நர்மதை நதியின் நாயகன் மோடி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:13 | Best Blogger Tips
Image may contain: one or more people, people standing, mountain and outdoor

எனக்கு தெரிந்து மோடி தன்னுடைய பிறந்த
நாள்களில் பெரும்பாலான நாட்களை நர்மதா
நதிக்கரையின் அருகிலேயே இருக்கிறார். சபர்மதி மாஹி தபதி என்று பல ஆறுகள் த்திய பிரதேசத்தில் இருந்து குஜராத்தில்
நுழைந்து குஜராத்தை. வளமாக்கி சென்றா
லும் நர்மதா நதியைத்தான் மோடி என்றும்
தேடிக்கொண்டு இருக்கிறார்.

உலகில் உள்ள நதிகளின் கரைகளில் தான்
நாகரிகங்கள் வளரந்துள்ள பொழுது உலகி
ற்கே நாகரிகங்களை சொல்லிக் கொடுத்த
நம்முடைய பாரத நாட்டின் நதிகளின் ரிஷி
மூலத்தை தேடிச் சென்றால் அது நம்முடைய
பண்பாட்டின் ஆரம்பத்திற்கு சென்று விடும்.

நதிகளில், ஒரு கரையின் குறிப்பிட்ட பகுதிக ளைத்தான் நீராடுதுறை என்று கூறுவது வழ க்கம் ஆனால் நர்மதை நதியின் இருகரைகளு மே நீராடு துறையாக அமைந்துள்ளதாகப் புரா ணங்கள் கூறுகின்றன. நர்மதையின் கரைக ளிலுள்ள பழமையான பெரிய யாக குண்டங்க ளும் ஆசிரமங்களும் அதன் இரு கரைகளுமே சிறந்த தவபூமியாக இருந்துள்ளது.

தேவர்களின் தலைவன் இந்திரனும்; சந்திரன், செவ்வாய், சனி, முதலான கிரகங்களும் நார தர், வியாசர், பராசரர், மார்க்கண்டேயர், ஜமத க்னி போன்ற முனிவர்களும்; பாண்டவர்கள், திலீபன், விக்ரமாதித்தன், சாலிவாகனன், முத லிய பேரரசர்களும் நர்மதைக்கரையில் தவம்
இருந்துள்ளார்கள்.

எந்த ஒரு நதி உற்பத்தியாகும் மூலத்தை தேடி னாலும் அங்கே ஒரு கோயில் நிச்சயம் இரு க்கும்.இப்படித்தான்நர்மதை நதி உற்பத்தி ஸ்தானமானஅமர்கண்டக்கிலும் நர்மதேஸ்வ ரர் ஆலயம் அமைந்துள்ளது.நர்மதா நதிக்கு ஜடாசங்கரி என்கிற இன் னொரு பெயரும் உண்டு. அதாவது சிவபெருமானின் உடலில் இருந்து தோன்றியதால் நர்மதா நதிக்கு இந்த பெயர் வந்ததாம்.

கங்கை யமுனை சரஸ்வதியை விட நர்மதை யைத் தான் நம் முன்னோர்கள் புனிதமாக கருதியுள்ளார்கள் ஏழு தினங்கள் யமுனை யிலும், மூன்று தினங்கள் சரஸ்வதியிலும், ஒருமுறை கங்கையிலும் நீராடினால் நம் பாவங்கள் நீங்கும். ஆனால் நர்மதை நதியை ஒரு முறை தரிசித்தாலே போதும் அந்தப் பலன்கள் கிட்டும் என க்கூறி இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே கூட இருக்க லாம் ஒரு நதியை வலம் வரும் அதிசயம் நர்மதா நதியை சுற்றியே நடந்து வருகிறது.கிரிவலம் மாதிரி நர்மதா நதியை சுற்றி வலம் வரும் நர்மதா பரிக்ரமா என்கிற யாத்திரைமத்திய பிரதேசம் மகாராஷ்டிரம் குஜராத் மாநிலங்களில் மிக சிறப்பானது. நர்மதை நதிகரையில் தான் ஓம்காரேஷ்வர், மண்டலேஷ்வர், மஹேஷ்வர், கருடேஷ்வர், விமலேஷ்வர் என்று புகழ்பெற்ற சிவாலயங்க ள் உள் ளது.

நர்மதா நதி உற்பத்தியாகிற மத்தியப் பிரதேச த்தில் உள்ள அமர்கண்டக்கில் நீர் எடுத்து செ ன்று நர்மதை அரபிக்கடலில் கலக்கும் இடமா குஜராத் மாநிலம் பரூச் மாவட்டம் விமலே ஷ்வர் வரை 1300 கிலோ மீட்டர் நர்மதை நதி யின் இடது கரை ஓரமாக நடந்து வந்து அது அரபிக்கடலில் கலக்கும் இடத்தில் அந்த நீரில் சிறிதை கடலில் விட்டு விட்டு கடல் நீரை சிறி து பிடி த்துகொஆண்டு வந்து நர்மதேஸ்வர ற்க்கு அபிசேகம் செய்ய வேண்டும். இது தான் நர்மதா பரிக்ரமா என்று சொல்கி றார்கள் .

சும்மா இல்லீங்க அமர்காண்டக் டூ பரூச் மொ த்தம் 1300 கிலோ மீட்டர் .ஆக போக வர மொ த்தம் 2600 கி லோ மீட்டர் தூரத்தை நட ந்தே செல்ல வேண்டும் என்றால் குறைந்தது இர ண்டு மாதம் ஆகிவிடும். பாருங்கள் நீர் நிலை யை காக்க நம் முன்னோர்கள் யாத்திரை எல்லாம் மேற்கொண்டுள்ளார்கள் என்பதை நினைத்தால் எவ்வளவு பெருமையாக இரு க்கிறது.

