

இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் ! 18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் ! தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.



பொதுவாகவே பத்து ரூபாய்
சாப்பாட்டுக்கடையில் மதியம் உணவு வழங்கும் நேரமான 12 மணியிலிருந்து 1.30 மணி வரை பெரும்பாலும் எந்த மொபைல் அழைப்பையும் ஏற்க மாட்டேன்.
பசியுடன் வருபவர்களை சரியாக கவனித்து
உபசரிக்க முடியாது என்பதால்.. உணவு வழங்கும் நேரத்தில் மொபைலில்
பேசிக்கொண்டிருப்பதை தவிர்த்து விடுவேன்.
உணவு வழங்கி முடித்த பிறகு 1.30 மணிக்கு மேல் தவறவிட்ட அனைத்து அழைப்புகளை
கவனித்து, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசி விடுவதை வழக்கமான
வைத்திருக்கிறேன்.
இன்றும் மதியம் சாப்பிட வருபவர்களுக்கு டோக்கன் வழங்கிக்கொண்டிருந்த போது..
சுமார் ஒரு மணியளவில் வந்த ஒரு அழைப்பை கவனித்தேன்.
ஏனோ அந்த அழைப்பை தவிர்க்க வேண்டாம் என்று மனதின் ஓரத்தில் ஒரு மெல்லிய குரல் அசரீரியாக ஒலிக்க..
அந்த அழைப்பை உயிர்ப்பித்து 'வணக்கம்' சொன்னேன்.
எதிர்பக்கம் சில கண நொடிகள் அமைதி காத்தபின் 30 - 32 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பேசினார்.
''சார்..
நான் ராஜேஷ், காளையார்கோவிலிருந்து (பெயர் ஊர் மாற்றப்பட்டுள்ளன) பேசறேன்.
சமீபத்தில் ஒரு மாசமாகவே பத்து ரூபாய் சாப்பாட்டுக்கடை ரீல்ஸ் எல்லாம்
பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பார்த்துக்கிட்டிருக்கேன்.
அங்கே
சாப்பிட வர்றவங்களுக்கு நானும் சாப்பாடு கொடுக்கணும்னு ஆசைப்படறேன். நான்
பணம் அனுப்பிச்சா.. நீங்க சாப்பாடு கொடுத்துடுவீங்களா, சார்..?''
என்று தயக்கத்துடன் கேட்க..
''சரிங்க தம்பி.. கொடுத்துடலாம்..''
என்று
(எதிரே வந்து நின்ற மூட்டை தூக்கும் வேலை செய்யும் வயதான பெரியவர் ஒருவர்
அணிந்திருந்த மொத்தமான டிராயர் கிழிந்திருப்பதை கவனித்துக்கொண்டே) நான்
சொன்னதும்..
''எவ்வளவு சார் பணம் அனுப்பணும்..? சொன்னீங்கன்னா இப்போ அனுப்பிடறேன்..!''
என்று தொடர்ந்த தயக்கத்துடன் எதிர்பக்கம் குரல் ஒலித்ததை கவனித்தேன்.
எதிரே
நின்ற பெரியவருக்கு எப்போதும் கைவசம் வைத்திருக்கும் கைலிகளில் ஒன்றை
எடுத்து கொடுத்து, அவரிடம் பிங்க் கலர் டோக்கனை கொடுத்து அவரை சாப்பிட
அனுப்பி விட்டு..
மொபைலில், ''நீங்க எத்தனை பேருக்கு
சாப்பாடு கொடுக்கணும்னு விரும்பறீங்களோ.. அது ஒருத்தராக இருந்தாலும் சரி..
பத்து பேராக இருந்தாலும் சரி.. நூறு பேராக இருந்தாலும் சரி.. அந்தளவுக்கு
பணம் அனுப்பினால் போதும்ங்க தம்பி. நாம சாப்பாடு கொடுத்துடலாம்..!''
என்று சொன்னேன்.
''சரிங்க சார்.. ஐம்பது பேருக்கு சாப்பாடு கொடுக்கறதுக்கு பணம் இப்போ அனுப்பிடறேன் சார்.'
என்று சொன்ன குரலில் இப்போது தயக்கம் போய் தழுதழுப்பு பரவிக்கொண்டிருப்பதை கவனித்துக்கொண்டே..
''சரிங்க தம்பி. நீங்க இதே நம்பருக்கு வாட்ஸ் அப் இருக்கு. அதுல உங்க பேரையும் உங்க பேமிலி பேர்களையும் அனுப்பிடுங்க.
நாளைக்கு நாம சாப்பாடு கொடுத்துடலாம்..''
என்றேன்..
அதிகமான சதவீத தழுதழுப்பான குரலில்..
''சார்.. என்னோட வொய்ப் பேரு சங்கரி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
அவங்க பேருல சாப்பாடு கொடுத்துடலாம் சார்..''
என்று சொல்லும்போதே அந்த பக்கம் அந்த ராஜேஷ் உடைந்துக்கொண்டிருப்பதை உணர முடிந்தது.
சமையலறையில் இருந்த விஜியை அழைத்து வருபவர்களுக்கு டோக்கன் கொடுக்க சைகையால் சொல்லி விட்டு..
கடைக்கு வெளியே வந்து போக்குவரத்து நிறைந்த சாலையை கடந்து எதிரே இருந்த ஹவுசிங் போர்டு கட்டிட நிழலில் போய் நின்று..
''தம்பி.. உங்க ரெண்டு பேர் பேர்லேயும் கொடுத்துடலாமே..?
ஏன் அவங்க பேர்ல மட்டும் கொடுக்க சொல்றீங்க..?''
என்று யோசனையுடன் நான் கேட்டதும்..
கரகரத்த
குரலில் ராஜேஷ், '' சார்.. நான் நல்லா வசதியோடு இருந்தேன். பிஸினஸ்ல
நஷ்டமாகி கோடிக்கணக்கான பணத்தை கோட்டை விட்டுட்டேன் சார். இதனால என்கிட்டே
என் வொய்ப் கோவிச்சுக்கிட்டு போய் மூணு வருஷமாச்சு.. இன்னிக்கு வரைக்கும்
நான் எத்தனையோ தடவை போன் செஞ்சும் எடுக்க மாட்டேங்கறாங்க. மெசேஜ்
அனுப்பிச்சாலும் ரிப்ளை செய்ய மாட்டேங்கறாங்க.. டைவர்ஸுக்கு அப்ளை
பண்ணியிருக்காங்க சார்.
