யானையை அடக்கிய கோழி

மணக்கால் அய்யம்பேட்டை | 12:56 PM | Best Blogger Tips

 May be an image of monument and text that says "VLOGMACH LOG MACRL யானையை அடக்கிய கோழி கோழியூர்"

திருச்சிராப்பள்ளி உறையூரில் அமைந்துள்ள ** அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில்**, வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். சோழர்களின் தலைநகராக விளங்கிய உறையூரில் அமைந்துள்ள இக்கோவிலின் சிறப்புகள் இதோ:
தல வரலாறு
​கோழியூர்: ஒருமுறை சோழ மன்னன் யானை மீது உலா வந்தபோது, அந்த யானைக்கு திடீரென மதம் பிடித்தது. அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு கோழி, மதயானையின் தலையில் ஏறி அதன் மத்தகத்தைக் கொத்த, யானையின் மதம் அடங்கியது. அந்த கோழி ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது. அங்கே சுயம்புவாக சிவலிங்கம் இருப்பதைக் கண்ட மன்னன், அந்த இடத்தில் கோவிலை எழுப்பினான். கோழி யானையை அடக்கியதால், இத்தலம் "கோழியூர்" என்றும் அழைக்கப்படுகிறது.
 
​பஞ்சவர்ணேஸ்வரர்: உதங்க முனிவருக்கு இறைவன் ஒரு நாளில் ஐந்து காலங்களில், ஐந்து விதமான நிறங்களில் (இரத்தினம், ஸ்படிகம், சுவர்ணம், வைரம், சித்திரம்) காட்சி அளித்ததால், இறைவனுக்கு "பஞ்சவர்ணேஸ்வரர்" (ஐவண்ணப் பெருமான்) என்று பெயர் ஏற்பட்டது.
 
​பஞ்சபூதங்களின் சங்கமம்: சிதம்பரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், காளஹஸ்தி ஆகிய பஞ்சபூத தலங்களை தரிசித்த புண்ணியத்தை, இத்தல இறைவனை வழிபட்டாலே பெறலாம் என்பது ஐதீகம்.
 
​கோவிலின் சிறப்புகள்
 
​நாயன்மார்கள் தொடர்பு: 63 நாயன்மார்களில் ஒருவரான புகழ்சோழ நாயனார் பிறந்த தலம் இது. இவருக்கு இக்கோவிலில் தனி சன்னதி உள்ளது.
 
​கட்டிடக்கலை: இது சோழர்களால் கட்டப்பட்ட மிகத் தொன்மையான மாடக்கோவில் ஆகும். சோழர் காலத்துக் கல்வெட்டுகள் பல இக்கோவிலில் காணப்படுகின்றன.
 
​அம்பாள்: இறைவியின் திருநாமம் காந்திமதி அம்பாள். இவர் வடக்கு நோக்கிய தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
 
​நாக தோஷ நிவர்த்தி: கருடனும், கார்க்கோடகன் (பாம்பு) ஆகியோரும் வழிபட்டு சாப விமோசனம் பெற்ற தலம் என்பதால், இது நாக தோஷ நிவர்த்திக்குச் சிறந்த தலமாகத் திகழ்கிறது.
 
​தரிசன பலன்கள்
 
​வெற்றி நிச்சயம்: படைப்புக் கடவுளான பிரம்மாவே வழிபட்டுள்ளதால், எவ்வகைத் தொழிலிலும், முயற்சியிலும் ஈடுபடுபவர்கள் வெற்றி பெற இவரை வழிபட்டுப் பயன்பெறலாம்.
​பகைவர்களின் தொல்லை நீங்க: யானையை அடக்கிய கோழியின் வரலாறு போல, நம்மைப் பீடித்திருக்கும் எதிர்ப்புகள், துன்பங்கள் மற்றும் தடைகள் நீங்கி மன தைரியம் கிடைக்கும்.
 
​பாவ விமோசனம்: முந்தைய பிறவி பாவங்கள், சாபங்கள் மற்றும் தோஷங்களில் இருந்து விடுபட இங்குள்ள சிவ தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபடுவது சிறப்பு.
 
​சகல சௌபாக்கியங்கள்: இத்தல இறைவனை தரிசிப்பது, பஞ்சபூத தலங்களையும் ஒருசேர தரிசித்த புண்ணியத்தைத் தரும்.
 
திருச்சிராப்பள்ளி உறையூரில் அமைந்துள்ள ** அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில்**, 
வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். சோழர்களின் தலைநகராக விளங்கிய உறையூரில் அமைந்துள்ள இக்கோவிலின் சிறப்புகள் இதோ:
 
  • ஐவண்ணப் பெருமான்: உதங்க முனிவருக்கு இறைவன் ஒரு நாளில் ஐந்து காலங்களில், ஐந்து விதமான நிறங்களில் (இரத்தினம், ஸ்படிகம், சுவர்ணம், வைரம், சித்திரம்) காட்சி அளித்ததால் இப்பெயர் ஏற்பட்டது. [1, 2]
  • தல வரலாறு (கோழியூர்): மதயானை ஒன்றை ஒரு கோழி அடக்கிய வில்வ மரத்தடியில் இறைவன் சுயம்புவாக எழுந்தருளியதால், இத்தலம் 'கோழியூர்' என்றும் அழைக்கப்படுகிறது. [1]
  • பஞ்சபூத ஸ்தலம்: சிதம்பரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், காளஹஸ்தி ஆகிய பஞ்சபூத தலங்களை தரிசித்த புண்ணியத்தை, பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவிலை வழிபட்டாலே பெறலாம் என்பது ஐதீகம். [1]
  • புகழ்பெற்ற நாயன்மார்: சிவநெறி காத்த நாயன்மார்களில் ஒருவரான புகழ்சோழ நாயனார் பிறந்த தலம். இவருக்கு இவ்வாலயத்தில் தனி சன்னதி உள்ளது. 
  •  
     🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

    🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

    "செட்டி நாட்டு அரசர்" சர் ராஜா அண்ணாமலை செட்டியார்

    மணக்கால் அய்யம்பேட்டை | 4:00 PM | Best Blogger Tips

    No photo description available.

