என் அனுமதி இன்றி எனது ஆன்மீகத்தில் நீங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:14 PM | Best Blogger Tips

 ஓஷோவின் ஆரம்ப வாழ்க்கை முதல் உயில் வரை - 6 தகவல்கள் - BBC News தமிழ்

 

நீங்க மதர் தெரேசாவை ஏன் எதிர்த்தீர்கள்?
என்ற கேள்விக்கு...

 ஓஷோவின் பதில்

அன்னை தெரேசாவின் கல்கத்தா ஆசிரமத்திற்கு அமெரிக்க தம்பதி ஒருவர் ஓர் குழந்தையை தத்தெடுக்க வந்தார்கள்.

ஆசிரம வரவேற்பாளரை அணுகி விசாரித்தனர் அதற்கு அவர் 700 குழந்தைகள் தற்போது இருப்பதாகவும், விரும்பிய குழந்தையை தத்தெடுக்கலாம் எனக்கூறிவிட்டு, அதற்கான விண்ணப்ப படிவத்தை நிரப்ப கூறினார். 

அவர்கள் நிரப்பிய படிவத்தை வாங்கிகொண்டு, இங்கேயே காத்திருங்கள் வருகிறேன் எனக்கூறிவிட்டு, உள்ளே சென்றார்.
Osho Quotes: ஓஷோவின் 15 வாழ்வியல் தத்துவங்கள்!
உள்ளே சென்றவர் திரும்ப வரவே இல்லை! சிறிது நேரம் கழித்து வெளியே வந்த மற்றொருவர் இவர்களிடம், மன்னிக்கவும் நீங்கள் தத்தெடுக்க தற்போது எந்த குழந்தைகளும் எங்களிடம் இல்லை என்றதும் அமெரிக்க தம்பதிகளுக்கு அதிர்ச்சி!

 இப்போது தான் சில நிமிடங்களுக்கு முன் 700 குழந்தைகள் இருப்பதாக சொன்னாங்க அதற்குள் என்ன நடந்தது? என்று வந்தவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர் எனக்கொன்றும் தெரியாது, உங்களிடம் சொல்ல சொன்னதை சொல்லி விட்டேன் எனக்கூறிவிட்டு கிளம்பிவிட்டார்.

தத்தெடுக்க வந்தவர்கள் நிரப்பிய படிவத்தில் பிராட்டஸ்டண்ட் கிறித்துவர் என குறிப்பிட்டிருந்தனர். ஒரு வேளை அவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக இருந்திருந்தால் அவர்களுக்கு அப்போது அங்கே 700 குழந்தைகள் இருந்திருக்கும் பிராட்டஸ்டண்ட் கிறித்துவர் என்பதால் அந்த 700 அனாதை குழந்தைகளும் திடீரென இல்லாமல் போய்விட்டனர்.
Some unknown facts about Osho
நான் இது பற்றி தெரேசாவை கடுமையாக விமர்சித்தது, டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் வெளியானது.

இது பற்றி தெரேசா எனக்கு பதில் கடிதம் அனுப்பினார். இங்கு உள்ள குழந்தைகள் எல்லாமே கத்தோலிக்க கிறித்து குழந்தைகளாக வளர்பவை அவை பிராட்டஸ்டண்ட் கிறித்துவர்களிடம் சென்றால், அவர்களது மனநிலை பாதிக்கப்படும் எனக் கூறி இருந்தார்.

 அதற்கு தெரேசாவுக்கு இவ்வாறு நான் பதில் எழுதினேன். கத்தோலிக்க குழந்தைகள், பிராட்டஸ்டண்ட் பெற்றோரிடம் வளர்ந்தால் அக்குழந்தைகளின் மனநிலை பாதிக்க படும் என சொல்ற நீங்கள் ஏன் இந்து, முகமதிய குழந்தைகளை கத்தோலிக்க மதத்திற்கு மாற்றி அவர்களின் மனநிலையை சிதைக்கின்றீர்கள் என்று!

