கழுத்து வலியும் டிஸ்க் விலகலும்..

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:45 | Best Blogger Tips

கழுத்து வலியும்
டிஸ்க் விலகலும்..

க ழுத்து வலி : கழுத்துவலி இளம் வயதினரையும் பாதிக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால் இன்றைய இளைஞர்களின் உணவுப்பழக்கவழக்கம் மற்றும் நவீன வாழ்க்கை முறை, பைக், கார் போன்றவற்றில் மோசமான ரோட்டில் பயணம் செய்வது, அதிகநேரம் குனிந்து அமர்ந்து கம்ப்யூட்டர் டைப் செய்வது, எடையுள்ள பொருட்களை திடீரென தூக்குவது, உயரமான தலையணை வைத்து அதிக நேரம் படிப்பது, டிவி பார்ப்பது போன்ற செயல்களால் கழுத்து பகுதியில் சவ்வு பலகீனமடைந்து வலி ஏற்படுகிறது.டிஸ்க் விலகல் :டிஸ்க் விலகல் என்பது கழுத்துப்பகுதியில் மற்றும் இடுப்பில் முதுகு தண்டுவடத்தில் எலும்புகளுக்கு இடையே உள்ள சவ்வு Intervertebral Disc என்றழைக்கப்படுகிறது. இது சில சமயம் பிதுங்கி வெளிவருவதுண்டு. இதனை Disc Prolapse என்கிறோம். டிஸ்க் விலகலை MRI Scan எடுத்து பார்ப்பதால் உறுதி செய்யலாம். கழுத்தில் சி2சி3, சி3சி4, சி4சி5, சி5சி6 போன்ற இடங்களில் டிஸ்க் விலக வாய்ப்புள்ளது. அப்படி ஏற்பட்டால் கழுத்தில் கடுமையான வலி மற்றும் திரும்ப சிரமம், வலி கழுத்திலிருந்து கைகளுக்கு பரவும். சில சமயம் கைவிரல்கள் மரத்தது போன்ற உணர்வும், படுக்கையில் படுக்கக் கூட சிரமத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் குனிந்து நிமிர்ந்தால் தலை சுற்றல் வரும். தலையின் பின்புறம் காதின் பக்கங்களில் வலி வரும். சில சமயம் முதுகின் பக்கவாட்டில் நெஞ்சுப்பகுதியில் குத்தல் போல வலி ஏற்படும்.ரொமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் : இளம்பெண்கள் சிலருக்கு திடீரென கை விரல்கள்,மணிக்கட்டு, முழங்கை, முழங்கால், கணுக்கால், கால் விரல்களில் வீக்கம், கடுமையான வலி ஏற்படும். அதிகாலை படுக்கையை விட்டு எழும்போது கைவிரல்களை மடக்க முடியாமல் மணிக்கட்டில் கடுமையான வலி உணவு அருந்தும்போது உணவை பிசைய முடியாத அளவு வலி, தோள்பட்டையை மேலே தூக்க முடியாமல் சிரமம், முழுங்கால் மூட்டு வீக்கம் என திடீரென தோன்றும் அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள். இது மூட்டுவாத நோயின் அறிகுறியாக இருக்கலாம். இதனை கண்டறிய சில ரத்த பரிசோதனைகள் உள்ளன. ரத்தத்தில் Ra Factor,Uric Acid, Asotire, ESR, Creactine Protein போன்ற பரிசோதனைகள் மூலம் இந்த நோயை கண்டறிய முடியும். மூட்டுவாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் எடை படிப்படியாக குறைவது, பசியின்மை, மலகட்டு, பாதிக்கப்பட்ட மூட்டுகளில் வெப்பத்தன்மை, காய்ச்சல் வருவது போல உடல் முழுவதும் வலி, அசதி, தூக்கமின்மை என உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு, பின் மனரீதியாகவும் மிகவும் பலவீனமாக காணப்படுவார்கள். இவர்களுக்கு முறையான ஆயுர்வேத சிகிச்சையும் தைரியமான அறிவுரைகள் சொல்லி கவுன்சிலிங் செய்வது மருத்துவர் கடமையாகும்.

via மருத்துவக் குறிப்பு Health Care in Tamil

கழுத்து வலி : 
கழுத்துவலி இளம் வயதினரையும் பாதிக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால் இன்றைய இளைஞர்களின் உணவுப்பழக்கவழக்கம் மற்றும் நவீன வாழ்க்கை முறை, பைக், கார் போன்றவற்றில் மோசமான ரோட்டில் பயணம் செய்வது, அதிகநேரம் குனிந்து அமர்ந்து கம்ப்யூட்டர் டைப் செய்வது, எடையுள்ள பொருட்களை திடீரென தூக்குவது, உயரமான தலையணை வைத்து அதிக நேரம் படிப்பது, டிவி பார்ப்பது போன்ற செயல்களால் கழுத்து பகுதியில் சவ்வு பலகீனமடைந்து வலி ஏற்படுகிறது.டிஸ்க் விலகல் :டிஸ்க் விலகல் என்பது கழுத்துப்பகுதியில் மற்றும் இடுப்பில் முதுகு தண்டுவடத்தில் எலும்புகளுக்கு இடையே உள்ள சவ்வு Intervertebral Disc என்றழைக்கப்படுகிறது. இது சில சமயம் பிதுங்கி வெளிவருவதுண்டு. இதனை Disc Prolapse என்கிறோம். டிஸ்க் விலகலை MRI Scan எடுத்து பார்ப்பதால் உறுதி செய்யலாம். கழுத்தில் சி2சி3, சி3சி4, சி4சி5, சி5சி6 போன்ற இடங்களில் டிஸ்க் விலக வாய்ப்புள்ளது. அப்படி ஏற்பட்டால் கழுத்தில் கடுமையான வலி மற்றும் திரும்ப சிரமம், வலி கழுத்திலிருந்து கைகளுக்கு பரவும். சில சமயம் கைவிரல்கள் மரத்தது போன்ற உணர்வும், படுக்கையில் படுக்கக் கூட சிரமத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் குனிந்து நிமிர்ந்தால் தலை சுற்றல் வரும். தலையின் பின்புறம் காதின் பக்கங்களில் வலி வரும். சில சமயம் முதுகின் பக்கவாட்டில் நெஞ்சுப்பகுதியில் குத்தல் போல வலி ஏற்படும்.ரொமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் : இளம்பெண்கள் சிலருக்கு திடீரென கை விரல்கள்,மணிக்கட்டு, முழங்கை, முழங்கால், கணுக்கால், கால் விரல்களில் வீக்கம், கடுமையான வலி ஏற்படும். அதிகாலை படுக்கையை விட்டு எழும்போது கைவிரல்களை மடக்க முடியாமல் மணிக்கட்டில் கடுமையான வலி உணவு அருந்தும்போது உணவை பிசைய முடியாத அளவு வலி, தோள்பட்டையை மேலே தூக்க முடியாமல் சிரமம், முழுங்கால் மூட்டு வீக்கம் என திடீரென தோன்றும் அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள். இது மூட்டுவாத நோயின் அறிகுறியாக இருக்கலாம். இதனை கண்டறிய சில ரத்த பரிசோதனைகள் உள்ளன. ரத்தத்தில் Ra Factor,Uric Acid, Asotire, ESR, Creactine Protein போன்ற பரிசோதனைகள் மூலம் இந்த நோயை கண்டறிய முடியும். மூட்டுவாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் எடை படிப்படியாக குறைவது, பசியின்மை, மலகட்டு, பாதிக்கப்பட்ட மூட்டுகளில் வெப்பத்தன்மை, காய்ச்சல் வருவது போல உடல் முழுவதும் வலி, அசதி, தூக்கமின்மை என உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு, பின் மனரீதியாகவும் மிகவும் பலவீனமாக காணப்படுவார்கள். இவர்களுக்கு முறையான ஆயுர்வேத சிகிச்சையும் தைரியமான அறிவுரைகள் சொல்லி கவுன்சிலிங் செய்வது மருத்துவர் கடமையாகும்.

via மருத்துவக் குறிப்பு Health Care in Tamil

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்! ! ! !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:44 | Best Blogger Tips
கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்! ! ! !

1. உங்கள் கணினியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும ். ஒரு சாதாரண கணினிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை மிகவும் மலிவுதான்.

2. கணினியில் ஏற்கனவே நிறுவியிருக்கக் கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக்கிவிடுங்கள் . புதிதாகக் கணினி வாங்கியிருந்தால ் கூட அத்துடன் ஏராளமான தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார்கள். அவற்றில் சில மென்பொருட்கள் மட்டுமே நமக்குப்பயன்படும். மீதி அனைத்தையும் நிராகரித்து நீக்கிவிடவும்.

பழைய கணினியிலும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தையும் நீக்கிவிடவும். அவற்றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும் CD / DVD ல் ஏற்றி burn செய்துகொள்ளவும்.

3. FireFox, Chrome, IE என ஒன்றுக்கு மேற்பட்ட browsersஐ நிறுவி இருந்தால் அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை uninstall செய்துவிடவும்.

4. G-Talk, Yahoo Messenger, Live Messenger என ஒன்றுக்கு மேற்பட்ட அரட்டை அடிக்கும் பயன்பாடுகளைத் தனித்தனியாக நிறுவி இருந்தால் எல்லாவற்றையும் uninstall செய்துவிட்டு, digsby ( http://www.digsby.com/ ) போன்ற ஒரே ஒருinstant messenger (நேரடி அரட்டை அரங்கம்) ஐ நிறுவிக் கொள்ளவும்.

5. கணினியில் Windows இயங்குதளமானது boot ஆகும்போது நிறையப் பயன்பாடுகளும் இணைந்தே துவங்கும். இதற்கு auto startup என்று பெயர். இப்படி ஏராளமான பயன்பாடுகளும் விண்டோஸ் இயங்குதளத்துடன் துவங்கினால் அதன் வேகம் மிகக் குறைந்துவிடும். http:// www.revouninstal ler.com/ பயன்படுத்தி தேவையற்ற தானியங்கிப் பயன்பாடுகளைக் கழித்துவிடவும்.

6. Startup Delayer ஐ இறக்கி அதைப் பயன்படுத்தி Autoloading பயன்பாடுகளை நீக்கிவிடலாம்.

7. Windows பயனர்கள் அதன் தேவையில்லாத animation தொந்தரவுகளால் அதன் வேகம் குறைவதை உணர்ந்திருப்பார ்கள்.MyComputerல் right click செய்து, advanced tabல் settingsல், Performanceல் Animate WindowsWhen minimizing and maximizingஎன்கிறதை disable செய்யவும். மேலும் தேவையில்லாதவற்ற ையும் disable செய்யவும்.