    பீரிட்டிசார் இல்லையென்றால் கிறிஸ்தவர் இல்லை என்றால் கல்வி இல்லை முன்னேற்றமில்லை இன்னும் பல விஷயமில்லை என சொல்லும் கும்பல் இங்கு திராவிட முகமூடிகளிலும், காங்கிரசிலும் இன்னும் கிறிஸ்தவ முகங்களிலும் உண்டு, இங்கு கிறிஸ்தவரின் கல்வி மதமாற்றத்தை நோக்கமாக கொண்டிருக்கின்றது என்பதை அறிந்த இந்து மடங்களும் ஆதீனங்களும் இந்து தொழிலதிபர்களும் மதமாற்றம் அல்லாத கல்வியினை இந்து பாரம்பரியம் காக்கும் கல்வியினை அன்றே தொடங்கினார்கள்.
     
    ஈரோட்டு ராம்சாமி இல்லாவிட்டால் பார்ப்பனன் நம்மை படிக்க விட்டிருக்கமாட்டான் என்பதெல்லாம் மாபெரும் பொய், உண்மையில் ஆதீனங்களும் இந்து தொழிலதிபர்களும் நடத்திய கல்வி நிலையங்களில் எல்லா மக்களும் பயின்றார்கள் எல்லாருக்கும் வாய்ப்பு கிட்டிற்று
    தன் இளமை காலத்தில் ராம்சாமி கல்லூரி பள்ளிகள் நடத்தியதாக தகவல் இல்லை, எல்லாம் பின்னாளில் பத்தோடு பதினொன்றாக வந்தது
     
    ஆனால் ராம்சாமி ஈரோட்டில் மஞ்சள் வியாபாரம் அரிசி வியாபாரம் பார்த்துகொண்டு தான் உண்டு தன் வியாபாரமும் உல்லாச வாழ்வும் உண்டு என ஊதாரியாக இருந்த காலத்திலே ஒரு தமிழக இந்து பெரும் கல்விபணியினை செய்திருந்தான்
    அவன் இந்து, பரிபூரண இந்து, சிதம்பரம் நடராஜரை குலதெய்வமாக கொண்ட இந்து
    அண்ணாமலை செட்டியார் என வரலாற்றில் நின்றுவிட்ட பெருமகன் அவர், கானாடு காத்தான் எனும் செட்டிநாட்டு கிராமத்தில் 1881ல் இதே நாளில் பிறந்தவர் அவர், சைவத்தில் தீவிரமான அக்குடும்பம் அண்ணாமலை எனும் பெயரை அவருக்கு இட்டது
     
    செட்டிநாட்டிலே இளமை கல்வியினை தன் குலத்துக்கேற்ற வியாபார கல்வியாக முடித்த அவர் செட்டியாரின் வைசிக தர்மபடி கிழக்காசியா தொடங்கி ஐரோப்பா வரை வியாபாரத்தில் நிறைய சம்பாதித்தார், கப்பல் கப்பலாக செல்வங்கள் அவருக்கு குவிந்தன, பெரும் வியாபாரி எனும் பெயரினை 30 வயதிலே பெற்றார், அந்த அளவு அவரின் வியாபாரத்தில் புத்தி கூர்மையும் இருந்தது
     
    உலகெங்கும் அவர் சென்று வந்ததால் பெரும் அனுபவம் அவருக்கு இருந்தது, அந்த அனுபவத்தை மக்கள் நலனில் செலுத்த வேண்டி, நவீன உலகோடு மக்களை இணைத்து முன்னேற்ற வேண்டி மக்கல் கேட்டுகொண்டார்கள், அப்போது உள்ளாட்சி முறை அறிமுகமாகியிருந்தது, 
     
    கணவான்களும் படித்தவர்களும் குற்ற பின்னணி இல்லாதவர்களுமே மக்கள் பிரதிநிதிகளாய் அமரமுடியும்
     
    அப்படி காரைகுடி நகராட்சி மன்ற தலைவராக அவர் மக்களால் தேர்ந்தெடுக்கபட்டார், 
     
    அதிலிருந்து துவங்குகின்றது அவரின் பொதுவாழ்வு
    அவரின் துல்லிய நிர்வாகமும் ஈடில்லா பக்தியுடன் கூடிய பொதுவாழ்வும் அவருக்கு பெரும் புகழை கொடுத்தன "செட்டி நாட்டு அரசர்" என்ற பட்டம் அவருக்கு தேடி வந்தது, ராவ் பகதூர், திவான் பகதூர் என பிரிட்டிஷாரும் பட்டம் அளித்தனர்.
    1916ஆம் ஆண்டு சென்னை ராஜதானியின் சட்டமன்ற உறுப்பினர்ர். 1921 ஆம் ஆண்டு டெல்ல்லியில் பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார் , அங்கே மும்முறை அந்த பதவியில் இருந்தார்
     
    அன்றைய காலத்தில் பெரும் அந்தஸ்தில் இருப்பவர்கள் இருந்த கட்சியான "லிபரல் கட்சி" அவரை சேர்த்து கொண்டது
     
