ஊட்டி கொடைக்கானல் போர் அடிச்சிருச்சா...? புதுசா ஏதாவது மலை பிரதேசம் சுற்றுலா போக ஆசையா அதுவும் கம்மியான பட்ஜெட்ல ...அதிகம் கூட்டம் இல்லாமல் அசத்தும் செம மலை பிரதேசம் தான் காந்தளூர். தென்னகத்தின் மினி காஷ்மீரின் அழைக்கப்படும் கோடை வாசஸ்தலம்.
காடுகளுக்குள் அழகிய நீர்வீழ்ச்சி,வியூ பாயிண்ட்கள்,இரவில் ஜீப் சவாரி என அசத்தும் சுற்றுலாத்தலம்…
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் 'மினி காஷ்மீர்' என அழைக்கப்படும் காந்தளூர் மலை கிராமம் அமைந்துள்ளது. இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே அமைந்திருக்கும் காந்தளூர்.
மலைவளம் மிக்க, காடுகள் நிறைந்த, பல அருவிகள் ஆர்ப்பரிக்கும் ஓர் அழகிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.
விடுமுறையை சிறந்த முறையில் கொண்டாட திட்டம் வைத்திருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல பட்ஜெட் ஸ்பாட்.
மலைகள், நீர்வீழ்ச்சிகள், ஆறு, தேயிலைத் தோட்டங்கள், பழ தோட்டங்கள் போன்றவை இங்கு உள்ளன.
தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லையின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்தக் கிராமத்து மக்களில் பெரும்பாலானோர் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள்.
கடல் மட்டத்தில் இருந்து காந்தளூர் 5000 அடி உயரத்தில் அமைந்து உள்ளது.
ஆப்பிளுக்கு பெயர் பெற்ற காஷ்மீருக்கு அடுத்த படியாக, தென் இந்தியாவில் காந்தளூரில் மட்டுமே ஆப்பிள்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
மேலும் ப்ளம்ஸ், ஆரஞ்சு, பிளாக்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி பழங்களும் இங்கு விளைவிக்கப்படுகிறது.
இங்கு நிறைய வியூ பாயிண்ட்கள் உள்ளன. அது மட்டும் அல்லாமல் பல அருவிகள் ஆங்காங்கே கொட்டுகின்றன.
காந்தளூரின் அழகை காண நினைப்பவர்கள் டென்ட் ஸ்டே என சொல்லப்படும் கூடார அமைப்புகளில் தங்குவது நல்ல அனுபவத்தை அளிக்கும். இவை வாடகைக்கு கிடைக்கின்றன.
சுற்றிலும் மலைகள் இருப்பதால் இயற்கை ஆர்வலர்கள், புகைப்பட பிரியர்களுக்கு மிகவும் ஏற்ற இடம் காந்தளூர்.
உடுமலைப்பேட்டையில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் மலைகளுக்கு நடுவே அழகிய தோற்றமளிக்கும் காந்தளூர் நீர்வீழ்ச்சி உள்ளது.
அருவிக்கு நடந்து செல்லும் ஒரு கிலோ மீட்டர் தூர பயணம் காடுகளுக்குள் அமைந்து இருக்கிறது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப் பூ காந்தளூரில் பூக்கிறது.
அடுத்ததாக காந்தளூரில் அனகோட்டா பார்க் எனும் வரலாற்று சிறப்பு மிக்க இடத்தை பார்த்து வர மறக்காதீர்கள். இரவில் ஜீப் சவாரி அலாதியான அனுபவத்தை வழங்கும்.
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