'மினி காஷ்மீர்' காந்தளூர் மலை

மணக்கால் அய்யம்பேட்டை | 3:39 PM | Best Blogger Tips

 

 May be an image of fire tower

ஊட்டி கொடைக்கானல் போர் அடிச்சிருச்சா...? புதுசா ஏதாவது மலை பிரதேசம் சுற்றுலா போக ஆசையா அதுவும் கம்மியான பட்ஜெட்ல ...அதிகம் கூட்டம் இல்லாமல் அசத்தும் செம மலை பிரதேசம் தான் காந்தளூர். தென்னகத்தின் மினி காஷ்மீரின் அழைக்கப்படும் கோடை வாசஸ்தலம்.
 

 May be an image of cloud and mountain

காடுகளுக்குள் அழகிய நீர்வீழ்ச்சி,வியூ பாயிண்ட்கள்,இரவில் ஜீப் சவாரி என அசத்தும் சுற்றுலாத்தலம்…
 
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் 'மினி காஷ்மீர்' என அழைக்கப்படும் காந்தளூர் மலை கிராமம் அமைந்துள்ளது. இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே அமைந்திருக்கும் காந்தளூர்.
 
மலைவளம் மிக்க, காடுகள் நிறைந்த, பல அருவிகள் ஆர்ப்பரிக்கும் ஓர் அழகிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.
 
விடுமுறையை சிறந்த முறையில் கொண்டாட திட்டம் வைத்திருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல பட்ஜெட் ஸ்பாட்.
 
மலைகள், நீர்வீழ்ச்சிகள், ஆறு, தேயிலைத் தோட்டங்கள், பழ தோட்டங்கள் போன்றவை ​இங்கு உள்ளன.
 
தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லையின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்தக் கிராமத்து மக்களில் பெரும்பாலானோர் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள்.
 
10% மக்கள் மலையாளம், தெலுங்கு பேசுபவர்களாக உள்ளனர்.





 
கடல் மட்டத்தில் இருந்து காந்தளூர் 5000 அடி உயரத்தில் அமைந்து உள்ளது.
 
ஆப்பிளுக்கு பெயர் பெற்ற காஷ்மீருக்கு அடுத்த படியாக, தென் இந்தியாவில் காந்தளூரில் மட்டுமே ஆப்பிள்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
 
மேலும் ப்ளம்ஸ், ஆரஞ்சு, பிளாக்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி பழங்களும் இங்கு விளைவிக்கப்படுகிறது.
 
இங்கு நிறைய வியூ பாயிண்ட்கள் உள்ளன. அது மட்டும் அல்லாமல் பல அருவிகள் ஆங்காங்கே கொட்டுகின்றன.
 
காந்தளூரின் அழகை காண நினைப்பவர்கள் டென்ட் ஸ்டே என சொல்லப்படும் கூடார அமைப்புகளில் தங்குவது நல்ல அனுபவத்தை அளிக்கும். இவை வாடகைக்கு கிடைக்கின்றன.
சுற்றிலும் மலைகள் இருப்பதால் இயற்கை ஆர்வலர்கள், புகைப்பட பிரியர்களுக்கு மிகவும் ஏற்ற இடம் காந்தளூர்.
 
உடுமலைப்பேட்டையில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் மலைகளுக்கு நடுவே அழகிய தோற்றமளிக்கும் காந்தளூர் நீர்வீழ்ச்சி உள்ளது.
அருவிக்கு நடந்து செல்லும் ஒரு கிலோ மீட்டர் தூர பயணம் காடுகளுக்குள் அமைந்து இருக்கிறது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப் பூ காந்தளூரில் பூக்கிறது.
 
அடுத்ததாக காந்தளூரில் அனகோட்டா பார்க் எனும் வரலாற்று சிறப்பு மிக்க இடத்தை பார்த்து வர மறக்காதீர்கள். இரவில் ஜீப் சவாரி அலாதியான அனுபவத்தை வழங்கும்.

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 

ரயில் புறப்படும் போது ஏன் பச்சை கொடி காட்டுகிறார்கள் தெரியுமா?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:11 PM | Best Blogger Tips

 May be an image of 2 people, train and text

 


🟢🔴
இன்றைய காலக்கட்டத்தில் எவ்வளவோ தொழில்நுட்பங்கள் வந்திருந்தாலும் இன்றும் இரயில்களில் ஏன் பச்சைக் கொடி காட்டுகிறார்கள் என்று இன்றும் பலருக்கு தெரியவில்லை. இன்றும் பலருக்கு இந்த கேள்வி இருக்கும். ஸ்டேஷனிலிருந்தோ அல்லது ரயில்வே கேட்டை கடக்கும் போதோ அங்குள்ள ஸ்டேஷன் மாஸ்டர் அல்லது ஸ்டேஷனில் பணியாற்றுபவர்கள் மற்றும் ரயிலில் உள்ள என்ஜின் டிரைவர் பச்சைக்கொடி காட்டுவார்கள்.
 
