கார்த்திகை ஞாயிற்றுக்கிழமையில் இத்தல தீர்த்தத்தில்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:34 AM | Best Blogger Tips

 Srivanchiyam Gupta Gangai

 கார்த்திகை ஞாயிற்றுக்கிழமையில் இத்தல தீர்த்தத்தில் நீராடினால் கைமேல் பலன் நிச்சயம்!
ஸ்ரீவாஞ்சியம் (கார்த்திகை ஞாயிறுகளில் அதிகாலை தீர்த்தவாரியும் உற்சவமும்! |  srivanchiyam-karthikai-nayirukalil-athikalai-thirthavariyum-ursavamum
சிவபெருமான் சுயம்புவாகத் தோன்றிய திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஓரிடத்தில் சிறப்புப் பெற்றால் அந்த ஆலயம் எல்லா பெருமைகளும் பெற்று சிறந்து விளங்கும். அந்த வகையில், கங்கைக்கரையில் உள்ள காசியை விட சிறந்தது ஸ்ரீவாஞ்சியம். இந்தத் தலம் உலகில் தோன்றிய சுயம்பு லிங்கங்கள் அறுபத்தி நான்கில் முதன்மையானது. உலகில் உள்ள அனைத்து சிவலிங்கங்களும் இங்கு வந்து வழிபடும் பேறு பெற்ற சிவத்தலம். சிவனாலேயே, ‘எனக்கு மிகவும் பிரியமான இடம்’ என்று பார்வதி தேவியிடம் கூறப்பட்ட தலம்.


காசிக்கு சமமான ஐந்து சிவத்தலங்களில் திருவிடைமருதூர், திருவெண்காடு, மயிலாடுதுறை, சாயாவனம், ஸ்ரீவாஞ்சியம் ஆகியவற்றில் இத்தலம் முதலிடம் பெற்று காசியை விட ஆயிரம் மடங்கு உயர்வு பெற்றது.

 ஸ்ரீவாஞ்சிய லிங்கம் மிகவும் பழைமையானது. யாகங்களில் அசுவமேத யாகமும், மலைகளில் இமயமும், விரதத்தில் சோமவாரமும், மந்திரங்களில் ஆறெழுத்தும், தானங்களில் அன்னதானமும், தர்மங்களில் சிவதர்மமும், தேவருக்குள் மகாதேவரும், மரங்களில் கற்பகமும், ஆவிற்குள் காமதேனுவும், தீர்த்தங்களில் குப்த கங்கையும், ரத்தினங்களில் இந்திரமணியும் எவ்வளவு உயர்ந்த சிறப்பானதோ, அதுபோல லிங்கங்களில் ஸ்ரீ வாஞ்சிய லிங்கமும் சிறப்பெனக் கருதப்படுகிறது.

