கண்ட பணியாளர் ஒருவர், இருவருக்கும் தலா ஒரு டம்ளர் குளிர்ந்த நீரை வைத்துவிட்டு, அவர்களுக்கு என்ன கொண்டு வர வேண்டும் என்று கேட்டார்.
 
அந்த நபர் கூறினார்...
 
"என் மகள் 10-ஆம் வகுப்புத் தேர்வில் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்தால், அவளுக்கு நகரத்தின் மிகப்பெரிய ஹோட்டலில் தோசை வாங்கிக் கொடுப்பதாக நான் வாக்குறுதி அளித்திருந்தேன்.
 
அவள் தன் வாக்குறுதியைக் காப்பாற்றிவிட்டாள், அதனால் அவளுக்கு ஒரு தோசை கொண்டு வாருங்கள்." பணியாளர், "உங்கள் மகளுக்கு ஒரு தோசை ஆர்டர் செய்தீர்கள்... ஆனால் உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். கனத்த இதயத்துடன் அந்த நபர், "என்னிடம் ஒரு தோசைக்கான பணம் மட்டுமே உள்ளது. அதனால், எனக்கு எதுவும் வேண்டாம்," என்று பதிலளித்தார்.
 
அந்தக் கதையைக் கேட்டு நெகிழ்ந்துபோன பணியாளர், ஹோட்டல் உரிமையாளரிடம் சென்று நிலைமையை விளக்கினார். "அவர்கள் இருவருக்கும் ஒரு முழுமையான, வயிறாரும் உணவை வழங்க விரும்புகிறேன். இப்போது என்னிடம் பணம் இல்லை, அதனால் அந்தப் பணத்தை என் சம்பளத்தில் பிடித்துக்கொள்ளுங்கள்," என்று பணியாளர் கூறினார். இதைக் கேட்ட உரிமையாளர் அந்தப் பணியாளரைப் பாராட்டி, "அவளது சாதனையைச் சிறப்பிக்கும் வகையில் ஹோட்டல் சார்பாகவே அவர்களுக்கு ஒரு விருந்து அளிப்போம்," என்று கூறினார். இதைக் கேட்டு அந்தப் பணியாளர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.
 May be an image of table
ஹோட்டல் ஊழியர்கள் ஒரு மேஜையை அழகாக அலங்கரித்தனர். ஹோட்டலில் இருந்த அனைவரும் இணைந்து, அந்த ஏழைச் சிறுமியின் வெற்றியை மிகச் சிறப்பாகக் கொண்டாடினர். உரிமையாளர் அவர்களுக்கு மூன்று தோசைகளை வழங்கியதுடன், அண்டை வீட்டாருடன் பகிர்ந்துகொள்ள ஒரு பெரிய பையில் இனிப்புகளையும் கட்டிக்கொடுத்தார். தங்களுக்கு அளிக்கப்பட்ட மிகுந்த மரியாதையையும் உபசரிப்பையும் எண்ணி, நன்றிக் கண்ணீருடன் அந்தத் தந்தையும் மகளும் ஹோட்டல் உரிமையாளருக்கும் பணியாளருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.
 
காலம் கடந்தது (சில ஆண்டுகளுக்குப் பிறகு)...
ஒரு நாள், அதே சிறுமி—ஐ.ஏ.எஸ். (I.A.S.) தேர்வில் தேர்ச்சி பெற்று—அந்த நகரத்திற்கே மாவட்ட ஆட்சியராகத் திரும்பினார். காலை உணவிற்காக அங்கு வருவதாகத் தெரிவிக்குமாறு தனது உதவியாளரை ஹோட்டலுக்கு முன்கூட்டியே அனுப்பினார். ஹோட்டல் உரிமையாளர் உடனடியாக ஒரு மேஜையை அழகாக அலங்கரித்தார். இந்தச் செய்தியைக் கேட்டதும், ஆட்சியரைப் பார்க்கும் ஆர்வத்தில் ஹோட்டல் வாடிக்கையாளர்களால் நிரம்பியது.
 
