நேதாஜி – ஹிட்லர்: தைரியமும் தன்னம்பிக்கையும்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:27 PM | Best Blogger Tips

 File:Subhas Chandra Bose meeting Adolf Hitler.jpg - Wikimedia Commons

🔥 நேதாஜி – ஹிட்லர்: தைரியமும் தன்னம்பிக்கையும் கலந்த ஒரு வரலாற்றுச் சம்பவம் 🔥

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள்
முதல் முறையாக ஜெர்மனியில் ஹிட்லரை சந்திக்க சென்ற போது…

ஹிட்லரின் பாதுகாவலர்கள்,
நேதாஜியை ஒரு அறையில் தனியாக உட்கார வைத்தார்கள்.
Roar Tamil - இந்திய தேசிய இராணுவத்தின் சரித்திர நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர  போஸ்

“ஹிட்லர் வருகிறார்…”
“ஹிட்லர் இன்னும் சில நிமிடங்களில்…”

என்று சொல்லிக் கொண்டே நேரம் இழுத்தார்கள்.
Subhash Chandra Bose's death anniversary 1945 august 18th filght accident  tiwan The mysterious death that remains unbroken to this day | சுபாஷ்  சந்திர போஷின் நினைவு தினம்; இன்று வரை விலகாமல் ...
அந்த நேரத்தில் நேதாஜி என்ன செய்தார் தெரியுமா?

👉 எந்த பதற்றமும் இல்லாமல்
👉 எந்த அவசரமும் இல்லாமல்
👉 ஒரு புத்தகத்தை எடுத்து
அமைதியாக வாசிக்க ஆரம்பித்துவிட்டார் 📖



😮 ஹிட்லரின் சோதனை

சிறிது நேரம் கழித்து…

ஹிட்லரைப் போலவே வேடமணிந்த ஒருவர்
அந்த அறைக்குள் வந்தார்.

ஆனால்…

👉 நேதாஜி அவரைப் பார்க்கவே இல்லை
👉 தலை கூட தூக்கவில்லை
👉 வாசிப்பதைத் தொடர்ந்தார்

மீண்டும் இன்னொரு “ஹிட்லர்”
மீண்டும் இன்னொரு “ஹிட்லர்”
tamilthamarai E-magazine தமிழ்தாமரை இணைய இதழ்நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் -  tamilthamarai E-magazine தமிழ்தாமரை இணைய இதழ்
ஒவ்வொருவரும் உள்ளே வந்து பார்த்துவிட்டு சென்றார்கள்.

ஆனால் நேதாஜி
ஒரு கணமும் கவனம் சிதறவில்லை.

📌 காரணம் என்ன தெரியுமா?

அந்த காலத்தில்,
ஹிட்லரைப் போலவே வேடமணிந்தவர்களை வைத்து
பலரை ஏமாற்றி,

“நான் ஹிட்லரை சந்தித்தேன்”
என்று சொல்ல வைத்த சம்பவங்கள் இருந்தன.
18.8.1945 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவு நாள் 📌🥷🏻⚔️⚡ . . . ##nethaji  #nethajideathday #nethajisubashchandrabose👑🔥❤️ #nethajipakthan  #nethajibloods♥️💥 #ɴᴇᴛʜᴀᴊɪ ...


👑 உண்மையான ஹிட்லர் வந்த தருணம்

கடைசியாக…

உண்மையான ஹிட்லர்
மெதுவாக நேதாஜியின் பின்னால் வந்து,

👉 அவரின் தோளில் கை வைத்தார்.

உடனே நேதாஜி தலை தூக்கி,
ஒரே வார்த்தை சொன்னார்:

“ஹிட்லர்.”

😳
ஹிட்லருக்கு ஒரே வியப்பு!
Why did Netaji Subhas Chandra Bose believe that Hitler could be a great  ally?


🤯 ஹிட்லரின் கேள்வி

ஹிட்லர் கேட்டார்:

“நீங்கள் இதற்கு முன் என்னை ஒருபோதும் சந்தித்ததே இல்லை.
அப்படியிருக்க,
எப்படி என்னை நீங்கள் சரியாக அடையாளம் கண்டீர்கள்?”


The interpreter tempered Neta Ji's sharp rebuke to make it more acceptable  to Hitler. Netaji Subhas Chandra Bose met Hitler solely for strategic and  political purposes, aiming to secure support against British
🔥 நேதாஜியின் பதில் (வரலாற்றுப் punchline)

நேதாஜி சிரித்துக் கொண்டு சொன்னார்:

“இந்த உலகத்தில்
சுபாஷ் சந்திர போசின் தோளில் கை வைக்க
ஹிட்லரைத் தவிர
வேறு யாருக்கும் தைரியம் கிடையாது!”

💥💥💥



🇮🇳 இதுதான் நேதாஜி!

👉 அச்சமற்ற தைரியம்
👉 தன்னம்பிக்கையின் உச்சம்
👉 தன்மானத்தின் உயரம்
👉 தலைவருக்கே உரிய கம்பீரம்



❤️ கடைசி வரி

எத்தனை முறை படித்தாலும்
மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்
ஒரு சரித்திர நிகழ்வு இது!

