சிவன் மட்டும் சிந்தையில்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:58 | Best Blogger Tips

 



தேவாரம்

திருவாசகம்

உணர்வுகள்

வெளிப்பாடு.

 

சிவனே என இருந்திட ஆசை.

 

சிவன் மட்டும் சிந்தையில் 

நிறைந்திட ஆசை.

 

செய்தபாவமெல்லாம் தொலைத்திட ஆசை. பரமன் திருவடி பற்றிட ஆசை.

 

நல்லவை யெல்லாம் நடந்திட ஆசை. நான்  வணங்கும்  காட்சியெல்லாம் நீயாகஆசை.

 

உன்  நிழலாக  என்றென்றும்

நான்மாற ஆசை.

 

சினம்  தவிர்த்த மன நிலையை

நான்  அடைய ஆசை.

 

தினம்  போற்றும் மனம்  நினைக்கும்  

செயல் யாவும் சிறந்தோங்க ஆசை.

 

அந்த  செயலும்   பிறர்  நன்மைக்கென்றால்   அடைவேன்  பேராசை . தானென்ற  அகந்தை எல்லாம்  விட்டொழிக்க ஆசை.

 

உன் அடியவன் என்ற கர்வம் மட்டும்

நிறைந்திருக்க ஆசை.

 

பசி  தாகம் பிணி எல்லாம் 

விட்டொழிக்க ஆசை.

 

தாயுமானவா  உன்னோடு கலந்து

ஞானஅமிழ்து உண்ண ஆசை .

 

எடுத்த இப்பிறவிக்கு  

போதும்  இந்தஆசை.

 

இனி பிறவா நிலை

வேண்டும் என்ற ஆசை.

 

இந்த வரம்தனையே தந்தெனக்கு 

அருள் புரிவாய்  ஐயனே  ...  !

 

இறையே சரணம் சரணம் சரணம்,,


 நன்றி இணையம்