மேலும் 21 வயதிற்கு மேல்தான் அவரவர் விருப்பபடி அவரவர் விரும்பும் மதங்களை பின்பற்றலாம். நீங்கள் பிற மத குழந்தைகளை (இஸ்லாமிய, இந்து) கத்தோலிக்க மதத்திற்கு மாற்றுவது மாபெரும் குற்றம். குழந்தைகளுக்கு எதிரான குற்றம், இது மன்னிக்க முடியாத குற்றம் என்று எழுதி இருந்தேன்.

இதைப் படித்த தெரேசா பயங்கர கோபமடைந்தார் பின்பு அவர் இது பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை நான் உங்களை மன்னிக்க சொல்லி கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் என எழுதியிருந்தார்.

இதற்கு பதிலாக நான் எனது கடைசி கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.
ஓஷோவின் மறுபக்கம் | ஓஷோ செய்திகள்
எனது அனுமதி இல்லாமல் எனக்காக கடவுளிடம் பிரார்த்திக்க நீங்கள் யார்? என் அனுமதி இன்றி எனது ஆன்மீகத்தில் நீங்கள் எவ்வாறு தலையிடலாம்? இது குறித்து நீதிமன்றத்தில் சந்திக்கிறேன் என பதில் எழுதி இருந்தேன்.
 ❤️ 

 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

 

 

ஒரே குரலில் சொல்லவைத்த சாதனையை

மணக்கால் அய்யம்பேட்டை | 12:54 PM | Best Blogger Tips

 No photo description available.

 கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் அமைதியின் பாதையில் பயணித்தல் 

ஒரு கார்ப்ரேட் சாமியார்….
 
ஜீன்ஸ் போடுகிறார்
 
பைக், கார், விமானம் ஓட்டுகிறார்
கோல்ஃப் விளையாடுகிறார்..
 
இந்திய பெருந்தலைவர்கள் முதல் உலக பெருந்தலைவர்களோடு உரையாடுகிறார்…
உலக பொருளாதார நிபுனர்களோடு டாவோஸ் மாநாட்டில் ஒரு ஆன்மீகவாதி…. inclusiveness என்ற சொல்லை பயனபடுத்தி உரையாற்றுகிறார்..
நெற்றியில் விபூதி பட்டை கிடையாது ( சக்தி நிலை மேல் நோக்கி நகர உதவியாக சுழுமுனையில் விபூதி கீற்று …
 
மடாதிபதி அல்ல…. சாதி சார்ந்த ஆதீனமும் அல்ல…
 
ஆனால் மடாதிபதி, ஆதீனங்கள் போல பல்லக்கு பவனி இல்லை….
 
ஆனால் அந்த மடாதிபதிகள், ஆதீனங்கள் போல அல்லாமல் மூன்று வித்தியாசமான பள்ளிகளை நடத்துகிறார
 ஈஷா சம்ஸ்கிருதி என்றால் என்ன? இதன் கல்விமுறை எத்தகையது?ISHA EDUCATION மூலம் ஈஷா வித்யாவின் கிராமப்புற கல்வித் திட்டத்திற்காக  வெறுங்காலுடன் ஓடுகிறது | ஃபியூலாட்ரீம் | க்ரவுட் ஃபண்டிங் இந்தியா
( ஈஷா ஹோம் ஸ்கூல், ஈஷா சம்ஸ்கிருதி,ஈஷா வித்யா)…
 Isha Samskriti
நடமாடும் இலவச மருத்துவமணைகள்…
இருக்கும் ஒரே கோவிலான லிங்கபைரவியில் பிறப்பு முதல் இறப்பு வரையிலான எல்லா சடங்குகளும்….
 இலவச மருந்து மாத்திரைகளால் உயிர்காக்கும் ஈஷா! | Isha Mobile Health Clinic ,  பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்குப்பின் மருந்து  மாத்திரைகள் வாங்குவதற்கு வசதியில்லாமல் கஷ்டப்பட்டு ...
உண்டியல் இல்லை
கட்டண தரிசனம் இல்லை..
 
