சனிதோஷ நிவர்த்தி செய்யும் திருநறையூர் மங்கள சனீஸ்வரர்!!

மணக்கால் அய்யம்பேட்டை | 6:04 PM | Best Blogger Tips

 20201123233053121.jpeg


 நாச்சியார் கோவில் அருகே திருநரையூர் ஸ்ரீ மங்கள சனி பகவான் தனது மனைவிகள், மந்தா தேவி, ஜேஷ்டா தேவி, குழந்தைகள் மாந்தி, குளிகன் இவர்களுடன் குடும்ப சகிதமாக அருள் பாலிக்கும் அற்புதமான ஸ்தலத்தை  தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றோம்... வாருங்கள் 
 
இந்த சனீஸ்வரரின் புராணத்தை கேட்போம்...

திருநரையூர் மங்கள சனீஸ்வரர்...
 
கும்பகோணத்திலிருந்து 10 கி. மீ. தொலைவில் உள்ள ஊர் திருநரையூர். 
 
இங்கு சிவபெருமான் இராமநாத ஸ்வாமி என்ற பெயருடன் கோவில் கொண்டுள்ளார்.
 
இத்திருக்கோவிலில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு சனீஸ்வரர் தன் இரு மனைவியர்களுடன் மந்த தேவி, ஜேயேஷ்ட தேவி காட்சி தருகிறார். மேலும் தன் இரு மகன்களாகிய குளிகன் மற்றும் மாந்தியுடன் அருள் பாலிக்கிறார்.
 
இவர்கள் அனைவரையும் ராமரின் தந்தை தசரத மஹா ராஜா கை கூப்பி வணங்கிய வண்ணமாக இருப்பதை நாம் காணலாம்.
 
இப்படியாக சனீபகவான் குடும்ப சகிதமாககாட்சி அளிப்பதால் மங்கள சனீஸ்வரராகப் போற்றப்படுகிறார். இங்கு சனீஸ்வரர் உஞ்ஞாழி [சந்நதி] எதிரில் ஒரு தனி கொடி மரமும் உள்ளது. 
 
இதுவும் வேறெங்கும் காண முடியாத ஒன்று. இந்த மங்கள சனீஸ்வரரை வணங்கினால் சனியினால் ஒருவருக்கு வர இருக்கும் தீமைகள் அனைத்தும் விலகிவிடும் என்பது ஐதீகம். எண்ணற்ற மக்கள் திருநரையூர் வந்து மங்கள சனீஸ்வரரை வணங்கி செல்கின்றனர். இத்திருக் கோவிலில் உள்ள தட்சணாமூர்த்தி "மேதா தட்சணாமூர்த்தி" யாக இருக்கிறார். 
 
பக்தர்கள் தம் பிள்ளைகளின் கல்வி மேம்பட அவரின் திருவடிகளில் குறிப்பேடுகள் மற்றும் எழுது கோல்கள் ஆகியவற்றை வைத்து வழிபடு வழக்கத்தில் உள்ளது.
 

 Thanks to  Hari Haran B

 வரலாறு

நவகிரகங்களுக்குள் கருணைக் கடலாய் விளங்கும் தெய்வம் சனீஸ்வர பகவான் ஆவார். நவகிரகங்களில் இவருக்கு மட்டுமே ஈஸ்வர பட்டம் கிடைத்துள்ளது. அந்த அளவிற்கு சக்தி வாய்ந்தவர். சூரிய பகவானுக்கும் சாயாதேவிக்கும் மைந்தனான இவர், தொட்டில் குழந்தையாக இருந்த பொழுதே இருகரங்கள் கூப்பி சிவபெருமானை வணங்கியவர் என்ற பெருமை கொண்டவர் 

மனிதர்கள் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு நல்லதையோ, கெட்டதையோ அளிக்கிறார். இவர் “ஆயுள்காரகர்” எனப்படுகிறார். “சனைச்சரன்” (மெதுவாகச் சஞ்சரிப்பவன்) என்ற பெயரும் உண்டு, மற்றும் மந்தன், காரி, முடவன் ஆகிய பட்டப் பெயர்களும் இவருக்கு உள்ளது.

நவகிரகங்களில் சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவார். இவரே ஒருவரின் வாழ்வில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துவார் என்பது ஜோதிட நம்பிக்கை.

20201123232916853.jpeg

“சனியைப் போல கொடுப்பாரும் இல்லை; அவரைப் போல கெடுப்பாரும் இல்லை” என்றொரு சொல் வழக்கு உண்டு. இதனால், சனீஸ்வரர் என்றால் பயப்படுகின்றோம். ஆனால் இவர் பாவ புண்ணியங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் வாழ்க்கையில் நீதிபதி போல செயல்பட்டு, அதற்கேற்ற பலன்களை தருபவர். இவர் நம் கர்ம வினைகளுக்கு ஏற்ப சோதனை கொடுத்து நம்மை திருத்தி, நல்வழிப்படுத்தி நமக்கு நன்மை மட்டுமே செய்பவர். ஆனால் மக்கள் இதை சரியாகப் புரிந்துகொள்ளாமல், இவரைக் கண்டு பயப்படுகிறார்கள்.

 

சனிஸ்வரர் பெரும்பாலும் அனைத்து சிவாலயங்களிலும் நவகிரகங்களில் ஒருவராகவும், சில ஆலயங்களில் தனிச்சந்நிதி கொண்டும் அருள்பாலிப்பவர்.

