| 
                                    
          
உடலிலேயே
  சிறுநீரகம் தான் இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஒரு உறுப்பு. எனவே  
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமை.  நீரிழிவால்
 மக்கள் எவ்வளவு அவஸ்தைப்படுகின்றனரோ, அவ்வளவு மக்களும்  சிறுநீரகப் 
பிரச்சனையாலும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இத்தகைய சிறுநீரக  பிரச்சனை 
வராமல், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான  முயற்சிகளில் 
ஈடுபட வேண்டும். நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும், சிறுநீரகப்  பிரச்சனை 
வரும்.  சிறுநீரகம் சீராக இயக்குவதற்கு, தினமும் உடற்பயிற்சியை 
மேற்கொள்வது,  நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் காய்கறிகளை சாப்பிட
 வேண்டும்.  அதிலும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்றால், சர்க்கரை அதிகம் 
உள்ள உணவுகளை  சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் அதிக இரத்த 
அழுத்தமும் சிறுநீரகத்தை  பாதிக்கும். எனவே அவ்வப்போது இரத்த பரிசோதனை 
மற்றும் இரத்த அழுத்தத்தை  பரிசோதித்து பார்க்க வேண்டும்.  ஆய்வு ஒன்றில் 
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நிறைய உணவுகள்  உள்ளன என்றும், 
அவற்றை சரியாக சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தை  மட்டுமின்றி, உடல் 
முழுவதையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம் என்றும்  கூறுகிறது. சரி, 
இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!! 
பூண்டின் நன்மைகளை சொல்லவே வேண்டாம்.
 இதனை அதிகம் சாப்பிட்டால், இதய  நோய் வருவதை தவிர்ப்பதோடு, இது உடலில் 
உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைப்பதோடு,  உட்காயங்களையும் குறைத்துவிடும். 
பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, 
அவுரிநெல்லி, ராஸ்பெர்ரி போன்றவை  சிறுநீரகத்திற்கு தேவையான சத்துக்களை 
உள்ளடக்கியது. இதனை சாப்பிட்டால்,  சிறுநீரகம் ஆரோக்கியமாக இயங்குவதோடு, 
குடலியக்கமும் முறையாக நடைபெறும். 
சிறுநீரக நோய் இருந்தாலும் சரி, 
இல்லாவிட்டாலும் சரி, சிவப்பு  குடைமிளகாய் மிகவும் சிறந்த உணவுப் பொருள். 
இதில் பொட்டாசியம் குறைவாகவும்,  வைட்டமின்களான ஏ, சி மற்றும் பி6, ஃபோலிக்
 ஆசிட் மற்றும் நார்ச்சத்து  அதிகம் இருப்பதால், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக 
வைப்பதோடு, எந்த வகையான  புற்றுநோயையும் வராமல் தடுக்கும் 
முளைக்கட்டிய பச்சைப் பயிர்களை 
டயட்டில் சேர்ப்பது மிகவும் நல்லது.  இந்த முளைக்கட்டிய பயிர்கள் 
சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு,  சிறுநீரக கற்கள் வராமலும் 
தடுக்கும். 
முட்டைகோஸ் மிகவும் சிறந்த காய்கறி. 
இந்த காய்கறி சிறுநீரக இயக்கத்தை  சீராக வைப்பதில் முக்கிய பங்கு 
வகிக்கிறது. எனவே இத்தகைய காய்கறிகளையும்  உணவில் அவ்வப்போது சேர்த்து வர 
வேண்டும். 
ஆப்பிள் சாப்பிட்டால், இரத்த ஓட்டம் 
சீராக இருப்பதோடு, இரத்தத்தை  சுத்திகரிக்கும் சிறுநீரகமும் சுத்தமாக 
இருக்கும். எனவே தினமும் ஒரு  ஆப்பிள் சாப்பிட்டு வருவது நல்லது. 
அனைவருக்குமே ஆலிவ் ஆயில் பயன்கள் 
தெரியும். இந்த எண்ணெய் இதயத்திற்கு  மிகவும் சிறந்தது. மேலும் ஆலிவ் 
ஆயிலில் உள்ள ஃபேட்டி ஆசிட்டுகள்,  சிறுநீரகத்தை ஆரோக்கியமாக செயல்பட 
வைக்கின்றன. எனவே சமையலில் ஆலிவ் ஆயிலைப்  பயன்படுத்துவது நல்லது. 
 | 
இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் ! 18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் ! தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.