🙏
சூப்பர்

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 No photo description available.  🌷 🌷🌷 🌷

 

நீங்க இல்லைன்னா நாங்க படிச்சிருக்கவே முடியாது'- தனியார் பேருந்து உரிமையாளரை

மணக்கால் அய்யம்பேட்டை | 10:48 AM | Best Blogger Tips

பரிசு வழங்கும் பிரகாஷ்
 

 

 

நீங்க இல்லைன்னா நாங்க படிச்சிருக்கவே முடியாது'- தனியார் பேருந்து உரிமையாளரை நெகிழ வைத்த மாணவர்கள்..
(ஜனவரி 2020)
👍👍
👍

May be an image of one or more people and people studying  

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது தெற்கு அய்யம்பாளையம். கரூர் மாவட்டத்தின் தெற்கு எல்லையாக இருக்கும் இந்தக் கிராமம், மிகவும் பின்தங்கிய கிராமம். இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் தினமும் கூலி வேலைக்குப் போய் வாழ்க்கையை நகர்த்தும் நிலையில் உள்ளவர்கள். இந்த நிலையில், தங்களின் மகன், மகள்களை படிக்க வைக்க 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடவூருக்கு அனுப்பவேண்டிய சூழல். இரண்டு ஊர்களுக்கும் இடையில் மூன்று சிறு வாய்க்கால்கள் ஓடுவதால், தங்கள் பிள்ளைகளை பயந்துகொண்டே பள்ளிக்கு அனுப்பி வருகிறார்கள்.
 

அந்தப் பேருந்து
இந்த நிலையில்தான், தெற்கு அய்யம்பாளையத்துக்கு வரும் தனியார் பேருந்து ஒன்றின் முதலாளி, கடந்த 10 வருடங்களாக தெற்கு அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை தனது பேருந்தில் காலை, மாலையில் இலவசமாக அழைத்துக்கொண்டு போகவும் வரவும் செய்ய, தெற்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில், தெற்கு அய்யம்பாளைய மக்கள் அந்தப் பேருந்தின் முதலாளி பிரகாஷை அழைத்துவந்து பாராட்டு விழா நடத்தியதோடு, அவரை வைத்து மாணவர்களுக்கு போட்டி நடத்தி பரிசுகளும் வழங்க வைத்தனர். அப்போதுதான், மாணவர்கள் சிலர் பிரகாஷின் கால்களில் விழுந்து வணங்கியதோடு, `நீங்க எங்களை இலவசமாக உங்க பேருந்துல அழைச்சுக்கிட்டு போய் வரலன்னா, எங்களால படிக்க முடியாம போயிருக்கும். உங்களுக்கு நன்றி' என்று கூறி, பிரகாஷையும், கிராம மக்களையும் நெகிழ வைத்திருக்கிறார்கள்.
 பாராட்டு விழாவில் பிரகாஷ்
தெற்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்த இளைஞரான பாலசுப்ரமணியிடம் பேசினோம். ``எங்க ஊர் வறட்சியான ஊர். எங்க ஊர்ல இருந்து கடவூருக்குச் சரியான சாலை வசதிகூட கிடையாது. எங்க கிராமத்துப் பிள்ளைகள் 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடவூர் போய் படிக்க வேண்டிய சூழல். தினமும் நடந்துதான் பள்ளிக்குப் போய்வந்தார்கள். அந்த வழியில் மூன்று வாய்க்கால்கள் ஓடுவதால், மழைக்காலங்களில் பயந்துகொண்டேதான் எங்க கிராமத்துப் பிள்ளைகளை பெற்றோர்கள் படிக்க அனுப்பி வந்தனர். பல பெற்றோர்கள் அப்படி அனுப்ப பயந்துகொண்டு தங்கள் பிள்ளைகளின் படிப்பை பாதியில் நிறுத்தும் கொடுமையும் நடந்தது.
 
இந்தப் பிரச்னையை யதேச்சையாக அறிந்த அந்தப் பேருந்தின் உரிமையாளர் பிரகாஷ், மாணவர்களிடம், `நீங்கள் தினந்தோறும் நடந்துதான் பள்ளிக்குப் போய் வீடு திரும்புகிறீர்களா?'னு கேட்டிருக்கிறார். 
 
மாணவர்களும், `ஆமாம்' என்று பதில் சொல்ல, பிரகாஷ் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஏழை மாணவர்கள் இலவசமாக தனது பேருந்தில் பயணிக்கும் திட்டத்தை அறிவித்தார். கடகடனு 9 வருடங்கள் ஓடி, பத்தாவது ஆண்டை தொடங்கியிருக்கு, இந்த இலவசப் பேருந்துப் பயணம். அவரின் இந்தச் சேவையால் பல பிள்ளைகளின் கல்வி தடையில்லாமல் தொடருது. 
 
அதற்கு நன்றிக்கடனாதான் அவரை அழைத்து, ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அவருக்கு பாராட்டு விழா நடத்தினோம்" என்றார்.
 
