✨ திருக்கார்த்திகை தீபம் ✨

மணக்கால் அய்யம்பேட்டை | 11:22 AM | Best Blogger Tips

 திருவண்ணாமலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தை பற்றிய சிறப்பு தகவல்கள் !!

 

 கார்த்திகை தீப திருநாள்🪔.. திருவண்ணாமலை தீபத்தின் சிறப்பு🙏.. மகாதீபத்தை🪔 மனதார வழிபட்டு.. அருள் பெறலாம்✨ வாங்க..!

திருவண்ணாமலை தீபம் -மகா தீப கொப்பரையின் சிறப்புகள்
                  ✨ கார்த்திகை பரணி தீபம் 

✨ திருக்கார்த்திகை தீபம் ✨



🌙 கார்த்திகை மாதம் மிக மிக புனிதமானது. கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். திருக்கார்த்திகை அன்று இல்லங்களில் வரிசையாக தீப அலங்காரம் செய்வது வழக்கம்.

🔆 இதனால் தீய சக்திகள் விலகும், மகாலட்சுமி இல்லத்தில் குடி கொள்வாள் என்கிறது சாஸ்திரம். இந்த நாளில் மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளிலும், கோயில்களிலும் விளக்கு ஏற்றி சிவனை வழிபடுவது வழக்கம்.

🪔 இந்த திருக்கார்த்திகை நன்னாளில் தீபம் ஏற்றி வழிபடுவது வாழ்வில் எண்ணிலடங்கா பலன்களை பெறச் செய்யும்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா' நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது!
🌄 திருவண்ணாமலை தீபம்

🌄 கார்த்திகை தீபத்திருநாள் அன்று திருவண்ணாமலையில் மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்திற்கு பெயர் அண்ணாமலை தீபம். தீபத்திருநாளில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவதும் திருவண்ணாமலை தீபம் தான்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.. கார்ல போறீங்களா?.. இந்த தகவலை நோட்  பண்ணிக்கோங்க | Police important announcement Thiruvannamalai Karthigai  Deepam festival - Tamil Oneindia
🔥 பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோயிலில் சிவனே மலையாக காட்சி தருவதாகவும், திருக்கார்த்திகை தீபத்திருநாளில் ஜோதி வடிவாக காட்சி தருவதாகவும் ஐதீகம்.

🪔 கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் பரணி தீபம், அண்ணாமலையார் தீபம் (மகாதீபம்), விஷ்ணு தீபம் உள்ளிட்ட ஐந்து தீபங்கள் ஏற்றப்படும்.

🌄 திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றிய பிறகுதான் பொதுமக்கள் அவர்களின் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது ஐதீகம்.
திருவண்ணாமலை திருத்தலத்தின் அற்புதச் சிறப்புகள்!
🛕 திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா:

🎆 திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தீபத்திருவிழா பிரசித்தி பெற்றது. மாதந்தோறும் இந்த ஆலயத்தில் திருவிழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதம் நடைபெறும் தீபத்திருவிழாவே பெரிதும் போற்றப்படுகிறது.

🔆 தீபஜோதி வழிபாடானது, இருள்போன்று நம்மை சூழ்ந்து நிற்கின்ற தடைகளையும், இடையூறுகளையும், கிரக பாதிப்புகளால் உருவாகும் கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை.

🕉️ சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளே தீபத்திருநாளாக கொண்டாடப்படுகிறது.

🪔 கொப்பரை:

🌄 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை மகாதீப கொப்பரை கோயிலில் சிறப்பு பூஜைகளுக்கு பின் 2,668 அடி உயரம் கொண்ட மகாதீப மலைக்கு எடுத்து செல்லப்படும்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் சிறப்புகள் மற்றும் கார்த்திகை தீபம்  உருவான வரலாறு! | Specialities of Tiruvannamalai Temple and History of  Karthikai Deepam – Know the ...
🕯️ இந்த மிகப்பெரிய கொப்பரையில் 24 முழம் துணியால் திரி செய்து அதில், கற்பூர தூள் வைத்து சுருட்டப்படும். பின்னர் அந்த திரியை, கொப்பரையில் வைத்து, நெய் வார்த்து, சுடர் எரிப்பார்கள்.

🌠 அது தூரத்திலிருந்து பார்க்க மலையில் தீபம் ஏற்றி வைத்தது போல சிறியதாக தெரியும். கிட்டத்தட்ட அந்த மலையிலிருந்து 60 கி.மீ தூரம் வரை இந்த சுடர் தீபம் போல தெரியும்.
முக்தியை அளிக்கும் திருவண்ணாமலை தீபம்! | ஆன்மிகம் - News18 தமிழ்
🔥 மகாதீபம் 

🕕 மகாதீபம் கார்த்திகை தீபத்திருவிழா நாளின் மாலை 6 மணிக்கு அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர்.