அந்த இளம் பெண் புன்னகைத்தபடியே தனது பெற்றோருடன் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டதும் அனைவரும் மரியாதையின் நிமித்தம் எழுந்து நின்றனர். ஹோட்டல் உரிமையாளர் அவருக்கு மலர்க்கொத்தை வழங்கினார்; அதேவேளையில் பணியாளர் அவரது காலை உணவுக்கான ஆர்டரைக் கேட்டார்.
 IAS lady officer sitting in her office drawing / lady IAS officer drawing  /women IAS officer drawing - YouTube
 மாவட்ட ஆட்சியராக அந்த உணவகத்திற்குச் சென்ற அவர், "உங்களுக்கு என்னை அடையாளம் தெரியாமல் இருக்கலாம். பல ஆண்டுகளுக்கு முன்பு, படிப்பில் முதலிடம் பிடித்த பிறகு என் தந்தையுடன் உங்கள் உணவகத்திற்கு வந்திருந்தபோது, ​​என் சாதனையைப் பற்றி நீங்கள் அறிந்துகொண்டீர்கள். எங்களிடம் போதுமான பணம் இல்லாத நிலையிலும், நீங்கள் மகிழ்ச்சியுடன் எங்களுக்கு முழுமையான உணவை வழங்கினீர்கள்; ஒரு பைசா கூட வாங்க மறுத்துவிட்டதோடு, எங்களைச் சிறப்பாகக் கௌரவிக்கவும் செய்தீர்கள். 
 
அன்று நீங்கள் இருவரும் மனிதாபிமானத்தின் உண்மையான எடுத்துக்காட்டுகளாகத் திகழ்ந்தீர்கள்
 
என் வெற்றியைச் கொண்டாட ஒரு விருந்தையே ஏற்பாடு செய்தீர்கள், அத்துடன் அண்டை வீட்டாருடன் பகிர்ந்துகொள்ள இனிப்புகளையும் கட்டிக் கொடுத்தீர்கள்.
 
இன்று, உங்கள் ஆசியால் நான் மாவட்ட ஆட்சியராக உயர்ந்துள்ளேன். உங்கள் இருவரையும் பற்றிய நினைவுகளை என் வாழ்நாள் முழுவதும் போற்றுவேன்
 
இன்று, இங்குள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் உணவக ஊழியர்கள் என அனைவருக்கும் என் சார்பில் ஒரு விருந்து அளிக்கிறேன்; அதற்கான கட்டணத்தை நானே செலுத்துகிறேன்," என்று கூறினார். இவ்வாறு கூறிய அவர், அங்கிருந்த அனைவர் முன்னிலையிலும் உணவக உரிமையாளர் மற்றும் பணியாளர் ஆகிய இருவரையும் கௌரவித்தார்.
 
நீதி: வறுமையைக் கண்டு கேலி செய்வதற்குப் பதிலாக, மக்களிடம் உள்ள திறமையை அங்கீகரித்து மதியுங்கள்... அவர்களை ஊக்குவியுங்கள்.
 

எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வ.................

மணக்கால் அய்யம்பேட்டை | 5:42 PM | Best Blogger Tips

No photo description available.

இதை படிக்கும் முன் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்திய பின்னர் படியுங்கள். அப்போது தான் ஒரு தெளிவு உங்களுக்குள் பிறக்கலாம்.
 
(இது ஆத்மார்ந்த மூத்தோரின் அனுபவ அறிவுரை)
உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.....
 
நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். 
 
அதையும் பெரிது பண்ணாதே......
 
உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.....
 
ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....
 
ஒவ்வொரு மனிதனும்
தனித்தனி ஜென்மங்கள்.
தனித்தனி பிறவிகள்
தனித்தனி ஆன்மாக்கள்.....
 
அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். 
 
அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள்.....
 
அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது......
 
