மனிதன் சகலர்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:27 PM | Best Blogger Tips
Photo: விஞ்ஞானகலர்,பிரளயகலர்,சகலர் என்ற மூன்றுவித ஆன்ம தத்துவ வடிங்களில் மனிதன் சகலர் என்ற தத்துவ வடிவமாகும். சகலர் என்ற ஆன்மாவிற்கே உரித்தான ஆணவம், கன்மம், மாயை என்கிற மூன்று மலக் குற்றங்களை உடையவன் மனிதன். இக்குற்றங்க்களை அகற்றி நிர்மலமான ஆன்மாவைப் பெற்று பரம்பொருளோடு ஒன்று சேர்வதற்கான தத்துவத்தைக் குறிக்கும் மூர்த்தியே திரிபுராந்தீஸ்வரர் என்ற முப்புறம் எரித்த ஈசனின் வடிவம். இந்த மூன்று மலங்களும் பொன், வெள்ளி, இரும்பாலாகிய கோட்டையில் வசிக்கும் தாருகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்ற அசுரர்களாக சித்தரிக்கப் பட்டுள்ளது. அசுர சக்தியாகிய மூன்று மலங்களும் ஜீவாத்மாவை கொடுமையாகத் துன்புறுத்துவதால் அதில் இருந்து விடுபட பரமாத்மாவை பணிகின்ற வேளையில், பரம்பொருளான இறையாற்றல் பூமியைத் தேராகவும், சூரிய சந்திரர்களைத் தேர் சக்கரங்களாகவும், நான்கு வேதங்களை குதிரைகளாகவும், பிரம்மாவைத் தேரோட்டியாகவும் நிறுத்தி, மேரு மலையை வில்லாக வளைத்து, வாசுகி என்ற பாம்பை நாணாகக் கட்டி, திருமாலை அம்பாகவும், அம்பின் நுனியை அக்னியாகவும் வைத்து தேரில் ஏறி புறப்படும் போது அச்சு தேரின் முறிகின்றது. அப்போது ஆதிமூலத்தை வணங்கி திரிபுராதியர்களான அசுரர்கள் மீது பாணத்தை பிரயோகிக்க நினைத்தவர், இது தேவையற்றது என்று தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு அசுரர்களைப் பார்த்து புன்னகைத்த அடுத்த நொடியில் அசுரர்கள் எரிந்து சாம்பலானார்கள். இது புராணம்.

மூலாதாரமே பூமி. இந்த மூலாதாரம் முதுகெலும்பின் அடிப்பகுதியில் உள்ளது. இது ப்ருத்வி தத்துவமாகும். இதுவே தேராக சொல்லப்பட்டது. அந்த தேருக்கு சூரியகலை, சந்திரகலை என்கிற மூச்சுக்களே சக்கரங்கள். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கும் குதிரைகள். தத்துவம் அசி என்ற உண்மை தத்துவமே பிரம்மன் என்ற தேரோட்டி.முதுகுத் தண்டே மேருமலை.அதில் உள்ள ஸுஷும்ணா நாடியே வாசுகி. தர்மத்தின் வடிவான திருமாலே அம்பு. குண்டலினி சக்தியான ருத்ரனே அக்னி. இவை அனைத்தையும் கொண்டு செல்லும் தத்துவமே இறைவன்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் மெய்ஞானத்தைக் குறிப்பவை. மெய்ஞானம் என்பது உண்மைத் தத்துவம். இந்த உண்மைத் தத்துவங்கள் அனைத்தும் ஒன்று திரண்டு நிற்கும் போது அதிலிருந்து வெளிப்படும் ஓஜஸே புன்சிரிப்பு. அந்த புன்சிரிப்பாகிய ஓஜஸால் மும்மலங்களாகிய அசுரசக்திகள் எரிந்து போகின்றன. இத்தகைய அரிய குண்டலினி யோக தத்துவத்தைக் குறிக்கின்ற ஸ்தலமே திருவதிகை திருவீரட்டானேஸ்வரர் ஆலயம். எங்கள் ஊரிலும் இதே பெயரில் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த தத்துவத்தை உணர்ந்து, உள்வாங்கி இந்தத் திருத்தலங்களை வழிபடுபவர்களுக்கு குண்டலினி சக்தி இறையாற்றலை அடைவதற்கு அருள் புரிவாள்.
விஞ்ஞானகலர்,பிரளயகலர்,சகலர் என்ற மூன்றுவித ஆன்ம தத்துவ வடிங்களில் மனிதன் சகலர் என்ற தத்துவ வடிவமாகும். சகலர் என்ற ஆன்மாவிற்கே உரித்தான ஆணவம், கன்மம், மாயை என்கிற மூன்று மலக் குற்றங்களை உடையவன் மனிதன். இக்குற்றங்க்களை அகற்றி நிர்மலமான ஆன்மாவைப் பெற்று பரம்பொருளோடு ஒன்று சேர்வதற்கான தத்துவத்தைக் குறிக்கும் மூர்த்தியே திரிபுராந்தீஸ்வரர் என்ற முப்புறம் எரித்த ஈசனின் வடிவம். இந்த மூன்று மலங்களும் பொன், வெள்ளி, இரும்பாலாகிய கோட்டையில் வசிக்கும் தாருகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்ற அசுரர்களாக சித்தரிக்கப் பட்டுள்ளது. அசுர சக்தியாகிய மூன்று மலங்களும் ஜீவாத்மாவை கொடுமையாகத் துன்புறுத்துவதால் அதில் இருந்து விடுபட பரமாத்மாவை பணிகின்ற வேளையில், பரம்பொருளான இறையாற்றல் பூமியைத் தேராகவும், சூரிய சந்திரர்களைத் தேர் சக்கரங்களாகவும், நான்கு வேதங்களை குதிரைகளாகவும், பிரம்மாவைத் தேரோட்டியாகவும் நிறுத்தி, மேரு மலையை வில்லாக வளைத்து, வாசுகி என்ற பாம்பை நாணாகக் கட்டி, திருமாலை அம்பாகவும், அம்பின் நுனியை அக்னியாகவும் வைத்து தேரில் ஏறி புறப்படும் போது அச்சு தேரின் முறிகின்றது. அப்போது ஆதிமூலத்தை வணங்கி திரிபுராதியர்களான அசுரர்கள் மீது பாணத்தை பிரயோகிக்க நினைத்தவர், இது தேவையற்றது என்று தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு அசுரர்களைப் பார்த்து புன்னகைத்த அடுத்த நொடியில் அசுரர்கள் எரிந்து சாம்பலானார்கள். இது புராணம்.