🌟 அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சி தருகின்ற அர்த்தநாரீஸ்வரர் உற்சவ கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
டிசம்பர் 6ம் தேதி திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம் – Tiruvannamalai News
🕊️ பக்தர்களின் கூட்டம்

🕊️ குறிப்பிட்ட சில நிமிடங்கள் மட்டும் காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரரை காண தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மற்ற வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வருவது வழக்கம்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் வரலாறு: பல நூற்றாண்டு கதைகளை சுமக்கும்  மகாதீபத்தின் அரிய தகவல்கள் - BBC News தமிழ்
🕯️ தீபம் ஏற்றிய பிறகு என்ன செய்ய வேண்டும்?

🌠 திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றிய பிறகு நமது வீடுகளில் தீபம் ஏற்றி, ஒளி வடிவாக இறைவனை வழிபட வேண்டும்.

🪔 ஆண்டு முழுவதும் நாம் வீடுகளில் விளக்கேற்றி இறைவனை வழிபட்டாலும், ஆண்டுக்கு ஒருமுறை திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வழிபடுவது அனைத்து விதமான நலன்களை பெற்றுத் தரும்.

🙏 ஆண்டுதோறும் விளக்கேற்ற முடியாதவர்கள் இந்த ஒரு நாளில் விளக்கேற்றி வழிபட்டாலே, தினமும் விளக்கேற்றிய பலன் கிடைத்து விடும்.

🌟 சிவபெருமான் ஜோதி வடிவாக காட்சி அளித்த நாள் மட்டுமின்றி, பார்வதிக்கு தனது உடலில் பாதியை தந்து அர்த்தநாரீஸ்வர ரூபமாக காட்சி கொடுத்த நாள் என்பதால் சிவபார்வதியை கார்த்திகை தீபத்திருநாளில் வணங்குவது சிறப்பு.

🌺 ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே அர்த்தநாரீஸ்வரர், ஆனந்த தாண்டவம், மகாதீபம் என மூன்றையும் கார்த்திகை தீபத்திருநாளில் ஒன்றாக பார்க்க முடியும். இதை நேரில் கண்டால் 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும் என்பது காலங்காலமாக தொடர்ந்து வரும் நம்பிக்கை.
Tiruvannamalai Deepam 2025 - Karthigai Deepam 2025 - Deepam
🌟 கார்த்திகை தீப வெளிச்சத்தில் உங்கள் வாழ்வு ஒளிமயமாகட்டும்!🌟 உங்கள் வீடு ஒளிமயமாகட்டும்! உங்கள் வாழ்வில் சகல நன்மைகளும் நிறைந்திருக்கட்டும்!

🙏🙏🙏 


❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 


  
🌷 🌷🌷 🌷

"கர்நாடக சிங்கம்" நமது அண்ணாமலை குப்புசாமி - "கர்நாடக சிங்கம்"

மணக்கால் அய்யம்பேட்டை | 11:25 AM | Best Blogger Tips

 சிங்கம்' அண்ணாமலை பிரதமர் மோடியின் முதுகில் தட்டியபோது: தமிழகத்தின்  அடித்தட்டுத் தலைவர் யார், அவர் எப்படிக் கணக்கிடும் சக்தியாக ...

அண்ணாமலை 1984 ஆம் ஆண்டு
ஜுன் மாதம் 4 ஆம் தேதி கரூரில்
உள்ள புகழ் பெற்ற நிர்மலா
மருத்துவமனையில் குப்புசாமி
பரமேஸ்வரி தம்பதியருக்கு
இரண்டாவது குழந்தையாக பிறந்தார்
 
இவருக்கு முன் பிறந்தவர் இவரது
சகோதரி நல்லதாய் ஆவார்
 
அண்ணாமலையின் குடும்பம் கரூர்
மாவட்டம் தொட்டம்பட்டியில் மிகவும்
பாரம்பரியமிக்க குடும்பம் 
 அண்ணாமலைக்கு பிரதமர் மோடி கடைசி வாய்ப்பு… தமிழக பயணத்தில் பிரேமலதா  சந்திப்பு.? - Tamil News Now
அண்ணாமலையின் தந்தையார்
குப்புசாமிக் கவுண்டர் 
 
குப்புசாமியின் தந்தையார்
ரங்கசாமிக் கவுண்டர் ரங்கசாமியின்
தந்தையார் குப்பண்ணக் கவுண்டர்
 
குப்பண்ணக் கவுண்டரின் தந்தையார்
ரங்கப்பக் கவுண்டர்
 
ரங்கப்பக் கவுண்டரின் தந்தையார் அண்ணாமலை கவுண்டர்
May be an image of one or more people and people smiling 
சுமார் 300 ஆண்டுகளாக இவர்கள்
வசித்து வந்த கரூர் மாவட்டம்
தொட்டம்பட்டி தாலுகாவில் உள்ள
கருதநல்லிவலசு இவர்களது பூர்வீகம்
 