தனியார் பேருந்தின் உரிமையாளரான பிரகாஷிடம் பேசினோம். ``நான் கீழ்நிலையில் இருந்து உழைப்பின் காரணமாக முன்னுக்கு வந்தவன். எனக்குதான் தெரியும், படிப்பு எவ்வளவு முக்கியம்னு. மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள இந்த ஏழைவீட்டுப் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கணும்னு நினைச்சேன். என்னால அவர்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்னு நினைச்சேன். அப்போதுதான், தெற்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்த மாணவர்கள் கடவூர் வரை நடந்துபோய் படிக்கும் அவலத்தைப் பார்த்தேன்.
 
உடனே, அவர்கள் எனது பேருந்தில் இலவசமா பயணிக்கலாம்னு அறிவிச்சேன். இதை சாதாரணமான உதவியா நினைச்சுதான் செய்தேன். ஆனால், அந்தக் கிராமத்து மக்கள் என்னை அழைத்து பாராட்டு விழா நடத்தி என்னை நெகிழ வைத்துவிட்டார்கள். அதைவிட, அந்த மாணவர்கள் எனது கால்களில் விழுந்து வணங்கி, என்னை திக்குமுக்காட வைத்துவிட்டார்கள். இந்தச் சம்பவத்தை என் வாழ்நாளைக்கும் மறக்கமாட்டேன்" என்றார்.
 
 
Thanks & Copy from 

Paranji Sankar 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 


  

 


என்னய்யா சும்மா தமிழ் தமிழ்-ன்னு என்ன....

மணக்கால் அய்யம்பேட்டை | 9:59 AM | Best Blogger Tips

தமிழ் மொழியின் சிறப்புகள் | Specialization of Tamil Language.

என்னய்யா சும்மா தமிழ் தமிழ்-ன்னு என்ன இருக்கு அதுல? - என்று யாராவது கேட்டால் அதற்கு
இது தான் பதில்...!
 என் தமிழ்
இது தான் தமிழ் ! அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது..
பெயர்களையாவது படித்து அறிவோம்..
1. தேவாரம்
2. திருவாசகம்
3. திருமந்திரம்
4. திருவருட்பா
5. திருப்பாவை
6. திருவெம்பாவை
7. திருவிசைப்பா
8. திருப்பல்லாண்டு
9. கந்தர் அனுபூதி
10. கந்த புராணம்
11. பெரிய புராணம்
12. நாச்சியார் திருமொழி
13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..!
1.நற்றிணை
2.குறுந்தொகை
3.ஐங்குறுநூறு
4.அகநானூறு
5.புறநானூறு
6.பதிற்றுப்பத்து
7.பரிபாடல்
8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. !
தமிழ் மொழியின் சிறப்பு | Specialty Of Tamil » New Smart Tamil 
1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை
5.முல்லைப்பாட்டு
6.மதுரைக்காஞ்சி
7.நெடுநல்வாடை
8.குறிஞ்சிப் பாட்டு
9.பட்டினப்பாலை
10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்....!
தமிழ் குலமகள் 
1.திருக்குறள்
2.நாலடியார்
3.நான்மணிக்கடிகை
4.இன்னாநாற்பது
5.இனியவை நாற்பது
6.கார் நாற்பது
7.களவழி நாற்பது
8.ஐந்திணை ஐம்பது
9.திணைமொழி ஐம்பது
10.ஐந்திணை எழுபது
11.திணைமாலை நூற்றைம்பது
12.திரிகடுகம்
13.ஆசாரக்கோவை
14.பழமொழி
15.சிறுபஞ்சமூலம்
16.முதுமொழிக் காஞ்சி
17.ஏலாதி
18.இன்னிலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்...!
1.சிலப்பதிகாரம்
2.மணிமேகலை
3.சீவக சிந்தாமணி
4. வளையாபதி
5. குண்டலகேசி
போன்ற ஐம்பெருங்காப்பியங்கள்... !
1.அகத்தியம்
2.தொல்காப்பியம்
3.புறப்பொருள்
வெண்பாமாலை
4.நன்னூல்
5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் மற்றும்
6.இறையனார் களவியல் உரை எனும் உரைநூல்..!
 