மூலாதாரமே பூமி. இந்த மூலாதாரம் முதுகெலும்பின் அடிப்பகுதியில் உள்ளது. இது ப்ருத்வி தத்துவமாகும். இதுவே தேராக சொல்லப்பட்டது. அந்த தேருக்கு சூரியகலை, சந்திரகலை என்கிற மூச்சுக்களே சக்கரங்கள். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கும் குதிரைகள். தத்துவம் அசி என்ற உண்மை தத்துவமே பிரம்மன் என்ற தேரோட்டி.முதுகுத் தண்டே மேருமலை.அதில் உள்ள ஸுஷும்ணா நாடியே வாசுகி. தர்மத்தின் வடிவான திருமாலே அம்பு. குண்டலினி சக்தியான ருத்ரனே அக்னி. இவை அனைத்தையும் கொண்டு செல்லும் தத்துவமே இறைவன்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் மெய்ஞானத்தைக் குறிப்பவை. மெய்ஞானம் என்பது உண்மைத் தத்துவம். இந்த உண்மைத் தத்துவங்கள் அனைத்தும் ஒன்று திரண்டு நிற்கும் போது அதிலிருந்து வெளிப்படும் ஓஜஸே புன்சிரிப்பு. அந்த புன்சிரிப்பாகிய ஓஜஸால் மும்மலங்களாகிய அசுரசக்திகள் எரிந்து போகின்றன. இத்தகைய அரிய குண்டலினி யோக தத்துவத்தைக் குறிக்கின்ற ஸ்தலமே திருவதிகை திருவீரட்டானேஸ்வரர் ஆலயம். எங்கள் ஊரிலும் இதே பெயரில் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த தத்துவத்தை உணர்ந்து, உள்வாங்கி இந்தத் திருத்தலங்களை வழிபடுபவர்களுக்கு குண்டலினி சக்தி இறையாற்றலை அடைவதற்கு அருள் புரிவாள்.
 
Via FB மௌனத்தின் குரல்
 

மௌனம்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:26 PM | Best Blogger Tips
Photo: மனம், வாக்கு, காயம் இந்த மூன்றையும் கரணங்கள் என்பார்கள். இந்த மூன்றையும் அசையாமல் வைத்திருப்பதற்குப் பெயர்தான் மௌனம். ஆன்மீக வாழ்வை ஒரு கனி எனக் கொண்டால், மௌனமே அதன் சுவையாகும். நாம் அடைகின்ற முடிந்த நிலையை மௌனம் எனலாம். மனம், வாக்கு, காயம் இந்த மூன்றால் கடைபிடிக்கப்படும் மௌனத்தில், வாக்கால் கடைபிடிக்கப்படும் மௌனமே எளிதானது. எனவே முதலில் மௌனம் பழகுகின்றவர்கள் பேசாமல் இருந்து பழக வேண்டும். வாயை அசைக்காமல் வைத்திருப்பது ஒரு சிறந்த பயிற்சியாகும். இதனால் வாக்கு சித்தி உண்டாகும். இல்லறத்தார்கள் விரத நாட்களில் மௌனம் கடைபிடிப்பார்கள். மௌனத்தோடு இறை சிந்தனையும் சேரும் போது அதன் பலன் மிகுதியாகும். வாக்கு மௌனம் கடைபிடிப்பவர்கள் முதலில் தனிமையில் இருப்பதே நல்லது. அதில் சித்தி அடைந்த பிறகு கூட்டமாக உள்ள இடத்தில் அமரலாம். வாக்கு கட்டுப்படுத்தப்படும் போது மற்ற இந்திரியங்களும் கட்டுக்குள் வருகின்றன. வாக்கு மௌனம் கடைபிடிப்பவர்களுக்கு கோபம் என்கிற குற்றம் நீங்கும். பேச்சில் தெளிவு ஏற்படும். பெண்களுக்கு இந்த பயிற்சி நல்ல பலனைத் தரும். அவர்கள் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகளே ஏற்படாது. சக்தி விரையமாவது தடுக்கப்படும். பேச்சு குறைகின்ற அளவு செயல்திறன் அதிகரிக்கும். 

உடலை அசையாமல் வைத்திருப்பது சரீர மௌனம். மனமடங்கினால்தான் இது சாத்தியமாகும். அங்க சேஷ்ட்டைகள் எதுவும் செய்யாமல் இருக்க வேண்டும். உடம்பை அசைத்தல், கால்களை ஆட்டுதல், மூக்கை நோண்டுதல், வாயில் விரலை வைத்தல், தலையைச் சொறிதல், நகங்கடித்தல், காது குடைதல், பல் குத்துத்தல், கன்னத்தில் கை வைத்தல் போன்ற இவைக்கள் எல்லாம் அங்கச் சேஷ்டைகளே. இப்படி பலவிதமான அங்க சேஷ்டைகளைச் செய்யாமல் அமர்ந்திருப்போமேயானால் இச்சாசக்தி வளரும். சரீர மௌனம் கடைபிடிப்பவர்கள் பத்மாசனம் அல்லதுவீராசனம் அல்லது சுகாசத்தில் அமர வேண்டும். கால்களை நீட்டியோ, மடித்தோ அமரக்கூடாது. 

மனதை அசையாமல் வைத்திருப்பதே மகாமௌனமாகும். இது மிகவும் கடினமானது. சிந்தையை அடக்கிச் சும்மா இருக்கிறச் செயல் அரிது என்பது முன்னோர்கள் வாக்கு. மனம் அடங்கியவன் தெய்வ நிலையை அடைவான். மனம் சுத்தி அடைந்தால்தான் அதை அடக்குவது சாத்தியமாகும். மாசு உடைய மனம் கட்டுக்குள் அடங்காது. தீய எண்ணங்களை போக்காத வரை மனதை மௌனமாக வைக்கவே முடியாது. உலகாய வாழ்வில் உள்ளவரை மனதை அடக்க போராட வேண்டியதிருக்கும். அந்த போராட்டத்தின் விளைவே மன உளைச்சலை உண்டு பண்ணும். ஆசைகளையும், மும்மலங்களையும், நான் என்கிற அகந்தையையும் நீக்கினால்தான் மனம் அமைதி அடையும். பிராணனை கட்டுக்குள் கொண்டு வந்தால் மனதை அடக்குவது எளிதாகும். மகாமௌனமே தெய்வநிலை. அதுவே பிரம்மானந்தம். பரமானந்தம். அதை அடைவதே ஜீவாத்மாவின் குறிக்கோள். அந்தத் தத்துவத்தை விளக்கும் வடிவமாகவே தக்ஷிணாமூர்த்தி மௌனமாக அமர்ந்த்திருக்கிறார். மௌனமே ஆதியாகும். அதை அடைய மௌனமே ஒரே வழி. எல்லா உபாயங்களும் மௌனத்திலே போய்தான் முடியும். ஆரம்பமும் முடிவும் மௌனமே.
மனம், வாக்கு, காயம் இந்த மூன்றையும் கரணங்கள் என்பார்கள். இந்த மூன்றையும் அசையாமல் வைத்திருப்பதற்குப் பெயர்தான் மௌனம். ஆன்மீக வாழ்வை ஒரு கனி எனக் கொண்டால், மௌனமே அதன் சுவையாகும். நாம் அடைகின்ற முடிந்த நிலையை மௌனம் எனலாம். மனம், வாக்கு, காயம் இந்த மூன்றால் கடைபிடிக்கப்படும் மௌனத்தில், வாக்கால் கடைபிடிக்கப்படும் மௌனமே எளிதானது. எனவே முதலில் மௌனம் பழகுகின்றவர்கள் பேசாமல் இருந்து பழக வேண்டும். வாயை அசைக்காமல் வைத்திருப்பது ஒரு சிறந்த பயிற்சியாகும். இதனால் வாக்கு சித்தி உண்டாகும். இல்லறத்தார்கள் விரத நாட்களில் மௌனம் கடைபிடிப்பார்கள். மௌனத்தோடு இறை சிந்தனையும் சேரும் போது அதன் பலன் மிகுதியாகும். வாக்கு மௌனம் கடைபிடிப்பவர்கள் முதலில் தனிமையில் இருப்பதே நல்லது. அதில் சித்தி அடைந்த பிறகு கூட்டமாக உள்ள இடத்தில் அமரலாம். வாக்கு கட்டுப்படுத்தப்படும் போது மற்ற இந்திரியங்களும் கட்டுக்குள் வருகின்றன. வாக்கு மௌனம் கடைபிடிப்பவர்களுக்கு கோபம் என்கிற குற்றம் நீங்கும். பேச்சில் தெளிவு ஏற்படும். பெண்களுக்கு இந்த பயிற்சி நல்ல பலனைத் தரும். அவர்கள் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகளே ஏற்படாது. சக்தி விரையமாவது தடுக்கப்படும். பேச்சு குறைகின்ற அளவு செயல்திறன் அதிகரிக்கும்.