தினமும் 3000 க்கு மேற்பட்ட யோக மையத்தில் குடும்பத்தோடு முழுமையாக பர்மனெனட்டாக தங்கியுள்ள சம்பளம் இல்லாத தன்னார்வலர்களுக்கு இருவேளை உணவு…
ஏக்கர்களில் பரந்து விரிந்து கிடக்கும் யோகா மையத்தின் பராமரிப்பு.. 
 
உலகெங்கும் ஒரு நாள் கூட தவறாமல் நடக்கும் யோக வகுப்புகள்.. அதற்கான செலவுகள்..
இடையிடையே மையத்தில் நடைபெறும் உயர்நிலை residential யோக வகுப்புகள்..
காவேரி கூக்குரல், மண் காப்போம், பசுமைப்பரட்சி என கோடிக்கனக்கான மரங்கள் நட்டு பராமரித்தல், வருடந்தோறும் பல்லாயிரம் கிராமத்தினருக்கான கிராமோத்சவம் என்ற விளையாட்டு போட்டிகள்..
 
எல்லாவற்றிக்கும் மேலாக.. வருடாவருடம் மஹாசிவராத்திரி என்ற ஒரு உலகளாவிய திருவிழா …
 ஈஷா மகாசிவராத்திரியில் தியானம், இசை, நடனம், கலாச்சார களியாட்டம் 2022 -  வர்ணம் மலேசியாஈஷாவில் பிப்ரவரி 15ஆம் தேதி மகா சிவராத்திரி விழா: பாதுகாப்பு துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். - Dinakaran - Dinakaran
சிவராத்திரி அன்று உலகம் முழுவதும் பல கோடி மக்கள் ஒரே சமயத்தில் “ ஓம் நமசிவாய “ என்ற மந்திரத்தை உச்சரிப்பது ….
 
வேறு எந்த மடத்திலும். ஆதீனத்திலும் , சமயத்திலும இத்தனை கோடி இளைய சமுதாயத்தினரை ஆன்மீக வழியில் ( யோக மார்க்கத்தில் ) ஈடுபட வைத்தது….
 Maha Shivaratri 2026 With Sadhguru: When And Where To Watch Isha Foundation  Celebrations Live | Events News - News18
எந்த சமயத்திலும் “ இந்து மதம் “ என்ற சொல்லை உபயோகிக்காமல்… ஆனால் “ இந்த கலாச்சாரத்தில்” என்று சொல்லி வந்தவர்…( நேற்று முதல் முறையாக சனாதன தர்மம் என்ற வார்த்தையை அதன் அர்த்தத்தை சொல்லி உள்ளார் )
 ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகல கொண்டாட்டம்! | India News  (இந்தியா செய்திகள்) - News18 தமிழ்
மொழி பேதமில்லை, சிகரட், போதை என்று எதுவும் இல்லாமல் ஒரு பிரம்மாண்ட இளைய சமுதாயம் நேற்று முழுக்க முழுக்க அந்த சனாதன தர்மத்தின் ஒரு சிறிய அனுபவத்தை உணர்ந்த தருணம் …
 
தமிழகத்தின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் ஆதீயோகி இரதங்கள் புறப்பட்டு வந்திருந்தன…
முழுமையாக யோக பயிற்சி, விரதம் 21 நாள், 48 நாள் என கடைபிடித்து ஷிவாங்கா சாதனா என்று ஆயிரக்கணக்கான இளையோர் வெள்ளியங்கிரி மலை ஏறினர்…
 
மகா சிவராத்திரி விழா.. - களைகட்டும் ஈஷா.. #MahaShivratri2026 #MahaShivRatri  #isha #News18TamilNadu #TamilNews
பல வட்சம் மக்கள் கூடிய அந்த ஏற்பாடுகளை… உணவு, தங்குமிடம், கழிப்பறை வசதிகள், கலைஞர்களுக்கு சன்மாணம், போக்குவரத்து செலவு…. என பல கோடி செலவை வசதிப்பட்டோ்ர்களிடம் நன்கொடையாக பெற்று நடத்தி…
 
ஒரே ஒரு இளைய சமுதாய ஆண் அல்லது பெண்ணை உங்களால் … ஏன் உங்கள் குடும்ப உறுப்பினரைக கூட … இந்த கலாச்சார வழியில் கொண்டு வர முடியுமா ?
 
