நாம் செய்த தவறுகள் நம் பிள்ளைகளைச் ........

மணக்கால் அய்யம்பேட்டை | 2:41 PM | Best Blogger Tips

பெற்றோர்கள் செய்த பாவம் பிள்ளைகளுக்கு வருமா ??? - YouTube

பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை...
 பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை  குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன் ...
குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம் கிருஷ்ணா நான் குருடனாக இருந்தபோதும், 

விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது
100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார். 
பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை  குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன் ...
கிருஷ்ணர் - உனக்கு நான் ஒரு கதை சொல்கிறேன். அதற்குப் பதில் சொன்னால், நீ கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன்.., என்று கதையை சொல்ல ஆரம்பித்தார்...

நீதி தவறாது ஆட்சி செய்த அரசனிடம் வறியவன் ஒருவன் சமையல்காரனாகச் சேர்ந்தான். மிகச் சுவையாக சமைப்பது, 

அவரை பிரத்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே
தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.

அரசருக்கு வித்தியாசமான சுவையை செய்துகொடுத்து பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை ஒன்று தோன்றியது. அதன்படி அரண்மனைக் குளத்தில் இருந்த
அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து அரசருக்குப் பரிமாறினான். தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அச்சுவையில் மயங்கிய மன்னர், அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி சமைக்குமாறு கட்டளையிட்டார். 
பெற்றோர் செய்த பாவம் பிள்ளையை சேரும்..??? 💯#ஆன்மீகம் #om #aanmeegam  #murugan #shortsfeed #shiva - YouTube
அதோடு அந்தச் சமையல்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார். 

திருதராஷ்டிரா இப்போது சொல் என்ற கிருஷ்ணன்..

அரசன், சமையல் கலைஞன்
இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்? என்று பகவான் கேட்டார். 

வசிஷ்டரின் சமையல்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்துவிட்டார். 
செய்த பாவத்திற்கு பரிஹாரம் இல்லை என்று பெரியோர், சான்றோர் கூறக்  கேட்டிருப்போம். கீழ் கண்ட கதையை படித்தால், காரணம் என்ன என்று நமக்கு ...
ஆயினும் அதை வசிஷ்டர் கண்டுபிடித்து, அவனுக்கு சாபமிட்டார், அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே! 

சமையல்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான். அதனால்
அவன் செய்த தவறு சிறியது. 

ஆனால் பல நாட்கள்
அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத அரசன்தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான் என்றார் திருதராஷ்டிரன். 

புன்னகைத்த கண்ணன்,
திருதராஷ்டிரா நீயும் ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது மன்னன் செய்ததே தவறு எனக் கூறினாய். 
பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை!
அத்தகைய நீதிதான் பீஷ்மர், துரோணர் போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது. நல்ல மனைவி, நூறு குழந்தைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது. 

ஆனால், நான்சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான். சென்ற பிறவியில்
நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய். 

அந்த அன்னங்கள், அதன் தாயார் எத்தகைய வேதனை அடைந்திருக்கும் என்பதை உன்
நூறு பிள்ளைகளை இழந்து நீ அறிந்து கொள்கிறாய். 

ஆனால் தினம் தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. அப்புறம்
உனக்கு கண் எதற்கு? அதனாலேயே நீ குருடனானாய்

தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும்
நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்! என்றார். 

தன்வினையே தன்னைச் சுட்டதென்பதை உணர்ந்த திருதராஷ்டிரன் வாயடைத்து நின்றான். 

நாம் செய்த தவறுகள் நம் பிள்ளைகளைச் சேரும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்வோம்.

 நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம்.🌹🌹🌹
 🤷‍♂️🤷‍♂️
💪🏾🇮🇳😍
🙏🪷🙏🪷🙏🪷🙏 

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 


 
🌷 🌷🌷 🌷

 

இன்று ஆவணி மூலம் : பிட்டுக்கு மண் சுமந்த

மணக்கால் அய்யம்பேட்டை | 10:13 AM | Best Blogger Tips

 May be an image of flute and temple

 

இன்று ஆவணி மூலம் : பிட்டுக்கு மண் சுமந்த கதை
 
ஒரு சமயம் பாண்டிய நாட்டில் பெருமழை பெய்தது. வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கரைகள் வலுவிழக்கும் அளவுக்கு வெள்ளம் சீறிப்பாய்ந்தது. எனவே மன்னன் ஆற்றின் கரையை செப்பனிடும் பணியை மேற்கொள்ள ஆயுத்தமானார்.
 May be an image of 4 people and temple
இப்பணியை தன் குடிமக்கள் அனைவருக்கும் எந்த பாராபட்சமும் இன்றி பகிர்ந்தளித்தார். எனவே மக்கள் அனைவரும் தங்கள் கடமையை செய்யலானர்.
 
அப்படியிருக்க அங்கே "வந்தி" என்று பெயருடைய பிட்டு விற்கும் ஒரு மூதாட்டி தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில மண்ணை சுமந்து போட்டுக்கொண்டிருந்தார். முதுமையின் தள்ளாமையால் அவரால் மண்ணை சுமக்க முடியவில்லை.எனவே கடவுளிடம் வந்தி தன் நிலை குறித்து முறையிட்டார்.
May be an image of text 

வந்தியின் நிலையை கண்ட ஈசன் ஒரு கூலியாள் வடிவில் அங்கே தோன்றினார். கிழவியின் அருகே சென்று தாயே உங்களுக்கு பதில் நான் இந்த மண்ணை சுமக்கிறேன். அதற்கு பதிலாக நீ எனக்கு என்ன கூலி கொடுப்பாய்? என்று கேட்டார். அந்த பிட்டு விற்கும் கிழவியோ, என்னிடம் கூலியாக கொடுக்க என்ன இருக்கிறது? வேண்டுமென்றால் உன் பசி போக்க இந்த பிட்டினை தருகிறேன். 
 
May be an image of 3 people 
என்று கூறினார். அதற்கு இசைந்த அவன் அந்த கிழவியிடம் பிட்டை வாங்கி உண்டு தன் பசியாரியவுடன் மண்ணை சுமக்க ஆற்றை நோக்கி சென்றார்.
 
உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு என்ற பழமொழிக்கு ஏற்ப பிட்டை உண்ட சொக்கருக்கும் அந்த மயக்கம் ஏற்பட்டது. அதனால் மன்ன சுமப்பதை மறந்து விட்டு ஆற்றங்கரையில் படுத்து உறங்கலானார்.
 
திடீரென அங்கே மேற்பார்வை பார்க்க வந்த பாண்டிய மன்னன் ஒரு வேலையால் தூங்கிக்கொண்டிருப்பதை கண்டு அவனை எழுப்பி வேலை பார்க்க சொல்லுமாறு ஆட்களை பணித்தார். உடனே அவர்கள் அவனை எழுப்பி வேலை பார்க்குமாறு கூறினார். ஆனால் சாமானியன் வடிவில் இருந்த ஈசனோ தன்னால் முடியாது என்று கூறிவிட்டார். கோபம் கொண்ட மன்னன் அவனை பிரம்பால் அடிக்க செய்தார். ஆட்களும் உடனே அவனை பிரம்பால் அடித்தனர்.
 
ஆனால் அவன் முதுகில் விழுந்த அடியை இவ்வுலக உயிர்கள் அனைத்தும் உணர்ந்தன. பாண்டிய மன்னனும் உணர்ந்தான். பின்னரே அங்கிருந்தது ஆசாமி அல்ல அந்த சொக்கனாதரே என்று உணரப்பெற்றான் . 
 
இந்த திருவிளையாடல் அரங்கேறியது ஆவணி மாத ஆரம்பத்தில். தன்னை தஞ்சம் என்று அடைந்தவரை தாமதிக்காமல் வந்தருளவும் , இவ்வுலக உயிர்கள் அனைத்தும் தன்னுள் அடக்கம் என்பதையும் விளக்கவே நடத்தப்பட்டது இத்திருவிளையாடல்.
 