உடலை அசையாமல் வைத்திருப்பது சரீர மௌனம். மனமடங்கினால்தான் இது சாத்தியமாகும். அங்க சேஷ்ட்டைகள் எதுவும் செய்யாமல் இருக்க வேண்டும். உடம்பை அசைத்தல், கால்களை ஆட்டுதல், மூக்கை நோண்டுதல், வாயில் விரலை வைத்தல், தலையைச் சொறிதல், நகங்கடித்தல், காது குடைதல், பல் குத்துத்தல், கன்னத்தில் கை வைத்தல் போன்ற இவைக்கள் எல்லாம் அங்கச் சேஷ்டைகளே. இப்படி பலவிதமான அங்க சேஷ்டைகளைச் செய்யாமல் அமர்ந்திருப்போமேயானால் இச்சாசக்தி வளரும். சரீர மௌனம் கடைபிடிப்பவர்கள் பத்மாசனம் அல்லதுவீராசனம் அல்லது சுகாசத்தில் அமர வேண்டும். கால்களை நீட்டியோ, மடித்தோ அமரக்கூடாது.

மனதை அசையாமல் வைத்திருப்பதே மகாமௌனமாகும். இது மிகவும் கடினமானது. சிந்தையை அடக்கிச் சும்மா இருக்கிறச் செயல் அரிது என்பது முன்னோர்கள் வாக்கு. மனம் அடங்கியவன் தெய்வ நிலையை அடைவான். மனம் சுத்தி அடைந்தால்தான் அதை அடக்குவது சாத்தியமாகும். மாசு உடைய மனம் கட்டுக்குள் அடங்காது. தீய எண்ணங்களை போக்காத வரை மனதை மௌனமாக வைக்கவே முடியாது. உலகாய வாழ்வில் உள்ளவரை மனதை அடக்க போராட வேண்டியதிருக்கும். அந்த போராட்டத்தின் விளைவே மன உளைச்சலை உண்டு பண்ணும். ஆசைகளையும், மும்மலங்களையும், நான் என்கிற அகந்தையையும் நீக்கினால்தான் மனம் அமைதி அடையும். பிராணனை கட்டுக்குள் கொண்டு வந்தால் மனதை அடக்குவது எளிதாகும். மகாமௌனமே தெய்வநிலை. அதுவே பிரம்மானந்தம். பரமானந்தம். அதை அடைவதே ஜீவாத்மாவின் குறிக்கோள். அந்தத் தத்துவத்தை விளக்கும் வடிவமாகவே தக்ஷிணாமூர்த்தி மௌனமாக அமர்ந்த்திருக்கிறார். மௌனமே ஆதியாகும். அதை அடைய மௌனமே ஒரே வழி. எல்லா உபாயங்களும் மௌனத்திலே போய்தான் முடியும். ஆரம்பமும் முடிவும் மௌனமே.
 
Via FB மௌனத்தின் குரல்
 

கேள்வி கேட்பது

மணக்கால் அய்யம்பேட்டை | 12:24 PM | Best Blogger Tips
Photo: கேள்வி கேட்பது என்பது திறமை. பதில் சொல்வது பொறுமை. என்றாலும், கேள்வியே வாழ்க்கை ஆகிவிடக் கூடாது. அவ்வாறாயின் வாழ்க்கையே கேள்விக் குறி ஆகிவிடும். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே இருந்தால் நம் அறிவுக்கு எதுவும் புலனாகாது. நம் ஆறாம் அறிவான பகுத்தறிவை உபயோகப்படுத்தி தன்னைத் தானே கேட்டுக் கொண்டு, நம் மூளையில் மூடிக்கிடக்கும் ஒவ்வொரு செல்லாகத் தட்ட வேண்டும். மனதுக்குள் விடையைத் தேட வேண்டும். அதுவே கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்கும் என்பதன் பொருள். ஒரு மகானிடம் போய் ஒருவர் ஐயா என் துன்பங்கள்எல்லாம் போக ஒரு வழி சொல்லுங்கள் என்றார். அவரும் ''கடவுள் கண் திறக்கும் வரை காத்திரு'' என்று சொல்லி அனுப்பி விட்டார். அந்த மனிதரும் போய்விட்டார். வெகு காலம் ஆயிற்று மீண்டும் அந்த மனிதர் வந்தார். மிகவும் வாடிப் போனவராக துன்பத்தில் உழன்று துயருற்றவராக வந்தார். மகானிடம் போய் ஐயா எவ்வளவு காலம்தான் காத்திருப்பது ? கடவுள் கண் திறக்கவும் இல்லை. என் துன்பம் தீர்ந்த பாடும் இல்லை என்று வேதனையோடு சொன்னார்.  அந்த மகானும் நான் சொன்னதை நீ தவறாகப் புரிந்து கொண்டாய். கட, உள், கண், தீ, இறக்கும், வரை, காத்திரு என்றுதான் சொன்னேன். நீ வேறு விதமாகப் புரிந்து கொண்டாய். இனியாவது நான் சொன்னதைச் செய், துன்பங்கள் ஓடிப் போகும். பேரின்பம் அடைவாய் என்றார். அதாவது கடந்து உள்ளே செல். கண்களால் வெளி உலகில் சுற்றிக் கொண்டிருக்கும் புலன்களால் ஏற்படும் மலக் குற்றங்கள் என்னும் கொடிய தீ இறக்கும் வரை காத்திரு. பேரின்பம் அடைவாய். 