    தன் குலதெய்வம் உறையும் சிதம்பரத்தில் ஒரு பள்ளி தொடங்கினார், அப்படியே மதுரையில் 1920ல் "ஸ்ரீ மீனாட்சி கல்லூரி"யினை மகளிருக்காக துவக்கினார், இன்று அது அரசு கல்லூரியாக பெண்களுக்கு கல்வி அளித்து கொண்டிருக்கின்றது
     
    1912ல் அவர் ஆரம்பித்ததுதான் "இந்தியன் வங்கி". இன்றும் எந்த சர்ச்சையிலும் இல்லாமல் அது மக்களுக்கு நல்ல பயனை கொடுத்து கொண்டிருக்கின்றது, அதனால் பலனடைந்தவர்கள் கோடான கோடி
    நகரத்து செட்டியார்கள் கோவில் திருப்பணிகள், சமஸ்கிருத வேதபாடசாலை என இந்து சேவை பணிகளுக்கு பெயர் போனவர்கள், அன்ணாமலை செட்டி இதையும் செய்து அதனோடே கல்வி பணி மருத்துவபணி என அடுத்த நிலைக்கு சென்றிருந்தார்
     
    அவர் தமிழின் தொன்மையான சுவடிகளை காக்கவும் இன்னும் ஆய்வுகளை செய்யவும் , தமிழ் சுவடிகளை புதுப்பிக்கவும் தமிழை காக்க தனி கல்லூரிஅவசியம் என்பதை உணர்ந்தார், தமிழ் அறிவுடமை சொத்துக்களை காக்க 1927ல் சிதம்பரத்தில் வடமொழிக் கல்லூரியும், தமிழ்க் கல்வியும் துவக்கினார்
     
    அப்படியே இசைகல்லூரியும் துவங்கிற்று, 1928ல் அவர் இதனை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரு பல்கலைகழகம் துவங்க தீர்மானித்தார், 1929ல் அதற்கான அனுமதி கிடைத்தது
     
    அதிலிருந்து அண்ணாமலை பல்கலைகழகம் சிதம்பரத்தில் உருவானது, இன்று எல்லா வகை கல்வியும் மருத்துவ கல்வி வரைக்கும் பெரும் பல்கலைகழகமாக அது நிலைபெற்று நிற்கின்றது
    இதன் பின்பே பிரிட்டிஷ் அரசு "ராஜா" பட்டத்தை அளித்தது, அவர் சர் ராஜா அண்ணாமலை செட்டியார் என்றானார்
     
    அவரின் இன்னொரு மகா முக்கிய சாதனை இசை உலகை உயிர்பெற செய்தது, சன்முகம் செட்டியாரோடு அவர் இணைந்து பெரும் மண்டபங்களை இசைகென கட்டிதந்தார், இசை கலைஞர்களை ஊக்குவித்தார்
     
    சுமார் ஆயிரம் தமிழிசை பாடல்கள் வெளிவர பெரிதும் பாடுபட்டவர் அண்ணாமலை செட்டியார், திறமையான கலைஞர்களை ஊக்குவித்து பாடவைத்து இசை அமைப்பாளர்களை ஊக்குவித்து அவர் செய்த புரட்சிதான் பின்னாளில் கச்சேரிகள், இசை மேடைகள் என வளர்ந்தன, மார்கழிமாத இசைமேடைகளெல்லாம் அவர் தொடங்கி வைத்த சாதனை
    ராஜா அண்ணாமலை மன்றம் அவரால் தொடங்கபட்டு இன்றளவும் இசைக்கோர் மண்டபமாக நிற்பது தொடரும் பெரும் வரலாறு
    அவரின் மகனான முத்தையா செட்டியார் 
     
    சென்னையிலும் இன்னும் தமிழகமெங்கும் இசைக்கான மண்டபங்களை தன் தாய் ராணி சீதை பெயரிலும் தன் பெயரிலும் துவக்கினார், இசைக்கென உருவான மண்டபங்கள் அவை
    கூர்ந்து பார்த்தால் பழைய பாண்டிய மன்னன் ஒருவனின் மறுபிறப்பு அவர், சரியான காலத்தில் வந்து ஒரு அரசன் செய்ய வேண்டிய கல்வி பணி, மருத்துவ பணி, தமிழ் பணி, இசை பணி என எல்லாமும் செய்துவைத்த பெருமகன் அவர்
    பணம் எல்லோரிடமும் இருக்கலாம் ஆனால் அதனை பொது நலத்துக்காய் செலவிடுவது
     
     எல்லோருக்கும் வராத் மனம், அது பூர்வ ஜென்ம வாசனையாலே வரும் குணம்
    தானும் வளர்ந்து இந்த மண்ணையும் மக்களையும் வளர்த்து எதிர்காலத்தில் பெரும் கல்வியும் வாய்ப்பும் வசதியும் மருத்துவமும் எல்லோருக்கும் கிடைக்க வழி செய்தவர் அவர், தமிழ் காக்க அதன் தொன்மை மகத்துவம் காக்க முத்தமிழையும் காக்க பாடுபட்ட மிக சிறந்த தமிழ்குடிதலைவன் அவர்தான்
     
    இசைதமிழ், இயல் தமிழ், நாடக தமிழ் என மூன்றையும் மரபு மாராமல் அவர் வளர்த்தார், அழியவிடாமல் காத்தும் கொண்டார் உ.வே.சா போல, ஆறுமுகநாவலர்போல ஏட்டில் இருந்த சுவடிகளை அச்சுக்கு கொண்டுவந்ததிலும் பெரும் பங்கு இவருக்கு உண்டு
     
    இன்று அவருக்கு பிறந்த நாள்
     
    தமிழகத்தில் சிதம்பரம் பல்கலைகழகம் முதல், மீனாட்சி கல்லூரி முதல் ஏகபட்ட கல்லூரிகள் வடிவிலும் , இசைதமிழ் ஒலிக்கும் அவரின் மண்டபங்களிலும் இன்னும் அவர் செய்த பெரும் திருப்பணிகளிலும் அவர் வாழ்ந்து கொண்டே இருப்பார்
     
