புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது...?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:44 | Best Blogger Tips

புரட்டாசி மாதத்தில் புதன் வீடாகிய கன்னி ராசியில் சூரியன் அமர்கிறார்...புதன் பெருமாளை குறிக்கும் கிரகம் ஆகும்...சுக்கிரனுக்கு மகாலட்சுமி என்பதை போல...கன்னி ராசி காலப்புருஷ லக்னமான மேசத்துக்கு 6 ஆம் வீடாகிய கன்னி ராசி என்பதால் ருண ரோக ஸ்தானம் என்பதால் இம்மாதத்தில் வயிறு சம்பந்தமான அஜீரணம் பிரச்சினைகள் அதிகரிக்கும் காலம்...

...
மேலும் உடல் வெப்ப நிலையும் அதிகரிக்கும்..பித்தம் போன்றவையும் அதிகரிக்கும்...இதனால் இம்மாதத்தில் அசைவம் உண்டால் அவை அஜீரணத்தை மிக அதிகப்படுத்தும்...

பரவாயில்லைங்க.. நான் ஜீரணத்துக்கு ரசம் சாப்பிட்டுகிறேன்னாலும் ஒண்ணும் வேலைக்காகாது..அந்தளவு தொந்தரவு செய்யும் காலம் இது...அஜீரணம் இருப்பின் கோபம் அதிகரிக்கும்,காமம் அதிகரிக்கும்,சோம்பல்,மறதி,சலிப்பு அதிகரிக்கும் எந்த வேலையும் உருப்படியா முடியாது...பித்தம் அதிகரித்து வாதம் உண்டாக்கலாம்..மயக்கம் உண்டாக்கலாம் இதனால் துளசி தீர்த்தம் பெருமாள் கோயிலில் அடிக்கடி பருகுவதால் பித்தம் தீரும்..

சும்மாவே மட்டன் பிரையாணி,மட்டன் சுக்கா சாப்பிட்டா 2 நாளைக்கு மதமதன்னு இருக்கும்..வயித்துக்குள்ள கல்லை கட்டி போட்டாப்புல இருக்கும்..அதுவும் இய்றகையாகவே வயிறு பாதிப்புகளை தரும் மாதம்னா எச்சரிக்கையாத்தானே இருக்கணும்..அதுக்குத்தான் நம் முன்னோர்கள்..மலை ஏறு....பெருமாளை கும்பிடு...துளசி தீர்த்தம் குடி ந்னு சொல்லி வைச்சாங்க..கூட பெருமாள் அருளும் மிக பிரமதமா நமக்கு கிடைக்கும்...
See More