 இது பல காலமாக பின் பற்றி வருகிறது. ஆனால் எவ்வளவோ டெக்னாலஜி வளர்ந்து கொண்டிருந்தாலும் பச்சைக் கொடி காட்டுவது மட்டும் இன்றும் மாறவில்லை.
 
இந்தியாவின் மிக முக்கியமான துறைகளில் ரயில்வே போக்குவரத்து துறை முதல் இடத்தை பிடித்துள்ளது. இதில் தினமும் பல்வேறு மக்கள் பயணம் செய்கிறார்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக செல்வதற்கு மக்கள் ரயிலில் பயணிக்கிறார்கள். 
 
ரயிலை இயக்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல, ஒரு குழுவாக ஒன்று சேர்ந்து செயல்பட்டால் மட்டுமே ரயிலை இயக்க முடியும். எனவே இந்தியாவில் அதிகம் ஊழியர்கள் உள்ள இடம் ரயில்வே துறை மட்டுமே. 
 
ரயில்வே துறையில் காரணம் இல்லாமல் எந்த ஒரு பொருளையும் பயன்படுத்த மாட்டார்கள். அந்த வகையில் பச்சை கொடியை ஏன் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா வாங்க அதனை முழுமையாக படித்து தெரிந்துகொவோம்.
 
 
பச்சைக் கொடி காட்ட காரணம்?
 
ரயில் என்ஜின் ட்ரைவர் ரயில் புறப்படும் போதும் ரயில் நிலையத்திற்குள் நுழையும் போதும் பச்சைக் கொடியை காட்டுவார்கள். 
 
ரயில்வே ஸ்டேஷனில் ஸ்டேஷன் மாஸ்டர் அல்லது பாயிண்ட்மேன்களும் பச்சைக் கொடி காட்டுவார்கள். இதை நாம் சிறு வயதிலிருந்தே பார்த்து கொண்டிருக்கிறோம்.
 
ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு ரயில் புறப்படுவதை தெரிவிக்கவும், ஸ்டேஷன் மாஸ்டர் அந்த ரயில் கடந்து செல்ல அனுமதிப்பதற்காகவும் பச்சைக் கொடி காட்டப்படுகிறது. ரயில்வே சிக்னல் என்ற விஷயம் வருவதற்கு முன்பே இந்த பச்சைக் கொடி காட்டும் வழக்கம் கொண்டு வரப்பட்டது . 
 
எவ்வளவோ தொழில்நுட்ப வசதி இருந்தாலும் தொடர்ந்து பச்சைக் கொடி காட்டுவதன் மூலம் சில தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுகிறது.
அதிகமாக ரயில்கள் இரவிலும் இயக்கபடுகின்றன. இந்நிலையில் பயணிகளின் பாதுகாப்பிற்காக ரயில் ஓட்டுனர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து ரயிலை இயக்க வேண்டும். 
 
ரயில் ஸ்டேஷனை கடந்து செல்லும் பொழுது ஸ்டேஷன் ஊழியர் பச்சைக் கொடியை அசைப்பார் அதே சமயம் ரயிலில் உள்ள டிரைவரும் பச்சைக் கொடியை அசைப்பார்.
 
இதனால் ரயிலில் டிரைவர் எச்சரிக்கையாக இருக்கிறார்கள் என்று அர்த்தமாம்.
ரயிலில் பச்சை கொடி காட்டுவதன் முக்கியத்துவம்:
 
ஒருவேளை ரயிலில் உள்ள டிரைவர் பச்சைக் கொடி காட்டவில்லை என்றால் ஸ்டேஷன் மாஸ்டர் அங்கு ஏதோ தவறு என்பதை அறிந்து கட்டுப்பாட்டு அறையில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 
 
இந்த தகவல் அறிந்த பின் அவர்கள் ரயில் ஓட்டுனரை தொடர்பு கொண்டு அவர்கள் அங்கு என்ன பிரச்சனை என்று அறிந்து பின் எச்சரிக்கையாக இருப்பதை உறுதி செய்வார்கள்.
 
அதே போல் ஸ்டேஷனில் ஸ்டேஷன் மாஸ்டர் பச்சைக் கொடி காட்டவில்லை என்றால் உடனே ரயிலில் உள்ள டிரைவர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். 
 