    அவையெல்லாம் அவர் வாழும் ஆலயங்கள், ராஜாவாக உயர்ந்து தெய்வமாக மாறிவிட்ட அந்த மகாத்மா வாழும் தேவாலயங்கள் 
     
    நன்றி இணையம்
      

    வாஸ்கோடகாமா ⟨⟨≈⟩⟩ வேளாங்கண்ணி ( " வாராந்திர விரைவு வண்டி ")

    மணக்கால் அய்யம்பேட்டை | 3:48 PM | Best Blogger Tips

     May be an image of train, railway and text that says "ONLY DIRECT TRAIN FROM GOA TO VELANKANNI VIA: BENGALURU TPAИnИH ES orKoypAeHe VASCO DA GAMA TO VELANKANNI WEEKLY EXPRESS 香製長 លន に शयनयान दपरे SWR VIA MADGAON KULEM LONDA DHARWAD HUBBALLI BENGALURU SALEM ERODE KARUR TIRUCHIRAPPALLI THANJAVUR THIRUVARUR NAGAPATTINAM"

    🏖️ கோவாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு இயங்கும் ஒரே நேரடி ரயில் சேவை இது 💥 பெங்களூர் வழியாக செல்லும் ஒரே ரயில் 😍

    ➡️ 2011 ரயில்வே பட்ஜெட்டில் வாஸ்கோடகாமா முதல் வேளாங்கண்ணி வரை வாராந்திர ரயில் சேவை அறிவிக்கப்பட்டது !! 2012 முதல் இந்த வாராந்திர ரயில் கோவா மாநிலத்தின் வாஸ்கோடகாமாவில் இருந்து தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி வரை வாரத்தில் ஒரு நாள் பெங்களூர் வழியாக இயங்கி வருகிறது ✅

    🗺️ கோவா கர்நாடகா ஆகிய இரண்டு மாநில மக்களுக்கும் நேரடியாக வேளாங்கண்ணி செல்வதற்கு இருக்கும் ஒரே ரயில் இந்த ரயில் சேவை மட்டும்தான் // இதை தவிர்த்து மற்ற நாட்களில் பெங்களூரில் இருந்து கூட நேரடி ரயில் என்பது வேளாங்கண்ணிக்கு இல்லை !!

    ↪️ கோவா மாநிலத்திலிருந்து அதிக பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகின்றனர் // நேரடி ரயில் சேவை என்பது வாரத்தில் ஒரு நாள் மட்டுமே உள்ளது அதுவும் அரை நாள் மட்டுமே வேளாங்கண்ணியில் நின்று விட்டு மீண்டும் உடனடியாகவே புறப்பட்டு விடுகிறது !! இதனால் அங்கிருந்து வரும் பக்தர்களுக்கு முழு பயன் கிடைக்கவில்லை என்று குறை இப்போது வரை இருந்து வருகிறது ‼️

    📍 செவ்வாய்க்கிழமை மதியம் வந்துவிட்டு மீண்டும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவிலேயே புறப்பட்டு விடுகிறது // வெறும் அரை நாள் மட்டுமே இருக்க முடிவதாக அங்கிருந்து வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர் || இத்தனை வருடத்தில் கூடுதல் ரயில் சேவைகள் கோவா மாநிலத்திலிருந்து அறிமுகப்படுத்துவதோ அல்லது இப்போது ஓடக்கூடிய இந்த ரயிலின் சேவை நாட்களை அதிகரிப்பு செய்வதை பற்றியோ எந்த முடிவும் எடுக்கப்படவில்லை !!
     
    🏖️ தமிழ்நாட்டில் இருந்து பல ஊர்கள் இந்த ரயில் மூலம் நேரடியாக கோவா மாநிலத்துடன் இணைகிறது !! இதன் மூலம் சுற்றுலா செல்லும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு ரயிலாகவும் இந்த ரயில் இருக்கிறது ......
     
    🚂 வண்டி எண் : 17315 // 17316 ||•
    • வாஸ்கோடகாமா ⟨⟨≈⟩⟩ வேளாங்கண்ணி •
    " வாராந்திர விரைவு வண்டி "
     
    🛑 17315 || வாஸ்கோடகாமா வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில் திங்கட்கிழமை தோறும் காலை 08:40 மணிக்கு வாஸ்கோடகாமா ரயில் நிலையத்தில் புறப்பட்டு மறுநாள் செவ்வாய்க்கிழமை மதியம் 12:25 மணிக்கு வேளாங்கண்ணி வந்து சேர்கிறது ✅

    🛑 17316 || வேளாங்கண்ணி வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் ரயில் செவ்வாய்க்கிழமை தோறும் இரவு 11:55 மணிக்கு வேளாங்கண்ணி ரயில் நிலையத்தில் புறப்பட்டு 3வது நாள் வியாழன் அதிகாலை 02:40 மணிக்கு வாஸ்கோடகாமா ரயில் நிலையம் சென்று சேருகிறது ✅

    ⛔ நிறுத்தங்கள் :- மட்கான் சன்வெர்டாம்-சர்ச் குலேம் கோட்டை-ராக் லோண்டா தார்வாட் ஹுப்பாலி ஹாவேரி ராணிபென்னூர் தாவங்கேரே பிரூர் அர்சிகெரே திப்தூர் துமகுரு சிக்கா-பானவரா பானஸ்வாடி கிருஷ்ணராஜபுரம் பங்காருபேட்டை சேலம் ஈரோடு கரூர் திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் ......
     