இத்திருவிளையாடலை விளக்கவே மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூல நட்சத்திரத்தன்று பிட்டுக்கு மண் சுமந்த விழா கொண்டாடப்படுகிறது. மதுரையில் அன்றைய தினம் பொற்கூடையுடனும் பொன் மண்வெட்டியுடனும் இந்த விழா நாளில் வைகை ஆற்றிலிருந்து சுந்தரேசர் கோயிலுக்கு எழுந்தருளுவர். வேறெங்கும் இல்லாத வகையில் இங்கு திருவிழவை காணவரும் பக்தர்களுக்கு அனைவருக்கும் பிட்டு பிரசாதமாக வழங்கப்படும்.
 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 

மனதை தொட்ட நம்பிக்கை வரிகள்...

மணக்கால் அய்யம்பேட்டை | 11:59 AM | Best Blogger Tips

 


மனதை தொட்ட 
நம்பிக்கை வரிகள்...

ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாலும் மீன் கிடைக்கும் வரையில்
முயற்சியை கைவிடாத வெண்கொக்கு!

ஆயிரக் கணக்கினில் அடி வாங்கினாலும் சிலையாகும் வரையில்
உளியை உறவாக எண்ணும் கருங்கல்!

கால்களில்லாத போதிலும் பாறைகளில் மோதியும் படுகுழியில் விழுந்து கடலைச் சேரும்
குறிக்கோள்களை கடத்திவிடாத நதி!

கைகளை துண்டித்தாலும் தலையைத் தறித்தாலூம்
நிழல் பரப்பும் எண்ணத்தில் மீண்டும் தழைக்கின்ற மரம்!

இரும்பு முள்ளில் குத்தினாலூம் ரணத்தையும் கூட
ரசித்துக்கொண்டே வண்டியிழுக்கும் எருதுகள்!

கனவு நிறைவேறும்வரை
கலைத்து விடாதே முயற்சியை ஏனெனில்..

முயற்சி மட்டுமே
முன்னேற்ற மாளிகைக்கு முதலிடமாகும்!

வெற்றிப்பாதை!!

உருக்கப்படும் தங்கம் தான்
உரு மாறி நகையாகிறது!

அறுக்கப்படும் மரம் தான்
அழகான ஜன்னலாகிறது!

இடிக்கப்படும் நெல் தான்
உமி நீங்கி அரிசியாகிறது!

துவைக்கப்படும் துணி தான்
தூய்மை பெற்று வெண்மையாகிறது!

ஏற்றப்படும் விளக்கு தான்
இருள் நீக்கி ஒளி தருகிறது!

தட்டப்படும் தந்தி தான்
தம்புராவில் இசை தருகிறது!

செதுக்கப்படும் பளிங்கு தான்
செம்மை பெற்றுச் சிலையாகிறது!

பதப்படுத்தப்படும் தோல் தான்
பயனுள்ள காலணியாகிறது!

மிதிக்கப்படும் மண் தான்
மிருதுவான பானையாகிறது!

புதைக்கப்படும் விதை தான்
மண்ணை விட்டு மரமாக எழுகிறது!

தோற்றுப்போகும் மனிதன் தான்
துணிவு பெற்று வீரனாகிறான்!

தொடர்ந்து முயலும்
வீரன் தான் சரித்திரம் படைத்தது வாழ்கிறான்! 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 


 
🌷 🌷🌷 🌷

 

எதுவும் நிரந்தரம் கிடையாது

மணக்கால் அய்யம்பேட்டை | 9:43 AM | Best Blogger Tips

Fact Check: Arnold Schwarzenegger sleeping in Front of his Statue

எதுவும் நிரந்தரம் கிடையாது
 
அர்னால்டின் வாழ்க்கை உதாரணம்.
 490. எதுவும் நிரந்தரமில்லை | வேதாவின் வலை..
தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப நிலை
நடிப்பில் படிப்படியாக உயர்ந்து கலிபோர்னியாவின் கவர்னர் என்ற புகழின் உச்சத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய வெண்கலச் சிலை முகப்பில் நிறுவப்பட்ட வகையில் ஒரு ஆடம்பர ஹோட்டலை திறந்து வைத்தார்.
 
ஹோட்டலின் திறப்பு விழாவின் பொழுது அந்த ஆடம்பர ஹோட்டலின் உரிமையாளர் "அர்னால்டு எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஹோட்டலுக்கு வந்து முன் பதிவு ஏதும் இன்றி இலவசமாக தங்கிக்கொள்ளலாம், அவருக்கு எப்பொழுதுமே ஒரு அறை இருக்கும்" என்று அறிவித்தார் 
 
நாட்கள் நகர்ந்தன ...
 