இன்றும் தொட்டம்பட்டியில்
அண்ணாமலையின் குடும்பம்
மரியாதைமிக்க முதன்மைக்
குடும்பமாக போற்றப்படுகிறது
 
கல்வி:
 
அண்ணாமலை தனது ஆரம்பக்
கல்வியை எல்.கே.ஜி படிப்பைப்
புனித அமல அன்னை பள்ளியில்
அவரது 4 வது வயதில் தொடங்கினார் 
 
இப்பள்ளி வெள்ளக்கோவிலில்
உள்ளது
 
அடுத்தது UKG முதல் 7 ஆம் வகுப்பு
வரை கரூரில் உள்ள புனித
அந்தோனியார் உயர்நிலை
பள்ளியில் படித்தார்
 
8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு
வரை பரமத்தி வேலூர் உள்ள
கொங்குவேளாளர் மெட்ரிக் ஸ்கூலில்
படித்தார்
 சுயவிவரப் படம்
+1 +2 படிப்பை ராசிபுரம் தாலுகாவில்
உள்ள மிகவும் புகழ்பெற்ற
எஸ்.ஆர்.பி. பள்ளியில் படித்தார்
 
அண்ணாமலை பத்தாம் வகுப்பு
அரசுத் தேர்வில் 487 மதிப்பெண்கள்
பெற்று பள்ளியில் முதன்மையான
மாணவர்களில் ஒருவராக தேர்ச்சி
பெற்றார்
 
+1 பாடப்பிரிவில் எல்லா
மாணவர்களும் மருத்துவப் படிப்பு
படிப்பதற்கு ஏதுவாக சயின்ஸ்
குரூப்பை விருப்ப பாடமாகக்
கொண்டு படிக்கும் விரும்பும்
வேளையில் அண்ணாமலை
மருத்துவப்படிப்பை விரும்பாமல்
MATHS PHYSICS CHEMISTRY COMPUTER
SCIENCE பாடமாக எடுத்து +1 +2
படித்தார்
 
+2 தேர்வில் 1200க்கு 1135
மதிப்பெண்கள் பெற்று முதல்தர
மாணவனாக தேர்ச்சி பெற்றார்
 
பின்னர் அண்ணாமலை
கரூர் மாவட்டத்தில் இருந்து
கோவைக்கு வந்து பி.எஸ்.ஜி
கல்லூரியில் இயந்திரப் பொறியியல்
( B E Meehanical ) இளங்கலை பட்டம்
பெற்றார்
 
இதைத் தொடர்ந்து தனது முதல்
முயற்சியிலேயே ஐஐஎம்( IIM ) சிஏடி
தேர்வில் சிறந்தது விளங்கியதால்
அண்ணாமலை முதுநிலை வணிக
நிர்வாகப் படிப்பை (MBA) 
 
உத்தரப்பிரதேசம் லக்னோ இந்திய
மேலாண்மைக் கழகத்தில் முடித்தார்
அண்ணாமலையின் உடன்பிறந்த
சகோதரி நல்லதாய் இவரை விட
இரண்டரை வயது மூத்தவர்
 
ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி
அண்ணாமலை கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். கரூரை சேர்ந்த இவர், ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தந்தை குப்புசாமி, தாய் பரமேஸ்வரி. மனைவி அகிலா சுவாமிநாதன். அவர் கோவை மாவட்டத்தில் இன்ஜினியரிங் படித்தார். பிறகு இந்திய மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முடித்தார். 2011-ல் ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்றார்.
சரியானதைச் செய்ய கடினமாக முயற்சி செய்பவர்கள் எப்போதும் குரல்  கொடுப்பவர்கள்”: அண்ணாமலை: தமிழ்நாட்டில் கலாச்சாரப் பாதுகாப்பு மற்றும் ...
கர்நாடக சிங்கம்
கர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக தனது பணியை தொடங்கினார். அங்குள்ள பள்ளிகள், கல்லூரிகளில் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தார். இரவு நேரங்களில் ரோந்து சென்றார். தவறு செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததால், பொதுமக்கள் அவரை "கர்நாடக சிங்கம்" என்று அழைத்தனர்.
சிங்கம்' அண்ணாமலை பிரதமர் மோடியின் முதுகில் தட்டியபோது: தமிழகத்தின்  அடித்தட்டுத் தலைவர் யார், அவர் எப்படிக் கணக்கிடும் சக்தியாக ...
சினிமா பாணியில் அதிரடி நடவடிக்கை
2015-ல் உடுப்பி காவல்துறை கண்காணிப்பாளராகவும், 2016-ல் சிக்மளூரு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராகவும், 2018-ல் பெங்களூர் தெற்கு மாவட்டத்தின் துணை ஆணையராகவும் பணியாற்றினார். சினிமா பாணியில் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், 2018-ல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார்.
 