நான் ஒத்துக்காம இருக்கேன்.
ஆனாலும் என்னோட உயிரே அவங்கதான் சார்.
நாளைக்கு அவங்க பிறந்த நாள் சார்..
என்கிட்டே
இப்போ கொஞ்சமாத்தான் பணம் இருக்கு. அதை அனுப்பறேன். அவங்க பேர்ல அங்கே
பசியோட வர்றவங்களுக்கு சாப்பாடு கொடுங்க சார்.. சாப்பிடறவங்களோட வாழ்த்து
அவங்களுக்கு கிடைக்கட்டும் சார்..
அது போதும் எனக்கு..
அவங்கதான் சார் எனக்கு எல்லாமே..''
என்று சொல்லும்போதே முழுமையாக உடைந்து அழ ஆரம்பிக்க..
எனக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் சில நொடிகள் அமைதியாக இருந்த நான்..
அலைபேசி அழைப்பை துண்டித்து விட்டு..
மீண்டும் சாலையை கடந்து பத்து ரூபாய் சாப்பாட்டுக்கடைக்குள் வந்து..
சாப்பிட வருபவர்களுக்கு டோக்கன் கொடுக்க ஆரம்பித்தேன்.
சில நிமிடங்கள் கழித்து,
ராஜேஷ் வாட்ஸ் அப் எண்ணிற்கு
'நாளை உங்க மனைவியின் பெயரில் உணவு வழங்கி விடுவோம்.
இனி உங்கள் வாழ்வில் உங்கள் விருப்பம் போல அனைத்தும் மாறும். அனைத்தும் நிகழும்..
உங்கள் பொருளாதார சூழலும்..உங்கள் மனைவியின் மனமும் மாறலாம்.
இதை நான் ஃபார்மாலிட்டிக்காக சொல்லவில்லை.
பத்து ரூபாய் சாப்பாட்டுக்கடையின் அனுபவத்தில் சொல்கிறேன், தம்பி..!''
என்று என் மனதில் அந்த நிமிடம் தோன்றியதை மெசேஜாக அனுப்பி விட்டு..
எதிரே
தட்டுத்தடுமாறி தள்ளாடியவாறு படியேறி வந்து நின்ற (வழக்கமாக கடைக்கு
சாப்பிட வரும் எண்பது வயதிற்கு மேல் இருக்கும்) அந்த நலிந்த தேகம் கொண்ட
பெண்மணியிடம்..
''என்னம்மா சாப்பிட்டீங்களா..? சாப்பிடுறீங்களா..?''
என்று அவருக்கு கொடுக்க பிங்க் கலர் டோக்கனை எடுத்துக்கொண்டிருக்கும்போதே..
அந்த வயதான பெண்மணி என்னருகில் வந்து நடுநடுங்கும் தன்னுடைய கைகளால் என்னுடைய தலையை தடவி கொடுத்து..
''வயிறார சாப்பிட்டுட்டேன் கண்ணு. நீ உன் மனசில நினைச்சது எல்லாம் நிறைவேறி சந்தோசமாக இருப்பே..!''
என்று சொல்ல சொல்ல..
எனக்கு அந்த ராஜேஸும் சங்கரியும் நினைவுக்கு வந்தனர்..!
Copy from FB
செலவழிக்கத் தெரியாத முதியவர்கள்
“சேமித்த வாழ்க்கை ஆனால் வாழ மறந்த வாழ்க்கை!”
இந்தியாவின் பல ஓய்வுபெற்றவர்களின் வாழ்க்கையில் ஒரு வியப்பான முரண்பாடு உள்ளது.
அவர்களிடம் பணம் இருக்கிறது… சொத்து இருக்கிறது… பாதுகாப்பு இருக்கிறது…
ஆனால் வாழ்க்கையை அனுபவிக்கும் மனநிலை இல்லை.![]()
திரு. சர்மா — இது ஒரு பெயர் மட்டும் அல்ல.
உங்கள் தந்தை, மாமா, அயலவர்… அல்லது நாமே கூட இருக்கலாம்.
அவர் வளர்ந்த காலம் பற்றாக்குறையின் காலம்.
ரேஷன் கடை வரிசை, சேமிப்பு தான் பாதுகாப்பு, அரசு வேலை தான் கனவு — அந்த தலைமுறை.
40 ஆண்டுகள் அவர் உழைத்தார்.
டாக்ஸி கட்டணம் / ஆட்டோ கட்டணம் தவிர்க்க பஸ்ஸில் சென்றார்
பேருந்து கட்டணம் மிச்சப்படுத்த நடந்தார்
கிழிந்த காலர் சட்டையையும் மாற்றாமல் அணிந்தார்.
தனது ஆசைகளை தள்ளிவைத்து குழந்தைகளின் கல்வி, திருமணம், குடும்பத்தின் எதிர்காலம் என்பதற்காக வாழ்ந்தார்.
இன்று அவருக்கு:
EMI இல்லாத வீடு,
FD, போன்ற சேமிப்புகள்,
மாதாந்திர ஓய்வூதியம்,
வங்கியில் பணம்
எல்லாமே இருக்கிறது.
ஆனால், மே மாத வெப்பத்தில் கூட
“மின்சாரம் வீண் செலவு…” என்று ஏசியை அணைத்து விட்டு வியர்த்து தூங்குகிறார்.
இதுதான் இந்திய ஓய்வுபெற்றவர்களின் மிகப் பெரிய சோகமான உண்மை.
“Switch Failure” — சேமிப்பிலிருந்து செலவிற்கு மாற முடியாத மனநிலை
நிதி உளவியல் வல்லுநர்கள் இதை
“Switch Failure” என்று கூறுகிறார்கள்.