பதவி போனது ..
 
புகழ் போனது ..
 
சமீபத்தில் சாதாரண மனிதனாக அந்த ஹோட்டலுக்கு சென்ற அர்னால்டுக்கு அதிர்ச்சி காத்திருந்தது 
 
ஹோட்டலில் எல்லா அறைகளும் புக்கிங் ஆகிவிட்டது தற்பொழுது அறைகள் ஏதும் இல்லை என்று ஹோட்டல் நிர்வாகம் கூறவே அதிர்ச்சியில் உறைந்து போனார் ஹாலிவுட் முன்னாள் ஹீரொ, கலிபோர்னியா முன்னாள் கவர்னர், அந்த ஹோட்டலை திறந்து வைத்த முன்னாள் வி.ஐ.பி "அர்னால்டு ஸ்குவாஸுனேக்கர்"
மனமுடைந்த அர்னால்ட், 
 
தான் வைத்திருந்த போர்வையை எடுத்துக்கொண்டு அந்த ஹோட்டலின் முகப்பில் தன்னால் திறந்து வைக்கப்பட்ட, வெறும் அலங்கார பொருளாக நின்றுக்கொண்டிருந்த தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன்னர் செய்வதறியாது படுத்து விட்டார் 
 
இந்த சம்பவத்தால் துவண்டு போன அர்னால்ட் அந்த காட்சியை புகைபடம் எடுத்து வலைதளத்தில் பதிவிட்டு உலகத்திற்கு ஓர் செய்தியை சொல்கின்றார்
 
"நாம் பதவியில் இருக்கும் பொழுது மெச்சப்படுவோம், புகழப்படுவோம், நமக்கு உச்சபட்ச மரியாதை தரப்படும்" 
 
"எப்பொழுது நாம் பதவியையும், புகழையும் இழக்கின்றோமோ அடுத்த நொடியே நாம் ஒதுக்கப்படுவோம், 
 
நமக்கு தந்த சத்தியங்கள் காற்றில் பறக்கவிடப்படும்" 
 
"எந்த சத்தியங்களும், வாக்குறுதிகளும் உங்களுக்காக கொடுக்கப்பட்டது அல்ல அது உங்களை அலங்கரித்த பதவிக்கு கொடுக்கப்பட்டது"
 
"உங்கள் புகழை, 
 
உங்கள் பதவியை, 
 
உங்கள் அதிகாரத்தை ஒரு போதும் நம்பாதீர்கள்" 
 
"இது எதுவுமே நிரந்தரம் கிடையாது"


❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 

தாலி...!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:38 AM | Best Blogger Tips

தாலி அணியும் முறை | Thali saradu palangal in Tamil


பெண்ணுக்கு மார்பு குழியில் ஒரு நரம்பு முடிச்சு இருக்கிறது இது ஆணுக்கு இல்லை... இந்த நரம்பு முடிச்சு மூளையில் பேசல் ரீஜன் பகுதியோடு தொடர்பு ஏற்படுத்தும் வேலை செய்யும்... 
 
இது பெண்ணுக்கு இரண்டு நரம்புகள் கொண்ட பாதையாகவும், 
 
ஆணுக்கு ஒரு நரம்பு கொண்ட பாதையாகவும் இருக்கிறது... 
 
இதனால் ஆணை விட பெண்ணுக்கு அதிக நியாபக சக்தியை உண்டாக்குகிறது.....!
 பகுத்தறிவுவாதிகளின் தாலி பறிப்பும், பஞ்சாலைகளின் சுமங்கலித் திட்டமும்
இந்த அதிக நியாபக சக்தியால் ஆணை விட பெண்ணுக்கு சில குழப்பங்களையும் கொடுக்கிறது... 
 