20201123233053121.jpeg

திருநறையூர் ஸ்ரீ பர்வதவர்தினி சமேத இராமநாத சுவாமி திருக்கோயிலில் எங்கும் காணக்கிடைக்காத சனீஸ்வரர் தனி சந்நிதியில் தனது இரண்டு தேவியரான மாந்தாதேவி, ஜேஷ்டதேவியுடனும் தனது புதல்வர்களான காலத்தை நிர்ணயிக்கும் குளிகன், ஆயுளை நிர்ணயிக்கும் மாந்தி ஆகியோருடன் குடும்ப சமேதராக அருள்பாலிக்கின்றார். இந்த கோயில் சனிதோஷ நிவர்த்தி ஸ்தலமாகும். எனவே சனிதிசை, கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி உள்ளவர்கள் செல்ல வேண்டிய கோயில்ஆகும்.

ஸ்தல அமைப்பு:

ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமையான அருள்மிகு இராமநாதர் திருக்கோயில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாகும். இக்கோயிலின் கோபுர வாயில் கிழக்கு நோக்கி உள்ளது. மூலவர் அருள்மிகு இராமநாத சுவாமி கிழக்கு முகமாகவும், அம்பாள் பார்வதவர்தினி தெற்கு முகமாக நோக்கியும் அருள்புரிகின்றனர். இராமேஸ்வரத்தை தரிசிக்க முடியாத பல பக்தர்கள், தங்கள் பரிகாரங்களை இங்கேயே செய்கிறார்கள்.

இந்த கோயிலில், மூலவருக்கு பலி பீடமோ, த்வஜஸ்தம்பமோ கிடையாது. ஆனால், இங்கு தனி சந்நிதியில் சனீஸ்வரருக்கு ஆகமவிதிப்படி இரும்பினால் ஆன த்வஜஸ்தம்பம், பலி பீடம், மற்றும் சந்நிதி முன் காக வாகனமும் அமைந்துள்ளது. இந்த சனீஸ்வர சந்நிதியை வலம் வருவதற்கு பிரகாரம் உள்ளது. ஸ்ரீ ராமபிரானின் தந்தையான தசரத சக்கரவர்த்தி இவர்களை வணங்கியபடி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

பிரகாரத்தில் விநாயகர், வள்ளி மற்றும் தேவசேனருடன் சுப்பிரமணியர், கஜலட்சுமி, அண்ணாமலையார், பிரம்மா, துர்காதேவி, சண்டிகேஸ்வரர், ஹனுமந்த லிங்கம் மற்றும் நவக்கிரக சந்நிதியும் உள்ளது. இங்கு ஸ்ரீ தட்சிணாமூர்த்தி பகவான் ரிஷப வாகனத்தில் அமர்ந்தபடி காட்சி தருவது சிறப்பாகும்.

ஸ்தல விருட்சம் : எருக்கு
ஸ்தல தீர்த்தம் : இராமதீர்த்தம்.

20201123233211178.jpeg

ஸ்தல வரலாறு:

அயோத்தியை ஆண்ட தசரத சக்ரவர்த்தி தன்னை பாதித்திருக்கும் பிணி தீர இங்கு இருக்கும் புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானையும், சனி பகவானையும் வழிபட்டு நிவாரணம் பெற்றதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. அதேபோல் ஸ்ரீஇராமரும், இராவண வதம் முடிந்த பிறகு, அயோத்தி திரும்புகையில் தந்தை வழிபட்ட இத்தலத்திற்கு வந்து புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, மண்ணால் லிங்கம் செய்து வழிபட்டிருக்கிறார். அனுமனும் இவ்வாலய சிறப்புணர்ந்து இங்கு சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, சிவ வழிபாடு செய்திருக்கிறார். அந்த லிங்கம் ‘ஹனுமந்த லிங்கம்’ என்கிற பெயரில் அழைக்கப்படுவதாக ஸ்தல வரலாறு கூறுகின்றது. இந்த ஹனுமந்த லிங்கம் பிரகாரத்தில் அமைந்திருக்கின்றது.

ஸ்தல பெருமை:

இந்த இராமநாதர் திருக்கோயில் சனி பகவானுக்குரிய ஒரு சிறந்த பரிகாரக் கோவிலாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் இருக்கும் எந்தவிதமான சனிதோஷங்களையும் நீக்கவும், நீண்ட நாட்கள் நோய்கள் தீரவும், சகல ஐஸ்வரியங்கள் கிடைக்கவும் சிறந்த பரிகார ஸ்தலமாக இருக்கிறது. வேண்டுதல் நிறைவேறியவர்கள் ஸ்வாமிக்கும், அம்பாளுக்கும் வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

இங்குள்ள சனீஸ்வரருக்கு பாலபிஷேகம் செய்தால், உடம்பிலிருந்து வழியும் பால் (சனிஸ்வரரின் நிறமான) நீல வண்ணத்தை அடைகிறது. சனிப் பெயர்ச்சி அன்று வேறெங்கும் காண முடியாத உற்சவமூர்த்திக்கு திருக்கல்யாணமும், திருவீதி உலா வருவதும் சிறப்பு.