40 வருடங்கள் மனதில் ஒரே கட்டளை:
“சேமிப்பு, சேமிப்பு இன்னும்
அந்த மனநிலை பாதுகாப்பாக மாறிவிடுகிறது.
அதனால் ஓய்வுக்குப் பிறகு:
“இப்போது செலவழித்து வாழ்க்கையை அனுபவி”
என்று சொன்னாலும், மனம் அதை ஏற்க மறுக்கிறது.
பணம் செலவிடுவது கூட அவர்களுக்கு தவறு செய்த உணர்வை தருகிறது.
இந்திய குடும்பங்களில் தினமும் நடக்கும் சில உண்மைகள்
FD வட்டியை மட்டும் பயன்படுத்துவது
வட்டியை செலவிடுவார்கள்.
ஆனால் முதல்தொகையை தொடவே மாட்டார்கள்.
“அது குழந்தைகளுக்காக…”
“அவசரத்திற்கு…”
என்று வைத்துக் கொண்டே இருப்பார்கள்.
ஆனால் பணவீக்கம் மெதுவாக அவர்களின் வாழ்க்கை தரத்தை சுருக்கிக் கொண்டே போகும்.
மருத்துவ சிகிச்சையையும் தள்ளிப்போடுவது
வங்கியில் பணம் இருந்தாலும்:
முழங்கால் அறுவை சிகிச்சை,
கண் அறுவை சிகிச்சை,
நல்ல மருத்துவ வசதி
இவற்றை “செலவு அதிகம்” என்று ஒத்திவைப்பார்கள்.
ஆரோக்கியத்தை விட பணத்தை பாதுகாக்க முயற்சிப்பார்கள்.
பயணத்திலும் அதே மனநிலை
70 வயதிலும்:
AC Coach வேண்டாம்,
Flight வேண்டாம்,
நல்ல ஹோட்டல், ஹோட்டல் சாப்பாடு வேண்டாம்…
“சில ரூபாய் மிச்சமாகட்டும்” என்பதற்காக உடலை கஷ்டப்படுத்திக் கொள்வார்கள்.
குழந்தைகளுக்காக எல்லாம் விட்டுச் செல்லும் மனநிலை
“நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்தது பிள்ளைகளுக்குத்தான்…”
இந்த எண்ணம் பல பெற்றோரின் மனதில் ஆழமாக உள்ளது.
ஆனால் சில நேரங்களில்: தாங்கள் வாழாமல், அவர்களுக்காக மட்டும் சேமித்து, இறுதியில் வாழ்க்கையே அனுபவிக்காமல் போகிறது.
அவர்களின் மிகப் பெரிய பயம் என்ன?
“நான் இன்னும் 20 வருடம் வாழ்ந்தால்…?”
பணம் தீர்ந்து போகுமோ என்ற பயம்.
ஏனெனில் அவர்கள்:
பணவீக்கம் எப்படி பணத்தின் மதிப்பை சுருக்கியது,
வாழ்க்கைச் செலவு எப்படி உயர்ந்தது
என்பதை நேரில் பார்த்தவர்கள்.
அதனால் மிக மோசமான நாளுக்காக தயார் செய்கிறார்கள்.
ஆனால் அதற்குள், நல்ல நாட்களை வாழ மறந்துவிடுகிறார்கள்.
இறுதியில் என்ன நடக்கிறது?
ஒரு நாள் அவர்கள் இல்லாமல் போகிறார்கள்.
பின்னால்:
வங்கியில் உள்ள தொகை,
பயன்படுத்தாத நகைகள்,
காலியாக இருக்கும் பெரிய வீடு…
இவை மட்டும் இருக்கும்.
ஆனால் அவர்களுடன் சேர்ந்து புதையுண்டு போவது:
செல்லாத சுற்றுலாக்கள்,
வாங்காத சிறிய ஆசைகள்,
குடும்பத்துடன் செலவிடாத தருணங்கள்,
சொல்லாமல் விட்ட அன்பு.
முடிவுரை
சேமிப்பு மிக முக்கியம்.
ஆனால் வாழ்க்கையை முழுவதும் சேமிப்பதற்காக மட்டும் வாழக் கூடாது.
பணம் என்பது
“பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய பொருள்” மட்டும் அல்ல…
“வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க பயன்படுத்த வேண்டிய கருவி” கூட.
ஓய்வு என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல.
அது:
மெதுவாக வாழ,
உடலை கவனிக்க,
விருப்பங்களை நிறைவேற்ற,
குடும்பத்துடன் நேரம் செலவிட,
மனநிம்மதியை அனுபவிக்க
கிடைத்திருக்கும் இரண்டாவது வாய்ப்பு.
இறுதியில் மனிதர்கள் நினைவில் வைத்துக் கொள்வது
நீங்கள் எவ்வளவு பணம் சேமித்தீர்கள் என்பதல்ல…
நீங்கள் எவ்வளவு சந்தோஷமாக வாழ்ந்தீர்கள் என்பதுதான்.
எனவே இன்றைய 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் உங்கள் தேவைகளுக்கு செலவழியுங்கள், வாழ்க்கையை மகிழ்வோடு வாழுங்கள், சந்தோஷமாக இருங்கள்
🙏🌹நன்றி இணையம் 🌹🙏
ரொம்ப அழகான கருத்து:::
1. கடவுள் கரும்புக்கு இனிப்பு கொடுத்தார், ஆனா பழம் கொடுக்கல
2. தங்கத்துக்கு மினுமினுப்பு கொடுத்தார், ஆனா வாசனை கொடுக்கல
3. சந்தனத்துக்கு வாசனை கொடுத்தார், ஆனா பூ கொடுக்கல
4. கடலுக்கு பெருமை கொடுத்தார், ஆனா இனிப்பு தண்ணி கொடுக்கல
5. நதிக்கு இனிப்பு தண்ணி கொடுத்தார், ஆனா நிலைப்பு கொடுக்கல
6. தாமரைக்கு பரிசுத்தம் கொடுத்தார், ஆனா சேத்துல முளைக்க வச்சார்
7. கடவுள் தன்னோட பிம்பமான சூரியனுக்கு வெளிச்சம் கொடுத்தார், ஆனா குளிர்ச்சி கொடுக்கல
8. சந்திரனுக்கு குளிர்சி கொடுத்தார், ஆனா போதுமான வெளிச்சம் கொடுக்கல
9. அறிஞனுக்கு செல்வம் கொடுக்கல. பராக்கிரமான அரசனுக்கு நீண்ட ஆயுள் கொடுக்கல
ஏன் இப்படி செஞ்சார் தெரியுமா?