    ⛪ ஆண்டுதோறும் ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் ஆண்டு திருவிழா நடைபெறும் பொழுது மட்டும் கூடுதல் ரயில்கள் கோவா மாநிலத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு வருகை புரிகிறது || அந்த காலத்தில் மட்டுமே கூடுதலாக ரயில்கள் இயக்கப்படுகிறது தவிர மற்ற நாட்களில் இந்த ஒரு ரயில் மட்டுமே நேரடியாக கோவாவில் இருந்து உள்ளது .....
     
    ➡️ பெங்களூரில் இருந்து அதிக மக்கள் ரயில் மூலமாக வேளாங்கண்ணிக்கு வருகை புரிய நினைக்கின்றனர் :- ஆனால் அவர்களுக்கு நேரடி ரயில் என்பதே கிடையாது , ஒரு நாள் வரும் இந்த வாஸ்கோ எக்ஸ்பிரஸ் மட்டும் தான் ஒரே ஆப்ஷனாக இருக்கிறது !! மற்ற நாட்களில் மைசூரில் இருந்து கடலூர் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயிலை பயன்படுத்தி தஞ்சாவூர் வந்து அங்கிருந்து பிற போக்குவரத்து அல்லது இணைப்பு ரயில சேவையான காரைக்கால் டெமு ரயிலை பிடித்து நாகப்பட்டினம் வந்து சென்று வருகின்றனர் !! இப்போது இருக்கும் ஒரே ஆப்ஷன் அருகாமையில் இருக்கும் தஞ்சாவூர் ரயில் நிலையம் மட்டுமே பெங்களூருக்கு ✅

    📍 பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணி அல்லது நாகப்பட்டினத்தை இணைக்கும் வகையில் தினசரி ரயில் இயக்க வேண்டும் என்பதே 2 மாநிலம் கோரிக்கையாகவும் இருந்து வருகிறது // ஒட்டுமொத்த டெல்டா பகுதியின் தேவையும் கடலூர் மைசூர் ரயிலிலேயே மட்டுமே பூர்த்தி அடைகிறது !! கூடுதலாக திருநள்ளாறு பெங்களூரு அல்லது வேளாங்கண்ணி பெங்களூர் இடையே தினசரி ரயில் சேவை தினமும் இயக்கப்பட்டால் அது அனைத்து பகுதி மக்களுக்கும் பயனுள்ள ஒன்றாக இருக்கும் // குறிப்பாக திருச்சி பகுதி மக்களுக்கும் கூடுதல் ரயில் சேவை பெங்களூரு செல்வதற்கு கிடைக்கப்பெறும் !!
     
    நன்றி இணையம்

    ‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற கம்பம் ராணுவ வீரருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

    மணக்கால் அய்யம்பேட்டை | 10:42 AM | Best Blogger Tips

     May be an image of one or more people

    ‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற கம்பம் ராணுவ வீரருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

    இந்திய ராணுவத்தின் உயரிய விருதான கீர்த்தி சக்ரா விருது பெற்ற கம்பம் ராணுவ வீரருக்கு கிராமத்தில் பட்டாசு வெடித்து தாரை, தப்பட்டை முழங்கி மாலை அணிவித்து, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (33). இவர் இந்திய ராணுவத்தில் லான்ஸ் நாயக் பதவியில் காஷ்மீர் ராஷ்ட்ரிய ரைபிள் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி தெற்கு காஷ்மீர் பகுதியான குல்காம் பகுதியில் தீவிரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது ஐந்து தீவிரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

    இதில் தீவிரவாதிகள் சுட்டதில் மீனாட்சி சுந்தரத்தின் வலது தோள்பட்டை மற்றும் வாய் பகுதியில் குண்டு ஊடுருவியது. பலத்த காயமடைந்த நிலையிலும் இவர் தீவிரவாதிகளுடன் தொடர்ந்து சண்டையிட்டு 5 தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்று, தனது குழுவைக் காப்பாற்றினார். இந்த வீர தீர செயலைபாராட்டி இவரை கவுரவிக்கும் வகையில் இந்திய இவருக்கு கீர்த்தி சக்ரா விருதினை அறிவித்தது.

    2026-ஆம் ஆண்டு இந்திய அரசு 7 வீரர்களுக்கு இந்த விருதை வழங்கியது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி சேர்ந்த மீனாட்சி சுந்தரமும் ஒருவர். கடந்த 8-ஆம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இந்த விருதை மீனாட்சி சுந்தரத்துக்கு வழங்கி கவுரவித்தார்.

    இந்நிலையில், விடுமுறையில் இவர் சொந்த கிராமமான காமகவுண்டன்பட்டிக்கு இன்று பிற்பகல் வந்தார். இதனைத் தொடர்ந்து இவருக்கு தாடை, தப்பட்டை முழங்க, பட்டாசு வெடித்து ஆரவாரத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. கிராம மக்கள், உறவினர்கள், நண்பர்கள், முன்னாள் ராணுவத்தினர், முக்கிய பிரமுகர்கள், மாணவர்கள் என பலரும் கைகொடுத்து இவரை பாராட்டினர்.

    தொடர்ந்து பொன்னாடை போர்த்தி கவுரவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். முன்னாள் ராணுவத்தினர் சிலர் கூறுகையில், “அதிவீரச் செயல்களுக்காக இந்திய ராணுவத்தால் வழங்கப்படும் இந்த விருது அசோக சக்ரா விருதுக்கு அடுத்த நிலையில் உள்ள ஓர் உயரிய விருது ஆகும். எங்கள் கிராமத்தைச் சேர்ந்த வீரர் இந்த விருது பெற்றது எங்களுக்கு பெருமையாக உள்ளது” என்றனர்.
     