May be an image of one or more people 
1.கம்பராமாயணம்-வழிநூல்.
1.முத்தொள்ளாயிரம்
2.முக்கூடற்பள்ளு
3.நந்திக்கலம்பகம்
4.கலிங்கத்துப்பரணி
5.மூவருலா போன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள்...!
ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்..
1.தொன்மை
2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை)
3.பொதுமைப் பண்புகள்
4.நடுவுநிலைமை
5.தாய்மைத் தன்மை
6.கலை பண்பாட்டுத் தன்மை
7.தனித்து இயங்கும் தன்மை
8.இலக்கிய இலக்கண வளம்
9.கலை இலக்கியத் தன்மை
10.உயர் சிந்தனை
11.மொழிக் கோட்பாடு
இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்..!
சமய குரவர்கள்
----------------------------
திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்: சமயக் குரவர்கள் மற்றும் சந்தானக்  குரவர்கள் துதி 
1. திருஞானசம்பந்தர்
2. திருநாவுக்கரசர்
3. சுந்தரமூர்த்தி சுவாமிகள்
4. மாணிக்கவாசகர்
சைவம் வளர்த்தோர்
-----------------------------------
1. சேக்கிழார்
2. திருமூலர்
3. அருணகிரிநாதர்
4. குமரகுருபரர்
12 ஆழ்வார்கள்
---------------------------
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசை ஆழ்வார்
5. நம்மாழ்வார்
6. மதுரகவி ஆழ்வார்
7. குழசேகராழ்வார்
8. பெரியாழ்வார்
9. ஆண்டாள் நாச்சியார்
10. தொண்டரடிப் பொடியாழ்வார்
11. திருப்பாணாழ்வார்
12. திருமங்கையாழ்வார்
-----------------------Saint Thiruvalluvar UPSC
தமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்..!
------------------------------------------------------------
அகம்பன் மாலாதனார்
அஞ்சியத்தை மகள் நாகையார்
அஞ்சில் அஞ்சியார்
அஞ்சில் ஆந்தையார்
அடைநெடுங்கல்வியார்
அணிலாடு முன்றிலார்
அண்டர் மகன் குறுவழுதியார்
அதியன் விண்ணத்தனார்
அதி இளங்கீரனார்
அம்மூவனார்
அம்மெய்நாகனார்
அரிசில் கிழார்
அல்லங்கீரனார்
அழிசி நச்சாத்தனார்
அள்ளூர் நன்முல்லையார்
அறிவுடைநம்பி
ஆரியன் பெருங்கண்ணன்
ஆடுதுறை மாசாத்தனார்
ஆதிமந்தி
ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
ஆலங்குடி வங்கனார்
ஆலத்தூர் கிழார்
ஆலம்பேரி சாத்தனார்
ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
ஆவூர்கிழார்
ஆலியார்
ஆவூர் மூலங்கீரனார்
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
இடைக்காடனார்
இடைக்குன்றூர்கிழார்
இடையன் சேந்தன் கொற்றனார்
இடையன் நெடுங்கீரனார்
இம்மென்கீரனார்
இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
இருந்தையூர்க் கொற்றன் புலவன்
இரும்பிடர்தலையார்
இளங்கீரந்தையார்
இளங்கீரனார்
இளநாகனார்
இளந்திரையன்
இளந்தேவனார்
இளம்புல்லூர்க் காவிதி
இளம்பூதனார்
இளம்பெருவழுதி
இளம்போதியார்
இளவெயினனார்
இறங்குடிக் குன்றநாடன்
இறையனார்
இனிசந்த நாகனார்
ஈழத்துப் பூதந்தேவனார்
உகாய்க் குடிகிழார்
உக்கிரப் பெருவழுதி
உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
உம்பற்காட்டு இளங்கண்ணனார்
உருத்திரனார்
உலோச்சனார்
உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
உழுந்தினைம் புலவர்
உறையனார்
உறையூர் இளம்பொன் வாணிகனார்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
உறையூர்ச் சல்லியங் குமரனார்
உறையூர்ச் சிறுகந்தனார்
உறையூர்ப் பல்காயனார்
உறையூர் மருத்துவன் தாமோதரனார்
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
ஊட்டியார்
ஊண்பித்தை
ஊண்பொதி பசுங்குடையார்
எயிற்றியனார்
எயினந்தையார்
எருமை வெளியனார்
எருமை வெளியனார் மகனார் கடலனார்
எழூப்பன்றி நாகன் குமரனார்
ஐயாதி சிறு வெண்ரையார்
ஐயூர் முடவனார்
ஐயூர் மூலங்கீரனார்
ஒக்கூர் மாசாத்தனார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஒருசிறைப் பெரியனார்
ஒரூத்தனார்
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
ஓதஞானி
ஓதலாந்தையார்
ஓரம்போகியார்
ஓரிற்பிச்சையார்
ஓரேர் உழவர்
ஔவையார்
............
கங்குல் வெள்ளத்தார்
கச்சிப்பேடு இளந்தச்சன்
கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
கச்சிப்பேடு பெருந்தச்சனார்
கடம்பனூர்ச் சாண்டில்யன்
கடலூர்ப் பல்கண்ணனார்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
கடுந்தொடைக் காவினார்
கோவர்த்தனர்