ஏன்னா 'குறை' தான் மனுஷனை பூமியோட இணைச்சு வைக்குது.
அதனால உனக்கு என்ன கிடைச்சிருக்கோ அதுக்கு நன்றி சொல்லு
அதே மாதிரி எது கிடைக்கலயோ, எந்த குறை இருக்கோ அதுக்கும் மேல இருக்குறவனுக்கு நன்றி சொல்லு
இல்லனா அகங்காரம் தலைக்கு ஏறவும், அழிவு வரவும் நேரம் ஆகாது.
இதன் சாரம் என்ன?
எல்லாத்துலயும் குறை இருக்கும். அந்த குறை தான் நம்மள பணிவா வச்சிருக்கும்
இருக்கிறதுக்கு நன்றி + இல்லாததுக்கும் நன்றி = சமநிலை
🙏🌹நன்றி இணையம் 🌹🙏
நட்பு மங்கும் காலம்…
(Friendship Recession)
மனித உறவுகளுக்கான ஓர் எச்சரிக்கை பதிவு
இன்று உலகம் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.
தொழில்நுட்பம் வளர்கிறது…
வசதிகள் பெருகுகின்றன…
தொடர்புகள் அதிகரிக்கின்றன…
ஆனால், அமைதியாக நம்மிடமிருந்து விலகிச் செல்லும் ஒரு அரிய செல்வம் இருக்கிறது…
அது – உண்மையான நட்பு.
சமீபத்திய ஆய்வுகள் உலகம் முழுவதும் “Friendship Recession” எனப்படும் நட்பு மங்கும் காலம் உருவாகி வருவதைச் சுட்டிக்காட்டுகின்றன.
ஒரு காலத்தில் வாழ்க்கை நண்பர்களால் நிறைந்திருந்தது.
இன்று அது வெறும் தொடர்புப் பட்டியலாக மாறிக்கொண்டிருக்கிறது.
ஆய்வுகள் கூறுவது…
*1990-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, “எனக்கு நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லை” என்று கூறுபவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது.
பத்து அல்லது அதற்கு மேற்பட்ட நெருங்கிய நண்பர்களைக் கொண்டிருப்போர் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது.
இந்தியாவின் நகரங்களிலும் இதே நிலைதான். பழக்கமானவர்கள் அதிகம்… ஆனால் மனம் திறந்து பேசக்கூடியவர்கள் குறைந்து வருகின்றனர்.
முன்பெல்லாம் கஃபே, கிளப், பொதுநிகழ்ச்சிகள் போன்ற இடங்களில் புதிய நட்புகள் மலர்ந்தன. இன்று ஆயிரம் பேரின் நடுவிலும் பலர் தனிமையை உணர்கிறார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவில் தனியாக உணவருந்துபவர்களின் எண்ணிக்கை 29% அதிகரித்துள்ளது.
நட்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் நட்பைப் பற்றிய சிறப்புப் பாடநெறியையே அறிமுகப்படுத்தியுள்ளது.
இது வெறும் சமூகப் பிரச்சினை அல்ல…
மனிதநேயத்தை சோதிக்கும் ஒரு கலாச்சார மாற்றம்.
நட்புக்காக நேரம் ஒதுக்குவது இனி ஒரு ஆடம்பரம் அல்ல…
அது வாழ்க்கையின் அவசியம்.
தனிமை மெதுவாக ஒரு வாழ்க்கை முறையாக மாறிக் கொண்டிருக்கிறது.
நாம் நட்பை மதிக்கத் தவறினால், புதிய நண்பர்களை மட்டுமல்ல… பல ஆண்டுகளாக நம்முடன் பயணித்த உறவுகளையும் இழந்து விடுவோம்.
ஆய்வுகள் மேலும் சொல்கின்றன…
❤️ தனிமை இதய நோய், மறதி நோய் (Dementia), மற்றும் இளவயது மரண அபாயத்தை அதிகரிக்கிறது.
❤️ நீண்டகால தனிமையின் தாக்கம், ஒரு நாளுக்கு 15 சிகரெட் புகைப்பதால் ஏற்படும் பாதிப்புக்கு இணையானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
❤️ மனநலம், உடல்நலம், உணர்வுநலம் – இவை அனைத்திற்கும் நல்ல நட்பு ஒரு பாதுகாப்புக் கவசம்.
❤️ 80 ஆண்டுகளாக நடைபெற்ற ஹார்வர்டின் புகழ்பெற்ற ஆய்வு கூறுவது:
நீடித்த ஆரோக்கியத்திற்கும், உண்மையான மகிழ்ச்சிக்கும் காரணம் பணமோ புகழோ அல்ல… ஆழமான மனித உறவுகள்தான்
பணம் மீண்டும் சம்பாதிக்கலாம்…
பதவிகள் மாறலாம்…
புகழ் வந்து போகலாம்…
ஆனால்…
நீங்கள் விழும்போது கையைப் பிடித்து எழுப்புபவர்…
நீங்கள் வெற்றி பெறும்போது மனதார மகிழ்பவர்…
நீங்கள் பேசாமல் இருந்தாலும் உங்கள் மனதைப் புரிந்துகொள்பவர்…
அவர்தான் உங்கள் வாழ்க்கையின் உண்மையான செல்வம்.
ஒரு சிறிய வேண்டுகோள்…
நண்பர்களை வெறும் Contact List-ஆக மாற்றிவிடாதீர்கள்.
நேரம் ஒதுக்குங்கள்…
தேடிப் பேசுங்கள்…
சிறு தவறுகளை மன்னியுங்கள்…
சந்தித்து சிரியுங்கள்…
ஒன்றாக நினைவுகளை உருவாக்குங்கள்…
ஒரு “நலமா?” என்ற தொலைபேசி அழைப்புகூட ஒரு உறவை உயிர்ப்பிக்க முடியும்.