    எந்த செல்வமும் இறுதியில் கூட வாராது… சிவம் என்ற செல்வத்தை தவிர !!!

    மணக்கால் அய்யம்பேட்டை | 10:41 AM | Best Blogger Tips

     May be an image of temple

    எந்த செல்வமும் இறுதியில் கூட வாராது… சிவம் என்ற செல்வத்தை தவிர !!!

    இந்த உடலில் உயிர் வந்ததும் மாயையே...
    அந்த உடலை விட்டு உயிர் போவதும் மாயையே.....
    உடலால் ஏற்பட்ட சொந்தங்களால் புடை சூழ வாழ்வதும் மாயையே...

    மனித உருக்கொண்டு பூமியில் ஜனித்த பொழுது வெறும் கையுடன் வந்தோம்... போகும் போது வெறும் கையுடன் தான் போவோம் என்பது வழக்கத்தில் உள்ள கூற்று…..
    ஆனால் ஆன்மா “நிரம்பி வழிய வழிய” பெரும் செல்வம் ஒன்றைக் கொண்டு தான் செல்கின்றார்கள் புண்ணிய ஆத்மாக்கள் . அது என்ன செல்வம் அது?

    ஆதியும் அந்தமும் இல்லா.. என்றும் நிலையான செல்வமாம் அந்த “பேரானந்த சிவம்” என்னும் பெருஞ்ச்செல்வத்தை நிச்சயம் கொண்டு தான் செல்கிறார்கள்.. அது “சிவத்திற்க்கும்” அந்த “புண்ணிய ஆத்மாவுக்கும்” மட்டுமே உள்ள பேரானந்தபந்தம்.. அது புறக்கண்களுக்கு புலப்படாதது...

    யாரெல்லாம் சிவ பெருங்கருணையை உணரப் பெற்றவர்களோ!!!
    யாரெல்லாம் வாழும் காலத்தில் சிவத்தையே உயிர் என நினைத்து வாழ்கின்றார்களோ!!
    யாரெல்லாம் ஒவ்வொரு செயலிலும் சிவத்தை உணர முற்ப்பட்டு சித்தமெல்லாம் சிவமென வாழ்கின்றார்களோ!! இவர்கள் யாவரும் நிச்சயம் இந்த பூவுலகப் பணியை முடித்து விட்டு வெறும் கையுடன் செல்வதில்லை என்பது சிவத்திண்ணம்…

    மனித உடல் கொடுக்கப்பட்டத்தின் நோக்கம் அந்த இறைவனை நினைத்து… உணர்ந்து … இறைவனோடு ஒன்றாக கலக்கவே என்று ஒவ்வொரு ஆன்மாவிற்க்கு இறைவன் தக்க தருணத்தில் உணர்த்துவார் …. அந்த உணர்த்தலை புரிந்து கொண்டு தண்ணீருக்குள் மலர்ந்து வாழ்ந்தாலும் தண்ணீரில் ஒட்டாத தன்மையுடையது தாமரை மலர்…. அதனைப் போலவே செல்வக்குவியல் பெற்று வாழ்வோருக்கும், தேவையான செல்வத்துடன் வாழ்வோருக்கும், நடுத்தரவர்கமாக வாழ்வோருக்கும், வறுமையில் வாழ்வோருக்கும் இலக்கு ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் … அது சிவமாக மட்டுமே இருத்தல் வேண்டும் ...
    தங்கள்ளுக்குள் சிவத்தை தேடிக் கொண்டிருக்கும் அத்துனை ஆத்மாக்களுக்கும் இது விளங்கும் ...

    மற்றபடி சிவத்தை நினைக்கவோ…..உணரவோ.. ஆதாரம் கேட்போரிடமும்.. மற்றும் சிவத்திடம் நிலையில்லா செல்வதை மட்டுமே வேண்டுவோருக்கும் சிவம் என்றும் “மறைபொருளாகவே” இருந்து விடுகின்றது.. பாசாங் இல்லாத பக்தியினால் மட்டுமே பரமனை உணரமுடியும்..

    சிவப் பெருக்கருணையை உணர்ந்து வாழ்வோம்… நிலையான சிவத்தை (சிவத்தாயை) மட்டும் வேண்டும் என்று கேட்போம்… சிவப் பெருவாழ்வு வாழ்வோம் என்றும் !!!

    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி!!!
    போற்றி ஓம் நமச்சிவாய!!!

    சிவனை விஞ்சிய தெய்வம் இல்லை : சைவத்தை மீறிய மார்க்கம் இல்லை !

    வாருங்கள்.... அறியப்படாத மிகப்பழமையான சிவனார் ஆலயங்களை வழிபாடுகள் செய்து பாதுகாத்து தொடர்ச்சியாக வழிபடுவோம்..

    ஊர் கூடி தேர் இழுத்தால் நகராத தேரும் நகரும்...

    அவனருளாலே
    எல்லாம் சிவன் செயல்
    சிவனருள் பெறுக...

    **ஈசன் அடி தேடி பின்பற்றி**
    ஆலவாயர் அருட்பணி மன்றம். மதுரை..
    **மாதம் ஒருமுறை பழமையான சிவனார் ஆலயத்தில் மூலிகை அபிடேகப்பணியில் **அடியேன்**
    தமிழும் சைவநெறியும்
    சைவசமயமும் தழைத்தோங்க
    சிவவழிபாடு
    பின்பற்றுவோம்.

     

    Thanks & copy from 

     

    நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களிடம்...................... ❤️ ❤️ ❤️

    மணக்கால் அய்யம்பேட்டை | 10:36 AM | Best Blogger Tips

     May be an image of text

    இரவு 2:13 — சில்வர் ஓக் ரெசிடென்சி
     
    பாதுகாப்பு காவலாளியான ராம்கிஷன், பிரதான நுழைவாயிலில் உள்ள பாதுகாப்பு அறையில் அமர்ந்திருந்தபோது அறியாமலே ஒரு கணம் தூங்கிவிட்டார்.
     