ஆனால் முழ நீளத்திற்கு சமூக வலைத்தளத்தில்
அறிவுஜீவிகள் எதிர்மறையாக..,,moron, fraud, , காட்டை அழித்தார், கஞ்சா குடி என்று சல்லித்தனமாக எழுதுகிறார்கள் .. ( இதில் ஒரு வேடிக்கை இந்த எதிர்மறை எழுத்துக்கள் பற்றி அந்த யோகா மையத்தினர் பலர் தெரிந்து கொள்வதில்லை… தெரிந்த சிலரும் இதை சீந்துவதேயில்லை… அவர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை யில் மட்டுமே கவனமாக இருக்கிறார்கள் …
 Sadhguru Isha Mahashivratri|When and Where to Watch the Livestream of the  Celebrations
இந்த கார்ப்பரேட் சாமியார்.. குருடர்கள் பார்க்கிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள் என்று கூட்டம் சேர்க்கவில்லை…அற்புதங்கள் நிகழ்த்துவதுல்லை… காற்றிலிருந்து விபூதி, லிங்கம் எடுத்ததில்லை…
 மகா சிவராத்திரி நிகழ்ச்சி: ஈஷா யோக மையத்தில் ஆய்வு செய்து.. அறிக்கை  சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு | Maha Shivratri programme: Court orders  investigation and report at ...
“ சும்மா என்னோடு இருங்கள்” என்கிறார்.. உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்த கலாச்சாரத்தில் சொல்லிவந்த விஷயங்களை மறுபடியும் வேறு பரிமாணத்தில் சொல்லி அழைக்கிறார்… அவ்வளவே!
 
சிவராத்திரியன்று பட்டினி கிட,இரவு முழுதும் கோவிலில் இரு என்று சொல்லவில்லை
ஆனாலும் நடு இரவில் அத்தனை கோடி மக்களை சில நிமிடங்கள் “ ஓம் நமசிவாய “ என ஒரே குரலில் சொல்லவைத்த சாதனையை உலகில் யாருமே.. இதனை நிகழச்செய்யவில்லை...
*****
 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of one or more people, people smiling, horizon and road🌷 🌷🌷 🌷

 
 

மஹா சிவராத்திரி (Maha Shivaratri) 2026

மணக்கால் அய்யம்பேட்டை | 12:52 PM | Best Blogger Tips

 


மஹா சிவராத்திரி (Maha Shivaratri) உலக‌ம் எங்கும் உள்ள இந்து மக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். 
 
சைவ சித்தாந்தப்படி, அஷ்ட விரதங்களுள் பிரதானமான இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதி கூடும் இரவில் கொண்டாடப்படும். 
 Shivaratri 2026 | Isha Yoga 2026 | Coimbatore 🔱 Follow More: @covaiviews # coimbatore #covaiviews #shivaratri2026🔱🕉️ #ishayoga
மனிதன் அதர்ம செயல்கள் புரிவதற்கு மூல காரணமாக இருப்பவை மும்மலம் எனப்படும், ஆணவம், கன்மம் அல்லது கருமம், ம‌ற்று‌ம் மாயை அல்லது அறியாமையால் ஏற்படும் மடமை என்ற மூன்று காரணங்கள் ஆகும். ஆணவம் என்பது மனிதனுக்கு மட்டும் அல்ல. தேவர்களுக்கும் இருந்து உள்ளது. 
 