அதன் மூலம் ஸ்டேஷனில் என்ன பிரச்சனை என்பதை ரயில்வே போலீசார் அறிந்து காரணம் கூறவேண்டும்.
 
இந்த ஒரு விஷயத்திற்காக தான் எவ்வளவோ தொழில்நுட்பம் கொண்டுவரபட்டிருந்தாலும் ரயிலில் பச்சைக் கொடி காட்டும் பழக்கம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 

வெற்றி ஒரே இரவில் வந்துவிடாது

மணக்கால் அய்யம்பேட்டை | 10:42 AM | Best Blogger Tips

 No photo description available.

1. நீங்கள் ஒரு வீட்டை சொந்தமாக்க விரும்பினால், ஒரு நிலத்தை வாங்குவதன் மூலம் தொடங்குங்கள்.
 
2. நீங்கள் ஒரு பேரரசை சொந்தமாக்க விரும்பினால், உங்கள் தொழிலை வளர்ப்பதன் மூலம் தொடங்குங்கள்.
 
3. நீங்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், ஆரோக்கியமாக சாப்பிடுவதன் மூலம் தொடங்குங்கள்.
 
4. நீங்கள் ஞானியாக விரும்பினால், 
புத்தகங்களைப் படிப்பதன் மூலம் தொடங்குங்கள்.
 
5. நீங்கள் உலகம் முழுவதும் பயணம் செய்ய விரும்பினால், பணத்தை சேமிப்பதன் மூலம் தொடங்குங்கள்.
 
6. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், நன்றியுடன் இருப்பதன் மூலம் தொடங்குங்கள்.
 
7. நீங்கள் பணக்காரராக விரும்பினால், உங்கள் நிதிகளை நிர்வகிப்பதன் மூலம் தொடங்குங்கள்.
 
8. நீங்கள் ஒரு நல்ல தலைவராக இருக்க விரும்பினால், முதலில் உங்களை நீங்களே வழிநடத்துவதன் மூலம் தொடங்குங்கள்.
 
9. நீங்கள் ஒரு நல்ல பெற்றோராக இருக்க விரும்பினால், ஒரு நல்ல முன்மாதிரியாக இருப்பதன் மூலம் தொடங்குங்கள்.
 
10. நீங்கள் வெற்றிபெற விரும்பினால், சிறிய படிகளை எடுத்து வைப்பதன் மூலம் தொடங்குங்கள்.
 
11. நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க விரும்பினால், உங்களை நீங்களே நம்புவதன் மூலம் தொடங்குங்கள்.
 
12. நீங்கள் ஒரு புதிய திறமையைக் கற்றுக்கொள்ள விரும்பினால், தினமும் பயிற்சி செய்வதன் மூலம் தொடங்குங்கள்.
 
13. நீங்கள் படைப்பாற்றல் மிக்கவராக இருக்க விரும்பினால், புதிய விஷயங்களை முயற்சிப்பதன் மூலம் தொடங்குங்கள்.
 
14. நீங்கள் மதிக்கப்பட விரும்பினால், மற்றவர்களை மதிப்பதன் மூலம் தொடங்குங்கள்.
 
15. நீங்கள் வலுவான உறவுகளை உருவாக்க விரும்பினால், நம்பகமானவராக இருப்பதன் மூலம் தொடங்குங்கள்.
 
16. உங்கள் இலக்குகளை அடைய விரும்பினால், அவற்றை தெளிவாக அமைப்பதன் மூலம் தொடங்குங்கள்.
 
17. நீங்கள் ஒழுங்கமைக்கப்பட விரும்பினால், உங்கள் இடத்தை ஒழுங்கமைப்பதன் மூலம் தொடங்குங்கள்.
 
18. நீங்கள் சுதந்திரமாக இருக்க விரும்பினால், உங்கள் அச்சங்களை விட்டுவிடுவதன் மூலம் தொடங்குங்கள்.
 
19. நீங்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால், முதலில் உங்களை நீங்களே மாற்றிக் கொள்வதன் மூலம் தொடங்குங்கள்.
 
20. நீங்கள் ஒரு மாரத்தான் ஓட விரும்பினால், தினமும் நடப்பதன் மூலம் தொடங்குங்கள்.
 
21. நீங்கள் ஒரு தொழிலைத் தொடங்க விரும்பினால், ஒரு தேவையை அடையாளம் கண்டு தொடங்குங்கள்.
 
22. நீங்கள் மற்றவர்களுக்கு உதவ விரும்பினால், முதலில் உங்களுக்கு நீங்களே உதவுவதன் மூலம் தொடங்குங்கள்.
 