    அவர் பணியில் இருந்தபோது, தவறுதலாக கூட தூங்கியது இதுவே முதல் முறை.
     
    அதுவும் வெறும் மூன்று நிமிடங்கள் மட்டுமே.
    அதே நேரத்தில், குடியிருப்பு சங்கத் தலைவரின் மகன் காரில் அங்கு வந்தார்.
     
    ராம்கிஷன் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த அவர், ஏளனமாக சிரித்தபடி தனது மொபைல் போனை எடுத்து வீடியோ எடுக்கத் தொடங்கினார்.
    வீடியோ பதிவு செய்யும்போது அவர் கூறினார்:
     
    “இவரைப் பாருங்கள்… நமது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியவர், நம்மிடம் இருந்து சம்பளம் வாங்கிக்கொண்டு இங்கே தூங்கிக்கொண்டிருக்கிறார்!”
     
    உடனே அந்த வீடியோவை குடியிருப்பு வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்தார்.
     
    காலை ஆகும் முன்பே கருத்துக்கள் குவியத் தொடங்கின:
     
    ❌ “இவரை உடனடியாக வேலையில் இருந்து நீக்க வேண்டும்.”
     
    ❌ “இது மிகப்பெரிய அலட்சியம்.”
     
    ❌ “இப்படிப்பட்டவர்களுக்கு இந்த வேலைக்கு தகுதி இல்லை.”
     
    இவ்வாறு 150-க்கும் மேற்பட்ட கருத்துக்கள் அந்த வீடியோவின் கீழ் பதிவானது.
     
    ஆனால், அவர் ஏன் தூங்கிவிட்டார் என்று ஒருவர்கூட ராம்கிஷனிடம் கேட்கவில்லை.
     
    காலை 6:05
    ராம்கிஷன் குடியிருப்பு அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
     
    மேசையை கோபமாகத் தட்டியபடி தலைவர் கேட்டார்:
     
    “உனக்கு இந்த வேலை வேண்டுமா வேண்டாமா?”
    ராம்கிஷன் அமைதியாக தனது தொப்பியை கழற்றினார்.
     
    அவரது கண்கள் கடும் சோர்வால் சிவந்திருந்தன.
    பின்னர் மெதுவாக அவர் கூறினார்:
     
    “சார், நேற்று மதியம் 2 மணிக்கே நான் பேலைக்கு வந்துவிட்டேன்.”
     
    “மற்றொரு காவலாளிக்கு உடல்நிலை சரியில்லாததால், அவருடைய ஷிப்டையும் நான் பார்க்கும்படி ஏஜென்சி கேட்டது. அதற்காக கூடுதலாக ₹300 தருவதாகவும் சொன்னார்கள்.”
     
    “இரவு ஒரு மணியளவில், பின்புறச் சுவரைத் தாண்டி உள்ளே வர முயன்ற மூன்று இளைஞர்களை நான் விரட்டியடித்தேன்.”
     
    “பிறகு 1:45 மணிக்கு, ஒரு குடியிருப்பாளர் தனது நாய் புரூனோவுக்கு பால் சூடாக்கித் தரும்படி என்னிடம் கேட்டார்.”
     
    “2:10 மணிக்கு தான் ஒரு நிமிடம் அமர்ந்தேன்… அப்போதுதான் என் கண்கள் தானாக மூடிக்கொண்டன.”
     
    அவரது வார்த்தைகளைக் கேட்டதும் அறை முழுவதும் அமைதியாகிவிட்டது.
    “என் மாத சம்பளம் ₹12,000.”
     
    “அதில் ₹4,000 வீட்டு வாடகைக்கு செல்கிறது.”
    “₹2,000 என் கிராமத்தில் இருக்கும் பெற்றோருக்கு அனுப்புகிறேன்.”
     
    “மீதமுள்ள தொகையில் என் மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.”
     
    “என் மகன் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான்.”
    “நான் தினமும் அவனிடம் சொல்வேன் — ‘நன்றாகப் படி மகனே… இல்லையென்றால் ஒருநாள் வாழ்க்கை உன்னையும் மற்றொருவரின் வாசலில் தூக்கமின்றி நிற்க வைக்கும்’ என்று.”
    தடுமாறிய குரலில் இதைச் சொல்லிவிட்டு அவர் ஒரு கணம் நின்றார்.
     
    பிறகு தலைநிமிர்ந்து கூறினார்:
     
    “என் பலவீனத்தின் மூன்று நிமிடங்களை நீங்கள் பதிவு செய்தீர்கள்.”
     
    “ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த குடியிருப்பைப் பாதுகாக்க நான் தூக்கமின்றி கழித்த ஆயிரக்கணக்கான இரவுகளை யாரும் பதிவு செய்யவில்லை.”
     
    “மனிதர்கள் ஒருபோதும் சோர்வடையக்கூடாது என்று கடவுள் நினைத்திருந்தால்… நம்மை இயந்திரங்களாகவே படைத்திருப்பார்.”
    அவர் பேச்சை முடித்தார்.
     
    அறையில் இருந்த யாராலும் அவரது கண்களை நேராகப் பார்க்க முடியவில்லை.
     