ஏனெனில்…
வாழ்க்கையின் உண்மையான செல்வம் நாம் சேர்த்த சொத்துகளில் இல்லை…
நம் இதயத்தில் இடம்பிடித்த மனிதர்களில்தான் இருக்கிறது.
பணம் வாழ்க்கையை வசதியாக்கலாம்…
ஆனால்…
ஒரு நல்ல நண்பர்தான் வாழ்க்கையை அழகாக்குகிறார்.
நல்ல நண்பர்களை மதியுங்கள்…
அவர்கள்தான் வாழ்க்கை நமக்குக் கிடைக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதமும், அழியாத செல்வமும்.
உங்கள் நண்பரை இன்றே தொடர்புகொள்ளுங்கள்…
ஒரு அழைப்பு… ஒரு சந்திப்பு… ஒரு புன்னகை…
ஒரு உறவை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்.
நட்பை பேணுங்கள்
உறவுகளை பேணுங்கள் மகிழ்ச்சியோடு வாழுங்கள்.
படித்ததில் சிந்திக்க வேண்டிய பதிவு என்றும்
அன்புடன்
நட்பை போற்றும் நண்பர்கள்
🙏🌹நன்றி இணையம் 🌹🙏
✨ இன்றைய சிந்தனை: அவமானம் தாங்கப் பழகு…
வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் வெகு சகஜம். நல்லதொரு உயர்வின் மகிமையை அறிந்து கொள்ள, தோல்வி என்கிற அனுபவத்தையும் பெறுவது நல்லது..jpg)
வெற்றி என்றதும், பிறரால் அவமானப்படுத்தப்படுவது என்பதும் வரும். இது மிகப்பெரிய பாடங்களை நமக்குச் சொல்லிக் கொடுத்துவிடும். அடுத்தவரின் உண்மையான முகம், நாம் அவமானப்படும்போது தெரியும்.
யார் நண்பர்,
யார் நண்பர் அல்லாதவர்,
யார் நல்லவர்,
யார் கெட்டவர்,
அவருடைய உண்மையான முகம் எது?
என்ற விஷயங்களெல்லாம் மிகத் தெள்ளத் தெளிவாகத் தெரியும்.
நமக்கு ஏற்பட்ட நிறைய அவமானப்படுத்தல்களுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும். வெற்றிகளைப் பொறுக்க முடியாதவர்களே நம்மை மிக வேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரியவரும்.
நம்மை அவமானப்படுத்தச் செயல்படும் பலர், இவற்றை மிக ரகசியமாகவே செய்கிறார்கள். வேறு யாரையாவது முன்னிறுத்தி, பின்னால் நின்று இயக்குகிறார்கள்.
இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், நம்மோடு வாழ்ந்த மனிதர்கள் நம்முடைய உயர்வைக் கண்டு பொறாமைப்படத் தொடங்குகிறார்கள். அநேகமாக, அவர்கள் பொறாமை மிகுதியால் அவமானப்படுத்துகிறார்கள்.
எப்போதும் வாழ்க்கையில் நம்மைச் சுற்றி இருப்பவர்கள்தான் எதிரிகள். எதிரிகள் என்று எவரும் தனியாக உருவாவது இல்லை.
"என்கூட பம்பாயில் பிளாட்பாரத்துல வியாபாரம் பண்ணிட்டு, இன்னிக்கு ஒரு கடைக்கு முதலாளியாயிட்டா விட்டுருவோமா? உதைப்போம்."
"உன்னைப் போய் முதலாளின்னு கூப்பிடுறாங்களே, எனக்கு வயிறு எரியுது" என்று சண்டை போட்ட மனிதர்களை நான் அறிவேன்.
கடைக்கு முதலாளி ஆனவனுடைய உழைப்பும், கம்பீரமான காத்திருத்தலும், பிளாட்பாரத்தில் விவரம் கெட்டத்தனமாய் அலைகிறவனுக்குப் புரியவில்லை.
நன்றாக வளர்ந்த பிறகும், ஒரு வம்பு சண்டைக்காரனுடன் மல்லுக்கு நிற்க வேண்டியது இருக்கிறது. அதை வேடிக்கை பார்க்கும் நாலு பேருக்குப் பதில் சொல்ல வேண்டியது இருக்கிறது. ஆனால், வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்.
இம்மாதிரியான மனிதர்களை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், இந்த அவமானத்திற்குப் பயந்துவிடக் கூடாது.
என்ன செய்ய வேண்டும்?
கோபப்பட வேண்டும்; நிதானமாகக் கோபப்பட வேண்டும்.
பாரதி, "ரௌத்திரம் பழகு" என்று சொல்கிறார். ரௌத்திரம் என்ற வடசொல்லுக்கு வெஞ்சினம் என்று பொருள் கொள்ளலாம். வெறும் சினம் அல்ல; மிகக் கடுமையான சினம்.
காரியமாற்றும் சினம். பதிலுக்கு என்ன செய்வது என்று திட்டமிட்டு, அவமானம் செய்தலை எதிர்க்கும் சினம்.
அவமானம் நண்பர்களால் ஏற்பட்டாலும், உறவுகளால் ஏற்பட்டாலும், அந்நியர்களால் ஏற்பட்டாலும், நெல்முனையளவும் கவலை கொள்ளாதீர்கள்.
எதனால் இது?
எங்கு தவறு?
வேண்டுமென்றே செய்யப்படுகிறதா?
அல்லது, விவரமில்லாத விஷயமா?
என்பதை யோசித்து, மிக வேகமாக ஒரு முடிவு எடுங்கள்.
எதிர்க்க முடியாத சூழலில், எதிர்ப்பைக் காட்ட முடியாத நிலையில்கூட உங்களுக்குக் கடும் அவமானம் ஏற்படும். அப்போது, அவமானத்தை நன்கு அனுபவியுங்கள்.
அவமானப்படுத்துதலைப் புரிந்து கொண்டு, அதற்கு அழாது, கண்ணீர் விட்டுக் கதறாது, உள்ளே இறுக்கிக் கொள்ளுங்கள்.