 அண்ணாமலை தமிழக தலைமகன் 🚩 @annamalai_kuppusamy #annamalai #annamalaiips  #annamalaibjp #bjp #bjpindia #bjptamilnadu #trendingreels #trending #viral  #viralreels #ips #police #politics #insta #instagood #modi #amitshah #kongu  #tvk ...
திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில்
B.A மற்றும் M.A ஆங்கிலம் இலக்கியம்
படித்துப் பட்டம் பெற்றவர்
 
M.A ஆங்கில இலக்கியம் முடித்த
இவர் சிறிது காலம் திருச்செங்கோடு
KSR இன்ஜினியரிங் கல்லூரியிலும்
 
பிறகு கள்ளக்குறிச்சியில் உள்ள
பாரதி கலைக் கல்லூரியிலும்
ஆங்கிலப் பேராசிரியராகப்
பணியாற்றினார்
 ரஜினி சார் தனது திட்டத்தை அறிவிக்கும் வரை காத்திருக்கிறேன், பிறகு  அழைப்பேன்: 'சிங்கம்' அண்ணாமலை குப்புசாமி | சென்னை செய்திகள் - இந்தியன் ...
இவ்விதமாக ஒரு நடுத்தரக்
குடும்பத்தில் பிறந்து அரசியல்
பாரம்பரியமின்றி அதிகம்
படித்தவர்கள் 
 
இல்லாத நடுத்தர
விவசாயக் குடும்பத்தில் தங்களது
சொந்த முயற்சியினால் கடின
உழைப்பால் நேர்மையான வாழ்க்கை
முறையால் உயர்ந்த இடத்தைப்
பிடித்ததோடு தென்னகத்து அரசியல்
வானில் சுடர் விடும் நட்சத்திரமாய்
ஒளிர்பவர் தான் நமது 
 
அண்ணாமலை குப்புசாமி அவர்கள்...
 
 May be an image of one or more people and dais

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 

வரலாறு எப்போதுமே விசித்திரமானது

மணக்கால் அய்யம்பேட்டை | 1:00 PM | Best Blogger Tips

 

With due “Thanks” to Shri Sadasiva post

வரலாறு எப்போதுமே விசித்திரமானது. சிலரை அது தவறான காரணங்களுக்காகக் கொண்டாடும், உண்மையான காரணங்களை மறைத்துவிடும். அப்படியான ஒரு மிகப்பெரிய வரலாற்றுத் தவறுதான் ’ஹெடி லாமர்’ (Hedy Lamarr).

1930-40களில் ஹாலிவுட் சினிமாவின் பொற்காலம் அது. கருப்பு வெள்ளைத் திரையில் ஒரு தேவதை போலத் தோன்றியவர் ஹெடி லாமர். ஆஸ்திரியாவில் பிறந்து ஹாலிவுட்டுக்கு வந்த அவரை, உலகம் எப்படி அழைத்தது தெரியுமா?

’உலகின் மிக அழகான பெண்’ (The Most Beautiful Woman in the World).

அவருடைய படங்களைப் பார்க்க மக்கள் தியேட்டர்களில் குவிந்தார்கள். அவருடைய சிகை அலங்காரத்தை, அவருடைய நடையைப் பெண்கள் காப்பி அடித்தார்கள். ஆண்கள் அனைவரும் ஹெடி லாமரை நினைத்தே தூக்கத்தைத் தொலைத்தார்கள். சுருக்கமாகச் சொன்னால், அவர் ஒரு கனவுக்கன்னி.

ஆனால், அந்தப் பேரழகு, அந்த மினுமினுக்கும் சினிமா வாழ்க்கை - இவை எல்லாவற்றுக்கும் பின்னால் ஒரு அபாயகரமான, கூர்மையான அறிவியல் மூளை ஹெடி லாமருக்கு இருந்தது யாருக்கும் தெரியாது.

ஷூட்டிங் முடிந்ததும், மற்ற நடிகைகள் பார்ட்டிகளுக்குச் செல்வார்கள், கிசுகிசு பேசுவார்கள். ஆனால் ஹெடி லாமர், நேராகத் தன் வீட்டுக்குச் செல்வார். அங்கே அவருக்கு ஒரு சிறிய ஆய்வகம் இருந்தது. அந்த அறையில் எதையாவது வரைந்து கொண்டும், புதிய இயந்திரங்களை வடிவமைத்துக் கொண்டும் இருப்பார். 

சுருக்கமாகச் சொல்வதென்றால், உலக ஆண்கள் அனைவரையும் அவரை நினைத்துக்கொண்டு படுக்கையில் புரண்டுகொண்டிருக்க, ஹெடி லாமர் மட்டும் தனது தேடலில் தீவிரமாகத் தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்தார்.