இதுதான் வாழ்க்கையின் தத்துவ உண்மை.....
அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்....
 
அது,
 
உடன் பிறந்தவர்களாக இருந்தாலும்,
நண்பர்களாக இருந்தாலும்,
கணவன், மனைவியாக இருந்தாலும்,
பெற்ற குழந்தைகளாக இருந்தாலும்,
பேரன் பேத்திகளாக இருந்தாலும்,
எந்த உறவுகளாக இருந்தாலும்,
அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது.......
 FAITH - #விதைத்தல்... ****************** நாம் ஒருவருக்கு நன்மை செய்கிறோம்  என்றால் அதை பெற்றுக்கொண்ட மனிதன் ஒருவேளை மறந்து போகலாம்... ஆனால் நிச்சயமாக  ...
எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி. இதை நீ மாற்றி அமைக்க முடியுமா...?
 
ஒதுங்கி நின்று வேடிக்கை பார்!....
 பிறவி குணம்... உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும்,  கணவன், மனைவியாக இருந்தாலும், பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், பேரன் ...
பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே.....
 
அவர்களுக்கு அனுபவம் தான் குரு.....
 
அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீ பொறுமையாக இரு........
 
செயற்கையாக ஒரு குணத்தை உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும்,
தான் யார்? தன் குணம் என்ன?
 
என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள். எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்....
 
நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம். அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தவிர நாம் வேறு எதையும் செய்து காட்ட முடியாது..... 
 
எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் கடவுள்.
 
அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. அது போல் இயற்கையின் சுபாவங்களைப் போல் மனித இயற்கை சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.......
 
நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப்பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும், தீமை வந்தாலும், உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும். அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்....
 
இன்பமானாலும் துன்பமானாலும் அதை நீயே சந்திக்க கற்றுக்கொள். அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.....
 
உன் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல் உன்னோடு சேர்ந்தே பயணிப்பார். அது உன் பிறவி பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது. அப்படி அது நடந்து விட்டால், எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணைந்தே இருப்பார்....
 
நீ பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர் கொள்ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.
 
மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.....
 
உன் கண்ணீரும். உன் கவலையும் உன்னை பலவீனமாக காட்டிவிடும்... அழுவதாலும் சோர்ந்து போவதாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. 
 
எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும். 
 
"அழுது சுமப்பதை காட்டிலும், ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்."
 
தைரியமும் தன்னம்பிக்கையும் தான்
ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள். இந்த பக்குவத்தை அடைந்து விட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்....
 
இப்பதிவை பத்திரப்படுத்தி, உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பொறுமையாக மீண்டும் மீண்டும் படிக்கவும்..
 
ஒவ்வொரு வரிகளும் வைர வரிகள்
 

Thanks to Copy from பகவத்கீதை

 
 

நேரம் இருந்தது... ஆனால் நேரமில்லை...............

மணக்கால் அய்யம்பேட்டை | 5:27 PM | Best Blogger Tips

May be an image of one or more people and street 


பன்னிரண்டு மணி நேர பயணம் இப்போது நான்கு மணி நேரமாக சுருங்கிவிட்டது, 
 
ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.
பன்னிரண்டு பேர் கொண்ட குடும்பம் இப்போது வெறும் இருவர், 
 
ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.
முன்பு நான்கு வாரங்கள் எடுத்த செய்தி, இப்போது நான்கு வினாடிகளில், 
 
ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.
தூரத்திலுள்ள ஒருவரின் முகத்தைப் பார்க்க முன்பு வருடங்கள் ஆயின, 
 
இப்போது வினாடிகளில் தெரிகிறது – ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.
 
வீட்டில் சுற்றிச் செல்ல எடுத்த நேரமும் முயற்சியும்,
இப்போது லிஃப்ட்டில் வினாடிகளில் முடிகிறது,
ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.
 