மகாகவி பாரதியின் வரிகளை நினைவில் கொள்ளுங்கள்.
"பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளலாகாது பாப்பா;
மோதி மிதித்துவிடு பாப்பா."
அவருக்கு எதிரே வெற்றி பெற்று, சிரித்து, சிலாகித்து நில்லுங்கள். அவர் தானாகக் குன்றிப் போவார்.
அவருக்கு முன் ஜெயித்து, "நலமா?" என்று விசாரியுங்கள். அவர் மனம் உடனே செத்துப் போகும்.
பழி வாங்குதலில் மிகச் சிறந்த விஷயம், நீங்கள் திரும்பத் திரும்ப வெற்றி காண்பதே.
வாழ்வில் வெற்றி வேண்டுமெனில், அவமானப்படுங்கள். அவமானத்திற்கு அஞ்சாதீர்கள். அவமானம் ஒரு உரம்; கடுமையான உரம், காரமான உரம்.
"அதனாலென்ன... உரம்தானே?"
தனிமனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு போருக்கும் பொறுப்பாளிகள் — நமது சொந்த வாழ்க்கையின் ஆளுமைத்தன்மை, தேசியவாதக் கொள்கைகள், சுயநலம், கடவுள்கள், கருத்துச் சேகரிப்புகள், இலட்சியங்கள் காரணமாக. இவை அனைத்தும் நம்மைப் பிரிக்கின்றன.
நாம் மாறாவிட்டால், தனிமனிதர்களான நீங்களும் நானும் மாறாவிட்டால், இந்த உலகம் மாறாது. இதுதான் உண்மை — நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்.
அனைவரது வாழ்விலும் காயங்கள் இருக்கும். அந்தக் காயத்துடனும் சிரிப்பது அவ்வளவு எளிதல்ல. காயங்களுடன் சிரிக்க, ஒரு சிலரால்தான் முடிகின்றது.
அப்படிச் சிரிக்கப் பழகிக் கொண்டால், எந்தக் காயமும் அவ்வளவு பெரிதல்ல.
நாம் கடந்து சென்ற அனைத்தும் வாழ்க்கைக்கான பாதைகள் அல்ல.
கடந்து வந்ததில் கற்றுக் கொண்ட பாடங்கள்தான் வாழ்க்கைக்கான பாதைகள்.
ஒருவர் உங்களுடன் பேச நேரம் இல்லை என்றால், நம்பாதீர்கள். அவர்களின் முன்னுரிமைப் பட்டியலில் நீங்கள் இல்லை என்பதே அர்த்தம்.
நன்றி: கே.எஸ். ராதாகிருஷ்ணன், எழுத்தாளர்


வருவாய்த் துறை அலுவலர்களின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளை வரையறுத்த முக்கிய அரசாணை!![]()
G.O.(Ms.) No.581, Revenue Department, dated 03.04.1987
மாவட்ட வருவாய் நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்தவும், Revenue Divisional Officer (RDO), Tahsildar, Revenue Inspector (RI) மற்றும் Village Administrative Officer (VAO) ஆகிய அலுவலர்களின் அதிகாரங்கள், பொறுப்புகள் மற்றும் பணிகளை ஒரே நடைமுறையில் செயல்படுத்தவும் தமிழக அரசு G.O.(Ms.) No.581, Revenue Department, dated 03.04.1987 என்ற முக்கிய அரசாணையை வெளியிட்டது. இந்த அரசாணை இன்று வரை வருவாய்த் துறையின் அடிப்படை Job Chart (பணிப்பட்டியல்) ஆகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
⚖️ அரசாணை விவரங்கள்
அரசாணை எண்: G.O.(Ms.) No.581
துறை: Revenue Department
தேதி: 03.04.1987
பொருள்:மாவட்ட வருவாய் நிர்வாகத்தை மேம்படுத்துதல் – கீழ்நிலை வருவாய் அலுவலர்களுக்கான பணிப்பட்டியல் (Job Chart), காலக்கெடு (Time Chart) மற்றும் மேற்பார்வை (Review Chart) நிர்ணயம்.
அரசாணையின் நோக்கம்.
இந்த அரசாணையின் மூலம்:
* RDO
* Tahsildar
* Revenue Inspector
* Village Administrative Officer
ஆகியோரின் பணிகள் தெளிவாக வரையறுக்கப்பட்டன.
மேலும்,
* எந்த அலுவலர் எந்த பணியை மேற்கொள்ள வேண்டும்?
* எவ்வளவு காலத்தில் முடிக்க வேண்டும்?
* யார் யாரை ஆய்வு (Review) செய்ய வேண்டும்?
என்பதற்கும் தெளிவான நடைமுறைகள் வகுக்கப்பட்டன.
வருவாய் கோட்டாட்சியர் (RDO) – முக்கிய கடமைகள்.
அரசாணையின் இணைப்பில் (Annexure) RDO-விற்கு பல முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் சில:
* தாசில்தார் அலுவலகங்களின் மேற்பார்வை.
* பொதுமக்கள் குறைதீர் முகாம்கள் நடத்துதல்.
* முதியோர் ஓய்வூதிய நிர்வாகம்.
* இயற்கை பேரிடர் நிவாரணப் பணிகள்.
* சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு.
* குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் (Cr.P.C. Sections 143/145 போன்றவை) உத்தரவு வழங்குதல்.
* அரசு நில ஆக்கிரமிப்பு தொடர்பான மேல்முறையீடுகளை விசாரித்தல்.
* நில ஒதுக்கீடு, பட்டா மற்றும் நிலமாற்று தொடர்பான ஆய்வு.
தாசில்தார் (Tahsildar) – முக்கிய கடமைகள்.
தாசில்தாரின் முக்கிய அதிகாரங்கள்:
* தாலுகா நிர்வாகத்தின் பொறுப்பு.
* சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகள்.
* நத்தம் மற்றும் வீட்டுமனை மனுக்களுக்கு உத்தரவு.
* இயற்கை பேரிடர் நிவாரணம்.
* தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம், 1905-ன் கீழ் அரசு நில ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு வழங்குதல்.