இத்தல விருட்சமாக சந்தன மரம் விளங்குவதால் ‘கந்தாரண்யம்’ என்ற பெயரைக் கொண்டுள்ளது. ஸ்ரீ கந்தாரண்யத்துக்கு ஈடாக தபோவனமும் குப்த கங்கை போன்ற தீர்த்தமும் ஸ்ரீவாஞ்சிய லிங்கத்திற்கு ஈடான லிங்கமும் இவ்வுலகில் இல்லை என புராணம் சொல்கிறது. இந்த சுயம்பு லிங்கத்தை எவர் ஒருவர் பக்தியுடன் தரிசிக்கிறாரோ அவர் கைலாயநாதரை நேரில் தரிசித்த சிறப்புப் பெறுவர்.
ஸ்ரீவாஞ்சியம் (கார்த்திகை ஞாயிறுகளில் அதிகாலை தீர்த்தவாரியும் உற்சவமும்! |  srivanchiyam-karthikai-nayirukalil-athikalai-thirthavariyum-ursavamum
மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்கள் பாவங்களைத் தீர்ப்பதால் தன்னிடம் சேரும் பாவங்களைப் போக்கிக்கொள்ள கங்கை இறைவனை வேண்டினாள். இறைவனும், ‘இந்த ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் வழிபட்டு பிரார்த்தனை செய்யும்படி கூறினார். கங்கையும் தனது கலைகளில் ஒன்றைத் தவிர மற்ற தொள்ளாயிரத்து தொண்ணூற்றி ஒன்பது கலைகளுடன் ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள தீர்த்தத்தில் ஐக்கியமாகி தனது பாவங்களைப் போக்கிக் கொண்டாள். இத்தலத்து தீர்த்தமும் இதனால், ‘குப்த கங்கை’ எனப் பெயர் பெற்றது.
ஸ்ரீவாஞ்சியம்: கார்த்திகை கடைசி ஞாயிறு தீர்த்தவாரி.. பாவம் நீக்கும் 'குப்த  கங்கை'!
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை நேரத்தில் ஈசனும் பார்வதி தேவியும் பிராகார வலம் வந்து குப்த கங்கை தீர்த்த கிழக்குக் கரையில் பக்தர்களுக்கு ஆசி வழங்கி அருள்புரிகின்றனர். குப்த கங்கையில் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை சூரிய உதயத்தில் எவர் நீராடுகிறார்களோ அவர்கள் உயர்ந்த கதி அடைகின்றனர். விசேஷமாக, கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் முனி தீர்த்தத்தில் நீராடுபவர் எவ்வித பாதகங்கள் செய்திருந்தாலும் பரிசுத்தமாகிறார். ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடுவாரயின், ஒரு நொடி நேரத்திற்குள் தூய்மை அடைவர் என்பது புராண வரலாறு.
மரகதம்: ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதர் திருக்கோயில்
ஸ்ரீவாஞ்சியம் திருத்தலத்தில் எமதர்மனுக்கு தனிச் சன்னிதி இருப்பது சிறப்பு அம்சம். அக்னி மூலையில் எமனுக்கும் சித்திரகுப்தனுக்கும் தெற்கு நோக்கி தனிச் சன்னிதி உள்ளது. மூலவர் வாஞ்சிநாதர் என்னும் திருநாமத்துடன் சற்று உயர்ந்த பாணத்துடன் பெரிய அளவிலான லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் மங்களநாயகி என்னும் திருநாமத்தோடு தரிசனம் தருகிறாள்.

ஸ்ரீவாஞ்சியம் திருத்தலம் சுமார் ஐந்நூற்று எட்டு அடி நீளமும் முன்னூற்று இருபதுஅடி அகலமும் உடையது மூன்று கோபுரங்களுடன் மூன்று பிராகாரங்கள் உள்ளன. ஸ்ரீவாஞ்சியம் திருத்தலத்தில் சிவபெருமான் எமனுக்கு வரம் அளித்ததால் இங்கு எமதர்மராஜனுக்கு முதல் வழிபாடு நடைபெறுகிறது. குப்த கங்கை தீர்த்தத்தில் நீராடி முதலில் எமனை வழிபட்ட பிறகு கோயிலில் மற்ற வழிபாடுகளை செய்ய வேண்டும் என்பது மரபாகும்.
ஸ்ரீவாஞ்சியம் (கார்த்திகை ஞாயிறுகளில் அதிகாலை தீர்த்தவாரியும் உற்சவமும்! |  srivanchiyam-karthikai-nayirukalil-athikalai-thirthavariyum-ursavamum

K.Karthik Raja's Devotional Collections: கங்கையின் பாவத்தை போக்கிய “குப்த  கங்கை”
ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் எவர் ஒருவர் ஒரு நிமிடமாவது அமர்கிறாரோ அல்லது ஸ்ரீவாஞ்சியம் செல்ல வேண்டும் என மனதார நினைத்தால் கூட போதும், அவரது ஊழ்வினை நீங்கி நற்கதி பெறுவர் என்பது முனிவர்களின் வாக்கு. கும்பகோணத்திலிருந்து நன்னிலம் வழித்தடத்தில் அச்சுதல மங்கலத்தில் இருந்து தெற்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஸ்ரீவாஞ்சியம்.
No photo description available.

No photo description available.

No photo description available.

No photo description available.

No photo description available.
🍁🍁🍁 

No photo description available. 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 No photo description available.  🌷 🌷🌷 🌷

 


காசிதான் பாரதியின் கண்களை

மணக்கால் அய்யம்பேட்டை | 10:22 AM | Best Blogger Tips

 

எட்டையபுரம் ஒரு முட்டை
காசி ஒரு கூடு..
 
காசிதான் பாரதியின் கண்களைத் திறந்தது. அந்த அக்கினிக் குஞ்சுக்கு ஆகாயத்தை அவாவும் சிறகுகளைத் தந்தது. 
 