"எனக்குக் கிளாமர் முகம் காட்டுவதில் ஆர்வமில்லை; என் மூளையைப் பயன்படுத்துவதில்தான் ஆர்வம் இருக்கிறது" என்று பலமுறை சொல்லியிருக்கிறார், ஹெடி லாமர். ஆனால், இந்த உலகம் ஒரு அழகான பெண்ணை அறிவாளியாகப் பார்க்கத் தயாராக இல்லை.

அது இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்த நேரம். ஹெடி லாமரின் சொந்த நாடான ஆஸ்திரியாவை ஹிட்லரின் நாஜிப் படைகள் ஆக்கிரமித்திருந்தன. ஹெடிக்கு நாஜிக்கள் மீது தீராத கோபம் இருந்தது. அமெரிக்காவுக்கு உதவ வேண்டும் என்று அவர் துடித்தார்.

அப்போது ஒரு பெரிய பிரச்சனை இருந்தது. நேச நாடுகளின் (அமெரிக்கா, பிரிட்டன்) போர்க்கப்பல்கள், ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்க 'டார்பிடோ' எனப்படும் கடலுக்கு அடியில் செல்லும் ஏவுகணைகளை அனுப்பின. இந்த ஏவுகணைகள் ரேடியோ சிக்னல் மூலம் கட்டுப்படுத்தப்படுபவை.

ஆனால், நாஜிக்கள் புத்திசாலிகள். அவர்கள் அந்த ரேடியோ சிக்னல்களை எளிதாக 'ஜாம்' (Jamming) செய்தார்கள். இதனால் ஏவுகணைகள் திசைமாறிச் சென்று கடலில் வீணாகின. இதைக் கண்டு அமெரிக்க ராணுவம் திணறியது.

இந்தப் பிரச்சினையைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த ஹெடி லாமருக்கு ஒரு பொறி தட்டியது.

"நாம் ஏன் ஒரே ஃப்ரீக்வன்சியில் சிக்னலை அனுப்ப வேண்டும்? ஒரே இடத்தில் இருந்தால் தானே எதிரி ஜாம் செய்கிறான்? அந்த ஃப்ரீக்வன்சியை நொடிக்கொரு முறை மாற்றிக்கொண்டே இருந்தால் என்ன?"

இதுதான் அந்த அடிப்படை ஐடியா. இதை ’Frequency-Hopping Spread Spectrum’ என்று சொல்வார்கள்.

எளிமையாகச் சொன்னால், நீங்கள் ரேடியோவில் ஒரு பாட்டு கேட்கிறீர்கள். எதிரி அந்த ஸ்டேஷனை ஜாம் செய்ய வருகிறான். அவன் கண்டுபிடிப்பதற்குள், நீங்கள் அடுத்த ஸ்டேஷனுக்குத் தாவிவிடுகிறீர்கள். அடுத்து அங்கிருந்து இன்னொரு ஸ்டேஷனுக்கு... இப்படித் தாவிக்கொண்டே இருந்தால், எதிரியால் உங்களைப் பிடிக்கவே முடியாது. ஆனால், எந்தெந்த ஸ்டேஷனுக்குத் தாவ வேண்டும் என்ற ரகசியக் குறியீடு உங்களுக்கும், அந்த ஏவுகணைக்கும் மட்டுமே தெரியும்.

ஹெடி லாமர், தன்னுடைய நண்பரும் இசைக்கலைஞருமான ஜார்ஜ் ஆந்தீல் (George Antheil) என்பவருடன் இணைந்து, தானியங்கி பியானோக்களில் (Player Pianos) இருக்கும் துளைகள் கொண்ட பேப்பர் ரோல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதை வடிவமைத்தார். 1942-ல் இதற்குப் காப்புரிமையும் (Patent) பெற்றார்.

இந்த மகத்தான கண்டுபிடிப்பை, நாஜிக்களை வீழ்த்தும் ஆயுதத்தை எடுத்துக்கொண்டு அமெரிக்கக் கடற்படையிடம் (US Navy) சென்றார் ஹெடி.

அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? சிரித்தார்கள்.

"ஒரு சினிமா நடிகை, அதுவும் இவ்வளவு அழகான ஒரு பெண், எங்களுக்குத் தொழில்நுட்பம் கற்றுத் தருவதா?" என்று நகைத்தார்கள். 

ஆணாதிக்கம் அவர்களின் கண்களை மறைத்தது.

"மேடம், இந்த ரேடியோ வேலையெல்லாம் விடுங்கள். உங்கள் அழகையும், புகழையும் பயன்படுத்தி ராணுவத்திற்கு நிதி (War Bonds) திரட்டிக் கொடுங்கள், அது போதும்" என்று அவரைத் திருப்பி அனுப்பினார்கள். அந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாமலேயே கிடப்பில போடப்பட்டது.