ஒரு பெண் ஒரு விசயத்தில் ஒரு முடிவு எடுத்துட்டு பின் அதனால் குழப்பம் அடைவதற்குக்கு இதுதான் காரணம்.....!
 அடேங்கப்பா.. தாலி கட்டுவதற்கு ...
இதை கண்டறிந்த ஒரு ஞானி ராஜராஜ சோழன் இடம் சொல்ல அதற்கு மருந்து கண்டு பிடிக்க முடிவு
 
செய்து அதன் படி ஒவ்வொரு உலோகத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு அதன்படி தங்கத்திற்கு இருக்கும் மருத்துவ குணத்தை கண்டறிந்து, 
 
அந்த தங்கம் பெண்ணுடைய மார்பு குழியில் எப்போதும் உரச உரச பெண்ணிற்கு நன்மை தரும் என்று இந்த "தாலி" முறைய கொண்டு வந்தாங்க. 
 தாலி கட்டும் பொழுது மூன்று முடிச்சு போடுவதின் காரணம் என்ன? - ஐபிசி பக்தி
அது சரியாக மார்புகுழி இடத்தில் வரவேண்டும் என்று மூன்று முடிச்சு போட்டால் மார்பு குழியில் வரும் என்று ஒரு கணக்கு போட்டார்கள்.
 தாலி கயிற்றை எந்த கிழமையில் மாற்ற வேண்டும்? இந்த நேரம் மாற்றினால் சிறப்பாம்  - மனிதன்
இந்த "தாலி" முறையைத்தான் இப்போது வரை நாம் பயன்படுத்துவது.
 
. . . படித்ததில் பிடித்தது.
 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷  No photo description available. 🌷 🌷🌷 🌷

 

 

💢லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர் !💢

மணக்கால் அய்யம்பேட்டை | 4:39 PM | Best Blogger Tips

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து l Pandey speech in Trichy NR IAS academy 

 

அரசு பணியில் பல துறையில் பணியாற்றி உள்ளேன். சம்பளத்தை விட கிம்பளம் (லஞ்சம்) நிறையவே பெற்று சந்தோஷமாக இருந்தேன்.


ஆண்டவன் நம்மை நல்லா வச்சிருக்கான் என்று சந்தோஷமாக கோவிலுக்கு சென்று பூஜை புனஸ்காரம் செய்து வந்தேன்.


எனக்கு ஒரே மகன். நல்லா எம்.பி.ஏ. வரை படிக்க வச்சேன். 


ஒரு கிரவுண்ட் இடம் வாங்கி கார் பார்கிங், வீடு, கார், தோட்டம் என நாங்கள் சந்தோஷமாக இருந்தோம்.


நானும் ஓய்வு பெற்றேன். 


என் மகனுக்கு திருமணம் செய்து வைத்து, சென்னையில் ரூ.80,00,000-தில் பிளாட் வாங்கி குடியேறினேன்.

மருமகளும் கர்ப்பமாக இருந்தாள். 


7-ம் மாதம் சீமந்தம் வைக்க ஏற்பாடு செஞ்சிக்கிட்டு இருந்தேன். ஒரு போன் வந்து என்னை தூக்கி போட்டது. போனில், அவர் சொன்ன விசயம்...
"உங்கள் மகன் பைக் விபத்தில் அரசு மருத்துவமனையில் உள்ளார் வந்து பாருங்க..." என்று.


விழுந்தடித்து சென்று பார்த்தேன். 


என் மகன் கோமா நிலைக்கு தள்ளப்பட்டான். என் மருமகளுக்கு ஆண் பிள்ளை பிறந்தது. ஆனால் என் மகன் இரண்டு மாதத்தில் உயிர் பிரிந்து விட்டான்.

என் மருமகள் அவர்கள் வீட்டுக்கு குழந்தையுடன் சென்று விட்டாள். பின்னர் அவளுக்கு ஜீவனாம்சம் மற்றும் பேரன் வாழ்க்கை செலவு என வழக்கு தொடர்ந்து எங்கள் சொத்துக்களை எல்லாம் வாங்கி கொண்டாள்.

இப்போது எனக்கு கிடைக்கும் பென்சனை வச்சுத்தான் காலம் போகுது. சாப்பாடு செலவுகள், வீட்டுக்கு வாடகை போக முட்டி வலி, சர்க்கரை போன்ற நோய்கள் பற்றிக்கொண்டதால் மருந்து செலவு வேறு...