23. நீங்கள் ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள விரும்பினால், ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்வதன் மூலம் தொடங்குங்கள்.
 
24. நீங்கள் உற்பத்தித் திறன் கொண்டவராக இருக்க விரும்பினால், உங்கள் நேரத்தை புத்திசாலித்தனமாக நிர்வகிப்பதன் மூலம் தொடங்குங்கள்.
 
25. நீங்கள் அறிவைப் பெற விரும்பினால், கேள்விகளைக் கேட்பதன் மூலம் தொடங்குங்கள்.
 
26. நீங்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் தொடங்குங்கள்.
 
27. நீங்கள் நிம்மதியாக இருக்க விரும்பினால், வெறுப்புகளை விட்டுவிடுவதன் மூலம் தொடங்குங்கள்.
 
28. நீங்கள் வலுவாக இருக்க விரும்பினால், நம்பிக்கையுடன் சவால்களைத் தாங்குவதன் மூலம் தொடங்குங்கள்.
 
29. நீங்கள் அன்பாக இருக்க விரும்பினால், முதலில் உங்களிடம் கருணை காட்டுவதன் மூலம் தொடங்குங்கள்.
 
30. நீங்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த விரும்பினால், நீங்கள் உண்மையானவராக இருப்பதன் மூலம் தொடங்குங்கள்.
 
வெற்றி ஒரே இரவில் வந்துவிடாது, குறிப்பிடத்தக்க எதையும் அடைவதற்கு நிலையான முயற்சி தேவை. வீடு வாங்குவதாக இருந்தாலும் சரி, தொழில் தொடங்குவதாக இருந்தாலும் சரி, மரியாதை பெறுவதாக இருந்தாலும் சரி, பயணம் ஒரு அடி எடுத்து வைப்பதில் இருந்து தொடங்குகிறது. முன்னால் உள்ள இலக்கின் பிரமாண்டத்தைக் கண்டு சோர்வடைய வேண்டாம். அந்த முதல் அடியை எடுத்து வைப்பதில் கவனம் செலுத்துங்கள், பின்னர் அடுத்த அடியை எடுத்து வைப்பதில் கவனம் செலுத்துங்கள், நீங்கள் அதை அறிவதற்கு முன்பே, உங்கள் கனவுகளை நனவாக்கும் பாதையில் 
 
நீங்கள் நன்றாக 
முன்னேறிவிடுவீர்கள். முக்கியமானது, எவ்வளவு சிறியதாக இருந்தாலும் தொடங்குவதும், விடாமுயற்சியுடன் இருப்பதும் ஆகும். நம்பிக்கையுடன் இருங்கள், நீங்கள் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

தனிமனித ஆரோக்கியம், சமூகத்தில் சுத்தம்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:32 AM | Best Blogger Tips

 Personal Hygiene - Vrindawan University

1. கழிவறையும், குளியலறையும் வீட்டிற்குள் வைக்காமல் கொல்லைபுறத்தில் வைத்தார்கள். ஏன்?
 உங்க வீட்டில் பாத்ரூம் இந்த இடத்தில் இருப்பது உங்களுக்கு தீராத  துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம்...! | Vastu Tips for Bathroom - Tamil BoldSky
- பெயர் வைக்காத கண்ணுக்கு தெரியாத கிருமிகள்.
 
2. சலூனுக்கும், சாவுக்கும் சென்று வந்தால் எதையும் தொடாமல் குளித்தபின் வீட்டிற்குள் வந்தார்கள். ஏன்? -கிருமிகள்.
 Profile for தமிழ் வரலாறு
3. செருப்பை வீட்டின் வெளியே விட்டார்கள். ஏன்? -கிருமிகள்.
 செருப்பு – விருப்பும் வெறுப்பும்”…. வ ...
4. பள்ளிக்கும், வெளியேயும் சென்று வந்தால் கைகால் கழுவி வீட்டிற்குள் வர சொன்னார்கள். ஏன்? -கிருமிகள்.
 கை மற்றும் கால்களை அழகாக்குவதற்கான இரகசியம்!!! | Ways To Beautify Hands and  Legs | கை மற்றும் கால்களை அழகாக்குவதற்கான இரகசியம்!!! - Tamil BoldSky
5. பிறந்தாலோ, இறந்தாலோ தீட்டு என்று 10, 16 நாட்கள் தனிமைபடுத்தினர். ஏன்? -கிருமிகள்.
 பாரம்பரிய விளையாட்டுகள் (@culturemedianteam2018) • Instagram photos and  videos
6. சாவு வீட்டில் சமைக்க கூடாது என்றார்கள். ஏன்? -கிருமிகள்.
 Rumees - 1. கழிவறையும், குளியலறையும் வீட்டிற்குள் வைக்காமல் கொல்லைபுறத்தில்  வைத்தார்கள். ஏன்? - பெயர் வைக்காத கண்ணுக்கு தெரியாத கிருமிகள். 2 ...
7. குடும்பத்திற்கு சமைக்கும் பெண்கள் குளித்துவிட்டு சமைத்தார்கள். ஏன்? -கிருமிகள்.
 வீட்டிற்கு வெளியே சாணம் தெளித்து கோலமிடும் நம் தமிழர் பண்பாட்டின் நன்மைகள்  ......Pin page
8. வாசல் பெருக்கி சாணம், மஞ்சள் தெளித்து கோலமிட்டார்கள். ஏன்? -கிருமிகள்.
 வீடு தேடிவரும் புதிய பித்தளை செம்பு பாத்திரங்கள்/copper utensils  shopping/brass utensil/Zacs kitchen
 