தங்களில் யார் பெரியவர் என்ற ஆணவத்துடன் போரிட்ட பிரம்மா மற்றும் விஷ்ணுவுக்கு, அடி முடி காண முடியாத அக்னி ஸ்தம்பமாக (நெருப்புப் பிழம்பு) சிவ பெருமான் காட்சி அளித்து பிரம்மா மற்றும் விஷ்ணுவின் அகந்தையை அடக்கிய நிகழ்வு, சிவ வழிபாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 
 Maha Shivratri 2026 With Sadhguru At Isha Yoga Centre Coimbatore: Dates,  Tickets And Full Details | Travel News - News18
பிரம்மா மற்றும் சிவன் இவர்கள் இருவரில், தங்களில் யார் பெரியவர் என்ற கேள்வி எழுந்த போது, சிவா பெருமான் ஒரு நெடிய தீப் பிழம்பாக உருவெடுத்தார். அதன் அடி மற்றும் முடியை முதலில் கண்டு பிடிப்பவர்கள்தா‌ன் பெரியவர் என்று சிவபெருமான் கூற, திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைத் தேட, பிரம்மா அன்னப் பறவையாகி முடியைத் தேடினர். இருவராலும் சிவனின் தொடக்கத்தையும், முடிவையும் காண இயலவில்லை.
 
இறுதியில், இருவரின் ஆணவத்தை அடக்க, அக்னிப் பிழம்பின் நடுவே சிவபெருமான் லிங்க வடிவில் காட்சியளித்தார். இந்த உருவே லிங்கோத்பவர் என்று சிவலிங்க வடிவில் வணங்கப்படுகிறது. அதனால், பஞ்ச பூதங் களில் ஒன்றான அக்னியின் வடிவே சிவலிங்கம். இறைவன் சிவன் பஞ்ச பூத நாயகன் என்றும் அறியப் படுவான். 
 🌙✨ மஹாசிவராத்திரி தரிசனம் நாமக்கல்லில் நேரலையில்! ✨🌙 வணக்கம் 🙏 ஈஷா யோக  மையம், நாமக்கல் அழைக்கிறது! இந்த ஆண்டு 15 பிப்ரவரி 2026 ...
இந்த அக்னி ஸ்தம்ப வழிபாடு, சிவராத்திரி அன்று இரவு முழுவதும் தூங்காமல், சிவனைப் போற்றி, அஞ்ஞான இருளை நீக்கி ஞான ஒளி பெற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இந்த புராண நிகழ்வு திரு அண்ணாமலையார் திருத்தலமான திருவண்ணாமலையில் நடந்ததாக ஐதீகம். ஈசன் அடி முடி காணாத ஜோதியாகத் தோன்றிய இந்த மஹா சிவராத்திரி இரவில், சிவனை வழிபடுவது ஆணவம், கர்ம வினைகள் மற்றும் அறியாமையை அகற்றும் என்று நம்பப்படுகிறது.
 🌙✨ மஹாசிவராத்திரி தரிசனம் நாமக்கல்லில் நேரலையில்! ✨🌙 வணக்கம் 🙏 ஈஷா யோக  மையம், நாமக்கல் அழைக்கிறது! இந்த ஆண்டு 15 பிப்ரவரி 2026 ...
வழிபாட்டு முறை.
 