கோவூர்க் கிழார்
கோவேங்கைப் பெருங்கதவனார்
கோழிக் கொற்றனார்
கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
சங்கவருணர் என்னும் நாகரியர்
சத்திநாதனார்
சல்லியங்குமரனார்
சாகலாசனார்
சாத்தந்தந்தையார்
சாத்தனார்
சிவப்பிரகாசர்
சிறுமோலிகனார்
சிறுவெண்டேரையார்
சிறைக்குடி ஆந்தையார்
சீத்தலைச் சாத்தனார்
செங்கண்ணனார்
செம்பியனார்
செம்புலப்பெயல்நீரார்
செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
சேந்தங்கண்ணனார்
சேந்தம்பூதனார்
சேந்தங்கீரனார்
சேரமானெந்தை
சேரமான் இளங்குட்டுவன்
சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
சோழன் நலங்கிள்ளி
சோழன் நல்லுருத்திரன்
தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
தனிமகனார்
தாமாப்பல் கண்ணனார்
தாமோதரனார்
தாயங்கண்ணனார்
தாயங்கண்ணியார்
தாயுமானவர்
திப்புத்தோளார்
திருத்தாமனார்
தீன்மதிநாகனார்
தும்பிசேர்கீரனார்
துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
துறையூர்ஓடைக்கிழார்
தூங்கலோரியார்
தேய்புரி பழங்கயிற்றினார்
தேரதரன்
தேவகுலத்தார்
தேவனார்
தொடித்தலை விழுத்தண்டினர்
தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
தொல்கபிலர்
நக்கண்ணையார்
நக்கீரர்
நப்பசலையார்
நப்பண்ணனார்
நப்பாலத்தனார்
நம்பிகுட்டுவன்
நரிவெரூத்தலையார்
நரைமுடி நெட்டையார்
நல்லச்சுதனார்
நல்லந்துவனார்
நல்லழிசியார்
நல்லாவூர்க் கிழார்
நல்லிறையனார்
நல்லுருத்திரனார்
நல்லூர்ச் சிறுமேதாவியார்
நல்லெழுநியார்
நல்வழுதியார்
நல்விளக்கனார்
நல்வெள்ளியார்
நல்வேட்டனார்
நற்சேந்தனார்
நற்றங்கொற்றனார்
நற்றமனார்
நன்பலூர்ச் சிறுமேதாவியார்
நன்னாகனார்
நன்னாகையார்
நாகம்போத்தன்
நாமலார் மகன் இளங்கண்ணன்
நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
நெடுங்கழுத்துப் பரணர்
நெடும்பல்லியத்தனார்
நெடும்பல்லியத்தை
நெடுவெண்ணிலவினார்
நெட்டிமையார்
நெய்தற் கார்க்கியார்
நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
நெய்தற்றத்தனார்
நொச்சி நியமங்கிழார்
நோய்பாடியார்
பக்குடுக்கை நன்கணியார்
படுமரத்து மோசிகீரனார்
படுமரத்து மோசிக்கொற்றனார்
பதடிவைகலார்
பதுமனார்
பரணர்
.............
கடுந்தொடைக் கரவீரன்
கடுவன் இளமள்ளனார்
கடுவன் இளவெயினனார்
கடுவன் மள்ளனார்
கணக்காயன் தத்தனார்
கணியன் பூங்குன்றனார்
கண்ணகனார்
கண்ணகாரன் கொற்றனார்
கண்ணங்கொற்றனார்
கண்ணம் புல்லனார்
கண்ணனார்
கதக்கண்ணனார்
கதப்பிள்ளையார்
கந்தரத்தனார்
கபிலர்
கம்பர்
கயத்தூர்கிழார்
கயமனார்
கருங்குழலாதனார்
கரும்பிள்ளைப் பூதனார்
கருவூர்க்கிழார்
கருவூர் கண்ணம்பாளனார்
கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
கருவூர் கலிங்கத்தார்
கருவூர் கோசனார்
கருவூர் சேரமான் சாத்தன்
கருவூர் நன்மார்பனார்
கருவூர் பவுத்திரனார்
கருவூர் பூதஞ்சாத்தனார்
கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
கல்பொருசிறுநுரையார்
கல்லாடனார்
கவைமகன்
கழாத்தலையார்
கழார்க் கீரனெயிற்றியனார்
கழார்க் கீரனெயிற்றியார்
கழைதின் யானையார்
கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
காசிபன் கீரன்
காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
காப்பியஞ்சேந்தனார்
காப்பியாற்றுக் காப்பியனார்
காமஞ்சேர் குளத்தார்
காரிக்கிழார்
காலெறி கடிகையார்
காவட்டனார்
காவற்பெண்டு
காவன்முல்லையார்
காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்
கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
கிள்ளிமங்கலங்கிழார்
கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
கீரங்கீரனார்
கீரந்தையார்
குடபுலவியனார்
குடவாயிற் கீரத்தனார்
குட்டுவன் கண்ணனார்
குட்டுவன் கீரனார்
குண்டுகட் பாலியாதனார்
குதிரைத் தறியனார்
குப்பைக் கோழியார்
குமட்டூர் கண்ணனார்
குமுழிஞாழலார் நப்பசலையார்
குழற்றத்தனார்
குளம்பனார்
குளம்பாதாயனார்
குறமகள் இளவெயினி
குறமகள் குறியெயினி
குறியிறையார்
குறுங்கீரனார்
குறுங்குடி மருதனார்
குறுங்கோழியூர் கிழார்
குன்றம் பூதனார்
குன்றியனார்
குன்றூர்க் கிழார் மகனார்
கூகைக் கோழியார்
கூடலூர்க் கிழார்
கூடலூர்ப பல்கண்ணனார்
கூவன்மைந்தன்
கூற்றங்குமரனார்
கேசவனார்
கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