9. மண், செம்பு, வென்கல பாத்திரங்களை உபயோகித்தார்கள். ஏன்? -கிருமிகள்.
 வீட்டில் செய்யும் உணவு கூட ஆரோக்கியமற்றதாக இருக்கும்: மருத்துவ அமைப்பு ICMR  எச்சரிக்கை
10. வீட்டில் சமைத்த உணவையே பெரும்பாலும் உண்டார்கள். ஏன்? -கிருமிகள்.
 
தனிமனித ஆரோக்கியம், சமூகத்தில் சுத்தம், அண்டை அயலாரோடு அகலாது அனுகாது உறவாடுதல் போன்ற நம் மூதாதையர் வாழ்வியல் நெறியை கிண்டலடித்து, திட்டமிட்டு சிதைத்து நாகரீகம் எனும் பெயரில் அதற்கான விலையை இன்று கொடுத்து கொண்டிருக்கிறோம்.
 
இனியாவது இத்தலைமுறையினர்
 
“மூத்தோர் சொல் வார்த்தையும், முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின்பு இனிக்கும்” என்றுணர்வோமா?

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷


 

ஆஞ்சியோகிராம் இல்லாமல் மற்றும்மருத்துவமனைஇல்லாமலே

மணக்கால் அய்யம்பேட்டை | 11:13 AM | Best Blogger Tips

 May be an image of text that says "Femoral artery Catheter insertion"

ஆஞ்சியோகிராம் இல்லாமல் மற்றும்மருத்துவமனைஇல்லாமலே ,இரண்டேநிமிடத்தில்,இருதயஅடைப்பை கண்டறியக் கூடியஅதி நவீன CT -700 என்றஇயந்திரம்கண்டறியப்பட்டு உள்ளது.
இது சென்னையில் இரண்டு இடங்களில் உள்ளது. இதற்கு செலவோ மிகக் குறைவு.
முன் கூட்டியே இருதய அடைப்பை கண்டறியும் போது ஆரம்ப கட்டத்தில் மாத்திரைகள் மூலமாகவே அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தி கொள்ள வாய்ப்பு உள்ளது.
இதன் மூலமாக பல லட்சக்கணக்கான சக்கரை நோயாளிகளை மாரடைப்பு இல்லாமல் காப்பாற்றலாம்.
மேலும் விவரங்களுக்கு,
DR. Vivekanandan,
Sri Vivekananda Hospitals,
No. 15, P. S. Siva Samy Street,
Mylapore.
(Opposite to ICICI Bank, Back Side of Nilgiri's)
Tel: 95000 37040, 72006 48296, 98401 25472, 44 4319 2129, Chennai.
எவருக்கு தேவையோ, அவருக்கு இந்த பகிர்வு உதவியாக இருக்க கூடும்.
உங்களுக்காக...
✍️ மதுரை., இஸ்மாயில்.

மனித உடலை பாதுகாக்க முன்னோர்கள் சொன்ன உணவு முறைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:08 AM | Best Blogger Tips

 No photo description available.