சைவர்கள் முதல் நாள் காலை வீடு முதலாய் சகலத்தையும் சுத்தம் செய்து கொண்டு ஸ்நானம் செய்து ஸங்கல்ப்பம் செய்து விரதத்தை ஆரம்பிப்பார். அன்று மதியம் ஒரு பொழுதாக உணவருந்தி இரவு உணவை எளிய உணவுகளாக உட்கொள்வர். மறுநாள் சிவராத்திரி அன்று காலை முதல் உபவாசமாக இருந்து சிவ சிந்தனையில் ஆழ்ந்து திருமுறைகளை பாராயணம் செய்து சிவ வழிபாடுகளை மேற்கொள்வார். அன்று மாலை முதல் மறுநாள் காலை வரை சிவாலயங்களிலும் இல்லங்களிலும் நான்கு யாம வழிபாடுகள் நடைபெறும். அடியவர்கள் விரதமிருந்து கண் விழித்திருப்பர். சிலர் எளிய உணவுகளை அருந்தி கண்விழிப்பதும் வழக்கம். மறுநாள் காலை ஸ்நானம் செய்து சிவபூஜை செய்து பாரணை செய்து விரதத்தை பூர்த்தி செய்வர்.
 ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி விழா கொண்டாட தடை இல்லை- ஐகோர்ட் உத்தரவு, no  ban on celebrating Shivratri festival at Isha Yoga Center
சிவராத்திரியிற்கு மறுநாள் மாலை ஆறு மணியின் பின்னரே உறங்க வேண்டும் என்பது நியதி.உலகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அன்று ஒருநாள் இரவு சிவ பக்தர்கள் கண் விழித்திருந்து இறைவனை வழிபாடு செய்வார்கள். சிவாலயங்களிலும் தனியார் மற்றும் அரசு சார்பில் மைதானங்களிலும் கலை நிகழ்வுகள் நடைபெறும். இலங்கையின் கிழக்கே உள்ள திருக்கோணமலை மாவட்டத்திலுள்ள தென் கயிலை என்று போற்றப்படும் பாடல் பெற்ற திருத்தலமான திருக்கோணமாமலை ஆலயத்தில் இவ்விழா ஆறு நாட்கள் இரவு கொண்டாடப்படுகின்றது. சிவராத்திரி இரவிற்கு மறுநாள் இரவு தொடங்கி ஐந்து நாட்கள் இரவு முழுவதும் கோணேஸ்வரர் (கோணநாதர்) அன்னை மாதுமையாளுடன் திருக்கோணமலை நகரை வலம் (நகர்வலம்/ஊர்வலம்) வந்து அருள் புரிவார். எங்கும் சிவபெருமானின் பக்தி பாடல்கள் ஒலிக்கும். பட்டாசுகள் வானவேடிக்கைகள் நிகழ்த்தி இறைவனை வழிபடுவர். நடன, இசை நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே நடைபெறும்.
 ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா கோலாகலம்
தென் தமிழகத்தில் குறிப்பாக கன்னியாகுமரி மாவவட்டத்தில் சிவராத்திரி தினமன்று சிவனடியார்களால் சிவாலய ஓட்டம் நிகழ்த்தப்படும். அன்றைய தினம் அடியவர்கள் பன்னிரு சிவாலயங்களை கால்நடையாக ஓடி தரிசிக்கின்றனர். ஏறத்தாழ ஓரே நாளில் நூறு கிலோமீட்டரிற்கு மேலாக ஓடி இறைவனை வழிபடுகின்றனர். இது உலகில் வேறு எங்கும் இல்லாதா ஒரு வழிபாட்டு நிகழ்வாக கருதப் படுகிறது. 
 ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி கொண்டாட்டம் #Coimbatore |  #IshaFoundation | #LordShiva | #MahaShivaratri | #Sadhguru | #Devotees |  #PolimerNews
கோவை ஈஷா யோக மையத்தில் 2026 மகா சிவராத்திரி விழா, நவீன தொழில்நுட்பம், லேசர் ஷோ, மற்றும் பிரபல இசை நிகழ்ச்சிகளுடன், சத்குரு தலைமையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பக்தி பாடல்கள் மற்றும் நடன இசை நிகழ்ச்சிகளும் நடை பெற்றன. உலகம் எ‌ங்கு‌ம் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமானோர் நேரில் பங்கேற்ற இந்த விழாவில், ஆதியோகி முன்னிலையில் விடிய விடிய தியானம், யோகேஸ்வர லிங்க மகா அபிஷேகம் மற்றும் 23 மொழிகளில் நேரலை ஒளிபரப்புடன் நவீன முறையில் கொண்டாடப்பட்டது. 
 ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகல கொண்டாட்டம்! | India News  (இந்தியா செய்திகள்) - News18 தமிழ்
மெய் வருத்தி இறைவனை வழிடுத்தல் ஒரு வகை தவம் மற்றும் தியாகம் ஆகும். அது பக்தர்களின் உடல் மற்றும் மனக் கட்டுப்பாட்டை வலியுறுத்தி, தெய்வீக சக்தியை அடைய உதவுகிறது. நவீன உலகில் மன அழுத்தத்தை குறைக்க அது பெரிதும் உதவுகிறது.
 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of lake🌷 🌷🌷 🌷

 
 

எது? உலக அதிசயம்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:13 AM | Best Blogger Tips

 May be an image of temple and monument


நான் தாஜ் மஹாலை பார்க்க சென்று

இருந்தேன்.  