எட்டையபுரத்துச் சங்கரன் கோயில் மண்டபத்தில், பொட்டுவைக்க வந்து திலகமிட்டனள் காளி. அந்தத் திலகத்தின் பின்னிருக்கும் ஞானக் கண்ணைத் திறந்து பார்க்க வைத்தனள் கங்கை.
 
ஒரு பதினாறு வயதுப் பையனாக வந்து சில ஆண்டுகள் காசியில் பாரதி வாழ்ந்த வீடு என்னைப் போன்றோர்க்கு ஓர் ஆலயத்திற்குச் செல்வது போல. அவன் சுவாசமே எங்களுக்குச் சந்நிதி.
 
படங்கள்:No photo description available.
 
1. ருக்மிணி அம்மாள் என்கின்ற குப்பம்மாள் – பாரதியின் அத்தை (தந்தையின் அக்கா) தந்தை திரு. சின்னச்சாமி ஐயர் இறந்தவுடன், பாரதியைக் காசிக்கு அழைத்து வந்தவர். பரிவுமிக்க அன்னை
 May be an image of text
2. கிருஷ்ண சிவன் – பாரதியின் அத்திம்பேர் (ருக்மிணி அம்மாளின் கணவர்) 
 No photo description available.
3. சி.விஸ்வநாதன் – பாரதியின் தம்பி (சின்னச்சாமி ஐயரின் இரண்டாவது மனைவியின் மகன்) மானாமதுரையில் வாழ்ந்தவர்
 No photo description available.
4. லஷ்மி – சி.விஸ்வநாதனின் தங்கை
 No photo description available.
5. கேதார சிவன் – லஷ்மியின் கணவர்
 May be an image of temple and monument
6. சிவமடம்
 May be an image of temple
7. நந்தி
 May be an image of temple
8. சிவ சந்நிதி (பாரதி தேவாரம்/திருவாசகம் பாடித் துதித்த லிங்கம்)
 May be an image of fire escape
9. பாரதி வாழ்ந்த மாடிப் பகுதி
 May be an image of temple
10. மாடியும் கீழே முற்றமும்
 May be an image of one or more people and people smiling
11. டாக்டர் ஜெயந்தி முரளி – லஷ்மி – கேதார சிவனின் பெயரத்தி. அண்மையில் மறைந்த திரு கிருஷ்ண சிவனின் மகள் 
 
ஜெயந்தி அவர்களுக்கு, அவருடைய வயதுக்குச் சம்பந்தமில்லாத இனிமையான மழலைக் குரல். அவர் பாரதியின் பாடல்களைப் பாடக் கேட்பது ஒரு பாப்பா மலர் அனுபவம்! 
 
பல இன்னல்களுக்கு இடையில், அந்த வீட்டை அவர் பொறுப்புடன் நிர்வகித்து வருகிறார்.
 
பாரதி, செல்லம்மாவுக்குக் கடிதமெழுதிய அனுமந்த கட்டம் (ஹனுமான் காட்) 
 
அந்த கங்கைக் கரையில், தாமிர பரணியின் குறுக்குத்துறை வண்டல் மினுமினுப்பை தரிசித்து நெகிழ்ந்தேன்.
 
ரமணன்
 
Ettayapuram was the egg
 
Kasi was his nest
 
It was Kasi who opened his eyes to the outer world and gave his fiery spirit the wings to soar unto the skies. 
 
In the Siva temple at Ettayapuram when he was a small boy, Kaali applied a tilak on his broad forehead. Here, it was Ganga who enabled him to see the world through the eye of wisdom that lay behind that tilak.
 
He was about 16 years old when Rukmini Ammal his aunt brought him to Kasi to educate him. The house called Siva Matam, still stands there, on the bank of the Ganga, at Hanuman Ghar, quiet and serene. He lived there sometime between 1898 and 1904.
I could still smell his breath there.
 