8. Desktopல் இருக்கும் குறுக்குவழிச் சுட்டிகளுக்கான படங்களை அகற்றிவிடலாம். எனது நண்பர் ஒருவர் 50க்கு மேற்பட்ட desktop icons வைத்திருந்தார். அதனாலேயே அவரது கணினியின் வேகம் மிகக் குறைந்தது. தேவையில்லாத desktop ஐகான்ஸ் எல்லாவற்றையும்நீக்கியபின் கணினியின் வேகம் அதிகரித்தது.

9. கணினியில் ஒரு நெருப்புச்சுவர் (firewall), வைரசுஎதிர்ப்போன் (anti virus), ஸ்பைவேர் எதிர்ப்போன் (anti spyware) கண்டிப்பாகத் தேவை. அவற்றை அடிக்கடி புதுப்பித்துக்க ொண்டே இருக்கவேண்டும்.

10. ஆனால் இணையத்துடன் இணைந்திருக்காத தனிக் கணினிகள் மற்றும் வெளியிடத்து Floppy, CD, DVD, Pen Drive போன்றவற்றை அனுமதிக்காத கணினிகளில் மேலே கூறிய firewall, antivirus, antispyware போன்ற எதுவும் நிறுவாமல் இருந்தால் அதன் வேகம் மும்மடங்கு ஆகும் என்பதில் ஐயமில்லை.

பகிரவும் நண்பர்களே...!!1. உங்கள் கணினியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும ். ஒரு சாதாரண கணினிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை மிகவும் மலிவுதான்.

2. கணினியில் ஏற்கனவே நிறுவியிருக்கக் கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக்கிவிடுங்கள் . புதிதாகக் கணினி வாங்கியிருந்தால ் கூட அத்துடன் ஏராளமான தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார்கள். அவற்றில் சில மென்பொருட்கள் மட்டுமே நமக்குப்பயன்படும். மீதி அனைத்தையும் நிராகரித்து நீக்கிவிடவும்.

பழைய கணினியிலும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தையும் நீக்கிவிடவும். அவற்றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும் CD / DVD ல் ஏற்றி burn செய்துகொள்ளவும்.

3. FireFox, Chrome, IE என ஒன்றுக்கு மேற்பட்ட browsersஐ நிறுவி இருந்தால் அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை uninstall செய்துவிடவும்.

4. G-Talk, Yahoo Messenger, Live Messenger என ஒன்றுக்கு மேற்பட்ட அரட்டை அடிக்கும் பயன்பாடுகளைத் தனித்தனியாக நிறுவி இருந்தால் எல்லாவற்றையும் uninstall செய்துவிட்டு, digsby ( http://www.digsby.com/ ) போன்ற ஒரே ஒருinstant messenger (நேரடி அரட்டை அரங்கம்) ஐ நிறுவிக் கொள்ளவும்.

5. கணினியில் Windows இயங்குதளமானது boot ஆகும்போது நிறையப் பயன்பாடுகளும் இணைந்தே துவங்கும். இதற்கு auto startup என்று பெயர். இப்படி ஏராளமான பயன்பாடுகளும் விண்டோஸ் இயங்குதளத்துடன் துவங்கினால் அதன் வேகம் மிகக் குறைந்துவிடும். http:// www.revouninstal ler.com/ பயன்படுத்தி தேவையற்ற தானியங்கிப் பயன்பாடுகளைக் கழித்துவிடவும்.

6. Startup Delayer ஐ இறக்கி அதைப் பயன்படுத்தி Autoloading பயன்பாடுகளை நீக்கிவிடலாம்.

7. Windows பயனர்கள் அதன் தேவையில்லாத animation தொந்தரவுகளால் அதன் வேகம் குறைவதை உணர்ந்திருப்பார ்கள்.MyComputerல் right click செய்து, advanced tabல் settingsல், Performanceல் Animate WindowsWhen minimizing and maximizingஎன்கிறதை disable செய்யவும். மேலும் தேவையில்லாதவற்ற ையும் disable செய்யவும்.

8. Desktopல் இருக்கும் குறுக்குவழிச் சுட்டிகளுக்கான படங்களை அகற்றிவிடலாம். எனது நண்பர் ஒருவர் 50க்கு மேற்பட்ட desktop icons வைத்திருந்தார். அதனாலேயே அவரது கணினியின் வேகம் மிகக் குறைந்தது. தேவையில்லாத desktop ஐகான்ஸ் எல்லாவற்றையும்நீக்கியபின் கணினியின் வேகம் அதிகரித்தது.

9. கணினியில் ஒரு நெருப்புச்சுவர் (firewall), வைரசுஎதிர்ப்போன் (anti virus), ஸ்பைவேர் எதிர்ப்போன் (anti spyware) கண்டிப்பாகத் தேவை. அவற்றை அடிக்கடி புதுப்பித்துக்க ொண்டே இருக்கவேண்டும்.

10. ஆனால் இணையத்துடன் இணைந்திருக்காத தனிக் கணினிகள் மற்றும் வெளியிடத்து Floppy, CD, DVD, Pen Drive போன்றவற்றை அனுமதிக்காத கணினிகளில் மேலே கூறிய firewall, antivirus, antispyware போன்ற எதுவும் நிறுவாமல் இருந்தால் அதன் வேகம் மும்மடங்கு ஆகும் என்பதில் ஐயமில்லை.

பகிரவும் நண்பர்களே...!!

கட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:41 | Best Blogger Tips
கட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்:

~~~~~~~

மென்பொருட்கள் இல்லாமல் நாம் கணினியை பயன்படுத்தவே முடியாது. நம்முடைய அத்தனை செயல்களும் ஏதோ ஒரு மென்பொருளை சார்ந்தே இருக்கும். இதில் நிறைய மென்பொருட்கள் நமக்கு இலவசமாகவே கிடைக்கின்றன. அதில் சில நமக்கு கட்டாயம் தேவைப்படும் அவற்றைப் பற்றி பார்ப்போம்.

~~Browser~~

ப்ரௌசர் என்பது இல்லாமல் நீங்கள் இப்போது இந்த பதிவை படிக்க முடியாது. இணையத்தில் நாம் செயல்பட ப்ரௌசர் ஒரு கட்டாய தேவை. இதில் சிறந்த இரண்டு.

1. Chrome - http://goo.gl/j11of
2. Firefox - http://goo.gl/7ICv2

~~Antivirus~~

அடிக்கடி பென்டிரைவ் அல்லது இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் போது நம் கணினியில் வைரஸ் வர வாய்ப்பு உள்ளது. அம்மாதிரியான தருணங்களில் அவற்றை தடுக்கவோ அல்லது தவிர்க்கவோ ஒரு ஆண்டி வைரஸ் மென்பொருள் தேவை. அவற்றில் சிறந்த இரண்டு.

1. Avast - http://goo.gl/8Br5g
2. Microsoft Security Essentials - http://goo.gl/YDpJ7

~~File Compression Software~~

File Compression Software என்பது நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று. இதில் winzip மற்றும் winrar போன்றவை கட்டண மென்பொருட்கள். இதை செய்ய சிறந்த இலவச மென்பொருட்கள்.

1. 7-Zip - http://goo.gl/CHqRw
2. Zip2Fix - http://goo.gl/y1m9E

~~Image/Graphics editor, paint program, and picture organizer~~

இமேஜ் எடிட்டர் என்பது நமக்கு அடிக்கடி தேவைப்படும் ஒன்று. இதில் பெரும்பாலான மென்பொருட்கள் நமக்கு இலவசமாக கிடைப்பது இல்லை. ஆனால் சில நமக்கு இலவசமாக பல வசதிகளை தருகின்றன. அவற்றில் சிறந்தவை.

1. Gimpshop - http://goo.gl/UK9s
2. Paint.NET - http://goo.gl/59FB
3. IrfanView - http://goo.gl/59FB
4. Inkscape - http://goo.gl/q6Sh

~~Multimedia~~

கணினியில் ஓய்வு நேரங்களில் நாம் செய்வது பாடல்கள் கேட்பது மற்றும் படங்கள் பார்ப்பது. அத்தோடு Video Editor, Video Converter போன்றவை தொழில்ரீதியாக உள்ள Multimedia Tools. இதில் சிறந்த இலவச மென்பொருட்கள்.

1. VLC media player - http://goo.gl/oRNqK
2. KM Player - http://goo.gl/VMzX7
3. Audacity – Free Audio Editor - http://goo.gl/ARs0
4. Avidemux – Free Video Editor - http://goo.gl/Uzr2n
5. DVD Video Soft - http://goo.gl/w6Hhj
6. Free Make Video Converter - http://goo.gl/Hyb9J

~~~Office Tools~~

MS Office க்கு மாற்றாக பல இலவச மென்பொருட்கள் உள்ளன. அவற்றில் சிறந்தவை.

1. MS Officeக்கு மாற்றாக சில இலவச மென்பொருட்கள் -http://goo.gl/XuiAM

- karpom
மென்பொருட்கள் இல்லாமல் நாம் கணினியை பயன்படுத்தவே முடியாது. நம்முடைய அத்தனை செயல்களும் ஏதோ ஒரு மென்பொருளை சார்ந்தே இருக்கும். இதில் நிறைய மென்பொருட்கள் நமக்கு இலவசமாகவே கிடைக்கின்றன. அதில் சில நமக்கு கட்டாயம் தேவைப்படும் அவற்றைப் பற்றி பார்ப்போம்.

~~Browser~~

ப்ரௌசர் என்பது இல்லாமல் நீங்கள் இப்போது இந்த பதிவை படிக்க முடியாது. இணையத்தில் நாம் செயல்பட ப்ரௌசர் ஒரு கட்டாய தேவை. இதில் சிறந்த இரண்டு.

1. Chrome - http://goo.gl/j11of
2. Firefox - http://goo.gl/7ICv2

~~Antivirus~~

அடிக்கடி பென்டிரைவ் அல்லது இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் போது நம் கணினியில் வைரஸ் வர வாய்ப்பு உள்ளது. அம்மாதிரியான தருணங்களில் அவற்றை தடுக்கவோ அல்லது தவிர்க்கவோ ஒரு ஆண்டி வைரஸ் மென்பொருள் தேவை. அவற்றில் சிறந்த இரண்டு.

1. Avast - http://goo.gl/8Br5g
2. Microsoft Security Essentials - http://goo.gl/YDpJ7

~~File Compression Software~~

File Compression Software என்பது நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று. இதில் winzip மற்றும் winrar போன்றவை கட்டண மென்பொருட்கள். இதை செய்ய சிறந்த இலவச மென்பொருட்கள்.