தமிழக தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா மக்கள் ஜாதகம் எழுதும் போது, மாந்திக்கு முக்கியத்துவம் தருவர். மாந்தி தோஷம் உள்ளோர், இங்கு வந்து மாந்திக்கு அர்ச்சனை செய்து, நிவாரணம் பெறுகின்றனர்.
இக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தின் மேல் சூரியனின் ஒளிக் கதிர்கள் ஏப்ரல் மாதத்தில் நேரடியாக விழுகின்றன.

சனீஸ்வரர் வழிபாடு:

சனிக்கிழமை தோறும் காலை 6 முதல் 7:30 மணிக்குள் மாந்திக்கும், 9 முதல் 10:30 மணிக்குள் சனி பகவானுக்கும் நடக்கும் அபிஷேகத்தைக் காண இங்கு வருபவர்களது எண்ணிக்கை அதிகம்.

இத்திருக்கோயிலில் குடும்பத்துடன் அருள்பாலிக்கும் சனீஸ்வரரை வணங்கி, நீல வர்ணத்தில் வஸ்திரம் சமர்ப்பித்து, அத்துடன் தேவிகளுக்கும் வஸ்திரம் சமர்ப்பித்து, பூமாலை அணிவித்து, நல்லெண்ணைய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், அனைத்து வித ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் ஜன்மச் சனி, ஏழரை சனி, அர்த்தாஷ்டமசனி, அஷ்டமசனி, மற்றும் சனி திசை ஆகிய அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி நன்மைகள் ஏற்படும்.

கோயில் திருவிழாக்கள்:

பௌர்ணமி, சிவராத்திரி, பிரதோஷம். சனிப்பெயர்ச்சி காலங்களில் சிறப்பு பூஜை நடக்கிறது.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். இதைதவிர, தினமும் குளிகை நேரத்தில் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

கோயிலுக்கு செல்லும் வழி:

கும்பகோணம் - திருவாரூர் பஸ் பாதையில் கும்பகோணத்திலிருந்து எட்டு கி.மீ. தொலைவில் உள்ள திருநறையூரில் ஶ்ரீ ராமநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து திருவாரூர், கொரடச்சேரி, நன்னிலம், நாகப்பட்டினம், இராவஞ்சேரி மற்றும் திருவிடச்சேரி செல்லும் அனைத்து பேருந்துகளும் திருநறையூர் வழியாக செல்கின்றன.

மேலும் விபரங்களுக்கு...
திரு. ஞானசேகர சிவாச்சாரியார் - 09442420420

சனி பகவான் கிரகஸ்துதி:
நீலாஞ்ஜன ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்!
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி சனைச்சரம்!!

தமிழில்:

சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா!!

சனி பகவான் காயத்ரி:

காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி| தந்நோ மந்த: ப்ரசோதயாத்||

இந்த சனி பெயர்ச்சி நன்னாளில் திருநறையூர் குடும்ப சமேதராக உள்ள மங்கள சனீஸ்வர பகவானை தரிசித்து அனைத்து வளங்களையும் பெற்று வாழ்வோமாக!

 Thanks to vikatakavi

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

வாழ்க்கை இவ்வளவுதானா.........!

மணக்கால் அய்யம்பேட்டை | 4:44 PM | Best Blogger Tips

London-bound Air India plane with 242 people on board crashes soon after  take-off | The Straits Times

🤷‍♂️🤷‍♂️🤷‍♂️


வாழ்க்கைப் பயணம்!


திட்டமிட்ட பயணம்
எத்தனை நாட்கள் முன்பு 
எவ்வளவு ஆசைகள்!
எத்தனை கனவுகள்! 
எத்தனை விதமான மனிதர்கள்!
After Air India plane crash, Ahmedabad Airport shuts temporarily; multiple  flights cancelled
தொடங்கிய பயணம்
தொடரவே இல்லை!

தொடங்கியவுடன்
முடிந்தது!

எத்தனை மனிதர்கள் 
இவர்களுக்காக
காத்திருந்தார்கள்! ...

வாழ்க்கை 
இவ்வளவுதானா?

மனதை உலுக்கிய 
மரணங்கள்!

கடைசி நேரத்தில் 
எப்படித் துடித்திருப்பார்கள்?

எந்தக் ........
காப்பாற்ற
முன் வரவில்லையே?

இவர்கள் 
அனைவருக்கும் 
என்ன
ஒரே ...............?
‘Everything happened in front of my eyes’: Lone survivor of Ahmedabad plane  crash
வாழ்க்கை 
இவ்வளவுதான்!

🔷🔷🔷

What led to the Air India plane crash in Ahmedabad? Experts weigh in |  Latest News India - Hindustan TimesAt least 290 killed in Air India crash | CNNAir India plane crash: PM Modi visits crash site, hospital in Ahmedabad;  bodies of 5 victims handed over to families - India Today May be an image of 4 people and people smilingMay be an image of 2 people, people smiling and textMay be an image of 3 people, people smiling and treeMay be an image of 2 people and people smilingMay be an image of 2 people, child and people smilingMay be an image of 2 people, beard and aircraftMay be an image of 10 people, people smiling, biryani and textMay be an image of 2 people and people smilingMay be an image of 1 person and aircraftMay be an image of 6 people and aircraftMay be an image of 1 person and aircraftMay be an image of 2 people and people smiling

மொபைல்_மட்டுமே_வாழ்க்கை_அல்ல....?

