சுகம் அடையும் யோகம் உங்களது சாதகத்தில் உண்டா ?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:24 | Best Blogger Tips

கிரகங்கள் படுத்தும் பாடு - ( 85 )
ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !
ஒருவர் தன் வாழ்வில் சுகம் பெறுதல் என்பது முக்கியமான ஒன்றாகும்.சுகம் பெறுவது என்னும் நிகழ்வு அவரவர் மனநிலையோடு சம்பந்தப்பட்ட செயலாகும்.
தன்னிடம் உள்ளதை கொண்டு மனநிறைவோடு சுகமாக எண்ணி வாழ்வது உண்டு.ஒரு சிலருக்கு எல்லாவித சுகங்களும் அவருக்கு கிடைத்தாலும் மனநிறைவு இல்லாததால் சுகமின்றி வாழ்வபர் உண்டு.எனவே சுகம்பெறுதல் மனநிறைவோடு தொடர்புடைய ஒன்று ஆகும்.
ஆதலால் ஒருவருடைய சாதகத்தில் மனதிற்காரன் எனப்படும் சந்திரன் எவ்வித பாவிகளது சேர்க்கை மற்றும் பார்வையின்றி பலப்படவேண்டும்.
அடுத்து முக்கியமாக ஒருவர் தனது சுக நிலையை ஆராய அவரது சாதகத்தில் இரண்டாவது கேந்திரமான நான்காமிடத்தையும் அதன் அதிபதியையும் நன்கு ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
இந்த நான்காமிடத்தின் மூலமாக ஒருவருடைய தன் சுகம்,தாய் சுகம்,வண்டி வாகனங்களால் பெறும் சுகம்,வீட்டால் பெறும் சுகம் ,காம சுகம் மற்றும் கல்வியால் அடையும் சுகம் முதலியவற்றை அறியும் ஸ்தானமாகும்.
இந்த நான்காமிடத்தில் பாவிகள் இல்லாது அந்த வீட்டு அதிபதி உச்சம்,ஆட்சி ,மூலதிரிகோணம் போன்ற நிலையை அடைந்து சுப குருவின் பார்வை விழ ஒருவருக்கு தன் வாழ்வில் மேற்கண்ட நான்காமிடத்திற்கு உரிய சுகங்களை அவர் தன் வாழ்வில் பெறுவார்.
இதில் சில விதிவிலக்கு என்னவெனில் நான்காமிடத்து அதிபதி சுபராக இருக்கும்பட்சத்தில் அவர் கேந்திராதிபதி தோஷத்தை தந்து சுகத்தில் நிறைவில்லாமல் செய்வார்.அதாவது நன்கு கற்று தேர்ந்தவராக இருந்தாலும் அவர் கற்ற கல்விக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் அதனால் பெறும் சுகத்தை தடைபடுத்துவார்.எனவே இதுபோன்ற அமைப்புடையவர்களுக்கு சுகாதிபதியானது திரிகோண ஸ்தானத்திலோ அல்லது மறைவு ஸ்தானங்களிலோ அமர்வது நல்லது.
கேந்திராதிபதி சுபராக இருக்கும் பட்சத்தில் மறைவுநிலையோ அல்லது திரிகோண நிலையோதான் சுகம் அடைய வைக்கிறது.இங்கு வழக்கமாக சோதிடர்ஙள் பயன்படுத்தும் விதி மாறுபாடு அடைகிறது.பொதுவாக சுகாதிபதி மறைந்ததால் சுகம் குறைவு என எடுத்துக்கொள்ளக்கூடாது.
சுக கேந்திராதிபதிகள் பாவிகளாக இருக்கும் பட்சத்தில் அவை திரிகோண ஸ்தானமேறினாலும் சுகத்திற்கு பங்கம் ஏற்பட்டுவிடுகிறது.இங்கும் பொதுவான விதி அடிப்படையில் சுகாதிபதி திரிகோணமேறியாதால் சுகம் அதிகம் கிடைக்கும் என புகழ்ந்து கூற முடியாது.
இதுபோன்ற சூட்சும உண்மைகள் பல சோதிடத்தில் உள்ளது .எனவே ஒருவருக்கு சுகம் பற்றி பலனளிக்கும்போது சுகாதிபதி கேந்திரம் திரிகோணம் ஏறினால் சுகம் அதிகம் பெறுவர் எனும் பொதுவான விதிகளை எடுத்துக்கொண்டு பலனளிக்ககூடாது.
சோதிடம் எனும் சமுத்திரத்தில் பயபக்தியோடு முத்து எடுக்க முயற்சி செய்ய பகவான் அருளாலும் ,நல்ல குருவருளாலும் பல சூட்சும உண்மைகள் மனதிற்கு புலப்படும்.
சுகம் பெறுதல் யாரல் :-
ஒருவர் சுகம் பெறுதல் யாரால் ? எதன் மூலம் ? என்பதை அவர்களது சாதகத்தில் சுகாதிபதி கொண்டுள்ள தொடர்பின் மூலம் அறியலாம்.
