கல்விச்சான்றிதழ்கள் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:16 | Best Blogger Tips

Image result for கல்விச்சான்றிதழ்கள் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி

https://www.facebook.com/images/emoji.php/v6/f9c/1/16/1f4d4.png📔 பள்ளிச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் இவற்றை சில சமயங்களில் சரிபார்த்தல் (ஏநசகைiஉயவழைn) அல்லது நேர்காணல் போன்ற காரணங்களுக்காக வெளியில் எடுத்துச் செல்ல நேரலாம். அப்படி செல்லும்போது பயணத்தில் தொலைந்துவிட்டாலோ அல்லது சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் அழிந்துவிட்டாலோ அல்லது எதிர்பாராதவிதமாக தீ விபத்துகளில் சேதமாகியிருந்தாலோ, கரையான்களால் பழுதுபட்டிருந்தாலோ மீண்டும் புதிய சான்றிதழை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
https://www.facebook.com/images/emoji.php/v6/f9c/1/16/1f4d4.png📔 ஏனெனில் இந்தச் சான்றிதழ்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பயன்படக்கூடிய முக்கிய ஆவணங்களாகும். மேற்படிப்பு பயில, அரசின் கடன் உதவி பெற, வேலைகளில் சேர போன்றவற்றிற்கு மட்டுமல்லாது வயதுச் சான்றாகவும் பயன்படுகிற ஆவணங்கள் இவை.
https://www.facebook.com/images/emoji.php/v6/f9c/1/16/1f4d4.png📔 தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும்.
நடைமுறைகள் :
https://www.facebook.com/images/emoji.php/v6/f9c/1/16/1f4d4.png📔 முதலில் மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும்.
https://www.facebook.com/images/emoji.php/v6/f9c/1/16/1f4d4.png📔 அடுத்து தொலைத்துவிட்ட விவரத்தை தினசரி பத்திரிகையில் அறிவிப்பு விளம்பரம் செய்ய வேண்டும்.
https://www.facebook.com/images/emoji.php/v6/f9c/1/16/1f4d4.png📔 இதற்கு குறைந்தது ரூ.500 வரை செலவழிக்க நேரிடும்.
https://www.facebook.com/images/emoji.php/v6/f9c/1/16/1f4d4.png📔 பின்னர் காவல்நிலையத்தில் சான்றிதழை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று கொடுக்கப்படும் சான்றிதழை பெற வேண்டும்.
https://www.facebook.com/images/emoji.php/v6/f9c/1/16/1f4d4.png📔 இதனை தாசில்தாரிடம் கொடுத்து அவரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.
https://www.facebook.com/images/emoji.php/v6/f9c/1/16/1f4d4.png📔 சான்றிதழ் நகல் பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு வங்கி வரவோலை வாங்க வேண்டும்.
https://www.facebook.com/images/emoji.php/v6/f9c/1/16/1f4d4.png📔 பின்னர் பத்திரிகை விளம்பரத்தை வெட்டி எடுத்து தாசில்தார் சான்றிதழ், வங்கி வரைவோலை முதலியவற்றை கோரிக்கை மனு ஒன்று எழுதி அதனுடன் இணைக்க வேண்டும்.
https://www.facebook.com/images/emoji.php/v6/f9c/1/16/1f4d4.png📔 மனுதாரர் எந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ்2 படித்தாரோ அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
https://www.facebook.com/images/emoji.php/v6/f9c/1/16/1f4d4.png📔 அதனை மாவட்ட அதிகாரி பரிசீலனை செய்து மாநில அரசு தேர்வு துறை இயக்குநருக்கு மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்க சிபாரிசு செய்வார்.
https://www.facebook.com/images/emoji.php/v6/f9c/1/16/1f4d4.png📔 சான்றிதழ் தன்மைக்கேற்ப (படித்த ஆண்டின்) 3 அல்லது 6 மாதங்களுக்குள் சான்றிதழ் நகல் பள்ளி கல்வி தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும்.
https://www.facebook.com/images/emoji.php/v6/f9c/1/16/1f4d4.png📔 இதனை இறுதியாக எந்த பள்ளியில் படித்து முடித்தோமோ, அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற முடியும்.
தனித்தேர்வர்களுக்கு :
https://www.facebook.com/images/emoji.php/v6/f9c/1/16/1f4d4.png📔 தனித்தேர்வர்கள் நேரடியாக தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.
குறிப்பு :
https://www.facebook.com/images/emoji.php/v6/f9c/1/16/1f4d4.png📔 பள்ளிஃகல்லு}ரி மாற்றுச் சான்றிதழ்கள், பள்ளிஃகல்லு}ரி மதிப்பெண் சான்றிதழ்கள் புதிதாகப் பெற அந்தந்த பள்ளித் தலைமையாசிரியரையோ அல்லது கல்லு}ரி முதல்வரையோ அணுகி மேலதிக விவரங்களையும், கட்டண விவரங்களையும் தெரிந்துகொள்ளவும்.
ஆதாரம் : தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை

 நன்றி இணையம்