 

மனித உடலை பாதுகாக்க முன்னோர்கள் சொன்ன உணவு முறைகள்:
மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த சில எளிய வழிகள்
மூளை
-----------------
கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.
குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.
வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.
தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.
கண்கள்
------------------
பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.
தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.
அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரை சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.
வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டைகாய் மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.
தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.
தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும் கண் பலப்படும்.
பற்கள்
--------------
மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.
கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.
செவ் வாழைப்பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.
பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
நரம்புகள்
-------------------
சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.
இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வர நரம்புகள் பலம் பெறும்
மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வர நரம்புகள் வலுப்பெறும்.
இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வர நரம்புகள் பலம் பெறும்.
கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நரம்புகளுக்கு நல்லது.
ரத்தம்
-------------
வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.
திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.
தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.
அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.
இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
சருமம்
---------------
தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.
முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்
சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.
ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வர வேண்டும்.
நுரையீரல் & இதயம்
---------------------------------------
தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.
கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.
ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்
இஞ்சி முரப்பா, இஞ்சிச்சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.
சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
கருப்பு திராட்சை ஜூஸ், கருப்பு உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.
முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.
ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது
வயிறு
---------------
காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.
மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.
வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.
வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.
சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.
வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.
வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்.
கல்லீரல் & மண்ணீரல்
-----------------------------
கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.
மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.
திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.
மலக்குடல்
-----------------------
அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.
பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.
அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.
மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.
மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.
பாதம்
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்
லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.
வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.
இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்.....!

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

எலும்பை #பலப்படுத்தும் இந்த 2 பொருள்கள்...

மணக்கால் அய்யம்பேட்டை | 11:05 AM | Best Blogger Tips

 May be an image of bone and x-ray

எலும்பை பலப்படுத்தும் இந்த 2 பொருள்கள்... இப்படி சாப்பிட்டு பாருங்க:
 
எலும்பை பலப்படுத்தும் இந்த 2 பொருட்களை தினமும் எடுத்துக்கொண்டால், மூட்டுகளில் வரக்கூடிய வலி படிப்படியாக குறையும். எலும்புகளும் ஆரோக்கியமாக இருப்பதற்கு ரொம்ப உதவியாக இருக்கும்
 
“தினமும் அரை ஸ்பூன் அளவு வெள்ளை எள் நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் வெள்ளை எள் அரை ஸ்பூன் அளவு வாயில் போட்டு மென்னு சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ப்ளர் வெநீர் குடிக்க வேண்டும். இப்படி தினமும் வெள்ளை எள் சாப்பிட்டு வந்தால் எலும்புத் தேய்மானம் நோய் படிப்படியாக குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 
 
அதே போல, தினமும் காலையில் பல் துலக்கிய பிறகு, #தேங்காயை சின்ன சின்ன துண்டுகளாக எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் எலும்புத் தேய்மானம் பிரச்னை குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தேங்காயை துருவலாகவும் சாப்பிடலாம்.
 கருவேப்பிலை Curry Leaves (Bunch) - Otrumai - Online store for Grocery and  Gourmet Foods
அடுத்தது, #கருவேப்பிலை, ஒரு இனுக்கு கருவேப்பிலை எடுத்து தண்ணீரில் கழுவிவிட்டு அதை வாயில் போட்டு மென்னு சாப்பிட்டுவிட்டு கூட ஒரு டம்ப்ளர் வெந்நீர் குடித்துவிட்டால் போதுமானது.
 பாதாம் பால் குடிப்பதால் கிடைக்கும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் | health  benefits of drinking almond milk in tamil | HerZindagi Tamil
அடுத்தது, #பாதாம் #பால், இதை நம் வீட்டிலேயே தயார் பண்ண வேண்டும். தினமும் காலையில் 6-7 பாதாம் பருப்பை தண்ணீரில் 
 
ஊறவைத்துவிடுங்கள். சாயந்திரம் பாதாம் பருப்பு தோலை உரித்துவிட்டு நன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்துவிடுங்கள். அதனுடன் நீங்கள் வெதுவெதுப்பாக பால் சேர்த்து, கொஞ்சம் சுக்குபொடி போட்டு இரவு தூங்குவதற்கு முன்பு குடியுங்கள். இப்படி பாதாம் பால் குடித்துவந்தால், மூட்டுகளில் வரக்கூடிய வலி படிப்படியாக குறையும். எலும்புகளும் ஆரோக்கியமாக இருப்பதற்கு ரொம்ப உதவியாக இருக்கும்.”

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 

40- வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்கவும்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:03 AM | Best Blogger Tips

 40 வயதுக்கு மேல் சேமிப்பைத் தொடங்கும்போது கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்! 7  Things to Consider When Starting Savings Over 40!