1. 7-Zip - http://goo.gl/CHqRw
2. Zip2Fix - http://goo.gl/y1m9E

~~Image/Graphics editor, paint program, and picture organizer~~

இமேஜ் எடிட்டர் என்பது நமக்கு அடிக்கடி தேவைப்படும் ஒன்று. இதில் பெரும்பாலான மென்பொருட்கள் நமக்கு இலவசமாக கிடைப்பது இல்லை. ஆனால் சில நமக்கு இலவசமாக பல வசதிகளை தருகின்றன. அவற்றில் சிறந்தவை.

1. Gimpshop - http://goo.gl/UK9s
2. Paint.NET - http://goo.gl/59FB
3. IrfanView - http://goo.gl/59FB
4. Inkscape - http://goo.gl/q6Sh

~~Multimedia~~

கணினியில் ஓய்வு நேரங்களில் நாம் செய்வது பாடல்கள் கேட்பது மற்றும் படங்கள் பார்ப்பது. அத்தோடு Video Editor, Video Converter போன்றவை தொழில்ரீதியாக உள்ள Multimedia Tools. இதில் சிறந்த இலவச மென்பொருட்கள்.

1. VLC media player - http://goo.gl/oRNqK
2. KM Player - http://goo.gl/VMzX7
3. Audacity – Free Audio Editor - http://goo.gl/ARs0
4. Avidemux – Free Video Editor - http://goo.gl/Uzr2n
5. DVD Video Soft - http://goo.gl/w6Hhj
6. Free Make Video Converter - http://goo.gl/Hyb9J

~~~Office Tools~~

MS Office க்கு மாற்றாக பல இலவச மென்பொருட்கள் உள்ளன. அவற்றில் சிறந்தவை.

1. MS Officeக்கு மாற்றாக சில இலவச மென்பொருட்கள் -http://goo.gl/XuiAM

- karpom

புற்றுநோயின் பத்து பகைவர்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:24 | Best Blogger Tips
புற்றுநோயின் பத்து பகைவர்கள்  

புகையிலை, மிதமிஞ்சிய சூரிய ஒளி, பணிபுரியும் இடங்களில் வெளிப்படும் வேதிப்பொருட்கள், நச்சுவாயுக்கள் இவற்றையெல்லாம் புற்றுநோய் தோன்றுவதற்குரிய காரணங்களாக கூறமுடியும். இவற்றையெல்லாம் தவிர்த்து வாழ்வதே புற்றுநோயில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்குரிய எளிய வழியாகும். இவற்றையன்றி நாம் உட்கொள்ளும் சில உணவு வகைகளும் புற்றுநோய் எதிர்ப்புத்தன்மை கொண்டுள்ளன. இந்தக்கட்டுரையில் பத்துவிதமான உணவுப்பொருட்கள் புற்றுநோயில் இருந்து நம்மை காக்கக்கூடியவை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

strawberry1. மாதுளம்பழம், ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற கனிகள் ellagic acid மற்றும் polyphenol antioxidants ஆகிய வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளன. இந்த வேதிப்பொருட்கள் உடல் பாகங்களில் கட்டிகள் வளருவதை தடுக்கும் ஆற்றல் உடையவை. உச்சரிக்க இயலாத கனிகளின் பெயர்களை எண்ணி குழப்பமடையத்தேவையில்லை. அந்தந்த பருவங்களில் கிடைக்கக்கூடிய கனிகளை சீராக உண்டு வருவதால் புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை நமது உடல் பெறும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

2. சாக்லேட்கள் உடலுக்கு தீங்கானவை என்று மெய்ப்பிக்க எத்தனையோ வல்லுநர்கள் முயன்று தோற்றுப்போயிருக்கிறார்கள். சாக்லேட்டில் உள்ள கோக்கோ, சர்க்கரை இவற்றின் கலவை விகிதம் குறைந்தது 70 சதவீதமாக இருக்குமாயின் சாக்லேட் உடலுக்கு நல்லது. கோக்கோவின் அளவு கூடும்போது சாக்லேட் கருமை நிறமாகவும் கசப்பானதாகவும் இருக்கும். இந்த நிலையில் சாக்லேட்டில் உள்ள antioxidants மற்றும் மருத்துவக்குணமுள்ள polyphenols ஆகியவை செயல்படக்கூடிய நிலையில் இருக்கும். கோக்கோவில் உள்ள catechins எனும் வேதிப்பொருள் தேயிலையிலும் காணப்படுகிறது. தென் அமெரிக்கர்களின் உணவுப்பழக்கத்தை ஆராய்ந்தபின் இதய நோய்கள், மாரடைப்பு, புற்றுநோய் இவையெல்லாம் catechins வேதிப்பொருளால் தடுத்து நிறுத்தப்படுவதாக வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.

3. மஞ்சளும், இஞ்சியும் உணவிற்கு சுவையைக் கூட்டுபவை மட்டுமல்ல. இவற்றை சுவையுள்ள மருந்துகள் என்றே கூறலாம். இவற்றில் உள்ள curcumin என்ற வேதிப்பொருள் சோதனைக்குழாயில் உள்ள புற்றுநோய் செல்களைக்கூட விரைவாக அழித்துவிடும் ஆற்றல் உடையது. மஞ்சளும் இஞ்சியும் மாத்திரை வடிவில் கிடைக்கிறது. அவையல்லாம் சோம்பேறிகளுக்கானவை. மஞ்சளையும் இஞ்சியையும் மருந்துப்பெட்டியில் வைக்கவேண்டாம். சமையலறையில் வைத்திருங்கள்.

4. பருப்புவகைகளும் கொட்டையினங்களும் ஏராளமான phytochemicals ஐ பெற்றுள்ளன. இவற்றின் பயனை இந்த சிறிய கட்டுரையில் விவரிக்க இயலாது. புற்றுநோயின் தொடக்கமே டி என் ஏ சேதமடைவதுதான். Phytochemicals டி என் ஏ சேதமடைவதை தடுத்து நிறுத்துகிறது. மேலும் பருப்பு வகைகளும் கொட்டைகளும் ஏராளமான நார்ச்சத்தை பெற்றுள்ளன. குடலில் ஏற்படும் புற்றுநோய்களைத் தடுப்பதில் நார்ச்சத்து பெரும் பங்கு வகிக்கின்றது. மாட்டுக்கறியையும், பன்றிக்கறியையும் தின்று தீர்க்கும் மேல் நாட்டவர்கள் நார்ச்சத்துள்ள பருப்பு வகைகளையும் கொட்டைகளையும் சுவையாக சமைப்பது எப்படி என்பதை இந்தியர்களின் சமையலறைகளில் இருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும்.

5. green_teaபச்சைத்தேயிலையில் epigallocatechin gallate (EGCG) மற்றும் catechins ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. இவை புற்று நோய் செல்களின் பரம எதிரிகள். நாளொன்றுக்கு ஏறத்தாழ 1.9 லிட்டர் பச்சை தேயிலை குடிப்பதில்கூட தவறில்லை. தேயிலையை பக்குவப்படுத்தி கருப்புத்தேயிலை தயாரிக்கும்போது பயனுள்ள வேதிப்பொருளான catechinsஐ இழக்கப்படுகிறது. எனவே பச்சைத்தேயிலையே நமது நண்பன்..

6. மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய் இவற்றை எதிர்த்து போரிடுவதில் வைட்டமின் டி பெரும்பங்காற்றுகிறது. கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதிலும் வைட்டமின் டி யின் பங்கு அளப்பரியது. முட்டைகள், புற ஊதாக்கதிர்களால் செறிவூட்டப்பட்ட காளான், சூரிய ஒளி இவற்றில் ஏராளமான வைட்டமின் டி உள்ளது. catfish, salmon, sardines, mackerel ஆகிய மீன் வகைகளும் வைட்டமின் டி ஐ வாரி வழங்கக்கூடியவை.

7. பசுமையான காய்கறிகள், கொட்டைகள், பட்டாணி, பயறுவகைகள் இவற்றிலெல்லாம் அதிக அளவில் ஃபோலேட்டுகள் உள்ளன. பி காம்ப்ளக்ஸ் குடும்பத்தைச்சேர்ந்த ஃபோலிக் ஆசிட், வைட்டமின் பி 9 இவை அடங்கிய ஃபோலேட்டுகள் புற்றுநோயைத் தடுப்பதில்லை. மாறாக, ஃபோலேட்டுகள் இல்லாத உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.
 
8. முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு எதிரெதிர் இலைகொண்ட காய்கறிகளுக்கு புற்றுநோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகம். diindolylmethane, sulforaphane, selenium ஆகிய வேதிப்பொருட்கள் இந்தவகையான காய்கறிகளில் அடங்கியுள்ளன. இவற்றை மென்று சுவைத்து சாப்பிடுவதால் கூடுதல் பலன் கிட்டும். நாம் வழக்கமாக இந்த வகை காய்கறிகளை வேகவைத்தே சாப்பிடுகிறோம். நுண்ணிய துண்டுகளாக்கி மென்று தின்பது பலனளிக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

9. அடர்த்தியான பச்சைநிற காய்கறிகளில் beta-carotene, lutein and zeaxanthin ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. இவை புற்றுநோயை தொடக்கநிலையிலேயே தடுத்து நிறுத்தும் தன்மையுடைய வலிமையான antioxidants ஆகும். மேலும் இத்தகைய காய்கறிகளில் ஃபோலேட்டுகளும் அடங்கியுள்ளன. இந்த வகையான காயகறிகளின் பசுமையான இலைகளும், சிவந்த வேர்ப்பாகமும் மிகுந்த பயனளிக்கவல்லவை.