வடக்கே இருப்பது இமய மலை. சித்தர்களுக்கோ அது நம் உடலாகவே இருக்கிறது. அதில் தாய் நீர் என்னும் அமிர்தம், குளுமை நீர் என்னும் சளி, உஷ்ண நீர் எனப்படும் பித்தம், தச நாடிகளுக்கு ஒப்பாக பத்து நதிகள், அக்னி காந்தத்திற்கு ஒப்பாக  கங்கை நதி, பெரும் கபாலத்திற்கு இணையாக ஜுவாலாமுகி, சிறு மூளைக்கு ஒப்பாக சிவன் கோவிலும் உள்ளது. ஏழாவது மலைக்கு மேலே ஞானிகள் எப்போதும் தவம் செய்தபடி இருக்கிறார்கள். இருபத்தோராவது மலையில் கற்ப மூலிகைகள் பலவும் உள்ளன. முப்பத்திரெண்டாவது மலையில் ஜுவாலாமுகி என்னும் அனையா விளக்கு எரிந்து கொண்டே இருக்கிறது. இந்த மலையில் சீனாவுக்கு அருகே சிவக்கட்டு என்னும் பாதரசம் ஊறும் ஊற்று இருக்கிறது. நம் உடலில் அதற்கு இணையாக நாதவிந்து உள்ளது.

எப்போதும் குளுமையாக இருக்கும் இந்த மலை உருகுவதற்கு காரணம் உண்டு. சித்திரை மாதம் முழு நிலவைக் கொண்ட ஜுவாலாமுகி மலை உச்சியில் சூரியனின் வெப்பம் படும் போது மலை உருகத் துவங்குகிறது. உருகி வரும் கங்கையானது ஏழு மாநிலங்களை சுத்தப்படுத்துகிறது. நம் உச்சியிலும் தவக்கனலால் தாய் நீர் சுரக்கும் போது, அது ஏழு ஆதாரங்களையும் சுத்தம் செய்கிறது. ஜுவாலாமுகி என்னும் அக்னி ஏழு ஆதாரங்களோடு கல்லீரலையும், நாபியையும் சுத்தப்படுத்தும்.இவையெல்லாம் சுத்தமடையும் போதுதான் குண்டலினி முழுமையாக சிவனோடு ஐக்கியமாகி யோகி பிரம்ம ஞானியாவான். இமய மலையில் உள்ள 63 மலைத்தொடர்களும் ஆகாயத்தைப் பார்த்தபடி இருக்கும். 64 வதாக ஒரே ஒரு மலைமட்டும் கீழ் நோக்கி இருக்கும். இந்த மலைக்குப் பெயர் பிரம்ம கபால மலையாகும். இது போலவே நம் உடலில் பெருமூளையின் நடுப்பகுதி மட்டும் கீழ் நோக்கி உள்ளது. சித்தர்கள் அதைத்தான் முழுமதி என்பார்கள். இமயத்தில் இரண்டு நீர்க் குழிகள் உள்ளன. ஒன்று வெப்ப நீராகும் மற்றொன்று குளிர்ந்த நீராகும். அதாவது ஒன்று சிவநீர் மற்றது தாய் நீர். பித்தம் என்றால் சிவன். அதுவே பித்த நீர். மற்ற தாய் நீரானது ஞானிகளுக்கு நல்ல சக்தியைத் தருகிறது. ஆணும் பெண்ணும் ஒன்றே என்பதற்கு விளக்கமே இந்த மலைதான். பெண்ணென்ற உடலை நாயகன் உயிர் உள்ளவரை விடுவதில்லை. யார் அந்த நாயகன் ? அவனே பித்தமாகிய பித்தன். சித்தனுக்கெல்லாம் சித்தமாகிய சித்தன். அவனே சிவன். அவனே ஆண்மை. சர்வம் சக்தி மயம். எங்கும் பித்த மயம். உருவமே இல்லாத உவமயம் தான் எங்கும் சிவமயம்.

மகா தவசியான பகீரதன் பிரம்ம நீரைப் பெற ஆயிரக் கணக்கான ஆண்டுகள் தவமிருந்தார். சிவத்தைக் கட்டி, தன் உடலில் உள்ள 18 படிகளையும் கட்டி சிவ நாதத்தைப் பெற்றார். சிவ பெருமானும் காட்சி தந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்க, பகீரதனும் பிரம்ம நீர் வேண்டும் என்று கேட்டார். சிவனும் அருளி மறைகிறார். பகீரதனோ மகிழ்ச்சியில் ''தலைகால்'' புரியாமல் ஆடுகிறார். தன்னிலை மறந்தார். அந்தோ பரிதாபம் சிவ நீரோ நாதத்தில் நின்று விட்டது. வேதனை அடைந்த பகீரதன் மீண்டும் முன்பை விட முனைப்பாக கடும் தவம் இயற்றுகிறார். ஆண்டுகள் கடந்தன. இறுதியில் மனமிரங்கிய சிவபெருமான் காட்சி தந்தார். பக்தா தன்னிலை மறந்த நீ நாபியைக் கட்ட மறந்தாய். அதனால் பிரம்மநீர் நாதத்தில் நின்றது. முழுமையாக ஞானம் பெற நீ கங்கை நீர் அருந்த வேண்டும். அருந்தினால் சித்தனாவாய் என்று கூறி ஆசிர்வதிக்க, நாபி நின்றது, நாதம் திறந்தது கங்கை நீர் அதாவது அமிர்தம்(தாய் நீர்) உண்டார் பிரம்ம ஜோதியில் இணைந்தார். அன்று முதல் இன்று வரை உலகில் நிலைத்து நிற்பது தாய் நீர் ஒன்றே. ஞானிக்கோர் தாய் நீர், மண்ணிற்கோர் கங்கை நீர். கலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் கோடானுகோடி மக்களும் பித்தத்தைக் கட்டினால் (சிவத்தை) ஞான நீர் அருந்தலாம், காயத்தைக் கல்பமாக்கலாம்.  பிரம்மத்தை அடைய இது ஒன்றே வழி. அது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல என்பதால்தான் பகீரதப் பிரயத்தனம் என்பார்கள். எனினும், குருவருளும், திருவருளும் கூடினால் எதுவும் எளிதே.
கேள்வி கேட்பது என்பது திறமை. பதில் சொல்வது பொறுமை. என்றாலும், கேள்வியே வாழ்க்கை ஆகிவிடக் கூடாது. அவ்வாறாயின் வாழ்க்கையே கேள்விக் குறி ஆகிவிடும். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே இருந்தால் நம் அறிவுக்கு எதுவும் புலனாகாது. நம் ஆறாம் அறிவான பகுத்தறிவை உபயோகப்படுத்தி தன்னைத் தானே கேட்டுக் கொண்டு, நம் மூளையில் மூடிக்கிடக்கும் ஒவ்வொரு செல்லாகத் தட்ட வேண்டும். மனதுக்குள் விடையைத் தேட வேண்டும். அதுவே கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்கும் என்பதன் பொருள். ஒரு மகானிடம் போய் ஒருவர் ஐயா என் துன்பங்கள்எல்லாம் போக ஒரு வழி சொல்லுங்கள் என்றார். அவரும் ''கடவுள் கண் திறக்கும் வரை காத்திரு'' என்று சொல்லி அனுப்பி விட்டார். அந்த மனிதரும் போய்விட்டார். வெகு காலம் ஆயிற்று மீண்டும் அந்த மனிதர் வந்தார். மிகவும் வாடிப் போனவராக துன்பத்தில் உழன்று துயருற்றவராக வந்தார். மகானிடம் போய் ஐயா எவ்வளவு காலம்தான் காத்திருப்பது ? கடவுள் கண் திறக்கவும் இல்லை. என் துன்பம் தீர்ந்த பாடும் இல்லை என்று வேதனையோடு சொன்னார். அந்த மகானும் நான் சொன்னதை நீ தவறாகப் புரிந்து கொண்டாய். கட, உள், கண், தீ, இறக்கும், வரை, காத்திரு என்றுதான் சொன்னேன். நீ வேறு விதமாகப் புரிந்து கொண்டாய். இனியாவது நான் சொன்னதைச் செய், துன்பங்கள் ஓடிப் போகும். பேரின்பம் அடைவாய் என்றார். அதாவது கடந்து உள்ளே செல். கண்களால் வெளி உலகில் சுற்றிக் கொண்டிருக்கும் புலன்களால் ஏற்படும் மலக் குற்றங்கள் என்னும் கொடிய தீ இறக்கும் வரை காத்திரு. பேரின்பம் அடைவாய்.

