மகாத்மா காந்தி முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டபோது அவர் கணக்கைத் தொடங்கினார். மண்டேலா கால்சட்டையோடு காவல்நிலையத்தில்நிறுத்தி வைக்கப்பட்டபோது, வைராக்கியத்தை வளர்த்துக்கொண்டார்.

அண்ணல் அம்பேத்கரை மாட்டுவண்டியிலிருந்து உருட்டிவிட்டபோது, போராட்டக் குணத்தைவளர்த்துக் கொண்டார். இப்படி எண்ணற்றோர் உலகச் சரித்திரத்தில் இடம்பெற்றதற்கு அவர்கள் சந்தித்த அவமானங்களே உந்துசக்தியாக இருந்தது.

அண்ணல் அம்பேத்கரை மாட்டுவண்டியிலிருந்து உருட்டிவிட்டபோது, போராட்டக் குணத்தைவளர்த்துக் கொண்டார். இப்படி எண்ணற்றோர் உலகச் சரித்திரத்தில் இடம்பெற்றதற்கு அவர்கள் சந்தித்த அவமானங்களே உந்துசக்தியாக இருந்தது.
நம்மை உற்சாகக் குறைவாக ஆக்க வேண்டுமென்றே அவமானப்படுத்துகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நோக்கமே நம்மைச் சோர்வடையச் செய்வதும்,நம்முடைய நம்பிக்கையைச் சீர்குலைப்பதும். நாம் உடனே மனம் உடைந்தால் அவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பதைக் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அப்படிப்பட்ட அவமான நிகழ்வுகளை மூளையில் வைத்துக் கொண்டு முயற்சியைத் தீவிரமாக்க வேண்டுமே தவிர, இதயத்திற்கு எடுத்துச் சென்று பதைபதைக்கக் கூடாது.
எல்லாத் துறைகளிலும் தொடக்கத்தில் தூக்கியெறியப்பட்டவர்களும், நிராகரிக்கப்பட்டவர்களுமே நிலையான சாதனைகளை நிகழ்த்தினார்கள்.
அவர்களோடுநம்மை ஒப்பிட வேண்டியதில்லை, ஆனால் உதாரணமாகக் கொள்ள வேண்டும்.

அவர்களோடுநம்மை ஒப்பிட வேண்டியதில்லை, ஆனால் உதாரணமாகக் கொள்ள வேண்டும்.

பெர்னாட்ஷாவின் படைப்புகள் பலமுறை நிராகரிக்கப்பட்டவை. திரையில் ஜொலிக்கும் நடிகர்கள் பல அரங்கங்களின் கதவைத் தட்டி
அவமானப்படுத்தப்பட்டவர்கள். எடுத்த உடன் உலகம் யாரையும் தூக்கி வாரி உச்சி முகர்ந்து விடுவதில்லை. எனவே நமக்கு நிகழ்வது ஒன்றும் புதிதல்ல என்பதை உணர்ந்து அவமானத்திற்குப் பரிகாரம் தற்கொலை மூலம் உயிரைத் தருவதில் இல்லை, உயர்ந்து காட்டுவதில் உள்ளது என்பதை உணர வேண்டும்.
அவமானப்படுத்தப்பட்டவர்கள். எடுத்த உடன் உலகம் யாரையும் தூக்கி வாரி உச்சி முகர்ந்து விடுவதில்லை. எனவே நமக்கு நிகழ்வது ஒன்றும் புதிதல்ல என்பதை உணர்ந்து அவமானத்திற்குப் பரிகாரம் தற்கொலை மூலம் உயிரைத் தருவதில் இல்லை, உயர்ந்து காட்டுவதில் உள்ளது என்பதை உணர வேண்டும்.