 

பார்த்து திரும்பி பஸ்ஸில் வரும்

பொழுது தாஜ் மஹாலை விட அழகான ஒரு

கட்டிடம் உலகில் வேறு எதுவுமே இல்லை

என்பதை போல் என்னுடன் பஸ்ஸில் பயணம்

செய்தவர்கள் பேசி கொண்டார்கள்

 No photo description available.

 தாஜ் மஹால்

மிக அழகான கட்டிடம் தான். அதை யாரும்

மறுக்க முடியாது. ஆனால்?

 

தாஜ் மஹால் மட்டும் தான் உலகில் அழகான

கட்டிடமா. அதை விட அழகான ஒரு கட்டிடம்

உலகில் வேறு எதுவும் இல்லையா. ஏன்?

இல்லை. நிறையவே இருக்கிறது. சரி உலக

அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின்

அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது

என்பது தான் உலக அதிசயம்.

 

நெல்லையப்பர் கோவிலில் கல் தூனை

தட்டினால் , ரி, , , , , நி என்கிற ஏழு

இசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7

ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக

அதிசயம்.

 அதிசயமனா இப்படி இருக்கணும்!!!!!!!!! - Sebosa Software Services


 திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத

பைரவர் கோவிலில். குழந்தை தாயின்

வயிற்றில் இருக்கும் பொழுது. குழந்தை

இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில்.

இவ்ளவு விதமான Positions இருக்கும்

என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே

கல்லில் சிற்ப்பங்களாக வடித்து

வைத்துள்ளார்கள் என் முன்னோர்கள். அது

உலக அதிசயம்.

 

அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட.

இந்த அதிசய சிற்ப்பங்களை அவர்களால் சிதைக்க

முடியவில்லை.

தமிழக கோவில் கட்டிட கலையின் சிறப்பம்சங்கள்

 உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு தொடங்கியது

இன்றும் நிறைய கோவில்களில் சூரிய ஒளி

குறிப்பிட்ட ஒரு தேதி, நேரத்தில் மாலை

போல் வந்து சிவலிங்கத்தின் மீது விழும். அப்ப

எவ்ளவு துல்லியமாக Measure செய்து

ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று

பாருங்கள். சில கோவில்களில் தினமுமே

சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை

போல் வந்து விழும்.  


 வியாசர்பாடி ரவீஸ்வரர் ஆலயம் / Vyasarpadi Raveeswarar temple at in Chennai /  வியாசர் வழிபட்ட தலம்

வட சென்னையில் உள்ள

வியாசர் பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3

வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது

மாலை போல் வந்து விழும். இந்த கோவிலில்

உள்ள சிவலிங்கம் எவ்ளவு ஆண்டுகள்

பழமையான லிங்கம் தெரியுமா? ஐயாயிரம்

ஆண்டுகள்.  

 மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் 90% நிறைவு - அறங்காவலர்  குழு அறிக்கைதஞ்சையின் அடையாளம்: பெரிய கோயிலின் கட்டிடக்கலை ரகசியங்கள்!

இது உலக அதிசயம். மதுரை

மீனாக்ஷி அம்மன் கோவில், தஞ்சை பெரிய

கோவில் சிற்ப்ப, கட்டிட வேலைபாடுகளில்

உள்ள அதிசயங்களை பற்றி சொல்வதென்றால்.

அதற்கு எனக்கு இந்த ஒரு பிறவி பத்தாது.

 

 

ஓசோன் 20 ம் நூற்றாண்டில் கண்டு

பிடிக்கப்பட்ட படலம். 700 ஆண்டுகளுக்கு

முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில்

ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம்,

அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும்

அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது.