வங்கி வரிசையில் மணிக்கணக்கில் நின்ற மனிதன், 
 
இப்போது மொபைலில் வினாடிகளில் பணப் பரிமாற்றம் செய்கிறான், 
 
ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.
முன்பு வாரங்கள் எடுத்த மருத்துவ பரிசோதனைகள்,
 
இப்போது சில மணி நேரங்களில் நடக்கிறது,
ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.
ஆக்டிவாவில் செல்லும்போது, ஒரு கை கைப்பிடியில், இன்னொரு கை போனில் –
ஏனென்றால் நின்று பேச அவனுக்கு நேரமில்லை.
 
கார் ஓட்டும்போது, ஒரு கை ஸ்டீயரிங்கில், இன்னொரு கை வாட்ஸ்அப்பில் –
ஏனென்றால் அவனுக்கு நேரமில்லை.
 
ட்ராஃபிக் ஜாம் ஆனால், புதிய வழி உருவாக்க லேன் மாறுகிறான் 
 
ஏனென்றால் அவனுக்கு நேரமில்லை.
 
நண்பர்கள் மத்தியில், அவன் விரல்கள் போனில் பிஸியாக இருக்கும், 
 
ஏனென்றால் எங்கோ செல்ல வேண்டும் – நேரமில்லை.
 
தனியாக இருக்கும்போது அவன் நிம்மதியாக இருக்கிறான், 
 
ஆனால் மற்றவர்கள் இருக்கும்போது அமைதியின்றி இருக்கிறான் – 
 
ஏனென்றால் அவனுக்கு நேரமில்லை.
புத்தகம் படிக்க நேரமில்லை,
 
பெற்றோரை அழைக்க நேரமில்லை,
 
நண்பனைச் சந்திக்க நேரமில்லை,
 
இயற்கையை ரசிக்க நேரமில்லை
 
ஆனால் –
 
ஐபிஎல்-க்கு நேரம் இருக்கிறது,
நெட்ஃபிளிக்ஸுக்கு நேரம் இருக்கிறது,
அர்த்தமற்ற ரீல்ஸுக்கு நேரம் இருக்கிறது,
அரசியல் விவாதத்திற்கு நேரம் இருக்கிறது –
ஆனால் தனக்கு நேரமில்லை...
 
உலகம் எளிமையாகிவிட்டது, வேகமாகிவிட்டது,
தொழில்நுட்பம் நெருங்கிவிட்டது, தூரங்கள் மறைந்துவிட்டன,
 
வசதிகள் பெருகிவிட்டன, வாய்ப்புகள் வளர்ந்துவிட்டன..
 
ஆனாலும் மனிதன் நேரமில்லை என்று சொல்லிக்கொண்டே தன்னிடமிருந்து விலகிச் சென்றான்.
 
அமைதியாக உட்கார,
தன்னோடு பேச,
தன்னைப் புரிந்துகொள்ள,
அல்லது சில நிமிடங்கள் மனமார சிரிக்க
நேரமில்லை என்கிறான்.
 
பின்னர் ஒரு நாள், நேரமே நழுவிப் போகிறது. 
 
அந்த இறுதி நொடியில் அவன் உணர்கிறான்.
 
நேரம் இருந்தது... ஆனால் நேரமில்லை என்று சொல்லிக்கொண்டே வாழ்வதை மறந்துவிட்டேன்.
 

  

Thanks to FB Copy Aro Selvaa Ride

ஏழைத் தொழிலாளியின் கண்ணீரால் விலை பேசப்படுகிறதா?

மணக்கால் அய்யம்பேட்டை | 5:34 PM | Best Blogger Tips

No photo description available.

நம் பயணத்தின் சுகம்... ஒரு ஏழைத் தொழிலாளியின் கண்ணீரால் விலை பேசப்படுகிறதா?
 