வடக்கே இருப்பது இமய மலை. சித்தர்களுக்கோ அது நம் உடலாகவே இருக்கிறது. அதில் தாய் நீர் என்னும் அமிர்தம், குளுமை நீர் என்னும் சளி, உஷ்ண நீர் எனப்படும் பித்தம், தச நாடிகளுக்கு ஒப்பாக பத்து நதிகள், அக்னி காந்தத்திற்கு ஒப்பாக கங்கை நதி, பெரும் கபாலத்திற்கு இணையாக ஜுவாலாமுகி, சிறு மூளைக்கு ஒப்பாக சிவன் கோவிலும் உள்ளது. ஏழாவது மலைக்கு மேலே ஞானிகள் எப்போதும் தவம் செய்தபடி இருக்கிறார்கள். இருபத்தோராவது மலையில் கற்ப மூலிகைகள் பலவும் உள்ளன. முப்பத்திரெண்டாவது மலையில் ஜுவாலாமுகி என்னும் அனையா விளக்கு எரிந்து கொண்டே இருக்கிறது. இந்த மலையில் சீனாவுக்கு அருகே சிவக்கட்டு என்னும் பாதரசம் ஊறும் ஊற்று இருக்கிறது. நம் உடலில் அதற்கு இணையாக நாதவிந்து உள்ளது.

எப்போதும் குளுமையாக இருக்கும் இந்த மலை உருகுவதற்கு காரணம் உண்டு. சித்திரை மாதம் முழு நிலவைக் கொண்ட ஜுவாலாமுகி மலை உச்சியில் சூரியனின் வெப்பம் படும் போது மலை உருகத் துவங்குகிறது. உருகி வரும் கங்கையானது ஏழு மாநிலங்களை சுத்தப்படுத்துகிறது. நம் உச்சியிலும் தவக்கனலால் தாய் நீர் சுரக்கும் போது, அது ஏழு ஆதாரங்களையும் சுத்தம் செய்கிறது. ஜுவாலாமுகி என்னும் அக்னி ஏழு ஆதாரங்களோடு கல்லீரலையும், நாபியையும் சுத்தப்படுத்தும்.இவையெல்லாம் சுத்தமடையும் போதுதான் குண்டலினி முழுமையாக சிவனோடு ஐக்கியமாகி யோகி பிரம்ம ஞானியாவான். இமய மலையில் உள்ள 63 மலைத்தொடர்களும் ஆகாயத்தைப் பார்த்தபடி இருக்கும். 64 வதாக ஒரே ஒரு மலைமட்டும் கீழ் நோக்கி இருக்கும். இந்த மலைக்குப் பெயர் பிரம்ம கபால மலையாகும். இது போலவே நம் உடலில் பெருமூளையின் நடுப்பகுதி மட்டும் கீழ் நோக்கி உள்ளது. சித்தர்கள் அதைத்தான் முழுமதி என்பார்கள். இமயத்தில் இரண்டு நீர்க் குழிகள் உள்ளன. ஒன்று வெப்ப நீராகும் மற்றொன்று குளிர்ந்த நீராகும். அதாவது ஒன்று சிவநீர் மற்றது தாய் நீர். பித்தம் என்றால் சிவன். அதுவே பித்த நீர். மற்ற தாய் நீரானது ஞானிகளுக்கு நல்ல சக்தியைத் தருகிறது. ஆணும் பெண்ணும் ஒன்றே என்பதற்கு விளக்கமே இந்த மலைதான். பெண்ணென்ற உடலை நாயகன் உயிர் உள்ளவரை விடுவதில்லை. யார் அந்த நாயகன் ? அவனே பித்தமாகிய பித்தன். சித்தனுக்கெல்லாம் சித்தமாகிய சித்தன். அவனே சிவன். அவனே ஆண்மை. சர்வம் சக்தி மயம். எங்கும் பித்த மயம். உருவமே இல்லாத உவமயம் தான் எங்கும் சிவமயம்.

