மோடி ஆட்சியில் இந்தியா முன்னேற்றம் அடைந்து உள்ளதா? பின்னோக்கி பயணிக்கிறதா?
ஒரு நாட்டின் உள்நாட்டு வளர்ச்சிக்கு மிக முக்கியமானது உள் நாட்டு வெளிநாட்டு தீவிரவாதத்தை அடக்கி ஆள்வது. அதனால் மோடி அரசு ராணுவத்துக்கும் உளவு அமைப்புகளுக்கும், சட்டத்துக்கு புறம்பான குடியேற்றத்துக்கு எதிரான நடைமுறைகளுக்கும், எல்லை பென்சிங் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
ராணுவ நடவடிக்கைகளில் AI தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்க பெங்களூரு BEL-இல் புதிய "செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையம்" (Centre of Excellence for AI) திறக்கப்பட்டுள்ளது. உளவு பார்த்தல், சைபர் பாதுகாப்பு மற்றும் தன்னிச்சையான போர் முடிவுகளுக்கு 75 க்கும் மேற்பட்ட AI அமைப்புகள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
DRDO அமைப்பு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஸ்க்ராம்ஜெட் (Scramjet combustor) தொழில்நுட்பத்தை ஜனவரி 2026-இல் 12 நிமிடங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக சோதனை செய்து, அதிவேக ஏவுகணை தொழில்நுட்பத்தில் வல்லரசு நாடுகளுக்கு இணையான சாதனையை செய்துள்ளது.
ஏவுகணை இடைமறிப்பான்கள் மற்றும் லேசர் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பை DRDO வெற்றிகரமாக சோதித்துள்ளது.
கடற்படையில் எதிரி கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட, AI மூலம் இயங்கும் 200 கி.மீ தூரம் வரை செல்லக்கூடிய நீண்ட தூர "காமிகாஸே" (Kamikaze) தற்கொலைப்படை நீர்மூழ்கி ட்ரோன்களை DRDO வடிவமைத்து வருகிறது.
ஒரே ஏவுகணையில் பல அணுஆயுதங்களை சுமந்து சென்று வெவ்வேறு இலக்குகளை தாக்கும் MIRV தொழில்நுட்பத்துடன் கூடிய 'அக்னி-V' ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
இந்தியாவின் 5ஆம் தலைமுறை ரகசிய (Stealth) போர் விமானமான AMCA-வின் முன்மாதிரி (Prototype) தயாரிப்புகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதில் AI-ஆல் இயங்கும் 'மின்னணு பைலட்' (Electronic Pilot) வசதியும் இடம்பெற உள்ளது.
இந்திய ராணுவ வீரர்களின் சொந்த யோசனைகள் மூலம் உருவாக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளில் அகினியாஸ்த்ரா (Agniastra), பாஸ் அட்டாக் ட்ரோன் (Baaz Attack Drone), வித்யுத் ரக்ஷக் போன்ற சாதனங்கள் தொழிற்சாலை உற்பத்திக்கு மாற்றப்பட்டுள்ளன.
இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் மோடி தலைமையிலான மத்திய அரசு மிக முக்கிய மைல்கற்களையும் சாதனைகளையும் எட்டியுள்ளது.

எல்லைப் பகுதிகளில் சாலை அமைக்கும் வேகம் ஆண்டுக்கு 600 கி.மீ என்பதில் இருந்து ஆண்டுக்கு 1,200 கி.மீ-க்கும் அதிகமாக இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. எல்லைப்புற சாலைகள் அமைப்பிற்கு (BRO) கடந்த நிதியாண்டுகளில் இல்லாத அளவாக, 2024-25 நிதியாண்டில் ₹16,690 கோடியும், அதனைத் தொடர்ந்து 2025-26 நிதியாண்டில் ₹17,900 கோடியும் அதிகபட்சமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் BRO அமைப்பு 8,500 கி.மீ-க்கும் அதிகமான சாலைகளையும் 400-க்கும் மேற்பட்ட நிரந்தரப் பாலங்களையும் கட்டியுள்ளது. தவாங் பகுதிக்கு தடங்கலற்ற போக்குவரத்தை வழங்க உதவும் சேலா சுரங்கப்பாதை (Sela Tunnel) மற்றும் லடாக்கிற்கு அனைத்து காலநிலைகளிலும் செல்லும் வசதியைத் தரும் 4.1 கி.மீ நீளமுள்ள ஷின்கு-லா சுரங்கப்பாதை (Shinku-La tunnel) போன்றவை மிக முக்கிய சாதனைகளாகும். லடாக்கில் உள்ள துர்புக்-சியோக்-தவ்லத் பெக் ஓல்டி (DBO) சாலையில் மிகக் கடினமான நிலப்பரப்பில் சியோக் சுரங்கப்பாதை (Shyok Tunnel) வெற்றிகரமாகக் கட்டப்பட்டுள்ளது.