Pictures:
 
1. Rukmini Ammal aka Kuppammal (His father’s elder sister)
2. Krishna Sivan – Rukmini’s husband
3. C Viswanathan – Bharathi’s younger brother (his father’s second wife’s son)
4. Lakshmi – Bharathi/Viswanathan’s sister
5. Kedara Sivan – Lakshmi’s husband, s/o Rukmini Ammal – Krishna Sivan
6. The Sivamatam
7. Nandi
8. The Shrine where Bharathi sang Thevaram and Thiruvachakam
9. The upper floor where Bharathi lived
10. The two floors
11. Dr Jayanthi Murali, Lakshmi – Kedara Sivan’s granddaughter and daughter of Sri K V Krishnan
 
I had the pleasure of sharing the dais with her. She has a voice that has nothing to do with her age. It is a delight to listen to her singing Bharathi’s songs in her childlike, sweet voice. She has been managing this home amidst difficulties. It was from here that Bharathi wrote to his wife Chellammal, in reply to her letter, imploring him to return home.
 
I could see the Tambrabharani winking through the Ganga..
Ramanan

 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 

✨ திருக்கார்த்திகை தீபம் ✨

மணக்கால் அய்யம்பேட்டை | 11:22 AM | Best Blogger Tips

 திருவண்ணாமலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தை பற்றிய சிறப்பு தகவல்கள் !!

 

 கார்த்திகை தீப திருநாள்🪔.. திருவண்ணாமலை தீபத்தின் சிறப்பு🙏.. மகாதீபத்தை🪔 மனதார வழிபட்டு.. அருள் பெறலாம்✨ வாங்க..!

திருவண்ணாமலை தீபம் -மகா தீப கொப்பரையின் சிறப்புகள்
                  ✨ கார்த்திகை பரணி தீபம் 

✨ திருக்கார்த்திகை தீபம் ✨



🌙 கார்த்திகை மாதம் மிக மிக புனிதமானது. கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். திருக்கார்த்திகை அன்று இல்லங்களில் வரிசையாக தீப அலங்காரம் செய்வது வழக்கம்.

🔆 இதனால் தீய சக்திகள் விலகும், மகாலட்சுமி இல்லத்தில் குடி கொள்வாள் என்கிறது சாஸ்திரம். இந்த நாளில் மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளிலும், கோயில்களிலும் விளக்கு ஏற்றி சிவனை வழிபடுவது வழக்கம்.

🪔 இந்த திருக்கார்த்திகை நன்னாளில் தீபம் ஏற்றி வழிபடுவது வாழ்வில் எண்ணிலடங்கா பலன்களை பெறச் செய்யும்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா' நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது!
🌄 திருவண்ணாமலை தீபம்

🌄 கார்த்திகை தீபத்திருநாள் அன்று திருவண்ணாமலையில் மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்திற்கு பெயர் அண்ணாமலை தீபம். தீபத்திருநாளில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவதும் திருவண்ணாமலை தீபம் தான்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.. கார்ல போறீங்களா?.. இந்த தகவலை நோட்  பண்ணிக்கோங்க | Police important announcement Thiruvannamalai Karthigai  Deepam festival - Tamil Oneindia
🔥 பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோயிலில் சிவனே மலையாக காட்சி தருவதாகவும், திருக்கார்த்திகை தீபத்திருநாளில் ஜோதி வடிவாக காட்சி தருவதாகவும் ஐதீகம்.

🪔 கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் பரணி தீபம், அண்ணாமலையார் தீபம் (மகாதீபம்), விஷ்ணு தீபம் உள்ளிட்ட ஐந்து தீபங்கள் ஏற்றப்படும்.

🌄 திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றிய பிறகுதான் பொதுமக்கள் அவர்களின் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது ஐதீகம்.
திருவண்ணாமலை திருத்தலத்தின் அற்புதச் சிறப்புகள்!
🛕 திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா:

🎆 திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தீபத்திருவிழா பிரசித்தி பெற்றது. மாதந்தோறும் இந்த ஆலயத்தில் திருவிழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதம் நடைபெறும் தீபத்திருவிழாவே பெரிதும் போற்றப்படுகிறது.

🔆 தீபஜோதி வழிபாடானது, இருள்போன்று நம்மை சூழ்ந்து நிற்கின்ற தடைகளையும், இடையூறுகளையும், கிரக பாதிப்புகளால் உருவாகும் கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை.

🕉️ சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளே தீபத்திருநாளாக கொண்டாடப்படுகிறது.