மகா தவசியான பகீரதன் பிரம்ம நீரைப் பெற ஆயிரக் கணக்கான ஆண்டுகள் தவமிருந்தார். சிவத்தைக் கட்டி, தன் உடலில் உள்ள 18 படிகளையும் கட்டி சிவ நாதத்தைப் பெற்றார். சிவ பெருமானும் காட்சி தந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்க, பகீரதனும் பிரம்ம நீர் வேண்டும் என்று கேட்டார். சிவனும் அருளி மறைகிறார். பகீரதனோ மகிழ்ச்சியில் ''தலைகால்'' புரியாமல் ஆடுகிறார். தன்னிலை மறந்தார். அந்தோ பரிதாபம் சிவ நீரோ நாதத்தில் நின்று விட்டது. வேதனை அடைந்த பகீரதன் மீண்டும் முன்பை விட முனைப்பாக கடும் தவம் இயற்றுகிறார். ஆண்டுகள் கடந்தன. இறுதியில் மனமிரங்கிய சிவபெருமான் காட்சி தந்தார். பக்தா தன்னிலை மறந்த நீ நாபியைக் கட்ட மறந்தாய். அதனால் பிரம்மநீர் நாதத்தில் நின்றது. முழுமையாக ஞானம் பெற நீ கங்கை நீர் அருந்த வேண்டும். அருந்தினால் சித்தனாவாய் என்று கூறி ஆசிர்வதிக்க, நாபி நின்றது, நாதம் திறந்தது கங்கை நீர் அதாவது அமிர்தம்(தாய் நீர்) உண்டார் பிரம்ம ஜோதியில் இணைந்தார். அன்று முதல் இன்று வரை உலகில் நிலைத்து நிற்பது தாய் நீர் ஒன்றே. ஞானிக்கோர் தாய் நீர், மண்ணிற்கோர் கங்கை நீர். கலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் கோடானுகோடி மக்களும் பித்தத்தைக் கட்டினால் (சிவத்தை) ஞான நீர் அருந்தலாம், காயத்தைக் கல்பமாக்கலாம். பிரம்மத்தை அடைய இது ஒன்றே வழி. அது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல என்பதால்தான் பகீரதப் பிரயத்தனம் என்பார்கள். எனினும், குருவருளும், திருவருளும் கூடினால் எதுவும் எளிதே.
 