எல்லைக் கிராமங்களை நாட்டின் "கடைசி கிராமங்கள்" என்று காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அழைத்து வந்தனர். அவற்றை அப்படி அழைக்காமல், "முதல் கிராமங்கள்" என அறிவித்து மோடி அரசு மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. VVP-I மற்றும் VVP-II ஆகிய திட்டங்கள் மூலம் மொத்தம் ₹11,639 கோடி நிதி ஒதுக்கீட்டில் சர்வதேச எல்லைகளில் உள்ள கிராமங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் கீழ், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் இதுவரை சாலை வசதி இல்லாத 135 கிராமங்களை இணைக்க ₹2,513 கோடி மதிப்பில் 112 சாலைகள் மற்றும் 35 பாலங்கள் அனுமதிக்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டபடி, “...இந்த இணைப்புகள் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகியவற்றின் உயிர்நாடிகளாகும்.” என எல்லைப் பகுதி சாலைகள் ராணுவப் படைகளின் விரைவான நடமாட்டத்திற்குப் பெரிதும் உதவுகின்றன. எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் இடம்பெயர்வு (migration) தடுக்கப்பட்டு, அங்கு சுற்றுலா மற்றும் உள்ளூர் வாழ்வாதார வாய்ப்புகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன.

ஒரு நாட்டின் உற்பத்தி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு போக்குவரத்து வசதி மிக முக்கிய பங்களிக்கிறது. இந்திய ரயில்வேயின் அகலப்பாதை (Broad Gauge) நெட்வொர்க்கில் 99.4%-க்கும் அதிகமான பகுதிகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இது கார்பன் உமிழ்வைக் குறைத்து பசுமை எரிசக்தி இலக்கை அடைய உதவுகிறது.
2025-26 நிதியண்டில் சரக்கு போக்குவரத்தில் புதிய சாதனை படைத்து, 1,670 மில்லியன் டன் (MT) அளவுக்குச் சரக்குகளை ஏற்றிச் சென்றுள்ளது.w பயணிகள் போக்குவரத்தை பொறுத்த மட்டில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக வந்தே பாரத் மற்றும் அமிர்த பாரத் சேவைகள் நாடு முழுவதும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வெற்றிகரமாகக் கொண்டுவரப்பட்டுள்ளன.
தினசரி சராசரியாக 14 கி.மீ அளவுக்குப் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு, நவீன எல்.எச்.பி (LHB) பெட்டிகள் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. இந்திய ரயில்வே 2025-26 ஆம் ஆண்டில் சரக்கு போக்குவரத்தில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டில் ரயில்வே 1 ஆயிரத்து 670 மில்லியன் டன்கள் (MT) சரக்குகளை எடுத்துச் சென்று, முந்தைய ஆண்டை விட 3.25% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் நேரு ஏற்படுத்திய art 370 காரணமாக தனி கொடியுடன் தனி நாடு போல் செயல்பட்டு வந்தது. மோடி அரசால் art 370 ரத்து செய்யப்பட்ட பின்னர் காஷ்மீர் முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீரின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ரயில் மற்றும் தரைவழிப் போக்குவரத்துத் துறைகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. பல தசாப்தங்களாகத் துண்டிக்கப்பட்டிருந்த காஷ்மீர் பள்ளத்தாக்கை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைப்பதில் இந்த அரசு மிகப்பெரிய மைல்கற்களை எட்டியுள்ளது.

உதம்பூர் - ஸ்ரீநகர் - பாரமுல்லா ரயில் இணைப்பு (USBRL) திட்டம் முழுமையாக முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம், வரலாற்றிலேயே முதன்முறையாக காஷ்மீர் பள்ளத்தாக்கு இந்திய நிலப்பரப்பின் பிற பகுதிகளுடன் ரயில்கள் மூலம் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.
செனாப் ஆற்றின் குறுக்கே 359 மீட்டர் (1,177 அடி) உயரத்தில், உலகின் மிக உயரமான ரயில்வே வளைவுப் பாலம் (Chenab Rail Bridge) கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இது பாரிஸின் ஈஃபெல் கோபுரத்தை விட உயரமானது மற்றும் பொறியியல் துறையின் மாபெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் முதலாவது கேபிள் அமைப்பிலான ரயில் பாலம் (Anji Bridge) காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டு, நாட்டின் ஒற்றுமைக்கு வலு சேர்த்துள்ளது. கத்ரா முதல் ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (Vande Bharat Express) ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஜம்மு - ஸ்ரீநகர் இடையேயான பயண நேரம் பாதியாகக் குறைந்துள்ளது.