அப்போது தான் யோசித்தேன்,
'ஏன் நம் வாழ்க்கை இப்படி ஆனது என்று...'
என் மனம் சொன்னது, 'நீ வாங்கிய லஞ்சம் தான் உன் வாழ்வை சீர்ழித்தது.
..' என்று.
'சரி... லஞ்சம் வாங்காமல், என்னுடன்
சம காலத்தில் பணிபுரிந்த என் நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டேன்.'அவர் என் நிலை கண்டு மனம் சங்கடப்பட்டார்.


'சரிப்பா நீ எப்படி இருக்க..?' என கேட்டேன்.அவர் சொன்னார்,
"நிம்மதியாக இருக்கேன்...உண்ண உணவு, உடுக்க உடை, பேரன் பேத்தி, ஓய்வு பணத்தில் சிறியதாக ஒரு வீடு, பையன், பொண்ணு தனியார் கம்பெனி வேலை...நானும் என் மனைவியும் நிம்மதியாக இருக்கோம்.." என்று சொன்னார்.
லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!
என்னை யாரோ செருப்பால் அடித்தது போல் உணர்ந்தேன்.நானும் கோவிலுக்கு போனேன் விபூதி குங்குமம் வைத்தேன். அபிஷேகம் எல்லாம் செஞ்சேனே. எனக்கு மட்டும் ஏன் இப்படி..? உணர்ந்தேன் நாமும் கோவிலுக்கு போனது பத்துல ஒண்ணா போச்சே. நல்லா இருக்கும் போது உண்மையை உணரவில்லையே.உயிரற்ற பொருள் வாங்கி குவித்தேன். என் உயிர் உள்ளே உள்ள பொருளை இழந்தேன்.

LEGAL AWARENESS AND ANTI-CORRUPTION ORGANIZATION: லஞ்சம் தவிர் ! நெஞ்சம்  நிமிர் !!
இன்று...வாழ்க்கையை இழந்து நிற்கிறேன்.

💢அரசன் அன்று கொல்வான்.


💢தெய்வம் நின்று கொல்லும்.


💢மக்களுக்கு செய்யும் சேவையே.


💢மகேசனுக்கு செய்யும் சேவை.

Lanjam Thavir Nenjam Nimir - YouTube

@ ஓய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரியின் ஒப்புதல் புலம்பல் இது. 

True story of a Government staff.

லஞ்சம் வாங்கும் அனைவருக்கும் நல்ல பாடம்...!!!
தெரிந்து கொள்ளுங்கள் - லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!!!
இந்த பதிவு சற்று எல்லோருக்கும் சென்றடைய செய்யவும். அப்படியே EB , RTO, Corporation, Taluka, Registration Office-யில்  பணி புரிபவர்களை இந்த பதிவை படிக்க வைத்தால் நல்லது.

💢லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர் !💢

ஒரு நண்பரின் பதிவு 
உண்மை, நீதித்துறை சம்பந்த பட்டவர்( ex ஜட்ஜ்)☝️

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of 1 person, horizon, lake and twilight  🌷 🌷🌷 🌷




 

 

தஞ்சாவூர் மாநகர் உருவான விதம் மற்றும் அதன் நீர்மேலாண்மைப்....

மணக்கால் அய்யம்பேட்டை | 5:38 PM | Best Blogger Tips

May be an image of 5 people, monument and temple 

 

தஞ்சாவூர் மாநகர் உருவான விதம் மற்றும் அதன் நீர்மேலாண்மைப் பற்றிய பதிவு.
 
தஞ்சாவூர்: 
 
ஆஹா என்ன அழகு எத்தனை அழகு...
கண்ணையும், மனதையும் தழுவி நெஞ்சை நிறைக்கும் தஞ்சையில் உள்ள அனைத்தும் அழகோ அழகுதான்.
 
நம் முன்னோர்கள் சிறந்த அறிவு ஜீவிகள்.
முக்கியமாக #நீர்மேலாண்மையில் சிறந்தவர்கள்.
அதனால்தான் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் பொருட்டு தஞ்சையில் குளங்கள் வெட்டினர்.
 May be an image of 3 people, street, temple and text
சோழமன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தஞ்சை நகரை சுற்றிலும் நான்குபுறமும் தொடர்ச்சியாக தண்ணீர் பயணிக்கக்கூடிய அகழிகள் அமைக்கப்பட்டன. 
 