கொட்டம்பலவனார்
கொல்லன் அழிசி
கொல்லிக் கண்ணன்
கொள்ளம்பக்கனார்
கொற்றங்கொற்றனார்
கோக்குளமுற்றனார்
கோடைபாடிய பெரும்பூதன்
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
கோட்டியூர் நல்லந்தையார்
கோண்மா நெடுங்கோட்டனார்
கோப்பெருஞ்சோழன்
பராயனார்
பரூஉமோவாய்ப் பதுமனார்
பறநாட்டுப் பெருங்கொற்றனார்
பனம்பாரனார்
பாண்டரங்கண்ணனார்
பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
பாண்டியன் பன்னாடு தந்தான்
பாண்டியன் மாறன் வழுதி
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பாரிமகளிர்
பார்காப்பான்
பாலைக் கௌதமனார்
பாலை பாடிய பெருங்கடுங்கோ
பாவைக் கொட்டிலார்
பிசிராந்தையார்
பிரமசாரி
பிரமனார்
பிரான் சாத்தனார்
புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
புல்லாற்றூர் எயிற்றியனார்
பூங்கணுத் திரையார்
பூங்கண்ணன்
பூதங்கண்ணனார்
பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
பூதம்புல்லனார்
பூதனார்
பூதந்தேவனார்
பெருங்கண்ணனார்
பெருங்குன்றூர்க் கிழார்
பெருங்கௌசிகனார்
பெருஞ்சாத்தனார்
பெருஞ்சித்திரனார்
பெருந்தலைச்சாத்தனார்
பெருந்தேவனார்
பெருந்தோட் குறுஞ்சாத்தன்
பெரும் பதுமனார்
பெரும்பாக்கன்
பெருவழுதி
பேயனார்
பேய்மகள் இளவெயினி
பேராலவாயர்
பேரிசாத்தனார்
பேரெயின்முறுவலார்
பொதுக்கயத்துக் கீரந்தை
பொதும்பில் கிழார்
பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
பொத்தியார்
பொய்கையார்
பொருந்தில் இளங்கீரனார்
பொன்மணியார்
பொன்முடியார்
பொன்னாகன்
போதனார்
போந்தைப் பசலையார்
மடல் பாடிய மாதங்கீரனார்
மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
மதுரை இனங்கௌசிகனார்
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
மதுரைக் கணக்காயனார்
மதுரைக் கண்டராதித்தனார்
மதுரைக் கண்ணத்தனார்
மதுரைக் கவுணியன் பூதத்தனார்
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
மதுரைக் காருலவியங் கூத்தனார்
மதுரைக் கூத்தனார்
மதுரைக் கொல்லன் புல்லன்
மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
மதுரைச் சுள்ளம் போதனார்
மதுரைத் தத்தங்கண்ணனார்
மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
மதுரைத் தமிழக் கூத்தனார்
மதுரைப் படைமங்க மன்னியார்
மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
மதுரைப் புல்லங்கண்ணனார்
மதுரைப் பூதனிள நாகனார்
மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
மதுரைப் பெருங்கொல்லன்
மதுரைப் பெருமருதனார்
மதுரைப் பெருமருதிளநாகனார்
மதுரைப் போத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
மதுரை வேளாசன்
மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
மருங்கூர்ப் பாகை சாத்தன் பிரியனார்
பூதனார்
மருதம் பாடிய இளங்கடுங்கோ
மருதனிளநாகனார்
மலையனார்
மள்ளனார்
மாங்குடிமருதனார்
மாடலூர் கிழார்
மாதீர்த்தன்
மாமிலாடன்
மாமூலனார்
மாயேண்டன்
மார்க்கண்டேயனார்
மாலைமாறன்
மாவளத்தன்
மாறோக்கத்துக் காமக்கண்ணியார்
மாறோக்கத்து நப்பசலையார்
மாற்பித்தியார்
மிளைக் கந்தன்
மிளைப் பெருங்கந்தன்
மிளைவேள் பித்தன்
மீனெறி தூண்டிலார்
முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
முடத்தாமக்கண்ணியார்
முடத்திருமாறன்
முதுகூத்தனார்
முதுவெங்கண்ணனார்
முப்பேர் நாகனார்
முரஞ்சியயூர் முடிநாகராயர்
முள்ளியூர்ப் பூதியார்
முலங்கீரனார்
மையோடக் கோவனார்
மோசிக்கண்ணத்தனார்
மோசிக்கீரனார்
மோசிக்கொற்றன்
மோசிக்கரையனார்
மோசிசாத்தனார்
மோசிதாசனார்
வடநெடுந்தத்தனார்
வடவண்ணக்கன் தாமோதரன்
வடமோதங்கிழார்
வருமுலையாரித்தி
வன்பரணர்
வண்ணக்கன் சோருமருங்குமரனார்
வண்ணப்புறக் கந்தரத்தனார்
வாடாப்பிராந்தன்
வாயிலான் தேவன்
வாயிலிலங்கண்ணன்
வான்மீகியார்
விட்டகுதிரையார்
விரிச்சியூர் நன்னாகனார்
விரியூர் நன்னாகனார்
வில்லக விரலினார்
விழிகட்பேதை பெருங்கண்ணனார்
விற்றூற்று மூதெயினனார்
விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
வினைத் தொழில் சோகீரனார்
வீரை வெளியனார்
வீரை வெளியன் தித்தனார்
வெண்கண்ணனார்
வெண்கொற்றன்
வெண்ணிக் குயத்தியார்
வெண்பூதன்
வெண்பூதியார்
வெண்மணிப்பூதி
வெள்ளாடியனார்
வெள்ளியந்தின்னனார்
வெள்ளிவீதியார்
வெள்வெருக்கிலையார்
வெள்ளைக்குடி நாகனார்
வெள்ளைமாளர்