10. சிறிய அளவில் எடுத்துக்கொள்ளப்படும் சிவப்பு ஒயினுக்கு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலும், இதயத்தை வலுப்படுத்தும் ஆற்றலும் உண்டு.திராட்சைப்பழத்தின் தோலில் இருந்து பெறப்படும் resveratrol என்னும் வேதிப்பொருள் சிவப்பு ஒயினில் அடர்ந்து காணப்படுகிறது. நாளும் சிறிதளவு சிவப்பு ஒயின் சாப்பிடுவதை வல்லுநர்கள் ஆதரிக்கிறார்கள். இந்த பத்துவகையான உணவுப்பொருட்களையும் கலந்து கொழுப்பு இல்லாத யோகார்ட்டுடன் கலந்து சாப்பிடுவது நாவிற்கு மட்டும் ருசியானது அல்ல. நோயற்ற வாழ்விற்கும் சுவை கூட்டவல்லது என்பது வல்லுநர்களின் கருத்து.
-நலம், நலம் அறிய ஆவல். என்றும் உங்கள் Shamvel.
இணைந்திருங்கள் எங்களுடன்...
பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...
http://www.facebook.com/mrksamivel?ref=tn_tnmn
http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161
http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648
இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது.
புகையிலை, மிதமிஞ்சிய சூரிய ஒளி, பணிபுரியும் இடங்களில் வெளிப்படும் வேதிப்பொருட்கள், நச்சுவாயுக்கள் இவற்றையெல்லாம் புற்றுநோய் தோன்றுவதற்குரிய காரணங்களாக கூறமுடியும். இவற்றையெல்லாம் தவிர்த்து வாழ்வதே புற்றுநோயில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்குரிய எளிய வழியாகும். இவற்றையன்றி நாம் உட்கொள்ளும் சில உணவு வகைகளும் புற்றுநோய் எதிர்ப்புத்தன்மை கொண்டுள்ளன. இந்தக்கட்டுரையில் பத்துவிதமான உணவுப்பொருட்கள் புற்றுநோயில் இருந்து நம்மை காக்கக்கூடியவை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

strawberry1. மாதுளம்பழம், ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற கனிகள் ellagic acid மற்றும் polyphenol antioxidants ஆகிய வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளன. இந்த வேதிப்பொருட்கள் உடல் பாகங்களில் கட்டிகள் வளருவதை தடுக்கும் ஆற்றல் உடையவை. உச்சரிக்க இயலாத கனிகளின் பெயர்களை எண்ணி குழப்பமடையத்தேவையில்லை. அந்தந்த பருவங்களில் கிடைக்கக்கூடிய கனிகளை சீராக உண்டு வருவதால் புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை நமது உடல் பெறும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

2. சாக்லேட்கள் உடலுக்கு தீங்கானவை என்று மெய்ப்பிக்க எத்தனையோ வல்லுநர்கள் முயன்று தோற்றுப்போயிருக்கிறார்கள். சாக்லேட்டில் உள்ள கோக்கோ, சர்க்கரை இவற்றின் கலவை விகிதம் குறைந்தது 70 சதவீதமாக இருக்குமாயின் சாக்லேட் உடலுக்கு நல்லது. கோக்கோவின் அளவு கூடும்போது சாக்லேட் கருமை நிறமாகவும் கசப்பானதாகவும் இருக்கும். இந்த நிலையில் சாக்லேட்டில் உள்ள antioxidants மற்றும் மருத்துவக்குணமுள்ள polyphenols ஆகியவை செயல்படக்கூடிய நிலையில் இருக்கும். கோக்கோவில் உள்ள catechins எனும் வேதிப்பொருள் தேயிலையிலும் காணப்படுகிறது. தென் அமெரிக்கர்களின் உணவுப்பழக்கத்தை ஆராய்ந்தபின் இதய நோய்கள், மாரடைப்பு, புற்றுநோய் இவையெல்லாம் catechins வேதிப்பொருளால் தடுத்து நிறுத்தப்படுவதாக வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.

3. மஞ்சளும், இஞ்சியும் உணவிற்கு சுவையைக் கூட்டுபவை மட்டுமல்ல. இவற்றை சுவையுள்ள மருந்துகள் என்றே கூறலாம். இவற்றில் உள்ள curcumin என்ற வேதிப்பொருள் சோதனைக்குழாயில் உள்ள புற்றுநோய் செல்களைக்கூட விரைவாக அழித்துவிடும் ஆற்றல் உடையது. மஞ்சளும் இஞ்சியும் மாத்திரை வடிவில் கிடைக்கிறது. அவையல்லாம் சோம்பேறிகளுக்கானவை. மஞ்சளையும் இஞ்சியையும் மருந்துப்பெட்டியில் வைக்கவேண்டாம். சமையலறையில் வைத்திருங்கள்.

4. பருப்புவகைகளும் கொட்டையினங்களும் ஏராளமான phytochemicals ஐ பெற்றுள்ளன. இவற்றின் பயனை இந்த சிறிய கட்டுரையில் விவரிக்க இயலாது. புற்றுநோயின் தொடக்கமே டி என் ஏ சேதமடைவதுதான். Phytochemicals டி என் ஏ சேதமடைவதை தடுத்து நிறுத்துகிறது. மேலும் பருப்பு வகைகளும் கொட்டைகளும் ஏராளமான நார்ச்சத்தை பெற்றுள்ளன. குடலில் ஏற்படும் புற்றுநோய்களைத் தடுப்பதில் நார்ச்சத்து பெரும் பங்கு வகிக்கின்றது. மாட்டுக்கறியையும், பன்றிக்கறியையும் தின்று தீர்க்கும் மேல் நாட்டவர்கள் நார்ச்சத்துள்ள பருப்பு வகைகளையும் கொட்டைகளையும் சுவையாக சமைப்பது எப்படி என்பதை இந்தியர்களின் சமையலறைகளில் இருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும்.

5. green_teaபச்சைத்தேயிலையில் epigallocatechin gallate (EGCG) மற்றும் catechins ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. இவை புற்று நோய் செல்களின் பரம எதிரிகள். நாளொன்றுக்கு ஏறத்தாழ 1.9 லிட்டர் பச்சை தேயிலை குடிப்பதில்கூட தவறில்லை. தேயிலையை பக்குவப்படுத்தி கருப்புத்தேயிலை தயாரிக்கும்போது பயனுள்ள வேதிப்பொருளான catechinsஐ இழக்கப்படுகிறது. எனவே பச்சைத்தேயிலையே நமது நண்பன்..

6. மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய் இவற்றை எதிர்த்து போரிடுவதில் வைட்டமின் டி பெரும்பங்காற்றுகிறது. கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதிலும் வைட்டமின் டி யின் பங்கு அளப்பரியது. முட்டைகள், புற ஊதாக்கதிர்களால் செறிவூட்டப்பட்ட காளான், சூரிய ஒளி இவற்றில் ஏராளமான வைட்டமின் டி உள்ளது. catfish, salmon, sardines, mackerel ஆகிய மீன் வகைகளும் வைட்டமின் டி ஐ வாரி வழங்கக்கூடியவை.

7. பசுமையான காய்கறிகள், கொட்டைகள், பட்டாணி, பயறுவகைகள் இவற்றிலெல்லாம் அதிக அளவில் ஃபோலேட்டுகள் உள்ளன. பி காம்ப்ளக்ஸ் குடும்பத்தைச்சேர்ந்த ஃபோலிக் ஆசிட், வைட்டமின் பி 9 இவை அடங்கிய ஃபோலேட்டுகள் புற்றுநோயைத் தடுப்பதில்லை. மாறாக, ஃபோலேட்டுகள் இல்லாத உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.

8. முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு எதிரெதிர் இலைகொண்ட காய்கறிகளுக்கு புற்றுநோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகம். diindolylmethane, sulforaphane, selenium ஆகிய வேதிப்பொருட்கள் இந்தவகையான காய்கறிகளில் அடங்கியுள்ளன. இவற்றை மென்று சுவைத்து சாப்பிடுவதால் கூடுதல் பலன் கிட்டும். நாம் வழக்கமாக இந்த வகை காய்கறிகளை வேகவைத்தே சாப்பிடுகிறோம். நுண்ணிய துண்டுகளாக்கி மென்று தின்பது பலனளிக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

9. அடர்த்தியான பச்சைநிற காய்கறிகளில் beta-carotene, lutein and zeaxanthin ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. இவை புற்றுநோயை தொடக்கநிலையிலேயே தடுத்து நிறுத்தும் தன்மையுடைய வலிமையான antioxidants ஆகும். மேலும் இத்தகைய காய்கறிகளில் ஃபோலேட்டுகளும் அடங்கியுள்ளன. இந்த வகையான காயகறிகளின் பசுமையான இலைகளும், சிவந்த வேர்ப்பாகமும் மிகுந்த பயனளிக்கவல்லவை.

10. சிறிய அளவில் எடுத்துக்கொள்ளப்படும் சிவப்பு ஒயினுக்கு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலும், இதயத்தை வலுப்படுத்தும் ஆற்றலும் உண்டு.திராட்சைப்பழத்தின் தோலில் இருந்து பெறப்படும் resveratrol என்னும் வேதிப்பொருள் சிவப்பு ஒயினில் அடர்ந்து காணப்படுகிறது. நாளும் சிறிதளவு சிவப்பு ஒயின் சாப்பிடுவதை வல்லுநர்கள் ஆதரிக்கிறார்கள். இந்த பத்துவகையான உணவுப்பொருட்களையும் கலந்து கொழுப்பு இல்லாத யோகார்ட்டுடன் கலந்து சாப்பிடுவது நாவிற்கு மட்டும் ருசியானது அல்ல. நோயற்ற வாழ்விற்கும் சுவை கூட்டவல்லது என்பது வல்லுநர்களின் கருத்து.
 
Via -நலம், நலம் அறிய ஆவல்.

தமிழர் ஆடற்கலைகள்..!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:01 | Best Blogger Tips