அன்றே தண்ணீரின் அவசியத்தையும், மேன்மையையும் உணர்ந்து பரந்து, விரிந்து சென்றது.
 May be an image of 6 people and temple
இப்படி பல கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த அகழியில் காவிரி நீரும் மழைநீரும் சேமிக்கப்பட்டன.
 
இதுமட்டுமல்ல பெரிய கோவில் அருகே சிவகங்கை குளம், அய்யன் குளம், சாமந்தன் குளம் உருவாக்க ப் பட்டது. 
 
பெரியக்கோவிலில் விழுக்கின்ற மழை நீரானது வீணாகமல் அருகில் உள்ள சிவகங்கை குளத்திற்கு
சென்றடையும். 
 தஞ்சாவூர் - தமிழ் விக்கிப்பீடியா
சிவகங்கை குளம் நிரப்பினால் அதிகபடியான நீர் ஊரின் மத்தியில் உள்ள ஐயன் குளத்தில் சேரும் படியான நீர்மேலாண்மை அமைப்பை ஏற்படுத்து இருக்கின்றனர் நம் முன்னோர்கள்.
 Tanjore: Discovery of tunnel waterway from Ayyankulam to Sivagangai pond |  தஞ்சை: அய்யன்குளத்தில் இருந்து சிவகங்கை குளத்திற்கு சுரங்கவழி நீர்ப்பாதை  கண்டுபிடிப்பு...!
அவ்வாறை தஞ்சைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டினார் பாண்டிய மன்னன் வல்லபனுக்கு சேனாதிபதியாய் இருந்த சாமந்தன் என்பவர்.
தஞ்சை நகரில் சாமந்த நாராயண விண்ணகரம் என்ற பெருமாள் கோயிலை நிறுவினார்.
 
அந்த கோயிலுக்காக சாமந்த நாராயணக்குளம் என்ற குளம் ஒன்றை வெட்டினார். 
 
பின்னர், அங்கு ஒரு புதுக் குடியிருப்பையும் தோற்றுவித்தார் சாமந்தன்.
 
அப்படி அவர் தோற்றுவித்த குடியிருப்பு மெல்ல மெல்ல வளர்ந்து நாயக்கர்கள், மராட்டிய மன்னர்கள், ஆங்கிலேயர்கள் என பயணித்து #இன்றுதஞ்சைமாநகராய்# பிரமாண்டமாய் மாறியுள்ளது.
 
தஞ்சையில் புதுக்குடியிருப்பு 
 
வரக்காரணாமாய் இருந்த இக்கோயில் கீழவாசல் பகுதியில் கீழை நரசிம்மர் என்ற பெயரில் இன்றும் உள்ளது.
 
தஞ்சைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரிய கோயிலை மட்டும் பார்த்து விட்டு திரும்பாமல் வரலாற்றை தேடி பயணிக்க வேண்டும்.
 
தஞ்சாவூர் மாநகருக்கு தண்ணீர் பிரச்சனையை போக்கும் பல்வேறு குளங்களில் சாமந்தன் குளமும் ஒன்றாகும்
 
மற்றும்
எழில் மிகு குளங்களாக இருந்த அய்யன்குளமும் ஆகும்
 
தஞ்சையில் நீர் மேலாண்மையில் முக்கியமாக விளங்கிய இது போன்ற குளங்களா என்று அனைவரும் வியக்கும் அளவில் இருந்தவை ஆகும்.
இதில் அய்யன்குளத்துக்கு, மன்னர் காலத்தில் பயன்படுத்திய நீர் வழிப்பாதையை கண்டறிந்து,
அவை சீரமைக்கப்பட்டது. 
 
குளத்தை சுற்றிலும் நடைபாதை,
அலங்கார மின் விளக்குகள்,
சுவரில் ஓவியங்கள்
என பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்பட்டு ,மாலைநேரத்தில் பொதுமக்கள் இதில் நடந்து தங்களை ரிலாக்ஸ் ஆக்கி கொள்கின்றனர்.
 
மாலை நேரத்தில் சுற்றுலாவாக வருபவர்களுக்கு இந்த குளங்கள் சிறப்பான ஒரு மகிழ்வை தரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
 Thanjavur Maratha building - ''Mangala Vilas,'' South Main Street can be  made a heritage hotel!!
குளம் தானே என்று நினைப்பதை தவிர்த்து நம் முன்னோர்களின் தொலைநோக்கு பார்வை எப்படி இருந்தது என்பதை பார்க்க வேண்டும்.
 