மணக்கால் அய்யம்பேட்டை | 4:48 PM | Best Blogger Tips

அந்தப் பெண்மணி ஓர் ஆசிரியை. 
அன்றைக்கு இரவுச் சாப்பாடு
 முடிந்த பிறகு, வகுப்பு மாணவர்கள் எழுதிக் கொடுத்திருந்த விடைத்தாள்களைத் திருத்த உட்கார்ந்தார். அவருடைய கணவர் 
அவருக்கு எதிரே ஒரு மேசையிலமர்ந்து தன் கையிலிருந்த கைபேசியை நோண்டிக்கொண்டிருந்தார்.

 
சிறிது நேரம் போனது. 

அவர் யதேச்சையாகத் திரும்பி 
தன் மனைவியைப் பார்த்தார். 


கண்களில் நீர் திரள, தன் கையிலிருந்த ஒரு விடைத்தாளையே பார்த்துக்கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி. ஏதோ பிரச்னை என்பதைப் புரிந்துகொண்ட கணவர் அவரருகே போனார்.

"ஏய்... என்னாச்சு?’’
Top 10 reasons why technology has made school a waste of time… | by Trinity  Rosa | Medium
"நேத்து நாலாம் வகுப்பு
படிக்கிற பசங்களுக்கு ஒரு வீட்டுப்பாடம் கொடுத்திருந்தேன்.
`என்னோட ஆசை’னு 
ஒரு தலைப்புக் கொடுத்து, 'என்ன தோணுதோ எழுதிட்டு வாங்க’ னு
சொல்லியிருந்தேன்...’’

"சரி... அதுக்கும் நீ கண்கலங்குறதுக்கும் என்ன சம்பந்தம்? நீ கையிலவெச்சிருக்குற பேப்பர்ல அப்படி என்ன எழுதியிருக்கு?’’

"படிக்கிறேன்... கேட்குறீங்களா?’’

தலையசைத்தார் கணவர்,  ஆசிரியை படிக்க ஆரம்பித்தார். 

அதில் ஒரு மாணவன்  இப்படி எழுதியிருந்தான்...
 "நான் ஒரு கைபேசியாகணும்கிறதுதான் என்னோட ஆசை.  ஏன்னா, என்னோட அம்மா, அப்பாவுக்கு கைபேசி ரொம்பப் பிடிச்சிருக்கு.  

 Mobile phone use can worsen heart disease in smokers, diabetics: Study -  The Statesman

சில நேரங்கள்ல  என்னை கவனிச்சுக்கிறதைக்கூட மறந்துட்டு, போனை அவ்வளவு நல்லா கவனிச்சுக்கிறாங்க. அப்பா அலுவலகத்திலிருந்து களைச்சுப் போய் வருவாரு;  என்கூடப் பேசுறதுக்கு நேரமில்லைன்னாக்கூட, கைபேசியில்
பேசுறதுக்கு அவருக்கு நேரமிருக்கு.
 

அம்மாவும் அப்பாவும் எவ்வளவு சுறுசுறுப்பான வேலையில இருந்தாலும், 
கைபேசி மணி அடிச்சாப் போதும், ஓடிப்போய் எடுத்துடுறாங்க; 

பல நேரங்கள்ல நான் சத்தமாக் கூப்பிட்டாக்கூட திரும்பிப் பார்க்க மாட்டேங்கிறாங்க. கைபேசியில் ஏதாவது ஒரு
விளையாட்டை  விளையாடுறாங்களே தவிர, என்கூட அதிகமா விளையாடுறதில்லை. அவங்க யாரோடயாவது  கைபேசியில் பேசிக்கிட்டிருக்கும்போது, எவ்வளவு
 முக்கியமான விஷயமா இருந்தாலும் 
நான் சொல்றது அவங்க காதுல விழுறது இல்லை

அதனால, அம்மாவும் அப்பாவும் 
என்னையும் கவனிக்கணும்கிறதுக்காக 
நான் ஒரு கைபேசி ஆகணும்னு ஆசைப்படுறேன்...’’
உங்கள் மொபைல் போன் உங்கள் இதயத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறதா? புதிய ஆய்வு இருதய  நோய்க்கான இணைப்பை பரிந்துரைக்கிறது
இதைக் கேட்ட கணவரும் 
நெகிழ்ந்துதான் போனார்.

 "சரி... இதை யார் எழுதியிருக்குறது?’’

"நம்ம வீட்டு பையன்தான்.’’

#நீதி

பிள்ளைகளுக்கு  விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பது மட்டுமே
பாசம்ன்னு 
நினைத்து கொண்டிருக்கும் பெற்றோர்களே
...!

பிள்ளைகளுக்கு தங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கி கொடுங்கள்..

உங்கள் கைபேசியை 
சற்றே ஒதுக்கி வையுங்கள். 
UPenn Offers "Wasting Time On The Internet" Class | Ravishly
பிள்ளைகளுக்கு நீங்கள் தரும் முக்கியத்துவம் அவர்கள் எதிர்காலத்தில் 
எந்த
தவறும் செய்யாமல் சிறந்து விளங்க உதவும்.  வயதான காலத்தில் 
உங்களுக்கான முக்கியத்துவம்
உங்களுக்கு கிடைக்கும்...