தமிழர் ஆடற்கலைகள்..!

தமிழர்களின் ஆடற்கலைகள் என்றாலே நம் மனதில் முதலில் தோன்றுவது பரதநாட்டியம் தான்.

அதைவிடுத்து வேறு ஆடல்கள் தமிழர்கள மத்தியில் இல்லையா? இருக்கிறது. பல ஆடற்கலைகள் காலம் காலமாக தமிழர்களால் ஆடப்பட்டு வருகிறது.

படம் ;- தமிழர் ஆடற்கலைகளில் சிறப்பு மிக்க சில ஆடற்கலைகள்.

1) கரகாட்டம் - தலையில் கரகம் வைத்துக் கொண்டு ஆடும் நடனம்

2) கும்மியாட்டம் - கும்மி பலர் கூடி ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம்.

3) கோலாட்டம் - கோலாட்டம் என்பது பல்வேறு நிறங்கள் தீட்டப்பட்ட கழிகளைக் கொண்டு தாளத்துக்கும், இசைக்கும் ஏற்ப ஒன்றுடன் ஒன்று தட்டிக்கொண்டே ஆடும் நடனம்.

4) பொய்க்கால் குதிரை ஆட்டம் - குதிரைக் கூடு அணிந்து அதன் மேல் சவாரி செய்வது போல் பாங்கு செய்து ஆடப்படும் ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் 

5) புலியாட்டம் - புலி வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம் புலி ஆட்டம்

6) மயிலாட்டம் - மயிலின் தோகையை உடையுடன் சேர்த்து, ஒடுக்கியும் விரித்தும் ஆடக்கூடியவாறு உடை செய்யப்பட்டிருக்கும். மயிலின் ஆட்டத்தை அல்லது அசைவுகளை ஒத்து இந்த ஆட்டம் அமையும். 

7) ஒயிலாட்டம் - ஒரே நிறத் துணியைத் தலையில் கட்டிக்கொண்டு, கையில் ஒரே நிறத்திலான துண்டு ஒன்றை வைத்து இசைக்கேற்ப வீசி ஆடும் அழகான குழு ஆட்டம். 
 குறவன் குறத்தி ஆட்டம் - குறவர் சமூகத்தினைச் சார்ந்த ஆணான குறவனும், பெண்ணான குறத்தியும் இசைத்தபடி ஆடும் ஆட்டம்.
தமிழர்களின் ஆடற்கலைகள் என்றாலே நம் மனதில் முதலில் தோன்றுவது பரதநாட்டியம் தான்.

அதைவிடுத்து வேறு ஆடல்கள் தமிழர்கள மத்தியில் இல்லையா? இருக்கிறது. பல ஆடற்கலைகள் காலம் காலமாக தமிழர்களால் ஆடப்பட்டு வருகிறது.

படம் ;- தமிழர் ஆடற்கலைகளில் சிறப்பு மிக்க சில ஆடற்கலைகள்.

1) கரகாட்டம் - தலையில் கரகம் வைத்துக் கொண்டு ஆடும் நடனம்

2) கும்மியாட்டம் - கும்மி பலர் கூடி ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம்.

3) கோலாட்டம் - கோலாட்டம் என்பது பல்வேறு நிறங்கள் தீட்டப்பட்ட கழிகளைக் கொண்டு தாளத்துக்கும், இசைக்கும் ஏற்ப ஒன்றுடன் ஒன்று தட்டிக்கொண்டே ஆடும் நடனம்.

4) பொய்க்கால் குதிரை ஆட்டம் - குதிரைக் கூடு அணிந்து அதன் மேல் சவாரி செய்வது போல் பாங்கு செய்து ஆடப்படும் ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம்

5) புலியாட்டம் - புலி வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம் புலி ஆட்டம்

6) மயிலாட்டம் - மயிலின் தோகையை உடையுடன் சேர்த்து, ஒடுக்கியும் விரித்தும் ஆடக்கூடியவாறு உடை செய்யப்பட்டிருக்கும். மயிலின் ஆட்டத்தை அல்லது அசைவுகளை ஒத்து இந்த ஆட்டம் அமையும்.

7) ஒயிலாட்டம் - ஒரே நிறத் துணியைத் தலையில் கட்டிக்கொண்டு, கையில் ஒரே நிறத்திலான துண்டு ஒன்றை வைத்து இசைக்கேற்ப வீசி ஆடும் அழகான குழு ஆட்டம்.
குறவன் குறத்தி ஆட்டம் - குறவர் சமூகத்தினைச் சார்ந்த ஆணான குறவனும், பெண்ணான குறத்தியும் இசைத்தபடி ஆடும் ஆட்டம்.
 
Via மைலாஞ்சி ( Mylanchi )
 

சிலம்பு..!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:35 | Best Blogger Tips
சிலம்பு..!

சிலம்பு என்பது சங்ககால தென்னிந்திய மக்களால் இரண்டு கால்களிலும் அணியப்பட்ட அணிகலனாகும். கண்ணகியின் கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் கொண்டே, இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்ற பெருங் காப்பியத்தை இயற்றினார். இந்நூல் தமிழ்த் தாயின் கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது.

அம்பலத்தில் ஆடுகின்ற நடராசப் பெருமானும் தன் கால்களில் சிலம்போடு இருப்பது இவ்வணிகலனிற்கு மேலும் பெருமை சேர்க்கின்றது. 'நிரைகழல் அரவம்' எனத்தொடங்கும் தேவாரப் பதிகத்தில் கழல் என்பது ஆண்கள் அணியும் சிலம்பு வகையினையும், சிலம்பு என்பது பொதுவாக பெண்களாலேயே அணியப்படும் அணிகலன் வகையினையும் குறித்து நிற்கிறது.

சங்ககாலத்தில் ஆண், பெண் என்று இருபாலரும் இதை அணிந்தனர். இதற்கு அக்கால இலக்கியங்களே சான்றாகும். பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்ட இவ்வணிகலன் வட்டமான வடிவத்தில் குழல் போன்று இருக்கும். இதன் உட்புறம் விலையுயர்ந்த மணிகளால் நிரப்பப்பட்டிருக்கும். இதன் பொருட்டு இவ்வணிகலன், நடக்கும்பொழுது ஒருவித இனிய ஓலியை எழுப்பும். நாட்டியப் பெண்களால் அணியப்படும் சிலம்பானது ஆடும்பொழுது தாளத்திற்கேற்ப ஒலியெழுப்ப்பும் தன்மையுடையது.
சிலம்பு என்பது சங்ககால தென்னிந்திய மக்களால் இரண்டு கால்களிலும் அணியப்பட்ட அணிகலனாகும். கண்ணகியின் கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் கொண்டே, இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்ற பெருங் காப்பியத்தை இயற்றினார். இந்நூல் தமிழ்த் தாயின் கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது.

அம்பலத்தில் ஆடுகின்ற நடராசப் பெருமானும் தன் கால்களில் சிலம்போடு இருப்பது இவ்வணிகலனிற்கு மேலும் பெருமை சேர்க்கின்றது. 'நிரைகழல் அரவம்' எனத்தொடங்கும் தேவாரப் பதிகத்தில் கழல் என்பது ஆண்கள் அணியும் சிலம்பு வகையினையும், சிலம்பு என்பது பொதுவாக பெண்களாலேயே அணியப்படும் அணிகலன் வகையினையும் குறித்து நிற்கிறது.

சங்ககாலத்தில் ஆண், பெண் என்று இருபாலரும் இதை அணிந்தனர். இதற்கு அக்கால இலக்கியங்களே சான்றாகும். பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்ட இவ்வணிகலன் வட்டமான வடிவத்தில் குழல் போன்று இருக்கும். இதன் உட்புறம் விலையுயர்ந்த மணிகளால் நிரப்பப்பட்டிருக்கும். இதன் பொருட்டு இவ்வணிகலன், நடக்கும்பொழுது ஒருவித இனிய ஓலியை எழுப்பும். நாட்டியப் பெண்களால் அணியப்படும் சிலம்பானது ஆடும்பொழுது தாளத்திற்கேற்ப ஒலியெழுப்ப்பும் தன்மையுடையது.
Via ஆயுதம் செய்வோம்

ஒரு முக ருத்ராட்சம்..!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:30 | Best Blogger Tips
ஒரு முக ருத்ராட்சம்..!
 
பல வகை ருத்ராட்சங்களில் ஒரு முக ருத்ராட்சம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.
ஒரு முக ருத்ராட்சம் உருண்டை வடிவம் கொண்டது.

ஆனால் இன்று 'சந்திரகர்' என்னும் பிறை வடிவ ருத்ராட்சத்தை ஒரு முக மணி என்று பலர் அணிந்து வருகின்றனர். சந்திரகர் ருத்ராட்சமும் சிவனின் அருள் பெற்றதால, அதை அணிந்து கொள்ளவோ பூஜை அறையில் வைத்து வணங்கவோ செய்யலாம். இருப்பினும் ஒரு முக ருத்ராட்சம் இந்த மணியிலிருந்து வேறுப்பட்டது. ஒரு முக ருத்ராட்சதில் ஒரு கோடு காணப்படும்.

நேபாள ஒரு முக ருத்ராட்சம் உருண்டை வடிவிலும், இந்தோனேசிய ஒரு முக ருத்ராட்சம் அரிசியை போல சற்று நீள வடிவிலும் காணப்படும்.

ஒரு முக ருத்ராட்சம் சூரியனின் ஆதிக்கம் பெற்றது. இதை அணிவதால் ஜாதகத்தில் சூரியனால் ஏற்படும் பாதகங்களை நீக்கும். இது பரப்பிரம்ம ஸ்வரூபம் ஆகும். இதன் அதி தேவதை ஸ்ரீ பரமேஸ்வரன்
ஆவார். இது இருக்கும் இடத்தில மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.

ஒரு முக ருத்ராட்சத்தை 'பிரமஹத்தி' தோஷத்தை (பிராமணரை கொன்ற பாவம் ) நீக்கும். புலன்களை வெல்லும். பிரம்ம ஞானத்தை கொடுக்கும். மோட்சத்தை அளிக்கும்.

இதை அணிபவர்களின் மனம் ஒருமைப்படுவதோடு, பூரண அமைதியை அடையும். ஒரு முக ருத்ராட்சம் உலகாயதச் செல்வங்களையும், ஆன்மீகச் செல்வங்களையும் அளிக்கும் ஆற்றல் பெற்றதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.