தஞ்சையின் தென்மேற்கு பகுதியில் பெய்யும் மழைநீரை செவப்பன் ஏரிக்கு வாரிகள் மூலம் கொண்டு வந்து, 
 
நீரை சேமித்து சேற்றை அடியில் தங்கவிட்டு தெளிந்த நீரை மட்டும் குழாய்களின் வழியே சிவகங்கை குளத்திற்கு அனுப்பி அங்குள்ள கிணறுகளில் வண்டல் மண்ணை படியவிட்டு தெளிந்த நீரை சுடுமண் குழாய் வழியாக மேலவீதியில் உள்ள அய்யன் குளத்திற்கு கொண்டு சென்று, 
 
தொடர்ந்து சென்று சாமந்தன் குளத்திற்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டது.
இத்தகைய பெருமை வாய்ந்த சாமந்தான் குளத்தின் 
 
மேல்புறத்தில் படிக்கட்டுகளும், குளத்தை சுற்றிலும் 
 
அலங்கார மின்விளக்குகள்,
நடுவில் நீராழி மண்டபம், 
 
அதில் பக்தர்கள் சென்று வழிபடும் வகையில் பாலங்கள் அமைக்கப்பட்டன.
காவேரி நதி நீா் பாய்ந்து வளம் சோ்த்தாலும், விவசாயம் முதன்மைத் தொழிலாக இருப்பதால்
தஞ்சாவூா் மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப் படுகிறது.
இம்மாவட்டத்தில் உள்ள
கோயில்கள், 
 
கலைகள்,
கட்டிடக்கலைகள் உலகப்புகழ் பெற்றவை. 
 
சோழா்கள், 
 
பாண்டியா்கள், 
 
நாயக்கா்கள், 
 
மராட்டியா்கள் ஆட்சியின் கீழும் இந்தியா சுதந்திரம் அடையும் வரை பிரிட்டிஷாரின் ஆட்சியன் கீழும் இருந்தது. 
 உலகிலேயே 2000 ஆண்டுகள் பழமையான தமிழனின் கட்டுமானம் - கல்லணை | history of  kallanai dam in tamil | - YouTube
May be an image of 4 people, monument, temple and castle
கல்லணை,
 May be an image of 1 person, monument, twilight, temple, castle and text
தஞ்சை பெரிய கோயில்,
 
சரபோஜி மஹால் அரண்மனை,
 வரலாற்றுச் சிறப்பு மிக்க சரஸ்வதி மகால் நூலகம்
சரஸ்வதி மஹால் நூல்நிலையம்,
 ஆசியாவின் மிக பழமையான நூலகம்.. அதுவும் நமது தஞ்சையில்! யாரும் மிஸ் பண்ணாம  அந்த பொக்கிஷத்த பாத்துருங்க..! | தஞ்சாவூர் - News18 தமிழ்
பீரங்கி மேடை 
 தஞ்சாவூர் பீரங்கி - தமிழ் விக்கிப்பீடியா
மற்றும் 
 
பல புராதண சின்னங்கள் மேற்கண்ட 
 spiritual Tour Thanjavur cannon Rajagopala Beerangi standing majestically  for 400 years TNN | Thanjavur cannon: கம்பீரமாக 400 ஆண்டுகளாக நிலைத்து  நிற்கும் தஞ்சாவூர் பொக்கிஷம் ராஜகோபால ...
ஆட்சியாளா்களின் ஆளுகைக்கு உட்பட்டு தஞ்சை மாவட்டம் இருந்ததை எடுத்துக்காட்டும் வரலாற்று நினைவுச் சின்னங்கள் ஆகும்.
 Trichiites on X: "Thanjavur Old Bus Stand in 1959.❤️ #CentralRegion #Trichy  #Tanjore https://t.co/1mqRyuaOaM" / X

Thanks to https://harithiagarajan.blogspot.com/.../blog-post_20.html 

 May be an image of 6 people, temple and text that says "Infinix InfinixHOT10S HoT HOT10 10S"

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of 3 people and temple🌷 🌷🌷 🌷