இணையத்தில் கண்ணில் பட்டது...


🤷

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 

நன்றி மறவாத குணம், பண்புகளில் உயர்வானது

மணக்கால் அய்யம்பேட்டை | 11:08 AM | Best Blogger Tips


நன்றி மறவாத குணம்,
பண்புகளில் உயர்வானது.

உண்மையின்
எடை அதிகம்
அதனால் அதை.
சுமப்பவர்களின்
எண்ணிக்கை  மிக குறைவு.

கெட்ட வழியில்
செல்வோரை
திருத்துபவர்களை
விட.
அதனை
ஊக்குவிப்பவர்கள்
அதிகமாகிவிட்டனர்
.

உங்களை நீங்களே
மதித்துக்கொள்வது
ஆணவம்.
பிறர்  உங்களை
மதிப்பது 
பெருமை.

தேடிக் கொண்டே
வாழாதே
....
வாழ்ந்து கொண்டே
தேடு ..

இதில் தான்
வாழ்க்கை
பயணமாகிறது
..

அதிகாரம் என்ற பெயரில் உனது திறமைகளை 
தடை செய்யும்போது...
சுதந்திரமும் 
அடிமையா
கிறது.

எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்
சம்பாதித்த பணத்தை அனுபவிக்காமலே மாண்டு போகிறார்கள்.

சாம்பாதித்ததை செலவு செய்த காலம் போய், முதலிலேயே செலவு செய்து விட்டு அதை அடைக்க சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆடத் தெரியாத மயில்கள் இல்லை, கூவத் தெரியாத குயில்கள் இல்லை,
நீந்த தெரியாத மீன்கள் இல்லை,
ஓடத் தெரியாத மான்கள் இல்லை, ஆனால்,

வாழத் தெரியாத மனிதன் இருக்கிறான். வாழத் தெரியாமலேயே மாண்டு விடுகிறான்.

 பழிதீர்க்கும் மனப்பான்மை நெருப்பைப் போல நெஞ்சை எரிக்கும்..
மன்னிக்கும் மனபக்குவம் நீரைப் போல நெஞ்சை குளிர்விக்கும்..

 
இருப்பது போதுமென்று நீங்கள் நினைத்தால்,
உங்களுக்கு
நிம்மதி உறுதியாக இருக்கும்...

 மனிதனின் விரல்கள் அனைத்தும் சமமில்லை.
ஒப்பிட்டுப் பேசும் அளவுக்கு எல்லா மனிதனும் நல்லவனும் இல்லை.

நமக்குள்
வெறுமையான இடத்தில்
முடிந்த வரை சந்தோஷங்களை நிரப்பிக்
கொள்வோம்.
இல்லையெனில் அந்த
இடங்களில்
பிரச்சனைகள் தானாக
நிரம்பிக் கொள்ளும் 

 

 🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷  🌷 🌷🌷 🌷

 

உலகிலேயே இறப்பை கொண்டாடும் நகரம் காசி மட்டுமே

மணக்கால் அய்யம்பேட்டை | 6:21 PM | Best Blogger Tips

 காசி தமிழ் சங்கமம்: தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இருக்கும் தொடர்பு - BBC  News தமிழ்

 உலகிலேயே இறப்பை கொண்டாடும் நகரம் காசி மட்டுமே 

ஆஸ்பத்திரிகளில் கூட்டம்

ஆலயங்களில் கூட்டம்

ஜோதிடர்களிடமும் கூட்டம்

எல்லா கூட்டத்தினரின் நோக்கமும், மரணத்தை தள்ளிவைத்துவிட்டு, நிம்மதியாக நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது.

ஆனால் நிம்மதியாக மரணம் அடைய வேண்டும் என்பதற்காக மக்கள் ஒரே ஒரு இடத்தில் கூடுகிறார்கள். 
காசி – ஒப்பில்லாப் புனித நகரம் ...
அந்த இடம், தான் காசி நகரம். இங்கே மக்கள் இறப்பை கொண்டாடுகிறார்கள். 

துளி அளவும் இறப்பின் சோகம் யாரையும் வாட்டுவதில்லை. 

அங்கே உள்ள கோவில்களில் இசையும், மந்திரமும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. 
மனிதர்களின் இறுதி மூச்சும் அதோடு கலந்து காற்றோடு, மண்ணோடு, நீரோடு சங்கமித்துக் கொண்டிருக்கிறது.

இறப்பு யார் கையிலும் இல்லை, இறப்பு அவ்வளவு எளிதான காரியம் ஒன்றும் இல்லை 
என்பதையும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. 
காசி – கயா – உண்மையைத் தேடி…
உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக இலட்சங்களை ஆஸ்பத்திரிகளில் செலவிடுபவர்கள் திடீரென்று இறந்து போகிறார்கள். 

ஆனால் காசியில் இறப்புக்காக காத்திரு ப்பவர்கள், அதைத்தேடி வருடக்கணக்கில் காத்துக்கிடக்கிறார்கள். அதுதான் கிடைத்த பாடில்லை.

காசி, பூமி தோன்றிய போதே உருவான தாக கருதப்படும் புண்ணிய நகரம். உத்தரபிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டம், கங்கை நதிக்கரையில் உள்ளது. 