வருடங்கள் உருண்டோடின. ஹெடி லாமரின் சினிமா மார்க்கெட் சரிந்தது. அவர் முதுமையடைந்தார், உலகம் அவரை மறக்கத் தொடங்கியது. அவருடைய அந்தக் காப்புரிமையும் காலாவதியானது.

ஆனால், 1960-களில் டிஜிட்டல் யுகம் தொடங்கியபோது, சில விஞ்ஞானிகள் ஹெடி லாமரின் பழைய காப்புரிமையைத் தூசி தட்டி எடுத்தார்கள். 

"அடக்கடவுளே! எவ்வளவு பெரிய தொழில்நுட்பத்தை நாம் வீணடித்திருக்கிறோம்!" என்று அதிர்ந்தார்கள்.

இன்று நாம பயன்படுத்தும் Wi-Fi, Bluetooth, GPS, மற்றும் மொபைல் போன் நெட்வொர்க் (CDMA) என அத்தனை வயர்லெஸ் தொழில்நுட்பங்களுக்கும் அடிப்படை எது தெரியுமா?

அன்று 1942-ல், ’உலகின் மிக அழகான பெண்’ என்று முத்திரை குத்தப்பட்டு நிராகரிக்கப்பட்டாரே, அந்த ஹெடி லாமர் கண்டுபிடித்த அதே ’Frequency-Hopping’ தொழில்நுட்பம்தான்!

ஹெடி லாமர் தனது கடைசி காலத்தில் தனிமையில் வாழ்ந்து, 2000-ம் ஆண்டில் மறைந்தார். அவர் இறப்பதற்குச் சில வருடங்களுக்கு முன்புதான் உலகம் அவருடைய பங்களிப்பை அங்கீகரித்து விருதுகள் வழங்கியது.

இன்று ஹெடி லாமரின் அந்தப் பேரழகு காலத்தால் மறைந்திருக்கலாம். ஆனால், அவர் மூளையில் உதித்த அந்தப் பொறிதான் இன்று உலகம் முழுக்க இணையமாகப் பரந்து விரிந்து, உங்களையும் என்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறது.

அடுத்த முறை உங்கள் போனில் Wi-Fi ஆன் செய்யும்போது அல்லது ப்ளூடூத் ஹெட்செட் மாட்டும்போது, ஒரு நிமிடம் இந்த ஹாலிவுட் தேவதையை நினைத்துக் கொள்ளுங்கள்.

அதுவே, அந்தத் தேவதைக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.

#HedyLamarr #WomenInScience #WiFi #Bluetooth #History #Hollywood #Invention #Technology #TamilPost #Facts #UntoldStory 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of one or more people and flower  🌷 🌷🌷 🌷

 

🌹"கருவறை வழிபாடு"*

மணக்கால் அய்யம்பேட்டை | 10:12 AM | Best Blogger Tips

 No photo description available.

 

🌹கோவில் கருவறையின் அற்புதங்கள்!‌.*
 
*கருவறையை திரை போட்டு மூடி இருக்கும்போது இறை ஆற்றல்கள் தேங்கிநிற்கும்.*
 கோயில் கருவறை இருட்டாக இருப்பது ஏன்? - ஐபிசி பக்தி
*திரை விலக்கப்பட்டு தீப ஆரத்தி காட்டப்பட்டதும், அந்த ஆற்றல்கள் அப்படியே திரண்டு வந்து வெளியில் இரு பக்கமும் வரிசையில் நிற்பவர்கள் மீது அருள் வெள்ளமாக பாயும்.* 
 
*இந்த இறை ஆற்றல்கள், அலைகள் நமது மூளையை சுத்தப்படுத்தி நம்மை புத்துணர்ச்சி பெறச் செய்யும்.*
 
*இதை கருத்தில் கொண்டுதான் சித்த சுவாதீனம் அடைந்தவர்களை கோவில் வளாகத்தில் கட்டி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது.*
Airavatesvara Temple Darasuram India Stock Photo - Download Image Now -  Temple - Building, Indoors, Architectural Column - iStock 
*கோவிலில் தயாரிக்கப்படும் நைவேத்தியங்கள் சுவைமிக்கதாக மாறுவதற்கும், அபிஷேக நீர் நமது உடம்பில்பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் காந்த அலைகளே காரணமாகும்.*
 
*கருவறையில் உருவாகும் சக்தியானது இடமிருந்து வலமாக சுற்றுப்பாதையில் சுற்றுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.* 
 
*ஆனால் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் இதை கண்டுபிடித்து கருவறையை இடமிருந்து வலமாக நம்மை சுற்ற வைத்து விட்டனர்.*
 
*ஆண்கள் மேல் சட்டை அணியாமல் சுற்றினால் சக்தி அலைகள் நேரடியாக உடலுக்குள் புகுந்து நல்லது செய்யும்.*
 