 

அது உலக அதிசயம். யாழி என்கிற மிருகத்தின்

சிலை. பல பழங்கால கோவில்களில் இருக்கும்.

டைனோசர் போல். அதுவும் உலகில் வாழ்ந்து

அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள்.  

 

சில

பழம்கால கோவில்களில் உள்ள யாழி

சிலையின் வாயில் ஒரு உருண்டை

இருக்கும். அந்த உருண்டையை நாம்

உருட்டலாம். ஆனால் ஆயிரம் குன்பூ வீரர்கள்

ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழி

வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ

முடியாது. அது உலக அதிசயம்.

 

இன்று தாஜ் மஹாலை விட மிகப்பெரிய

மார்பிள் கட்டிடங்கள் உலகில் உருவாகி

விட்டது. இன்று ஒரு வல்லரசு நாடு

நினைத்தால். ஆயிரம் தாஜ் மஹாலை

உருவாக்க முடியும். ஆனால் கல்லுக்குள் 7

ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை. எந்த

வல்லரசாலும் செய்ய முடியாது.  

 

வாயில்

உள்ள உருண்டையை உருட்டலாம். ஆனால்

உருவ முடியாது. இந்த வித்தையை இன்று

எந்த வல்லரசாலும் செய்ய முடியாது.

மிகப்பெரிய பிரும்மாண்ட கற் கோவில்களை.

 கங்கைகொண்ட சோழபுரம் | Gangaikonda Cholapuram - Tamil Nativeplanet

அழகிய கலை வேலைபாடுகளோடு

உருவாக்குவது. இதை எந்த உலக

வல்லரசாலும் செய்ய முடியாதது.

அது போல் ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை

கொண்ட சோழபுரம் கோவில் ஒரு வரலாற்று

சிறப்பு மிக்கது. அக்கோவிலில் உள்ள

கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம்

இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு

தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால்

கிணற்றில் குளிக்கலாம். ஆனால்

மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது

தெரியாது.அன்றைய ராணிகளுக்காகவே

கட்டப்பட்ட கிணறு அது.

 தஞ்சை பெரிய கோவில் - தஞ்சை பெரிய கோயிலில் புதைந்திருக்கும் ரகசியம் ! உலகின்  பாரம்பரியச் சின்னமும் இந்தியாவின் பெருமையுமான தஞ்சைப் பெரிய ...

அது போல் அக்கோவிலில் உள்ள கருவறையில்

சுவர்களில் மரகதகற்கள் பதித்துள்ளனர். அதனால்

வெளியே வெயில் அடித்தால் உள்ளே

குளிரும். வெளியே மழை பெய்தால் உள்ளே

கதகதப்பாக இருக்கும்.

அது போல் கோவில் மேற்கூரையில் ஒரு ஆள்

பதுங்கும் உயரத்தில் பாதுகாப்பு பெட்டகம்

உள்ளது. போர் காலத்தில் ஆயுதங்களும்

படைவீரர்களும் பதுங்கும் வகையில்

கட்டியுள்ளார் நமது ராஜேந்திர சோழர்.

 

மறதமிழரின் கட்டிடகலையை வாழ்த்துவோம்.

தமிழர் பண்பாட்டை போற்றி பாதுகாப்போம்.

[படித்ததை பகிா்ந்தது ]

 தஞ்சை பெரிய கோவிலில் உயிர் பெற்ற சிற்பங்கள்..!; வலைத்தளங்களில் வைரலாகும் ஏஐ  வீடியோ

முன்னோா்களின் திறமையையும்&

கலைநயத்தையும் போற்றி தலை

வணங்குவோம்

ராஜ ராஜ சோழனின் அதிசய தொழில்நுட்பம் | தஞ்சை பெரிய கோவில் கட்டிடக்கலை  மர்மங்கள்| Thanjai Periya kovil 

இம்மண்ணில் பிறந்தமைக்கு பெருமிதம்

கொள்வோம்.

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of one or more people, horizon and fog🌷 🌷🌷 🌷