 

*40- வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்கவும்* *குறிப்பாக 45 வயதிற்கு மேலே உள்ள நமது குரூப்பில் உள்ள அங்கிள்ஸ் அனைவரும் கட்டாயம் இந்த குறிப்புகளை தயவுசெய்து படித்து பின்பற்றவும்*
******************
நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், ஆரோக்கியமாக இருக்க இவை அனைத்தையும் கவனியுங்கள்:
::::::::::::::::::::::::::::::::::
உங்கள் தேநீரில் *பால்* குறைவாக குடிக்கவும். அதற்கு பதிலாக, *எலுமிச்சை அல்லது எலுமிச்சை சாறு* சேர்க்கவும்.
~~~~~~~~~~~~~~~
பகல் நேரத்தில், *அதிக தண்ணீர்* குடிக்கவும்; இரவு நேரத்தில், *குறைவாக* குடிக்கவும்.
~~~~~~~~~~~~~~~
பகலில் *2 கப் காபிக்கு* மேல் குடிக்க வேண்டாம் அல்லது முற்றிலும் *நிறுத்தவும்* என அறிவுறுத்தப்படுகிறது.
~~~~~~~~~~~~~~~
*எண்ணெய் உணவுகளை குறைவாக உண்ணுங்கள்* .
~~~~~~~~~~~~~~~
சிறந்த தூக்க நேரங்கள் *இரவு 10 மணி முதல் காலை 6* மணி வரை.
~~~~~~~~~~~~~~~
மாலையில், *மாலை 5 அல்லது 6 மணிக்குப் பிறகு ஏதாவது சிறிது சாப்பிடுங்கள்.*
~~~~~~~~~~~~~
*குளிர்ந்த நீரில் மருந்துகளை எடுத்துக் கொள்ளாதீர்கள்* . படுக்கைக்குச் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன் உங்கள் *மருந்துகளை* எடுத்துக் கொள்ளுங்கள். மருந்துகளை உட்கொண்டு உடனடியாக *படுத்துக்கொள்ளாதீர்கள்* .
~~~~~~~~~~~~~~~
நீங்கள் மேலும் ​​​​ *குளிர்ந்த தண்ணீரைக் குடிப்பதை நிறுத்துங்கள்* ஆனால் *அறை வெப்பநிலையில் தண்ணீரை மட்டுமே* குடிக்கவும்
~~~~~~~~~~~~~~~
ஒரு நாளைக்கு *குறைந்தது 8 மணிநேரம் தூங்க* முயற்சி செய்யுங்கள்.
~~~~~~~~~~~~~~~
முடிந்தால் மதியம் முதல் *மாலை 3 மணி வரை அரை மணி* நேரம் தூங்குவது, *மன அழுத்தத்தைக் குறைக்கும். இளமையாகவும்* , எளிதில் வயதாகாமல் இருக்கும்.
~~~~~~~~~~~~~~~
உங்கள் மொபைல் ஃபோன் *பேட்டரியில் குறைவான சார்ஜில்* அழைப்புகளை செய்ய வேண்டாம், ஏனென்றால் ஆபத்தான கதிர்வீச்சு மற்றும் அலைகள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை விட *பல மடங்கு* அதிகமாக இருக்கும்.
~~~~~~~~~~~~~~~
*செல் போன் பேச பதிலளிக்க* உங்கள் இடது காதைப் பயன்படுத்தவும், வலது காது உங்கள் *மூளையை நேரடியாகப் பாதிக்கும்* . அழைப்புகளுக்குப் பதிலளிக்க *ஒயருடன் கூடிய இயர்போன்களைப்* பயன்படுத்துவது இன்னும் சிறந்தது, *புளூ டூத் இயர்ஃபோன்களை கட்டாயம் தவிர்க்க.*
~~~~~~~~~~~~~~~
உங்களால் முடிந்தவரை அடிக்கடி சரிபார்க்க வேண்டிய இரண்டு விஷயங்கள்:
(1) உங்கள் *இரத்த அழுத்தம்*
(2) உங்கள் *இரத்த சர்க்கரை.*
(3)தேவை ஏற்படின் *யூரியா கிரியாட்டினின்* அளவு ~~~~~~~~~~~~~~~
*உங்கள் உணவுகளில் குறைந்தபட்சமாக* குறைக்க வேண்டிய ஆறு விஷயங்கள்:
(1) *உப்பு*
(2) *சர்க்கரை*
(3) பாதுகாக்கப்பட்ட இறைச்சி மற்றும் உணவுகள்
(4) *குறிப்பாக வறுத்த சிவப்பு இறைச்சி*
(5) பால் பொருட்கள்
(6) மாவுச்சத்துள்ள பொருட்கள்
~~~~~~~~~~~~~~~
உங்கள் உணவில் அதிகரிக்க வேண்டிய நான்கு விஷயங்கள்:
