ஆடி அமாவாசை நாளை ஆடி-8 (24-07-2025)

மணக்கால் அய்யம்பேட்டை | 11:11 AM | Best Blogger Tips
ஆடி அமாவாசை
ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆடி அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது.

வானவியல் கணிப்பின் படி சூரியனும்,சந்திரனும் ஒரே இராசியில் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் "பிதுர் காரகன்" என்கிறோம். சந்திரனை "மாதுர் காரகன்" என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் நமது பிதா மாதாக்களாக வழிபடு தெய்வங்களாகும்.
ஆடி அமாவாசை
 ஆடி அமாவாசைக்கு முன்னோர்களை நினைக்கவும்,திதி கொடுக்கவும் மிகச்சிறந்த நாளாகும்.மேலும் இந்த தினத்தில்தான் நம்முடைய முன்னோர்கள் பூமிக்கு வருவதாக சாஸ்திரம் கூறுகிறது.இந்த நாளில் ஆற்றோரத்திலும், புண்ணியதலங்களிலும்,கடலிலும் நீராடி பிதூர் தர்பணம் செய்வதால் நாம் செய்த பாவங்களும்,தோசங்களும் விலகுவதோடு மட்டுமல்லாமல் கர்ம வினைகளும் நீங்கும்.
Things to avoid on aadi avavasai : ஆடி அமாவாசை 2024 : மறந்தும் இவற்றை  எல்லாம் செய்து விடாதீர்கள்

1. முதலில் அமாவாசை தினத்தில் நம்முடைய வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றி நம்மை காண வரும் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து வரவேற்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரம் சொல்லுகிறது என்றார்.. 

 நாளை ஆடி அமாவாசை: வழிபாடும்... பலன்களும்... Tomorrow Aadi Amavasai Worship

2. அமாவாசயில் எள் தானம் செய்தல் நல்லது. ஆம் எள்ளை தானமாகக் கொடுத்தாலே சகல பாவங்களும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை என்றார். 

தானம் செய்யுங்கள் | Make a donation 

3. பித்ருசாப நிவர்த்தி செய்தல் அவசியம். அதற்கு அமாவாசை நாளில் ஆடை தானம் செய்தல் என்பது மிக முக்கியமான விஷயம்.. இதனால் உங்கள் வாழ்வில் வேண்டிய பலன் உண்டாகும். புதிய ஆடைகளை தானம் செய்வதால் ஆயுள்விருத்தி, குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பது, கண்டாதி தோஷம் ஆகியவை விலகும்.

சித்தர்களின் குரல். - 4 வகையான பசு தானம். ***************************  வாஸ்திர தானம், கோதானம், பூமி தானம், அன்னதானம் ஆகியவை விரைவில் பலன் தருபவை  ... 
 4. மேலும் இந்த நாளில் பசு தானம் செய்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பித்ருசாப தோஷங்கள் அனைத்தும் விலகும். எந்த ஒரு சுப திதியிலும் பசுவை தானம் செய்வதால் பித்ருக்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். ஈரேழு ஜென்மத்தில் செய்த பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. அத்துடன் வேலை செய்யும் போது வரும் தடைகள் அனைத்தும் நீங்கும். 
 

food donation
5. இன்றைய நாளில் அன்னதானம் செய்வது சிறப்பு.. முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபட்ட பின்னர் ஏழைகளுக்கும் இயலாதவர்களுக்கும் அன்னதானம் கொடுப்பது தலைமுறைகே தோஷம் நீங்கும்.. அதனால் அமாவாசை நாளில் உணவின்றி தவிப்பவர்கள், ஏழைகள், பசியோடு இருப்பவர்களைத் தேடிச்சென்று தானம் கொடுங்கள். நம்முடைய வழிபாடும், தானமும் உள்ளன்போடு இருந்தால் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும் என்றார்..  
 
ஆடி அமாவாசையில் எப்படி தர்ப்பணம் கொடுக்கணும் தெரியுமா? முன்னோர்கள்  ரகசியம்!! - News18 தமிழ் 
தாய்,தந்தையர்கள் இறந்த தினத்தையோ,திதியோ மறந்தவர்களும்,சொந்த ஊருக்கு செல்ல முடியாதவர்களும்,இந்த நாளில் பெற்றோர்களை நினைத்து விரதம் இருந்தால் சிறப்பான வாழ்வும்,முன்னோர்களின் ஆசீர்வாதமும் கிடக்கும்.

நாளை ஆடி-8(24-07-2025)வியாழக்கிழமை“ஆடி அமாவாசை”ஆகும்.

 May be an image of 4 people and temple
நன்றி இணையம்