/rising-kashmir/media/media_files/2026/08/19/kashmirs-apple-2026-08-19-00-07-33.jpeg)
பள்ளத்தாக்குக்கு முதன்முறையாகச் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு, சிமெண்ட், நிலக்கரி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அதேபோல், காஷ்மீரின் முக்கிய வாழ்வாதாரமான ஆப்பிள் பழங்கள் டன் கணக்கில் ரயில்கள் மூலம் இந்தியாவின் பிற சந்தைகளுக்கு விரைவாகவும் குறைந்த செலவிலும் கொண்டு சேர்க்கப்படுகின்றன. இதன் மூலம் காஷ்மீர் மாநிலத்தில் பொருளாதார புரட்சி ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் அகல ரயில்பாதை (Broad Gauge) நெட்வொர்க் 100% மின்மயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில்வே நிர்வாகத்தை மேம்படுத்த புதிய 'ஜம்மு ரயில்வே கோட்டம்' (Jammu Railway Division) உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஜம்மு-காஷ்மீரில் 1,436 கிலோமீட்டருக்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. குளிர்காலத்தில் பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் காஷ்மீர் துண்டிக்கப்படுவதைத் தடுக்கப் பல பிரம்மாண்ட சுரங்கப்பாதை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஜோஜிலா (Zojila Tunnel), ஜெட்-மோர் (Z-Morh) மற்றும் சோனமார்க் சுரங்கப்பாதைகள் மிக வேகமாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (PMGSY) திட்டத்தின் கீழ் மலைப்பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்குப் புதிய தார்ச் சாலைகள் அமைக்கப்பட்டு, மக்களின் அன்றாடப் போக்குவரத்து எளிதாக்கப்பட்டுள்ளது.

இன்னும் நாட்டின் பிற பகுதிகளில் ஏற்பட்டு உள்ள உள் கட்டமைப்பு மற்றும் முன்னேற்ற திட்டங்கள் குறித்து சொல்வதற்கு ஏராளம் உள்ளது. பதிவு நீண்டுவிடும் என்பதற்காக தவிர்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் உரைகளில், நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை விமர்சிப்பவர்களைக் குறிப்பிட்டுப் பேசும்போது, நாட்டில் ஏதேனும் ஒரு புதிய பெரிய திட்டமோ அல்லது நவீன உள்கட்டமைப்பு வசதிகளோ கொண்டுவரப்படும்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு தரப்பினர் எப்போதுமே "இப்போது இதற்கு என்ன தேவை ஏற்பட்டுவிட்டது?" (What's the need?) என்று கேள்வி எழுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்றும் "எப்போதுமே 'இதற்கு என்ன தேவை?' என்று கேட்கும் ஒரு கூட்டம் இருக்கவே செய்யும் என்றும் இந்த கேள்விக்கு இந்தியாவின் பதில் என்னவென்றால்... இது நாட்டிற்குத் தேவை என்று கருதினால், நிச்சயம் அதை நாங்கள் உருவாக்குவோம்" என்றும் பிரதமர் மோடி திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
வளர்ச்சியடைந்த இந்தியா (Viksit Bharat) என்ற இலக்கை நோக்கிய பயணத்தில், நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான அதிநவீனத் திட்டங்களை இந்த அரசு எவ்விதத் தயக்கமுமின்றி உறுதியாகச் செயல்படுத்தும் என்பதை வெளிப்படுத்தவே பிரதமர் மோடி இந்த உரையாடலை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் மட்டும் அல்லாது இந்தியா முழுவதும் மோடி எதிர்ப்பு பேசு பவர் களை 5 வகையாக பிரிக்கலாம்.
முதல் ரகம், மதவெறி பிடித்து, மோடி சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர் என்று கண்மூடித்தனமாக மோடியை எதிர்ப்பவர்கள் மற்றும் ஆதாரம் அற்ற அவதூறு பரப்புபவர்கள்.
இரண்டாவது, அந்த மதவெறிபிடித்து எதிர்ப்பவனை, குளிரவைத்து, தன் பக்கம் இழுத்து அவன் வோட்டை அறுவடை செய்பவன்.
உதாரணத்துக்கு சிறுபான்மை அரசியல் செய்யும் …. உள்ளிட்ட அரசியல் கட்சிகள்.
மூன்றாவது அந்த ஓட்டு அறுவடை செய்பவனிடம், கூட்டணி வைத்துக் கொண்டு, தேர்தல் செலவுக்கு என்று கொடிகளில் பணம் வாங்கித் தின்பவன்.
நான்காவது அந்த வாங்கித்திபவனெல்லாம் தன்னையும் மதவெறியன் என்று சொல்லி விடுவார்கள் என்று பயந்து “நான் நடுநிலை வாதி” என தன்னை மிகவும் நல்லவன் போல் காட்டிக்கொள்ள நினைப்பவன்.
ஐந்தாவது இது எதுவுமே தெரியாமல், அறியாமை எனும் மடமையில் ஊறிப் போன கூட்டம்.
சினிமாவில் வருவதையும், மற்றவர்கள் பேசுவதையும் கேட்டு தனக்கு தானே ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்ளும் கூட்டம். இதில் இந்த ஐந்தாவது வகையை சேர்ந்தவனை தவிர்த்து வேறு யாரையுமே பேசி அல்லது இது போன்ற பதிவுகள் மூலம் திருத்த முடியாது. காரணம் அவர்கள் தாங்கள் செய்வது என்ன என்று தெரிந்தே செய்கிறார்கள்.
🙏🌹நன்றி இணையம் 🌹🙏
🌷 🌷🌷 🌷
🌷 🌷🌷 🌷