(1) *கீரைகள்/* காய்கறிகள்
(2) *பீன்ஸ்*
(3) *பழங்கள்*
(4)கொட்டைகள்
~~~~~~~~~~~~~~~
நீங்கள் மறக்க வேண்டிய ஐந்து விஷயங்கள்:
(1) *உங்கள் வயது*
(2) *உங்கள் கடந்த காலம்*
(3) *உங்கள் கவலைகள்/குறைகள்*
(4) *மது புகை மாது சூது (5)அடுத்தவர்களை பார்த்து இலக்கு நிர்ணயிப்பது ~~~~~~*~~~~~~~~~
நீங்கள் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் அல்லது எவ்வளவு வலிமையாக இருந்தாலும் உங்களிடம் இருக்க வேண்டிய மூன்று விஷயங்கள்:
(1) *உங்களை உண்மையாக நேசிக்கும் நண்பர்கள்*
(2) *அக்கறையுள்ள குடும்பம்*
(3) *நேர்மறை எண்ணங்கள்* ~~~~~~~~~~~~~~~
ஆரோக்கியமாக இருக்க நீங்கள் செய்ய வேண்டிய ஏழு விஷயங்கள்:
(1) *பாடுதல்*
(2) *நடனம்*
(3) *உண்ணாவிரதம்*
(4) *புன்னகை/சிரித்தல்*
(5) *மலையேற்றம்/உடற்பயிற்சி*
(6) *உங்கள் எடையைக் குறைக்கவும்.*
~~~~~~~~~~~~~~~
நீங்கள் *காத்திருக்க கூடாத* ஐந்து விஷயங்கள்:
(1) *நீங்கள் சாப்பிட பசி எடுக்கும் வரை காத்திருக்க வேண்டாம்*
(2) *நீங்கள் குடிக்க தாகம் எடுக்கும் வரை காத்திருக்க வேண்டாம்*
(3) *நீங்கள் தூங்குவதற்கு தூக்கம் வரும் வரை காத்திருக்க வேண்டாம்*
(4) *நீங்கள் ஓய்வெடுக்க சோர்வாக உணரும் வரை காத்திருக்க வேண்டாம்*
(5) *மருத்துவப் பரிசோதனைக்காகச் செல்ல உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் வரை* காத்திருக்காதீர்கள், இல்லையெனில் *வாழ்க்கையில் நீங்கள் வருத்தப்படுவீர்கள்* .
~~~~~~~~~~~~~~~
இந்த சுகாதார உதவிக்குறிப்புகளைப் படித்த பிறகு நீங்கள் செய்ய வேண்டிய ஒன்று:
(1) இதை உங்கள் *அன்புக்குரியவர்கள் மற்றும் நண்பர்களுக்கு தயவுசெய்து கட்டாயம் பகிருங்கள்,* நீங்கள் அவ்வாறு செய்யும்போது, ​​ உங்களுடைய *சமுதாயம் ஆரோக்கியமான புரிதலுடன் கூடிய வாழ்க்கை அமையும்.*
=================
உங்களின் இயல்பான *பணிகளை,வியாபாரத்தை* மேற்கொள்ளும் போது, ​​நீங்கள் எவ்வளவு உடல் தகுதியுடன் இருக்கிறீர்கள் என்பதை அறிய, எப்பொழுதும் உங்கள் உடலைச் சரிபார்த்துக்கொள்ள மறக்காதீர்கள்,
மருத்துவ தகுதிகள்:
உயர் இரத்த அழுத்தம்
----------
*120/80 -- இயல்பானது*
*130/85 --இயல்பான (கட்டுப்பாடு)*
*140/90 -- உயர்*
*150/95 -- மிக அதிகம்*
----------------------------
*பல்ஸ்*
----------
நிமிடத்திற்கு 72 (தரநிலை)
60 --- 80 p.m. (சாதாரண)
*40 -- 180 p.m.(அசாதாரண)*
----------------------------
*உடல் வெப்ப நிலை*
-------------------
98.4 F (சாதாரண)
*99.0 F மேலே (* காய்ச்சல்)
உங்கள் உறவினர்கள், நண்பர்கள் இந்த தகவலை பகிர்ந்து உதவுங்கள்....
*மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படாமல் இருக்க இரவில் இரத்தம் உறைவதைத் தவிர்க்க நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது* ஒரு கிளாஸ் *வெதுவெதுப்பான* நீரைக் குடிக்கவும்.
தயவு செய்து உங்கள் *குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இந்தக் கட்டுரையை பகிரவும்.*
*நன்றி.*

 🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