Via FB மௌனத்தின் குரல்
 

ரிஷிகளும், சித்தர்கள் - வேதியல்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:23 PM | Best Blogger Tips
Photo: சித்தர்கள் வேதத்தை வெறும் குப்பை என்று சொல்கிறார்கள் என்று சிலர் தவறான கருத்துக்களை பரப்பிவிடுகிறார்கள். உண்மையில் ரிஷிகளும், சித்தர்களும்தான் வேதத்தின் இயல்புகளை மனிதனின் இயல்பான, ஆரோக்யமான, ஆனந்தமான ஆன்மிகம் கலந்த வாழ்வுக்கு வகுத்துத் தந்தார்கள். வேதியல் என்றால் விஞ்ஞானத்தில் இரசாயன சம்மந்தமான ஒரு விஷயம் என்றே நாம் கருதுகிறோம். 
உண்மையில் வேதம் + இயல்(இயல்பு) = வேதியல். அதாவது மனிதனாகப்பட்டவன் பிணி, மூப்பு, சாக்காடு என்ற மூன்று துன்பங்களை வென்று உயிர், உடல் இரண்டையும் நிலைநிறுத்தி இறவாத இறைநிலை பெற்று வாழ வேண்டும் என்பதற்காக, வேதங்களில் சொல்லப்பட்டுள்ள நமக்குப் புரியாமல் இருந்த இரகசியங்களை தொகுத்து ,இயல்பான வாழ்க்கையோடு இணைத்துக் கொண்டு வாழ்வதற்கு வழிமுறைகளாக வகுத்துத் தந்தார்கள். இதுவே வேதம் தரும் இயல் வேதஇயல் = வேதியல். தவ வலிமையாலும் ஞானத்தாலும் நம் முன்னோர்களான சித்தர் பெருமக்கள் அறிந்து கொண்ட வேதியல் உண்மைகளை பல கோடிக்கணக்கான பணம் செலவு செய்தும் கூட இன்றைய விஞ்ஞானிகள் நெருங்கவே முடியவில்லை என்பதே அழுத்தமான உண்மை. 
இந்த வேதியல் முறைகளை சித்தர்கள் ஆறு வகைகளாகக் கண்டார்கள். அதாவது தவம், மருத்துவம், கற்பம், இரசவாதம்,கெவுனம், சமாதி என்பவைகளாம். மேற்கூறிய ஆறு வகைகளையும் கடைபிடிக்கும் மனிதனால் மட்டுமே மரணமற்றப் பெருவாழ்வு நிலையான சித்தியடைய முடியும். மற்ற ஆன்மிகப் பெரியோர்கள் அடையும் நிலையானது பிறாவா நிலை. அதாவது முக்தி. இரண்டு நிலைகளிலும் இறுதி நிலையாக இருந்து அருள் செய்வது இறையாற்றலே. நம்மில் பெரும்பாலானவர்கள் தியானம், யோகா, பிராணாயாமம் போன்ற சித்தர்களின் நிலைகளை மட்டும் அறிந்திருக்கிறோம். அவர்களின் மருத்துவ நூல்களை நாம் படிப்பதில்லை. ஏனென்றால் நாம் மருத்துவர்கள் அல்ல என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் சித்தர்கள் மருத்துவத்தில் நுழைந்ததே இந்த தேகத்தை கற்பமாக்கவும், அற்புத சித்திகளை மூலிகைகள் மூலமாக அடையவும்தான். அதன் பயனாகவே மனிதகுலம் நோயற்று வாழ சித்த மருத்துவம் விளைந்தது. 
கொடிய விஷமான பாஷானங்கள் 64 உண்டு என்றும். அவற்றில் இயற்கையாய் விளைபவை முப்பத்தி இரண்டு என்றும், செயற்கையாய் நாம் உருவாக்குவது முப்பத்தி இரண்டு என்றும் கண்டறிந்தவர்கள் சித்தர்கள். தனிமங்களை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து வைத்திருந்தனர். பல ஆயிரக்கணக்கான மூலிகைகளையும், அவற்றின் தன்மைகளையும் கண்டறிந்து குறிப்புகள் எழுதி வைத்தவர்கள் சித்தர்கள்தாம். பாதரசத்தைப் பற்றியும் அதன் குணங்களைப்பற்றியும் துல்லியமாக அறிந்து வைத்திருந்தனர். திரவ நிலையில் உள்ள பாதரசத்தை திடநிலைக்கு மாற்றும் கலையையும் கண்டறிந்தனர். இந்த கலையையே உலோகத்தில் மட்டுமல்ல நம் உடலிலும் விந்துவைக் கட்டிப்படுத்தி தவத்தில் மேன்மையடையவும் கடைபிடித்தனர். 64 வகையான பாஷாணங்கள், 120 உபரசங்கள், 25 வகை உப்புகள், 1008 வகையான மூலிகைகள் எடுத்து அவற்றில் உள்ள கழிவுகளை நீக்கி அவற்றில் உள்ள சத்துக்களை மட்டும் எடுத்து திரவநிலையில் உள்ள பாதரசத்தோடு சேர்த்து கட்டிப்படுத்தி மணியாக்கி அதைக் கொண்டு பல அற்புதங்களைச் செய்துள்ளனர். எடுத்துக்காட்டாக உருவத்தை மறைக்கும் சொரூபக் குளிகை, நினைத்ததைக் கொடுக்கும் காமதேனுக் குளிகை, துண்டாகிய உடல் உறுப்புகளை நொடியில் ஒன்று சேர்க்கும் சந்தானக் குளிகை, எடுக்க எடுக்கக் குறையாத தன, தானியங்களை அளிக்கும் அட்சயக் குளிகை, வானசஞ்சாரம் செய்ய ககனக் குளிகை, தங்கத்தை உருவாக்கும் சகடு, சப்தபேதி, பரிசபேதி போன்ற குளிகைகள் என்று பல வகையான குளிகைகளைச் செய்து அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். 
நித்ய சுத்தி, தந்த சுத்தி, நேந்திர சுத்தி, கப சுத்தி, குடல் சுத்தி, உடல் சுத்தி என்று எல்லாவகையான சுத்திகளும் செய்தால்தான் காய சித்தி ஏற்படும் என்றும் அதற்கான உபாயம் மூலிகை மட்டுமே என்று கண்டறிந்தவர்கள் சித்தர்கள். இந்த காய சித்தி அடைந்தால்தான் மனதையும், சுவாசத்தையும் அழிவிலிருந்து மீட்டு யோக சித்தியை அடைய முடியும். அதன் பிறகு நினைவுகளை அழிவிலிருந்து மீட்டு நிர்மலமாக்குவதே ஞான சித்தியாகும். இவை எல்லாவற்றையும் கடந்து கர்ம வினை முற்றிலும் அழியப் பெற்றதே சமாதி சித்தியாகும் என்றும் சித்தர்கள் கூறியுள்ளனர். இதற்கு சித்தர்கள் கண்ட வேத இயல் மார்க்கம் இரசவாதம் ஆகும். இரசவாதம் என்றால் வெறும் உலோகத்தை தங்கமாக்குவது மட்டுமே என்று எண்ணி மடிந்தவர்கள் பல பேருண்டு. அதாவது அங்கம் தங்கமானால் வங்கம் தங்கமாகும் என்பார்கள். உடல் சித்தி அடைந்தால் இரசவாதம் சித்தியாகும் என்பது இதன் பொருளல்ல. இரசவாதத்தில் வெற்றியடைந்தால் நாம் காயசித்தி அடையலாம் என்பதே இதன் பொருள். மனிதனின் முதுமையும் அதற்கு பின் உள்ள நிலைகளும் என்ன ? என்றால், நரை, திரை, மூப்பு, சாக்காடு என்பனவே. அதாவது உடலில் உள்ள தனிமங்கள் அதாவது உலோகம் மற்றும் தாதுக்களின் உயிர் சக்தி குறைவால் நரை ஏற்படுகிறது. பிராண சக்தியின் நுண்ணிய மின் ஓட்டங்களின் குறைபாடு நாடிகளில் உண்டாவதால் திரை என்கிற கண்பார்வை மங்கிப் போவது நிகழ்கிறது. உயிர் அணுக்களுக்கு தேவையான சக்தி கிடைக்காத நிலையில் வளர் சிதை மாற்றத்தில் சிதைவு மட்டுமே அதிகமாக நிகழ்வதால் முதுமை ஏற்பட்டுவிடுகிறது. முடிவில் உயிர் சக்தியானது முழுவதுமாகக் குன்றிய நிலையில் மரணம் நிகழ்கிறது. இவற்றை எல்லாம் சரி செய்து நரை, திரை, மூப்பு, சாக்காடு ஏற்படாமல் தேகத்தை காத்துக் கொள்ளும் கலையே காய சித்தியாகும். இதற்கு நூறு வகையான கற்பங்களை சிவபெருமானாகிய ஆதி சித்தர் அருளியதாகச் சொல்லப்படுவதுண்டு.
இப்படி விஞ்ஞானத்துக்கும் அப்பால் வேத இயல் விந்தைகளை இந்த மனித இனத்திற்கு எந்த வித சுயநலமும் இன்றி தந்தருளிய சித்தர்களைப் போற்றி வணங்கி அவர்கள் நூல்களை பலமுறை படித்து சரியான பொருள் உணர்ந்து அவர்கள் கூறிய வேத இயல்போடு நம் வாழ்வை இணைத்தோமானால் நாமும் இறவா நிலை அடைந்து இறைநிலை உணர்ந்து, நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழலாம்.