ரயில்வே ஏசி (AC) பெட்டி ஊழியரின் கண்ணீர்க் கதையும், நம் மனசாட்சியை உலுக்கும் அதிர்ச்சியூட்டும் உண்மைகளும்!
 More than 1.27 crore bedsheets, blankets, towels, pillows, and pillow  covers were reported stolen from Indian Railways' AC coaches between  January 2022 and May 2026, highlighting the massive scale of linen theft
நாம் அனைவரும் ரயில்களில் ஏசி (AC) பெட்டிகளில் பயணம் செய்ய விரும்புவோம். 
 
வெயிலின் தாக்கம் தெரியாமல், குளிர்ந்த காற்றில், ரயில்வே வழங்கும் வெள்ளை நிறப் படுக்கை விரிப்புகள் (Bedsheets), கதகதப்பான போர்வைகள் (Blankets), மற்றும் கைத்துண்டுகளை (Towels) பயன்படுத்தி நிம்மதியாக உறங்கிப் பயணம் செய்வது ஒரு சுகமான அனுபவம்.
ஆனால், அந்த நிம்மதியான பயணத்தின் முடிவில், நாம் செய்யும் ஒரு சிறிய தவறு—அல்லது சில பயணிகள் செய்யும் நாகரிகமற்ற "திருட்டு"—அங்கே இரவொளியில் நமக்குச் சேவை செய்யும் ஒரு ஏழைத் தொழிலாளியின் குடும்பத்தையே பட்டினி போடுகிறது என்ற கசப்பான உண்மை உங்களுக்குத் தெரியுமா?
 🚆 Imagine a train journey costing over ₹104 crore—not because of  accidents, but because everyday essentials kept disappearing. An RTI-based  investigation has revealed that between January 2022 and May 2026, more than
சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலான ஒரு வீடியோ, நம் சமூகத்தின் மனசாட்சியை நோக்கி ஒரு மிகப்பாரிய கேள்வியை எழுப்பியுள்ளது.
 
வைரலான அந்த கண்ணீர் வாக்குமூலம்: அமித் யாதவின் கதை
 
பிரபல யூடியூபர் (YouTuber) நவீன் சிங் (Naveen Singh) சமீபத்தில் தனது பயணத்தின் போது, ரயிலின் ஏசி பெட்டியில் பராமரிப்புப் பணி செய்யும் அமித் யாதவ் (Amit Yadav) என்ற ஊழியரிடம் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் அமித் யாதவ் பகிர்ந்து கொண்ட தகவல்கள், கேட்போர் நெஞ்சைப் பதைபதைக்கச் செய்கின்றன:
 Indian Railways has lost more than just passenger complaints. An RTI has  revealed that 1.27 crore bedsheets, towels, blankets and pillow covers went  missing from AC coaches between 2022 and 2026, causing
மாத வருமானம்: இரவு பகல் பாராது, ஓடும் ரயிலில் உழைக்கும் அமித் யாதவின் மாதச் சம்பளம் வெறும் ₹14,000 முதல் ₹15,000 மட்டுமே.
பயணிகள் திருடும் பொருட்களுக்கான அபராதம்: ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள், இறங்கிச் செல்லும்போது ரயில்வே வழங்கும் போர்வைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் துண்டுகளைத் தங்களது பைகளில் ரகசியமாக எடுத்துச் சென்று விடுகின்றனர்.
 
* பொருட்களின் விலை பட்டியல்:
* ஒரு கைத்துண்டு (Towel) – ₹60
* ஒரு படுக்கை விரிப்பு (Bedsheet) – ₹250
* ஒரு போர்வை (Blanket) – ₹700
 A massive RTI investigation has revealed that more than 1.27 crore  bedsheets, towels, blankets, pillows, and pillow covers disappeared from  Indian Railways' AC coaches between January 2022 and May 2026, causing an
பயணிகள் இந்தப் பொருட்களைத் திருடிச் சென்றால், ரயில்வே நிர்வாகமோ அல்லது அதை ஒப்பந்தம் எடுத்த நிறுவனமோ பயணிகளைத் தேடிப் பிடிப்பதில்லை. மாறாக, அந்தப் பெட்டியின் பொறுப்பில் இருந்த அமித் யாதவ் போன்ற குறைந்த ஊதியம் பெறும் ஏழை ஊழியர்களின் சம்பளத்தில் இருந்தே அந்தப் பணத்தை இரக்கமின்றிப் பிடித்துக் கொள்கிறது!
 