*பொதுவாக கருவறை மூலவர் மூலம் ஆலயம் முழுவதும் காந்த சக்தி அலைகள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மிக அதிகமாக பரவும்.*
 
*எனவே பிரம்ம முகூர்த்தத்தில் கோவிலுக்கு சென்று முதல் ஆராதனையின் போது வழிபட்டால் அதிக நன்மை பெறலாம்.*
 
*இந்த காந்த அலைகள்தான் கோவிலின் பிரகாரத்தில் உள்ள சன்னதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றை கருவறையுடன் ‘‘வயர்லஸ்’’ தொடர்பு போல இணைக்கின்றன.*
 Madurai Meenakshi Amman Temple - கோவில் கருவறை என் சிறியதாக உள்ளது ?  கருவறையை திரை போட்டு மூடி இருக்கும்போது இறை ஆற்றல்கள் தேங்கிநிற்கும். திரை  ...
*எனவே*
 
*‘‘பாசிட்டிவ் எனர்ஜி’’*
 
*பெற* 
 
*"கருவறை வழிபாடு"*
 
*மிக, மிக முக்கியமானது.*
 
*வெளியே வெயில், உள்ளே குளிர்ச்சி கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் பல்வேறு சிறப்புகளை கொண்டது.*
 
*இதன் கர்ப்பகிரகம் சந்திரகாந்த கல்லால் ஆனது.*
 
*இது தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப கர்ப்பகிரகத்தை மாற்றும்.*
 
*அதாவது வெளியே வெப்பமாக இருக்கும் போது கர்ப்பகிரகம் குளிர்ச்சியாக இருக்கும்.*
 
*வெளியே கடும் குளிராக இருந்தால் கர்ப்பகிரகத்தின் உள்பகுதி வெப்பமாக மாறிவிடும்.*
 கோவில் கருவறை ஏன் இருட்டாக இருக்கிறது என்று தெரியுமா? | Did You Know Why  Temple KarpaKragha Were Dark? - Tamil BoldSky
🌹கடவுளின் சக்தியை பெற கருவறை வழிபாடே சிறந்தது.*
 
நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
 
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹
 
சிவாய நம🙇 சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.
 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 No photo description available.  🌷 🌷🌷 🌷

 

வெற்றிகரமாகவும் ஊக்கமாகவும் இருங்கள்..கனவு காணுங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:15 AM | Best Blogger Tips

வெற்றிகரமாகவும் ஊக்கமாகவும் இருங்கள்..
எல்லையில்லாமல் கனவு காணுங்கள்! | un limited dreams will make you big -  Tamil Oneindia


1.உங்கள் வரம்பு -  உங்கள் கற்பனை மட்டுமே வானமே எல்லை .


2 உங்களை நீங்களே இலக்கை நோக்கித் தள்ளுங்கள், ஏனென்றால் வேறு யாரும் அதை உங்களுக்காக செய்யப்போவதில்லை.

Buy 3Millions Wooden Showpiece Dream Believe Achieve Quotes for Study Table  | Kids Room | Office Desk | Home Decoration | Living Room | Modern Gifting  Showpiece Item Online at Low Prices in India - Amazon.in


3 சில நேரங்களில் பிறகு பார்த்துக்கலாம்  என்பது ஒருபோதும் ஆகாது. உடனே செய்.

4. பெரிய விஷயங்கள் ஒருபோதும் பாதுகாப்பான  சூழலில் இருந்து  வருவதில்லை.

5. கனவு காண்க. அதை விரும்புங்கள் . செய்யுங்கள் .
6. வெற்றி உங்களைக் கண்டு பிடிக்கவில்லை என்றால்  நீங்கள் வெளியே சென்று அதைப் பெற வேண்டும்.

7. நீங்கள் எதையாவது அடையக் கடினமாக உழைக்கிறீர்கள், அதை அடையும் போது நீங்கள் அதிகமாக உணருவீர்கள்.
 Motivational Quote about Dream Stock Vector - Illustration of believe,  motivational: 80350004
8. பெரியதாக கனவு காணுங்கள் . பெரிதாகச் செய்யுங்கள்.

9. நீங்கள் சோர்வாக இருக்கும் போது நிறுத்த வேண்டாம். நீங்கள் முடித்ததும் நிறுத்துங்கள்.

10. உறுதியுடன் எழுந்திருங்கள். திருப்தியுடன் படுக்கைக்குச் செல்லுங்கள்.

11. உங்கள் எதிர்காலம் உங்கள் வசமாக  மாற இன்று ஏதாவது செய்யுங்கள்

12. சிறிய விஷயங்கள் பெரிய நாட்களை உருவாக்குகின்றன.
வெற்றி அடைய கனவு காணுங்கள்!
13. ஒன்று கடினமாக இருக்கும், ஆனால் கடினமானது என்பது சாத்தியமற்றது என்று அர்த்தமல்ல.

14. வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டாம். அதை உருவாக்கவும்.

15. சில நேரங்களில் நாம்  பலவீனங்களைக் காட்ட அல்ல, மாறாக நம் பலங்களைக் கண்டறிய சோதிக்கப்படுகிறோம்.

16. வெற்றிக்கான திறவுகோல் தடைகளில் அல்ல, இலக்குகளில் கவனம் செலுத்துவதாகும்.

17. கனவு காணுங்கள் . நம்புங்கள். அதை உருவாக்குங்கள்.

இந்தநாள் இனிய நாளாக இருக்க வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்..
🌹 ரமேஷ் ராமலிங்கம்
🌹

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 

உணர்வு மேலாண்மை❤️💕💜💖💖❤️💜💖💕

மணக்கால் அய்யம்பேட்டை | 10:24 AM | Best Blogger Tips

 
உணர்வு மேலாண்மை

நம் உணர்வுகளைச் சரியாக கையாள வேண்டும் இல்லையெனில் மன ரீதியான பிரச்சனைகளையும், பண ரீதியான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும் ஏன் என்றால் நம் உணர்வுகளே நம்மை வழி நடத்துகின்றன.

நீங்கள் எத்தனை நேர்மறையான செய்திகளை, காணொளிகளைப் பார்த்தாலும், படித்தாலும் உங்கள் உணர்வுகள் சரியாக இல்லையெனில் அது உங்களுக்கு முழுமையான பலனைக் கொடுக்காது.

உங்கள் உணர்வுகள் சரியாக இல்லையெனில் உங்களைச் சுற்றி எத்தனை நேர்மறையான மனிதர்கள் இருந்தாலும் உங்கள் எண்ணங்கள் எதிர்மறையாக மாறுவதைத் முழுமையாகத் தடுக்க முடியாது.

எதிர்மறை உணர்வுடன் இருந்தால், நேர்மறை அதிர்வுகள் அதிகமாக இருக்கும் புனிதத் தளங்களினாலும் உங்களுக்கு நேர்மறை எண்ணங்களை ஒரு அளவிற்கு மேல் அதிகமாக்க முடியாது.
Unarvu melanmai - An online Tamil story written by Thakarthik tamizh |  Pratilipi.com
இதற்கான மூலக் காரணத்தை மீண்டும் தெளிவாகக் கூறுகிறேன்.

உங்களுக்கு நேர்மறை எண்ணம் உருவாக வேண்டுமா? அல்லது எதிர்மறை எண்ணம் உருவாக வேண்டுமா? என்பதை முடிவு செய்வதே உங்கள் உணர்வுகள் தான். 

உங்களுடைய உணர்வுகளை எந்த சூழலிலும் சரியாக வழி நடத்தக் கற்றுக் கொள்ளுங்கள். 

நேர்மறை எண்ணங்களை மட்டும் வளர்த்துக் கொள்ள நினைத்து, உங்கள் உணர்வுகளை கண்டு கொள்ளாமல் இருக்காதீர்கள்.

இத்தனை சக்தி வாய்ந்த உங்கள் உணர்வுகளை சரியாகக் கையாளுவது மிகவும் கடினமென நினைத்து விடாதீர்கள், அது மிகவும் எளிமையானது. அதற்கான சரியான மற்றும் எளிமையான வழியைக் கூறுகிறேன்.
உணர்ச்சி நுண்ணறிவு திறன்கள்: தலைமைத்துவத்தின் சிறந்த 5 பண்புகள்
அந்த வழி,

உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருப்பது தான். உங்கள் மனசாட்சிக்கு நீங்கள் உண்மையாக இருந்தாலே போதும் உங்கள் உணர்வுகள் சரியாக இருக்கும். 

யாரையும் புறம் பேசாமல், யாரையும் வேதனைப் படுத்தாமல், யாரையும் எதற்காகவும் எப்போதும் தவறாக எண்ணாமல் உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருந்தாலே போதும். 
உணர்வு பகுப்பாய்விற்கான உரை சிறுகுறிப்பு செயல்முறையைப் புரிந்துகொள்வது |  ஹைடெக் டிஜிட்டல்
யாரே ஒருவர் தவறு செய்வதை நினைத்து, அவர்களையே நினைத்து, அவர்களுடைய எதிர்மறை செயலை உங்கள் மனதிற்குள் அனுமதித்து உங்கள் உணர்வுகளை நீங்களே கெடுத்துக் கொள்ளாமல் இருந்தாலே போதும்.

மொத்தத்தில்,

உங்களுக்கு நீங்கள் 100% உண்மையாக இருந்தாலே போதும்.

😊
 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 


  🌷 🌷🌷 🌷