சுகாதிபதியானது பலம்பெற்று ஏழாம் அதிபதியோடு தொடர்பு கொள்ள மனைவி வழியாகவோ அல்லது மனைவி மூலமாகவோ சுகம் பெறலாம்.அதிக பொருள் ஈட்டும் மனைவி அமையலாம் அல்லது மனைவி வழியாக சொத்து கிடைக்கலாம்.இங்கு களஸ்திரகாரகன் சுக்கிரனும்,ஏழாம் அதிபதியும் பலப்பட்டிக்கவேண்டும்.
சுகாதிபதி குரு,புதன்,சுக்கிரன் போன்ற சுபராக வந்து ஜீவனாதிபதியும் சுபராகி ஒன்றுக்கொன்று தொடர்புகொள்ள நேரிய வழியில் பொருள் ஈட்டி சுகம்பெறலாம்.தனக்கு கிடைக்கும் வேலை வழியாக நேர்மையாக உழைத்து சுகம் பெறலாம்.அதேநேரத்தில் இருவரும் (சுக,ஜீவன) பாவியாக இருந்து ஒன்றுக்கொன்று தொடர்புபெற மனசாட்சிக்கு விரோதமாக தனது பணியில் நடந்து குறுக்கு வழியில் ஈட்டி அதன் மூலம் சுகம் பெறலாம்.
சுகாதிபதியும் ,பூர்வ புண்ணியஸ்தானதிபதியும் ஒன்றுக்கொன்று பார்வை மற்றும் சேர்க்கை மூலம் தொடர்பு கொள்ள பாட்டான் தேடிய சொத்தால் சுகம் பெறலாம்.இங்கு பூர்வ புண்ணியஸ்தானதிபதியும்,குருவும் பலப்பட்டிக்கவேண்டும்.
சுகாதிபதியும்,பாக்கியாதியும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ள தந்தை தேடிய சொத்தின் மூலம் சுகம் அடையலாம்.
இங்கு ஒன்பதாம் அதிபதியும்,சூரியனும் பலப்படவேண்டும்
ஒருவரது சுகாதிபதியும் ,குரு ,புதன் ,சூரியன் மற்றும் சுக்கிரன் பலப்பட தான் பெற்ற மற்றும் கற்ற கலைகளால் சுகம் அடையலாம்.
சுகாதிபதி விய ஸ்தானமான பணிரெண்டாமிடம் ஏறி பலப்பட (உச்சம்,ஆட்சி போன்ற..) வெளிநாடு சென்று அதாவது "திரைகடல் ஓடி திரவியம் தேடி " சுகப்படலாம்.
சுகாதிபதியும்,சகோதர ஸ்தானமான மூன்றாமிடமும் தொடர்பு கொண்டு பலப்ட்டு சகோதரகாரகன் செவ்வாயும் பலப்பட தனது சகோதரர்களால் சுகம் பெறலாம்.
நான்காமாதிபதியும்,சந்திரனும் பலப்பட தாய்மூலம் சுகத்தை பெறும் யோகம் உண்டு.பொருள் ஈட்டுவதன் மூலமோ அல்லது அம்மா வழியாக சொத்து பெறலாம்.
இப்படியாக ஒருவர் தன் வாழ்வில் பெறும் சுகங்களை பார்க்கலாம்.
அதேநேரத்தில் சுகாதிபதி நீசம்,அஸ்தமனம் மற்றும் பகை பெற்று சுக ஸ்தானத்தில் பாவி நிற்க தன் வாழ்வில் சுகம் என்பது குறைவு.எவ்வளவு பொருள் ஈட்டினாலும் அதை மகிழ்சியாக அனுபவிக்கும் சுகம் அடைவதில்லை.
நான்காமிடத்தில் கேது மற்றும் மாந்தி கூடி நான்காமாதிபதியும் நீசமடைய கடைசிவரை சொந்த வீட்டில் படுத்துறங்கும் சுகம் அவனுக்கு கிடைக்காது.
******************************************
(தங்களது சாதகங்களில் எந்தவிதமான சுகங்களும் மற்றும் யோகங்களும் உள்ளது என்பதை ஆராய்ந்து போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் போன் வழியாகவே பலன் பெறலாம்.மேலும் சாதக பொருத்தம்,திருமணதடை மற்றும் புத்திர தடைக்கான காரணத்தை ஆராய்ந்து அதற்கு ஏற்ற பரிகார விவரங்கள் அளிக்கப்படும் )
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் சென்டர்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
தொடர்புக்கு
செல் ; 97 151 89 647
செல்; 740 257 08 99
வாட்ஸ்அப் எண்
97 151 89 647
(பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை வாட்ஸ்அப்பில் மெஸ்ஸேஸ் செய்யவும்.கட்டணம் உண்டு)
My Email
masterastroravi@gmail.com
My website.Click hear
*******************************
Top of Form