சித்தர்கள் வேதத்தை வெறும் குப்பை என்று சொல்கிறார்கள் என்று சிலர் தவறான கருத்துக்களை பரப்பிவிடுகிறார்கள். உண்மையில் ரிஷிகளும், சித்தர்களும்தான் வேதத்தின் இயல்புகளை மனிதனின் இயல்பான, ஆரோக்யமான, ஆனந்தமான ஆன்மிகம் கலந்த வாழ்வுக்கு வகுத்துத் தந்தார்கள். வேதியல் என்றால் விஞ்ஞானத்தில் இரசாயன சம்மந்தமான ஒரு விஷயம் என்றே நாம் கருதுகிறோம்.
உண்மையில் வேதம் + இயல்(இயல்பு) = வேதியல். அதாவது மனிதனாகப்பட்டவன் பிணி, மூப்பு, சாக்காடு என்ற மூன்று துன்பங்களை வென்று உயிர், உடல் இரண்டையும் நிலைநிறுத்தி இறவாத இறைநிலை பெற்று வாழ வேண்டும் என்பதற்காக, வேதங்களில் சொல்லப்பட்டுள்ள நமக்குப் புரியாமல் இருந்த இரகசியங்களை தொகுத்து ,இயல்பான வாழ்க்கையோடு இணைத்துக் கொண்டு வாழ்வதற்கு வழிமுறைகளாக வகுத்துத் தந்தார்கள். இதுவே வேதம் தரும் இயல் வேதஇயல் = வேதியல். தவ வலிமையாலும் ஞானத்தாலும் நம் முன்னோர்களான சித்தர் பெருமக்கள் அறிந்து கொண்ட வேதியல் உண்மைகளை பல கோடிக்கணக்கான பணம் செலவு செய்தும் கூட இன்றைய விஞ்ஞானிகள் நெருங்கவே முடியவில்லை என்பதே அழுத்தமான உண்மை.
இந்த வேதியல் முறைகளை சித்தர்கள் ஆறு வகைகளாகக் கண்டார்கள். அதாவது தவம், மருத்துவம், கற்பம், இரசவாதம்,கெவுனம், சமாதி என்பவைகளாம். மேற்கூறிய ஆறு வகைகளையும் கடைபிடிக்கும் மனிதனால் மட்டுமே மரணமற்றப் பெருவாழ்வு நிலையான சித்தியடைய முடியும். மற்ற ஆன்மிகப் பெரியோர்கள் அடையும் நிலையானது பிறாவா நிலை. அதாவது முக்தி. இரண்டு நிலைகளிலும் இறுதி நிலையாக இருந்து அருள் செய்வது இறையாற்றலே. நம்மில் பெரும்பாலானவர்கள் தியானம், யோகா, பிராணாயாமம் போன்ற சித்தர்களின் நிலைகளை மட்டும் அறிந்திருக்கிறோம். அவர்களின் மருத்துவ நூல்களை நாம் படிப்பதில்லை. ஏனென்றால் நாம் மருத்துவர்கள் அல்ல என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் சித்தர்கள் மருத்துவத்தில் நுழைந்ததே இந்த தேகத்தை கற்பமாக்கவும், அற்புத சித்திகளை மூலிகைகள் மூலமாக அடையவும்தான். அதன் பயனாகவே மனிதகுலம் நோயற்று வாழ சித்த மருத்துவம் விளைந்தது.
கொடிய விஷமான பாஷானங்கள் 64 உண்டு என்றும். அவற்றில் இயற்கையாய் விளைபவை முப்பத்தி இரண்டு என்றும், செயற்கையாய் நாம் உருவாக்குவது முப்பத்தி இரண்டு என்றும் கண்டறிந்தவர்கள் சித்தர்கள். தனிமங்களை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து வைத்திருந்தனர். பல ஆயிரக்கணக்கான மூலிகைகளையும், அவற்றின் தன்மைகளையும் கண்டறிந்து குறிப்புகள் எழுதி வைத்தவர்கள் சித்தர்கள்தாம். பாதரசத்தைப் பற்றியும் அதன் குணங்களைப்பற்றியும் துல்லியமாக அறிந்து வைத்திருந்தனர். திரவ நிலையில் உள்ள பாதரசத்தை திடநிலைக்கு மாற்றும் கலையையும் கண்டறிந்தனர். இந்த கலையையே உலோகத்தில் மட்டுமல்ல நம் உடலிலும் விந்துவைக் கட்டிப்படுத்தி தவத்தில் மேன்மையடையவும் கடைபிடித்தனர். 64 வகையான பாஷாணங்கள், 120 உபரசங்கள், 25 வகை உப்புகள், 1008 வகையான மூலிகைகள் எடுத்து அவற்றில் உள்ள கழிவுகளை நீக்கி அவற்றில் உள்ள சத்துக்களை மட்டும் எடுத்து திரவநிலையில் உள்ள பாதரசத்தோடு சேர்த்து கட்டிப்படுத்தி மணியாக்கி அதைக் கொண்டு பல அற்புதங்களைச் செய்துள்ளனர். எடுத்துக்காட்டாக உருவத்தை மறைக்கும் சொரூபக் குளிகை, நினைத்ததைக் கொடுக்கும் காமதேனுக் குளிகை, துண்டாகிய உடல் உறுப்புகளை நொடியில் ஒன்று சேர்க்கும் சந்தானக் குளிகை, எடுக்க எடுக்கக் குறையாத தன, தானியங்களை அளிக்கும் அட்சயக் குளிகை, வானசஞ்சாரம் செய்ய ககனக் குளிகை, தங்கத்தை உருவாக்கும் சகடு, சப்தபேதி, பரிசபேதி போன்ற குளிகைகள் என்று பல வகையான குளிகைகளைச் செய்து அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள்.
நித்ய சுத்தி, தந்த சுத்தி, நேந்திர சுத்தி, கப சுத்தி, குடல் சுத்தி, உடல் சுத்தி என்று எல்லாவகையான சுத்திகளும் செய்தால்தான் காய சித்தி ஏற்படும் என்றும் அதற்கான உபாயம் மூலிகை மட்டுமே என்று கண்டறிந்தவர்கள் சித்தர்கள். இந்த காய சித்தி அடைந்தால்தான் மனதையும், சுவாசத்தையும் அழிவிலிருந்து மீட்டு யோக சித்தியை அடைய முடியும். அதன் பிறகு நினைவுகளை அழிவிலிருந்து மீட்டு நிர்மலமாக்குவதே ஞான சித்தியாகும். இவை எல்லாவற்றையும் கடந்து கர்ம வினை முற்றிலும் அழியப் பெற்றதே சமாதி சித்தியாகும் என்றும் சித்தர்கள் கூறியுள்ளனர். இதற்கு சித்தர்கள் கண்ட வேத இயல் மார்க்கம் இரசவாதம் ஆகும். இரசவாதம் என்றால் வெறும் உலோகத்தை தங்கமாக்குவது மட்டுமே என்று எண்ணி மடிந்தவர்கள் பல பேருண்டு. அதாவது அங்கம் தங்கமானால் வங்கம் தங்கமாகும் என்பார்கள். உடல் சித்தி அடைந்தால் இரசவாதம் சித்தியாகும் என்பது இதன் பொருளல்ல. இரசவாதத்தில் வெற்றியடைந்தால் நாம் காயசித்தி அடையலாம் என்பதே இதன் பொருள். மனிதனின் முதுமையும் அதற்கு பின் உள்ள நிலைகளும் என்ன ? என்றால், நரை, திரை, மூப்பு, சாக்காடு என்பனவே. அதாவது உடலில் உள்ள தனிமங்கள் அதாவது உலோகம் மற்றும் தாதுக்களின் உயிர் சக்தி குறைவால் நரை ஏற்படுகிறது. பிராண சக்தியின் நுண்ணிய மின் ஓட்டங்களின் குறைபாடு நாடிகளில் உண்டாவதால் திரை என்கிற கண்பார்வை மங்கிப் போவது நிகழ்கிறது. உயிர் அணுக்களுக்கு தேவையான சக்தி கிடைக்காத நிலையில் வளர் சிதை மாற்றத்தில் சிதைவு மட்டுமே அதிகமாக நிகழ்வதால் முதுமை ஏற்பட்டுவிடுகிறது. முடிவில் உயிர் சக்தியானது முழுவதுமாகக் குன்றிய நிலையில் மரணம் நிகழ்கிறது. இவற்றை எல்லாம் சரி செய்து நரை, திரை, மூப்பு, சாக்காடு ஏற்படாமல் தேகத்தை காத்துக் கொள்ளும் கலையே காய சித்தியாகும். இதற்கு நூறு வகையான கற்பங்களை சிவபெருமானாகிய ஆதி சித்தர் அருளியதாகச் சொல்லப்படுவதுண்டு.
இப்படி விஞ்ஞானத்துக்கும் அப்பால் வேத இயல் விந்தைகளை இந்த மனித இனத்திற்கு எந்த வித சுயநலமும் இன்றி தந்தருளிய சித்தர்களைப் போற்றி வணங்கி அவர்கள் நூல்களை பலமுறை படித்து சரியான பொருள் உணர்ந்து அவர்கள் கூறிய வேத இயல்போடு நம் வாழ்வை இணைத்தோமானால் நாமும் இறவா நிலை அடைந்து இறைநிலை உணர்ந்து, நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழலாம்.
 
Via FB மௌனத்தின் குரல்