இவ்வகை மணி மிக அபூர்வமாகவே கிடைக்கும் என்பதால், விலை அதிகமாகவிய இருக்கும்.

யார் அணியலாம்: 

தலமைப் பதவியை விரும்புபவர்கள் ஒரு முக ருத்ராட்சத்தை அணிந்தால் அப்பதவி தானாக தேடி வரும். அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், அதிகாரிகள் இதை அணிந்து வந்தால் உயர்நிலையை எட்டிபிடிப்பர்கள்.

இவை தவிர புகைப்பழக்கம், மது அருந்துதல்,போதை மருந்து.போன்ற தீய பழக்கங்களில் இருந்து விடுப்பட விரும்புபவர்கள் இதை அணிந்தால், அவர்களின் உடலும் மனமும் நல்ல மாற்ற பெரும். தீய பழக்கங்கள் அறவே ஒழியும்.

தலைவலி, பார்வைக்கோளாறு, மூலநோய், சரும வியாதிகள்,கல்லீரல் நோய்களைக் குணமாக்கும் ஆற்றலும் ஒரு முக ருத்ராட்சதிர்க்கு உண்டு.

ஒரு முக ருத்ராட்சம் போலி என்று தெரியவந்தால் ஆறு குளம், கடலில் போட்டு விடுவதுசிறந்தது. காரணம் பல எதிர்மறை விளைவுகளை அது உண்டாக்கலாம்.

ருத்ராட்சமும் ஜோதிடமும்':

இது சூரியனின் ஆதிக்கம் பெற்றது. ஜாதகத்தில் சூரிய ஆதிக்க குறைவால் ஏற்படும் தீய பலன்களான வலது கண் நோய், தலை வலி, வயுட்ட்று வலி, எலும்பு பலவீனங்கள், போன்ற நோய்கள் ஒருமுக மணியை அணிவதால் நீங்கும்.

இது தவிர மனரீதியாக தன்னம்ம்பிக்கை குறைவு, தலமைப் பதவியை விரும்புபவர்கள், வளம் குன்றியிருத்தல், ஆளுமைஇன்மை போன்ற குறைபாடுகளும் இதை அணிவதால் நீங்கும் .

ஒரு முக ருத்ராட்ச மந்திரம்..

ஓம் ஹ்ரீம் நமஹ :
பல வகை ருத்ராட்சங்களில் ஒரு முக ருத்ராட்சம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.
ஒரு முக ருத்ராட்சம் உருண்டை வடிவம் கொண்டது.

ஆனால் இன்று 'சந்திரகர்' என்னும் பிறை வடிவ ருத்ராட்சத்தை ஒரு முக மணி என்று பலர் அணிந்து வருகின்றனர். சந்திரகர் ருத்ராட்சமும் சிவனின் அருள் பெற்றதால, அதை அணிந்து கொள்ளவோ பூஜை அறையில் வைத்து வணங்கவோ செய்யலாம். இருப்பினும் ஒரு முக ருத்ராட்சம் இந்த மணியிலிருந்து வேறுப்பட்டது. ஒரு முக ருத்ராட்சதில் ஒரு கோடு காணப்படும்.

நேபாள ஒரு முக ருத்ராட்சம் உருண்டை வடிவிலும், இந்தோனேசிய ஒரு முக ருத்ராட்சம் அரிசியை போல சற்று நீள வடிவிலும் காணப்படும்.

ஒரு முக ருத்ராட்சம் சூரியனின் ஆதிக்கம் பெற்றது. இதை அணிவதால் ஜாதகத்தில் சூரியனால் ஏற்படும் பாதகங்களை நீக்கும். இது பரப்பிரம்ம ஸ்வரூபம் ஆகும். இதன் அதி தேவதை ஸ்ரீ பரமேஸ்வரன்
ஆவார். இது இருக்கும் இடத்தில மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.

ஒரு முக ருத்ராட்சத்தை 'பிரமஹத்தி' தோஷத்தை (பிராமணரை கொன்ற பாவம் ) நீக்கும். புலன்களை வெல்லும். பிரம்ம ஞானத்தை கொடுக்கும். மோட்சத்தை அளிக்கும்.

இதை அணிபவர்களின் மனம் ஒருமைப்படுவதோடு, பூரண அமைதியை அடையும். ஒரு முக ருத்ராட்சம் உலகாயதச் செல்வங்களையும், ஆன்மீகச் செல்வங்களையும் அளிக்கும் ஆற்றல் பெற்றதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.

இவ்வகை மணி மிக அபூர்வமாகவே கிடைக்கும் என்பதால், விலை அதிகமாகவிய இருக்கும்.

யார் அணியலாம்:

தலமைப் பதவியை விரும்புபவர்கள் ஒரு முக ருத்ராட்சத்தை அணிந்தால் அப்பதவி தானாக தேடி வரும். அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், அதிகாரிகள் இதை அணிந்து வந்தால் உயர்நிலையை எட்டிபிடிப்பர்கள்.

இவை தவிர புகைப்பழக்கம், மது அருந்துதல்,போதை மருந்து.போன்ற தீய பழக்கங்களில் இருந்து விடுப்பட விரும்புபவர்கள் இதை அணிந்தால், அவர்களின் உடலும் மனமும் நல்ல மாற்ற பெரும். தீய பழக்கங்கள் அறவே ஒழியும்.

தலைவலி, பார்வைக்கோளாறு, மூலநோய், சரும வியாதிகள்,கல்லீரல் நோய்களைக் குணமாக்கும் ஆற்றலும் ஒரு முக ருத்ராட்சதிர்க்கு உண்டு.

ஒரு முக ருத்ராட்சம் போலி என்று தெரியவந்தால் ஆறு குளம், கடலில் போட்டு விடுவதுசிறந்தது. காரணம் பல எதிர்மறை விளைவுகளை அது உண்டாக்கலாம்.

ருத்ராட்சமும் ஜோதிடமும்':

இது சூரியனின் ஆதிக்கம் பெற்றது. ஜாதகத்தில் சூரிய ஆதிக்க குறைவால் ஏற்படும் தீய பலன்களான வலது கண் நோய், தலை வலி, வயுட்ட்று வலி, எலும்பு பலவீனங்கள், போன்ற நோய்கள் ஒருமுக மணியை அணிவதால் நீங்கும்.

இது தவிர மனரீதியாக தன்னம்ம்பிக்கை குறைவு, தலமைப் பதவியை விரும்புபவர்கள், வளம் குன்றியிருத்தல், ஆளுமைஇன்மை போன்ற குறைபாடுகளும் இதை அணிவதால் நீங்கும் .

ஒரு முக ருத்ராட்ச மந்திரம்..

ஓம் ஹ்ரீம் நமஹ :
Via சித்தர்கள் உலகின் முதல் விஞ்ஞானிகள்

மூன்று கடல்கள், மூன்று நாட்கள்...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:15 | Best Blogger Tips
மூன்று கடல்கள், மூன்று நாட்கள்...

“ஆறு ரூபாய்க்காகத் தன் சொந்தத் தந்தையின், சகோதரர்களின் கழுத்தை அறுக்கக்கூடிய ஆயிரக் கணக்கான மக்களை இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டில் காண முடியும்? எழுநூறாண்டு முகமதிய ஆட்சியில் ஆறு கோடி முகமதியர்கள், நூறாண்டு கிறிஸ்துவ ஆட்சியில் திருவாங்கூர் மாநிலத்தில் மட்டும் இருபது லட்சம் கிறிஸ்துவர்கள்.  இதற்குக் காரணம் என்ன? நமது தனித்தன்மை ஏன் முற்றிலுமாக நம் நாட்டைக் கைவிட்டது?

கைத்திறன் மிக்க நம் தொழிலாளர்கள் ஐரோப்பியருடன் போட்டியிட இயலாமல் ஏன் நாள்தோறும் குறைந்து வந்திருக்கிறார்கள்?

பல நூற்றாண்டுகளாக நிலைத்து நின்ற ஆங்கிலத் தொழிலாளியை, ஜெர்மனி தொழிலாளி எந்த ஆற்றலால் அசைத்து வெற்றி கண்டான்? கல்வி, கல்வி, கல்வி ஒன்றே காரணம்.

ஆனால் நம் மாணவர்கள் பெறும் கல்வி எதிர்மறையானதாக உள்ளது.  மாணவன் புதிதாக ஒன்றையும் கற்பதில்லை.  அதேவேளையில் தன்னிடம் உள்ளவற்றையும் இழக்கிறான்.  சிரத்தை இல்லாமல் போய்விட்டது என்பதே இதன் காரணம்.  சிரத்தை, வேத வேதாந்தங்களின் ஆதார சுருதியாகும்”

-என்பதெல்லாம் சுவாமி விவேகானந்தரின் சிந்தனையில் வெளிப்பட்ட கருத்துக்கள்.

இடம்: குமரிக்கடல்.  அலைகடலின் சுழற்சியையும், ஆர்ப்பரிப்பையும் எதிரொலித்து, அவருடைய உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட கருத்துக்கள்.

காளியின் இருப்பிடமான கிழக்கு இந்தியாவில் தொடங்கிய அவருடைய பயணம் தென்கோடியில் கன்னியாகுமரியின் கடலில் நிலை பெற்றது.

பெயர் என்ற அடையாளத்தையும் துறந்துவிட்டு, உணவுக்கான உத்தரவாதம் இல்லாமல், கம்பீரத்தால் நெய்யப்பட்ட காவித்துணியைப் போர்த்திக்கொண்டு. கன்னியாகுமரியின் கடலுக்கு வந்தார் அவர்.  படகுக்காரனுக்குக் காசு கொடுக்க வழி இல்லாததால், பாறையை நோக்கி நீந்தினார்.  அந்த மூன்று கடல்கள் கூடும் இடத்தில் மூன்று நாட்கள் இருந்தார்.

மூன்று நாட்கள், அந்தப் பாறையில் பராசக்தியின் பாதச்சுவடுகளைப் பார்த்தபடி தவமிருந்தார் அவர்.  முன்னர் நாடு திகழ்ந்த பெருமை, மூண்டிருக்கும் இகழ்ச்சி, பின்னர் நாடுறு வெற்றி ஆகிய மூன்றையும் இந்தியர்கள் உணராமல் போனதற்குக் காரணம், அன்றிருந்த பேடிக் கல்வி தான் என்பதை அவர் உணர்ந்தார்.

வாழ்க்கை என்பது வந்தவருக்கெல்லாம் வளைந்து கொடுப்பது, சமூக உணர்வு என்பது திண்ணையைத் தாண்டித் தெருவில் கூடப் போகாதது என்ற நிலையில் பல்லாண்டுகளாகப் பாழ்பட்டிருந்தனர் இந்தியர்கள்.

வறுமைக்கும், பிரிவினைக்கும் கொடுத்தது போக மிச்சமிருக்கும் உணர்வுகளை அச்சத்திடம் ஒப்படைத்துவிட்டிருந்தனர் அவர்கள்.  அவர்களுடைய முதல் தேவை பசியாறுதல், இரண்டாவது தேவை கல்வி பெறுதல் என்பதை கற்பாறையில் தவம் செய்த சுவாமி விவேகானந்தர் தெரிந்து கொண்டார்.  இந்த ஜன சமூகத்தை மீட்டெடுப்பதற்காக தாம் அமெரிக்கா செல்ல வேண்டும் என்பதும் அவருக்குப் புலப்பட்டது.

