மணக்கால் அய்யம்பேட்டை | 5:10 PM | Best Blogger Tips

 May be a doodle of elephant and rhinoceros

 

கோவில் யானை ஒன்று நதியில் நீராடி நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு கோவிலுக்கு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தது.
 
ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சாக்கடையில் பிரண்டு உடல்பூரா சேரும்சகதியுமாக ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.
 
யானை பாலத்தின் ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று பன்றிக்கு வழி விட்டது.
 
அந்தப் பன்றியோ, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், “பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!” என்று சொல்லிச் சிரித்தது.
அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, “அப்படியா, நீ பயந்து விட்டாயா?” என்று கேட்டது.
 
 
அதற்குக் கோவில் யானை..
 
"நான் குழித்து சுத்தமாக கோவிலுக்கு போகிறேன் என் எதிரே சாக்கடை பிரண்ட பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன், அதனால் நான் ஒதுங்கிக் கொண்டேன்" என்றது.
 
"நான் தவறி இடறிவிட்டால் பன்றி நசுங்கி விடும், அந்த பன்றிக்கு அவ்வளவு கொழுப்பா" , என்று கோபமா யானை திரும்பி முறைத்து பார்த்ததும் பன்றி பயந்து நடுங்கி தலைதெறிக்க உயிர் தப்பினால் போதும் என்று ஓடியது.,
 
துஷ்டனைக் கண்டால் தூர விலகு! இந்த வாசகம் கிட்டத் தட்ட இதற்குப் பொருந்தும். பன்றி துஷ்டன் இல்லை. ஆனால் அழுக்கு
😔