> வலி நிறைந்த உண்மை: சில மாதங்களில், பயணிகளின் இந்தத் திருட்டுகளுக்காக அமித் யாதவின் சொற்ப சம்பளத்தில் இருந்து ₹5,000 வரை அபராதமாகப் பிடிக்கப்படுகிறது.
 
₹15,000 சம்பளம் வாங்கும் ஒருவரின் கையில், ₹5,000 பிடித்தம் போக மீதி ₹10,000 மட்டுமே கிடைத்தால், இன்றைய விலைவாசியில் அவர் எப்படி வீட்டு வாடகை கட்டுவார்? குழந்தைகளின் பள்ளிப் கட்டணத்தை எப்படிச் செலுத்துவார்? குடும்பத்தை எப்படிப் பராமரிப்பார்? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்!
 
இது ஒரு அமித் யாதவின் கதை மட்டுமல்ல... அதிர்ச்சியூட்டும் RTI புள்ளிவிவரங்கள்!
"ஏதோ ஒரு ரயிலில், ஒரு சில பயணிகள் இப்படி நடந்திருப்பார்கள்" என்று நாம் இதை எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது. சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் வெளியான புள்ளிவிவரங்கள், இது இந்தியாவில் எவ்வளவு பெரிய சமூக நோயாக மாறியிருக்கிறது என்பதை அம்பலப்படுத்துகின்றன.
 
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பெறப்பட்ட தரவுகளின்படி, ஜனவரி 2022 முதல் மே 2026 வரையிலான கணக்கெடுப்பு காலத்தில் ரயில்வேயில் துணிப் பொருட்கள் காணாமல் போனது குறித்த அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. 
 
இக்காலத்தில் 1.27 கோடிக்கும் அதிகமான (1,27,000,000+) துணிப் பொருட்கள் காணாமல் போயுள்ளன, இதனால் ரயில்வேக்கு ₹104 கோடிக்கும் மேல் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பின் நேரடிப் பாதிப்பாக, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான அடித்தட்டு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
 
1.27 கோடி பொருட்கள் காணாமல் போயிருக்கின்றன என்றால், அது வெறும் எண்கள் அல்ல; அந்த எண்களுக்குப் பின்னால் ஆயிரக்கணக்கான ஏழை ஊழியர்களின் கண்ணீரும், அவர்களின் குடும்பங்களின் பசியும் அடங்கியிருக்கிறது.
 
நாம் ஏன் இப்படிச் செய்கிறோம்? – ஒரு சுயபரிசோதனை
 
ரயிலின் ஏசி பெட்டிகளில் (1AC, 2AC, 3AC) பயணம் செய்பவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் அல்ல. கணிசமான கட்டணம் செலுத்திப் பயணம் செய்யும் அளவுக்குப் பொருளாதார வசதியும், சிறந்த கல்வியும் பெற்றவர்கள் தான். அப்படிப்பட்டவர்கள் ஏன் ஒரு ₹60 ரூபாய் கைத்துண்டையும், ₹250 ரூபாய் படுக்கை விரிப்பையும் திருட வேண்டும்?
 
1. தவறான உரிமை மனநிலை (Entitlement Mentality): "நான் ஆயிரக்கணக்கில் டிக்கெட் காசு கொடுத்திருக்கிறேன், எனவே இந்தத் துண்டும் போர்வையும் எனக்குத் தான் சொந்தம்" என்ற தவறான புரிதல் பலரிடம் உள்ளது. டிக்கெட் கட்டணம் என்பது பயணத்திற்கும், அந்தப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு மட்டுமே தவிர, சொந்தமாக்கிக் கொள்ள அல்ல.
 