1800 கோவில்களுடன் அது, இந்தியாவிலேயே அதிகமான கோவில்களைக் கொண்ட நகரம் எந்நேரமும் பக்தர்கள் கோவில்களை நோக்கி நடந்து சென்று கொண்டே இருப்பதால் இரவுக்கும், பகலுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. 

எந்நேரமும் வெளிச்சம் !
( காசி என்றால் ஒளி தரும் இடம் என்பது புராண அர்த்தம் )

இந்து மதத்தை தழைக்க வைத்த ஞானிகள் பலரின் மூச்சு காற்றோடு கலந்து, அவர்கள் ஒவ்வொருவரின் பாதப் பதிவுகளும் அங்கே மண்ணோடு விரவிக்கிடக்கிறது. 
உலகில் வாழும் மிகப் பழமையான நகரம் ...


இந்த ஞானபூமியின் ஒவ்வொரு தெருவிற்கும் ஒரு கதை! 
அங்கிருக்கும் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு புராணம்.
காசியைத் தொட்டு ஓடும் புண்ணிய நதி கங்கை! 
வருணை நதியும், அஸி நதியும் இதன் எல்லைகள். 
காசிக்குச் சென்றால் மோட்சம் கிடைக்குமா? Will you get Moksha if you go to  Kashi?
அஸி, கங்கையில் சங்கமம் ஆகும் இடம் அஸி கட்டம். காசியின் நீளம் கங்கைக்கரை ஓரமாக 4 மைல்!
அங்கு புகழ் பெற்றிருப்பது விஸ்வநாதர் ஆலயம். 

இந்த கோவில் ஒரு குறுகிய தெருவில் அமைந்திருக்கிறது. உள் பிரகாரம் வளவளப்பான சலவைக் கல்லில் ஜொலிக்கிறது. 

மையத்தில் கருவறை, கங்கை நீர், பால், வில்வ இலைகளால் அபிஷேகம் நடந்தேறிக் கொண்டே இருக்கிறது.

ஆலயத்தைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடிசைகள்! 

இந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும், நேபாளம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் முதிய வயதில் வாழ்க்கையில் முழுமையைத் தேடி வந்து இந்த குடிசைகளில் தங்கியிருக்கிறார்கள், மரணத்தை தேடி!

அவர்கள் அதிகாலையிலே எழுந்து கிழக்கில் சூரியன் விழிக்கும் போது கூட்டம், கூட்டமாக வெளியேறி, காசியில் அமைந்திருக்கும் முக்கியமான வழிபாட்டுத் தலங்களை நோக்கி நகர்கிறார்கள். 
தினமும் கங்கையில் குளித்து, ‘இறைவா எங்களை ஏற்றுக் கொள்’ என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

 இவர்கள் காசியைத் தேடிச் சென்று காத்திருப்பதன் நோக்கம், அங்கு கடைசி மூச்சை விட்டால் மோட்சம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை.

இறப்பை மகிழ்ச்சியோடு எதிர்நோக்க காத்திருக்கும் முதியோர்களால் சூழப்பட்டி ருக்கும் இடங்களில் ஒன்று 
‘ கங்கா லாப் பவன் ’! 
இது மணிகர்ணிகா பகுதி யில் உள்ளது.

அவர்கள் மூச்சு முடிவுக்கு வந்த பின்பு தொடர்ந்து அங்கு வந்து தங்கி உயிரைவிட 12 ஆயிரம் முதியோர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து விட்டு, எப்போது அழைப்பு வரும் என்று காத்துக்கிடக்கிறார்கள். 

கியூவில் நிற்கும் அளவுக்கு இறப்பு மீது எவ்வளவு ஏக்கம் பாருங்கள்.
இன்னொன்று ‘காசி லாப் முக்தி பவன்’ ஜெய்டால் டால்மியா என்ற செல்வந்தர், தன்தாய் காசியில் மரணமடைந்த பிறகு தாயார் நினைவாக இந்த கட்டட த்தை விலைக்கு வாங்கினார். 

முதலில் வேத மந்திரம் ஓதவும், பகவத் கீதை சொற்பொழிவுகள் நிகழ்த்தவும், ஜதீக இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் அந்த இடத்தை பயன்படுத்தினார்.

ஆனால் இறப்பை எதிர்நோக்கும் முதியோர்கள் அந்த மையத்தில் வந்து குவிய, இறுதிக்குரிய இடமாக அது உறுதி செய்யப்பட்டுவிட்டது. 

இங்கு கூடி இருக்கும் முதியோர்களின் மனம் எப் போதும் இறைவனை நாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக வேத மந்திரங்களின் முழக்கம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

நேபாள நாட்டு அரசுக்கும் இந்த மோட்ச நம்பிக்கை இருக்கிறது. அதனால் 30 பேர் தங்கி இருக்கும் இடத்தை நேபாள அரசு பராமரிக்கிறது.

 அங்கிருப்பவர்களுக்கு உணவு, உடை கொடுத்து இறுதி வழி யனுப்பி வைப்பது வரை நேபாள அரசால் நியமிக்கப்பட்டிருப்பவர்களின் பொறுப்பு.
மரணம் நோக்கி ஒரு பயணம்- உலகிலேயே ...
இந்த மோட்ச பூமி 1891 மற்றும் 1921ம் ஆண்டுகளில் நோயால் துவண்டு மயான பூமியாக மாறி ஒரு இலட்சம் பேரை பலிவாங்கியிருக்கிறது. 