🪔 கொப்பரை:

🌄 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை மகாதீப கொப்பரை கோயிலில் சிறப்பு பூஜைகளுக்கு பின் 2,668 அடி உயரம் கொண்ட மகாதீப மலைக்கு எடுத்து செல்லப்படும்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் சிறப்புகள் மற்றும் கார்த்திகை தீபம்  உருவான வரலாறு! | Specialities of Tiruvannamalai Temple and History of  Karthikai Deepam – Know the ...
🕯️ இந்த மிகப்பெரிய கொப்பரையில் 24 முழம் துணியால் திரி செய்து அதில், கற்பூர தூள் வைத்து சுருட்டப்படும். பின்னர் அந்த திரியை, கொப்பரையில் வைத்து, நெய் வார்த்து, சுடர் எரிப்பார்கள்.

🌠 அது தூரத்திலிருந்து பார்க்க மலையில் தீபம் ஏற்றி வைத்தது போல சிறியதாக தெரியும். கிட்டத்தட்ட அந்த மலையிலிருந்து 60 கி.மீ தூரம் வரை இந்த சுடர் தீபம் போல தெரியும்.
முக்தியை அளிக்கும் திருவண்ணாமலை தீபம்! | ஆன்மிகம் - News18 தமிழ்
🔥 மகாதீபம் 

🕕 மகாதீபம் கார்த்திகை தீபத்திருவிழா நாளின் மாலை 6 மணிக்கு அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர்.

🌟 அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சி தருகின்ற அர்த்தநாரீஸ்வரர் உற்சவ கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
டிசம்பர் 6ம் தேதி திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம் – Tiruvannamalai News
🕊️ பக்தர்களின் கூட்டம்

🕊️ குறிப்பிட்ட சில நிமிடங்கள் மட்டும் காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரரை காண தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மற்ற வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வருவது வழக்கம்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் வரலாறு: பல நூற்றாண்டு கதைகளை சுமக்கும்  மகாதீபத்தின் அரிய தகவல்கள் - BBC News தமிழ்
🕯️ தீபம் ஏற்றிய பிறகு என்ன செய்ய வேண்டும்?

🌠 திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றிய பிறகு நமது வீடுகளில் தீபம் ஏற்றி, ஒளி வடிவாக இறைவனை வழிபட வேண்டும்.

🪔 ஆண்டு முழுவதும் நாம் வீடுகளில் விளக்கேற்றி இறைவனை வழிபட்டாலும், ஆண்டுக்கு ஒருமுறை திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வழிபடுவது அனைத்து விதமான நலன்களை பெற்றுத் தரும்.

🙏 ஆண்டுதோறும் விளக்கேற்ற முடியாதவர்கள் இந்த ஒரு நாளில் விளக்கேற்றி வழிபட்டாலே, தினமும் விளக்கேற்றிய பலன் கிடைத்து விடும்.

🌟 சிவபெருமான் ஜோதி வடிவாக காட்சி அளித்த நாள் மட்டுமின்றி, பார்வதிக்கு தனது உடலில் பாதியை தந்து அர்த்தநாரீஸ்வர ரூபமாக காட்சி கொடுத்த நாள் என்பதால் சிவபார்வதியை கார்த்திகை தீபத்திருநாளில் வணங்குவது சிறப்பு.

🌺 ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே அர்த்தநாரீஸ்வரர், ஆனந்த தாண்டவம், மகாதீபம் என மூன்றையும் கார்த்திகை தீபத்திருநாளில் ஒன்றாக பார்க்க முடியும். இதை நேரில் கண்டால் 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும் என்பது காலங்காலமாக தொடர்ந்து வரும் நம்பிக்கை.
Tiruvannamalai Deepam 2025 - Karthigai Deepam 2025 - Deepam
🌟 கார்த்திகை தீப வெளிச்சத்தில் உங்கள் வாழ்வு ஒளிமயமாகட்டும்!🌟 உங்கள் வீடு ஒளிமயமாகட்டும்! உங்கள் வாழ்வில் சகல நன்மைகளும் நிறைந்திருக்கட்டும்!

🙏🙏🙏 


❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 


  
🌷 🌷🌷 🌷

"கர்நாடக சிங்கம்" நமது அண்ணாமலை குப்புசாமி - "கர்நாடக சிங்கம்"

மணக்கால் அய்யம்பேட்டை | 11:25 AM | Best Blogger Tips

 சிங்கம்' அண்ணாமலை பிரதமர் மோடியின் முதுகில் தட்டியபோது: தமிழகத்தின்  அடித்தட்டுத் தலைவர் யார், அவர் எப்படிக் கணக்கிடும் சக்தியாக ...