வெறிபாடிய காமக்கண்ணியார்
வேட்டகண்ணன்
வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
வேம்பற்றுக் குமரன்
ஒட்டக்கூத்தர்
மற்றும் பெண்பாற்புலவர்கள்:
---------------------------------------------------
அச்சியத்தை மகள் நாகையார்
அள்ளுரர் நன்முல்லை
ஆதிமந்தி - குறுந் 3
இளவெயினி - புறம் 157
உப்பை ஃ உறுவை
ஒக்கூர் மாசாத்தியார்
கரீனா கண்கணையார்
கவியரசி
கழார் கீரன் எயிற்றியார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கை பாடினியார் நச்செள்ளையார்
காமக்கணிப் பசலையார்
காரைக்காலம்மையார்
காவற்பெண்டு
காவற்பெண்டு
கிழார் கீரனெயிற்றியார்
குட புலவியனார்
குமிழிநாழல் நாப்பசலையார்
குமுழி ஞாழல் நப்பசையார்
குறமகள் ஃ இளவெயினி
குறமகள் ஃ குறிஎயினி
குற மகள் இளவெயினியார்
கூகைக்கோழியார்
தமிழறியும் பெருமாள்
தாயங்கண்ணி - புறம் 250
நக்கண்ணையார்
நல்லிசைப் புலமை மெல்லியார்
நல்வெள்ளியார்
நெட்டிமையார்
நெடும்பல்லியத்தை
பசலையார்
பாரிமகளிர்
பூங்கண்ணுத்திரையார்
பூங்கண் உத்திரையார்
பூதபாண்டியன் தேவியார்
பெண்மணிப் பூதியார்
பெருங்கோப்பெண்டு
பேய்மகள் இளவெயினி
பேயனார்
பேரெயென் முறுவலார்
பொத்தியார்
பொன்மணியார்
பொன்முடியார்
போந்தலைப் பசலையார்
மதுவோலைக் கடையத்தார்
மாற்பித்தியார்
மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி
மாறோக்கத்து நாப்பசலையார்
முள்ளியூர் பூதியார்
முன்னியூப் பூதியார்
வரதுங்க ராமன் தேவியார்
வருமுலையாருத்தி
வில்லிபுத்தூர்க் கோதையார்
வெண்ணிக் குயத்தியார்
வெள்ளி வீதியார்
வெறிபாடிய காமக்கண்ணியர்.
சித்தர்கள்: பதினெண் சித்தர்:
1. திருமூலர்
2. இராமதேவர்
3. கும்பமுனி
4. இடைக்காடர்
5. தன்வந்திரி
6. வான்மீகி
7. கமலமுனி
8. போகநாதர்
9. குதம்பைச் சித்தர்
10. மச்சமுனி
11. கொங்கணர்
12, பதஞ்சலி
13. நந்திதேவர்
14. போதகுரு
15. பாம்பாட்டிச் சித்தர்
16. சட்டைமுனி
17. சுந்தரானந்த தேவர்
18. கோரக்கர்
இது ஒரு பட்டியல்.
1. அகப்பேய் சித்தர்
2. அழுகணிச் சித்தர்
3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்
4. சதோகநாதர்
5.இடைக்காட்டுச் சித்தர்
6. குதம்பைச் சித்தர்
7. புண்ணாக்குச் சித்தர்
8. ஞானச்சித்தர்
9. மௌனச் சித்தர்
10. பாம்பாட்டிச் சித்தர்
11. கல்லுளி சித்தர்
12.கஞ்சமலைச் சித்தர்
13. நொண்டிச் சித்தர்
14. விளையாட்டுச் சித்தர்
15. பிரமானந்த சித்தர்
16. கடுவெளிச் சித்தர்
17. சங்கிலிச் சித்தர்
18. திரிகோணச்சித்தர்
இது மற்றொரு பட்டியல். இந்தப் பட்டியலில் நவநாத சித்தர்களும் அடங்குவர்.
1. வான்மீகர்
2. பதஞ்சலியார்
3. துர்வாசர்
4. ஊர்வசி
5. சூதமுனி,
6. வரரிஷி
7. வேதமுனி
8. கஞ்ச முனி
9. வியாசர்
10. கௌதமர் - இது இன்னொரு பட்டியல்.
பெரிய ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.
1. காலாங்கி
2. கமலநாதர்
3. கலசநாதர்
4. யூகி
5. கருணானந்தர்
6. போகர்
7. சட்டைநாதர்
8. பதஞ்சலியார்
9. கோரக்கர்
10. பவணந்தி
11. புலிப்பாணி
12.அழுகணி
13. பாம்பாட்டி
14. இடைக்காட்டுச் சித்தர்
15. கௌசிகர்
16. வசிட்டர்
17. பிரம்மமுனி
18. வியாகர்
19. தன்வந்திரி
20. சட்டைமுனி
21. புண்ணாக்கீசர்
22. நந்தீசர்
23, அகப்பேய்
24. கொங்கணவர்
25. மச்சமுனி
26. குருபாத நாதர்
27. பரத்துவாசர்
28. கூன் தண்ணீர்
29. கடுவெளி
30. ரோமரிஷி
31. காகபுசுண்டர்
32. பராசரர்
33. தேரையர்
34. புலத்தியர்
35. சுந்தரானந்தர்
36. திருமூலர்
37. கருவூரார்
38, சிவவாக்கியர்
39. தொழுகண்
40.பால சித்தர்
41.ஶ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்
42. நவநாதர்
(அ. சத்ய நாதர், ஆ. சதோக நாதர், இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ.
வகுளி நாதர், ஊ. மதங்க நாதர், எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்)
43. அஷ்ட வசுக்கள்
44. சப்த ரிஷிகள்.
இப்படிச் சித்தர்கள் பட்டியல் கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது. கிடைத்தவை இவைமட்டுமே.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எம் முன்னோர்கள் பேசிய இனிய மொழி எம் தாய்மொழி தமிழ்..!
இவ்வளவு சிறப்பு வாய்ந்த நம் மொழியை எவராலும் அழிக்க இயலாது.பெருமை கொள்வோம் தமிழரென்று.
தமிழனென்று சொல்லடா..!
தலை நிமிர்ந்து நில்லடா...!!
 