* B-Memo வழக்குகள்.
* அரசு புறம்போக்கு நிலங்கள் ஆய்வு.
* கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகளை மேற்பார்வை செய்தல்.
* சமூகச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ் போன்ற நிர்வாக நடவடிக்கைகள்.
வருவாய் ஆய்வாளர் (Revenue Inspector)
Revenue Inspector-க்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்புகள்:
* VAO-க்களின் பணிகளை கண்காணித்தல்.
* கிராமக் கணக்குகள் ஆய்வு.
* பட்டா புத்தகங்கள் சரிபார்த்தல்.
* அரசு நிலங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் ஆய்வு.
* தாசில்தார் வழங்கிய ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவுகளை நிறைவேற்றுதல்.
* சட்டவிரோத மணல், கல் குவாரிகள் போன்றவற்றை ஆய்வு செய்தல்.
* பயிர் ஆய்வு (Azmoish).
கிராம நிர்வாக அலுவலர் (VAO)
VAO-வின் முக்கிய பணிகள்:
* கிராமக் கணக்குகள் பராமரித்தல்.
* வரி வசூல்.
* பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள்.
* சிட்டா, அடங்கல் நகல் வழங்குதல்.
* அரசு புறம்போக்கு நிலங்களை பாதுகாத்தல்.
* இயற்கை பேரிடர் தகவல் வழங்குதல்.
* காவல்துறைக்கு தேவையான தகவல்கள் வழங்குதல்.
* பொது சொத்துக்கள் பராமரிப்பு.
நிர்வாக காலக்கெடு (Time Chart)
இந்த அரசாணையில் பல்வேறு வருவாய் பணிகளுக்கு அதிகபட்ச காலக்கெடும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக:
* நத்தம் புறம்போக்கு நில ஒதுக்கீடு – 2 மாதங்கள்
* பட்டா மாற்றம் – 1 மாதம்
* அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றுதல் – 2 மாதங்கள்
* குடிநீர் வசதி – 3 மாதங்கள்
* பல்வேறு மனுக்கள் – 1 முதல் 3 மாதங்கள்.
மேற்பார்வை (Review Chart)
அரசாணையில், ஒவ்வொரு அலுவலரின் பணிகளையும் மாதந்தோறும் ஆய்வு செய்யும் முறை வகுக்கப்பட்டுள்ளது:
* RDO – மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) ஆய்வு.
* Tahsildar – RDO ஆய்வு.
* Revenue Inspector – Tahsildar ஆய்வு.
* VAO – Tahsildar / Revenue Inspector ஆய்வு.
முடிவுரை
G.O.(Ms.) No.581, Revenue Department, dated 03.04.1987 என்பது தமிழக வருவாய்த் துறையின் அடிப்படை நிர்வாக அரசாணையாகும். RDO, Tahsildar, Revenue Inspector மற்றும் VAO ஆகியோரின் அதிகாரங்கள், கடமைகள், பணிகளை நிறைவேற்ற வேண்டிய காலக்கெடு மற்றும் மேற்பார்வை முறைகளை ஒருங்கிணைத்து வகுத்துள்ள இந்த அரசாணை, மாவட்ட வருவாய் நிர்வாகத்தின் முக்கிய வழிகாட்டி ஆவணமாக இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நடுவானில் மிதக்கும் பாறை போலத் தெரிகிறதா?
உண்மை வேறுதான்!
இந்தப்
புகைப்படத்தை முதன்முறையாகப் பார்க்கும்போது, ஒரு பெரிய பாறை வானில்
மிதப்பது போலத் தோன்றலாம். ஆனால் இதில் எந்த அமானுஷ்யமும் இல்லை.
சற்று
கவனமாகப் பார்த்தால், பாறையின் கீழே இருப்பது போலத் தெரியும் கருமையான
பகுதி, உண்மையில் அந்தப் பாறையின் நிழல் என்பதைக் கவனிக்கலாம்.
உண்மையான
பாறை தரையில்தான் உள்ளது. அதன் நிழல் கீழேயும் சற்று பக்கவாட்டிலும்
விழுந்திருப்பதால், அது காற்றில் மிதப்பது போன்ற மாயத் தோற்றத்தை
உருவாக்குகிறது.
இந்த மாயை
உருவாகக் காரணம், பின்னணியில் இருக்கும் வெளிர் நிறமும் தெளிவற்ற
காட்சியும்தான். அதை நமது மூளை வானமாகப் புரிந்துகொள்வதால், தரை மிகவும்
கீழே இருப்பது போலத் தோன்றுகிறது.
நிழல்,
ஒளி, பார்வைக் கோணம், சுற்றுப்புறம் போன்ற பல தகவல்களை வைத்து ஆழத்தை நமது
மூளை கணிக்கிறது. ஆனால் அவை தெளிவாக இல்லாதபோது, கணநேரத்தில் தவறான
முடிவுக்கு வந்து, இப்படிப்பட்ட கண் மயக்கும் ஒளியியல் மாயையை (Optical
Illusion) உருவாக்கிவிடுகிறது.
🙏🌹நன்றி இணையம் 🌹🙏
Thanks & Copy from
#OpticalIllusion
#MindBlown
#ScienceFacts
ரயில் ஸ்டேஷனை விட்டு மெதுவாக கிளம்பிக் கொண்டிருந்தது.
ஜன்னல் வழியாக குளிர்ந்த காற்று வீசியது
. எதிரே இருந்த பர்த்தில் என் பார்வை சென்றது. ஒரு சிரித்த முகம். அம்மையாருக்கு வயது 65 இருக்கும். ஹிமாச்சல் பிரதேசம் மணாலிக்கு தனியாக பயணம் செய்து கொண்டிருந்தார். முதுகில் ஒரு சிறிய பை.
நான் சாதாரணமாக கேட்டேன், "ஆன்ட்டி, தனியாகவா ? பயமாக இல்லையா ?"
அவர் கலகலவென சிரித்தார். பல வருட சுமைகள் எல்லாம் ஒரு நொடியில் அந்த சிரிப்பில் கரைந்தது போல அப்படி ஒரு சிரிப்பு.