அண்ணாமலை 1984 ஆம் ஆண்டு
ஜுன் மாதம் 4 ஆம் தேதி கரூரில்
உள்ள புகழ் பெற்ற நிர்மலா
மருத்துவமனையில் குப்புசாமி
பரமேஸ்வரி தம்பதியருக்கு
இரண்டாவது குழந்தையாக பிறந்தார்
 
இவருக்கு முன் பிறந்தவர் இவரது
சகோதரி நல்லதாய் ஆவார்
 
அண்ணாமலையின் குடும்பம் கரூர்
மாவட்டம் தொட்டம்பட்டியில் மிகவும்
பாரம்பரியமிக்க குடும்பம் 
 அண்ணாமலைக்கு பிரதமர் மோடி கடைசி வாய்ப்பு… தமிழக பயணத்தில் பிரேமலதா  சந்திப்பு.? - Tamil News Now
அண்ணாமலையின் தந்தையார்
குப்புசாமிக் கவுண்டர் 
 
குப்புசாமியின் தந்தையார்
ரங்கசாமிக் கவுண்டர் ரங்கசாமியின்
தந்தையார் குப்பண்ணக் கவுண்டர்
 
குப்பண்ணக் கவுண்டரின் தந்தையார்
ரங்கப்பக் கவுண்டர்
 
ரங்கப்பக் கவுண்டரின் தந்தையார் அண்ணாமலை கவுண்டர்
May be an image of one or more people and people smiling 
சுமார் 300 ஆண்டுகளாக இவர்கள்
வசித்து வந்த கரூர் மாவட்டம்
தொட்டம்பட்டி தாலுகாவில் உள்ள
கருதநல்லிவலசு இவர்களது பூர்வீகம்
 
இன்றும் தொட்டம்பட்டியில்
அண்ணாமலையின் குடும்பம்
மரியாதைமிக்க முதன்மைக்
குடும்பமாக போற்றப்படுகிறது
 
கல்வி:
 
அண்ணாமலை தனது ஆரம்பக்
கல்வியை எல்.கே.ஜி படிப்பைப்
புனித அமல அன்னை பள்ளியில்
அவரது 4 வது வயதில் தொடங்கினார் 
 
இப்பள்ளி வெள்ளக்கோவிலில்
உள்ளது
 
அடுத்தது UKG முதல் 7 ஆம் வகுப்பு
வரை கரூரில் உள்ள புனித
அந்தோனியார் உயர்நிலை
பள்ளியில் படித்தார்
 
8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு
வரை பரமத்தி வேலூர் உள்ள
கொங்குவேளாளர் மெட்ரிக் ஸ்கூலில்
படித்தார்
 சுயவிவரப் படம்
+1 +2 படிப்பை ராசிபுரம் தாலுகாவில்
உள்ள மிகவும் புகழ்பெற்ற
எஸ்.ஆர்.பி. பள்ளியில் படித்தார்
 
அண்ணாமலை பத்தாம் வகுப்பு
அரசுத் தேர்வில் 487 மதிப்பெண்கள்
பெற்று பள்ளியில் முதன்மையான
மாணவர்களில் ஒருவராக தேர்ச்சி
பெற்றார்
 
+1 பாடப்பிரிவில் எல்லா
மாணவர்களும் மருத்துவப் படிப்பு
படிப்பதற்கு ஏதுவாக சயின்ஸ்
குரூப்பை விருப்ப பாடமாகக்
கொண்டு படிக்கும் விரும்பும்
வேளையில் அண்ணாமலை
மருத்துவப்படிப்பை விரும்பாமல்
MATHS PHYSICS CHEMISTRY COMPUTER
SCIENCE பாடமாக எடுத்து +1 +2
படித்தார்
 
+2 தேர்வில் 1200க்கு 1135
மதிப்பெண்கள் பெற்று முதல்தர
மாணவனாக தேர்ச்சி பெற்றார்
 
பின்னர் அண்ணாமலை
கரூர் மாவட்டத்தில் இருந்து
கோவைக்கு வந்து பி.எஸ்.ஜி
கல்லூரியில் இயந்திரப் பொறியியல்
( B E Meehanical ) இளங்கலை பட்டம்
பெற்றார்
 