    அன்றைய மாலை, குடியிருப்பின் அறிவிப்பு பலகையில் ஒரு புதிய அறிவிப்பு தோன்றியது:
     
    ✔️ ஒவ்வொரு ஷிப்டிற்கும் இரண்டு காவலாளிகள்
     
    ✔️ அதிகபட்சம் 8 மணி நேர பணி
     
    ✔️ சம்பளம் ₹18,000 ஆக உயர்வு
     
    ✔️ கூடுதல் நேரப் பணிக்கு தனி ஊதியம்
     
    ஒவ்வொரு வீட்டிற்கும் கூடுதல் செலவு: மாதம் ₹200
    அறிவிப்பின் கீழே ஒரு வரி:
     
    “பாதுகாப்புச் சேவையை நாம் வாடகைக்கு எடுக்கலாம்; ஆனால் ஒரு மனிதனின் வாழ்க்கையை வாங்க முடியாது.”
     
    இரவு 10:00
     
    நீண்ட நாட்களுக்குப் பிறகு, ராம்கிஷன் சீக்கிரமாக வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
     
    வாசலருகே வந்தபோது, தலைவரின் மகன் அவரை நிறுத்தினார்.
     
    ஹெல்மெட்டை கழற்றியபடி மெதுவாகக் கூறினார்:
     
    “அங்கிள்… நான் அந்த வீடியோவை நீக்கிவிட்டேன்.”
     
    “நாளை முதல் இரவு தேநீர் என்னுடைய செலவு.”
    ராம்கிஷன் புன்னகைத்தார்.
     
    இந்த சம்பவம் நமக்கு ஒரு பெரிய பாடத்தை கற்றுத்தருகிறது.
     
    முன்கூட்டியே தீர்ப்பு வழங்கி யாரையும் மதிப்பிடக்கூடாது. ஒவ்வொருவரின் பின்னாலும் நமக்குத் தெரியாத ஒரு பெரிய வாழ்க்கைக் கதை இருக்கும்.
     
    ம்மைச் சுற்றியுள்ள மனிதர்களிடம் கருணையுடனும், புரிதலுடனும், 
     
    மனிதநேயத்துடனும் நடந்து கொள்ள பழகுவோம்… ❤️
     

    Thanks & Copy from FB 

     

    வாழ்க்கையில்🌷

    மணக்கால் அய்யம்பேட்டை | 2:50 PM | Best Blogger Tips

     


    🌴🌴🌴

    வாழ்க்கையில்🌷 

    ✅ 1) பெற்றோர்களை நோகடிக்காதே... நாளை உன் பிள்ளையும் உனக்கு அதை தான் செய்யும்...!!

    ✅ 2) பணம் பணம் என்று அதன் பின்னால் செல்லாதே... வாழ்க்கை போய் விடும்...
    வாழ்க்கையையும் ரசித்துக் கொண்டே போ...!!

    ✅ 3) நேர்மையாக இருந்து என்ன சாதித்தோம் என்று நினைக்காதே... நேர்மையாக இருப்பதே ஒரு சாதனை தான்...!!

    ✅ 4) நேர்மையாக இருப்பவர்களுக்கு சோதனை வருவது தெரிந்ததே, அதற்காக நேர்மையை கை விட்டு விடாதே...அந்த நேர்மையே உன்னை காப்பாற்றும். ..!!

    ✅ 5) வாழ்வில் சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் கோபப்படாதே...சந்தோஷம் குறைவதற்கும், பிரிவினைக்கும் இதுவே முதல் காரணம்...!!

    ✅ 6) உன் அம்மாவிற்காக ஒரு போதும் மனைவியை
    விட்டு கொடுக்காதே... அவள் உனக்காக அப்பா அம்மாவையே விட்டு வந்தவள்...!!

    ✅ 7) உனக்கு உண்மையாக இருப்பவர்களிடம்... நீயும் உண்மையாய் இரு...!!

    ✅ 8)அடுத்தவர்களுக்கு தீங்கு செய்யும் போது இனிமையாகத்தான் இருக்கும்...அதுவே உனக்கு
    வரும் போது தான், அதன் வலியும் வேதனையும்
    புரியும்...!!

    ✅ 9) உன் மனைவி உண்மையாக இருக்க வேண்டும் என்று, நீ நினைப்பது போல்... நீயும் உண் மனைவிக்கு
    உண்மையாய் இரு, எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காதே, அதுவே உன் மனைவிக்கு கொடுக்கும்
    மிகப்பெரிய பரிசு...!!

    ✅ 10) ஒருவன் துரோகி என்று தெரிந்து விட்டால்... அவனை விட்டு விலகியே இரு...!!

    ✅ 11) எல்லோரிடமும் நட்பாய் இரு... நமக்கும் நாலு
    பேர் தேவை...!!

    ✅ 12) நீ கோவிலுக்கு சென்று தான் புண்ணியத்தை
    சேர்க்க வேண்டும் என்பதில்லை... யாருக்கும் தீங்கு
    செய்யாமல் இருந்தாலே...நீ கோவில் சென்றதற்கு
    சமம்...!!

    ✅ 13) நிறை குறை இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை... அதில் நிறையை மட்டும் நினை... நீ வாழ்க்கையை வென்று விடலாம்...!!

    ✅ 14) எவன் உனக்கு உதவி செய்கிறானோ, அவனுக்கு மட்டும் ஒரு நாளும் துரோகம் செய்யாதே... அந்த பாவத்தை நீ எங்கு போனாலும் கழுவ முடியாது...!!

    ✅ 15) அடுத்தவர்களைப் போல் வசதியாக வாழ முடியவில்லை என்று நினைக்காதே... நம்மை விட
    வசதியற்றவர்கள் கோடி பேர் இருக்கிறார்கள்
    என்பதை மனதில் கொள்...!!

    ✅ 16) பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில்,நீ செய்யும் பாவம் புண்ணியம் மட்டுமே உனக்கு மிஞ்சும்...உன்னுடன் கடைசி வரை வருவதும் இதுவே...!! 

     

    🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

    🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