அப்போது மரணத்தை எதிர்நோக்கி நிறைய பேர் அங்கு செல்ல, அவர்களை கட்டுப்படுத்த ஆங்கிலேயே அரசு தீர்மானித்து நடவடிக்கை எடுத்தது , உடனே மனித ரீதியான சர்ச்சைகள் தொடங்கியது, 

ஆங்கிலேயே அரசு பின்வாங்கி, ‘நமக்கு என்னப்பா...’ என்று விட்டுவிட்டது.

இப்போதும் முடிவைத் தேடி நிறைய மக்கள் அங்கு செல்வதால், அவர்கள் கடைசி காலம் வரை தங்கி இருக்க இடம் கிடைப்பது அரிதாகி விட்டது. 

அதனால் அங்கு வாழும் மக்கள் தங்கள் வீடுகளை அத்தகைய முதியோர்களுக்காக வாடகைக்கு விடுகிறார்கள். சிலர் தங்கள் பெற்றோர்களை ஒப்பந்தக்காரர்களிடம் விட்டு விட்டு பணத்தைக் கட்டிவிட்டுச் சென்று விடுகிறார்கள்.

இறுதிக் காலம் வரை பராமரிக்கவும், இறப்புக்குப் பின்புள்ள சடங்குகளை செய்யவும் ஒப்பந்தக்காரர்கள் அந்தப் பபணத்தை பபயன்படுத்துகிறார்கள். 

எல்லாத்தையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கைத்தான் அவர்களுக்கு!

காசியில் 9 ஆயிரம் ஆண்டுகளாக 
‘அணையாத தீபம்’ 
எரிந்து கொண்டிருக்கிறது. 

அதிலிருந்து தீயை எடுத்துத்தான் அங்கு இறப்பவர்களின் சடலங்களில் வைத்து உடலை எரிக்கிறார்கள்.

தினமும் அங்கு 350 சடலங்கள் வரை எரிக்கப்படுகின்றனவாம். இங்கு உடல் எரிக்கப்படும் போது, உறவினர்களை அழ அனுமதிப்பதில்லை. 

யாராவது அழுதால் இறந்தவர் ஆன்மா மோட்சத்திற்கு சொல்லாது என்று கூறி அழுகைக்கு அணை போட்டு விடுகிறார்கள்.

விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து எட்டிப் பார்த்தால், அதே தெருவில் சற்று தூரத்தில் அமைந்திருக்கிறது அன்னபூரணி ஆலயம். தமிழ்நாட்டு கலைப்பாணி அதன் தனிச்சிப்பு.

தமிழகத்து நாதஸ்வரம் எப்போதும் அங்கு இசையருவியாய் கொட்டிக் கொண்டிருக்கிறது.

அங்கு நிகழும் மரணம், எரிப்பு எல்லாவற்றிலும் இசை கலந்து மனித மனங்களில் துக்கம் ஏற்படாமல் இதமாய் வருடிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. 

அதனால் இறந்தவரை முழு மனதோடு முழுமையாக வழியனுப்பி விட்டுச் செல்கிறார்கள்.

கங்கை நதி தனது கரைக் கரங்களால் காசி நகரை கிழக்கு - மேற்காக பிரிக்கிறது. மேற்கு கரையில் 
‘மணிகர்ணிகா கட்’ 
உள்ளது. 

இது தான் பூமியில் முதலில் தோன்றியதாகவும் பூமி முடியும் வரை (இறந்த உடல்கள்) அங்கு எரிந்து கொண்டே இருக்கும் என்பதும் ஐதீகம். 

வருடத்தின் 365 நாட்களும், முழு நேரமும் ஓயாத தீயுடன் உடல்கள் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருக்கின்றன.

இயந்திரமயமான உலகில் அங்கேயும், அதிலும் சுறுசுறுப்பு, உடலை கங்கையில் முக்கிவிட்டு ஈரம் சற்று வடிவதற்காக தரையில் கிடத்துகிறார்கள். 

அதற்குள் உரிமையானவர் மொட்டை அடித்துக் கொள்கிறார். தகனம் செய்பவர் ‘ரெடி’ என்றதும் உடல், தகன மேடைக்கு எடு த்துச் செல்லப்படுகிறது.

அணையா தீப மாய் எரியும் தீயில் இருந்து, தீயை எடுத்து சடலத்திற்கு ‘பொட்டு’ வைக்கிறார்கள். ஒரு மணி நேரத்தில் பிடி சாம்பல். 

அது அப்படியே கங்கையில் கரைக்கப்படுகிறது. அவ்வளவுதான் வாழ்க்கை என்று உணர்த்தப்படுகிறது. அந்த ஜென்மத்திற்கு அங்கே விழுகிறது முற்றுப்புள்ளி.

அரிச்சந்திரனின் மனைவி சந்திரமதி இறந்து போன தன் மகன் லோகிதாசனின் உடலை தூக்கிக் கொண்டு மயானத்திற்கு வருவாள்.

 அரிச்சந்திரன் அங்கே வெட்டியான்.
அவன் தன் மனைவியையும், மகனையும் அடை யாளம் காண்கிறான். ஆயினும் எரிப்பதற்குத் தேவையான பணத்தைக் கொடுத்தால்தான் காரியம் நடக்கும் என்று பொதுநிலை தவறாமல் உண்மை பேசுகிறான். 