------------------------
 
P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,
சிறப்பு அரசு பொது வழக்கறிஞர்
மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் திருப்பத்தூர்.
 

ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று வாழ்க்கைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:37 AM | Best Blogger Tips

 

 

ஒவ்வொரு
மனிதனுக்கும் 
மூன்று வாழ்க்கைகள்
உண்டு. 

தனிப்பட்ட சொந்த வாழ்க்கை,
 
7 Gabriel Garcia Marquez ideas | gabriel garcia marquez, garcia marquez, me  quotes

பொது வாழ்க்கை,
 

மற்றும் 

அவரே அறியும்
ரகசியமான வாழ்க்கை.



மூன்றாவது சொல்லப்பட்ட இந்த ரகசியமான வாழ்க்கையின் சந்தோஷங்கள், துயரங்கள், கொண்டாட்டங்கள்.

அவரவரின் லகுக்குள் மட்டுமே எப்போதும் பயணிக்கிறது,


நினைத்துச் சிரிக்கிறது,


பரிதவித்து அழுகிறது, மீண்டும் மீண்டெழுகிறது.

தர்மம் செய்பவர்
தர்மத்தால் வாழ்வார்.


கர்மம் செய்பவர்
கர்மத்தால் வீழ்வார்
என்கிறது இறை சட்டம்.


இறுதி வரை உங்களோடு வருவது
நீங்கள் செய்த பாவ புண்ணியங்கள் மட்டுமே.

உங்களது செயல் நிச்சயம்
பல மடங்காக உங்களுக்கே திரும்ப வரும்
என்பதை ஒவ்வொரு கணமும்
மறவாது என்கிறது பகவத்கீதை.

கர்மத்தை அழித்து
தர்மத்தை நிலைநாட்ட                                  
சித்தமாயிருங்கள்.

தானம் உயர்ந்ததா ? தர்மம் உயர்ந்ததா ? என சந்தேகமா... அப்போ இந்த பதிவை  படிங்க..! - Dinasuvadu
நீங்கள் சித்தனாக இருங்கள். இன்று வரை எத்தனையோ சதிகள் செய்தும் வீழ்த்த முடியாததற்கு ஒரே காரணம்.
  
என் குரு எனக்கு கொடுத்த ஒரே ஆயுதம்
                     "தர்மம்"
                     "தர்மம்"
                     "தர்மம்"

ஏதோ ஒரு தர்மம் செய்து கொண்டே இருங்கள்.

Benefits Of Dharmam Dhanam,Karnan Story: தானம், தர்மத்திற்கு உள்ள  வித்தியாசம் என்ன? - கோயிலுக்கு சென்று வந்த பின் தானம் செய்தால் புண்ணியம்  சென்றுவிடுமா ... 

 அது பலவகை நன்மைகளை உங்களுக்குக் கொடுக்கும்.

#வாழ்த்துகள்.

#வாழ்க_வளத்துடன். 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of one or more people and dais  🌷 🌷🌷 🌷