2. அரசு சொத்துதானே என்ற அலட்சியம்: "ரயில்வே என்பது ஒரு பெரிய அரசாங்க நிறுவனம், இதில் ஒரு துண்டை எடுத்தால் என்ன குறைஞ்சா போயிடும்?" என்ற அலட்சிய மனநிலை. ஆனால், அந்த இழப்பு அரசாங்கத்தின் தலையில் விழுவதில்லை; கடைக்கோடியில் நிற்கும் அந்த ஏழைத் தொழிலாளியின் தலையில் தான் விழுகிறது.
 
3. சமூகப் பொறுப்பின்மை: நாம் செய்யும் ஒரு சிறிய காரியம், மற்றொரு மனிதனின் வாழ்வாதாரத்தை எப்படிப் பாதிக்கும் என்ற குறைந்தபட்ச பச்சாதாபம் (Empathy) இல்லாதது.
இந்தப் பரிதாப நிலையை மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்?
 
இந்த நிலை மாற வேண்டும். ரயில்வே ஊழியர்களின் முகத்தில் புன்னகையை மீட்க, ஒரு விழிப்புணர்வுள்ள சமூகமாக நாம் பின்வரும் உறுதிமொழிகளை எடுக்க வேண்டும்:
 
* ரயில்வே சொத்து நம் சொத்து, ஆனால் அது வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சொத்து அல்ல: ரயிலில் வழங்கப்படும் எந்தவொரு துணிப்பொருளையும், பயண முடிவில் அங்கேயே இருக்கையில் அழகாக மடித்து வைத்துவிட்டு இறங்குவோம்.
 
* சுற்றத்தாரை எச்சரியுங்கள்: உங்கள் குடும்ப உறுப்பினர்களோ, நண்பர்களோ அல்லது சக பயணிகளோ தெரியாமல் இந்தப் பொருட்களைப் பையில் வைக்க முயன்றால், அவர்களுக்கு அமித் யாதவின் கதையைச் சொல்லி, அன்பாகத் தடுத்து நிறுத்துங்கள்.
 
* ஊழியர்களை மரியாதையுடன் நடத்துங்கள்: ரயிலில் நமக்கு சேவை செய்யும் தூய்மைப் பணியாளர்களையும், ஏசி பெட்டி ஊழியர்களையும் மனிதநேயத்துடன் நடத்துங்கள். அவர்கள் நம் அடிமைகள் அல்ல, நம் பயணத்தை சுகமாக்க உழைக்கும் சக மனிதர்கள்.
 
* குரல் கொடுங்கள்: இந்தச் சுரண்டல் முறைக்கு எதிராக ரயில்வே நிர்வாகமும், ஒப்பந்த நிறுவனங்களும் தங்கள் விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். காணாமல் போகும் பொருட்களுக்கு, சம்பந்தப்பட்ட பயணிகளைக் கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டுமே தவிர, ஏழை ஊழியர்களின் வயிற்றில் அடிக்கக் கூடாது.
இறுதிச் சிந்தனை: அடுத்த முறை நீங்கள் ரயிலில் ஏசி பெட்டியில் பயணம் செய்யும்போது, உங்களுக்கு வழங்கப்படும் அந்த வெள்ளை நிறப் படுக்கை விரிப்பைக் கையில் எடுக்கும்போது, அமித் யாதவ் போன்ற ஒரு உழைப்பாளியின் முகம் உங்கள் நினைவுக்கு வரட்டும்.
 
நம் பயணங்கள் இனிமையானதாக இருக்கட்டும்; அது மற்றவர்களின் வாழ்க்கையை இருளடைச் செய்வதாக இருக்கக் கூடாது.
இந்த உண்மையை அனைவரிடமும் கொண்டு சேர்ப்போம்! மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்!

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of one or more people, people smiling and temple🌷 🌷