மரணத் தில் கூட மனசாட்சிக்கு பயப்படாமல் உண்மை பேசியதால் அரிச்சந்திரனின் உண்மை, உலகிற்கே உன்னதம் ஆனது.

இந்த அரிச்சந்திரன் வெட்டியானாக இருந்து மகன் உடலை எரித்த 
‘அரிச்சந்திர கட்’ 
கங்கை ஓரத்தில் உடல்களுக்காக காத்திருக்கிறது. 

இங்கு உடலை எரிப்பதை இந்துக்கள் பெரும் புண்ணியமாகக் கருதுகிறார்கள்.

ஆனால் இறப்பு என்பது உண்மை’ என்று கருதுகிறவர்களில் ஒரு பகுதியினர் மறுபிறப்பு என்பதை நம்புகிறார்கள். ஒரு மனிதன் முக்தி அடையும் வரை அவன் மீண்டும், மீண்டும் பிறப்பான் என்ற நம்பிக்கை மக்களிடம் மேலோங்கி யுள்ளது.

 அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் 
‘காசியில் மரணம் முக்தியைத் தரும். அவர்கள் மீண்டும் பிறக்க மாட்டார்கள்’ 
என்பது நம்பிக்கையாக்கப்பட்டிருக்கிறது.

காசியில் எல்லாமுமே நம்பிக்கைதான்! 

நம்பிக்கையின்றி வேறு எதுவும் இல்லை 

 

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

உலகில்_ஆறாயிரம்_ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா?

மணக்கால் அய்யம்பேட்டை | 11:38 AM | Best Blogger Tips

 May be an image of text

உலகில்_ஆறாயிரம்_ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா?
 
உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்க, ஏத்தன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும் போது அடுக்கடுகான அமைவிடங்கள் இருப்பது தெரியவந்தது. அதாவது அந்த நகரம் புதையுண்டு அதன் மேல் மீண்டும்
ஒரு நகரம் உருவாக்கப்பட்டது.
 உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று  உங்களுக்குத் தெரியுமா? "The World's only living civilization" உலகில்  பழமையான ...
ஆனால் சுமார்6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம் “மதுரை “தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்கள்.
 
நகரம் மட்டும் இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை
*”The World’s only living civilization”*
 
என்று டிஸ்கவரி தொலைக்காட்சியின்
“The Story of India” ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல் வுட்ஸ்.
 
மேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள் மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில் சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்) கண்டுபிடிக்கப்பட்டது.
 Madurai Meenakshi Temple and... building.. | மதுரை மீனாட்சி ஆலயமும்...  கட்டிடமும்..
இதில் வியக்கத்தக்க விடயம் என்னவென்றால் இறந்தோரைப் புதைத்த இடத்தினை அடையாளம் கொள்ள புதைத்த இடத்தின் மீது அடையாளமாய் கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் இது இறந்தோரை தாழியில் அடைக்கும் நாகரீகத்திற்கும் முந்தையது.
 
இந்த இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும் கற்குவியலைக் காணலாம்.
 மதுரை மாநகரில் மக்களை துரத்தும் கரோனா | corona in madurai - hindutamil.in
அங்கு வந்து குறிப்பிட்ட நாட்களில் வந்து பூஜித்து வழிபடும் வழக்கத்தையும் சிலர் கொண்டுள்ளனர். அவர்களை விசாரித்த போது பரம்பரை, பரம்பரையாக பாரம்பரியமாக அழிபடுவதாகவும் இதற்கான காரணம் தெரியாது அங்கு முன்னோர்கள் இருப்பதாக நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
 Village Panchayats Merging with Madurai Corporation : மதுரை மாநகராட்சியுடன்  இணையும் 13 கிராம ஊராட்சி, ஒரு பேருராட்சி : முழு பட்டியல் இதோ..! | Times Now  Tamil
அது அவர்களது முன்னோர்கள் புதையுண்ட இடம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் சொன்னதைக் கேட்டு பிரம்மித்தனர்.
 
ஆம் நண்பர்களே சுமார் 6000வருடமாக தொடர்ந்து ஒரு நகரம் இயக்கம் கொண்டு வருவது மட்டுமல்ல, ஒரு கலாச்சாரமும் தொடர்ந்து இடைவெளியில்லாமல் இயங்கி வருகிறது என்றால் பிரம்மிப்பாக உள்ளதல்லவா?
அது மட்டுமல்ல மதுரைக்கு *”தூங்கா நகரம்”* 
 
என்ற பெயரும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் இட்ட பெயர் அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு இரவு நேரக் கடைகள் பிரசித்தம். அவற்றை அல் அங்காடி என்று கூறுவதுண்டு. இதன் காரணமாகவே இன்று வரை இது தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிறது.
 தூங்காநகரம் – மதுரையின் சிறப்புகள் | LINGESH
*ஆறாயிரம் ஆண்டுகளாக உலகிலேயே ஒரு நாகரீகத்தின் கலையையும், கலாச்சாரத்தையும் மொழியையும் சுமந்து தொடங்கி இயங்கி வரும் நகரம் மதுரை மட்டும் தான்* என்பது பெருமைபடக்கூடிய விடயம் தானே!..
*மதுரை* *மதுரை* *தான்*
 
 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