அவர் சொன்னார்: "குழந்தே, பயம் வந்ததெல்லாம் எல்லோரும் கூட இருந்த போதுதான். இப்போது நான் தனியாக இருக்கிறேன். அதனால்தான் உண்மையிலேயே சுதந்திரமாக இருக்கிறேன்."![]()
பேச்சின் போக்கில் அவர் எனக்கு ஒரு அழகான வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொடுத்தார்.
அவர் சொன்னார்: "நான் அறுபதுக்கு அப்புறம்தான் வாழக் கத்துக்கிட்டேன். அப்போதுதான் சில விஷயங்களை கை கழுவினேன்".
கட்டுப்படுத்த வேண்டும் என்கிற பிடிவாதத்தை விட்டு விட்டேன்:

"முன்னாடி கணவர், பிள்ளைகள், பணம் எல்லாத்தையும் என் கைக்குள் வச்சுக்க முயற்சி பண்ணினேன். இப்போது மணல் மாதிரி விட்டு விடுகிறேன். மனசு ரொம்ப லேசா இருக்கு."
மத்தவங்க கிட்ட எதிர்பார்க்கிறதை விட்டு விட்டேன்:
"பையன் போன் பண்ணினால் சந்தோஷம். பண்ணவில்லை என்றாலும் பரவாயில்லை. நான் அவனுக்கு பிறப்பு கொடுத்தேன். அதற்காக அவன் மேல் நான் உரிமை கொண்டாட முடியாது."
மற்றவர்களை மாத்தணும் என்கிற முயற்சியை விட்டு விட்டேன்:
"ஐம்பது வருஷம் கணவரை மாத்த முயற்சி பண்ணிணேன். அவர் அப்படியே இருந்தார். அப்புறம் நான் என்னையே மாத்திக்கிட்டேன். வாழ்க்கையில் அமைதி வந்து விட்டது."
எல்லோரையும் சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற துடிப்பை விட்டு விட்டேன்:
"மருமகள், உறவினர்கள், சமூகம் என எல்லோரையும் சந்தோஷப்படுத்தியதில், என்னையே நான் மறந்து போனேன்.
இப்போதுதான் நான் எனக்கு உண்மையாக இருக்கிறேன்."
ஒவ்வொரு தவறுக்கும் என்னையே குறை சொல்வதை விட்டு விட்டேன்:
"குழம்பில் உப்பு கம்மி-ஜாஸ்தி ஆனால் கூட மணிக்கணக்காக மனதில் போட்டு அழுதிருக்கிறேன். இப்போது நான் எனக்கு சொல்லிக் கொள்கிறேன். நான் மனுஷிதான், கடவுள் இல்லை."
ஒவ்வொரு விளைவைப் பத்தியும் கவலைப் படுவதை விட்டு விட்டேன்:
"ரயில் நேரத்துக்கு வருவதோ அல்லது தாமதமாக வருவதோ என் கையில் இல்லை. அப்புறம் எதற்கு கவலை ? நான் டீ குடிக்கிறேன். இயற்கையை ரசிக்கிறேன்."
எதிர்காலம் பற்றிய பயத்தில் இன்றைய வாழ்வை தவற விடுவதை தவிர்த்தேன்:
"நாளைக்கு முழங்கால் வலிக்கும் என இன்றைக்கு மலை ஏறாமல் இருக்கணுமா ? இப்போது உடம்பில் தெம்பு இருக்கிறது. அதனால் இன்றைக்கு வாழ்கிறேன்."
என் கையில் இல்லாத விஷயங்களுக்கு என் சக்தியை செலவு பண்ணுவதை விட்டு விட்டேன்:
"யார் என்ன சொல்லுவார்கள், அரசியலில் என்ன ஆகும், பக்கத்து வீட்டில் என்ன சொல்லுவார்கள் என்று நினைப்பதை எல்லாம் விட்டு விட்டேன். இப்போது இரத்த அழுத்தம் கூட நார்மலாக இருக்கிறது."
இப்போது நான் என்ன பண்ணுகிறேன் ?
"என்னை நான் கவனித்துக் கொள்கிறேன். என்னிடம் நானே பேசுகிறேன். பிறர் என்னைப் பற்றி என்ன சொல்கிறார்களோ, அதை ஒரு காதில் வாங்கி, இன்னொரு காது வழியாக விட்டு விடுகிறேன்."
ஜன்னலுக்கு வெளியே ஒரு முறை பார்த்து விட்டு அவர் சொன்னார்:
"தண்ணீர் எந்தப் பக்கம் ஓடும் எனத் தீர்மானிப்பது என் கையில் இல்லை. ஆனால் புயல் அடித்தாலும் என் படகு ஆடாமல் இருக்க துடுப்பை எப்படி போடணும் என்பது என் கையில்தான் இருக்கிறது." சந்தோஷமும் திருப்தியும் கடைகளில் கிடைக்காது. எந்தக் கவலையும் இல்லாமல் அமைதியாக தூங்குகிற தலையணையில்தான் திருப்தியும் நிம்மதியும் இருக்கிறது.
திருப்தி இருக்கிறது, எவ்வித பயமும் இல்லாமல் தனியாக நடக்க கத்துக்கிட்ட கால்களில்.
மணாலி ஸ்டேஷன் வந்து விட்டது. இறங்கும் போது அவர் சொன்னார்:
"இளமையில் நான் உலகத்தின் உறவை கூட்டிக் கொண்டே இருந்தேன். இப்போது இந்த வயதில் நான் என்னுடன் மட்டும் உறவு வைத்துக் கொள்கிறேன்."
"அதனால்தான் நான் சிரிக்கிறேன். ஏனெனில் இப்போது என் மீது எந்த சுமையும் இல்லை. இப்போது நான் மட்டும்தான். என்னோட அமைதியான, திருப்தியான மனசு மட்டும்தான்."
வாழ்க்கையின் உண்மையான சந்தோஷம் மற்றவர்களை மாற்றுவதில் இல்லை. நம்மை நாமே புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வதில்தான் இருக்கிறது.
🙏🌹நன்றி இணையம் 🌹🙏