இதைத் தொடர்ந்து தனது முதல்
முயற்சியிலேயே ஐஐஎம்( IIM ) சிஏடி
தேர்வில் சிறந்தது விளங்கியதால்
அண்ணாமலை முதுநிலை வணிக
நிர்வாகப் படிப்பை (MBA) 
 
உத்தரப்பிரதேசம் லக்னோ இந்திய
மேலாண்மைக் கழகத்தில் முடித்தார்
அண்ணாமலையின் உடன்பிறந்த
சகோதரி நல்லதாய் இவரை விட
இரண்டரை வயது மூத்தவர்
 
ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி
அண்ணாமலை கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். கரூரை சேர்ந்த இவர், ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தந்தை குப்புசாமி, தாய் பரமேஸ்வரி. மனைவி அகிலா சுவாமிநாதன். அவர் கோவை மாவட்டத்தில் இன்ஜினியரிங் படித்தார். பிறகு இந்திய மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முடித்தார். 2011-ல் ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்றார்.
சரியானதைச் செய்ய கடினமாக முயற்சி செய்பவர்கள் எப்போதும் குரல்  கொடுப்பவர்கள்”: அண்ணாமலை: தமிழ்நாட்டில் கலாச்சாரப் பாதுகாப்பு மற்றும் ...
கர்நாடக சிங்கம்
கர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக தனது பணியை தொடங்கினார். அங்குள்ள பள்ளிகள், கல்லூரிகளில் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தார். இரவு நேரங்களில் ரோந்து சென்றார். தவறு செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததால், பொதுமக்கள் அவரை "கர்நாடக சிங்கம்" என்று அழைத்தனர்.
சிங்கம்' அண்ணாமலை பிரதமர் மோடியின் முதுகில் தட்டியபோது: தமிழகத்தின்  அடித்தட்டுத் தலைவர் யார், அவர் எப்படிக் கணக்கிடும் சக்தியாக ...
சினிமா பாணியில் அதிரடி நடவடிக்கை
2015-ல் உடுப்பி காவல்துறை கண்காணிப்பாளராகவும், 2016-ல் சிக்மளூரு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராகவும், 2018-ல் பெங்களூர் தெற்கு மாவட்டத்தின் துணை ஆணையராகவும் பணியாற்றினார். சினிமா பாணியில் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், 2018-ல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார்.
 
 அண்ணாமலை தமிழக தலைமகன் 🚩 @annamalai_kuppusamy #annamalai #annamalaiips  #annamalaibjp #bjp #bjpindia #bjptamilnadu #trendingreels #trending #viral  #viralreels #ips #police #politics #insta #instagood #modi #amitshah #kongu  #tvk ...
திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில்
B.A மற்றும் M.A ஆங்கிலம் இலக்கியம்
படித்துப் பட்டம் பெற்றவர்
 
M.A ஆங்கில இலக்கியம் முடித்த
இவர் சிறிது காலம் திருச்செங்கோடு
KSR இன்ஜினியரிங் கல்லூரியிலும்
 
பிறகு கள்ளக்குறிச்சியில் உள்ள
பாரதி கலைக் கல்லூரியிலும்
ஆங்கிலப் பேராசிரியராகப்
பணியாற்றினார்
 ரஜினி சார் தனது திட்டத்தை அறிவிக்கும் வரை காத்திருக்கிறேன், பிறகு  அழைப்பேன்: 'சிங்கம்' அண்ணாமலை குப்புசாமி | சென்னை செய்திகள் - இந்தியன் ...
இவ்விதமாக ஒரு நடுத்தரக்
குடும்பத்தில் பிறந்து அரசியல்
பாரம்பரியமின்றி அதிகம்
படித்தவர்கள் 
 
இல்லாத நடுத்தர
விவசாயக் குடும்பத்தில் தங்களது
சொந்த முயற்சியினால் கடின
உழைப்பால் நேர்மையான வாழ்க்கை
முறையால் உயர்ந்த இடத்தைப்
பிடித்ததோடு தென்னகத்து அரசியல்
வானில் சுடர் விடும் நட்சத்திரமாய்
ஒளிர்பவர் தான் நமது 
 
அண்ணாமலை குப்புசாமி அவர்கள்...
 
 May be an image of one or more people and dais

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