இந்தியர்களுக்காக மட்டுமல்ல, மனித குலத்திற்கு ஒரு புதிய வழி காட்டுவதற்காகவும் தான் சுவாமிஜியின் அமெரிக்கப் பயணம் அவசியமானது.

இந்தியா என்பது சுரண்டலுக்குரியது; இந்து மதம் என்பது கண்டனத்துக்குரியது என்று தான் நினைத்திருந்தனர், பெரும்பாலான அமெரிக்கரும், ஐரோப்பியரும்.  காலனி ஆதிக்கம் என்ற பெயரில் படுகொலை செய்வது, கொள்ளை அடிப்பது, அதை நியாயப்படுத்துவது என்பது தான் மேலைநாடுகளின் கருத்தாக்கமாக இருந்தது.

இந்தச் சுழற்சியில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும்;  படைப்பு முழுவதையும் பரவசத்தோடு அணுகும் வேதாந்த அமுதத்தை அங்கே விநியோகம் செய்ய வேண்டும் என்பது சுவாமிஜிக்கு விதிக்கப்பட்டது.

1892 டிசம்பர் மாத இறுதியில் சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரி கற்பாறையில் தவம் செய்த மூன்று நாட்கள் இந்திய வரலாற்றின் யுக சந்தி என்று சொல்லலாம்.

நவீன இந்தியாவின், எழுச்சி பெற்ற இந்தியாவின் துவக்கப்புள்ளி சுவாமி விவேகானந்தர் தான்.  சுவாமிகளின் வார்த்தையால் தூண்டப்படாத தேசியத் தலைவரே இல்லை என்று அடித்துப் பேசலாம்.  சுவாமிஜியின் வாழ்க்கையை உதாரணமாகக் கொள்ளாத பொதுநலத் தொண்டரே இல்லை என்பது பொதுவான நம்பிக்கை.

‘இந்தியாவின் பழமையில் கால் பதித்தவர் விவேகானந்தர்.  இந்தியப் பண்பாடு குறித்த பெருமித உணர்வு அவருக்கு இருந்தது.  இருந்தாலும் வாழ்க்கைப் பிரச்னைகள் பற்றிய அவருடைய அணுகுமுறை புதுமையாக இருந்தது.  இந்தியாவின் பழமைக்கும், புதுமைக்கும் அவர் பாலமாக இருந்தார்’ என்றார் பண்டித ஜவஹர்லால் நேரு.

சுவாமிஜியை உந்து சக்தியாகக் கொண்டு செயல்பட்டவர்களைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்.  இருந்தாலும் விடுதலை வேள்வியில் ஈடுபட்ட ஒருவரைப் பற்றி மட்டும் சொல்கிறேன்.

திரு. முனுசாமி பிள்ளை 1889-ஆம் ஆண்டில் உதகமண்டலத்தில் பிறந்தார்.  பள்ளிப் படிப்பை கோயமுத்தூரில் இருந்த லண்டன் மிஷன் பள்ளிக்கூடத்தில் முடித்தார்.  பிறகு கல்லூரிப் படிப்பு.

தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் மாணவனாக இருந்தபோது இவர் பட்ட துன்பங்கள் அதிகம்.  அந்தக் காலங்களில் ஓட்டல்களில் கூட சாதி கேட்டுத் தான் சோறு போடுவார்கள்.

தனிப்பட்ட முறையில் இத்தனை பிரச்னைகள் இருந்தாலும் முனுசாமி பிள்ளைக்கு பொதுவாழ்வில் ஆர்வம் இருந்தது.  காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மதுவிலக்கு பிரசாரம் செய்தார்.  தீவிர மதாபிமானத்தோடு இருந்த இவர், விவேகானந்தர் சங்கம் ஒன்றை நடத்தினார்.

பிறகு, 1937-இல் ராஜாஜி தலைமையில் ஏற்பட்ட காங்கிரஸ் அமைச்சரவையில் முனுசாமி பிள்ளை அமைச்சராக ஆனார்.

பஞ்சாயத்து உறுப்பினர் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரை பணம், பணம், பணம் என்று பாயைப் பிராண்டுகிற இன்றைய தமிழகச் சூழலில் முனுசாமி பிள்ளையின் அரசியல் வாழ்க்கை அதிசயமாகத் தான் இருக்கும்.

தன்னலமற்ற உள்ளத்தோடும், கறைபடாத பெயரோடும் முனுசாமி பிள்ளை வாழ்ந்து, பணி செய்து மறைந்தார் என்றால் அதற்குக் காரணம் அவரை இயக்கிய சுவாமி விவேகானந்தரின் ஆளுமை தான்.

மூன்று கடல்களும், மூன்று நாட்களும் சுவாமிஜியை வழிநடத்த, அவர் ஓராயிரம் உத்தமர்களை வழிநடத்தி இருக்கிறார்.  இந்தத் தொகையடியார் பட்டியல் இன்னும் தொடர்கிறது.

நன்றி : http://vivekanandam150.com/
“ஆறு ரூபாய்க்காகத் தன் சொந்தத் தந்தையின், சகோதரர்களின் கழுத்தை அறுக்கக்கூடிய ஆயிரக் கணக்கான மக்களை இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டில் காண முடியும்? எழுநூறாண்டு முகமதிய ஆட்சியில் ஆறு கோடி முகமதியர்கள், நூறாண்டு கிறிஸ்துவ ஆட்சியில் திருவாங்கூர் மாநிலத்தில் மட்டும் இருபது லட்சம் கிறிஸ்துவர்கள். இதற்குக் காரணம் என்ன? நமது தனித்தன்மை ஏன் முற்றிலுமாக நம் நாட்டைக் கைவிட்டது?

கைத்திறன் மிக்க நம் தொழிலாளர்கள் ஐரோப்பியருடன் போட்டியிட இயலாமல் ஏன் நாள்தோறும் குறைந்து வந்திருக்கிறார்கள்?

பல நூற்றாண்டுகளாக நிலைத்து நின்ற ஆங்கிலத் தொழிலாளியை, ஜெர்மனி தொழிலாளி எந்த ஆற்றலால் அசைத்து வெற்றி கண்டான்? கல்வி, கல்வி, கல்வி ஒன்றே காரணம்.

ஆனால் நம் மாணவர்கள் பெறும் கல்வி எதிர்மறையானதாக உள்ளது. மாணவன் புதிதாக ஒன்றையும் கற்பதில்லை. அதேவேளையில் தன்னிடம் உள்ளவற்றையும் இழக்கிறான். சிரத்தை இல்லாமல் போய்விட்டது என்பதே இதன் காரணம். சிரத்தை, வேத வேதாந்தங்களின் ஆதார சுருதியாகும்”

-என்பதெல்லாம் சுவாமி விவேகானந்தரின் சிந்தனையில் வெளிப்பட்ட கருத்துக்கள்.

இடம்: குமரிக்கடல். அலைகடலின் சுழற்சியையும், ஆர்ப்பரிப்பையும் எதிரொலித்து, அவருடைய உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட கருத்துக்கள்.

காளியின் இருப்பிடமான கிழக்கு இந்தியாவில் தொடங்கிய அவருடைய பயணம் தென்கோடியில் கன்னியாகுமரியின் கடலில் நிலை பெற்றது.

பெயர் என்ற அடையாளத்தையும் துறந்துவிட்டு, உணவுக்கான உத்தரவாதம் இல்லாமல், கம்பீரத்தால் நெய்யப்பட்ட காவித்துணியைப் போர்த்திக்கொண்டு. கன்னியாகுமரியின் கடலுக்கு வந்தார் அவர். படகுக்காரனுக்குக் காசு கொடுக்க வழி இல்லாததால், பாறையை நோக்கி நீந்தினார். அந்த மூன்று கடல்கள் கூடும் இடத்தில் மூன்று நாட்கள் இருந்தார்.

மூன்று நாட்கள், அந்தப் பாறையில் பராசக்தியின் பாதச்சுவடுகளைப் பார்த்தபடி தவமிருந்தார் அவர். முன்னர் நாடு திகழ்ந்த பெருமை, மூண்டிருக்கும் இகழ்ச்சி, பின்னர் நாடுறு வெற்றி ஆகிய மூன்றையும் இந்தியர்கள் உணராமல் போனதற்குக் காரணம், அன்றிருந்த பேடிக் கல்வி தான் என்பதை அவர் உணர்ந்தார்.

வாழ்க்கை என்பது வந்தவருக்கெல்லாம் வளைந்து கொடுப்பது, சமூக உணர்வு என்பது திண்ணையைத் தாண்டித் தெருவில் கூடப் போகாதது என்ற நிலையில் பல்லாண்டுகளாகப் பாழ்பட்டிருந்தனர் இந்தியர்கள்.

வறுமைக்கும், பிரிவினைக்கும் கொடுத்தது போக மிச்சமிருக்கும் உணர்வுகளை அச்சத்திடம் ஒப்படைத்துவிட்டிருந்தனர் அவர்கள். அவர்களுடைய முதல் தேவை பசியாறுதல், இரண்டாவது தேவை கல்வி பெறுதல் என்பதை கற்பாறையில் தவம் செய்த சுவாமி விவேகானந்தர் தெரிந்து கொண்டார். இந்த ஜன சமூகத்தை மீட்டெடுப்பதற்காக தாம் அமெரிக்கா செல்ல வேண்டும் என்பதும் அவருக்குப் புலப்பட்டது.

இந்தியர்களுக்காக மட்டுமல்ல, மனித குலத்திற்கு ஒரு புதிய வழி காட்டுவதற்காகவும் தான் சுவாமிஜியின் அமெரிக்கப் பயணம் அவசியமானது.

இந்தியா என்பது சுரண்டலுக்குரியது; இந்து மதம் என்பது கண்டனத்துக்குரியது என்று தான் நினைத்திருந்தனர், பெரும்பாலான அமெரிக்கரும், ஐரோப்பியரும். காலனி ஆதிக்கம் என்ற பெயரில் படுகொலை செய்வது, கொள்ளை அடிப்பது, அதை நியாயப்படுத்துவது என்பது தான் மேலைநாடுகளின் கருத்தாக்கமாக இருந்தது.

இந்தச் சுழற்சியில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும்; படைப்பு முழுவதையும் பரவசத்தோடு அணுகும் வேதாந்த அமுதத்தை அங்கே விநியோகம் செய்ய வேண்டும் என்பது சுவாமிஜிக்கு விதிக்கப்பட்டது.

1892 டிசம்பர் மாத இறுதியில் சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரி கற்பாறையில் தவம் செய்த மூன்று நாட்கள் இந்திய வரலாற்றின் யுக சந்தி என்று சொல்லலாம்.

நவீன இந்தியாவின், எழுச்சி பெற்ற இந்தியாவின் துவக்கப்புள்ளி சுவாமி விவேகானந்தர் தான். சுவாமிகளின் வார்த்தையால் தூண்டப்படாத தேசியத் தலைவரே இல்லை என்று அடித்துப் பேசலாம். சுவாமிஜியின் வாழ்க்கையை உதாரணமாகக் கொள்ளாத பொதுநலத் தொண்டரே இல்லை என்பது பொதுவான நம்பிக்கை.