இதை விடபெருமை இன்றைய காலத்தில் ர்மதா பரிக்ரமாவைநினைவுபடுத்தி மோடி மு டுக்கிவிட்ட நர்மதா சேவாயாத்ரா என்றே கூ றலாம்..அதாவது நம் முன்னோர் கள் நடத்திய நர்மதா பரிக்ரமாவை நவீனமாக்கி நர்மதா சேவா யாத்ரா என்கிற பெயரில் நர்மதா நதி யை பாதுகாக்க ஒரு இயக்கத்தையே மோடி உருவாக்கினார் என்றால் மோடிக்கு நர்மதா நதி மீது இருக்கும் பற்றை புரிந்து கொள்ள லாம் ..

இந்த நர்மதா நதிக்கு புராண கால கதை ன்று உண்டு.பண்டைய காலத்தில் நர்மதை என்கிற பெயரில் இரு ந்த இளவரசிக்கு சோனபத்ரன் என்கிற இளவரசனின்மேல் ஒரு இது அதாவது லவ் இருந்தது.அனால் அந்த
சோனபத்ரனுக்கு கங்கை என்கிற பெண் மீது லவ்வந்துவிட்டது.

இது நர்மதைக்கு தெரியாது.அதனால்அவள் தந்தையான மன்னன் மேகலனிடம் சோன புத்ரனை தான் திருமணம் செய்வேன் என்று அடம் பிடிக்க மன்னரும் சோன புத்ரனை தேடி பிடித்து வந்து திருமண ஏற்பாட்டை நடத்தி க்கொண்டு இருந்தார்.

இந்த நேரத்தில் ஒரு சாமியார் வந்து எனக்கு தான் நர்மதை வேண்டும் என்று வம்புக்கு நி ற்க மன்னனோஅந்த சாமியாரை பெண்டு கழற்றிவிட்டார்.கடைசியில்அந்த சாமியார் இந்தா பிடி என்று ஒரு சாபம் கொடுத்தா ர். அதன்படி சோணபத்ரனும் கங்கையும் தங்கள் விருப்பப்படி சேர்ந்து வாழ நதியாக மாறி ன்று கலக்கட்டும் என்றார்.

அடுத்து தனக்கு கிடைக்காத நர்மதை நதி யாக மாறி கடைசிவரை கன்னியாகவே இரு க்கட்டும் என்றார், பிறகு தன்னை அவமான ப்படுத்திய மன்னன் மேகலனை கற்பாறை கள் கொண்ட மலையாக மாறுவாய் என்று சாபமிட்டார்.சந்நியாசியின் சாபம் பலித்தது.
மன்னன் மலையாக மாறினான்.

அம்மலையிலிருந்து சோணாநதி உற்பத்தி யாகி கங்கையை தேடிக் கொண்டு கிழக்காக பாய்ந்தோடி வந்து கங்கையுடன் கலந்தது. நர்மதையும் அதே மலையிலிருந்து நதியாகத் தோன்றி சோணாவுக்கு எதிர் திசையில் மேற்காக பாய்ந்து சென்று மேற்குக்கடலில் கலந்தாள்.

கதை நல்லா இருக்குப்பா என்று சொல்கிறீர்க ளா தாராளமாக சொல்லுங்கள்.புவியியல் படி இதே மேகலன் என்கிற பெயரைக்கொண்ட மைக்கால் மலையில் தா ன் நர்மதையும் சோ ணா நதியும் உற்பத்தியாகின்றது.இதில் சோ ணா நதி வட கிழக்காக ஓடி பாட்னாவில் கங்கையுடன் கலக்கிறது.நர்மதா வட மேற்கா தன்ன ந்தனியாக ஓடி மத்திய பிரதேசம் மகாராஸ்டிரா வழியாக குஜராத்தில் அரபிக்க டலில் கலக்கிறது.

நர்மதையும் சோணாவும் ஒரே இடத்தில் தான் உற்பத்தியாகிறது.ஆனால் கடவுளின் ஆசிப்ப டி திசை மாறிபயணிக்கிறது.ஒரு வேளை ந்த சந்நியாசியின் சாபமாக கூட இருக்குமோ இருக்கலாம் .ஏன் இப்பொழுது இந்த சந்நி யாசி நர்மதா கதையை எடுத்து விடுகிறேன்
என்றால் நர்மதாவுக்கு சாபம் அளித்த அந்த சந்நியாசி இப்பொழுது மோடியாக கூட இருக்கலாம்.

ஏனென்றால் யாருக்குமே கட்டுப்படாத நர்மதா
நதி முதன் முதலில் மோடி உருவாக்கிய சர்தா ர் சரோவர் அணையில் தான் கட்டுப்பட்டு அட ங்கி அமைதியாகி குஜராத்தை வாழ வை த்து வருகிறாள் இதனால் நர்மதை முன்னொரு காலத்தில் வாழ்ந்த சந்நியாசிக்கு செய்த பா வத்திற்கு இப்பொழுது உள்ள சந்நியாசியிடம் பிராயச்சித்தம் பெறுகிறதோ என்னவோ..
Image may contain: 1 person, close-up
நன்றி  FB VIJAYAKUMAR ARUNAGIRI 


! இணையம்