‘இந்தியாவின் பழமையில் கால் பதித்தவர் விவேகானந்தர். இந்தியப் பண்பாடு குறித்த பெருமித உணர்வு அவருக்கு இருந்தது. இருந்தாலும் வாழ்க்கைப் பிரச்னைகள் பற்றிய அவருடைய அணுகுமுறை புதுமையாக இருந்தது. இந்தியாவின் பழமைக்கும், புதுமைக்கும் அவர் பாலமாக இருந்தார்’ என்றார் பண்டித ஜவஹர்லால் நேரு.

சுவாமிஜியை உந்து சக்தியாகக் கொண்டு செயல்பட்டவர்களைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். இருந்தாலும் விடுதலை வேள்வியில் ஈடுபட்ட ஒருவரைப் பற்றி மட்டும் சொல்கிறேன்.

திரு. முனுசாமி பிள்ளை 1889-ஆம் ஆண்டில் உதகமண்டலத்தில் பிறந்தார். பள்ளிப் படிப்பை கோயமுத்தூரில் இருந்த லண்டன் மிஷன் பள்ளிக்கூடத்தில் முடித்தார். பிறகு கல்லூரிப் படிப்பு.

தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் மாணவனாக இருந்தபோது இவர் பட்ட துன்பங்கள் அதிகம். அந்தக் காலங்களில் ஓட்டல்களில் கூட சாதி கேட்டுத் தான் சோறு போடுவார்கள்.

தனிப்பட்ட முறையில் இத்தனை பிரச்னைகள் இருந்தாலும் முனுசாமி பிள்ளைக்கு பொதுவாழ்வில் ஆர்வம் இருந்தது. காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மதுவிலக்கு பிரசாரம் செய்தார். தீவிர மதாபிமானத்தோடு இருந்த இவர், விவேகானந்தர் சங்கம் ஒன்றை நடத்தினார்.

பிறகு, 1937-இல் ராஜாஜி தலைமையில் ஏற்பட்ட காங்கிரஸ் அமைச்சரவையில் முனுசாமி பிள்ளை அமைச்சராக ஆனார்.

பஞ்சாயத்து உறுப்பினர் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரை பணம், பணம், பணம் என்று பாயைப் பிராண்டுகிற இன்றைய தமிழகச் சூழலில் முனுசாமி பிள்ளையின் அரசியல் வாழ்க்கை அதிசயமாகத் தான் இருக்கும்.

தன்னலமற்ற உள்ளத்தோடும், கறைபடாத பெயரோடும் முனுசாமி பிள்ளை வாழ்ந்து, பணி செய்து மறைந்தார் என்றால் அதற்குக் காரணம் அவரை இயக்கிய சுவாமி விவேகானந்தரின் ஆளுமை தான்.

மூன்று கடல்களும், மூன்று நாட்களும் சுவாமிஜியை வழிநடத்த, அவர் ஓராயிரம் உத்தமர்களை வழிநடத்தி இருக்கிறார். இந்தத் தொகையடியார் பட்டியல் இன்னும் தொடர்கிறது.

நன்றி : http://vivekanandam150.com/

லேப்டாப்பை பாதுகாப்பாக வைத்து இருப்பது

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:14 | Best Blogger Tips

 
நீங்கள் உங்கள் லேப்டாப்பை பாதுகாப்பாக நீண்டநாள் பாவனையுடன் வைத்திருக்க விரும்புகிறீர்களாஎந்த நேரமும் லேப்டாப் பராமரிப்பு பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்களாஎப்படி முழுமையான பாதுகாப்பை பெறுவது என்று தேடிக்கொண்டிருக்கிறீர்களாஇதோ உங்களுக்கான தீர்வு.

சாதாரண Desk Top கணினிகளுடன் ஒப்பிடுகையில் லேப்டாப்களின் பராமரிப்பு அத்தியாவசியமானதும்  சிறிது கடினமானதும் கூட. இன்று அநேகமானோர் லேப்டாப்பை பயன்படுத்துகிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் லேப்டாப்பை கையாள்வதற்கான அடிப்படை வழிகளை கூட பின்பற்றுவதில்லை. அநேகமாக பெரும்பாலானவர்கள் லேப்டாப்பை வெளியில் எடுத்துச்சென்றுதான் பாவிக்கிறார்கள். அப்படியிருக்கும்போது அதற்குரிய சரியான பாதுகாப்பை கொடுக்காவிட்டால்அந்த லேப்டாப்பின் பாவனை காலத்தை இழக்கவேண்டி இருக்கும். இங்கு லேப்டாப் பாதுகாப்பிற்கான சில வழிகளை தருகிறேன்.

Over Heat பிரச்சினை

எப்பொழுதும் உங்கள் லேப்டாப் Over Heat ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வெப்பமான பிரதேசங்களில் அதிக நேரம் பாவிப்பதையும் தவிருங்கள். இப்படியான சம்பவங்களால் பாட்டரி பழுதடைய கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. அதோடு அநேகமான சந்தர்ப்பங்களில் ஹார்ட் டிஸ்க் மற்றும் சில Internal parts ஐயும் பழுதடைய செய்துவிடும். சில வேளைகளிக் ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆகி சேமிக்கப்பட்டிருந்த தரவுகள் அனைத்தும் அழிந்துவிடும். ஆகவே லேப்டாப்பை வெளியில் எடுத்து செல்லமுன்னர் சுற்று சூழல் பற்றி அதிக கவனமெடுங்கள்.

1.   குளிரூட்டப்பட்ட அறைகளில் (Air conditioned) இருந்து சட்டென சாதாரண வெப்ப நிலையுள்ள பகுதிக்கு எடுத்து வராதீர்கள்.
2.   அப்படி மாறுபட்ட வெப்பநிலையுள்ள பிரதேசத்துக்கு மாற்றவேண்டிய தேவை ஏற்பட்டால் லேப்டாப்பை ஆஃப் செய்துவிட்டு எடுத்து செல்லுங்கள்.
3.   வெப்பநிலையான பிரதேசங்களில் ( சாதாரன வெப்பநிலையில் கூட) 2 மணித்தியாலங்களுக்கு மேலாக பாவிப்பதை தவிருங்கள்
4.   எங்கு சென்றாலும் லேப்டாப்புடன் ஒரு பொலுத்தீன் பையை எடுத்து செல்லுங்கள். பயணங்களின் போது லேப்டாப்பின் மீது நீர் படுவதை தவிர்க்கமுடியும்.
5.   Cool pad  பாவிப்பது நல்லது. 2 மணிநேரத்துக்கு அதிகமாக பாவிக்கவேண்டியிருந்தால் Cool Pad  உபயோகியுங்கள். லேப்டாப்பின் Heat  ஓரளவிற்கு குறைக்கும்
6.   அவன் (Microwave Ovens), டிவிடி ப்ளேயர், டி.வி ஏனைய இலத்திரணியல் உபகரணங்களுக்கு அருகில் லேப்டாப்பை எடுத்து செல்வதை முற்றாக தவிருங்கள். இவற்றில் இருந்து வரும் காந்த சக்தி லேப்டாப்பின் ஹார்ட் டிஸ்கை நிச்சயம் பாதிக்கும்
7.   லேப்டாப்பை ஆஃப் செய்து ஒரு நிமிடத்துக்குள் மறுபடியும் ஆன் செய்யாதீர்கள். ஆகக்குறைந்தது 2 நிமிட இடைவெளியையாவது பேணுங்கள்.
8.   லேப்டாப் மீது நீர் படவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் ஈரத்தன்மை காயும் வரை லேப்டாப்பை ஆன் செய்வதை தவிருங்கள். ஈரத்துடன் ஆன் செய்வதால் short circuit ஏற்பட வாய்ப்புள்ளது.
9.   அளவுக்கதிகமாக லேப்டாப்பை சார்ஜ் செய்யாதீர்கள். ஆரம்பத்தில் AC அடாப்டரை பழுதுபடுத்தும். பின்னர் காலப்போக்கில் லேப்டாப்பின் Internal Parts  பாதிக்கும்
10. அதிக மழைபொழிவின் போது சார்ஜ் இடுவதை தவிருங்கள். வீட்டில் இருந்தால் UPS மூலம் சார்ஜ் இட முயற்சியுங்கள்.

பாட்டரி பாதுகாப்பு

பலர் ஏனைய பாதுகாப்பு விடயங்களில் கவனம் செலுத்தினாலும் பாட்டரி விடயத்தில் கவனம் செலுத்த தவறுகின்றனர். இதனால் பாட்டரி குறுகிய காலத்துக்குள்ளேயே செயலிழந்து போகிறது. இதை தடுப்பதற்கு

1.   லேப்டாப்பை சார்ஜ் செய்யும்போது ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள்
2.   சார்ஜ்ஜிங் முழுவதுமாக முடியும்வரை காத்திருங்கள். வழக்கமாக 2 தொடக்கம் 3 மணித்தியாலங்களில் முழுவதுமாக சார்ஜ் ஆகிவிடும்
3.   சூரிய வெளிச்சமுள்ள இடங்களில் பாட்டரியை வெளியே எடுக்காதீர்கள்
4.   லேப்டாப்பையோ அல்லது பாட்டரியையோ வெப்பமுள்ள இடங்களில் வைக்காதீர்கள்.


மேலே குறிப்பிட்டவை பாட்டரியை பாதுகாப்பதற்கான External வழிகள். இப்போது சில Internal முறைகளை பார்ப்போம்

1.   Wi-fi,  Bluetooth போன்றவற்றை பாவிக்காதபோது ஆஃப் செய்துவிடுங்கள்
2.   பாட்டரி சார்ஜ் 50 % இற்கும் குறைவாக இருக்கும்போது High Resolution கொண்ட வீடியோ கேம்ஸ் விளையாடாதீர்கள். இப்படியான கேம்ஸ் பட்டரியை இரு மடங்கு வேகமாக சார்ஜ் குறைக்கும்
3.   USB port பட்டரி Life  குறைக்கும். ஆகவே USB Mouse, Joystick,  Pen Drive போன்றவற்றை பாவிக்காத நேரங்களில் அகற்றிவிடுங்கள்.
4.   லேப்டாப் Screen  மாத்திரம் ஆஃப் செய்யும் மென்பொருள்களை உபயோகித்து தேவையற்ற நேரங்களில் Screen ஆஃப் செய்துவிடுங்கள். TurnOffMonitor 1.0  இந்த மென்பொருளை நிறுவி Shift+F1  உபயோகித்து Screen  ஆஃப்/ ஆன் செய்துகொள்ளலாம்
5.   தேவையில்லாதபோது சிடி ட்றைவில் உள்ள சிடிக்களை அகற்றிவிடுங்கள்
6.   Screen Server களை உபயோகிப்பதை தவிருங்கள்
7.   முக்கியமாக Screen இன் Brightness குறைத்து வையுங்கள்